புதன், 20 ஜூலை, 2016

வைகோவும் திருமாவளவனும்
பதில் சொல்ல வேண்டும்!
----------------------------------------------------------
திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் இருந்து
சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னையில்
இருந்து கங்கைக்கரை கொண்டு செல்லப்பட
உள்ளது. அப்போது வெளிவந்த பத்திரிக்கைச் செய்தி.
(நன்றி: தமிழிசை அம்மையார் முகநூல் பதிவு)

ஆளுநர் ரோசையா, பொன்னார்ஜி, வானதிஜி,
தமிழிசைஜி, தருண் விஜய்ஜி ஆகியோருடன்
வைகோஜியும் திருமாவளவன்ஜியும் உள்ளனர்.

தற்போது வள்ளுவர் சிலை நிறுவ முடியவில்லை.
கோணிப்பையில் கிடக்கிறார் வள்ளுவர்.

மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை
வைகோஜிக்கும் திருமாவளவன்ஜிக்கும் உள்ளது.
பதில் சொல்வார்களா?

பதில் சொல்லாவிட்டால் என்ன செய்வது?
அதற்கும் வள்ளுவரே வழி காட்டுகிறார்!

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லாத வர்க்கு.
***********************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக