சனி, 7 மார்ச், 2015

தேர்தல் வாக்குறுதி என்பது ரூபாய்க்கு மூன்று படி அரிசி
என்பதுதான். அதை நிறைவேற்ற முடியாமல்போய், 
படியரிசித் திட்டம் என்ற பெயரில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி 
சென்னையிலும் கோவையிலும் போடப்பட்டது.
அப்போது, "மூக்குப்பொடி அண்ணாச்சி, மூணு படி 
என்னாச்சி"என்று கோஷம் போட்டுக் கொண்டு 
காங்கிரஸ்காரன் ஊர்வலம் போனான்
---------------------------------------------------------------------------
வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எழுந்த 
கண்டனங்களை, அறிஞர் அண்ணா தம் பேச்சாற்றலால்
அற்புதமாகச் சமாளித்தார். அப்போது அவர் சொன்னதுதான்,
"மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்".
தயவு செய்து வரலாற்றைத் திரிக்க வேண்டாம்.
-----------------------------------------------------------------------------------
காங்கிரஸ்காரன் ஊர்வலம் போனபோது, நான் 
சிறுவனாக இருந்து அதை வேடிக்கை பார்த்தவன்.
------------------------------------------------------------------------------------ . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக