வியாழன், 20 அக்டோபர், 2016

1) மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 2) நியூட்டன் அறிவியல் மன்றம்
3) நான் ஆகிய மூவருமே விடுப்பு எடுக்க உள்ளோம்.


இணைய அணி எதுவும் தேவையில்லை. இணைய சட்ட உதவி அணிதான் தேவை. இணைய அணி என்று கொண்டு வந்து,
அதற்கு தலைமை, நிர்வாகிகள் என்று கொண்டு வருவதால்
பயன் கிடையாது. இணையம் என்பது குட்டி முதலாளித்துவ சுதந்திர வெளி. அங்கு யாரும் யாரையும் கட்டுப் படுத்த முடியாது.
எவனும் கட்டுப்படவும் மாட்டான். இணையத்தில் திமுகவை
ஆதரித்து 100 பேர் எழுதுகிறார்கள் என்றால், அதில் 30 பேர்தான்
கட்சிக்காரன்; மீதி 70 பேர் அனுதாபிகள். அனுதாபிகளை எந்தத்
தலைமையும் கட்டுப் படுத்த முடியாது. விழலுக்கு நீர் இறைக்க வேண்டாம். சட்ட உதவி அணியைக் கொண்டு வந்து
செயல்படுத்துங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக