ஞாயிறு, 2 அக்டோபர், 2016

காந்தியோடு முரண்பட்டதாலேயே பெரியார்
காங்கிரசை விட்டு விளக்கினார் என்பது
அனைவரும் அறிந்த வரலாறு. ஆனால் பெரியார்
அரசியலுக்கு வருவதற்கு காந்தியே ஊக்கமாக
(INSPIRATION) இருந்தார் என்பது வரலாறு. காங்கிரசை
விட்டு விலகிய பின்னும் காந்தியின் கருத்துக்களோடு
முரண்பட்டாரே தவிர, காந்தியின் மீது பெரு மதிப்பு
வைத்திருந்தார்.
**
அந்தக் காலத்தில் (1920களில்) விடுதிகள் (லாட்ஜ்கள்)
கிடையாது. எனவே சென்னை வந்த காந்தி, காங்கிரஸ்
தலைவரான ஒரு பார்ப்பனர் வீட்டில் தங்கி இருந்தார்.
என்னதான் தேசத்  தந்தையாக இருந்தாலும் காந்தி
ஒரு சூத்திரர்தானே. எனவே அவரை அந்தப் பார்ப்பன
காங்கிரஸ் தலைவர் வீட்டுக்குள் அனுமதிக்காமல்
திண்ணையில் மட்டுமே அமர வைத்து இருந்தார்.
இதைக் கேள்விப்பட்ட பெரியார் அந்தப் பார்ப்பனரைக்
கண்டித்தார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக