வியாழன், 26 மே, 2016

ஒழிந்தான் ஒரு கயவன்!
தரகர் தமிழ்க்கிருமி மணியன் தற்கொலை!
-----------------------------------------------------------------------------------
டாக்டர் மு வரதராசனாரின் கயமை நாவலைப்
படித்து இருக்கிறீர்களா? அந்த நாவலின் கடைசி
வாக்கியம் இப்படி அமைந்திருக்கும். "ஒழிந்தான்
ஒரு கயவன்".

தமிழ்க்கிருமி மணியன் அரசியலை விட்டு
விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பைக்
கேட்டதும் மு.வ.வின் வாக்கியம்தான் நினைவுக்கு
வந்து மகிழ்வூட்டுகிறது.

ஆங்கிலத்தில் GOOD RIDDANCE என்று ஒரு தொடர்
உண்டு. சனியன் தொலைந்தது என்று இதை மொழி பெயர்க்கலாம். தரகர் தமிழ்க்கிருமியின் விலகலும்
GOOD RIDDANCE தான்.

தரகர் தமிழருவி  மணியன் ஒரு பாஜக அனுதாபி.
அது மட்டுமல்ல அவர் அதிமுகவின் நலம் விரும்பியும் கூட.
பாஜக, அதிமுக கட்சிகளின் மீதான தமது பரிவை
வெளிக்காட்டிக் கொள்ளாமல் மாறுவேடம் பூணுவதில்
வல்லவர் இந்தத் தரகர்.

காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.சின் வேட்பாளர்
மோடியை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தரகர்
ஆதரித்தார். அதற்காக, பல்வேறு அவமதிப்புகளையும்
தாங்கிக் கொண்டு கூட்டணி அமைப்பதில் வெற்றி
பெற்றார். மோடியை  ஆதரிப்பது தரகரின் பிறப்புரிமை.
ஆனால் காந்தியின் பெயரால் இயக்கம் நடத்திக்
கொண்டு, மோடியை ஆதரித்தது மன்னிக்க முடியாத
பித்தலாட்டம்.

எனவே இவரைப் போன்ற நேர்மை சிறிதுமற்ற
மோசடிப் பேர்வழிகள் அரசியலை விட்டு
விலகும் நாளே தமிழனுக்கு நன்னாள்.
****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக