வியாழன், 12 மே, 2016

இத்துடன் நிறுத்திக் கொண்டு நிறைவு அடையலாம்!
ஒரு மூத்த குடிமகனின் கருத்து!
-------------------------------------------------------------------------------------------
அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவம் செய்ய
அனுமதி உண்டா என்ற கேள்விக்கு விடை கிடைத்து
விட்டது. இதில் தொடர்புடைய அனைவரும் மகிழ்ச்சி
கொள்ள வேண்டும். இத்துடன் இந்த விஷயம் முடிந்து
விட்டது. இனி விவாதத்தை வளர்த்த வேண்டியதில்லை
என்பது என் தாழ்மையான கருத்து.
**
நான் பணியில் இருந்தபோது, தொழிற்சங்கத்
தலைவராக பல்வேறு தாவாக்களைத் தீர்த்து
வைத்துள்ளேன். துறைசார் விசாரணைகளில்
(DOMESTIC INQUIRIES), CAT எனப்படும் டிரிபியூனல்களில்
தொழிலாளர் சார்பாக வாதாடி அவர்களுக்குச் சாதகம்
செய்துள்ளேன். சாஸ்திரி பவன் CBI அதிகாரிகள் முதல்
ரயில்வே டாக்டர்கள் வரை அவர்கள் மீதான
விசாரணையில் (DOMESTIC INQUIRY) வாதாடி அவர்களைப்
பாதுகாத்துள்ளேன்.
**
அந்த அனுபவத்தில் கூறுகிறேன். நான் தற்போது
பணிநிறைவு எய்திவிட்டபடியால், முன்புபோல
with authority பேச முடியாது. எனவே வேண்டுகோள்
விடுக்கிறேன். தொடர்புடைய அனைவரும் இது
குறித்து மேலும் விவாதிப்பதைத் தவிர்த்து
நிறைவு அடையலாம் என்பது மூத்த குடிமகன்
என்ற முறையில் என் தாழ்மையான வேண்டுகோள்.

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக