புதன், 18 மார்ச், 2015

பறக்கும், பந்து பறக்கும்!
---------------------------------------------
நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழ் நாட்டில் 
பெண்கள் பந்து விளையாடினார்கள்; பெண்களின் 
பந்தாட்ட அழகை திருக்குற்றாலக் குறவஞ்சி 
என்ற நூலில் திரிகூட ராசப்பர் பாடியுள்ளார்.
ஆனால், இன்று 2015இல், மேற்கு வங்கத்தில்,
பெண் முதல்வர் மமதா பானர்ஜியின் ஆட்சியில்,
பெண்கள் கால்பந்து விளையாட முடியவில்லை.
இசுலாமிய மதவாதிகள் தடுத்ததால், ஆட்டம் ரத்து 
செய்யப் பட்டது. மதம் எவ்வளவு பிற்போக்கானது 
பாருங்கள்!
-----------------------------------------------------------------------------    
செங்கையில் வண்டு கலின் கலின் என்று
ஜெயம் ஜெயம் என்றாட --இடை 
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு 
தண்டை கலந்தாட--இரு 
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று 
குழைந்து குழைந்தாட--மலர்ப் 
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி 
பந்து பயின்றாளே.
---திரிகூட ராசப்பக் கவிராயர்---  
குறிப்பு: இது சந்தக் கவிதை! வாய்விட்டுப் பாட வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக