ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

ஆம், மொழிக்கு அவ்வளவு சக்தி இருக்கத்தான் 
செய்கிறது போலும்! ரசூல் கம்சதோவ் என்னும் 
அவர் அவார்மொழிக் கவிஞர். அவரின் 
தாயமொழியான அவார் சோவியத் ரஷ்யாவில் 
மிகக் குறைவான எண்ணிக்கயில் உள்ள மக்கள் 
பேசும் சிறிய மொழியாகும்.

சிறிய மொழி, மிக்க  குறைவான மக்கள் பேசும் 
மொழி என்றபோதிலும் அவார் மொழி கவிஞரின் 
தாயமொழி ஆகும்.

உலகத்தில் தாய்மொழியும் தாய்நாடும் 
வெளி காலத் தொடரிணையம் (space time continuum) 
போல் ஒன்றிணைந்த.வை./

Breathes there the man with soul so dead
Who never to hmself hath said 
"This is my own;" my native land
என்றான்  ஒரு ஆங்கிலக் கவிஞன்.

ரசூல் கம்சட்டோ  கூறுகிறார்!
படுக்கையில் கிடந்து உயிருக்குப்  போராடிக் 
கொண்டு இருந்த நேரத்தில்,  அவார் 
மொழியைப் பேசிக்கொண்டு 
இரண்டு பேர்கள்  அந்த வழியாகச் 
சென்றபோது, அவர்களின் அவார் மொழிப 
பேச்சைக் கேட்டதுமே உயிருக்குப் போராடிக்  
கொண்மராசு கம்சட்டடோவ் டிருந்த நோயாளிக்கு உயிர்வந்து விட்டது.
  

   

கிழக்கு வெளுத்ததம்மா! கீழ்வானம் சிவந்ததம்மா!
BSNL நிறுவனம் லாபம் ஈட்டத் தொடங்கியதம்மா!  
BSNL has started earning profit! 
--------------------------------------------------------------------------
 நியூட்டன் அறிவியல் மன்றம் 
===========================================
அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 
(1999-2004) 01.10.2000ல் BSNL நிறுவனம் தோற்றுவிக்கப் 
பட்டது. தற்போது BSNLக்கு வயது 23.

தோன்றியது முதலே BSNL நிறுவனம் லாபம் ஈட்டி 
வந்தது. ஒரு நாளின் லாபம் 8 கோடி ரூபாய் என்ற 
நிலையில் இருந்த லாபம் தெடர்ந்து அதிகரித்தது.
2004-05 நிதியாண்டில் BSNL ரூ 10,000 கோடி லாபம்
ஈட்டியது.

2004ல் அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 10,000 கோடி 
லாபம் என்பது இன்றைய மதிப்பில் குறைந்தது 
ரூ 30,000 கோடி இருக்கும்.

இவ்வாறு தொடர்ந்து லாபம் ஈட்டிக்கொண்டே வந்த 
BSNL நிறுவனம் முதன் முதலாக புண்ணியவான் ஆ ராசா 
தொலைதொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் 
(மே 2007-நவம்பர் 2010) நஷ்டத்தைச் சந்தித்தது.

2009-10 நிதியாண்டில் BSNL ரூ 1800 கோடி நஷ்டத்தைச் 
சந்தித்தது. BSNLன் வரலாற்றில் ஏற்பட்ட முதல் 
நஷ்டம் இது. இதை ஏற்படுத்தியவர் ஆ ராசா. இந்த 
நஷ்டத்திற்கு அவரே பொறுப்பு. 

இவருக்கு முன் ராம் விலாஸ் பாஸ்வான், பிரமோத் 
மகாஜன், அருண் ஷோரி, தயாநிதி மாறன் ஆகியோர் 
தொலைதொடர்புத் துறையின் அமைச்சர்களாக 
இருந்தபோது BSNL நஷ்டம் அடையவில்லை. 2000-01
முதல் இன்று வரையிலான BSNLன் லாப நஷ்ட 
விவரங்கள் பொதுவெளியில் கிடைக்கின்றன.
யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.  

ஆ ராசா ஏற்படுத்திய நஷ்டம் பல ஆண்டுகளாகத் 
தொடர்ந்து நீடித்தது. அவருக்குப் பின் கபில் சிபல்,
ரவி சங்கர் பிரசாத், மனோஜ் சின்ஹா ஆகியோர் 
அமைச்சர்களாக இருந்தனர். BSNLன் நஷ்டத்தைக் 
குறைக்க முயன்றனர். அவர்களால் நஷ்டத்தைக் 
குறைக்க முடிந்ததே தவிர, நஷ்டத்தை அடியோடு 
ஒழித்து விட்டு லாபத்தை உண்டாக்க முடியவில்லை.
காரணம் ஆ ராசா ஏற்படுத்திய சேதாரம் அவ்வளவு 
தீவிரமானது.

பின்னர் ஜூலை 2021ல் அஷ்வினி வைஷ்ணவ் 
இத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தமது முன்னோர்களைத் தொடர்ந்து ஐவரும் BSNLன் 
நஷ்டத்தை ரோஹித்து லாபத்தை ஏற்படுத்த 
முனைந்தார். அதில் அவர் தற்போது வெற்றி 
கண்டுள்ளார்.  ஆம் BSNL லாபம் ஈட்டத் தொடங்கி 
விட்டது.   

நடப்பு நிதியாண்டில் BSNL  நிறுவனம் ரூ 1500 கோடி 
லாபம் ஈட்டி உளளது. இத்தகவலை துறையின் அமைச்சர்
அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். Global Business Summit
2024 என்னும் வணிக உச்சி மாநாட்டில் பேசும்போது 
அமைச்சர் வைஷ்ணவ இதைத் தெரிவித்தார்.

மேற்கூறிய ரூ 1500 கோடி லாபம் என்பது நிகர லாபம் 
அல்ல. வரி, தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு கூறுகளைக் 
கணக்கிட்டு கழித்த பிறகே நிற லாபத்தைச் சொல்ல 
இயலும். .அதற்குச் சிறிது காலம் ஆகும். 
இந்த வருமானம் EBITDA level லாபம் ஆகும். வணிக 
மேலாண்மை மற்றும் நிர்வாக மேலாண்மையின் 
அடிப்படைகளைத் தெரிந்தவர்கள் EBITDA என்பதாம் 
பொருளை அறிவார்கள். 
(EBITDA = Earnings Before Interest, Tax, Depreciation 
and Amortization)  

ஆக ஆ ராசா 2009ல் ஏற்படுத்திய நஷ்டத்தில் இருந்து 
BSNLக்கு 2024ல் விடுதலை கிடைத்துள்ளது. ஆ ராசா 
ஏற்படுத்திய பேரழிவுக்குப் பின்னால் மீண்டெழுந்து 
முன்பு போல் லாபம் ஈட்டத் தொடங்கி 
விட்டது BSNL. பள்ளத்தில் விழுந்த யானை எழுந்து 
வந்து விட்டது. அது கம்பீரமாக நடக்கத் தொடங்கி விட்டது.
*****************************************************
பின்குறிப்பு:
முதல் இரண்டு பின்னூட்டங்களில் தரப்பட்டுள்ள 
ஆங்கிலச் செய்தித்தாள்களின் செய்திக் 
கட்டுரைகளைப் படியுங்கள். எமது முகநூல் 
பதிவுக்கு அவை ஆதாரம் ஆகும்.
 


 .  
     
   

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

 பாரத ரத்னா விருது பெற்ற பிரதமர்கள்!
-----------------------------------------------------------
1) ஜவகர்லால் நேரு 
2) லால் பகதூர் சாஸ்திரி 
3) இந்திரா  காந்தி
4) குல்சாரி லால் நந்தா 
5) மொரார்ஜி தேசாய் 
6) சரண் சிங் 
7) ராஜிவ் காந்தி 
8) பி வி நரசிம்ம ராவ்
9) அடல் பிகாரி வாஜ்பாய்

இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப் படாதவர்கள்!
-------------------------------------------------------------------------------
1) வி பி சிங் 
2) சந்திரசேகர் 
3) தேவ கெளடா
4) ஐ கே குஜ்ரால் 

இந்நால்வருக்கும் ஒருபோதும் பாரத ரத்னா 
வழங்கப்படாது.

வி பி சிங் அமெரிக்க ஆதரவாளர் என்றும் 
ராஜிவ் காந்தியைப் பதவியில் இருந்து அகற்றி.
அவரின் படுகொலைக்கு காரணமாக இருந்தவர் 
என்றும் காங்கிரஸ் கருதுகிறது: சோனியா 
காந்தி கருதுகிறார். எனவே பாஜக ஆட்சியாக 
இருந்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் சரி 
மேற்கூறிய நால்வருக்கும்  எத்தகைய விருதும் வழங்கப் 
பட மாட்டாது.

5) டாக்டர் மன்மோகன் சிங்.

இவருக்கு உறுதியாக பாரத ரத்னா வழங்கப்படும்.
பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சியாக
இருந்தாலும் சரி, டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு 
posthumous awardஆக பாரத ரத்னா வழங்கப்படும்.
எந்த அரசும் சீக்கியர்களை விட்டு விடாது!  

 
     

சனி, 3 பிப்ரவரி, 2024

 கௌசல்யா பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு,

"அரசாங்கப் பதவியில் உள்ளபோது அரசு விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்து தெரிவிக்க முடியாது. 1983ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அதாவது, ஒருவர் அரசுப் பதவிக்கு வருவதற்கு முன்பாக எவ்விதக் கருத்தையும் கொண்டிருக்கலாம்.
ஆனால், அரசுப் பதவிக்கு வந்த பிறகு, அரசுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருக்க முடியாது. ஆனால், முன்பு கொண்டிருந்த கருத்திற்காக இப்போது பணி வழங்க மறுக்க முடியாது என்பதுதான் அந்தத் தீர்ப்பு. அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகளின் முதல் விதியே, A government servent will have obsulute integrety, devotion to duty, loyalty to service என்பதுதான்.
Loyalty to service என்பது தேசத்திற்கு விசுவாசம் என்பதாகத்தான் புரிந்துகொள்ளப்படும். தவிர, அரசு ஊழியர்களுக்கான முக்கியமான விதி, எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கக்கூடாது என்பது. அப்படியே பேட்டி அளிக்க வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும். அதில் பணி தொடர்பாகவோ அரசுக்கு எதிராகவோ பேசக்கூடாது. கட்டுரை, புத்தகம் போன்றவற்றை முன் அனுமதி பெற்றே எழுத வேண்டும். இந்த விவகாரத்தில் இந்த விதி மீறப்பட்டிருக்கிறது,"
என்று கூறியுள்ளார்.
Share

வியாழன், 18 ஜனவரி, 2024

யூரி ககாரினும் குருச்சேவும் கடவுளும்!
குருச்சேவின் காலில் விழுந்து வணங்குகிறேன்!
குருச்சேவுடன் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சனை 
ஒப்பிட்டுப் பார்க்கிறேன்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------
அண்டவெளியில் வலம் வந்த முதல் மனிதர் யார்?
யூரி ககாரின் (Yuri Gagarin) என்னும் சோவியத் 
ஒன்றியத்தைச் சேர்ந்தவர். இந்நாடு இன்று ரஷ்யா 
என அழைக்கப் படுகிறது.

இவர் விண்வெளியில் (outer space) வலம் வந்து 
பூமியைச் சுற்றி வந்த நாள் 12 ஏப்ரல் 1961.
மனித குல வரலாற்றில் இந்த நாள் தங்க 
ஜரிகைகளால் வேயப்பட்டு ஒளி சிந்தும் 
நாளாகும்.

இவரின் விண்வெளிப் பயணம் மொத்தம் 
108 நிமிடங்கள் நீடித்தது (from launch to landing) . 
வோஸ்டாக்-1 என்ற விண்கலத்தில் இவர் 
விண்வெளியைச் சுற்றி வந்தார்.   

1961 ஏப்ரல் 12 அன்று காலையில் 06:07 UTC நேரத்தில் 
இவரின் விண்கலம்  விண்ணில் பறந்தது. பூமியின் 
சுற்றுப்பாதையில் ஒரு முழுச் சுற்று சுற்றி முடித்ததும் 
இவரின் capsule விண்கலத்தில் இருந்து எஜெக்ட் ஆனது.
தொடர்ந்து தமது பாரச்சூட்டில் பறந்து தரையிறங்கினார் 
ககாரின். விண்வெளியில் பூமியின் சுற்றுப் பாதையில் 
(orbit) 108 நிமிடங்கள் பறந்தார் ககாரின்.

யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பியவர் அன்றைய
சோவியத் அதிபர் நிகிதா குருச்சேவ் ஆவார். யூரி 
ககாரினின் விண்வெளிப் பயணம் குறித்து, சோவியத்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் (Plenum of the CPSU)  
பேசிய குருச்சேவ் பின்வருமாறு குறிப்பிட்டார்:
"ககாரின் விண்வெளிக்குச் சென்னார்; ஆனால் அங்கு 
அவர் எந்தக் கடவுளையும் காணவில்லை".   

குருச்சேவ் சொன்னார் அல்லாவா< இதுதான் நாத்திகம்!
இதுதான் போர்க்குணமிக்க பொருள்முதல்வாதம்.
நான் குருச்சேவின் காலில் விழுந்து வணங்குகிறேன்.
இறுதி மூச்சு வரை சமரசமற்ற பொருள்முதல்வாதியாக 
போர்க்குணமிக்க பொருள்முதல்வாதியாக இருந்தார் 
குருச்சேவ்.  

இதே காலக்கட்டத்தில் சோசலிச சோவியத் ஒன்றியத்துடன் 
போட்டியிட்டுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய 
அமெரிக்காவை அப்போது (நவம்பர் 1963- ஜனவரி 1969) 
ஆண்டு கொண்டிருந்த லிண்டன் ஜான்சனை நான் 
குருச்சேவுடன் ஒப்பிட்டுப்  பார்க்கிறேன்.

அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் சென்ற நெயில் 
ஆர்ம்ஸ்டிராங்  குழுவினர் 1969 ஜூலையில் நிலவில் 
தரையிறங்கினர். முன்னதாக அமெரிக்கா அப்பல்லோ 8
என்ற விண்கலத்தை நிலவை நோக்கி அனுப்பியது. 
நிலவுக்கு மனிதர்களை ஏற்றிக் கொண்டு முதன் 
முதலில் சென்ற விண்கலம் அமெரிக்காவின் 
அப்பல்லோ 8 மட்டுமே.

1968 டிசம்பர் 21-27ல் மூன்று விண்வெளி வீரர்களுடன் 
( ஃபிராங்க் போர்மென், ஜேம்ஸ் லோவெல், வில்லியம் ஆண்டர்ஸ்)
நிலவுக்குச் சென்ற அப்பல்லோ 8 அங்கு 
தரையிறங்கவில்லை. ஒரு கோள்சுற்றியாக 
(orbiter)  நிலவைச் சுற்றி மட்டுமே வந்தது.  
நிலவைச் சென்றடைய 68 மணி நேரம் ஆனது 
அப்பல்லோ 8 விண்கலத்திற்கு.

அப்பல்லோ 8ன் விண்வெளி வீரர்கள் மூவரும் 
பத்து முறை நிலவைச் சுற்றி வந்தனர். இதற்கு 
அவர்களுக்கு 20 மணி நேரம் ஆனது.

இம்மூன்று வீரர்களும் நிலவைச் சுற்றி வந்தபோது 
1968 டிசம்பர் 24ஆம் தேதி குறுக்கிடுகிறது. அந்நாள் 
கிறிஸ்துமஸ் ஈவ் பண்டிகை நாளாகும். அதை 
முன்னிட்டு அமெரிக்க அரசின் ஆணைப்படி, 
இம்மூன்று வீரர்களும் ஜேம்ஸ் அரசர் எழுதிய 
(King James Bible)  பைபிளில் உள்ள 
ஆதி ஆகமம் (Book of Genesis ) அத்தியாயத்தின் 
முதல் பத்து செய்யுட்களை (first ten verses) வாசித்தனர். 

வில்லியம் ஆண்டர்ஸ் ஆதி ஆகமத்தின் 1 முதல் 
4 வரையிலான செய்யுட்களையும், ஜேம்ஸ் லோவெல்
5 முதல் 8 வரையிலான செய்யுட்களையம், ஃபிராங்க் 
போர்மென் 9, 10 செய்யுட்களையும் வாசித்தனர்.
இது உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டது.

அக்காலக் கட்டத்தில் உலகம் முழுவதிலும் அதிகமாகப் 
பார்க்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு 
நிகழ்ச்சியாக இது இருந்தது. 64 நாடுகளில் உள்ள 
100 கோடி மக்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்தனர்.

யூரி ககாரின் விண்வெளியைச் சுற்றி வலம் வந்தது
ஒரு மகத்தான அறிவியல் நிகழ்வு. அது போலவே 
அப்பல்லோ 8ன் மூன்று விண்வெளி வீரர்களும் 
நிலவைச் சுற்றி வளம் வந்ததும் ஒரு மகத்தான 
அறிவியல் நிகழ்வு.

இந்த அறிவியல் சாதனைகளை சாலிசா ரஷ்யாவும் 
ஏகாதிபத்திய அமெரிக்காவும் எப்படி எடுத்துக் 
கொண்டன? இந்நிகழ்வு குறித்து உலகின் 
பல நூறு கோடி மக்களுக்கு அவர்கள் சொன்னது என்ன?

கடவுள் இல்லை என்கிற உண்மையை சோவியத் 
சோஷலிச நாடு சொல்கிறது. இது போர்க்குணமிக்க 
பொருள்முதல்வாதத்தை மக்களிடம் பரப்புகிறது.

ஆனால் பிற்போக்கான கடவுள் சிந்தனையை, 
மக்களிடம் கொண்டு செல்கிறது ஏகாதிபத்திய 
அமெரிக்கா. இழிந்த கருத்துமுதல்வாத மூடத்தனத்தை 
மக்களிடம் பரப்பியது அமெரிக்கா!

தலையில் ஒளி சிந்தும் விளக்கைச் சுமந்து கொண்டு 
பெருமை பொங்க நிகிதா குருச்சேவ் நிற்கிறார்.
அழுக்கும் துர்நாற்றமும் நிறைந்த அடர்ந்த இருட்டின் 
நடுவில் நிற்கிறார் ஜான் கென்னடியின் சீடர் 
லிண்டன் ஜான்சன்!

ஏகாதிபத்தியம் பிற்போக்கானது!
சோசலிசம் முற்போக்கானது!
சமரசமற்ற பொருள்முதல்வாதி குருச்சேவ் வாழ்க!
-------------------------------------------------------------------------
பொருள்முதல்வாதம் (materialism), கருத்துமுதல்வாதம் 
(idealism) என்றால் என்ன என்று தெரிந்து கொண்ட பிறகு 
இக்கட்டுரை மீது கருத்துக் கூறலாம். அதற்கு முன் கூற 
வேண்டாம்!   
***************************************************  
:
      


ஞாயிறு, 7 ஜனவரி, 2024

லாக்ரேஞ்சு புள்ளியில் (L-1) 
பிரம்மாண்ட நிறை கொண்ட சூரியனின் ஈர்ப்பை  
இத்தனூண்டு நிறை கொண்ட பூமியின் ஈர்ப்பு 
சமன் செய்து விடுகிறதே, எப்படி?   
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
1) ஜோசப் லூயி லாக்ரேஞ்சு (Joseph Louis Lagrange)  
என்பவர் 18ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுக் கணித 
நிபுணர். லாக்ரேஞ்சு புள்ளிகள் அனைத்தும் 
இவர் பெயரில் அமைந்தவையே!

2) சூரியன்- பூமி தொடர்பில் அமைந்த ஐந்து 
லாக்ரேஞ்சு புள்ளிகளை (L-1, L-2, L-3, L-4, L-5)
இக்கட்டுரை குறிப்பிடுகிறது. இணைக்கப்பட்ட 
படங்களைப் பார்க்கவும்)

3) சூரியனின் நிறை (mass) = 2x10^30 kilogram.
( 10 raised to the power of 30 என்பதை வாசகர்கள் சரியாகவும் 
துல்லியமாகவும் புரிந்து கொள்ள வேண்டும்) .

4) பூமியின் நிறை = 6x10^24 kilogram.

5) சூரியனின் நிறையையும் பூமியின் நிறையையும்
ஒப்பிட்டுப் பார்ப்போம். சூரியனின் நிறை அசுரத் 
தனமானது; ராட்சஸத் தனமானது; பேய்த்தனமானது.
பூமியின் நிறையைப் போல்  மூன்று லட்சம் மடங்கு 
அதிகமானது சூரியனின் நிறை.  பூமியின் நிரையைப் 
போல 333,000 மடங்கு அதிகமான நிறையை சூரியன் 
கொண்டிருக்கிறது.

6) பூமிக்கும் சூரியனுக்குமான தொலைவு = 15 கோடி கிமீ.
A என்ற புள்ளியில் சூரியனும், B என்ற புள்ளியில் 
பூமியும் இருப்பதாகக் கருதுங்கள். இவ்விரு 
புள்ளிகளையும் ஒரு நேர்கோட்டால் இணைக்கவும்.
அப்போது AB = 15 கோடி கிமீ.
(இந்தக் கணக்கில் நான் யூக்ளிட்டின் வடிவியலை 
மட்டுமே பயன்படுத்துகிறேன். எனவே வாசக 
அநபர்கள் Geodesic போன்றவற்றை இங்கு கொண்டு வர 
வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்).

7) நியூட்டனின் ஈர்ப்பு விதி பின்வருமாறு அமைகிறது.
The gravitational attraction force between two point masses is directly 
proportional to the product of their masses and inversely proportional 
to the square of their separation distance. The force is always attractive 
and acts along the line joining them.

Force of attraction = (m1 x m2)/d^2 unit.
(where m1, m2 = mass of the objects.
d = distance between the objects)        

8) பூமிக்கும் L-1 புள்ளிக்கும் இடையிலான தூரம்= 15 லட்சம் கிமீ.

9) கணக்கிற்குத் தேவையான தரவுகள், விளக்கம், ஃபார்முலா 
ஆகிய அனைத்தையும் கொடுத்தாயிற்று. இப்போது 
கணக்கைச் செய்யவும். கேள்விக்கான விடை என்ன?

10) சூரியனின் நிறையை விட மூன்று லட்சம் மடங்கு 
குறைவான நிறையை உடைய பூமியானது, 
பிரம்மாண்ட சூரியனின் ஈர்ப்பு விசையை 
L -1 புள்ளியில் சமன் செய்து விடுகிறதே, எப்படி?

விடைகள் வரவேற்கப்படுகின்றன.
***********************************************************    

 
       

   

வெள்ளி, 5 ஜனவரி, 2024

பண்டைத் தமிழரின் புத்தாண்டு உருவாக்கம்! 
-----------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------ 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பண்டைத் தமிழ்ச் சமூகம் 

மேய்ச்சல் சமூகமாக இருந்தது.

பின்னர் படிப்படியாக வேளாண் சமூகமாக 

பரிணாம வளர்ச்சி அடைந்தது. ஆண்டாளின் 

திருப்பாவை முதிர்ந்த மேய்ச்சல் சமூகத்து 

வாழ்க்கையை, வேளாண்மையைப் 

புதிதாகக் கற்றுக் கொண்டுள்ள ஒரு 

சமூகத்தின் வாழ்க்கையைப்  படம் 

பிடித்துக் காட்டுகிறது.


"ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடுகயல் உகளப் 

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் 

தேங்காதே புக்கிருந்து சீர்த்த நகில்பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"  

(ஆண்டாள் திருப்பாவை)  


ஒரு வேளாண்மைச் சமூகத்துக்கு 

வானியல் அறிவு நிரம்பவும் தேவை. சூரியனின் 

இயக்கம் குறித்தும் பூமியின் மீதான 

அதன் விளைவுகள் குறித்தும் தெளிவான 

வானியல் அறிவு தேவை. இந்த வானியல் 

அறிவைப் பெறாமல் வேளாண்மை 

செய்ய இயலாது.


விதைப்பதையும் நடுவதையும் அறுப்பதையும் பிற வேளாண் 

செயற்பாடுகளையும் எந்தெந்தக் காலத்தில் 

மேற்கொள்ளுவது என்பதைச் சரியாகத் 

தீர்மானிப்பதே அன்றைக்கு குழந்தைப் 

பருவத்தில் இருந்த வேளாண் சமூகங்களின் 

முன்னிருந்த சவாலாக இருந்தது..


சூரியனின் இயக்கத்தைப் பொறுத்து 

ஓராண்டில் நான்கு நாட்கள் முக்கியமானவை. 

பூமி-சூரியன் சார்ந்த, திரும்பத் திரும்ப 

ஏற்படும் வானியல் நிகழ்வுகள்  (recurring events) இவை.

மானுட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் 

கூடியவை இவை. இந்நிகழ்வுகளில் நான்கு நாட்கள் பெரும் 

வானியல் முக்கியத்துவம் வாய்ந்தவை.  அந்நான்கு 

நாட்கள் பின்வருமாறு:-

1) சம இரவு நாட்கள் இரண்டு (2 equinoxes)

2) கதிர்த் திருப்ப நாட்கள் இரண்டு (2 solstices).


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 

தொலைநோக்கி கூட கண்டுபிடிக்கப் 

பட்டிராத அக்காலத்தில், வானியல் 

நிகழ்வுகளை அறிந்து கொள்வதும் அவை 

எந்தெந்த நாட்களில் ஏற்படும் என்று 

முன்கணிப்பதும் எளிதல்ல. 


இவை எப்போது நிகழும் என்று  

முன்கூட்டியே அறிந்திட இன்றுள்ள 

பஞ்சாங்கம் போல ஒரு தயார்நிலை 

அட்டவணை (Ready reckoner) அன்று 

உண்டாக்கப் பட்டிருக்கவில்லை. 


ஓராண்டில் இந்த நான்கு நாட்களும் 

என்றென்று நிகழ்ந்துள்ளன என்று இன்று அறிந்து வைத்துள்ளோம்.

அவற்றை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலை இன்றைய 

சமூகம் பெற்றுள்ளது. அண்மைக் காலமாக மேற்கூறிய  

நான்கு நாட்களும் பின்வருமாறு நிகழ்ந்துள்ளன.

1) மார்ச் 20 சம நாள் (vernal equinox)

2) ஜூன் 21 கோடைகாலக் கதிர்த்திருப்பம் 

(summer solstice)

3) செப்டம்பர் 22 சமநாள் (autumnal equinox)  

4) டிசம்பர் 21 குளிர்காலக் கதிர்த்திருப்பம் 

(winter solstice)

   

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,

அன்றைய சமூகம் மேற்கூறிய நான்கு நாட்களையும், அவை 

எப்போது நிகழும் என்பதையும் கண்டறிந்தது எப்படி?


பண்டைத் தமிழரின் புத்தாண்டு உருவாக்கம் சித்திரையை 

தொடக்கமாகக் கொண்டதா அல்லது தையைத் தொடக்கமாகக் 

கொண்டதா என்ற  கேள்விக்கு விடையளிக்க முயல்வோம். 

மேற்கூறிய நான்கு நிகழ்வுகள் எந்தெந்தத் தேதிகளில் நடைபெறும் 

என்று பண்டைச்  சமூகம் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருந்தது 

என்பதைப் பொறுத்தே இக்கேள்வியின் விடை அமையும்.   

   

பங்குனி, ஆனி, புரட்டாசி, மார்கழி (மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர்)

ஆகிய நான்கு மாதங்களில் மேற்கூறிய நான்கு  

நாட்களும் முன்பு வந்துள்ளன. 


உலகெங்கும் உள்ள நாகரிகங்களில் கதிர்த்திருப்பம் 

(solstice) மிகப்பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கோடைகால கதிர்த்திருப்பம் (summer solstice) என்றும்  

குளிர்கால கதிர்த்திருப்பம் (winter solstice) என்றும் ஆண்டுக்கு 

இருமுறை இந்நிகழ்வு நடைபெறும். இவ்விரண்டில் கோடைகால 

கதிர்த்திருப்பமே மக்களால் எளிதாக அறிந்து கொள்ளத் 

தக்கதாகும். மழை பெய்து விடுவதால் குளிர்கால 

கதிர்த்திருப்பத்தை அது நிகழும் நாளின்போது

கண்டறிவது கடினம்.  


பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. என்றாலும் சூரியன் 

பூமியைச் சுற்றி வருவது போல ஒரு தோற்றம் நமது 

கண்களுக்குத் தெரிகிறது. இவ்வாறு தோற்றமளிக்கிற 

சூரியனின் பாதையில் (apparent path), வடக்கு அரைக்கோளத்தில்

அல்லது தெற்கு அரைக்கோளத்தில் ஓர் எல்லை வரை 

சென்றுவிட்ட சூரியன், அதற்கு மேல் செல்ல இயலாத 

நிலையில், திரும்பி எதிர்த்திசை நோக்கி வருவதையே, 

(அதாவது வருவதாக நாம் கருதுவதையே) கதிர்த்திருப்பம் 

(solstice) என்கிறோம்.


கதிர்த்  திருப்பங்களின்போது, கடக ரேகை 

(Tropic of cancer), மகர ரேகை (Tropic of Capricorn) ஆகியவற்றின் 

மீது அவற்றின் தலைக்கு நேர் மேலே, வானுச்சியில் (zenith) 

சூரியன் பிரகாசிக்கும்.

இந்நாட்களில், பூமியின் சில குறிப்பிட்ட  இடங்களில், 

தரையில் ஒரு குச்சியை நட்டு வைத்தால், உச்சி வேளையில் 

தலைக்கு நேராக சூரியன் பிரகாசிக்கும்போது, அதன் நிழல் 

தரையில் விழாது. இது பூஜ்ய நிழல் நாள் (zero shadow day) எனப்படும்.  இதைக் கொண்டே கதிர்த்திருப்பம் சார்ந்த நாட்களை 

பண்டைக்கால மக்கள் கண்டறிந்தனர்.


கடக ரேகை (Tropic of cancer) , மகர ரேகை (Tropic of capricorn) பற்றி 

நாம் அறிவோம். வட அரைக்கோளத்தில், அட்சரேகையின் 

அளவு +23.5 டிகிரியாக இருந்தால் (latitude: +23.5) அது கடக ரேகை 

ஆகும். தென் அரைக்கோளத்தில், அட்சரேகையின் அளவு 

மைனஸ்  23.5 டிகிரியாக இருந்தால் (latitude -23.5)  அது மகர ரேகை 

ஆகும். கடக மகர ரேகைகளுக்கு இடைப்பட்ட இடங்களில், 

தலைக்கு நேரே வானுச்சியில் (zenith) சூரியன்  பிரகாசிக்கும்போது, 

வெட்ட வெளியில் செங்குத்தாக நிறுத்தப்பட்ட ஒரு குச்சியின் 

நிழல் தரையில் விழுவதில்லை.  நிழல் விழாத இந்த 

பூஜ்ய நிழல் நாட்கள் (Zero Shadow Days)  மனிதனால் செயற்கையாக உண்டாக்கப்பட இயலாதவை. 


கதிர்த்திருப்பம் ஏன் நிகழ்கிறது? சூரியனைப் பொறுத்து, பூமி 

தனது அச்சில் நேராக இல்லாமல் 23.44 டிகிரி சாய்ந்திருக்கிறது. 

கதிர்த் திருப்பங்களும் பருவ காலங்களும் இந்த அச்சுச் 

சாய்வினாலேயே (axial tilt)  நிகழ்கின்றன. 


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தொலைநோக்கியோ 

பஞ்சாங்கம் போன்ற வானியல் தரவுகளின் தயார்நிலை அட்டவணையோ

இல்லாதிருந்த காலத்தில், ஓர் ஆண்டின் 365 நாட்களில் 

ஒரே ஒரு நாளை எல்லோராலும் சுலபமாக அடையாளம் காண இயலும்.

அந்நாள் கோடைகால கதிர்த்திருப்ப நாளே ஆகும். 

கோடை காலக் கதிர்த்திருப்ப நாள் என்பது பொருட்களின் 

நிழல் நீளமாக விழும் நாளே ஆகும் (longest shadow day)  


பங்குனி-சித்திரை மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும்

பூஜ்ய நிழல் நாட்கள்  (zero shadow days) ஏற்படும். சித்திரை மாத வெயிலில் 

பூஜ்ய நிழல் நாட்களில் ஒன்றை, அதாவது சித்திரை முதல் நாளைத்    

தொடக்கமாகக் கொண்டு பண்டைத் தமிழன் தனது புத்தாண்டை 

உருவாக்கினான். காலப்போக்கில் சித்திரைப் புத்தாண்டு 

நிலைபேறு உடையதாக ஆகியது.

   

 இந்தியாவில் உள்ள பெரும் அறிவியல் அமைப்புகளில்  

காலக்கணிதம் சார்ந்து நம் கவனத்துக்கு உரியவை இரண்டு.
ஒன்று: இஸ்ரோ (Indian Space Research Organsation)  மற்றொன்று இந்திய வானிலை 
ஆய்வு மையம் (IMD = Indian Metrological Department() ஆகும்.
இந்திய வானியல் நிறுவனத்தின் தமிழ்ப் 
பிராந்திய அமைப்பு (Regional Metrological Centre) 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. 

இஸ்ரோவும் வானிலை ஆய்வு மையமும் விண்ணை அளப்பவை.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 10,000 கிலோமீட்டர் உயரம் 
வரையில் நிலவுவது பூமியின் வளிமண்டலம் ஆகும்.
அதற்கு அப்பால் விண்வெளி தொடங்குவதாககே கருதப் படுகிறது.    

விண்ணின் வளிமண்டலப் பகுதியை ஆய்ந்து 
பருவநிலை மாற்றம், காலநிலை மாற்றம், புயல், 
மழை உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து 
மக்களுக்கு அறிவிக்கும் பணிகளை வானியல் மையம்
செய்து வருகிறது.

விண்ணில் செயற்கைக்கோள்களைச் செலுத்தி
கோள்களின் இயக்கத்தை ஆராயும் பணிகளை இஸ்ரோ 
நிறுவனம் செய்து வருகிறது. விண்வெளியிலும் ஆழ்வெளியிலும் 
அது செயல்பட்டு வருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழனின் 
புத்தாண்டு என்னவாக இருந்தது என்று ஆராய்ந்து 
சொல்லத் தகுதியான நிறுவனங்கள் இவ்விரண்டு மட்டுமே!
தமிழ்ப் புத்தாண்டாக பண்டைத் தமிழர்கள் 
ஏற்றுக்கொண்டு ஒழுகியது சித்திரைப் புத்தாண்டையா அல்லது   
தைப்புத்தாண்டையா என்ற கேள்விக்கு விடையளிக்கும் அருகதை வாய்ந்தவை இவ்விரு அமைப்புகள் மட்டுமே!

எனவே பண்டைத் தமிழர் தமது புத்தாண்டாக எதைக் 
கொண்டிருந்தனர் என்ற கேள்விக்கு துல்லியமானதும் 
அதிகாரபூர்வமானதுமான விடை வேண்டுவோர் மேற்கூறிய 
இரு அமைப்புகளையும் அணுகி விளக்கம் பெறலாம்.
*******************************************************    
சென்ட் ஒன 06.01.2023


செவ்வாய், 2 ஜனவரி, 2024

 தமிழ்ப்புத்தாண்டு எது?

john rubert

புத்தாண்டு என்றால் என்ன? அதன் தேவை என்ன?

கதிரவனைச் சுற்றி நிலக்கோள்(புவி) நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. இது ஒருமுறை சுற்றி முடித்துவிட்டது அடுத்தசுற்று தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்கும் நாளே புத்தாண்டு. நீள்வட்டப் பாதையில் நிலக்கோளின்(புவி) இடத்தைப் போன்றே பருவகாலங்களும் மாறிமாறி வந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொராண்டிலும் இப்பருவகாலங்கள் சுழற்சியாக வந்துகொண்டிருக்கும். விவசாயத்தை நம்பி வாழ்ந்த ஒவ்வொரு மனிதனுக்கும். பருவகாலத்தின் மறுசுழற்சி தொடங்கிவிட்டது என்பதை அறியும் தேவை இருந்திருக்கலாம்.

 

நாட்காட்டியில்லாமல் புத்தாண்டை எப்படி அறிவது?

நமது முன்னோர்கள் வீட்டில் நாட்காட்டியைத் தொங்கவிட்டிருக்கவில்லை.  இயற்கையையொட்டிய வாழ்க்கைச்சூழலை அமைத்துக்கொண்டமக்கள் ஆண்டுநிறைவை மிகஎளியமுறையைக்கொண்டே யறிந்திருக்கவேண்டும்.  நிலக்கோள்(புவி) தன்னைத்தானே சாய்ந்த அச்சில் சுற்றுகிறது. இந்த அச்சு தனதுசாய்வுமாறாமல் கதிரவனைச்சுற்றும்போது ஒருநேரம் அச்சின் கீழ்முனை கதிரவனுக்கருகிலும் மற்றொருநேரம் மேல்முனை கதிரவனுக்கருகிலும் வரும். கீழ்முனையை தென்துருவம் என்றும் மேல்முனையை வடதுருவம் என்றும் அழைக்கிறோம்.  நிலக்கோளின் தென்முனை கதிரவனுக்கருகில் வரும்போது கதிரவன் தெற்கில் இருப்பது போலும் நிலக்கோளின் வடமுனை கதிரவனுக்கருகில் வரும்போது கதிரவன் வடமுனையில் இருப்பதுபோலும் தோன்றும்.  ஒவ்வொருமுறை நிலக்கோள்(புவி) கதிரவனைச் சுற்றும்போதும் கதிரவன் வடக்கிலிருந்து தெற்கும் தெற்கிலிருந்தும் வடக்குமென மாற்றிமாற்றி நகர்ந்துகொண்டேயிருக்கும்.  இப்படித்தெற்காக நகரும் கதிரவன் ஒருநாள் வடக்காக நகரத் தொடங்குகிறது. இந்நாளிலேற்படும்நிழல் மற்றயெல்லாநாளிலுமேற்படும்நிழலைவிட நீளமாக இருக்குமென்பதால் இந்நாளுக்கு நெடுநிழல்நாள் என்று பெயர்வைத்துக் வைத்துக் கொள்வோம்.  இதேபோல் வடக்காகநகரும்கதிரவன் மீண்டும் தெற்காகநகரத்தொடங்கும் நாளும் ஒரு நெடுநிழல்நாள்தான்.  இந்த நெடுநிழல்நாளை ஆங்கிலத்தில் Solstice என்றழைப்பர்.  இப்படி தென்வடல் நகர்வின்போது ஒருநாளும் வடதென் நகர்வின்போது ஒருநாளும் கதிரவன் தலையுச்சிக்கு நேராகவந்து நட்டுவைத்தகுச்சியின்நிழல் தரையில்விழாதநிலையை ஏற்படுத்திவிட்டுச் செல்லும். நிழல் அமைந்து காணப்படும் இந்தநாளுக்கு அமைநிழல்நாள் என்று பெயரிட்டுக்கொள்வோம்.  

 

ஒவ்வொராண்டும் வடசெலவின் போது ஒர் அமைநிழல்நாளும் நெடுநிழல்நாளும் தென்செலவின் போது ஓர் அமைநிழல்நாளும்  நெடுநிழல்நாளும் இருக்கும் இந்தநான்கு நாட்களைக் கண்டுபிடிக்க எந்த பெருங்கருவியும் தேவையில்லை. அன்றாடவேலையின்போதும் அறிந்துவிடலாம்.  இயற்கையோடு நெருக்கமாக வாழும் மனிதனுடையக் கண்டுபிடிப்பும் மிகஎளிமையான ஒன்றாகவேயிருக்கும்.

 

இந்த நெடுநிழல்நாள் நிலத்தில் வாழும் அனைவருக்கும் பொது ஆனால் கருவிகள் ஏதுமற்றநிலையில் நேற்றையநாள் நெடுநிழல்நாளாக இருந்திருக்கிறது என்பதை அடுத்தநாளில்தான் உணரமுடியும். அமைநிழல்நாளோ அப்படியல்ல கதிரவன் உதயத்தின்போதோ தவறினால் நண்பகலின்போதோ அறிந்துவிடலாம். மிக எளிதாக அறியப் படமுடிந்த ஓருநாள்.

 

அறிந்து கொள்ளவேண்டிய நாள்கள். (கதிரவன் வடக்குநோக்கி நகர்வது வடசெலவு, தெற்குநோக்கி நகர்வது தென்செலவு.)

வடசெலவில் நெடுநிழல்நாள்  ஜூன் 21

தென்செலவில் நெடுநிழல் நாள் டிசம்பர் 21

வடசெலவில் அமைநிழல்நாள் ஏப்ரல் 14 (மானாமதுரையில்)

தென்செலவில் அமைநிழல்நாள் ஆகஸ்ட் 28 (மானாமதுரையில்)

 

எது தமிழ்ப்புத்தாண்டு?

எளிமையாக இரண்டு நாள் நமக்குக் கிடைக்கிறது அவை அமைநிழல் நாளான ஏப்ரல் 14ம் ஆகஸ்ட் 28ம். இந்த இரு நாளிலும் தமிழ்நாட்டின் பெருவாரியான இடங்களில் கதிரவன் தலை உச்சிக்குமேல் இருக்கும்.  குறிப்பாக மானாமதுரை எனும் இடத்தில் தலைக்குமேல் இருக்கும்.  இதில நம்மவர்கள் தெரிந்து கொண்டதோ ஏப்ரல் 14 அதாவது சித்திரை 1(ஆகஸ்ட் 28 ஐ தெரிந்து கொள்ளாமல் விட்டிருப்பதற்கு ஆகஸ்ட் இறுதியில் மழை தொடங்குவது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது ஆடிப்பட்டத்தில் தேடி விதைப்பதில் மும்முரமாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்.) .  சித்திரை 1ஆம் நாள் சூரியன் தலைக்கு மேல் தான் இருக்குமென்பதை http://www.suncalc.net/#/9.6718,78.4674,8/2014.04.14/22:02 இந்த தொடுப்பில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் சித்திரியிலும் ஆகஸ்ட் இறுதியிலும் கதிரவன். தலைக்கு நேராகவும் நிலத்துக்குச் செங்குத்தாகவும் இருக்கும்.  ஆக புத்தாண்டு தை 1ஆம் நாள் அல்ல. சித்திரை 1ஆம் நாளே.

 

இலக்கியத்தில் தை 1.

 

தை முதல்நாள்பற்றி இலக்கியமேற்கோள் பலவற்றைக் காட்டுவர். அவை அனைத்தும் தைத்திருநாளுக்கான சான்றுகளேயன்றி எவையும் தை முதல்நாள் புத்தாண்டெனக் கூறும் ஆதாரங்களல்ல.  அறுவடைத் திருநாளை நாம் கொண்டாடிய நாள் அது.  மற்றபடி தை ஒன்றாம் நாளை அறிவதே மிகவும் சிக்கலானது.

 

குறிப்பு: சித்திரை 1 புத்தாண்டு எனச் சொல்வது தமிழர் புத்தாண்டென எதையோ ஒருநாளைக் குறிப்பிடவில்லை. இயல்பான நிகழ்வைக் கொண்டே அமைத்தனர் என்பதற்கு ஓர் ஆதாரம்.

 

எனது தீர்மானம்:

 

சித்திரை 1 தமிழ்ப்புத்தாண்டு.

திங்கள், 1 ஜனவரி, 2024

difference between micro processor and micro cntroller 
--------------------------
It is used for big applications.It is used to execute a single task within an application.
Microprocessor is the heart of computer system.It is the heart of the embedded system.
It is just a processor. Memory and I/O components have to be having to be connected externally.Microcontroller contains external processor along with internal memory and I/O components.
Since I/O and memory connected externally, the circuit becomes large.Since I/O and memory present internally, the circuit is small.
Can't be used in compact systems and hence inefficient.Can be used in compact systems and microcontroller is an efficient technique.
Cost of entire system increases.Cost of entire system is low.
Power consumption is high.Power consumption is low.
Most of the microprocessors do not have power saving modes.Most of the microcontrollers have power saving mode.
Difficult to replace.Easy to replace.
Mainly used in personal computers.Used mainly in washing machine, MP3 players.