சனி, 9 ஜூலை, 2016

இந்த மிகச் சிறிய பதிவில், சுவாதியும் ராம்குமாரும்
வெறுமனே குறியீடுகள். பலியானவரின் (victim)
குறியீடு சுவாதி. இந்தக் குறியீட்டைத்தான் கயவன்
பயன்படுத்தி சிறுமியை காதலிக்கச் சொல்லி
மிரட்டுகிறான். அதுபோல, ராம்குமார் ஒரு
குற்றவாளியின் (perpetrator) குறியீடு.
**
குறியீட்டு உத்தியைப் பயன்படுத்தி ஒரு பதிவை
எழுதும்போது அதைப்  புரிந்து கொள்ள வாசக
அன்பர்களால் இயலவில்லை என்பது வருந்தத்
தக்கது.
**
இந்தப் பதிவு கூறும் விஷயம் ஒன்றுதான்.
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான்
அது. ஒரு சமூகம் இதைப்பற்றிக் கவலை கொள்ள
வேண்டும். ஆனால்  பெண்களுக்குக் காத்திருக்கும்
ஆபத்து பற்றி அக்கறை கொள்ளாத தயாராக
இல்லாத சமூகம் குற்றவாளிகளை ஆதரித்து
வரிந்து கட்டிக் கொண்டு நிற்பது நியாயமல்ல.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக