செவ்வாய், 10 மே, 2016

நீட் தேர்வை வலியுறுத்தும் உச்சநீதிமன்றத்
தீர்ப்பையும், நீட் தேர்வையும் எதிர்ப்பவர்கள்
தனியார்மயத்தின் கைக்கூலிகளே. ஜேப்பியார்
பாரிவேந்தர் ஆகிய சுயநிதித் திமிங்கலங்களிடம்
காசு பெற்றுக் கொண்டு, முற்போக்கு வேடம்
தரித்துக் கொண்டு, இவர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை
எதிர்க்கிறார்கள்.
**
தீர்ப்பின் படி, இந்தியாவில் எந்த மாநிலத்தில்
உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியும்
இனி தங்கள் சொந்த நுழைவுத் தேர்வை
நடத்த முடியாது.
**
நிகர்நிலைப் பல்கலைகள் தங்களின் சொந்த
நுழைவுத் தேர்வை நடத்த முடியாது.
**
வெறும் 50 மார்க் எடுத்த பையனிடம் ஒரு கோடி
ரூபாய் வாங்கிக் கொண்டு MBBS சீட்டை விற்கும்
இந்த சுயநிதித் திமிங்கலங்கள், உச்சநீதி மன்றத்தின்
தீர்ப்பினால் குடல் சரிந்து ரத்தம் பெருகி இறந்து
போய்க் கிடக்கின்றன.
**
இவர்களின் பிழைப்பில் தீர்ப்பு மண்ணை அள்ளிப்
போடுகிறது. இதனால்தான் தனியார்மயக்
கைக்கூலிகள் நிதானம் இழந்து பேசுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக