ஞாயிறு, 8 மார்ச், 2015

குட்டி முதலாளித்துவக் கருத்துக்களைப் பின்னூட்டம் 
------------------------------------------------------------------------------------
இடும் அன்பர்களுக்கு,
-------------------------------------
நைந்துபோன நெகிழ்ந்துபோன மனிதாபிமானத்தின் 
அடிப்படையில் குட்டி முதலாளித்துவவாதிகள் 
செயல் படுவார்கள். இதை மார்க்சியம் ஏற்பதில்லை. ஏனெனில், 
மார்க்சியம் என்பது புரட்சிகர மனிதாபிமானத்தை அடிப்படையாகக் 
கொண்டது.
---------------------------------------------------------------------------------------------------------
தாக்கியவன் யார் என்று வாய் திறந்து சொல்லக்கூடத் 
தயாராக இல்லாத இந்தக் குட்டி முதலாளித்துவக் 
கோழைகள் என்ன படிப்பறிவற்ற   பாமரர்களா? 
"திரு தியாகச் செம்மல் அடிப்படைவாதிகள் என்று 
கூறுகிறாரே"என்று தாங்கள் புலம்புவதில் பொருள் இல்லை.
ஏன் அவர் சுற்றி வளைத்து மூக்கைத் தொட வேண்டும்?
--------------------------------------------------------------------------------------------------- 
ஆர்.எஸ்.எஸ். காலிகள் தாக்கினார்கள் என்று சொல்லக்கூடத் 
துப்பில்லாத இந்தக் குட்டி முதலாளித்துவக் கோழைகள்,
சுயநலமிகள் முதலில் ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்த்து 
லேசாக முனகட்டும். அதன் பிறகு அவர்களை ஆதரிக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------
தன் தொலைக்காட்சி மீது தாக்குதல் நடக்கும்போது, அதைப் 
பாதுகாக்கத் தெரியாத முட்டாளா பாரிவேந்தர்?
--------------------------------------------------------------------------------------------
வர்க்கப் பார்வை இல்லாமலும், சமூகவியல் ஆய்வு 
இல்லாமலும், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் 
என்று திரியும் குட்டி முதலாளித்துவவாதிகளின் 
பிற்போக்குக் கருத்துக்களை மார்க்சியம் நிராகரிக்கிறது.
..............................................................................................................................  

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக