புதன், 22 ஜூன், 2016

அறியாமைதான் காரணம். ஆங்கில இந்து ஏட்டின்
(The Hindu) செய்தியாளர் R சுஜாதா என்பவர்தான்
இந்தச் செய்தியை எழுதி உள்ளார். அதைத்தான்
தமிழ் இந்துவும் மொழிபெயர்த்து வெளியிட்டது.
பின்னர் நிறைய இணைய இதழ்கள் One India Tamil
உள்ளிட்ட ஏடுகள் வெளியிட்டன.
**
இந்த ஊடகவியலார்கள் யாருக்கும் மருத்துவக்
கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து ஆனா ஆவன்னா
தெரியாது. தெரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
**
சுருங்கக் கூறின், கொஞ்ச நேரத்தில் ஒரு சமூகப்
பதட்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள். மொத்தத்
தமிழ்நாட்டிலும், நியூட்டன் அறிவியல் மன்றத்தைத்
தவிர்த்து, வேறு எவரும் இந்த விஷயத்தில், உண்மை
என்ன என்று கூறவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக