திங்கள், 18 ஜூலை, 2016

அன்று 1960இல், 50 ஆண்டுகளுக்கு முன்பு,
கணக்குப் பாடத்தில், பொதுப்பாடம், சிறப்புப் பாடம்
என்று இரண்டு பிரிவுகள் இருந்தன என்பது
உண்மையே. அந்த நிலை இன்று இல்லை. இன்று
அறிவியல் வளர்ச்சி அசுரத் தனமாக ஏற்பட்டு விட்ட
பிறகு, நான் அரித்மெட்டிக் மட்டுமே படிப்பேன்
என்று கூறுவதும், அரசு அதை ஏற்பதும் நியாயமா?


தாராளமாக. வரும் ஞாயிறு மாலை 24.07.2016
அடுத்த கூட்டம் நடைபெறும். தேசிய கல்விக் கொள்கை
என்ற இதே தலைப்பில் சொற்பொழிவு, விவாதம் நடைபெறும்.
கூட்டம் சென்னையில் நடக்கும். உங்களுக்கு அழைப்பு
அனுப்புகிறோம்.


ஆங்கிலமே ஒசத்தி!
-----------------------------------------
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை
இந்த ஆவணத்தை ( வரைவு அறிக்கைக்கான
முன்வைப்புகள்) ஆங்கிலத்தில் மட்டுமே
வெளியிட்டுள்ளது. அரசு நினைத்தால் எல்லா
மொழிகளிலும் வெளியிடலாம். ஒரே நாளில் இதைச்
செய்ய முடியும். ஆனாலும் செய்யவில்லை. இந்த
ஆவணம் 43 பக்கங்கள் கொண்டது.


ஆவணம் கூறுவது என்ன? ஆங்கிலத்தில் உள்ள
பகுதியின் வாசகங்கள்! படியுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக