திங்கள், 11 ஜூலை, 2016

கெட்ட வார்த்தை பேசுவோம்!
--------------------------------------------------------
கெட்ட வார்த்தை பேசுவோம்  என்று ஒரு நூலை
எழுதி இருக்கிறார் பெருமாள் முருகன். தமிழ்ச்
சமூகம் தயக்கமின்றி கெட்ட வார்த்தைகளைப்
பேச வேண்டும் என்று  வலியுறுத்துவார்
பெருமாள் முருகன் இந்த நூலில். வார்த்தைகளுக்குத்
தீண்டாமை கிடையாது என்பது பின்நவீனத்துவம்
முன்வைக்கும் கோட்பாடு.
**
கடந்த ஆண்டில் பெருமாள் முருகன் குறித்து,
நிறையக் கட்டுரைகளை நியூட்டன் அறிவியல்
மன்றம் எழுதியுள்ளது. திமுகவினர் அவற்றைப்
படிப்பது நல்லது.
**
ஒருகோடி திமுகவினரில் ஒருவருக்குக் கூட
தலைவர்கள் உட்பட, பின்நவீனத்துவம் பற்றி
எதுவும் தெரியாது (கனிமொழி அவர்களைத் தவிர).
**
பெருமாள் முருகன் திராவிட இயக்கம் குறித்து
மிகுந்த காழ்ப்புடன் எழுதியுள்ள கட்டுரைகளையும்
திமுகவினர் படித்துப் பார்ப்பது நல்லது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக