வெள்ளி, 17 ஜூன், 2016

சிறப்புப் பிரிவில் இடங்களை நிரப்பும் விதி
இதுதான். சிறப்புப் பிரிவுக்கான இடங்கள் 100 என்று
வைத்துக் கொள்வோம். OC =10; BC = 50; MBC =20;
SC and ST= 20; ஆக மொத்தம் 100 இடங்கள். இந்த
100 இடங்களும் அந்தந்த சாதிக்குரிய மொத்த
இடங்களில் கழித்துக் கொள்ளப்படும்.
**
உதாரணமாக, BC க்குரிய மொத்த இடங்கள் 1000
என்றால், இந்த 1000இல் சிறப்பு ஒதுக்கீட்டு
இடங்களான 50ஐக் கழித்து மீதியுள்ள 950
இடங்கள் மட்டுமே BCக்கு கம்யூனிட்டி கோட்டா
பிரிவில் கிடைக்கும்.
**
இங்கு, சிறப்புப் பிரிவில் முதல் ரேங்கில் உள்ள
வர்ஷினி கலந்தாய்வுக்குச் செல்லவில்லை.
எனவே இரண்டாம் ரேங்கில் இருந்த ஜனனிக்கு
அவர் விரும்பிய MMC (Madras Medical College) கிடைத்தது.
இதை ஆங்கில இந்து ஏட்டின் செய்தியாளர்,
அவர் புரிந்து கொண்ட விதத்தில், செய்தி
வெளியிட்டு விட்டார்.
**
மற்றப்படி, ஒரு மாணவியான வர்ஷினி, தனக்குரிய
legitimate right உரிமையைப் பயன்படுத்தி, சிறப்புப்
பிரிவுக்கான கவுன்சலிங் செல்லாமல் இருந்துள்ளார்.
இதில் எந்தத் தவறும் இல்லை. இதனால் யாருக்கும்
பாதிப்பும் இல்லை.
**
எப்போதுமே நல்ல ரேங் எடுத்த மாணவர்கள்
சிறப்புப் பிரிவுக்கு விண்ணப்பித்து இருந்தாலும்,
பொதுப்பிரிவில் செலக்ட் ஆகவே விரும்புவார்கள்.
ஏனெனில், சிறப்புப் பிரிவில் விரும்பிய கல்லூரி
கிடைக்காமல் போகலாம். காரணம் இடங்கள் குறைவு.
அவர்களுக்கு பொதுப்பிரிவில் வாய்ப்பு அதிகம்.
காரணம் நிறைய இடங்கள் இருப்பதால்.
**
மேலும் இத்தகைய அட்ஜஸ்ட்மென்ட் கால காலமாக
நடப்பதுதான்.   


விரும்பிய கல்லூரி (MMC) கிடைத்ததை MBBS சீட்டே
கிடைத்தது போல எழுதி, இந்து ஏட்டின் செய்தியாளர்
எல்லோரையும் MISGUIDE பண்ணி விட்டார். சிறப்பு
ஒதுக்கீட்டின் கீழ் MMC கல்லூரிக்கு எத்தனை இடங்கள்,
அதில் இந்த மாணவி ஜனனி கவுன்சலிங் செல்லும்போது
எத்தனை இடங்கள் ஒதுக்கப் படாமல் இருந்தன ......
என்பவை போன்ற விஷயங்கள் எதையும்
விசாரிக்காமல், விசாரிக்க வேண்டும் என்ற
ஓர்மையே இல்லாமல், அந்தச் செய்தியாளர்
அக்கறையின்றி வெளியிட்ட செய்தியே இவ்வளவு
பிரச்சினையை உண்டாக்கி விட்டது.


இது சமஸ்கிருதப் பெயர்களுக்கான விளக்கம்.
பெயருக்கு அர்த்தம் தெரியாமலேயே பெயரை
வைத்துக் கொண்டு திரியும் தமிழனுக்கு
விளக்கம் சொல்லும் முயற்சி. சமஸ்கிருதம்
குறித்த எமது தொடர் கட்டுரைகளில் இதுவும்
ஒன்று. புராணங்களுக்கான விளக்கம் இது அல்ல.
இது பெயர்க்காரணம். "பெயர்க்  காரணம்  தருக"
என்ற கேள்விக்கு சின்ன வகுப்புகளில் விடை
எழுதியதை நினைவு படுத்திப் பார்க்கவும்.


சூரியனை ஹனுமன் விழுங்கிய கதையை
கம்பன் சொல்லவில்லை. ஆளையா உனக்கு
அமைந்தன என்ற கம்பனின் விருத்தம்
ராவணனைப் பற்றியது. அநுமனைப்
பற்றியது அல்ல. இக்கட்டுரை சமஸ்கிருதப்
பெயர்களின் அர்த்தம் என்ன என்று சொல்லும்
கட்டுரை.

இக்கட்டுரை அரசியல் கட்டுரை அல்ல. இது
இலக்கியம் மற்றும் மொழியியல் சார்ந்த கட்டுரை.
சொல்லப்படும் விஷயங்கள் இங்கு ACADEMIC
அடிப்படையில் அணுகப் படுகின்றன. அரசியல்
கட்டுரை எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ளப்
படும். கல்வியியல் கட்டுரைகள் (academic essays)
அவற்றுக்கே உரிய கல்வி சார்ந்த அக்கறை,
ஆர்வம், அறிவு ஆகியவற்றைக் கோருகின்றன.
அப்போதுதான் புரிந்து கொள்ள இயலும்.


இது கதையைப் பற்றிய ஆராய்ச்சி அல்ல.
மொழியைப் பற்றிய ஆராய்ச்சி. கதையில்
ஆர்வம் உள்ளவர்களுக்கு இக்கட்டுரை நிறைவு தராது.
மொழியில், மொழியியலில் ஆர்வம் உடையவர்களை
நோக்கி இது எழுதப் பட்டுள்ளது.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக