செவ்வாய், 24 மே, 2016

மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு (NEET)
நடப்பாண்டில் இல்லை! அவசரச் சட்டத்தின் விளைவு!
-----------------------------------------------------------------------------------------------------
நடப்பாண்டான 2016-17 கல்வியாண்டுக்கு மட்டும்
மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு இல்லை என்ற
மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி
ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் விளைவாக, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு
முன்பிருந்த நிலை மீட்கப் பட்டுள்ளது.
(Status quo ante is restored).

அதாவது இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு இல்லை.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு என்பதே இல்லை
என்பதால்,  ப்ளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையிலேயே
மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படும்.
***********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக