வெள்ளி, 20 ஜனவரி, 2012

வழுவமைதி

பிம்பங்கள் திரையிட்டு மறைக்கும்
என் அந்தரங்கத்துள்
உன் தொடுகை குறித்த வேட்கை
இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

ஜலதரங்கம் வெட்க
நடத்தலின் பொற்கணங்களில்
உன் கொலுசுகள் சிந்திய மகரந்தம்
என் உயிரின்
வறண்ட பாத்திகளில்
வசந்தத்தைத் துளிர்விக்கிறது.

நிசப்தத்தை ஆராதிக்கும்
பின் ஜாமப் பொழுதுகளில்
உன்னை அடையப் பெறாத
இழப்பின் பிரும்மாண்டம்
மலையாய்க் கனக்கிறது.

தோழி
நம்மிடையே முகிழ்த்திருக்கும் உறவு
சாத்திரத்தை மீறிய தென்று
ஏன் கலங்குகிறாய்?

போஜராஜனின் கைத்தலம் பற்றிய மீரா
கண்ணனிடம் தன்னை இழந்ததில்
அத்துமீறல் எதையும்
அறிவிக்கவில்லை சாத்திரம்.

நித்திய கல்யாணியாய்
பொழுதும் புதுப்பிக்கும் சமூகத்தின்
பரிணாமத்தில் தெறிக்கும் விழுமியங்கள்
துளிர்விடும் புதுமைக்கு
வாழ்வுரிமை வழங்கும்

ஆதலினால் தோழி, தேர்ச்சிகொள்
ஊமை வெயில் விலகட்டும்.


--------------------------------------------------------------------------------------

யாப்பென மொழிப யாப்பறி புலவர்

ஒன்றிரண்டு கெட்ட வார்த்தைகளை
வாகாய் நுழைப்பதாலும்

தீய்ந்து போன சமஸ்கிருதச் சொற்களைத்
திணிப்பதாலும்

இடக்கர் அடக்கலை இகழ்ந்து
கத்தி பாய்ச்சுவதாலும்

கருப்பொருள்
மனப்பிறழ்ச்சி யுற்றவனின் தற்கூற்றாய்
எதுவாயினும்
கர மைதுனம் முதல்
ஆசனப்புழைப் புணர்ச்சி வரை

தலைப்பு
அதீதத்தினும் அதீதமாக
‘யவனப் போர் வீரனின் மதுக்குடுவையும்
முதுமக்கள் தாழியின் நாளமில்லாச் சுரப்பிகளும்’
என்பது போலும்

பாயாசத்து முந்திரியாய்
அல்குலும் நகிலும்

எனினும்
புரியாமையின் புகைமூட்டம்
கவிப்பதில்தான்
கனம் கொள்ளும் கவிதை.

--------------------------------------------------------------------------------------

அந்திமத்தின் வீழ்படிவு


இரண்டாம் ஜாமத்தின்
அமைதி கிழிபட
யாரும் வாகனம் ஒட்டவில்லை.

அகாலத்தில்
சாலையில் நடந்து செல்லும்
அந்நியனின் கரம் குலுக்கி
வோட்கா வாசனையுடன்
யாரும் நாக்குழறவில்லை.

பூட்டிய பள்ளியுள்
கம்ப ரசம் பரீட்சிக்கும்
கடவுள் தம்பதியரின்
தரிசனம் கோரி
வாசலில் யாரும்
வரிசை பூணவில்லை.

ஆங்கிலப் புத்தாண்டை
வாழவைக்கும் அபத்தங்கள்
தமிழ்ப் புத்தாண்டை அண்டவில்லை.

களத்திர ஸ்தானத்தில்
முருகனுக்கு இருவர் போல
தமிழனுக்கும் புத்தாண்டு இரண்டு.

எனினும் தமிழனின் சேவல்கள்
சித்திரையில் கூவுவதில்லை
தையிலும்

உற்பத்திப் பிரும்மாண்டத்தின்
கடிகார முள்ளாய்ச் சனவரியும்
பெருங்காயம் எஞ்சிய
அந்திமத்தின் வீழ்படிவாய்ச் சித்திரையும்

எனில்
கொள்ளுவதும் தள்ளுவதும் சரியே.

--------------------------------------------------------------------------------------

மயிலாப்பூர் மாமியின் மனோ வியாகுலங்கள்

திரட்டுப்பால் கிளறும்போது
அடி பிடித்து விடுவது

மெதுவாகவே
ஸ்கூட்டர் ஓட்டும் அத்திம்பேரால்
கல்லூரிப் பேருந்தை
அடிக்கடி மைத்ரேயி தவற விடுவது

ரங்கோலிப் போட்டியில்
மாட்டுப் பெண்ணின் கோலம்
ஒசத்தியாக இருந்தும்
நடுவராக வந்த
ஸ்டேட் வங்கி மேலாளர்
முதலிடம் தராமல் போனது

நேரலை நிகழ்ச்சியில்
பெப்சி உமாவுடன் பேசுகையில்
இணைப்பு அறுந்து விடுவது

பக்கத்து ஃபிளாட்டின்
மூடிய கதவையும் மீறிக்
கசியும் கருவாட்டு நாற்றம்
மாமாவின்
காயத்ரி உச்சாடனத்தின் மீது படர்வது

மயிலாப்பூர்க் கடைகளில்
அஜீரண மாத்திரையும் சிரப்பும்
சரிவரக் கிடைக்காமல் இருப்பது

மொத்தக் குலத்தின்
உச்சத் துயர்களாய்ப்
பட்டிய லிடுகிறாள் மாமி

ஒரு மின்னல் தெறிப்பில்
இரோம் ஷர்மிளா
என் நியூரான்களில் ஒளிர
அரிசினத்துடன் தீர்மானிக்கிறேன்
மாமியின் துயர்களுக்கு முடிவுகட்ட
மாமியை வன்புணர்வதன் மூலம்.

--------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக