திங்கள், 16 மார்ச், 2015

பாகிஸ்தானில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது 
தலிபான்கள் வெடிகுண்டு வீச்சு! பலி 15, காயம் 80.
----------------------------------------------------------------------------
இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானிலும் ஒரு 
பஞ்சாப் மாநிலம் உண்டு. இதன் தலைநகர் லாகூர்.
இங்குள்ள யூகனாபாத் என்ற ஊரில் உள்ள 
இரண்டு கிறிஸ்துவ சர்ச்சுகள் மீது, நேற்று (15.03.2015)
தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசித் தாக்கினர்.
இதில் பலி 15. காயம் 80. மேலும் பலர் கவலைக்கிடம் 
என்பதால் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப் படுகிறது.
----------------------------------------------------------------------------------------------
ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுகளில் அதிகக் கூட்டம் 
இருக்கும் என்பதால், ஞாயிறு காலை நேரம் வெடிகுண்டு 
வீசி உள்ளனர் தலிபான்கள்.ஜமாஅத் உல் அஹ்றார் என்ற 
தலிபான் அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்று 
உள்ளது. பாக் பிரதமர் நவாஸ் ஷெரீப் இத்தாக்குதலுக்கு 
கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
------------------------------------------------------------------------------------------------
மத வெறியில் இருந்து என்றேனும் ஒருநாள் 
பாகிஸ்தான் மீளுமா?
மத ஓடத்தில் ஏறிய மாந்தரே-பலி 
பீடத்தில் மாய்ந்தீரே!
---பாவேந்தர் பாரதிதாசன்-----
-----------------------------------------------------------------------------------------------
**************************************************************88 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக