வெள்ளி, 13 மார்ச், 2015

நள்ளிரவில் கைது!
அதிகாலையில் சிறையில் அடைப்பு!!
அநியாயத்தைக் கண்டிக்கத் தயங்கும் போலிகள்!
----------------------------------------------------------------------------------
காலை பத்து மணிக்கு நீதிமன்றம் திறக்கும் வரையில் 
காத்திருக்காமல், எழும்பூர் 14ஆவது குற்றவியல் 
நடுவர் கயல்விழி அவர்களின் வீட்டில், டிராபிக் 
ராமசாமியை ஆஜர் படுத்தி, புழல் சிறையில் 
அடைத்தனர்.  
-----------------------------------------------------------------------------------
ஆம், 83 வயதுப் பெரியவர் டிராபிக் ராமசாமி நள்ளிரவில் 
கைது செய்யப்பட்டு அதிகாலை நாலு மணிக்கு புழல் 
சிறையில் அடைக்கப் பட்டார். 
------------------------------------------------------------------------------------------
ஏன் இந்த அவசரம்? ஜெயலலிதா சொத்துக் குவிப்பு 
வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை சென்று, ஜெ.வுக்கு 
எதிராக வழக்குத் தொடுத்தார் என்பதுதானே காரணம்!
------------------------------------------------------------------------------------
ஆயினும், எந்த மனித உரிமைப் போராளி(!)யும்,
கருத்துரிமைக் காவலரும் இதைக் கண்டித்துக் 
குரல் கொடுக்க முன்வரவில்லையே ஏன்?
----------------------------------------------------------------------------------
ஆபத்து இல்லாத, பாதிப்பை ஏற்படுத்தாத, ஜெயலலிதாவை 
எதிர்க்க வேண்டிய தேவை இல்லாத, மொக்கை விஷயமாகப் 
பார்த்து, வீராவேசத்தோடு போர்க்கோலம் பூணும் 
கருத்துரிமைக் காவலர்கள் ஜெ.அரசின் அராஜகத்தைக் 
கண்டித்து, உதடு பிரியாமல் முணுமுணுக்கக் கூடத் 
தயார் இல்லையே ஏன்?
------------------------------------------------------------------------------------------------
பாஜக-பாரிவேந்தர் குடும்பச் சண்டைக்குள் புகுந்து கொண்டு 
பட்டாசு விவகாரத்தை எல்லாம் வெடிகுண்டாகச் சித்தரித்து,
வாள் வீசும் போலிகள், டிராபிக் ராமசாமிக்கு நிகழ்ந்த 
அநீதியைக் கண்டும், மயான அமைதி காப்பது ஏன்?
--------------------------------------------------------------------------------------------  


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக