சனி, 28 மே, 2016

தேமுதிக கிச்சன் காபினெட் அதிரடி முடிவு!
சுத்தீஷின் கொழுந்தியாள் ஆவேசம்!!
------------------------------------------------------------------
1) நம்ப வைத்துக் கழுத்தறுத்த வைகோவின் சகவாசம்
வேண்டவே வேண்டாம் என்றும்,
2) மக்கள் நலக் கூட்டணியை விட்டு உடனே
வெளியேற வேண்டும் என்றும்,
3) கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டு, திமுக
கூட்டணியில் சேர வேண்டும் என்றும்,
4) கலைஞர் சேர்க்க மறுத்தால், பாஜகவுடன்
கூட்டணி வைக்க வேண்டும் என்றும்

தேமுதிக கிச்சன் காபினெட் ஏகமனதாக முடிவு
எடுத்துள்ளது. காபினெட் கூட்டம் சுத்தீஷின்
மாமியார் தலைமையில் நடந்தது. சுத்தீஷின்
மைத்துனி, கொழுந்தியாள் உட்பட கட்சியின்
முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். சுத்தீஷின்
கொழுந்தியாளின் ஆவேசப் பேச்சு எல்லோரையும்
கவர்ந்தது.  தம் பேச்சின் இடையே வைகோவை
அடித்துக் கொல்ல வேண்டும் என்று சுத்தீஷின்
கொழுந்தியாள் ஆவேசப் பட்டதாக தகவலறிந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.
************************************************************************* 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக