சனி, 9 ஜூலை, 2016

எழுதப் பட்டது தீர்ப்பு அல்ல. சுவாதி கொலையில்
குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பது
காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் பொறுப்பு.
**
இங்கு ஒரு பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
கூறப்பட்டுள்ளது. யூனிபார்ம் போட்டுக் கொண்டும்
புத்தகப் பையைச் சுமந்து கொண்டும் படிக்கச்
செல்கிற ஒரு சிறுமியை, மைனர் பெண்ணை
"நீ என்னைக் காதலிக்காவிட்டால் சுவாதிக்கு
நேர்ந்த கதி ஏற்படும்" என்று மிரட்டுகிறான்
ஒரு கயவன்.
**
அண்மையில் இது போல தெலுங்கானாவில்
ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
**
நமது பதிவு பெண்களின் பார்வையில் இருந்து
இதை பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
அதுதான் பதிவின் சாரம்.
**
சாரத்தை விட்டு விட்டு சக்கையைக் கையில்
எடுத்துக் கொள்ளும் ஒரு குட்டி முதலாளித்துவ நபர்
இதை புரிந்து கொள்ளவில்லை. 
**
ராம்குமார் என்ற பெயர் பெண்களை அச்சுறுத்தும்
குறியீடாக, வெறி பிடித்த ஆணாதிக்கத்தின்
குறியீடாக மாறிப் போயுள்ளது என்பதை.
பள்ளிச் சிறுமியைக் காதலிக்கச் சொல்லி மிரட்டும்
கயவனின் நடத்தை காட்டுகிறது.
**
இதை அனுமதிக்க முடியாது. பெண்ணுக்கு எதிரான
குற்றங்கள், குற்றவாளியை ஆதரிக்கும் போக்குகள்
ஆகியவற்றை மூர்க்கத் தனமாக ஒடுக்க வேண்டும்.
இதுதான் சரியான நிலைப்பாடு. இது மட்டுமே.
**
மற்றப்படி இப்பதிவு ராம்குமார் வழக்கின் தீர்ப்பு
பற்றிப் பேசவில்லை. அப்படிக் கருதிய ஒரு
குட்டி முதலாளித்துவப் பின்னூட்டம் நீக்கப் பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக