வெள்ளி, 31 ஜனவரி, 2020

சபிக்கப் பட்டவர்களும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களும்!
பட்ஜெட் 2020 குறித்த அறிவியல் பகுப்பாய்வு!
நிர்மலா அம்மையாரிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன?
பொருளாதாரம் குறித்த RDX கட்டுரை!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
மனிதன் தினசரி மலம் கழிக்கிறான்.
அதைப்போன்றதே ஆண்டுதோறும் பட்ஜெட்
சமர்ப்பிப்பதும்.

இதைத்தவிர வேறு விசேஷம் ஏதுவும் ஒரு
பட்ஜெட்டில் இல்லை! ஒரு பட்ஜெட்டால் இந்தியா
வாழப் போவதும் இல்லை! வீழப் போவதும் இல்லை.

ஆர் கே சண்முகம் செட்டியார், சிந்தாமணி தேஷ்முக்
ஆகியோர் சமர்ப்பித்த பட்ஜெட் பற்றியெல்லாம்
எனக்கு எதுவும் தெரியாது. அப்போது நான் சிறுவன்.
எனக்குத் தெரிந்த முதல் பட்ஜெட்
டி டி கிருஷ்ணமாச்சாரி சமர்ப்பித்ததே!

ஆக டி டி கே முதலாக, டாக்டர் மன்மோகன் சிங்,
ப சிதம்பரம் ஊடாக, இன்று நிர்மலா அம்மையார்
சமர்ப்பிக்கும் பட்ஜெட் வரை, எல்லா பட்ஜெட்டும்
மலம் கழிப்பது போன்றதே.

சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தார் என்பதும்
சிதம்பரம் மலம் கழித்தார் என்பதும் எல்லா
அம்சங்களிலும் சம மதிப்புடைய வாக்கியங்களே.

பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தில் சர்வசம
முக்கோணங்கள் (congruent triangles) பற்றிப் படித்திருந்தால்,
படித்ததை இப்போது நினைவு கூரவும். அது போல
மேற்கூறிய இரு வாக்கியங்களும் congruent sentences.  

பட்ஜெட் குறித்த எனது சமன்பாடு இதுதான்!
ஆண்டுதோறும் பட்ஜெட் சமர்ப்பித்தல் = தினசரி மலம் கழித்தல்.

இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இந்தியாவில்
ஒவ்வொருவரின் உச்சபட்ச அறியாமையும் சலங்கை
கட்டி ஆடும். ஊடகத் தற்குறிகள் அடி முட்டாள்களைத்
தேடிப் பிடித்துக் கூட்டி வைத்து, பொருளாதார நிபுணர்கள்
என்று ஞானஸ்நானம் கொடுத்து, அவர்களின்
அறியாமையை வெளிப்படுத்திக் காட்டுவார்கள்.

ஒரு வாரத்துக்கு எங்காவது வெளிநாடு போய்விட்டு
வரலாமா என்று யோசிக்கிறேன். கூத்தாடி ரஜனி காந்த்
ஏன் அடிக்கடி இமயமலைக்குப் போகிறார் என்பது
இப்போதுதான் புரிகிறது.

பொருளாதார நிபுணர் என்று உலகில் யாரும் கிடையாது.
உலகில் அறிவியலாளர்கள்தான் உண்டே தவிர
பொருளாதார நிபுணர்கள் என்று யாரும் கிடையாது.

இரண்டாம் வகுப்புக்கு மேல் படிக்காத, சொத்துப்
பாத்திரங்களில் தமது கையெழுத்தைத் தட்டுத்
தடுமாறிப் போடுகிற, துணைக்கண்டத்தின்
பெருந் தற்குறிகளான
1) செத்துப்போன சரவண பவன் ராஜகோபாலும்  
2) உயிருடன் இருக்கும் ராஜாத்தி அம்மாளும் மட்டுமே
உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள்!
உலகெங்கும் சொத்துக்களை வாங்கிக் குவித்து
இருக்கிறார்கள் இவ்விருவரும்!

ஆடம் ஸ்மித் காலத்தில் மேற்கூறிய இரு தற்குறிகளும்
இருந்திருந்தால், An inquiry into the nature and causes of
wealth of Nations என்ற தமது புத்தகத்தில் இவர்கள்
இருவரையும் குறிப்பிட்டு இரண்டு அத்தியாயம் எழுதி
இருப்பார் ஆடம் ஸ்மித்.

பொருளாதாரம் என்பது முற்றிலும் குத்து மதிப்பான,
பெரிதும் தோராயமான ஒரு சப்ஜெக்ட். அவ்வளவுதான்!
அதை social science என்று கூறுவதற்குக் கூட எனது
நா கூசுகிறது. ஏனெனில் அதில் சயன்ஸ் என்பது
மருந்துக்கும் இல்லை.

இயற்பியலில் கணிதத்திலும் பல்வேறு விதிகள் (rules)
சட்டங்கள் (laws) உண்டு. அவை துல்லியமானவை.
அவற்றின் துல்லியம் ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கப்
பட்டுக் கொண்டே இருக்கிறது. வாசகர்கள் 10,11,12
வகுப்புகளின் கணிதம் இயற்பியல் பாடப்
புத்தகங்களைப் படிக்குமாறு பணிவுடன்
வேண்டுகிறேன். குறைந்த பட்சம் சார்லஸ் விதி,
ஓமின் விதி, பாயில் விதி ஆகியவற்றைப் படியுங்கள்.
நான் சொல்வது உங்களுக்கு விளங்கத் தொடங்கும்.

ஆனால் பொருளாதார விதிகள் அப்படி அல்ல.
அவை வெறுமனே ஒரு போக்கைச் சுட்டிக் காட்டும்
தன்மை கொண்டவை. அவ்வளவே. அதற்கு மேலும்
எதுவும் இல்லை; அதற்குக் கீழும் எதுவும் இல்லை.
(Economic laws are mere hypothetical tendencies)

ஒரு பொருளாதார விதி என்பது எவ்வளவு தூரம்
சரியாக இருக்கிறதோ அவ்வளவு தூரம் தவறாகவும்
இருக்கும். ஒரு பொருளாதார விதியின் சரித்தன்மையை
p என்றும், அதன் தவறை q என்றும் எடுத்துக் கொண்டால்,
p = q. p is equal to q always. இதுதான் பொருளாதார விதிகள்
குறித்த எனது சமன்பாடு.
(இங்கு p, q are the elements of R (R = Set of real numbers).  

பட்ஜெட் என்றால் வரி விதிப்பு அல்லவா! எனவே
எதற்கெல்லாம் வரி விதிக்கப் பட்டு இருக்கிறது
என்று அறிய பட்ஜெட்டைக் கவனிப்பது
தேவையல்லவா என்கிறார் நமது குட்டி
முதலாளித்துவர்.

குட்டி முதலாளித்துவரே, GST வந்த பிறகு, வரி
விதிக்கும் அதிகாரம் எந்த நிதி அமைச்சருக்கும்
இல்லையே! அதை GST கவுன்சில் அல்லவா
எடுத்துக் கொண்டுள்ளது!

Goods ஆகவும் Service ஆகவும் இல்லாத ஒன்றின் மீது
மட்டுமே ஒரு நிதி அமைச்சரால் வரி விதிக்க
முடியும். அப்படி ஒன்றுதான் தனிநபர் வருமானம்.
முந்தைய நிதி அமைச்சரான மறைந்த அருண் ஜெட்லி
ரூ 5 லட்சம் வரை வரிச்சலுகை (முழுமையாக
இல்லாவிடினும் பகுதியளவில்) வழங்கிய பின்னால்
நிர்மலா அம்மையாரிடம் இருந்து எதிர்பார்க்க
எதுவும் இல்லை. 

பட்ஜெட் என்பது முற்றிலுமாக எதிர்மறை
அம்சங்களைக் கொண்டது என்று எவரும் புரிந்து
கொள்ள வேண்டாம். நான் ஏற்கனவே கூறியபடி,
பட்ஜெட் சமர்ப்பித்தல் என்பது மலம் கழித்தலுக்குச்
சமம். மலம் கழித்தலில் என்னவெல்லாம் நேர்மறை
அம்சங்கள் உண்டோ அதெல்லாம் பட்ஜெட்
சமர்ப்பித்தலிலும் உண்டு.

சிறந்த பட்ஜெட் என்று எதுவும் கிடையாது.
நறுமணம் மிக்க மலம் என்று எதுவும்
கிடையாதல்லவா, அதைப்போல. அதே நேரத்தில்
மோசமான பட்ஜெட் என்றும் எதுவும் கிடையாது.

இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில், பட்ஜெட்டினால்
ஏற்படும் ஒரு சாதக அம்சத்தைக் குறிப்பிடாமல்
இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய இயலாது.
அது என்ன சாதக அம்சம் என்கிறீர்களா?

தமிழர்களால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது,
கம்ப இராமாயணம், திருக்குறள், புறநானூறு போன்ற
செவ்வியல் இலக்கியங்களில் இருந்து தமிழர்கள்
மேற்கோள் காட்டுவார்கள். ப சிதம்பரத்தின்
காலம் இதில் ஒரு பொற்காலம். நிர்மலா அம்மையார்
தமது முதல் பட்ஜெட்டில் "காய்நெல் அறுத்துக் கவளம்
கொளினே" என்ற பிசிராந்தையாரின் பாடலை
மேற்கோள் காட்டினார். இந்த ஆண்டு எந்த இலக்கிய
மேற்கோளைக் காட்டப் போகிறார் என்று ஆவலுடன்
காத்திருக்கிறேன். இதுதான் பட்ஜெட்டின் ஒரே
சாதக அம்சம்.

இறுதியாக ஒன்று. இந்தக் கட்டுரையைப் படித்துப்
புரிந்து விரும்பி ரசிக்கும் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்
பட்டவர்கள்.என்னுடைய கட்டுரையில் எப்போதுமே
ஏகப்பட்ட textual pleasure இருக்கும். எனினும்
இதையெல்லாம் ரசிக்க திறந்த மனதும் உரிய IQவும்
(IQ > or = 110) வேண்டும்.
இக்கட்டுரையை விரும்பாதவர்கள் சபிக்கப்
பட்டவர்களாக மட்டுமே இருக்க முடியும்.
**************************************************
  

 

   
  
அனல் மின் நிலையங்கள் சுற்றுச் சூழலை, சுவாசிக்கும்
காற்றை நச்சுப் படுத்துகின்றன. அவை மூடப்பட
வேண்டும்.

அணுமின் நிலையங்கள் சூழலை மாசு படுத்துவதில்லை.
எனினும் அவை எந்நேரமும் வெடித்து விடும் என்று
மக்கள் அச்சம் கொள்கிறார்கள்.

ஆக, சூரிய மின்சக்தி ஒரு மாற்று எரிசக்தியாக
இன்று மத்திய மாநில அரசுகளால் முன்வைக்கப்
படுகிறது. இதை வரவேற்பது நம் கடமை ஆகும்.

அண்மையில் கோவையில் சூரிய ஒளி மின்சாரம்
தயாரிக்கும் ஒரு திட்டத்தை தமிழக அரசு
தொடங்கி வைத்தது. இதை வரவேற்பது நம் கடமை.

ஆனால், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த
ஜாகீர் உசைன் என்பவர் முகநூலில் சூரிய மின்சக்தி
குறித்து பொய்யான செய்திகளை எழுதி இருந்தார்.

சூரிய மின்சக்தியால் சிறுநீரகம் செயலிழக்கும்
என்றும் தோல் நோய்கள் வரும் என்றும் மிக
மோசமான பொய்யர்களை எழுதி இருந்தார்.
அவர் மீது கோவை மாநகரட்டாசி வழக்குத்
தொடர்ந்தது.

வழக்கு விசாரணையின்போது, அறிவியலுக்கு எதிராக
பொய்களைப் பரப்பிய ஜாகீர் உசேனின் கல்வித்
தகுதி என்ன என்றும் அவர் என்ன படித்திருக்கிறார்
என்றும் நீதியரசர் கேள்வி எழுப்பினார்.

புழுவினும் இழிந்த ஜாகீர் உசைன் ஒரு தற்குறி என்றும்
SSLC பெயிலானவர் என்றும் தெரிய வந்தது.

ஜாகிர் உசைன் மட்டுமல்ல, கணக்கற்ற கல்வியறிவற்ற
தற்குறிகள் முகநூலில் அறிவியலுக்கு எதிரான
கருத்துக்களை  வைரஸ்களைப் போல் பரப்பி
வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் தண்டிக்க
வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கடமை ஆகும்.
--------------------------------------------------------------

BSNL விருப்ப ஓய்வும்
தனியார் நிறுவனக் கைக்கூலிகளாகச் செயல்படும்
ஊடகத் தற்குறிகளுக்கான எச்சரிக்கையும்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
இன்று (ஜனவரி 31, 2020) BSNL நிறுவனத்தில் அறிமுகப்
படுத்தப்பட்ட ஒரு தங்கக் கைகுலுக்கல் திட்டத்தின்
மூலம் (Golden hand shake VRS) மூலம் 78,000 பேர்
விருப்ப ஒய்வு பெறுகிறார்கள். இது பல்லாயிரம் கோடி
ரூபாய் செலவில் BSNLஐ புத்தாக்கம் செய்யும்
திட்டத்தின் ஒரு பகுதி. (BSNL Revival plan). இதை
BSNLன் வலிமையான  தொழிற்சங்கங்களும்
ஊழியர்களும் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டனர்.

இது குறித்து முகநூல் வாசகர்களுக்காக
நியூட்டன் அறிவியல் மன்றம் ஐந்தாறு
கட்டுரைகளை எழுதி உள்ளது. எமது கருத்துக்களை
உள்ளடக்கி வட இந்திய ஆங்கில ஏடொன்று கட்டுரையும்    
வெளியிட்டுள்ளது.

எனவே BSNL அழிகிறது என்றெல்லாம் எந்தத் தற்குறியும்
பொய்களைப் பரப்பக்கூடாது என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் எச்சரிக்கை செய்கிறது. உங்களால் மட்டுமல்ல
உங்கள் அப்பனாலும் சரி, எந்தக் கொம்பாதி
கொம்பனாலும் BSNLஐ அழிக்க முடியாது.

ஜவஹர்லால் நேருவும் இந்திரா காந்தியுமே இன்றைய
BSNL மற்றும் அன்றைய தொலைதொடர்பு
தொழிற்சங்கங்களிடம் மண்டியிட்டது வரலாறு.

அன்றைய தொலைதொடர்பு தொழிற்சங்கத்தின்
(NFPTE) சங்கப் பத்திரிக்கை நாடு முழுவதும் உள்ள
கிளைச் செயலாளர்களுக்கு தபால் மூலம்
அனுப்பி வைக்கப்படும். இந்தப் பத்திரிகையை
பட்டுவாடா செய்யக் கூடாது என்றும் தீ வைத்துக்
கொளுத்த வேண்டும் என்றும் சஞ்சய் காந்தி
உத்தரவு போட்டான்.

கடைசியில் சஞ்சய் காந்திதான் புழுத்துச் செத்தானே
தவிர, ஆனானப்பட்ட இந்திரா காந்தியால் கூட
எங்களின் தொழிற்சங்கத்தை ஒடுக்க முடியவில்லை.

எனவே BSNL அழிகிறது என்றெல்லாம் எந்த நாயும்
நாடி சோதிடம் சொல்ல வேண்டாம் என்று
எச்சரிக்கிறோம். குறிப்பாக ஊடகத் தற்குறிகள்
இது போன்ற பொய்களைப் பரப்பினால், அவர்கள்
தனியார் நிறுவனங்களின் கைக்கூலிகள் என்பது
நிரூபிக்கப் படும்.
எனவே BSNL குறித்த எதிர்மறையான செய்திகளை
கற்பனை செய்து பரப்ப வேண்டாம் என்று மீண்டும்
ஊடகத் தற்குறிகளைக் கடுமையாக எச்சரிக்கிறோம்.

BSNLல் இரண்டு மாதமாக சம்பளம்
கொடுக்கவில்லையாமே என்றெல்லாம் நீ கவலைப்
பட வேண்டாம். இதெல்லாம்  எங்கள் உள்விவகாரம்.
உன் மரமண்டையில் ஏறாது.

உன் பெண்டாட்டி அடுத்த வீட்டுக்காரனோடு
ஓடிப் போய்விடாமல் தற்காத்துக் கொள். இதுதான்
நீ கவலைப்பட வேண்டிய விஷயமே தவிர, BSNLல்
சம்பளம் தரவில்லை என்பதெல்லாம் உனக்கு ஏன்?
பந்தியில் சேர்ந்த எச்சில் இலையை எடுத்துப்
போடுவதோடு நிறுத்திக் கொள். எச்சில் இலையை
எண்ணுவது உன் வேலை அல்ல ஊடக மூடனே.

வாசக அன்பர்கள் இக்கட்டுரையைப் படித்து விட்டு
புருவத்தை நெரிக்கலாம். 360 டிகிரியில் இருந்தும்
தனியார் நிறுவனங்களின் கைக்கூலிகள் BSNL
குறித்து பொய்ப்பிரச்சாரம் செய்வதும், அதை
அநேகமாக எல்லா ஊடகத் தற்குறிகளும் பரப்பவும்
செய்கிறபோது அஹிம்சையை எங்களுக்கு
யாரும் உபதேசிக்க வேண்டாம். BSNLஐக் காப்பதும்
அதன் மாண்பை நிலைநிறுத்துவதும் எங்களின்
கடமை. இதில் யார் எவரும் குறுக்கே வர முடியாது.
குறுக்கே வந்தால் வெட்டுவோம்.

உழைத்துச் சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு பெருமிதம்
உண்டு. இதை திமிர் என்று பாமர மக்கள் சொல்வதுண்டு.
எனவே உழைத்துச் சாப்பிடும் BSNLன் ஒவ்வொரு
தொழிலாளியும் திமிருடன்தான் இருப்பான். இதை லும்பன்
வர்க்கத்துக் கழிசடைகளாலும், குட்டி முதலாளித்துவ
வர்க்கத்து அற்பர்களாலும் புரிந்து கொள்ள
முடியாது. 500 ரூபாய் கவரில் போட்டுக் கொடுத்தால்
மலத்தைச் சந்தனமாகப் பூசுவான் ஊடகப்புழு.

உழைத்துச் சாப்பிடுவதால் வரும் சொந்தத் திமிர்
போக, தொழிலாளர்களுக்கு வர்க்கத் திமிரும் உண்டு.
சமூகத்திலேயே ஆகப் புரட்சிகரமான வர்க்கம்
தொழிலாளி வர்க்கம்தான். இந்த வர்க்கத்தை
industrial proletariat என்று வர்ணித்தார் மார்க்ஸ்.

ஒரு தொழில்நுட்ப நிறுவனமான BSNLன் ஊழியர்கள்
மார்க்ஸ் குறிப்பிட்ட தொழிலகப் பாட்டாளி வர்க்கம்
(industrial proletariat) என்ற வகைமையில் வருவார்கள்.
எனவே சொந்தத் திமிரும் வர்க்கத் திமிரும் கொண்ட
எங்களிடம்  வாலாட்ட வேண்டாம் என்று
எச்சரிக்கிறோம்.

பெருமிதங்கள் மேற்கூறிய இரண்டுடன் முடிந்து
விடுவதில்லை என்கிறார் தொல்காப்பியர்.

கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே
என்கிறார் தொல்காப்பியர். இவ்வெல்லாப்
பெருமிதங்களையும் உணர இக்கட்டுரை ஆசிரியரின்
பதிவுகளைத் தொடர்ந்து படிக்கவும்.
*************************************************       

  





   

    

  



     

வியாழன், 30 ஜனவரி, 2020



10ஆம் வகுப்பு மாணவி பேச்சியம்மாள் தற்கொலை!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள
குழந்தை இயேசு மேனிலைப் பள்ளியில் 10ஆம்
வகுப்பில் படித்து வந்த மாணவி பேச்சியம்மாள்
(தகப்பனார் பெயர்: பெருமாள்) தற்கொலை செய்து
கொண்டார்.

 பேச்சியம்மாள் மதிப்பெண் குறைவாகப் பெற்று வருவதால்,
பள்ளியின் 100 சதத் தேர்ச்சி பாதிக்கப் படக்கூடும்
என்பதால் டிசியை வாங்கிக்கொண்டு போகும்படி
பள்ளியின் தமிழாசிரியை கூறியதாகச் சொல்லப்
படுகிறது. இந்த நெருக்கடியைத் தாங்க இயலாத
குழந்தை வீட்டுக்கு வந்தவுடன் தற்கொலை
செய்து கொண்டது.

ஏழை எளிய கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த
இந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு இத்தற்கொலை
மிகப்பெரும் பேரிழப்பு.

பதினைந்து நாட்களுக்கு முன்பு, ஒரு மாணவனின்
தலை முடியை  அவனுடைய தாய் ஓட்ட வெட்டி
விட்டதால் அம்மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
இச்செய்தியை அதற்குள் மறந்திருக்க முடியாது.
இக்குடும்பமும் ஏழை எளிய குடும்பம்தான்.

இன்னும் கணக்கற்ற பள்ளிக் குழந்தைகளின்
தற்கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.
பெரும்பாலும் ஏழை எளிய குடும்பத்துப் பிள்ளைகள்தான்
இவ்வாறு தற்கொலை செய்து கொள்கின்றன. இவை
சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஏனெனில்
பிண அரசியல் செய்து வயிறு வளர்க்கும்
அமைப்புகளுக்கு இத்தகைய தற்கொலைகளால்
பயன் எதுவும் கிட்டப் போவதில்லை.

ஒரு தற்கொலை எப்போது தமிழ்ச் சமூகத்தின்
கவன ஈர்ப்பைப் பெறும் என்றால், அத்தற்கொலையால்
பிண அரசியல் செய்யக் கூடிய வாய்ப்பு அதிகமாக
இருந்தால் மட்டுமே!

இதற்குச் சிறந்த உதாரணம் மருத்துவம் படிக்க
விரும்பிய அனிதாவின் தற்கொலை. அனிதாவின்
தற்கொலை நன்கு திட்டமிடப்பட்டு தூண்டப்பட்ட
தற்கொலை. ஒரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த
பட்டியல் இனப் பெண் குழந்தையை தங்களின்
வக்கிர நோக்கத்திற்காக உச்சநீதிமன்றம் வரை
அழைத்துச் சென்று ஏமாற்றிய, தனியார் மெட்ரிக்
பள்ளி அதிபர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவும் சில
திமுக அரசியல்வாதிகளுமே அனிதாவின்
தற்கொலைக்கு காரணம். எனினும் அவர்கள் இந்த
நோய் பீடித்த சமூகத்தில் போராளிகளாக  வலம்
வந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று பேச்சியம்மாள் தற்கொலையில், பள்ளியின்
தமிழாசிரியையைக் கைது செய்ய வேண்டும் என்று
உள்ளூரில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
மாவட்டக் கல்வி அதிகாரி அநேகமாக அந்த
ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்யக்கூடும்.

போராட்டம் தீவிரமாக நடந்தால் அந்த ஆசிரியை
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவும்
கூடும். பேச்சியம்மாளுக்கு உயிர் போய் விட்டது.
ஆசிரியைக்கு வாழ்க்கை போய்விடும்.

மொத்தச் சமூகமே நோயுற்ற சமூகமாக இருக்கும்போது
ஒரு ஆசிரியையைச் சிறையில் அடைப்பதால் என்ன
பயன் விளையும்? தேர்ச்சி விகிதம் குறைந்தால்
பள்ளி நிர்வாகமும் கல்வி அதிகாரிகளும் ஆசிரியருக்கு
மெமோ வழங்குவார்கள். மாணவனைப் படிக்கச்
சொல்லிக் கண்டித்தால் அவனோ தற்கொலை செய்து
கொண்டு விடுவான். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும்
இடி என்பது போல, ஆசிரியர்களுக்கு 360 டிகிரியிலும்
நெருக்கடி! இந்தச் சூழலில் எந்த ஆசிரியராவது
மன நிம்மதியுடன் பணி செய்ய முடியுமா?
(இறந்து போன மாணவியின் சாதியும்
ஆசிரியையின் சாதியையும் தெரியாத நிலையில்
இக்கட்டுரை எழுதப் படுகிறது).

அரையாண்டுத் தேர்வு முடிந்த பிறகு எந்த ஒரு
மாணவனுக்கும் எந்தக் காரணம் கொண்டும்
பள்ளி நிர்வாகம் டிசி கொடுக்கக் கூடாது என்று
ஒரு சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.
டிசி வேண்டுவோர் முதன்மைக் கல்வி அதிகாரியிடம்
சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகிய இரு தரப்பினரும்
மூச்சுத் திணறும் நெருக்கடிக்கு இலக்காகி
உள்ளனர். தமிழ்ச் சமூகம் இது குறித்து அக்கறை
கொள்வதே இல்லை. ஏதாவது தற்கொலை நடக்காதா,
எங்காவது பிணம் விழாதா, அதை வைத்து பிண
அரசியல் செய்ய முடியுமா என்று ஏங்கிக் கிடப்பது
மட்டும்தான் ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டின்
அரசியலாக உள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான்
தாழ்வு மனப்பான்மை கடந்து 50 ஆண்டுகளாக
விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை
விதைப்பதை தங்களின் குலத் தொழிலாகவே
செய்து கொண்டிருக்கின்றனர் இங்குள்ள
அரசியல்வாதிகள் விதிவிலக்கின்றி. வேறெந்த
மாநிலத்திலும் இந்த அளவு அகல்விரிவாகவும்
ஆழமாகவும் தாழ்வு மனப்பான்மை விதைக்கப்
படுவதில்லை.

தற்கொலைகள் கொண்டாடப் படுவதும்
தமிழ்நாட்டில்தான். உணர்ச்சிவசப்பட்டு
தற்கொலை செய்து கொள்பவர்கள் பெருந்
தியாகிகளாகப் போற்றப்படுவதும் தமிழ்நாட்டில்தான்.

இதெல்லாம் எதன் அடையாளம்? வாழ்வு மறுப்புத்
தத்துவம் (Life negation philosophy) தமிழ்நாட்டில்தான்
வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பதன்
அடையாளம் ஆகும்.. இங்கு தோற்றுப்போன
தத்துவம் வாழ்வுறுதித் தத்துவம்தான்
(Life affirmation philosophy).

நியூட்டன் அறிவியல் மன்றம் தாழ்வு மனப்பான்மைக்கு
எதிரானது: அதை உடைத்தெறிவதில் வல்லது.
தொடங்கிய நாள் முதலாக வாழ்வுறுதித் தத்துவத்தையே
நியூட்டன் அறிவியல் மன்றம் பிரச்சாரம் செய்து
வருகிறது.

ஒரு எளிய உதாரணத்தைப் பார்ப்போம். ஐஐடி
கல்லூரிகளில் சூத்திரப் பிள்ளைகள் படிக்க முடியாது
என்றும் அங்கு இடஒதுக்கீடே கிடையாது என்றும்
தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யப்பட்டு அந்தப் பொய்யே
உண்மையாக நிறுவப் பட்டு இருந்தது. திராவிட
இயக்கங்களே இந்தப் பொய்யை அரங்கேற்றி
வைத்திருந்தன.

இந்தப் பொய்யைத் தாக்கித் தகர்ந்தெறிந்து, சூத்திர
பஞ்சமப் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு உண்டு
என்ற உண்மையை நிலைநாட்டுவதில் நியூட்டன்
அறிவியல் மன்றம் பெரும்பங்காற்றியது. இதன்
விளைவாக இந்தப் பத்தாண்டுகளில், பல்லாயிரக்
கணக்கானோர் IIT JEE தேர்வு எழுதினார். அதில்
குறைந்தது சில நூறு பேரேனும் தேர்ச்சி பெற்று
ஐஐடியில் படித்தனர். இதற்குக் காரணம்
வாழ்வுறுதித் தத்துவத்தை நியூட்டன் அறிவியல்
மன்றம் நடைமுறைப் படுத்தியதுதான்.
அது மட்டுமே தற்கொலைகளைத் தடுக்க வல்லது.
**************************************************
   

   














   


 
 






 




வெட்டிப் பயல்களின் ஆங்கில அடிமைத் தனம்!
தமிழ்ப் பகைவர்களின் தற்குறித்தனம்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
தமிழா, ஆங்கிலமா, சமஸ்கிருதமா? இம்மூன்றில்
தமிழ்நாட்டின் உற்பத்தி மொழி எது? இந்தியாவின்
உற்பத்தி மொழி எது?

எந்த ஒரு சமூகத்திலும் உற்பத்தி மொழி
(language of production) எது என்ற கேள்வியே முக்கியமானது.
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காமல் மொழி குறித்து
எவரும் பேச முடியாது.

தமிழ்நாட்டின் உற்பத்தி மொழி ஆங்கிலம் ஆகும்.
இந்தியாவின் உற்பத்தி மொழியும் ஆங்கிலமே ஆகும்.

மற்ற நாடுகளில் எப்படி?
அ) ஜெர்மனியின் உற்பத்தி மொழி ஜெர்மன் ஆகும்.
ஆ) ரஷ்யாவின் உற்பத்தி மொழி ரஷ்ய மொழி ஆகும்.
இ) சீனாவின் உற்பத்தி மொழி சீனம் (மாண்டரின்) ஆகும்.
ஈ) ஜப்பானின் உற்பத்தி மொழி ஜப்பானியம் ஆகும்.
உ) பிரான்சின் உற்பத்தி மொழி பிரெஞ்சு ஆகும்.
ஊ) இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா
நாடுகளின் உற்பத்தி மொழி ஆங்கிலம் ஆகும்.

மேற்கூறிய நாடுகளில் மக்களின் தாய்மொழி எதுவோ
அதுவே உற்பத்தி மொழியாகவும் இருக்கிறது. இந்த
உண்மை நம் அறிவினில் உறைதல் வேண்டும்.

முந்தைய பத்தியில் இங்கிலாந்தின் உற்பத்தி மொழி
ஆங்கிலம் என்று குறிப்பிட்டுள்ளேன். அது எவ்வளவு
காலமாக? அண்மைக் காலத்தில்தான்; சில
நூற்றாண்டுகளாகத்தான்!

அதற்கு முன்பு இங்கிலாந்தில் இலத்தீன் மொழிதான்
உற்பத்தி மொழியாக, ஆட்சி மொழியாக, வழிபாட்டு
மொழியாக இருந்து வந்தது. உலகையே புரட்டிப் போட்ட
தமது புகழ்பெற்ற "பிரின்சிபியா மேத்தமேட்டிக்கா"
என்ற நூலை இலத்தீன் மொழியில்தான் எழுதினார்
நியூட்டன். ஆயிரம் கடவுளுக்குச் சமமான நியூட்டனின்
தாய்மொழி ஆங்கிலம். என்றாலும் நியூட்டனால்
அன்று தமது தாய்மொழியான ஆங்கிலத்தில் அந்த
நூலை எழுதும் சூழல் இல்லை. ஏனெனில் அன்று ஆங்கிலம்
உற்பத்தி மொழியாக இல்லை. இந்த உண்மையும் நம்
அறிவினில் உறைதல் வேண்டும்.
(அறிவினில் உறைதல் வேண்டும் என்பார் பாவேந்தர்)

உற்பத்தி மொழியாக இல்லாமல் ஒதுக்கப்பட்டுக்
கிடந்த ஆங்கிலமானது, எவ்வாறு சில நூறு ஆண்டுகளில்
உற்பத்தி மொழியாக உயர்ந்தது? எவ்வாறு இந்தியா
போன்ற நாடுகளின் சுதேசி மொழிகளை வீழ்த்தி,
தன்னை ஆட்சி மொழியாக, உற்பத்தி மொழியாக
உயர்த்திக் கொண்டது? உலகின் அறிவியலை
ஆங்கிலமானது எவ்வாறு தனக்குள் உள்ளிழுத்துக்
கொண்டது? இந்தக் கேள்விகளுக்கு விடை காண
வேண்டும். இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

ஆங்கிலம் கடைப்பிடித்த வழிமுறைகளைப் பின்பற்றி
செம்மொழியான தமிழும் தன்னை உற்பத்தி மொழியாக
உயர்த்திக் கொள்ள முடியும் என்று உறுதிபட யான்
கருதுகிறேன். இது வெறும் நம்பிக்கை (faith based belief) அல்ல.
என்னுடைய கருத்து சரிதான் என்று என்னால் நிரூபிக்க
இயலும். அந்த அடிப்படையில்தான் கடந்த சில
ஆண்டுகளாக அறிவியலைத் தமிழில் எழுதி
வருகிறேன். நிற்க.

தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நடக்க உள்ளதாக
அறிகிறேன். இது ஏற்புடையதே. இது சதுரங்கத்தில்
டிரா (draw) என்ற முடிவுக்குச் சமம்.
(Both sides share the honours).

தமிழில் குடமுழுக்கு என்ற கோரிக்கையை, ஏனைய
அம்சங்களில் இருந்து துண்டித்துக் கொண்டு
தனிமுதலான (absolute) ஒன்றாகப் பார்க்கக் கூடாது.
கடவுள் இல்லை என்ற உண்மையின் வரம்புக்கு
உட்பட்ட ஒரு கோரிக்கையாக மட்டுமே பார்க்க
வேண்டும்.

மேலும் மார்க்சியத்தில் மொழிவெறுப்புக்கு
இடமில்லை. எனவே சமஸ்கிருதத்தின் மீதான
வீணான பொருளற்ற காழ்ப்புக்கு மார்க்சியத்தில்
இடமில்லை. மொழிகளைக் கடவுள் படைக்கவில்லை.
அவற்றை மானுடம் படைத்தது. தமிழைப் போலவே
சமஸ்கிருதமும் மானுடத்தின் படைப்பே.

தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழும்
சமஸ்கிருதமும் பகை மொழிகளாக இருக்கவில்லை.
இன்று சமஸ்கிருதம் வழக்கு வீழ்ந்து இறந்துபட்ட
மொழியாக இருப்பினும், நிலவுடைமைச் சமூக
அமைப்பு நிலவிய காலத்தில் அது இந்தியாவின்
அறிவியல் மொழியாக இருந்துள்ளது. இங்கிலாந்தின்
இலத்தீன் மொழி போன்றதே இன்றைய சமஸ்கிருதம்.

இந்தியாவின் உற்பத்தி மொழியாகவோ அல்லது
தமிழ்நாட்டின் உற்பத்தி மொழியாகவோ இன்று
சமஸ்கிருதம் இல்லை. அது வழக்கு வீழ்ந்து பல
நூற்றாண்டுகள் ஆகின்றன. உற்பத்தியில் இல்லாத
எந்தவொரு மொழியும் பிற மொழிகளின் மீது
ஆதிக்கம் செலுத்த இயலாது. இது அறிவியல்பூர்வமான
உண்மை.

நோயுற்றால் மருத்துவரிடம் போகிறோம். மருந்துச்
சீட்டில் மருத்துவர் மருந்துகளை எழுதித் தருகிறார்.
சமஸ்கிருதத்தில் எழுதித் தருகிறாரா? அல்லது
ஆங்கிலத்தில் எழுதித் தருகிறாரா?

ஸ்கூட்டர், பைக், கார், லாரி போன்ற வாகனங்கள்
ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவிலும் சரி,
தமிழ்நாட்டிலும் சரி உற்பத்தி ஆகின்றன. இந்த
உற்பத்திக்கான மொழி எது? ஆங்கிலமா,
சமஸ்கிருதமா அல்லது தமிழா? இந்த உற்பத்திக்கான
படிப்பு ஆங்கிலத்தில் இருக்கிறதா. சமஸ்கிருதத்தில்
இருக்கிறதா?

எது உற்பத்தி மொழியோ அதில்தானே உற்பத்திக்கான
கட்டளைகள் இருக்கும்? இங்கு சமஸ்கிருதத்திற்கோ
தமிழுக்கோ எங்கு இடம் இருக்கிறது?

எனவே சமஸ்கிருதம் ஆதிக்க மொழியாக இன்று
இருக்கவில்லை. மாறாக இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும்
எவ்விதத் தொடர்புமற்ற ஆங்கிலமே இந்தியாவின்
ஆதிக்க மொழியாக உள்ளது. தமிழ் மீது ஆதிக்கம்
செலுத்துகிற மொழி எது என்றால், சமஸ்கிருதம்
அல்ல, ஆங்கிலமே. இந்த உண்மையும் நம் அறிவினில்
உறைதல் வேண்டும்.

பெற்ற தாய் தகப்பனைக்கூட அம்மா அப்பா என்று
கூப்பிடாமல் மம்மி டாடி என்று தமிழ்க் குழந்தைகள்
கூப்பிடும் அளவுக்கு தமிழனின் சிந்தனையில்
ஆதிக்கம் செலுத்துகிறது ஆங்கிலம்.

தமிழனைப் பொறுத்த மட்டில், ஆங்கிலம் என்பது
வெறும் மொழி மட்டுமல்ல; அதுதான் தமிழனுக்கு
அறிவை வழங்கும் அமுதசுரபி என்ற நிலையும்
ஏற்பட்டு விட்டது. ஜெர்மனியிலும் பிரான்சிலும்
ஆங்கிலத்திற்கு மதிப்பு எதுவும் கிடையாது.
ஏனெனில் நவீன அறிவியலை ஆங்கிலத்தை
விடச் சிறப்பாக ஜெர்மன் மொழியிலும் பிரெஞ்சு
மொழியிலும் சொல்ல இயலும். அவை அறிவியல்
மொழிகள்; எனவே அவை உற்பத்தி மொழிகள்.

ஆனால் தமிழின் நிலை அப்படி அல்ல. அறிவியல்
மொழியாகவோ உற்பத்தி மொழியாகவோ தமிழ்
இல்லை.எனவே தமிழானது ஆங்கிலத்தைச்
சார்ந்தும், ஆங்கிலத்தை அண்டிப் பிழைக்கும்
அவல நிலையிலும் உள்ளது. இதுதான் உண்மை.
இது நம் அறிவினில் உறைதல் வேண்டும்.

இந்த உண்மை நம் மூளையில் உறைத்தால் மட்டுமே
இந்த நிலையை மாற்றுவது பற்றிச் சிந்திக்க இயலும்.
இந்த உண்மையையே ஏற்றுக் கொள்ள மறுப்பவன்
தமிழின் பகைவன் ஆவான். அவனால் ஆங்கிலத்தால்
அடிமைப் படுத்தப் பட்டுள்ள தமிழை ஒருபோதும்
விடுதலை செய்ய முடியாது.

இந்தச் சூழ்நிலையில் வெட்டிப் பயல்களின் வீணான
சம்ஸ்கிருத எதிர்ப்பால் தமிழுக்கு எப்பயனும்
விளைந்திடாது. உற்பத்தியில் இல்லாத
சமஸ்கிருதத்தை எதிர்ப்பதில் தன் ஆற்றலை
வீணாக்கும் மூடர்கள் ஆங்கிலத்துக்கு அடிமைப்
பட்டுக் கிடப்பதில் சுகம் காணும் இழிபிறவிகள்.

அதே நேரத்தில், ஆங்கிலமே கூடாது என்று
சொல்வதிலும் எப்பயனும் விளையாது. ஆங்கிலத்தின்
வளர்ச்சியை தமிழ் அடையும்வரை, ஆங்கிலம்
தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தே தீரும். இலத்தீனை
எதிர்த்ததால் ஆங்கிலம் வளரவில்லை. மாறாகத்
தன்னை வளர்த்துக் கொண்டதால் மட்டுமே ஆங்கிலத்தால்
இலத்தீனை அகற்ற முடிந்தது.

ஆக, மொழிச்சிக்கலில் சரியான தீர்வு இதுதான்:-
1) தமிழும் சரி, சமஸ்கிருதமும் சரி இரண்டுமே இன்று
உற்பத்தியில் இல்லாத மொழிகள். உற்பத்தியில்
இல்லாத சமஸ்கிருதத்தை எதிர்ப்பதில் ஆற்றலை
வீணடிப்பதை விடுத்து, ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை
எதிர்ப்பதில் தமிழானது சமஸ்கிருதத்தின் துணையை
நாட வேண்டும்.

2) தமிழை அறிவியல் மொழியாகவும் உற்பத்தி
மொழியாகவும் ஆக்க முயல வேண்டும். தமிழில்
அறிவியலைச் சொல்லும் அறிவியலாளர்களின்
முயற்சிகளைத் தமிழ்ச் சமூகம் ஆதரிக்க வேண்டும்.
*********************************************************











 


     

புதன், 29 ஜனவரி, 2020



தமிழில் குடமுழுக்கு என்ற கோரிக்கை மீது தமது
ஆற்றலைத் திரட்டி வருகிறார் திரு தமிழரசன்.
தமிழ் மொழி உற்பத்தியில் இல்லை. உற்பத்தியில்
இல்லாத தமிழ் எங்ஙனம் பண்பாட்டு மொழியாக
இருக்க இயலும்? குடமுழுக்கு என்பதும் வழிபாடு
என்பதும் பண்பாடு சார்ந்தவை.

தமிழை உற்பத்தி மொழியாக ஆக்குவது ஒன்றே
தமிழுக்குச் செய்யும் நன்மை ஆகும். தமிழை
உற்பத்தி மொழியாக ஆக்கத் துப்பற்றவர்கள்
குடமுழுக்கு தமிழில் வேண்டும் என்று கோருவதன்
மூலம் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து
கொக்கைப் பிடிக்க நினைக்கிறார்கள்.

முதலில் தமிழை உற்பத்தி மொழியாக ஆக்க
வேண்டும். உற்பத்தி என்பது அறிவியல் மூலம்
நடைபெறும் ஒன்று. எனவே தமிழ் உற்பத்தி மொழியாக
ஆக வேண்டுமெனில், அது அறிவியல் மொழியாக
ஆக்க வேண்டும். தமிழை அறிவியல் மொழியாக
ஆக்குவது அறிவியலாளர்களால், அறிவியல்
கற்றவர்களால் மட்டுமே இயலும்.

இங்கு தமிழ்ப் பண்டிட்டுகளால் ஒரு பயனும்
விளையாது. அவர்களால் ஒருபோதும் தமிழை
அறிவியல் மொழியாக ஆக்க முடியாது.
விஷயம் என்பதை விடயம் என்று சொன்னால்
போதும், தமிழ் வளர்ந்து விடும் என்று நினைக்கும்
முழு மூடர்களே தமிழ்ப் பண்டிட்டுகள்.

இன்று குவான்டம் கணினி உருவாகிக்
கொண்டிருக்கிறது. அதைப் பற்றி மாணவர்களுக்குத்
தமிழில் விளக்க வேண்டிய தேவை ஆசிரியர்களுக்கு
இருக்கிறது. ஆனால் தமிழில் கட்டுரைகளோ
விளக்கக் குறிப்புகளோ இல்லை.

இந்நிலையில் நியூட்டன் அறிவியல் மன்றம் மேற்கூறிய
உடனடித் தேவையை நிறைவு செய்யும் நோக்கில்
குவான்டம் கணினி குறித்து தமிழில் ஒரு
குறுங்கட்டுரையை எழுதியது. இதன் மூலம் தமிழை
அறிவியல் மொழி ஆக்கவும், தமிழை உற்பத்தி
மொழியாக ஆக்கவும் நியூட்டன் அறிவியல் மன்றம்
உரிய பங்கை ஆற்றியது. இதுதான் இன்று செய்ய
வேண்டிய வேலையே அன்றி விடயம் விடயம் என்று
உளறிக் கொட்டிக் கொண்டு இருப்பதல்ல.  

  
      

செவ்வாய், 28 ஜனவரி, 2020

கரோனா வைரஸ் (Corona virus) தாக்குதல்!
தற்காத்துக் கொள்வது எப்படி?
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
கரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி
வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கு
மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம்
வரை (28.01.2020 0400 hours IST) தமிழ்நாட்டில் இந்த
வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

இந்த வைரஸ், மனிதர்கள், விலங்குகள், பறவைகள்
ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது.

அறிகுறிகள்:
-------------------
இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன்
இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக்
கோளாறுகள் ஏற்படும். தொண்டை வீங்குவதும்,
உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும். சில
நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சல்
ஏற்படக் கூடும். பிராங்கைட்டிஸ் (bronchitis) எனப்படும்
நுரையீரல் நோயும் ஏற்படக்கூடும்.

சுருங்கக் கூறின், மனிதர்களைப் பொறுத்தமட்டில்,
இந்த கரோனா வைரஸ் தாக்கினால், ஒட்டு மொத்த
சுவாசப் பாதையும் (respiratory track) பாதிக்கப்பட்டு,
SARS (Severe Acute Respiratory Syndrome)
எனப்படும் உயிரைப் பறிக்கும் மூச்சுத் திணறல்
நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

ஒருவருக்கு இந்நோய் கண்டிருப்பது உறுதியானால்
அவர் quarantine செய்யப்பட வேண்டும்.
(quarantine = மருத்துவத் தனிமைச் சிறை)

மருந்து இல்லை!
------------------------
இந்த வைரஸ் தாக்குதலால் விளையும் நோய்க்கு
மருந்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனம்
(WHO) அறிவித்து உள்ளது. இதற்கான தடுப்பூசியும்
(vaccine) இதுவரை கண்டுபிடிக்கப்  படவில்லை.
விரைவில் கண்டுபிடிக்கப் படும்.

தற்காத்துக் கொள்வது எப்படி?
-----------------------------------------------
1) ஒவ்வொரு முறை எதையேனும் உண்பதற்கு முன்பு
கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.
டெட்டால், சாவ்லன்  போன்ற கிருமி நாசினி சோப்புகள்
மற்ற சோப்புகளை விட ஓரளவு மேலானவை.

2) கை, கால் விரல் நகங்கள் நன்றாக வெட்டப்
பட்டிருக்க வேண்டும். அந்தரங்க சுத்தம்  மற்றும்
உணவுச் சுத்தம் (personal and food  hygiene) கறாராகப்
பேணப்பட வேண்டும்.

3) நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே அருந்த வேண்டும்.

4) இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை முழுமையாக
வேகவைத்த பின்னரே உண்ணுமாறு WHO .கூறுகிறது.
எனவே முக்கால் வேக்காட்டு இறைச்சியை உண்பதைத்
தவிர்க்கவும். குறிப்பாக அரைவேக்காட்டு (Half boiled)
முட்டையை உண்ண வேண்டாம். சீன உணவகங்களுக்குச்
சென்று (Chinese restaurants) சீன உணவுகளை உண்பதைப்
பாதுகாப்புக் கருதித் தவிர்க்கலாம்.

5) முதியவர்கள் (age > 60), நோயாளிகள், சிகிச்சைக்குப்
பின் உடல்நலம் தேறி வருவோர், ஜீரண சக்தி
குறைந்தோர் ஆகியோர் அசைவ உணவுகளைத் தவிர்த்து,
புரதச் சத்து மிகுந்த பயிறு வகைகள், காய்கறிகளை
உண்ணலாம். இது இச்சூழலில் பாதுகாப்பானது.

7) மிகவும் குறைவாக சுகாதாரம் பேணப்படும்
தெருவோரக் கடைகள், கையேந்தி பவன்களில்
உண்பதைத் தவிர்க்கவும். அதற்கு மாற்றாக
ஒரு நல்ல பேக்கரிக்குச் சென்று, அதே விலையில்
ரொட்டியும் ஜாமும் உண்ணலாம்! 

8) கிருமித் தொற்று (infection) ஏற்பட வாய்ப்புள்ள
பெருங்கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதை
கர்ப்பிணிகள், சிசுக்கள் (infants), சிறு குழந்தைகள்,
நோயாளிகள், சிகிச்சைக்குப் பின் உடல் நலம்
தேறி வருவோர், முதியவர்கள் ஆகியோர் இயன்றவரை
தவிர்க்க வேண்டும். திரையரங்குகள், ரயில், பேருந்து
நிலையங்கள், புத்தகச் சந்தைகள் போன்றவை
இவ்வாறு தவிர்க்கப் படக்கூடிய இடங்கள் ஆகும்.
ஏனெனில் இருமல், தும்மல், கண்ட இடங்களில்
துப்பப்படும் சளி, எச்சில் ஆகியவற்றின் மூலம்
இந்த வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டது.

9) கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்ல வேண்டிய
தேவை உள்ளவர்கள், குறிப்பாக கர்ப்பிணிகள்,
நோயாளிகள், ஆஸ்துமா மற்றும் சளித்தொல்லை
உள்ளவர்கள், முதியவர்கள், சிகிச்சைக்குப்பின்
உடல்நலம் தேறி வருவோர் ஆகியோர் உரிய
முகமூடி (nose mask) அணிந்து அவ்விடங்களுக்குச்
செல்லலாம். மருந்துக் கடைகளில் ரூ 10க்கு விற்கும்
முகமூடிகள்  உரிய பயனைத்  தராது. ரூ 80 அல்லது
ரூ 100 விலையில் நன்கு வடிகட்டக் கூடிய
பாதுகாப்பான முகமூடிகள் (nose masks) கிடைக்கின்றன.
அவற்றை அணியவும்.

10) எந்த நோயையும் வெல்லும் ஆற்றல் இன்றைய
மருத்துவ அறிவியலுக்கு உண்டு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நோய்த்தடுப்புச் சக்தியை
அளிக்கக் கூடிய சத்துள்ள ஆகாரத்தை உண்பதுதான்.

எனவே, கடவுளை அல்ல, அறிவியலை நம்பி, மேற்கூறிய
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, அச்சம்
தவிர்த்து, இயல்பு வாழ்க்கையை வாழுமாறு தமிழ் மக்களை
நியூட்டன் அறிவியல் மன்றம் கேட்டுக் கொள்கிறது.
------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இக்கட்டுரை ஒரு மருத்துவராலோ அல்லது ஒரு
Pathologistஆலோ எழுதப் பட்டதல்ல. உலக சுகாதார
நிறுவனத்தின் (WHO) நிறுவனத்தின் அறிவுரைகளை
ஏற்று, அவற்றைத் தமிழகச் சூழலுக்குப் பொருத்தி,
மக்களிடையே கரோனா வைரஸ் குறித்த அறிவியல்
வழியிலான விழிப்புணர்வை  ஏற்படுத்தும் நோக்கில்,
ஒரு தேர்ந்த அறிவியல் பணியாளரால் இக்கட்டுரை
எழுதப் பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களுக்கே இக்கட்டுரை முதன்மை
அளிக்கிறது. இக்கட்டுரையின் சரித்தன்மைக்கு
நியூட்டன் அறிவியல் மன்றம் பொறுப்பேற்கிறது.
****************************************************

மருதுபாண்டியன்


திங்கள், 27 ஜனவரி, 2020


இடதுசாரி மைனர்கள்!
----------------------------------
1940களில், 50களில் கிராமங்களில் மைனர்கள்
இருப்பார்கள். மன்னார் என்றால் இளவயதுப்
பண்ணையார் என்று பொருள்.

ஊரே பற்றி எரிந்தாலும் இந்த மைனர்கள்
கவலைப்பட மாட்டார்கள். வில்வண்டி கட்டிக்
கொண்டு, பக்கத்து டவுனுக்கு சினிமா பார்க்கச்
செல்வார்கள்.

இந்த மைனர்களைப் போன்றவர்களே நம்மூர்
போலி இடதுசாரிகள். இவர்களை இடதுசாரி
மைனர்கள் என்று அழைப்பது சாலப் பொருத்தம்.

TNPSCயில் முன்பே நடந்த Group I ஊழல், பாலி டெக்னிக்
ஆசிரியர் நியமன ஊழல், சீருடைப் பணியாளர்
தேர்வில் ஊழல், தற்போது TNPSC Group IV ஊழல்
என்று ஒட்டு மொத்தக் கல்வித்துறையை ஊழலில்
கொடிகட்டிப் பறக்கிறது.

ஆனாலும் நமது போலி இடதுசாரி மைனர்கள் இந்த
ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருப்பதன் மூலம்
இந்த ஊழலை ஆதரிக்கிறார்கள்.

பாம்பையும் இடதுசாரி மைனரையும் கண்டால்
பாம்பை விட்டு விடு; இடதுசாரி மைனரை அடி!
-------------------------------------------------------------------        

என்ன ஊழல் நடந்தால் என்ன, எனக்கு சினிமா
பார்ப்பதும் விமர்சனம் எழுதுவதுமே முக்கியம்
என்கிறார்கள் வினவு கீற்று இணையதள ஆசாமிகள்.

===========================================
.



கதிர்வீச்சின் (radiation) அதிர்வெண் என்று
எடுத்துக் கொள்கிறேன். Ionising, Non ionising என்று
இருவிதமான அதிர்வெண்களைக் கொண்ட
கதிர்வீச்சை உருவாக்க இயலும்.

கோலிட்ஜ் குழாய் (collidge tube) மூலம்
டங்ஸ்டன் இழையைப் பயன்படுத்தி 20ஆம்
நூற்றாண்டிலேயே அதிக அதிர்வெண் கொண்ட
எக்ஸ் கதிர்களை உண்டாக்கினார் விஞ்ஞானி கோலிட்ஜ்.
இது சர்வ சாதாரணமாகப் பயன்பாட்டில் உள்ளது.
அதிகபட்ச அதிர்வெண் வீச்சு 30 exa Hertz. (exa = 10^18).

அணுஉலைகளில் சில குறிப்பிட்ட தனிமங்களைக்
கையாளும்போது காமா கதிர்வீச்சு உண்டாகிறது.
அதைப் பாதுகாப்பாகக் கையாள இயலவில்லை.

எனவே பாதுகாப்பாகக் கையாள்வதும், வழக்கமான
பயன்பாட்டில் உள்ளதுமானதுமான அதிகபட்ச
கதிர்வீச்சின் அதிர்வெண் வீச்சு exa Hetz என்று
எடுத்துக் கொள்ளலாம்.


 
    
TNPSC Group IV ஊழலும் செயலற்ற இடதுசாரிகளும்!
உதயநிதியின் சைக்கோ பட விமர்சனம் எழுதிய
"வினவு"  இணையதளமும்
சில்லுக் கருப்பட்டி பட விமர்சனம் எழுதிய 'கீற்று'ம்!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
1) ஊழல்களும் முறைகேடுகளும் பல்வேறு வழிகளில்
நடக்கின்றன. எனினும் ஒரு புரிதலை ஏற்படுத்திக்
கொள்ள, பிரதானமாக ஊழல்கள் நடைபெறும்
வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.

2) ஊழல்கள் மூன்று வகைப்படும்.
அ) அமைச்சர்கள் மட்டும் ஈடுபடும் ஊழல்கள்
ஆ) அமைச்சர்களும் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து
கொண்டு செய்யும் ஊழல்கள்
இ) அதிகாரிகள் மட்டும் செய்கின்ற ஊழல்கள்.

3) TNPSC Group IV ஊழல் வெளியாகி தற்போது
CB CID போலிசாரின் கைதுப் படலம் நடந்து
கொண்டிருக்கிறது. இந்த ஊழல் மேற்கூறிய
வகைகளில் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.
அதாவது அதிகாரிகள் மட்டும் செய்யும் ஊழல்.

4) 50 கோடி ரூபாய்க்கு விலை போகிறது VC பதவி.
(VC = பல்கலைத் துணை வேந்தர்). இது அமைச்சர்களின்
ஏரியா.

5) உயர் அதிகாரிகளுக்கான Group I பதவி நியமனத்தில்
நடைபெறும் ஊழலானது அமைச்சர்களும்
அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஊழல் ஆகும்.
ஒரு போஸ்டிங்கிற்கு 50 லட்சம் முதல் 1 சி வரை விலை
போகும் நியமனம் இது. Group I என்றால் சும்மாவா?

6) ஆனால் Group IV என்பது அப்படி அல்ல. இதில்
அதிக பட்சமாக ஒரு போஸ்டிங்கிற்கு ரூ 5 லட்சம்
வரை மட்டுமே பெற இயலும். ஏனெனில் Group IV
நியமனம் என்பது VAO, இளநிலை எழுத்தர்,
டைப்பிஸ்ட் போன்ற சிறிய பதவிகளுக்கானது.
இந்தப் பதவிக்கு ரூ 50 லட்சம் கொடுக்க யாரும்
தயாராக இருக்க மாட்டார்கள்.

7) எனவே Group IV ஊழல் என்பது சில அதிகாரிகள்
தங்களுக்குள் சரிக்கட்டிக் கொண்டு, லஞ்சப்
பணத்தைப் பகிர்ந்து கொண்டு செய்யும் சிறிய
அளவிலான ஊழல் ஆகும்.

8) 1969 முதலான திமுக ஆட்சியிலும் தொடர்ந்து
இன்று வரை நடந்து வரும் திராவிட ஆட்சியிலும்
ஊழல் என்பது நிறுவனமயப் படுத்தப் பட்டதோடு
decentralise ஆகியும் இருக்கிறது என்பதன் அடையாளம் இது.

9) சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற Group I தேர்வு
முறைகேடு குறித்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு
உள்ளது. இது அமைச்சர்களும் அதிகாரிகளும்
கூட்டுச் சேர்ந்து நடத்திய ஊழல் ஆகும். இதில்
குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதற்கான நிகழ்தகவு
0.000003 ஆகும்.

10) அதிமுக ஆட்சியில் நடக்கும் இந்த ஊழலை எதிர்க்
கட்சியான திமுக கண்டு கொள்ளாது. அதே போல
திமுக ஆட்சியின்போது நடைபெறும் ஊழலை அதிமுக
கண்டு கொள்ளாது. இருவருக்கும் இடையில்
பரஸ்பரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.

11) Group IV ஊழலை எந்த ஊடகமோ, எந்தத் தலைவரோ
அம்பலப் படுத்தவில்லை. தேர்வு எழுதியவர்களே
அதைக் கண்டறிந்தனர்.நேர்மையான பயிற்சி மைய
நிர்வாகிகளும், கல்வி சார்ந்து இயங்கும் நியூட்டன்
அறிவியல் மன்றம் போன்ற சிறிய அமைப்புகளுமே
இந்த ஊழலை அம்பலப் படுத்தின; எதிர்த்துப் போராடி
முறியடித்தன.

12) 16 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில் நடந்த
இந்த ஊழலை அம்பலப் படுத்துவதிலோ, எதிர்த்துப்
போராடுவதிலோ இடதுசாரிகளின் பங்கு என்ன?
பூஜ்யம்! பூஜ்யம்!! பூஜ்யம்!!!

13) தமிழக அரசு ஊழியர்கள் தொடர்புடைய எந்த
ஊழலையும் CPI, CPM கட்சிகள் கண்டு கொள்ளாது.
அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்களில்
இக்கட்சிகளின் ஆதரவாளர்களே உறுப்பினர்களாக
இருப்பதாலும், இவர்கள் தரும் சந்தா, லெவி,
நன்கொடை ஆகியவற்றின் மூலமே இக்கட்சிகள்
வயிறு வளர்ப்பதாலும், அவர்கள் இத்தகைய
ஊழல்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

14) CPI, CPM தவிர்த்த பிற இடதுசாரிகள் இந்த
விஷயத்தில் என்ன செய்து கிழித்து விட்டார்கள்?
இவர்கள் மக்களுக்குப் பயன்படாதவர்கள்.

15) Group IV தேர்வை டாட்டா பிர்லா வீட்டுப் பிள்ளைகளா
எழுதுகிறார்கள்? குப்பன், சுப்பன், ராமசாமி,
துலுக்காணம், செல்வராஜ் போன்ற அடிமட்டத்து
வாழ்நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகள்தானே
எழுதுகிறார்கள்?

16) பதினாறு லட்சம் பேர் எழுதிய தேர்வில் முறைகேடு
என்பது சும்மா கண்டு கொள்ளாமல் விடக் கூடிய
ஒன்றா? மக்களின் பிரச்சினைக்கு முகம்
கொடுக்கத் துப்பில்லாமல் எவர் ஒருவரும் தன்னை
இடதுசாரி என்று அழைத்துக் கொள்ள அருகதை உண்டா?

17) மக்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்துப்
போராடாமல், மக்களை நம் பக்கம் ஈர்க்க முடியுமா?

18) DPI அலுவலகம் முன்போ அல்லது TNPSC அலுவலகம்
முன்போ ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லாத
வெத்துவேட்டு இடதுசாரிகளே, உங்களின்
மார்க்சிய அருகதை என்ன?

19) பிரபல "நக்சல்பாரி" இணையதளமான "வினவு"
உதயநிதி நடித்த சைக்கோ பட விமர்சனத்தை
எழுதி முகப்பில் வைத்துள்ளது! இந்த விமர்சனம்
தாமதமானால் புதிய ஜனநாயகப் புரட்சியும்
தாமதமாகி விடும் என்று "வினவு" கருதுகிறது போலும்!
       
20) உலகப் புரட்சியை இணையதளத்தில் மட்டும்
நடத்திக் கொண்டிருக்கும் பெரும் முற்போக்கு(???)
"கீற்று" இணைய தளத்தில் சில்லுக் கருப்பட்டி என்ற
பட விமர்சனம் மிகுந்த ரசனையோடு எழுதப் பட்டுள்ளது.

21) Group IVல் ஊழல் நடந்தால் என்ன? எங்களுக்கு சினிமா
விமர்சனம்தான் முக்கியம் என்கிறார்கள் இவர்கள்!
இன்னும் பல்வேறு புரட்சிகரச் சுயஇன்ப மாணவர்,
இளைஞர் அணிகள், வெண்முகில் செம்முகில் போன்ற
உலகப் புரட்சியாளர்கள் எவரையும் களத்தில் காணோம்.

22) நியூட்டன் அறிவியல் மன்றம் Group IV ஊழலைக்
கையில் எடுத்துக் போராடியபோது, TNPSC
அலுவலகத்துக்கு நடையாய் நடந்த போது, நீங்களெல்லாம்
மேற்கொண்ட புரட்சிகரத் திருப்பணி என்ன?

23) இந்த விஷயத்தில் தானும் செயல்படாத, செயல்பட்ட
நியூட்டன் அறிவியல் மன்றத்தையும்  ஆதரிக்காத,
மக்களுக்குப் பயன்படாத  "இடதுசாரி"களை
மக்கள் விரோதிகள் என்று பிரகடனம் செய்ய,
தன் சக்திக்கேற்ற விதத்தில் தளராது மக்களுக்காக
உழைக்கும் நியூட்டன் அறிவியல் மன்றத்துக்கு
உரிமை உண்டு. 
****************************************************    .
ஒலி அலைகளைப் பொறுத்தமட்டில், மொழி வேறுபாடு
இல்லை. சமஸ்கிருதம், தமிழ், இலத்தீன், ஆங்கிலம்
ஆகிய எந்த மொழியில் மாந்தன் பேசினாலும்,
அப்பேச்சு ஒலி அலைகளாகவே வெளியே செல்லும்.
மொழி வேறுபாடு என்பது various permutations and combinations
மட்டுமே.

ஒலி அலைகள் நெட்டலைகளாகச் செல்லும்போது
(longitudinal waves) இறுக்கம் தளர்வு என்னும்
compression and rarefactionஐ காற்றில் (காற்று ஒரு ஊடகம்)
ஏற்படுத்தும். சமஸ்கிருதமோ தமிழோ எதுவாயினும்
நிகழ்வது என்னவோ இறுக்கமும் தளர்வும்தான்.

ஒலி அலைகளின் வேகம் மிக மிகக் குறைவு.
அவற்றால் அணுக்களை ஆட்டிப் படைக்க இயலாது.

ஒலியால் ஒருபோதும் எந்த ஒளியையும் ஏற்படுத்த
இயலாது. ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒலியை
மட்டுமே மனிதச் செவிகளால் கேட்க இயலும்.
Human audible limit உண்டு. எனவே சம்ஸ்கிருத
ஒலி அலைகளைக் கொண்டு, சம்ஸ்கிருத
மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம்
ஒரு குறிப்பிட்ட வீச்சிலான (range) ஓசையை
அல்லது இரைச்சலை (sound or noise) மட்டுமே
உண்டு பண்ண முடியும். பல்வேறு ஒலிகளின்
intensity குறித்த டெசிபெல் அட்டவணையைப் பார்க்கவும்.

ஒலியின் இடப்பெயர்ச்சி அல்ல, மனிதர்களின்
இடப்பெயர்ச்சியே ஒரு மொழியை பல்வேறு
பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றிருக்கும். 
        
 



               



-  

சனி, 25 ஜனவரி, 2020

செங்கோட்டையனாருக்கு ஒரு வேண்டுகோள்!
-----------------------------------------------------------------------
1) தேர்வு வைப்பதாக இருந்தால் தமிழ்,
கணிதம் என்று தனித்தனியாகத் தேர்வு
வைக்கக் கூடாது.

2) வாய் மொழித் தேர்வு = 50 மதிப்பெண்
எழுத்துத் தேர்வு = 50 மதிப்பெண்
என்பதாகத் தேர்வு இருக்க வேண்டும்.

3) கேள்விகள் பின்வருமாறு அமைதல் வேண்டும்:

அ) மகாத்மா காந்தி, பாரதியார், வ உ சி ஆகியோரின்
படங்களைக் கொடுத்து அவர்களின் பெயர் என்ன
என்று கேட்க வேண்டும்.

ஆ) நாற்காலி, கடிகாரம், புத்தகம் ஆகிய படங்களைக்
கொடுத்து அவற்றின் பெயரை எழுதச் சொல்ல வேண்டும்.

இ) சிங்கம், புலி, குதிரை, பூனை ஆகியவற்றின்
படத்தைக் கொடுத்து அவற்றின் பெயர் எழுதச்
சொல்ல வேண்டும்.

ஈ) 1 முதல் 10 வரை எண்களை வரிசையாக
எழுதச்  சொல்ல வேண்டும்.

உ) தாய், தந்தை பெயரை எழுதச் சொல்ல வேண்டும்.

ஊ) தான் வசிக்கும் ஊரின் பெயரை, வட்டத்தின்
பெயரை, மாவட்டத்தின் பெயரை எழுதச் சொல்ல வேண்டும்.

எ) வட்டம், சதுரம், முக்கோணம் ஆகியவற்றை
வரைந்து காட்டச் சொல்ல வேண்டும்.

ஏ) வெவ்வேறு நேரம் காட்டும் கடிகாரங்களின்
படத்தைப் பார்த்து, நேரம் என்ன என்று கேட்க
வேண்டும்.

ஐ)  eemach sandangu

 
       
குவான்டம் கணினி உருவாகிறது!
---------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
குவான்டம் கணினி இன்னமும் உருவாக்கப் படவில்லை.
உருவாக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அது
முழுமை அடையும்போது மனித குல வரலாறு இதுவரை
கண்டிராத மகத்தான ஒரு படைப்பாக அது இருக்கும்.

தற்போதைய கணினிகள் சூப்பர் கணினி (super computer)
வகையைச் சார்ந்தவை. சார்லஸ் பாபேஜ் காலத்துக்
கணினிகள், பல தலைமுறைகளின் வளர்ச்சியைக்
கண்ட பிறகு இன்றைய சூப்பர் கணினிகள் வந்துள்ளன.

ஒரு கணினியின் சிறப்பு அதன் கணக்கிடும் வேகத்தைப்
பொறுத்தது. அதாவது ஒரு கணினியின் செயலி (processor)
ஒரு வினாடிக்கு எத்தனை அறிவுறுத்தல்களை (instructions)
ஏற்றுச் செயல்பட வல்லது என்பதே ஒரு கணினியின்
வேகத்தைத் தீர்மானிக்கும் காரணி ஆகும். இது முன்பு
மிப்ஸ் (MIPS = Million Instructions Per Second) என்ற அளவால்
அளக்கப் பட்டது.

தற்போது ஒரு சூப்பர் கணினியின் செயல்பாட்டுத்
திறன் (performance) ஃபிலாப்ஸ்
(FLOPS = Floating Point Operations Per Second)
என்ற அளவால் அளக்கப் படுகிறது. இங்கு Floating Point
என்பது FA எனப்படும் Floating point Arithmeticஜக் குறிக்கும்.

12ஆம் வகுப்பு இயற்பியல் பாடப் புத்தகங்களில்
எண்களை அறிவியல் குறியீட்டு முறையில்
(Scientific Notation) எழுதுவது பற்றிய பாடம் இருக்கும்.
உதாரணமாக, 3575 என்ற எண்ணை 3.575 x 10^3 என்று
எழுதலாம். இப்படி எழுதுவது அறிவியல் குறியீட்டு
முறைப்படி எழுதுவதாகும். FP (Floating point Arithmetic)
என்பது மெய்யெண்களை அறிவியல் குறியீட்டு
முறை போன்று எழுதும் ஒரு முறை என்று புரிந்து
கொள்ளலாம். நிற்க.

தற்போதைய சூப்பர் கணினிகளின் செயல்பாட்டுத் திறன்
மெகா, கிகா, டெரா, பீட்டா ஆகியவற்றைத் தாண்டி
எக்சா (exa) என்ற அளவை எட்டிக் கொண்டிருக்கின்றன.
அதாவது exa FLOPS (exa = 10^18) என்ற அளவிலான சூப்பர்
கணினிகள் இன்று தயாரிப்பில் உள்ளன.
10^18 என்பது குவின்டிலியன் (quintillion) ஆகும். இது
மிகப்பெரிய பேரெண் ஆகும். தமிழில் லட்சம், கோடி
ஆகியவற்றையே பேரெண்களாக நடைமுறையில்
கொண்டிருக்கும் நாம் சற்று முயன்றுதான் குவின்டிலியன்
என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்றைய காலக்கட்டம் செவ்வியல் கணினிகளில்
இருந்து குவான்டம் கணினிகளுக்கு மாறிச் செல்லும்
ஒரு காலக்கட்டம் ஆகும். குவான்டம் கணினிகள் ஏன்
தேவைப் படுகின்றன? கணினித் தயாரிப்பின்போது
ஒரு உண்மை கண்டறியப் பட்டது.

டிரான்சிஸ்டர்களின் அளவை (size) வெகுவாகக்
குறைத்து, அவற்றை ஒன்றின் மீது ஒன்று மிக
நெருக்கமாக அடுக்கி, ஒரு சில்லுக்குள் (chip)
புதைப்பதுதான் கணினித் தயாரிப்பு. இதில்
என்னதான் டிரான்சிஸ்டர்களின் அளவைக்
குறைத்துக் கொண்டே வந்தாலும் ஒரு வரம்புக்கு
மேல் குறைக்க இயலாது. அது போல நெருக்கமாக
அடுக்கும்போதும் ஒரு வரம்புக்கு மேல் நெருக்கம்
கைகூடாது.  இதன் காரணமாக கணினியின்
செயல்பாட்டுத் திறனுக்கு, அதாவது வேகத்துக்கு
ஒரு வரம்பு ஏற்பட்டு விடுகிறது. இந்த வரம்பைத்
தாண்டாமல் இதற்கு மேல் வேகம் கொண்ட
கணினிகளை உருவாக்க இயலாது. இந்த உண்மை
புரிந்த உடனே, அதாவது செவ்வியல் கணினிகளின்
வேக வரம்பை அறிந்ததுமே, இதன் அடுத்த கட்ட
வளர்ச்சியான குவான்டம் கணினிகளின் தேவை
உணரப்பட்டது. அதற்கான ஆய்வுகள் நடந்து
வருகின்றன. உருவாக்கம் நடந்து வருகிறது.

கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட், ஐபிஎம்,
ரிகெட்டி கம்ப்யூட்டிங் ஆகிய நிறுவனங்கள்
குவான்டம் கணினித் தயாரிப்பில் ஈடுபட்டு
வருகின்றன. குவான்டம் கணினி உருவாக்கம்
முழுமை அடைந்து விடுமானால், குறிப்பாக
செயற்கை நுண்ணறிவுத் துறையில் அது பெரும்
பயனை விளைவிக்கும்.

உலகப்புகழ் பெற்ற அறிவியல் இதழான நேச்சர் இதழில்
கூகிள் நிறுவனம் குவாண்டம் கணினி குறித்து ஒரு
கட்டுரையை எழுதி இருந்தது. அதில் 53 கியூபிட் (qubit)
கொண்ட ஒரு செயலி (processor) மூலமாக தாங்கள்
குவாண்டம் மேலாண்மையை (quantum supremacy) அடைந்து
விட்டதாக அக்கட்டுரையில் கூகிள் உரிமை கோரி
இருந்தது.

தங்களின் 53 கியூபிட் கொண்ட செயலியால் செய்ய
முடிந்த வேலையை, உலகின் தலைசிறந்த செவ்வியல்
கணினியால் செய்து முடிப்பதற்கு 10,000 ஆண்டுகள்
ஆகும் என்று கூகிள் நிறுவனம் அக்கட்டுரையில்
கூறி இருந்தது.

இது மிகவும் சிறுபிள்ளைத் தனமான உயர்வு நவிற்சி அணி
என்று கூகிளின் கூற்றை மறுக்கிறது அதன் போட்டி
நிறுவனமான ஐபிஎம் (IBM). இந்நிறுவனமும்
53 கியூபிட்டுகளைக் கொண்ட ஒரு செயலியை உருவாக்கி
வருகிறது.

கியூபிட் என்றால் என்ன?
----------------------------------------
செவ்வியல் கணினிகளில் பிட் (bit) என்பது தகவலின்
அடிப்படை அலகைக் குறிக்கும். ஒரு பிட் என்பது
0 என்ற நிலையிலோ அல்லது 1 என்ற நிலையிலோ
இருக்கும் (either at 0 state or at 1 state). அதாவது ஒரு நேரத்தில்
ஒரு நிலையில் மட்டுமே இருக்கும்.

கியூபிட் என்பது 0 என்ற நிலையில் இருக்கும். அல்லது
1 என்ற நிலையில் இருக்கும். அத்துடன் ஒரே நேரத்தில்
0, 1 ஆகிய இரண்டு நிலைகளிலும் இருக்கும். அதாவது
ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளின் சேர்க்கையாக
இருக்கும். அது எப்படி ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளில்
இருக்க முடியும் என்று நமது பகுத்தறிவு கேள்வி எழுப்பும்.
ஆனால் குவான்டம் இயற்பியலில் அப்படித்தான்.

ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளில் இருப்பதை
குவான்டம் ஒன்றிப்பு (quantum superposition) என்கிறது
குவான்டம் இயற்பியல். அதாவது ஒரு கியூபிட் என்பது
0, 1 என்னும் இரண்டு நிலைகளின் ஒன்றிப்பைக் கொண்டது.

ஒரே நேரத்தில் 0, 1 என்னும் இரண்டு நிலைகளின்
சேர்க்கையாக ஒரு கியூபிட் இருப்பதால், 0, 1 ஆகியவற்றின்
சராசரி மதிப்பை ஒரு கியூபிட் கொண்டிருக்கும் என்று
புரிந்து கொள்ளக் கூடாது. இது மிகப்பெரிய
பிறழ்புரிதல் ஆகும்.

ஒரு கியூபிட்டானது 0 என்ற நிலையில் இருப்பதற்கான
நிகழ்தகவும், 1 என்ற நிலையில் இருப்பதற்கான
நிகழ்தகவும் கணக்கிடப்பட்டுள்ளன. ஒரு கியூபிட்டை
அளக்கும்போது மட்டுமே (during measurement) அது என்ன
நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.
அளப்பதற்கு முன் அது இரண்டு நிலைகளிலும்
ஒரே நேரத்தில் இருக்கும்; அதாவது குவான்டம்
ஒன்றிப்பில் இருக்கும். இங்கு அளப்பது (measuring)
என்பதை அன்றாட வாழ்வின் சாதாரண அர்த்தத்தில்
எடுத்துக் கொள்ளக் கூடாது. குவான்டம் இயற்பியலில்
அளத்தல் சிக்கல் (measurement problem) என்பது பெரும்
முக்கியத்துவம் உடையது.

எப்படி இருப்பினும், ஒரு நாள் குவான்டம் கணினிகள்
கடைத்தெருவுக்கு வரத்தான் போகின்றன.அப்போது
ஒரே நேரத்தில் ஒரு கியூபிட் எப்படி 0, 1 என்ற இரண்டு
நிலைகளின் ஒன்றிப்பாக இருக்கிறது என்பதைப்
புரிந்து கொள்ள முடியும்.

கியூபிட்டுகளும் தற்சுழற்சியும்!
----------------------------------------------------
கியூபிட்டுகளைப் புரிந்து கொள்ள ஏதுவாக
அணுக்கருத் தற்சுழற்சி (nuclear spin) குறித்தும்
எலக்ட்ரானின் தற்சுழற்சி (electron spin) குறித்தும் சிறிதளவு
அறிந்து கொள்வோம். அணுக்கருத் தற்சுழற்சி என்பதன்
மூலம் நாம் அணுக்கருவின் ஒட்டு மொத்தக் கோண
உந்தத்தையே (total angular momentum) பொருள் கொள்கிறோம்.

எதிர் எதிரான இரண்டு திசைகளில் எலக்ட்ரான்கள் தற்சுழற்சி
(spin) கொள்கின்றன. அவற்றுக்கு உள்ளார்ந்த கோண உந்தம்
(intrinsic angular momentum) உண்டு.

துகள்களின் தற்சுழற்சி குறித்த பரிசோதனைகள் கடந்த
80 ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன. ஒரு சீரான காந்தப்
புலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வல்லவை இத்துகள்கள்.
இதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட ஆற்றலானது பல்வேறு
ஆற்றல் மட்டங்களாகப் பிரிவது சாத்தியப் படுகிறது
இந்நிகழ்வே காந்த ஒத்திசைவு (magnetic resonance) என்று
அறியப் படுகிறது. இது சார்ந்த பல்வேறு உத்திகள் (techniques)
கண்டறியப் பட்டுள்ளன. இன்று மருத்துவத்தில் பெரிதும்
பயன்படும் MRI scan என்பது காந்த ஒத்திசைவு உத்தியே.

இவ்வாறான வளர்ச்சியின் போக்கில், இன்று ஒரு ஒற்றை
எலக்ட்ரானின் தற்சுழற்சியோ அல்லது ஒரு ஒற்றை
அணுக்கருவின் தற்சுழற்சியோ வலிமையானதொரு
கியூபிட்டாகப் பயன்படும் நிலை உருவாகி உள்ளது.
இதற்குக் காரணம் ஒரு துகளின் தற்சுழற்சியானது
தன்னுடைய குவான்டம் நிலையில் மாற்றமின்றி 
நிலைத்திருப்பதுதான் (having a stable quantum state)
இருப்பதுதான். வெளியில் இருந்து எவ்வளவு இடையூறுகள்
ஏற்பட்டாலும் கூட, அதனால் பாதிக்கப் படாமல்
துகள்களின் தற்சுழற்சி பெரிதும் நிலைபேறு உடையதாக
இருப்பதாலாயே இவை கியூபிட்டுகளாகப் பயன்படுகின்றன.

குறிப்பாக, எலக்ட்ரானின் தற்சுழற்சியை (electron spin)
குவான்டம் கணினியின் செயலியில் (processor)
பயன்படுத்தலாம். ஏனெனில் அது மிகவும் குறைவான
நேரத்தில் பிற தற்சுழற்சிகளுடன் இணைந்து கொள்ளும்.
அது போல, அணுக்கருத் தற்சுழற்சியை குவான்டம்
கணினியின் நினைவகத்தில் (memory) பயன்படுத்தலாம்.
இது ஒரு கட்டத்தில் (phase) வேறொரு கட்டத்திற்கு
மாற்றும்போது சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்வதால்
இதன் கட்ட மாற்றத்தை முன்கணிக்க முடியும்.
     
இந்தியப் பள்ளிகள் அனைத்திலும், CBSE பள்ளிகள்
உட்பட, 12ஆம் வகுப்பு வரை குவான்டம் இயற்பியல்
பாடத்திட்டத்தில் இல்லை. எனவே கல்லூரி
மட்டத்திலான புத்தகங்களைப் படிப்பதன்
வாயிலாகவே ஒருவர் குவான்டம் இயற்பியல்
குறித்த அடிப்படைகளைக் கற்க முடியும். அந்த
அடிப்படைகளைக் கற்றிருந்தால் இக்கட்டுரை
எளிதில் புரியும்.

அல்லது அத்தகைய அடிப்படைகளைக் கற்பதற்கு
இக்கட்டுரை ஒரு உந்துவிசையாக அமையும். ஆக
இக்கட்டுரையும் கூட, ஒரு கியூபிட்டைப் போல,
இரண்டு நிலைகளின் ஒன்றிப்பாக இருக்கிறது
என்று கூறலாம் அல்லவா!
************************************************



   




                 




வெள்ளி, 24 ஜனவரி, 2020

கீழக்கரை ராமேஸ்வரம் தேர்வு மையங்களில்
TNPSC Group IV தேர்வில் முறைகேடு!
விசாரணை முடிந்தது! குற்ற வழக்கு பதிவானது!
99 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
கடந்த 12.11.2019 அன்று வெளியான TNPSC Group IV
முடிவுகளில் முதல் 100 இடங்களைப் பெற்றவர்கள்
கீழக்கரை, ராமேஸ்வரம் என்னும் இரண்டு மையங்களில்
தேர்வு எழுதியவர்கள் என்ற உண்மை அம்பலமானது.

இது குறித்து தேர்வர்கள், பயிற்சி மைய நிர்வாகிகள்,
கல்வி சார்ந்து இயங்கும் அமைப்புகள் ஆகியவை
TNPSCயின் கவனத்திற்கு கொண்டு சென்றன.

விசாரணை நடத்திய TNPSC தற்போது பின்வரும்
முடிவுகளை எடுத்து அறிவித்துள்ளது.

1) முறைகேடு செய்யும் தீய உள்நோக்கத்துடன்
வெளி மாவட்டங்களில் இருந்து மேற்கூறிய இரண்டு
தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதிய 99 பேர்
கண்டறியப் பட்டனர். அவர்களின் தேர்வு முடிவுகள்
ரத்து செய்யப் பட்டன. அவர்களுக்கு வாழ்நாள்
முழுவதும் TNPSC தேர்வெழுதத் தடை விதிக்கப்
பட்டுள்ளது.

2) இந்த 99 பேர் மீதும், இவர்களுடன் சேர்ந்து 
முறைகேட்டில் ஈடுபட்ட தாசில்தார் போன்ற
தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது
குற்ற வழக்குப் பதிவு செய்து FIR போடப்பட்டு உள்ளது.
இவர்கள் கைது செய்யப் படுவது உறுதி.

3) தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில்
வந்துள்ள 39 பேருக்குப் பதிலாக, வேறு தகுதியான
39 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் சான்றிதழ்
சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு TNPSC வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, இரண்டு
வட்டாட்சியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
வட்டாட்சியர் சிக்கந்தர் கைது செய்யப்படக்கூடும்
என்று தெரிய வருகிறது.

இந்நிகழ்வின் படிப்பினை!
-----------------------------------------
காலி இடங்கள் = 9398
தேர்வு நடந்த தேதி: 01.09.2019
தேர்வு எழுதியோர் = 16,29,865 (16 லட்சம் பேர்)
தேர்வு முடிவு வெளிவந்த தேதி: 12.11.2019
முறைகேடு நடந்ததை தேர்வர்கள் அறிந்தது: ஜனவரி 5, 2020.
முறைகேட்டின் மீது நடவடிக்கை: ஜனவரி 24, 2020.

அறிவியலின் துணை கொண்டு இந்த முறைகேடு
நடந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட தேர்வர்கள்,
எழுதிய சில மணி நேரங்களில் மறைந்து விடும்
விசேஷ மையினால் தேர்வர்கள் தேர்வு எழுதி
உள்ளனர். மை மறைந்ததும் சரியான விடைகளை
மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் விடைத்தாளில்
எழுதி உள்ளனர்.

இந்த முறைகேட்டைக் கண்டறிந்தது யார்?
இதை அம்பலப் படுத்தியது யார்?
இதை TNPSCக்கு புகார் அளித்தது யார்?
இதை எதிர்த்துப் போராடியது யார்?
இன்று இந்த முறைகேட்டை  முறியடித்து
மோசடிப் பேர்வழிகளுக்கு தண்டனை வாங்கித்
தந்தது யார்?

எல்லாக் கேள்விக்கும் பதில் ஒன்றுதான்!
அ) கஷ்டப்பட்டுப் படித்துத் தேர்வு எழுதிய தேர்வர்கள்
ஆ) இவர்களுக்குப் பயிற்சி அளித்த பயிற்சி மைய
நிர்வாகிகள்
இ) கல்வி சார்ந்து இயங்கும் நியூட்டன் அறிவியல்
மன்றம் போன்ற வெகு சில அமைப்புகள்.

இந்த மூன்று தரப்பைத் தாண்டி வேறு யார் எவரும்
இந்த முறைகேட்டுக்கு எதிராகத் துரும்பைக்
கூடத் தூக்கவில்லை.

சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்
கட்சித் தலைவர்கள், போலியான சமூக ஆர்வலர்கள்,
தற்குறிகளான இடதுசாரிகள், பெண்ணுரிமைப் போராளிகள்,
இப்படி யாரும் இந்த முறைகேட்டைக் கண்டு கொள்ளாமல்
இருந்து இதற்குத் துணை போயினர்.

ஒரு இடதுசாரி என்பவன் சமூக அவலத்தைக் கண்டு
கொதிக்க வேண்டாமா? அதை எதிர்த்துப் போராட
வேண்டாமா?

ஒரு மெய்யான இடதுசாரி anti establishmentஆக  
இருக்க வேண்டாமா?

தமிழக இடதுசாரி முகாம் தற்குறிகளின் முகாம்!
சமூகத்தின் பொதுவெளியில் ஒரு துரும்பைக்
கூட நகர்த்த வக்கற்ற, வெறும் முகநூலில்
சுயஇன்பம் அனுபவிக்கும் தற்குறிகள் நிரம்பிய
முகாம்.

முறைகேட்டில் ஈடுபட்ட கயவர்களை விட,
இந்த முறைகேடு குறித்து ஒன்றும் தெரியாமல்
சுடுகாட்டு அமைதியுடன் இருக்கும் போலி
இடதுசாரித் தற்குறிகளே மிக மோசமான சமூக
விரோதிகள்!
********************************************** 
         

"ஐயா, நாங்கள் கல்வி அறிவற்ற தற்குறிகள்.
TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகள் பற்றி
எங்களுக்கு ஒரு இழவும் தெரியாது. இந்த
முறைகேடுகளை எதிர்த்துப் போராடுவது
என்பதெல்லாம் எங்களின் அறிவெல்லைக்கு
அப்பாற்பட்டது. தற்குறிகளாகிய  நாங்கள்
இதில் என்ன செய்ய முடியும்"? என்று போலி
இடதுசாரிகள் கேட்கலாம். அது நியாயமே!

அப்படியானால், இந்த முறைகேட்டை எதிர்த்துப்
போராடிய நியூட்டன் அறிவியல் மன்றத்துக்கு
நீங்கள் அளித்த ஆதரவு என்ன? ஒன்றும் இல்லை
அல்லவா?

நீயம் செய்ய மாட்டாய்! செய்பவனையும் 
ஆதரிக்க மாட்டாய்! இது என்ன நியாயம்?
     
ஒவ்வொரு ஆண்டும் Group IV தேர்வை மட்டும்
20 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இந்த 20 லட்சம்
பேரைப் பாதிக்கும் ஒரு முறைகேட்டைப் பற்றி
ஒரு இழவும் தெரியாத தற்குறிகளான போலி
இடதுசாரிகளே, நீங்கள் உயிர் வாழ்ந்து என்ன பயன்?




தமிழ்நாட்டில் உள்ள CBSE பள்ளி
மாணவர்களுக்கு 5, 8 வகுப்புகளுக்கு
பொதுத்தேர்வு கிடையாது! சமச்சீர்
பாடத்திட்டத்தில் மட்டுமே பொதுத்தேர்வு.

சூரியன் கிழக்கே உதிப்பதைப் போன்ற உண்மை.
CBSE, ICSC பள்ளிகளில் 5 , 8 வகுப்புகளுக்கு 
பொதுத்தேர்வு கிடையாது. 


முன் ஏர் சரியாக இருந்தால்தான் பின் ஏர்
சரியாக இருக்கும். 1960, 1970களில் தெ பொ மீ,
மு வ, வ சுப மாணிக்கனார், நெ து சு போன்ற
அறிஞர்களும் நேர்மையாளர்களும் துணைவேந்தர்களாக
இருந்தனர். இன்று துணை வேந்தர் பதவி
ரூ 50 கோடிக்கு விற்கப் படுகிறது.
எனவே உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
ஊழல் ஆதிக்கம் செலுத்துகிறது. 

கீழக்கரை ஊழல் தெரிய வந்ததுமே, பலமுறை
TNPSC அலுவலகத்துக்கு அலைந்தேன். ஒரு நண்பரின்
உதவியால் TNPSCயின் ஓர் உயர் அதிகாரியைச்
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பேசியதன் 
அடிப்படையில், ஒரு CBI விசாரணை தேவைப்படும்
என்று கருதினேன்.

அதிர்ஷ்ட வசமாக, TNPSC நேர்மையான விசாரணை
நடத்தியது. எங்கே தேர்வு முடிவுகளை மொத்தமாக
ரத்து செய்து உயிரைக் கொடுத்துப் படித்தவர்களின்
வாழ்வில் மண்ணள்ளிப் போட்டு விடுவார்களோ
என்று அஞ்சிக் கொண்டே இருந்தேன்.

இன்று கிடைத்த முடிவு சரியானது; நியாயமானது.
இது அனைவருக்கும் மனநிறைவைத் தருகிறது.

பாதிக்கப் பட்டவர்கள் போராடும்போது, சமூகத்தின்
பிற பகுதியினரிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை
என்பது வருத்தம் தருகிறது. தாங்கள் கூறியது போல
ஆசிரியர் சங்கங்களோ மாணவர் சங்கங்களோ
இதில் அக்கறையே காட்டவில்லை என்பதும்
வருந்தத் தக்கது.


5ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக் கட்டணம்
ரூ 100. எட்டாம் வகுப்பு ரூ 200. செங்கோட்டையர்
அறிவிப்பு. இது தனியார் பள்ளிகளுக்கு மட்டும்.

   

புதன், 22 ஜனவரி, 2020

தடுப்பூசிகளும் பிற்போக்குப் பிண்டங்களும்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக தடுப்பூசி போட
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி
நியூட்டன் அறிவியல் மன்றம் பிரச்சாரம்
செய்து வருகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தடுப்பூசிக்கு
எதிரான பிரச்சாரம் உச்சத்தில் இருக்கிறது.

அண்மையில் ஜனவரி 19 அன்று நாடு முழுவதும்
வாய் வழி போலியோ சொட்டு மருந்தை ஐந்து
வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கும்
நிகழ்வு நடந்தேறியது.

கேரள மாநிலத்தில் 25 லட்சம் பேருக்கு போலியோ
சொட்டு மருந்து அளிக்க கேரள அரசு சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஆனால் 20 லட்சம்
குழந்தைகள் மட்டுமே சொட்டு மருந்தை ஏற்றுக்
கொண்டனர். ஐந்து லட்சம் குழந்தைகளுக்கு
அவர்தம் பெற்றோர் சொட்டு மருந்து அளிக்க
அனுமதிக்கவில்லை.

இந்த ஐந்து லட்சம் பேரும் பிரதானமாக மலப்புரம்
மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமியர்கள்
நிறைந்துள்ள மாவட்டம் இது. இஸ்லாமிய மூட
நம்பிக்கைப்படி, தடுப்பூசி  ஹராம் ஆகும்.
(ஹராம் = விலக்கப்பட்டது). இஸ்லாமிய மதவெறி
அமைப்புகள் இஸ்லாமியக் குழந்தைகளுக்கு
தடுப்பூசி போடப் பெற்றோரை அனுமதிப்பதில்லை.

இன்று நேற்றல்ல, மலப்புரம் மாவட்டத்தில் பல
ஆண்டுகளாகவே எந்த விதமான தடுப்பூசியும்
அங்குள்ள இஸ்லாமிய மதவெறிச் சக்திகளால்
அனுமதிக்கப் படுவதே இல்லை.

சரி, தமிழகத்துக்கு வருவோம். தமிழகத்தில்தான்
தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் அதன் வெறித்தனமான
உச்சத்தில் இருக்கிறது. என்றாலும் இங்கு இஸ்லாமிய
மதவெறியர்களின் தடுப்பூசி எதிர்ப்பு என்பது மிகவும்
குறைவாகவே இருக்கிறது.  கேரள இஸ்லாமியர்களைப்
போல் தமிழக இஸ்லாமியர்கள் நடுவில் தடுப்பூசி
எதிர்ப்புப் பிரச்சாரம் பெரிய அளவில் இல்லை.

பின் யார் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள்? முற்போக்கு
முகாம் என்று அறியப்படும் போலி முற்போக்கு முகாமின்
ஆசாமிகளே தடுப்பூசி எதிர்ப்பில் தமிழ்நாட்டில்
முன்னணியில் இருக்கிறார்கள்.

ஹீலர் பாஸ்கர் போன்ற போலி வைத்தியர்கள்,
கல்பாக்கம் புகழேந்தி போன்ற மருந்து நிறுவனக்
கைக்கூலிகள், சீமான் வகையறாக்கள், தமிழ்
தேசியம் பேசும் பல்வேறு பிற்போக்காளர்கள்,
போலி இடதுசாரிகள், போலி மார்க்சிஸ்டுகள்,
போலி நக்சல்பாரிகள் என்று போலி முற்போக்கு
முகாமில் உள்ள ஆசாமிகள்தான் தடுப்பூசிக்கு
எதிராக வரிந்து கட்டிக் கொண்டு, பேசியும் எழுதியும்
செயல்பட்டும் வருகிறார்கள்.

தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் அறிவியலுக்கு எதிரானது.
பிற்போக்கானது; முட்டாள்தனமானது. சமூகத்துக்கு
எதிரான பெருங்கொடுமையை இழைப்பது.
கடுமையாக எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டிய
விஷயம் இது.தடுப்பூசியை எதிர்ப்பவர்கள்
கொலைகாரப் பாவிகள். குழந்தைகளுக்கு
எதிரான கொடுங்குற்றவாளிகள்.

பெரியாரின் பெயரால் கட்சி நடத்தும் யாராவது அல்லது
எந்த அமைப்பாவது தடுப்பூசியை எதிர்க்கும்
பிற்போக்குத் தனத்தை என்றாவது கண்டித்து
இருக்கிறார்களா?

முகநூலில் புரட்சிகரச் சுயஇன்பம் அனுபவிக்கும்
குட்டி முதலாளித்துவத் தற்குறிகள் என்றாவது
தடுப்பூசியை எதிர்க்கும் பிற்போக்குத் தனத்தை
எதிர்த்து இருக்கிறார்களா? கிடையாது.

போலி இடதுசாரிகள், போலி நக்சல்பாரிகள் என்று
பலவாறான முற்போக்குகள் என்றாவது தங்களின்
அமைப்பு வலிமையை தடுப்பூசிக்கு ஆதரவாக
என்றாவது பயன்படுத்தி இருக்கிறார்களா?

ஒரு போலி நக்சல்பாரி இணையதளம் தடுப்பூசிக்கு
எதிராக கட்டுரைகளை வெளியிட்டு, தனது
பிற்போக்குப் பாத்திரத்தை நாடறியச் செய்தது.
இதுதான் தமிழ்நாட்டு முற்போக்குகளின் லட்சணம்!

தடுப்பூசிகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும்
பிற்போக்குப் பிண்டங்களை முறியடிப்போம்!
உரிய தடுப்பூசிகளை உரிய நேரத்தில் அரசின்
மருத்துவத் துறையின் அறிவுரைப்படி போட்டுக்
கொள்வோம்!
********************************************



மூல வினையா எதிர்வினையா என்பது
முக்கியமல்ல. ராமர் சிலைகளைச் செருப்பால்
அடித்தது உண்மை.

"ஆம் அடித்தோம் அதற்கு என்ன இப்போ"? என்று
கம்பீரம் காட்ட வேண்டிய நேரம் இது. ஆனால்
போலிப் பகுத்தறிவுவாதிகள் அடிவயிற்றில்
கத்திக்குத்து விழுந்தது போல அலற வேண்டிய
அவசியம் என்ன?

ஏற்கனவே பிள்ளையார் சிலையை உடைத்தவர்தானே
பெரியார்! அப்படிப்பட்டவர் ராமர் சிலையையும்
செருப்பால் அடித்திருப்பார் என்று பொதுஜன
அபிப்பிராயம் உருவாவது இயற்கையே.

தன் செயலுக்குப் பொறுப்பேற்க அஞ்சும் கோழைத்தனமே
இவர்களிடம் வெளிப்படுகிறது. அதைத்தான் நான்
சுட்டிக் காட்டி இருக்கிறேன்.      

செவ்வாய், 21 ஜனவரி, 2020

போலிப் பகுத்தறிவுக் கோழைகளும்
உறுதிபட நிற்கும் கிழட்டுக் கூத்தாடியும்!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
ஆம், நாங்கள் ராமன் படத்தை
செருப்பால் அடித்தோம்! அது உண்மைதான்!
அதில் என்ன தவறு என்று கேட்கத் துப்பற்ற
கோழைகள் பம்மிப் பதுங்குகிறார்கள்!

ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டு
ஊர்வலம் சென்றார்கள் என்று சொன்னவர்
வரலாற்று ஆசிரியரா? அல்லது கற்றறிந்த
அறிஞரா? விஷயம் தெரிந்தவரா? இல்லை!
வெறும் கூத்தாடி! அதிலும் புழுவினும் இழிந்த
கிழட்டுக் கூத்தாடி!

இந்தக் கூத்தாடியின் வாக்கு வேத வாக்கா?
இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து
சகல விதமான போலிப் பகுத்தறிவுக் கோழைகளும்
தங்களின் சக்தியைத் திரட்டி வெளிக்காட்ட
வேண்டிய அவசியம் என்ன?

கூத்தாடி சொன்ன மாதிரியே, ராமன் படத்தை
அல்லது சிலையை பெரியார் செருப்பால் அடித்திருந்தால்
அதில் என்ன தவறு வேசிமகன்களே?
ஏன் தொடை நடுங்குகிறீர்கள் போலி நாத்திகர்களே?

ஒரு கிழட்டுக் கூத்தாடி தான் சொன்னது உண்மைதான்
என்றும் மன்னிப்பெல்லாம் ஒரு மயிரும் கேட்க
முடியாது என்றும் உறுதிபட நிற்கும்போது,
ராமனின் படத்தைச் செருப்பால் அடித்ததில்
என்ன தவறு என்று உங்களால் ஏன் உறுதிபட
நிற்க முடியவில்லை போலிப் பகுத்தறிவுக்
கயவர்களே?         

பெரியார் ஏதோ பஞ்சமா பாதகத்தைச் செய்து
விட்டது போல ஏன் அலறுகிறீர்கள் கோழைகளே?

பொருள்முதல்வாத வாடையே இல்லாத
போலிப் பகுத்தறிவு இறுதியில் கடவுளுக்கும்
மதத்துக்கும் மண்டியிட்டு சேவை செய்வதில்தான்
போய் முடியும்!


காளமேகப் புலவர் வசைகவியும் பாடுவார்!
இது வசைகவி! எல்லாமே இசைகவியாகப் பாடிக்


**********************************************************

பதிவில் சொல்லப்பட்ட விஷயத்தைத் தாண்டி
வாசகர்கள் கருத்துக்கூற வேண்டாம். இது 1971ல்
allegedly நடந்த ஒரு சம்பவம் பற்றிய பதிவு.
ஒரு கூத்தாடி ஒட்டு மொத்தப் போலிப் பகுத்தறிவு
இயக்கத்தையும் நடுநடுங்க வைத்துக்
கொண்டிருப்பதன் காரணம் என்ன?
போலிப் பகுத்தறிவு இயக்கத்தின் பலவீனமே
காரணம் என்பதை நிரூபிக்கிறது இந்தப் பதிவு.

இந்தப் பதிவின் சாரம் இதுதான். இந்தப் பதிவை
ஒட்டி மதச்சண்டை நிகழ்த்த வேண்டிய தேவை
எதுவும் இல்லை. அதைத் தவிர்க்கவும்.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி"
  என்ற பக்தி இலக்கிய வாசகத்தையே நான்
எளிய தமிழில் எடுத்தாள்கிறேன்.
புழு என்பது எலும்பற்றது. என்பி லதனை
வெயில்போலக் காயுமே என்கிறார் வள்ளுவர்.
இன்னும் ஆயிரம் எடுத்துக்காட்டுகள் தர இயலும்.

இதைக் கேட்க வேண்டிய இடத்தில் போய்க்
கேட்க வேண்டும். இது தேர்தல் புறக்கணிப்புக்கான
இடம். ஓட்டுப்பொறுக்கித் தனத்தத்துக்கு இங்கு
இடம் கிடையாது.

குட்டி முதலாளித்துவக் கண்ணாடியை அணிந்து
கொண்டு, குட்டி முதலாளித்துவ அளவுகோலைக்
கொண்டு அளந்து பார்க்கிறீர்கள். நல்லது.
எமது அளவுகோல்கள் வேறானவை.


உண்மை, உண்மையில்லை என்பது இங்கு
பொருத்தமற்றது. கொள்கை கோட்பாடு
போன்றவற்றில்தான் உண்மையா பொய்யா என்ற
கேள்வி பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

1971ல் நடந்த alleged incident குறித்து இவ்வளவு
பதற வேண்டிய அவசியம் இல்லை. கூத்தாடியானவர்
பொய்யே சொல்லி இருந்தாலும் அதனால் ஒன்றும்
குடி முழுகப் போவதில்லை.

Much ado about nothing! இது எதைக் காட்டுகிறது?
போலிப் பகுத்தறிவு இயக்கம் நீர்த்துப் போனதை
இது காட்டுகிறது. பொருள்முதல்வாதம் இல்லாமல்
விடிவு இல்லை என்ற எமது கூற்று மென்மேலும்
வலுப்படுகிறது.


அவர் மீது காழ்ப்பு அணுவளவும் இல்லை.
அவரை நான் பொருட்படுத்துவதே இல்லை.
ஒருவரைப் பொருட்படுத்தினால் மட்டுமே
அவர் மீது அபிமானமோ காழ்ப்போ கொள்ள முடியும்.
மூத்த கூத்தாடி எம் கே தியாகராஜ பாகவதர் முதல்
இளைய கூத்தாடி உதயநிதி ஸ்டாலின் வரை
கூத்தாடிகளை நான் பொருட்படுத்துவது இல்லை.


கூத்தாடிகள் அல்லாத தமிழக முதல்வர்கள்
1) ராஜாஜி 2) காமராசர் 3) பக்தவத்சலம்
4) ஓபிஎஸ் 5) எடப்பாடி ஆகிய 5 பேர் மட்டுமே
என்று ஆயிரம் முறை சொல்லி இருக்கிறேன்.


ஆசிரியர் அவர்கள் தமது கட்சி
அலுவலகத்தில் அமர்ந்து பேசும் ஒரு வீடியோவைப்
பார்க்க நேர்ந்தது. 2 நிமிட வீடியோ அது.
அதில் ஆசிரியர் அவர்கள் 1971ல் நடந்த மேற்படி
நிகழ்வு உண்மை என்று ஏற்கிறார். அந்த வீடியோவில்
பேசுவது ஆசிரியரே என்பதை ஆசிரியரிடம்
நேரில் பேசியும் குரலைக் கேட்டும் அறிந்துள்ள
என் போன்ற அல்லது நம் போன்ற பலரும்
எளிதில் அறிய இயலும். அந்த வீடியோவைப்
பார்க்கவும். அது உண்மைதானா என்று
உறுதிப் படுத்தவும். ஆசிரியர் அவர்கள் அது
தாம் பேசியது அல்ல என்று இதுவரை மறுக்கவில்லை.
------------------------------------------------------------------------------

Action or reaction does not matter. செருப்பால் அடித்தது
உண்மை என்னும்போது அதற்காக இன்று
குற்ற உணர்வு கொள்ள வேண்டியதில்லை.
செருப்பால் அடித்தது ஒன்றும் பஞ்சமா பாதகம் அல்ல.
Why an apologetic tone now? Do they repent for their "sins"?

பொருள்முதல் வாதமற்ற போலிப் பகுத்தறிவு
இந்த நிலைக்கே இட்டுச் செல்லும்.


சிலைகளை நிர்வாணமாகக் கொண்டு
செல்லுதல் என்பதெல்லாம் பொருட்படுத்தக்
கூடிய விஷயமே அல்ல. நிர்வாண மறைப்பு
என்பது மனிதர்களுக்கு மட்டுமே. சிலைகள் உயிரற்ற
ஜடப்பொருட்கள். அவற்றுக்கு நிர்வாண மறைப்பு
என்றெல்லாம் கிடையாது. இது போன்ற
அர்த்தமற்ற விஷயங்களில் தலையை நுழைத்துக்
கொள்வது தப்பித்தல்வாதம் (escapism) ஆகும்.

செருப்பால் அடிப்பது என்பதுதான் பிரதான விஷயம்.
அது உண்மை என்று ஆன பிறகு, இன்று இவ்வளவு
பம்மிப் பதுங்குவது மனித குல வரலாற்றின் இழிந்த
கோழைத்தனம் மட்டுமே. இதற்குக்  காரணம்
போலிப் பகுத்தறிவே!    
DIELECTICS ARTICLE FOR ARIVIYAL OLI
--------------------------------------------------------
DIALECTICS IS A MERE EMPRICISM!
Dialectics always looks for a binary opposition but there are and maybe 1 or 3 or 4 or n.

கலைஞர் இறந்து விட்டார். இது monism. இதற்கு பைனரி இல்லை.
இந்தியா 1947 ஆகஸ்டு 15ல் சுதந்திரம் பெற்றது.
முக்கோணத்தின் 3 கோணங்களின் கூட்டுத்தொகை 180 டிகிரி.
தண்ணீர் ஒரு கரைப்பான்.
(a + b)^2= .........
இன்றைக்கு அமாவாசை. (This is an event celestial)

சூரியனுக்கு அடுத்து முதலில் உள்ள கிரகம் மெர்க்குரி.
---------------------------------------------------------------
கண்டதெல்லாம் பண்பு மாற்றம் என்றால், முதலாளித்துவம்
ஏகாதிபத்தியமாக மாறுகிறது. இதில் பண்பு மாற்றம் உள்ளது.
மார்க்ஸ் கூறியபடி முதலாளித்துவம் எந்த நாட்டிலும்
மார்க்ஸ் சூத்திரப்படி உருவாக்கப் போவதில்லை. எனவே மாபெரும்
பண்பு மாற்றம் உள்ளது.

ஆயின் முதலாளித்துவத்தின் நிலைமறுப்பு ஏகாதிபத்தியம்
என்று சொல்ல இயலும். இங்கு நிலைமறுப்பு வளர்ச்சிக்கானதா
நல்லதே மேலும் சுரண்டலுக்கானதா

எனவே உதாரணங்களை பிடித்துக் கொண்டு தொங்க
வேண்டாம். வடிவ உவமை வண்ண உவமை தொழில்
உவமை பண்பு உவமை. எனவே தேற்றம் என்ன
கோட்பாடு என்ன என்பதே முக்கியம். கோட்பாடு
நிரூபிக்கப்பட வேண்டும்.

ஹெக்களின் உதாரணங்கள் A என்க
ஏங்கல்ஸின் உதாரணங்கள் கணம் B என்க
நாம் எடுத்துக் கொள்வது A union B அல்ல.
மாறாக A intersection B. A diagram is necessary here 
----------------------------------------------
If there are two things in every one, one good and another bad, then no thing can e hated.

take religion. in religion too there are two things. what are they?
one good and another bad. then we have to accept the good.
then we cannot oppose religion totally

எந்த ஒன்றிலும் ஒன்றுக்கொன்று எதிரான, முரண்பட்ட
இரண்டு விஷயங்கள் இருக்கின்றன என்றால், அந்த
இரண்டு எதிர் எதிரான விஷயங்களும் இயங்கி கொண்டே
இருக்கின்றன என்றால், எந்த ஒரு பொருளும்
 stabilityயுடன் இருக்க இயலாது. ஆனால் அனுவின் இயல்பு
எனவென்றால் to attain stability. Upto atomic number 82, upto Lead
elements are stable.

Tke example Copper. What are te two opposing things in Cu?
Take example Au. ///do ////

இயங்கியல் விதிகள் இயற்கைக்குப் பொருந்தும் என்றால்,
அப்படிப் பொருந்தும் என்று இந்தப் பரிசோதனையிலாவது
நிரூபிக்கப் பட்டுள்ளதா?

சோவியத்தில் 1924-54 காலத்தில் 30 ஆண்டாக சுடாலின்
ஆட்சி நடந்தபோது நிரூபிக்கப்பட்டதா
சீனாவில் நிரூபிக்கப் பட்டதா
முதலாளிய நாடுகளில் நிரூபிக்கப் பட்டதா

எங்கல்சோ மாவோவோ விஞ்ஞானிகள் அல்ல.
அவர்கள் எப்படி இயற்கைக்கு இயங்கியல் பொருந்தும்
என்று கூற முடியும்?

lemma dilemma ஹொவ் டு how to decide which is correct? how to prove the correctness?
science includes logic but logic is not the sole thing
-----------------------------------------------------------------------------------------------
பொருள்முதல்வாதமும் மார்க்சியமும்!
பொருள்முதல்வாதத்தின் வயது 2500.
மார்க்சியத்தின் வயது 170.
பருப்பொருள் பற்றிய வரையறை சார்ந்து...
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
அறிவியலுக்கு வர்க்கச் சார்பு கிடையாது.
(Science is not class biased). பூர்ஷ்வா ரயில் என்றோ
பாட்டாளி ரயில் என்றோ எதுவும் கிடையாது.

பொருள்முதல்வாதம் என்பது முற்ற முழுக்க
அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.
அறிவியலைச் சார்ந்தே அது பிறந்தது.
அறிவியலைச் சார்ந்தே காலந்தோறும் அது
வளர்ந்து வந்திருக்கிறது. பொருள்முதல்வாதமானது,
அந்தந்தக் காலக் கட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு
நேர் விகிதப் பொருத்தத்தில் (directly proportional)
இருந்து வந்திருக்கிறது. இனி இருக்கவும் வேண்டும்.

பொருள்முதல்வாதத்தின் வயது என்ன? எவ்வளவு
குறைத்து மதிப்பிட்டாலும் 2500 இருக்கும். சரி,
மார்க்சியத்தின் வயது என்ன? 1848ல் தோன்றிய
மார்க்சியத்திற்கு இன்று 170 வயது. மார்க்சும்
எங்கல்சும் இணைந்து கம்யூனிஸ்ட் அறிக்கையை
எழுதிய ஆண்டு 1848. இந்நூலை எழுதுவதற்கு
முன்பே மார்க்சும் எங்கல்சும் இணைந்து வேறு
சில நூல்களை எழுதி உள்ளனர். எனினும், கம்யூனிஸ்ட்
அறிக்கை எழுதப்பட்ட 1848ஆம் ஆண்டையே
மார்க்சியத்தின் பிறந்த ஆண்டாகக் கொள்கிறது
நியூட்டன் அறிவியல் மன்றம்.

மார்க்சியம் பொருள்முதல்வாதம் என்னும் இவ்விரண்டில்
பொருள்முதல்வாதமே தொன்மை மிக்கது. அது
மார்க்ஸ் (1818-1883) எங்கல்சுக்கு(1820-1895) முந்தியது.
மார்க்சின் ஆசான் லுத்விக் பாயர்பாக்கிற்கும்
முந்தியது. மார்க்சியத்திற்கும் பல நூற்றாண்டுகள்
முந்தியது.

லுத்விக் பாயர்பாக் (Ludwig Feuerbach 1804-1872) பல
நூல்களை எழுதியுள்ளார். அவரின் தலைசிறந்த
படைப்பாகக் (magnum opus) கருதப்படுவது 1841ல்
எழுதப்பட்ட "கிறிஸ்துவத்தின் சாரம்"
(The Essence of Christianity) என்ற நூல்.

மார்க்ஸ் ஏங்கல்சை இந்த நூல் பெரிதும் கவர்ந்தது.
அவர்களின் சிந்தனை மீது ஆற்றல் மிக்க
தாக்கத்தை ஏற்படுத்தியது. "இந்தப் புத்தகத்தைப்
படித்த உடனே நாங்கள் பாயர்பாக்கின் சீடர்களாகி
விட்டோம்" என்கிறார் எங்கல்ஸ்.

"இந்தப் புத்தகத்தைப் படித்தால்தான், அது தரும்
விடுதலை உணர்வை ஒருவர் அனுபவிக்க முடியும்"
என்று புகழாரம் சூட்டுகிறார் எங்கல்ஸ்.
" கிறிஸ்துவத்தின் சாரம்" உள்ளிட்ட பல்வேறு
புத்தகங்களில் பாயர்பாக் முன்வைத்த
பொருள்முதல்வாதக் கருத்துக்களே மார்க்சியப்
பொருள்முதல்வாதத்தின் மூலத் தோற்றுவாய்.

மார்க்சியம் என்பது ஒரு "த்ரீ  இன் ஒன்" (three in one)
தத்துவம். இயங்கியல் பொருள்முதல்வாதம்,
அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம்
என்னும் மூன்று உள்ளடக்கக் கூறுகளைக்
கொண்டதே மார்க்சியம் என்கிறார் லெனின்.
லுத்விக் பாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தை
எடுத்துக் கொண்டு மார்க்சியத்தில் சேர்த்துக்
கொண்டார் மார்க்ஸ் என்கிறார் லெனின்.

இதன் பொருள் என்ன? பாயர்பாக்கின் பொருள்முதல்
வாதத்தைச் செழுமைப் படுத்திய பிறகே
மார்க்சியத்தில் சேர்த்துக் கொண்டார் மார்க்ஸ்
என்று பொருள். செழுமைப் படுத்துதல் என்றால்
என்ன? பாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தில்
உள்ள தவறுகளைக் களைந்து, போதாமையை இட்டு
நிரப்பி, தேவையான இடங்களில் திருத்தம் செய்து
(addition, deletion and modification) பயன்படுத்தினார்
மார்க்ஸ் என்று பொருள்.

இது போலவே ஹெக்கலின் (Hegel 1770-1831)
இயங்கியலையும் எடுத்துக் கொண்டு
மார்க்சியத்தின் ஒரு கூறாக ஆக்கிக் கொண்டார்
மார்க்ஸ். இது குறித்து ஸ்டாலின்,
"Everybody knows that Hegel was the father of the dialectical
method.Marx purged and improved this method"' என்று கூறுகிறார்.
(பார்க்க: ஸ்டாலின் 1906-07ல் கூறியது).

சரி, மார்க்சியத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும்
உள்ள உறவு என்ன? மார்க்சியம் என்பது ஒட்டு
மொத்த மானுட விடுதலைக்கான தத்துவம்.
பொருள்முதல்வாதம் என்பது இயற்கை, பிரபஞ்சம்
ஆகியவை பற்றிய பொருளை முதன்மையாகக்
கொண்ட, கடவுளை மறுக்கிற, அறிவியல் வழிப்பட்ட
ஓர் உலகக் கண்ணோட்டம்.

கணித மொழியில் கறாராகச் சொல்வதானால்,
மார்க்சியத்தை ஒரு கணம் (set) என்று எடுத்துக்
கொண்டால், பொருள்முதல்வாதம் அதன்
உட்கணம் (sub set) ஆகும். (If Marxism were a set of collection
of theories, materialism would be its sub set).

பொருள்முதல்வாதம் ஒட்டு மொத்த  மானுடத்துக்கும்
சொந்தமானது. எந்த ஒரு அமைப்புக்கோ,
கட்சிக்கோ, இயக்கத்துக்கோ சொந்தமானது அல்ல.
லுத்விக் பாயர்பாக் ஆத்மா என்பதை
மறுப்பதற்கு முன்னாலேயே, அதுவும் 2000
ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஆத்மாவை
மறுத்தவர் புத்தர். அவரின் "நிராத்ம வாதம்"
(theory of no soul) ஆத்மா இல்லை என்று கூறும்
பொருள்முதல்வாதம் ஆகும். (பார்க்க; ராகுல
சாங்கிருத்தியாயன் எழுதிய "பௌத்தத்
தத்துவ இயல்"). புத்தர் யாரினும் மூத்த
ஆரம்ப காலப் பொருள்முதல்வாதி ஆவார்.

இந்தியத் தத்துவஞான வரலாற்றைப் படித்தால்,
இந்தியப் பொருள்முதல்வாதம் மேற்கத்தியப்
பொருள்முதல்வாதத்தை விட காத்திரமாகவும்
ஆழமாகவும் இருந்தது என்பது புலப்படும்.
மேற்கத்தியப் பொருள்முதல்வாதம் இரண்டாயிரம்
ஆண்டுகள் கழித்து அறிந்து கொண்டதை
இந்தியப் பொருள்முதல்வாதம் முன்னரே
சொல்லி இருந்தது என்பதும் கருதத் தக்கது.
==========================================
ளது. அந்த அளவுக்கு அது சரியானதே. ஹெக்கலின் இயங்கியலை இயற்கைக்குப் பொருத்தும்போது அது பொருந்தவில்லை. ஹெக்கல் மிகச் சிறந்த அறிஞர்தான்
என்றாலும், அவரின் இயங்கியல் இயற்கைக்குப் பொருந்துவதில்லை. தங்க ஊசி என்பதற்காக கண்ணில்
குத்திக் கொள்ள முடியாது.
=============================
 contradiction
--------------------
Is there any two opposing things or forces contained in matter?
Two opposing things in an object means, that twoo those opposites are in motion
means there is an inherent INSTABILITY. ut every object wants to e stable
and this STABILITY is the inherent property of matter.

Every atoms to attain stability.I there is no staility, then there wont be any objects and everything
would be ions.
If so, let us take a few objects and analyse.
Take Hydrogen. What are those two opposing forces/things in Hydrogen?
Binding energy, ionisation potential, ionisation energy  etc.
Take water. Take Al, Au,Fe. Cu,Zn
atoms, molecules, ions...three varieties
energy particles like Bosons, matter particles like fermions
quarks. up quark etc.

ஒவ்வொரு பொருள் வளர்ந்து கொண்டே இருக்கும்
என்றால், ஹைட்ரஜன் என்பது வளர்ந்து வேறொன்றாக
ஆகியிருக்கும்.
118 தனிமங்கள் இன்றுண்டு.

எங்கல்சின் அறிவை விட இன்றுள்ள ப்ளஸ் டூ  மாணவனின்
அறிவியல் அறிவு அதிகம்.

தலைகீழாக நின்றவர் ஹெக்கல் அல்ல. எங்கல்சே.

மார்க்சியத்துக்கு எதிராக எமது கருத்துக்களைப்
பயன்படுத்துவது தடை செய்யப் படுகிறது.
அது தண்டனைக்குரிய குற்றமாகும். பிற்போக்குவாதிகள்
எமது கருத்துக்களைப் பயன்படுத்தக் கூடாது.

I am the only scientific Marxist. No other person is. There are science people.
there are marxists. but I am the only scientific marxist.

எனது நூலுக்கு எவராலும் மறுப்பு எழுத இயலாது.
மறுப்பு எழுதத் தகுதியான எவரும் இன்று எந்தக்
கம்யூனிஸ்ட் கட்சியிலும் இல்லை.

ஐன்ஸ்டின் நியூட்ரான் உதாரணம். Even Einstein did not know
about neutron இந்த 1921
-----------------=========================
1. சிந்தனை 2. சமூகம் 3. பொருள் இம்மூன்றுக்கும்
இயங்கியல் பொருந்தும் என்கிறார் ஏங்கல்ஸ்.
அடுத்து இயங்கியல் விதிகள் universal என்கிறார்.

அவை universal அல்ல.
பொருளுக்குப் பொருந்தும் என்று எவர் ஒருவரும்
இதுவரை சொல்லவில்லை, ஏங்கல்சைத் தவிர.
லெனின் மாவோ பிலக்கணவ் டிராட்ஸ்கி ரோசா
அன்வர் ஹோக்ஸ்சா யாரும் சொல்லவில்லை.

அது தப்பு என்று சொல்வது யாம் மட்டுமே.
வேறு எவரும் சொல்லவில்லை. இயங்கியல் தப்பு என்று
சிலர் சொல்லியிருக்கிறார்கள். அனால் இவ்வாறு தெளிவாக
பொருளுக்குப் பொருந்தாது என்று யாரும் சொல்லவில்லை.
அதைச் சொல்வது நான் மட்டுமே.


அடுத்து சமூகத்துக்குப் பொருந்துமா?
இது சமூகத்துக்குப் பொருந்தாது என்கிறார் மாவோ.

அடுத்து சிந்தனைக்குப் பொருந்துமா? பொருந்தும்.
அதைச் சொன்னவர் ஹெக்கல்.

சகலமும் சதா இயங்கி கொண்டே இருக்கின்றன.
இயக்கப் போக்கில் மாறிக் கொண்டே இருக்கின்றன
என்று சொன்னவர் ஹெக்கல். மார்க்ஸ் அதை வழி
மொழிந்தவர் மட்டுமே. அறிஞர் அண்ணா ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என்றது போல.

சமூகத்துக்கு எப்படிப் பொருந்தாது? பொருளுக்குப்
பொருந்துமா பொருந்தாதா என்ற கேள்விக்கு
மாவோ போகவில்லை.
மாவோ கூறுகிறார்.
1) வளர்ச்சி என்பது cyclic. spiral அல்ல.
2) synthesis என்று கிடையாது.
3) 3 விதிகள் கிடையாது. ஒரே விதிதான்.
4) அடிமைச் சமூகம் அழிந்து  நிலவுடைமைச் சமூகம்
பிறக்கிறது. அடிமைச் சமூகத்தை அழிப்பதுதான்
நிலவுடைமைச் சமூக வளர்ச்சிக்கு நிபந்தனை. அடிமைச்
சமூகத்தில் இருந்து அதன் நல்ல அம்சங்களைத் தக்க
வைத்துக் கொள்வதோ அல்லது அதன் நல்ல கூறுகளை
அதிலிருந்து பெறுவதோ என்பதற்கு இடமில்லை. எனவே
SYNTHESIS என்பதற்கு இடமில்லை என்கிறார் மாவோ
5) முதலாளியச்  சமூகமாக மாறிய பிறகும் அமெரிக்க
சமூகத்தில் அடிமை முறை இருந்தது. அதை லிங்கன்
ஒழித்தார். அதை ஏன் அவர் தக்கவைக்கவில்லை?
தக்கவைத்தால் அது நான்சென்ஸ்
6) இந்தியாவில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.
இது பழைய நிலவுடைமைச் சமூக வழக்கம். இதைத்
தக்க வைக்கலாமா? அழிக்கலாமா?
7) பெண் சிசுக் கொலை தக்க வைக்கலாமா? அழிக்கலாமா
8) பால்ய விவாகம் தக்க வைக்கலாமா அழிக்கலாமா
9) கலாச்சார புரட்சி ஏன் நடத்தினார் மாவோ?
10) சோஷலிச அமைப்பு உருவான பிறகும், பழைய
சமூகக் கூறுகளான பூர்ஷ்வா கூறுகள் அல்லது
நிலவுடைமைக் கூறுகள் இருந்தன. அதை வேரோடும்
வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும் என்பதால்தானே
கலாச்சார புரட்சி.
ஆக SYNTHESIS எங்கே உள்ளது? இல்லையே.
SYNTHESIS என்றால் பழைய கருத்தில் இருந்தும் சிலவற்றைத்
தக்க வைத்துக் கொள்வது என்று பொருள்.

ஆக மனித சமூகத்திற்கு SYNTHESIS பொருந்தாது.

BINARYயை வலியுறுத்தும் இயங்கியல்
-------------------------------------------------------------------
இயங்கியலில் மிகப்பெரிய முக்கியமான உயிராதாரமான
அம்சம் பைனரி. எதிலும் பைனரியைத் தேடும் இயங்கியல்.
ஆனால் உலகில், பொருளைப் பொறுத்து  எல்லாவற்றிலும்
பைனரி என்பது கிடையாது. ஒருமை இருமை மும்மை
பன்மை என்று உண்டு. கணக்கில் இருமையுடன் நிற்க
இயலாது. upto n வரை போக வேண்டும். n =any number

க்ராவிட்டி is always attractive. இதற்கு எதிரான repulsionஐ
தேடித்தேடி சலித்தவர் ஏங்கல்ஸ். கிடைக்கவில்லை.
எனவே dialecticsofnature புத்தகத்தை கைவிட்டார்.
அவர் குப்பையில் வீசியதை 1927ல் ரஷ்யாவில்
பதிப்பித்து உலகிற்குத் தந்தனர். இது மூடத்தனம்.

ஏங்கல்ஸ் நியாயமானதை செய்யவில்லை.
செய்ததை நியாயப் படுத்த முயன்றார்.
அதுதான் dialectics of nature book. அதில் தோல்வி
கண்டதால் புத்தகத்தை கைவிட்டார்.

மார்க்சிய செல்வாக்கு வந்து, மார்க்சிங்க் கட்சி
ஆபீஸ் வாச்மேனுக்கு கூட செல்வாக்கு வந்த
புறச்ச சூழ்நிலை, எனவே மார்க்ஸ் ஏங்கல்ஸ் இன்சிட்டுட்டே
பதிப்பித்தது. கம்பன் வீட்டுக் காட்டுது
 திரியும் கவிபாடும்

புத்தகத்துக்கு எதிர்ப்பு வந்ததும் இங்கிலாந்து கட்சி
மோரிஸ் காணபிரேத jbs ஹால்டேன் ஆகியோரிடம்
பொறுப்பைக் கொடுத்தது. ஹால்டேனே preface
எழுதினர்
------------------------------------------------------
INDUSTRY DURING THE PERIOD OF MARX

Textile industry was the first industry and during Marxs 'period there was mainly
textile industry. During Marx period no electricity so there was no electric
industries. After Marx there was many many industries which
 Marx never predicted.

example, English Electric company in chennai.
Philips company, HMT watch company,
BHEL ig oiler production Avadi tank factory
so many industries.

Is histroy the history of class struggles/ if so it is REDUCTIONISM.
So many classes came into being.

அல்லாஹு அக்பர் மார்க்சுஹு அக்பர்.

dialectics என்பது வெறுமனே சிந்தனை சார்ந்து, சிந்திப்பதற்குப்
பயிற்சி அளிக்கும் ஒரு முறை. இயங்கியல் கற்றால்
சிந்திக்கவும் வாதம் புரியவும் தர்க்கத்தில் ஈடுபடவும்
இயலும். இயங்கியலில் செய்முறை என்பதற்கு எந்த
இடமும் கிடையாது.

உண்மைகளை வாதம் புரிந்து அறியவோ நிரூபிக்கவோ இயலாது.

இயங்கியல் முறையில் வாதம் புரிந்துதான்  புவிமையக்
கொள்கையைக் கண்டுபிடித்தார்கள்.
=====================================
Mahathma Gandhi is dead. Thi is an accepted truth.
So there is no need of dielectical investigation required here

Dielectics is needed only when there is an uncertainty regarding
the correctness off a statement.
----------------------------
எந்த ஒரு கோட்பாட்டையும், அது மார்க்சியக் கோட்பாடாக
இருந்தாலும் அல்லது அறிவியல் கோட்பாடாக இருந்தாலும்
திறனாய்வுப் பார்வையுடன் (critical outlook) அணுக வேண்டும். அப்போதுதான் அக்கோட்பாட்டைப் புரிந்து கொள்ள இயலும்.  அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும் என்று மார்க்ஸ் கூறியதன் பொருள் இதுதான். திறனாய்வுப் பார்வை இல்லாமல்
மார்க்சியத்தைக் கற்க இயலாது.

மார்க்சி யத்தைத் திறனாய்வு செய்வதா? ஐயோ என்ன கொடுமை
இது என்று பாராயணவாதிகளும் பத்தாம் பசலிகளும்
மார்க்சிய ஜெய்னுலாதீன்களும் கூச்சல் போடலாம். அப்படிக்
கூச்சல் போடுவோர் மார்க்சிய விரோதிகள்.

ஒலியின் வேகத்தைக் கண்டறிவதில் நியூட்டன் ஒரு சிறிய
பிழை செய்தார். நியூட்டனுக்குப் பின்வந்த பிரெஞ்சு விஞ்ஞானி
லாப்லேஸ் அதைத் திருத்தினார். 11ஆம் வகுப்பு  இயற்பியல்  புத்தகத்தில் இந்தப்பாடம் உள்ளது. நியூட்டன் தவறு செய்தார்
என்று பாடப்புத்தகத்தில் எழுதி இருப்பதால், நியூட்டன்
மீதான மரியாதை குறைந்து விட்டதா? இல்லையே!

மகத்தான புரட்சியாளர்கள் மார்க்சும் எங்கல்சும் தவறே
செய்யாதவர்கள் அல்ல. அவர்களின் தவறைத் திறனாய்வுப்
பார்வையுடன் அணுகுவதற்கு முன்வர வேண்டும். மார்க்சைத்
திறனாய்வுப் பார்வைக்கு உட்படுத்துவதே மார்க்சிய
விரோதம் என்று கூறுபவர்கள் மார்க்சிஸ்டுகளாக
இருக்க இயலாது. அவர்கள் மார்க்சிய மதவாதிகளே.
 
ஹெக்கலின் இயங்கியல் என்பது சிந்தனையின் விதிகளே!
---------------------------------------------------------------------------------------------------
இயங்கியல் என்பது குறைந்தது 2500 ஆண்டுத் தொன்மை மிக்கது.
கிரேக்க இயங்கியல் ஜீனோ  என்னும் தத்துவஞானியிடம்
இருந்து தொடங்கியதாக ஹெக்கல் கூறுகிறார். இந்தியா சீனா
போன்ற கீழ்த்திசை நாடுகளிலும் இயங்கியல் .இருந்தது. புத்த
மதத் துறவிகள் இயங்கியலைக் கையாண்டனர். சாக்ரட்டீஸ்
எலஞ்சஸ் (elenchus) என்னும்  கேள்விகளுடன் கூடிய விவாத
முறையைக் கையாண்டார்.

இயங்கியல் என்பது தத்துவம் அல்ல. அது ஒரு மெய்காண் முறை.
அதாவது உண்மையைக் கண்டறியும் முறை. ஹெக்கல் ஒரு
கருத்துமுதல்வாதி. அவர் மனித சிந்தனையின் விதிகளைக்
கண்டறிந்தார். அவையே ஹெக்கலின் இயங்கியல் எனப்படுகிறது.    ஹெக்கல் பருப்பொருளின் விதிகளைக் கண்டறியவில்லை.
அவர் சிந்தனையின் விதிகளையே கண்டறிந்தார் என்பதை
மனதில் பதிக்க வேண்டும்.

பொருள் என்பதே முதன்மையானது (primary). பொருளின்
பிரதிபலிப்புதான் சிந்தனை. எனவே சிந்தனை என்பது
இரண்டாம் பட்சமானது (secondary). கண்ணாடியில் முகம்
பார்க்கிறோம். கண்ணாடியில் நமது முகத்தின் பிம்பம் (image)
தெரிகிறது. கண்ணாடியில் தெரியும் பிம்பம் போன்றதே
சிந்தனை. ஹெக்கல் வகுத்தது சிந்தனைக்கான விதிகளை.
அதாவது கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கான விதிகளை.

ஹெக்கலின் சிந்தனைக்கான விதிகள் பருப்பொருளுக்குப்
பொருந்தாது. கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கான
விதிகள், அந்தப் பிம்பத்தை உண்டாக்கும்  மூலப்பொருளான
மனிதனுக்குப் பொருந்தாது. எனவே ஹெக்கலின் விதிகள்
பொருளுக்கானவை அல்ல. அவை பருப்பொருளான
இயற்கைக்குப் பொருந்தாதவை. ஒரு தீவிரக் கருத்துமுதல்வாதியான ஹெக்கல், பொருள் என்பதை
இரண்டாம் பட்சமாகக் கருதுபவர். எனவே பொருளுக்கான
விதிகளை அவர் உருவாக்கவில்லை.
-----------------------------------------------------------------------------------
நிலைமறுப்பின் நிலைமறுப்பு மட்டுமல்ல,
மார்க்ஸ் எங்கல்ஸ் கூறிய மூன்று இயங்கியல்
விதிகளும் ஹெக்கல் கூறிய விதிகளே.
கருத்து-எதிர்க்கருத்து-புதுக்கருத்து
(Thesis, anti thesis, synthesis) எனப்படும் இயங்கியலின்
முறைமையும் ஹெக்கல் கூறியதே. இதை
அப்படியே நாங்கள் எடுத்துக் கொண்டோம்
என்று மார்க்சும் எங்கல்சும் ஒப்புக்
கொண்டுள்ளனரே. இதில் எந்த ஒளிவு மறைவும்
இல்லையே.

இயங்கியலை ஹெக்கல் சிந்தனையின்
வளர்ச்சிக்கான விதிகளாகப் பயன்படுத்தினார்.
இந்த விதிகள் சிந்தனைக்கு மட்டுமல்லாமல்,
பொருளுக்கும் பொருந்தும் விதிகளாக
இருந்தன. எனவே ஹெக்கலின் இயங்கியலை
நாங்கள் அப்படியே எடுத்துக் கொண்டோம் என்று
மார்க்சும் எங்கல்சும் கூறி உள்ளனரே. 

------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இல்ல்ல்ல்லை = இல்லை.
இலக்கணப்படி இது சரி. ஏனெனில் இது ஒற்றளபடை.

இந்த வாக்கியம் சுய முரண்பாடாக உள்ளதே.
negation of negation என்பது நிலைமறுப்பின்
நிலைமறுப்புதானே. மாவோ எதை மறுத்தார்?
அருள்கூர்ந்து தெளிவாகக் கூறும்படி
வேண்டுகிறேன்.
 

தங்களின் கருத்து பின்நவீனத்துவக் கருத்து.
மார்க்சியம் துல்லியத்தை ஏற்கிறது.
பின்நவீனத்துவம் துல்லியத்தை மறுக்கிறது.
அறிவியல் என்பது துல்லியத்தைக் கொண்டது.
5ஐ 5ஆல் பெருக்கினால் 25 வரும் என்பது
துல்லியம் ஆகும். 5ஐ 5ஆல் பெருக்கினால்
24 வரும் என்பது துல்லியமற்றது. துல்லியம்
இல்லாமல் அறிவியல் இல்லை. அறிவியல்
இல்லாமல் மார்க்சியம் இல்லை. எனவே
மார்க்சியம் துல்லியத்திற்காக நிற்கிறது.
மார்க்சியம் எப்படி துல்லியத்துக்கு எதிராக
இருக்கும்?

நீண்ட தூரம் என்பது linear distance அல்ல.
எனவே கிரேன் மூலம் இதே அளவு தூரம்
பறக்க முடியும். ஒவ்வொரு திசையிலும்
கொஞ்சம் கொஞ்சம் தூரமாக இதே அளவு
தூரத்தை கிரேன் உதவியால் கடக்கலாம்.
அப்படித்தான் அவர் செய்துள்ளார். அவர்
கடந்தது linear ஆக அல்ல.

பிதற்றல் என்று நீங்கள் பயன்படுத்தும்
சொற்பிரயோகம் கண்ணியமற்றது. இதைத்
தவிர்க்க முயற்சி செய்யவும்.

கணிதச் சமன்பாடுகளின் வழியே இயங்கியலை
விளக்குவது யார்? எங்கல்ஸ். நான் அல்ல.
a, minus a, a squared ஆகியவற்றைக் கொண்டு
நிலைமறுப்பு விதியை விளக்குகிறார் எங்கல்ஸ்.
எங்கல்ஸ் என்ன சொன்னாரோ, அதை அப்படியே
நான் சொல்லி இருக்கிறேன். அவ்வளவுதான்.
இதெல்லாம் பிதற்றல் என்றால், தங்களின்
கூற்றுப்படி, அப்படிப் பிதற்றியவர் எங்கல்ஸ்தான்.

துல்லியம் இல்லாமல் அறிவியல் இல்லை
---------------------------------------------
பொருள்முதல்வாத இயங்கியல் வகுப்பில் (02.09.2018)
கூறப்பட்ட மேற்கோள்கள்:
------------------------------------------------------------------------------------
எனவே  இயற்கை மனித சமூகம் என்னும் இரண்டின் 
வரலாற்றில் இருந்துதான் இயங்கியலின் விதிகள் 
உருவாக்கப்பட்டன.

இயங்கியலின் மூன்று விதிகளையும் கருத்துமுதல்வாத
பாணியில், சிந்தனையின் விதிகளாக மட்டுமே 
உருவாக்கினார் ஹெக்கல்.

இயங்கியல் குறித்த ஒரு கையேட்டை எழுதுவது குறித்து 
நாங்கள் அக்கறை கொள்ளவில்லை. ஆனால் இயங்கியலின் 
விதிகள் மெய்யாகவே இயற்கையின் வளர்ச்சியின் விதிகள் 
என்பதையும் எனவே கோட்பாட்டு ரீதியான இயற்கை 
விஞ்ஞானத்துக்கும் அவை பொருந்தும் என்பதையும் 
உணர்த்தவே நாங்கள் விரும்புகிறோம்.

இயற்கை, சமூகம், சிந்தனை இம்மூன்றின் வளர்ச்சிக்கான 
பொது விதியானது சர்வாம்ச அளவில் செல்லத்தக்க விதியாக  
முதன் முதலாக உருவாக்கப் பட்டுள்ளது. இது வரலாற்று 
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனையாக என்றும் 
நிலைத்திருக்கும்.   

(பார்க்க  எங்கல்ஸ் எழுதிய இயற்கையின் இயக்கவியல் 
நூலின், 2ஆம் அத்தியாயம், தலைப்பு: இயக்கவியல்.)
-------------------------------------------------------------------------------------------------  
மாவோவின் மேற்கோள்கள்:
------------------------------------------------
“It is good to have criticism. It would not be good to have no criticism, or to suppress 
criticism. It is this mistake that Stalin committed. Stalin did a lot of good things, but he 
also did some bad things. He confused the two; he used the methods that are for dealing 
with the enemy to deal with the people, with contradictions among the people. He 
wouldn’t let people say bad things about the government, or about the Communist Party; 
if you said anything bad or if there were any rustling in the air, any movement in the grass, 
he would say that you were a spy and have you arrested.”
      —Speech at [a] Conference of Members and Cadres of Provincial-Level 
Organizations of [the] CPC in Shandong (March 18, 1957), 
The Writings of Mao Ze Dong volume II 1949 to 1976, pp. 419-420.

There were two sides to Stalin. One side was the elimination of true counterrevolutionaries; 
that was the correct side. The other side was the incorrect killing of numerous people, 
important people. For example, a high percentage of delegates to the Communist Party 
[National] Congress were killed. How many in the Central Committee did he kill? He 
seized and killed 80 percent of the Seventeenth Party Congress delegates, and he seized 
and killed 50 percent of the Central Committee members elected at the Seventeenth 
Congress [in 1934].”
      —“On the Correct Handling of Contradictions among the People” (Speaking Notes), 
(Feb. 27, 1957), The Secret Speeches of Chairman Mao: From the Hundred Flowers 
to the Great Leap Forward, ed. by Roderick MacFarquhar, Timothy Cheek, & 
Eugene Wu pp. 141-2, and footnote 11.

“Even in 1949 when we were about to cross the Yangtze River, someone [emphasis added] 
still wanted to prevent us. According to him we should under no circumstances cross the 
Yangtze. If we did so America would send troops to China and become directly involved 
in China’s Civil War and the South and North dynasties would reappear in China.
      “I did not listen to what they [sic] said. We crossed the Yangtze. America did not send 
troops to China and there were no South and North dynasties. If we really had followed 
his words surely there would be a situation of South and North dynasties.
      “Later on I met that person who intended to prevent us from crossing the Yangtze. 
His first words in our conversation were: ‘The victor bears no blame.’
      “I had not listened to him. As a result he not only did not blame me. On the contrary, 
he recognized me as the victor. It is very important that one should analyze and solve 
problems on one’s own and always seek truth from facts.”
      —Mao’s comments in 1957, as recorded by Wang Fangming of Beijing People’s University, People’s Daily, Jan. 2, 1979. English translation in NE, p. 15. The “someone” 
referred to was obviously none but Stalin.
----------------------------------------------------------------------------------------------
********************************