செவ்வாய், 12 ஜூலை, 2016

திரு வே பாண்டி அவர்களுக்கு,
--------------------------------------------------------
"கிணற்றில் உமிழாதே; ஏனென்றால் அதே கிணற்றில்
இருந்து நீர் பருக வேண்டிய நிலை ஏற்படும்"  என்று ஒரு
வங்கப் பழமொழி உண்டு. பெருமாள் முருகன்
குடிநீர்க் கிணற்றில் உமிழ்ந்த மூடர். மக்களைப்
பகைத்துக் கொண்டார். எல்லோருடைய
உணர்வுகளையும் புண்படுத்தினார். மக்கள்
சுரணை கெட்டவர்கள் அல்லர். எனவே மக்களின்
முகத்தில் விழிக்க முடியாமல் வெளியேறினார்.
**
இதில் யாரும் யாருக்கும் தண்டனை
கொடுக்கவில்லை. அப்படியே தண்டனை
கொடுத்ததாக வைத்துக் கொண்டாலும்,
தண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் யாரும் அவரைத் தண்டிக்கவில்லை.
ஏனெனில், அவரும் அதே சாதியைச் சேர்ந்தவர்.
நல்வாய்ப்பாக, பெருமாள் முருகனும் அதே சாதியைச்
சேர்ந்தவர் என்பதால், சாதிக்கலவரம் எதுவும்
நிகழவில்லை.   

"செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்" 
என்கிறார் வள்ளுவர். திருக்குறள் தெளிவுரை
நூலை எடுத்துப்  படித்துப் பொருள் அறியவும்.
இக்குறளைத்தான் வள்ளுவர் பெருமாள் முருகனுக்கு
உணர்த்துகிறார்.
**
மேற்கண்ட குறளின் பொருள் புரியாதவர்கள்,
அதைவிட எளிய இக்குறளைப் படிக்கவும்.
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்".     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக