வியாழன், 26 மே, 2016

தரகர் விலகினார்!
-----------------------------------
அரசியலில் இருந்தும் பொது வாழ்வில் இருந்தும்
முற்றாக விலகுவதாக அறிவித்த தரகர்
தமிழருவி மணியன் அவர்களின் முடிவை
வரவேற்று, அந்த முடிவில் உறுதியாக நிற்குமாறு
வலியுறுத்தி யான் எழுதிய பின்னூட்டத்துடன்,
அவரின் பதிவை ஈண்டு பகிர்ந்துள்ளேன். 
-----------------------------------------------------------------------------
தகைமை சான்ற ஐயா,
அரசியலில் இருந்து முற்றாக விலகிக் கொள்கிறேன்
என்ற தங்களின் முடிவு ஆகச் சிறந்த முடிவு. இந்த முடிவில்
ஊசலாட்டம் எதுவும் இன்றி உறுதிபட நில்லுங்கள்.
தரகர் என்றும் புரோக்கர் என்றும் தங்கள் மீது படிந்துள்ள
அழியாத கறையை, தங்களின் இந்த விலகல் முடிவு
மட்டுமே அழிக்க வல்லது. தங்கள் முடிவை எந்த
நிலையிலும் மாற்றிக் கொள்ளாமல் உறுதிபட நிற்பது
ஒன்றே தங்களுக்குப் பெருமை சேர்க்கும்.
**
சரியான நேரத்தில் விலகல் முடிவை அறிவித்தீர்கள்.
இன்னும் சற்றுத் தாமதம் ஆகி இருந்தாலும், தங்களை
விலகச் சொல்லியும் சொன்ன சொல்லைக் காப்பாற்றக்
கோரியும் கடுமையான நிர்ப்பந்தங்கள் வந்திருக்கும்.
அதற்கு இடம் கொடாமல் சரியான நேரத்தில் தங்களின்
விலகல் முடிவை அறிவித்துள்ளீர்கள். இதில் உறுதியாக
நில்லுங்கள்.
**
தாங்கள் தங்களின் விலகல் முடிவில் எஃகுப் பாறை
போன்று உறுதியுடன் நிற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
தங்களை வணங்கி மகிழ்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக