வெள்ளி, 8 ஜூலை, 2016

இறப்புக்குப் பின் முழுஉடல்தானம் செய்த
பெரியாரிஸ்டும் அறிவியல் பேச்சாளருமாகிய
தோழர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி!
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------------
அண்மையில் மறைந்த அறிவியல் பேச்சாளரும்
பெரியாரிஸ்டும் ஆகிய தோழர் பாலகிருஷ்ணன்
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல்
கூட்டம் பெரியார் திடலில் 07.07.2016 அன்று
நடந்தது.

கனத்த இதயத்துடன் கூட்டத்தில் பங்கேற்று
தோழருக்கு அஞ்சலி செலுத்தினேன்.

இறப்புக்குப் பின் தன் முழுஉடலையும் மருத்துவக்
கல்லூரிக்குத் தானம் செய்துள்ளார் தோழர்
பாலகிருஷ்ணன். இவ்வாறு தான் இறந்த பிறகும்
தன் உடலை பாடப்புத்தகமாக ஆக்கியுள்ளார் தோழர்.

தான் கற்ற அறிவியலாலும் பெரியாரியச்
சிந்தனைகளாலும் உந்தப்பட்டு, இறந்த பிறகும்
மானுடத்துக்குப் பயன்பட்ட தோழர் பாலகிருஷ்ணன்
அவர்களுக்கு அஞ்சலி!
********************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக