செவ்வாய், 10 மே, 2016

நீட் தேர்வை ஒரு மாதம் தள்ளி வை!
ஆகஸ்டு 24 தேதியில் நடத்து!
முதல் குரல் கொடுக்கிறது நியூட்டன் அறிவியல் மன்றம்!
------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------------
தேர்வு எழுதப் போகிறவர்கள் மாணவர்கள்.
நீதியரசர்களோ அரசியல்வாதிகளோ அல்ல.
இவ்வாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்
சேர்க்கைக்கு நீட் தேர்வு அனைவரும் எழுதியாக
வேண்டும் என்று தீர்ப்புக் கூறிய உச்சநீதிமன்றம்,
தேவையானால் தேர்வுத் தேதியைத் தள்ளி
வைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை
கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்று,
CBSE மற்றும் MCI  அமைப்புகள் ஜூலை 24
அன்று நடத்தத் திட்டமிட்டுள்ள நீட் இரண்டாம்
கட்டத் தேர்வை, மாணவர் நலன் கருதி, ஒரு மாதம்
தள்ளி வைத்து,  ஆகஸ்டு 24 அன்று நடத்த வேண்டும்
என்று நியூட்டன் அறிவியல் மன்றம் கோருகிறது.
மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக போதிய கால
அவகாசம் அவசியம்.

ஆகஸ்டு 24 தேர்வு
செப்டம்பர் 5 தேர்வு முடிவு
செப்டம்பர் 10 கலந்தாய்வு
செப்டம்பர் 30 அட்மிஷன் நிறைவு
என்ற காலப் பகுப்பு சாத்தியமானதே.

துணைக்கண்டத்திலேயே முதன் முதலில் இந்தக்
கோரிக்கையை நியூட்டன் அறிவியல் மன்றம்
எழுப்புகிறது. CBSE  மற்றும் MCI  அமைப்புகள்,
மாணவர் நலன் கருதி இந்தக் கோரிக்கையை
ஏற்க வேண்டும் என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் வலியுறுத்துகிறது.
இப்படிக்கு
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக