சனி, 25 ஜூன், 2016

கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 
மாநிலங்களில் பாஜக கணக்கு கால் ஊன்றி
உள்ளது.தேர்தல் தளத்தில் அல்ல. கருத்துத் தளத்தில்,
தத்துவார்த்தத் தளத்தில். நவீன அறிவியல் படித்த
ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் கடவுள் கொள்கையை
உயர்த்திப் பிடித்து வருகின்றனர்.
**
இதை எதிர்க்க பெரியாரின் நாத்திகம் துளியும்
பயன்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்.இன் கணைகளை
அறிவியல் வழியில் சந்தித்து முறியடித்து வரும் ஒரே
அமைப்பு நியூட்டன் அறிவியல் மன்றமே.


பொருள்முதல்வாதம் உலகெங்கும் பரவி வருகிறது.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள்
பொருள்முதல்வாதக் கருத்துக்களால் ஈர்க்கப்
படுகிறார்கள். இந்த உலகம் பற்றிய, பிரபஞ்சம்
பற்றிய முழு நிறைவான அறிவியல் பார்வையை
பொருள்முதல்வாதம் வழங்குகிறது.
**
தமிழ்நாட்டிலும் பொருள்முதல்வாதம் பரவுமென்றால்
அது மக்களை ஈர்க்கும். அது பரவ வேண்டுமென்றால்
போலியான, பயனற்ற, எதிரியை வீழ்த்த இயலாத
போலி நாத்திகம் அகற்றப் பட வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக