திங்கள், 17 அக்டோபர், 2016

புரட்சியை நடத்தப் போகிற கட்சிக்குத்தான்
மத்தியக் கமிட்டி போன்ற அமைப்புகள் தேவை.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு அது ஏன்? அவர்கள் CPI
கட்சியைப் போல, தேசியக் கவுன்சில் ஏற்படுத்திக்
கொள்ளலாம். அல்லது திமுகவைப் போல,
பொதுக்குழு, செயற்குழு வடிவங்களை உருவாக்கிக்
கொள்ளலாம். அதன் மூலம் நிறையப் பேருக்குப்
பதவி வழங்கலாம்.
**
கட்சி பிளவுபட்ட நேரத்தில் 1962-64 காலத்தில் மத்தியக்
கமிட்டி தேவைப் பட்டது. பின்னர் நெருக்கடி நிலையின்
போது, கட்சித் தலைவர்கள் பாதிப்பேர் சிறையிலும்,
பாதிப்பேர் தலைமறைவாகவும் இருக்க நேர்ந்த போது
மத்தியக் கமிட்டி தேவைப் பட்டது. இப்போது ஏன்? 

நேற்று எடுத்த புகைப்படங்களை அனுப்பி விட்டீர்களா?
மின்னஞ்சல் முகவரி ilangophysics@gmail.com


தோழர் நடராசன்,
டாக்டர் ரவீந்திரநாத்தின் பதிவைப் பகிர்ந்து இருக்கிறீர்கள்.
அதற்கு முன்னுரை போன்று உள்ள பகுதி திரு அ மார்க்ஸ் எழுதியது. தாங்கள் அதைக் குறிப்பிடாமல் விட்டது ஏன்? என் மேசையில்
"சாதியும் வர்க்கமும்" புத்தகம் உள்ளது. அ மார்க்சின்
முன்னுரை அதில் உள்ளது. AILRCயின் அந்த மாநாட்டில்
நான் கலந்து கொண்டேன். எனக்கு நிகழ்வுகள்
பசுமையாக நினைவில் இருக்கிறது.

தலையங்க விமர்சனம் 200ஆவது அமர்வு:
---------------------------------------------------------------------------
இடம்: சென்னை புரசைவாக்கம்
உழைக்கும் மக்கள் மாமன்ற அலுவலகக் கட்டிடம்
நாள்: 16.10.2016 ஞாயிறு மாலை 7 மணி

உரை:
பி இளங்கோ சுப்பிரமணியன்
(மார்க்சிய சிந்தனைப் பயிலகம்)

மேடையில்:
தோழர் மு வீரபாண்டியன்
CPI மாநிலத்து துணைப் பொதுச் செயலாளர்.
கூட்ட ஏற்பாடு:
வே சோதிராமலிங்கம் (ஊடகவியலாளர்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக