திங்கள், 17 அக்டோபர், 2016

புறக்கணிக்கும் குட்டி முதலாளித்துவம்!
-----------------------------------------------------------------------
1) ரங்கநாயகம்மா நூலுக்கு ஆதரவு, நூலுக்கு எதிர்ப்பு
என்று இரண்டு தரப்புகள் தற்போது மிகவும் துலக்கமாக
உருவாகி இருக்கின்றன. இந்த நூலின் கருத்துக்கள்
விவாதிக்கப் படுகின்றன என்பதும், இந்த விவாதத்தின்
விளைவாக, சாதி ஒழிப்பில் மார்க்சியத்தின் பாத்திரம்
என்ன என்ற கேள்வி இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது
என்பதும் வரவேற்கத் தக்கவை.
**
2) அம்பேத்கார் பக்கம் சாராமலும், ரங்கநாயகம்மா பக்கம்
சாராமலும், இந்த நூலை மார்க்சிய லெனினிய
நிலைபாட்டில் கறாராக நின்று கொண்டு திறனாய்வு
செய்துள்ளது மார்க்சிய சிந்தனைப் பயிலகம். இந்தத்
திறனாய்வு மொத்தம் 15 கட்டுரைகளைக் கொண்டது.
நூல் திறனாய்வு 13 கட்டுரைகளிலும், நூலின் மீதான
விமர்சனங்களுக்குப் பதிலளிப்பது 2 கட்டுரைகளிலும்
உள்ளன.
**
3) என்றாலும், நூலின் ஆதரவாளர் தரப்பும் சரி,
எதிர்ப்பாளர் தரப்பும் சரி, எமது திறனாய்வைப்
புறக்கணிக்கின்றன. இந்தப் புறக்கணிப்பு
தற்செயலானதல்ல; திட்டமிட்ட ஒன்றே.
**
4) கைவசம் இருக்கும் வேலைகள் முடியாததாலும்,
பணிச்சுமை காரணமாகவும் இந்தப் புறக்கணிப்பை
உடைத்தெறிவதில், தற்போது நாங்கள் கவனம்
செலுத்த இயலவில்லை.
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
மார்க்சிய சிந்தனைப் பயிலகம். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக