சனி, 16 ஜூலை, 2016

ராமதாசை வணங்குகிறேன்!
அன்புமணியைப் பாராட்டுகிறேன்!
------------------------------------------------------------------
பாமக கட்சியின் 28ஆவது பிறந்தநாளை முன்னிட்டு
இன்று (16 ஜூலை 2016) சென்னை தி.நகரில் உள்ள
கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து
உரையாற்றினார் மருத்துவர் அன்புமணி.

அப்போது "உள்ளாட்சித் தேர்தலில் பாமக
தனித்துப் போட்டியிடும் என்றும் எந்தக்
கட்சியுடனும் கூட்டணி வைக்காது" என்றும்
அன்புமணி  உறுதிபடக் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர்-நவம்பரில்
நடைபெறும். ஜெயலலிதா எந்தக் கட்சியையும்
எந்த நிலையிலும் சேர்க்க மாட்டார் என்பது தெளிவு.

எப்படியாவது கலைஞர் நம்மைக் கூட்டணியில்
சேர்க்க மாட்டாரா என்று நாக்கைத் தொங்கப்
போட்டுக் கொண்டும், துரைமுருகனின் பாதங்களை
நக்கிக் கொண்டும்  கிடக்கும் பல புரட்சிகரக்
கட்சிகளின் தலைவர்கள் மானத்தை விலை கூறி
விற்றுக் கொண்டு இருக்கும் ஒரு சூழலில்,
மானத்தோடு கட்சி நடத்தும் ராமதாஸை
வணங்குகிறேன். அன்புமணியைப்
பாராட்டுகிறேன்.
******************************************************************       

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக