புதன், 30 மார்ச், 2022

இங்கிலாந்து தப்பிச் செல்ல முயன்றபோது 
மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட 
பெண் பத்திரிகையாளர் ராணா அயூப்!
------------------------------------------------------------------------
மலத்தில் நெளியும் புழுக்களைப் பார்த்து 
இருக்கிறீர்களா? அப்படி ஒரு பழுதான் இந்தப் 
பெண்மணி! இவர் பெயர் ராணா அயூப்.

இஸ்லாமியப் பெண்ணான இவரின் வயது 37.
இவர் ஒரு பத்திரிகையாளர். இவர் வாஷிங்க்டன் 
போஸ்ட் எனப்படும் அமெரிக்கப் பத்திரிகையில் 
எழுதுகிறவர். அதிதீவிர அமெரிக்க ஆதரவாளர்.

இவர் மீது MONEY LAUNDERING உட்பட பல்வேறு 
வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரூ 1.73 கோடி 
பணமோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு 
இவருக்கு சம்மன் அனுப்பியது. சம்மனை 
ஏற்று ஆஜர் ஆனால் கைது உறுதி என்ற 
அளவுக்கு சான்றாதாரங்கள் அமலாக்கப் 
பிரிவில்  சிக்கி உள்ளன.

அமலாக்கப் பிரிவின் கண்ணின் மண்ணைத் தூவி 
விட்டு, கைதாகாமல் தப்பிக்க ராணா அயூப் 
முயற்சி செய்தார். இங்கிலாந்து சென்று விடத் 
திட்டம் தீட்டி மும்பை விமான நிலையத்தில் 
லண்டன் செல்லும் விமானத்துக்குக் காத்திருந்த 
நேரத்தில் இந்தப் பெண்மணியை அமலாக்கப் 
பிரிவின் போலீஸ் அதிகாரிகள்  கோழியை 
அமுக்குவது போல் அமுக்கி விட்டார்கள். 
  
பெண் பத்திரிகையாளர் இவர்! போலி முற்போக்கு!
இவருடைய யோக்கியதையைப் பாருங்கள்.
இங்கிலாந்த்துக்குத் தப்பி விட்டால், அதன் பிறகு 
இந்தக் குற்றவாளியை அங்கிருந்து ஒருபோதும் 
இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது.
*********************************************
    

ஞாயிறு, 27 மார்ச், 2022

உக்ரைன்-ரஷ்யப் போரில் 
சரியான மார்க்சிய லெனினிய நிலைபாடு! 
இது மட்டுமே சரியான ஒரே நிலைபாடு!
-------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
இக்கட்டுரையின் முதல் பகுதி அறிவியல் ஒளி 
ஏட்டில் மார்ச் 2022 இதழில் பிரசுரமானது. அது 
முகநூலிலும் வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது 
இக்கட்டுரையின் இரண்டாம் பகுதி வெளியிடப் 
படுகிறது. இவ்விரண்டு பகுதிகளையும் வாசகர்கள் 
படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 
----------------------------------------------------------------------------------

உக்ரைனில் தலையிடும் ரஷ்யாவும் அமெரிக்காவும்!
--------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
இந்த மில்லேனியத்தின் தொடக்கத்தில் 
(ஜனவரி 2000) ரஷ்யா ஒரு போரில் தீவிரமாக 
ஈடுபட்டு இருந்தது.  செசன்யாவுடனான போர் 
அது. இந்த உலகில் மிக அதிகமான மலைகளைக் 
கொண்ட நாடு செசன்யா. ஒன்றல்ல இரண்டல்ல 
168 மலைகள் அங்கு உள்ளன.

செசன்யாவை ஆக்கிரமித்த ரஷ்யா, தனது 
ஆக்கிரமிப்புப் போரில் வெற்றி கண்டது.
விளைவு: செசன்யா ரஷ்யாவுக்குச் சொந்தமானது.

என்றாலும் செசன்யாவின் தேசபக்த சக்திகள் 
ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து தலைமறைவாக 
இருந்து கொண்டு கொரில்லா தாக்குதல்களை 
அவ்வப்போது நிகழ்த்தி வந்தன. (இது Insurgency
என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது). 2000ஆம் 
ஆண்டு முதற்கொண்டு பத்தாண்டுகளுக்குச் 
சற்று மேலும் நீடித்த இந்த கொரில்லாத்  
தாக்குதல்கள் காலப்போக்கில் மங்கி விட்டன.


கிரிமியா என்ற நாட்டை, குடியரசை, பிரதேசத்தை 
வாசகர்களில் சிலருக்கேனும் நினைவிருக்கலாம்.
சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசாக உக்ரைன் 
இருந்த அந்தக் காலத்தில் (1954-1991), உக்ரைனின் 
ஒரு பகுதியாக இருந்தது கிரிமியா. 1991ல் சோவியத் 
ஒன்றியம் உடைந்து சிதறியது. உக்ரைனின் 
பகுதியாகவே அப்போது கிரிமியா இருந்தது.

ஆனால் அப்படி இருக்க ரஷ்யா விடுமா? 
படையெடுத்துச் சென்ற ரஷ்யா கிரிமியாவைத் 
தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது 
(annexation of Crimea). இந்த இணைப்பு 2014 பிப்ரவரியில் 
நடைபெற்றது. ஆனால் ஐநாவின் 2014 தீர்மானம் 
கிரிமியாவை இன்னும் உக்ரைனின் ஒரு 
பகுதியாகவே காட்டுகிறது.

காட்டி என்ன பயன்? ஐநா சபையில் ரஷ்யாவுக்கு 
ரத்து அதிகாரம் (VETO POWER) உள்ளது. ரஷ்யாவைக் 
கண்டித்து ஒருபோதும் ஒரு தீர்மானத்தை ஐநாவில் 
இயற்ற முடியாது.   

செசன்யாவைப் போலவும் கிரிமியாவைப் 
போலவும்  உக்ரைனையும் சொந்தமாக்கிக் 
கொள்ள இயலும் என்ற நம்பிக்கையுடன் 
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ளது. இது 
நியாயமற்றதும் நிலப்பிரபுத்துவ மண்வெறி  
மேலோங்கி நிற்பதுமான ஆக்கிரமிப்புப் போர் ஆகும்.

ஆபத்தான ரஷ்ய ஏகாதிபத்தியத்தை அருகில் 
வைத்துக் கொண்டு சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் 
உக்ரைனால் வாழ முடியவில்லை. கடந்த பல 
ஆண்டுகளாகவே உக்ரைனின் உள்நாட்டு 
விவகாரங்களில் தலையிட்டு, தன்னுடைய கைப்பாவை 
அதிபர்களை உக்ரைனில் ஆட்சியில் அமர்த்தி 
உக்ரைனின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் 
பெரும் அச்சுறுத்தலாக ரஷ்யா விளங்கி வந்தது.

தலைக்கு மேலே டிமாக்கிளிசின் வாளாக 
(Sword of  Damocles) ரஷ்யா  தொங்கிக் 
கொண்டிருக்கும்போது உக்ரைன் 
அமைதியாக இருக்க முடியாது. தன் நாட்டின் 
சுதந்திரத்தையும் இறையாண்மையையும் 
ரஷ்யாவிடம் இருந்து பாதுகாக்க உருப்படியாக 
ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் 
இருந்தது உக்ரைன்.

எனவே நேட்டோ ராணுவ ஒப்பந்தத்தில் இணைய 
முடிவு செய்து அதற்காக விண்ணப்பித்தது. 
உக்ரைனுக்கு வேறு எந்த வழியும் இருக்கவில்லை.
ராணுவ அரசியல் ரீதியாக இந்த உலகில் மெய்யான 
பன்மைத்துவம் எதுவும் இல்லை. எனவே பற்பல சிறந்த 
வழிகள் இருக்கும்போது, அவற்றை விட்டு விட்டு, 
நேட்டோவில் சேருவது என்ற முடிவை உக்ரைன் ஏன் 
எடுத்தது என்று கேட்க வழியில்லை. 

பனிப்போர்க் காலத்தில் நேட்டோவும் வேண்டாம்; 
வார்சா ஒப்பந்தமும் வேண்டாம் என்று முடிவெடுத்த 
நாடுகள் 1955ல் பாண்டுங் நகரில் கூடி ஒரு மாநாடு 
நடத்தின. இதன் தொடர்ச்சியாக 1961ல் அணிசேரா 
நாடுகளின் அமைப்பு உருவானது.

இந்தியப் பிரதமர் நேரு, எகிப்திய அதிபர் நாசர்,
யூகேஸ்லேவியா அதிபர் மார்ஷல் டிட்டோ, கானா 
அதிபர் நிக்ருமா, இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ 
ஆகியோர் அணிசேரா நாடுகளின் இயக்கத்தை 
முன்னின்று உருவாக்கினார்கள்.

இன்று இந்த 2022ல் இது போன்ற வாய்ப்பு எதுவும் 
உக்ரைனுக்கு இருக்கவில்லை. (இன்றும் அணிசேரா 
நாடுகளின் அமைப்பு யாருக்கும் பயனின்றி 
பெயரளவில் நீடித்து வருகிறது)
      
எனவே தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் 
கொள்ள, ரஷ்யாவிடம் தனது பிரதேசங்களை 
இழந்து விடாமல் இருக்க, ரஷ்யாவுக்கு அடிமைப் 
படாமல் இருக்க நேட்டோவில் சேருவதைத் தவிர 
வேறு வழி எதுவும் உக்ரைனுக்கு இருக்கவில்லை.

மலைப்பிரதேசமான செசன்யாவால் தொடர்ந்து 
கொரில்லாத் தாக்குதல்களை நிகழ்த்தி ரஷ்யாவுக்கு 
பதிலடி கொடுக்க முடியும். ஆனால் உக்ரைன் ஒரு 
சமவெளிப் பிரதேசம். சோவியத் ஒன்றியத்தில் 
இருந்தபோது, சோவியத்தின் தானியக்  
களஞ்சியமாகத் திகழ்ந்தது உக்ரைன். கொரில்லாப் 
போருக்கான புவியியல் ரீதியான நில அமைப்பு
உக்ரைனில் கிடையாது. எனவே போர் என்று வந்தால், 
மரபான போரை, அதன் அத்தனை பாதக 
அம்சங்களுடனும் எதிர்கொள்வதைத் தவிர 
உக்ரைனுக்கு வேறு வழி இல்லை. மேற்கூறிய 
காரணிகள் அனைத்தும் நேட்டோவை நோக்கி 
உக்ரைனைத் தள்ளின.

உக்ரைன் சந்திக்கும் பிரச்சினை உக்ரைனுக்கு
மட்டும் பிரத்தியேகமானது அல்ல. ஏகாதிபத்தியத்தின் 
பார்வைக்கு இலக்காகும்  எந்த ஒரு சிறிய நாடும் 
உக்ரைன் போன்று இதே பிரச்சினையை 
எதிர்கொள்ள நேரிடும். 

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்!
இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிந்து தமிழ்நாடு 
தனி நாடாக ஆகிவிட்டது என்று முட்டாள்தனமாகக் 
கற்பனை செய்வோம். தமிழ்நாட்டின் புவியியல் 
முக்கியத்துவம் கருதி, இந்தியாவும் மற்றும் உலகின் 
பல ஏகாதிபத்திய நாடுகளும் தமிழ்நாட்டின் மீது 
கண்ணாக இருந்து, தமிழ்நாட்டின் சில 
பகுதிகளை அபகரிக்க நினைக்கும். 

அப்போது தமிழ்நாடு எப்படி தன்னைக் காத்துக் 
கொள்ளும்? ஏதேனும் ஒரு ராணுவ ஒப்பந்தத்தை 
ஏதேனும் ஒரு ஏகாதிபத்திய நாட்டுடன் செய்து கொண்டு   
தமிழ்நாடு தன்னைக் காத்துக் கொள்ள முயலும்.
அல்லது நேட்டோ போன்ற ராணுவ ஒப்பந்தத்தில் 
தமிழ்நாடு இணைய வேண்டியது வரும். இதற்காகத் 
தமிழ்நாட்டைக் குற்றம் சொல்ல இயலுமா? 


சிறிய நாடுகளைப் பொறுத்தமட்டில், பல 
சந்தர்ப்பங்களில், அவர்களுக்குச் சரியான option 
கிடைப்பதில்லை.They have to choose between the 
devil and the deep sea. எனவே உக்ரைன் போர் 
விவகாரத்தில் உக்ரைனைக் குற்றம் சாட்டுவது 
பேதமையுள் எல்லாம் பேதைமை ஆகும். 
புத்தி பேதலித்துப்போன குட்டி முதலாளித்துவம் 
இத்தகைய சர்வ மூடத்தனத்தில் இறங்கும்.

உக்ரைன் பிரச்சினைக்கு ஒரு உலகளாவிய 
பரிமாணம் உண்டு. நாளைய உலகில் மேலும் 
மேலும் உக்ரைன்கள் தோன்றும். அதற்கான 
சூழல் நிரந்தரமாகவே உள்ளது. தங்களை 
விழுங்கக் காத்திருக்கும் ஒரு ஏகாதிபத்தியத்திடம் 
இருந்து தப்பிக்க இன்னொரு ஏகாதிபத்தியத்திடம் 
அடைக்கலம் தேட வேண்டிய நிலைக்கு சிறிய 
நாடுகள் தள்ளப்படும். எனவே 
இப்பிரச்சினையில் சிறிய நாடுகளைக் குற்றம் 
கூற முற்படுவது மூடத்தனத்தின் உச்சம் ஆகும்.  

எனவே உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் முழுமையான 
குற்றவாளி ரஷ்யாவே. சூழ்நிலையின் கைதியாக 
இருக்கும் உக்ரைனைக் குற்றம் சாட்ட ஏதுமில்லை.
உக்ரைனைக் குற்றம் சாட்ட விரும்புவோர், 
நேட்டோ ஒப்பந்தத்தில் சேருவதைத் தவிர 
உக்ரைனுக்கு வேறு சிறந்த வழி என்ன இருந்தது 
என்று சொல்ல வேண்டும்.     
  
இந்தியாவில் நக்சல்பாரிக் கட்சிகள் நிறையவே 
உள்ளன. இவை மக்கள் ராணுவத்தைக் கட்டி 
அமைத்துள்ளன. இப்படைகளிடம் அதி நவீன 
ஆயுதங்கள் உள்ளன. இந்த நக்சல்பாரிக் குழுக்களின் 
கூட்டுப்படையை பிரிகேடியர் கார்முகில், பிரிகேடியர் 
மருதையன் தலைமையில் உக்ரைனில் கொண்டு
போய் நிறுத்தி, ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து 
உக்ரைனைப் பாதுகாக்கலாம் என்று நக்சல்பாரிகள் 
உறுதியளித்தால் உக்ரைன் ஏன் போய் 
நேட்டோவில் சேரப் போகிறது?  

வேறு வழியின்றி விபீஷணன் இராமனிடம் 
அடைக்கலம் ஆனதைப் போல, உக்ரைன் 
அமெரிக்காவிடம் அடைக்கலம் புகுந்தது. 
ஆனால் உக்ரைன் விபீஷணன்தான் என்றாலும் 
அமெரிக்கா இராமன் அல்ல என்பதுதான் இதில் சோகம்.

"குகனொடும் ஐவரானோம் 
முன்புபின் குன்றுசூழ்வான் 
மகனோடும் அறுவரானோம் 
எம்முழை அன்பின்வந்த 
அகனமர் காதல்ஐய 
நின்னொடும் எழுவரானோம்"
என்று இராமன் புளகாங்கிதம் அடைந்ததைப்போல 
உக்ரைன் தன்னிடம் வந்ததும் அமெரிக்காவுக்கு 
goosebumps எதுவும் ஏற்பட்டு விடவில்லை.

காவிய இராமன் பறவை ஜடாயுவையும் தன் சுற்றமாகக் 
கருதினான். ஆனால் கயமை மிகுந்த அமெரிக்காவுக்கு 
எதிலும் ஆதாயக் கண்ணோட்டமே! "நம்மிடம் வருவதைத் 
தவிர வேறு வழியில்லை உக்ரைனுக்கு. இனி அவனை 
எப்படியெல்லாம் ஒட்டச் சுரண்ட முடியுமோ 
அப்படியெல்லாம் ஒட்டச் சுரண்டிவிட வேண்டியதுதான்" 
என்று குரூர மகிழ்வை எய்தியது அமெரிக்கா 
(US was sadistically delighted).

அமெரிக்க ரஷ்யா இரண்டுமே குரூரம் மிகுந்த கொடிய 
முதலாளித்துவத்தின் உயிருள்ள உதாரணங்கள்.
சகல விதமான மனித உறவுகளையும் பண உறவுகளாக 
மட்டுமே ரொக்க உறவுகளாக மட்டுமே இரு நாடுகளும் 
பார்க்கின்றன. தன் பிறப்பு முதலே ஒரு முதலாளித்துவ 
நாடாக இருக்கிற அமெரிக்கா ஈவிரக்கமற்ற கொடிய 
சுரண்டலின் வடிவமாக ஈர்ப்பதில் வியப்பில்லை.

ஆனால் தன் வாழ்வில் எழுபது ஆண்டுகாலமாக  
(1917-1991) சோஷலிச நாடாக இருந்த ரஷ்யா, 
சுரண்டலுக்கு எதிரான நாடாக இருந்த ரஷ்யா,
சோஷலிஸப் பண்பாட்டின் சுவடே இல்லாமல், 
அமெரிக்காவை விஞ்சும் குரூர முதலாளித்துவ
நாடாக இருப்பதற்கு என்ன நியாயத்தை நம்மால் 
கற்பிக்க இயலும்?

அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளுமே மனித குல 
எதிரிகள்.  உக்ரைனின் பிரதேசங்களை ஆக்கிரமித்து 
தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் பொருட்டே 
இவ்விரு நாடுகளும் இந்த யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
ரஷ்யா தானே நேரடியாக ஆக்கிரமிப்புப் போரை 
நடத்துகிறது. அமெரிக்கா தன்னுடைய நேட்டோ 
கூட்டாளிகளுடன் சேர்ந்து உக்ரைன் சார்பாக  
ஒரு பதிலிப்போரை நடத்தி வருகிறது. 

இவ்விரு நாடுகளுக்கும், உக்ரைன்-ரஷ்ய எல்லையில் 
அமைந்துள்ள லுஹான்ஸ்க் (Luhansk), டோனெட்ஸ்க் 
(Donetsk) மாகாணங்களின் பகுதிகளைக் கைப்பற்றுவதே 
இறுதி நோக்கம். இவ்விரு மாகாணங்களின் 
எல்லையோரப் பிரதேசங்களில் உக்ரைன் அரசை 
எதிர்த்து, ரஷ்ய ஆதரவுடன் ஆயுதப் போராட்டங்கள் 
நடந்து வருகின்றன. 

உக்ரைனின் அக்கிலீஸின் பாதங்களாய் (Achilles' heels) 
இருக்கும் இப்பிரதேசங்களை ரஷ்யா கைப்பற்றுவதுடன் 
போர் அநேகமாக முடிவுக்கு வரும். அப்போது 
உக்ரைனின் வேறு பிரதேசங்களை அமெரிக்கா 
தனக்காக எடுத்துக் கொண்டிருக்கும். இந்தப் போர் 
இப்படி முடிவடையவே வாய்ப்புகள் அதிகம்.  

ரஷ்யாவின் போரும் நாஷ் சமநிலையும்!
--------------------------------------------------------------
உக்ரைன்-ரஷ்யப்போர் 2022 பெப்ரவரி 24ல் தொடங்கியது
இன்று (27.03.2022) 32ஆவது நாளாக போர் தொடர்ந்து 
நடக்கிறது. இப்போரில் ரஷ்யாவும் அமெரிக்காவும் 
எப்படி நடந்து கொள்கின்றன என்பதை உன்னிப்பாகப் 
பார்க்கும்போது அவர்களின் எச்சரிக்கையான நடத்தை 
பல விஷயங்களை உணர்த்துகிறது. 

அ) போர் தொடங்கி 32 நாளாகியும் உக்ரைனின் 
எல்லைக்கு உள்ளாகவே போர் நடக்கிறது. உக்ரைனைத் 
தாண்டவில்லை (confined to Ukraine). எந்த ஒரு நேட்டோ 
நாட்டின் மீதும் கவனக் குறைவாகக் கூட தாக்குதலோ 
தாக்குதலுக்குரிய சூழலோ ஏற்பட்டு விடாமல் 
அதீத எச்சரிக்கையுடன் ரஷ்யா நடந்து கொள்கிறது.     
 
ஆ) அமெரிக்கா தன் நேட்டோ கூட்டாளிகளின் மூலமாக
இப்போரில் பங்கெடுக்கவில்லை. போரை உக்ரைன் 
மட்டுமே நடத்துகிறது. ரஷ்யா உக்ரைன் ஆகிய இரண்டு 
நாடுகளைத்தவிர வேறெந்த நாடும் இப்போரில் 
குதிக்கவில்லை.
     
இ) ரஷ்யா அணுஆயத நாடு. உக்ரைன் அணுஆயுத 
நாடு அல்ல. சோவியத் ஒன்றியத்தில் இருந்து 
பிரிந்தபோது தன் நாட்டில் இருந்த பெரும் 
எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களைத் தங்களுக்கு 
வேண்டாம் என்று ரஷ்யாவிடமே திரும்ப ஒப்படைத்து 
விட்டது உக்ரைன். என்றாலும் நேட்டோ ஒப்பந்த 
ஷரத்துக்களின்படி, ஓர் உறுப்பு நாட்டுக்கு அணுஆயுதம் 
தேவையென்றால், நேட்டோ அதை வழங்கும்.

ஈ) எனினும் இந்தப்போரில் அணுஆயுதம் பயன்படுத்தப்படும் 
என்று நினைப்பது அடிமுட்டாள்தனம் ஆகும். அணு ஆயுத 
நாடுகள் அனைத்தும் MAD doctrineஐப் பின்பற்றுபவை.
(MAD doctrine பற்றி இக்கட்டுரைத் தொடரின் முதல் 
கட்டுரையில் விளக்கப் பட்டுள்ளது).   

ஆக மேற்கூறிய அனைத்துக் காரணிகளையும் மிகவும் 
கவனத்துடன் பரிசீலித்த பின்னர் பின்வரும் முடிவுகளுக்கு 
வந்து சேருகிறோம்.

நாஷ் சமநிலையைப் பேணுவதில் சம்பந்தப்பட்ட 
அனைத்து நாடுகளும் மிகவும் கவனமாகவும் 
கறாராகவும் உள்ளன. எந்த ஒரு இடத்திலும் 
எள்முனை அளவேனும் நாஷ் சமநிலையில் இருந்து 
விலகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு 
ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, நேட்டோ ஆகிய 
அனைவருக்கும் உள்ளது. 

எனவே எந்த நிலையிலும் உக்ரைன்-ரஷ்யா போர் 
உலகப்போராக மாறாது என்பதும் அணுஆயுதம் 
பயன்படுத்தப் படாது என்பதும், நாஷ் சமநிலை 
மீறப்படாமல் இருப்பதில் இருந்து புலப்படுகிறது.

உலகப்போரின் சகாப்தம் முடிந்து விட்டது என்றும் 
இனி இந்த உலகில் உலகப்போருக்கு எள்முனை
அளவேனும் இடமில்லை என்றும் நியூட்டன் அறிவியல் 
மன்றம் முன்வைத்த கோட்பாடு (theory) உக்ரைன்-ரஷ்யப் 
போரின் மூலம் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது. 
(முற்றியது) 
----------------------------------------------
உக்ரைன்-ரஷ்யப் போரில் 
சரியான மார்க்சிய லெனினிய நிலைபாடு என்ற கட்டுரை 
இந்த இரண்டாம் பகுதியுடன் நிறைவடைகிறது.  
***************************************************
பின்குறிப்பு:
1) இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள 
Modern Military Strategy,  MAD doctrine, Game theory, 
Nash equilibrium ஆகிய subjectsல் நல்ல புலமை 
தேவைப்படும். வாசகர்கள் பிறழ்புரிதலைத் 
தவிர்க்கவும்.

2) உக்ரைன்-ரஷ்யப் போர் குறித்து 
இக்கட்டுரையாசிரியர் எழுதிய ஏனைய 
கட்டுரைகளையும் படிப்பது நல்லதொரு 
புரிதலை ஏற்படுத்தும். பிறழ்புரிதலைத் 
தடுக்கும்.  
------------------------------------------------------------------------------

சனி, 26 மார்ச், 2022

போர் இலக்கியங்கள்! 
----------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------
பொருதடக்கை வாளெங்கே மணிமார்பெங்கே
போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத 
பருவயிரத் தோளெங்கே எங்கே என்று 
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்.
------------கலிங்கத்துப் பரணி.

கலிங்கத்துப் பரணி போர் இலக்கியம்தான்.
என்றாலும் உரைநடையிலான போர் இலக்கியங்கள்
அதாவது நாவல்கள் ஐரோப்பாவில்தான் அதிகம்.

போர்கள் குறித்தும் உலகப்போர் குறித்தும் பேச 
விரும்புவோர் போர் இலக்கியங்களைக் கற்று 
இருத்தல் வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் 
கட்டாய ராணுவப் பயிற்சி உண்டு. அமெரிக்காவில் 
ரஷ்யாவில் உண்டு. இந்தியாவில் கேவலம் NCC கூட 
கட்டாயம் கிடையாது.

நான் பியூசி முடித்து கோடை விடுமுறையில் 
இருந்தபோது லியோன் அரிஸ் (Leon Uris) எழுதிய 
Battle Cry என்ற நாவலைப் படித்தேன். இவர் அமெரிக்க 
நாவலாசிரியர்.

அதைப் படித்து முடிக்க எனக்கு 20 நாள் ஆனது. 
அவ்வளவும் தெரியாத ஆங்கில வார்த்தைகள். 
அர்த்தம் தெரிந்து படித்து முடிக்க அவ்வளவு 
காலம் ஆனது. இந்நாவல் ஒரு போர் இலக்கியம். 
  
பின்னர் எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய A farewell to arms 
என்ற நாவலைப் படித்தேன். முதல் உலகப்போர் பற்றிய 
நாவல் அது. இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டு
போகலாம். உலகப்போர் என்றும் உக்ரைன் போர்
என்றும் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும்  
இடதுசாரி முகாமின் குட்டி முதலாளித்துவம் 
இந்நாவல்களைப் படிக்க வேண்டும். 

படித்தால் நல்லது. ஆனால் இந்நாவல்களைப் படிக்க 
வேண்டுமாயின் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
நல்ல புலமை மிக்க ஆங்கிலம் வேண்டும். அதற்கு 
இடதுசாரி முகாமின் தற்குறி எங்கு போவான்?
ஒரு சாம்பிளுக்காக இரண்டு நாவல்களை மட்டும் 
குறிப்பிட்டுள்ளேன். நான் படித்த மற்றும் நான் 
படிக்காத போர் இலக்கியங்கள், நாவல்கள் நூற்றுக் 
கணக்கில் உள்ளன.

ரஷ்யாவின் போர் இலக்கியங்கள் எதையேனும்
படித்து இருக்கிறீர்களா? இல்லை. போலி இடதுசாரி 
முகாமில் உள்ளவர்கள் அனைவரும் விதிவிலக்கின்றிப் 
படித்த புத்தகம் ஒன்றே ஒன்றுதான்! அது சரோஜாதேவி 
புஸ்தகம் தான்!

டால்ஸ்டாயின் War and Peace படித்திருக்க வேண்டும். அது 
உலகப்போருக்கெல்லாம் முந்தியது. ரஷ்யாவின் மீதான 
பிரான்சுப் படையெடுப்பைப் பற்றிக் கூறும் நாவல் அது.

மைக்கேல் ஷோலக்கோவ் தெரியுமா? அவர் எழுதிய 
டான் நதி அமைதியாகச் செல்கிறது (And quiet flows the Don) 
என்ற நாவல் மிகச் சிறந்த நாவல், பேறு பெற்றவர்கள்
அதைப் படித்திருப்பார்கள்.

இப்போது ஏன் போர் இலக்கியம் பற்றிப் பேச 
நேரிட்டுள்ளது? எல்லாம் குட்டி முதலாளித்துவத் 
தற்குறிகளால்தான். இடதுசாரி முகாமில் உள்ள 
போலி நக்சல்பாரிகள், போலி மாவோயிஸ்டுகள், 
போலி மார்க்சிஸ்டுகள் என்று பலரும் உக்ரைன் 
நாட்டுக்கும் மக்களுக்கும் உபதேசம் வழங்கிக் 
கொண்டு இருக்கிறார்கள். உலகின் மொத்த 
மக்கள்தொகையான 750 கோடிப்பேரும் இகழ்ந்து 
காரித்துப்பும் அளவுக்கான கோமாளித்தனம் இது.
**************************************************            
    
 
என் உயரம் எனக்குத் தெரியும்!
காலத்தை வென்று நிற்கும் காவிய வாக்கியம்!
குட்டி முதலாளித்துவக் கோழைகளின்  ஆரவாரம்! 
------------------------------------------------------------------
1996ல் இந்தியாவின் பிரதமர் யார் என்று நாடு 
முழுவதும் ஒரு கேள்வி எழுந்தது. வாஜ்பாய் 
பிரதமர் பதவியில் இருந்து இறங்கி இருந்த நேரம்.

மூப்பனாரா கருணாநிதியா அவரா இவரா யார் 
பிரதமர் என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, 
அதற்கு ஒரு பதில் அளித்தார் கலைஞர்.
நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை 
என்றார் கலைஞர். ஏன் என்று கேட்டபோது 
என் உயரம் எனக்குத் தெரியும் என்றார் 
கலைஞர். 

காலத்தை வென்று நிற்கும் வாக்கியம் அது. 
ஓர் அறுதியிடும் வாக்கியம் (assertive sentence) அது.
ஒரு காவிய வரியின் அந்தஸ்தைப் பெற்று 
இன்றும் சிகரம் தொட்டு நிற்கிறது அவ்வாக்கியம்.

கலைஞரை வணங்குகிறேன். அவரைப்போல 
ஒவ்வொருவருக்கும் அவரின் உயரம் தெரிந்திருக்க 
வேண்டும். 

இந்த விஷயத்தில் வலதுசாரி முகாம் எவ்வளவோ 
பரவாயில்லை. அவர்களில் பலருக்கும் தங்களின் 
உயரம் தெரியும். ஆனால் தன் உயரம் என்ன என்று 
தெரியாத தறுதலைகளும் தற்குறிகளும் இடதுசாரி 
முகாமில்தான் அதிகம்.

இந்த இடத்தில் இந்தியாவின் இடதுசாரி முகாமில் 
95 சதத்திற்கும் மேற்பட்டோர் போலி இடதுசாரிகள்
என்ற உண்மையைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
இந்தப் போலி இடதுசாரி முகாமில் ஒருவனுக்கும் 
அவனின் உயரம் என்னவென்று தெரியாது.

ஒரு குற்றுச்செடியின் உயரமே வளர்ந்திருப்பான்.
ஆனால் தான் பனைமர உயரம் வளர்ந்திருப்பதாக 
சுயஇன்பம் அனுபவிப்பான்.  இவன்தான் தமிழக 
இந்திய இடதுசாரி. போலி மார்க்சிஸ்ட், போலி 
நக்சல்பாரி, போலி மாவோயிஸ்ட் என்று பலரும் 
இந்த முகாமில் இருப்பவர்கள்.

தன் அறிவெல்லைக்கு அப்பால பல ஒளியாண்டுகள்  
தொலைவில் இருக்கும் விஷயங்களில் கருத்துக் 
கூற முற்பட்டு தன் இழிந்த அறியாமையை 
வெளிப்படுத்துவான் இந்தப் போலி நக்சல்பாரி. 

தமிழ்நாட்டின் போலி நக்சல்பாரி,  போலி 
மாவோயிஸ்ட் மற்றும் சில லெட்டர்பேட் 
அமைப்புகளின் போலிகள், உதிரியாக உள்ள  
போலிகள் என்று அநேகமாக ஒவ்வொருவருமே 
தன் உயரம் தனக்குத் தெரியாத தற்குறிகள்தான்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் உலகப்போராக 
மாறுமா? தன் உயரம் தனக்குத் தெரியாத தற்குறிகளான 
போலி நக்சல்பாரிகளுக்கு உலகப்போர் குறித்து
எதுவுமே உருப்படியாகத் தெரியாது. அவர்கள் என்ன 
செய்ய வேண்டும்.

அவர்கள் ஒரு consultancy  அப்பாயிண்ட்மெண்ட் 
செய்ய வேண்டும். அதாவது ஒரு நிபுணர் குழுவை 
நியமிக்க வேண்டும். அவர்களிடம் கருத்துக் 
கேட்டும் விளக்கம் பெற்றும் விஷயத்தைத் 
தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 
தனக்கு உகந்த நிலைபாட்டை எடுக்க வேண்டும்.
இதுதான் முறை!

இதற்கு மாறாக, போரைப் பற்றி ஒரு இழவும் 
தெரியாத தற்குறிகள், தங்களின் வாழ்க்கையில் 
ஒரு NCCயில் கூடப் பயிற்சி பெற்றிராத இந்தக் 
குட்டி முதலாளித்துவக் கோழைகள், நிலைபாடு
என்ற பெயரில் தங்களின் இழிந்த அறியாமையை 
வெளிப்படுத்துவதால் யாருக்கும் பயனில்லை.     
*********************************************
    
    
     
 
   

வீரவநல்லூரில் நிகழ்ந்த
வரவேற்கத்தக்க வன்முறைச் சம்பவம்!
------------------------------------------------------------
போலி நக்சல்பாரி ஆதரவாளரான
குட்டி முதலாளித்துவ காத்தவராயனுடன் 
இசக்கிமுத்து அண்ணாச்சி உரையாடுகிறார்.
இடம்: வீரவநல்லூர் மோர் மடம்.
நேரம்: பகல் 12 மணி.

இசக்கிமுத்து: பனிப்போர்னா என்னன்னு தெரியுமால.
காத்தவராயன்:  தெரியும் அண்ணாச்சி.
இசக்கி: சொல்லுல 
காத்தவ: நல்ல பனிப்பிரதேசத்துல நடக்கிற 
போர் பனிப்போர் அண்ணாச்சி. கார்கில் போர் 
இமயமலைப் பிரதேசத்துல நடந்தது. நல்ல பனி.
அதனால கார்கில் போர் ஒரு பனிப்போர் 
அண்ணாச்சி.
இந்தப் பதிலை அவன் சொன்னதுமே 
செருப்பைக் கழட்டிய அண்ணாச்சி 
செருப்பு பிய்ந்து போகும் அளவுக்கு
போலி நக்சல்பாரி காத்தவராயனை 
அடிக்கிறார்.
*****************************************

போலி நக்சல்பாரிகளின் அறிவு இந்த லட்சணத்தில்தான் உள்ளது.

ஆம், அப்படி இருந்த இடம்தான். 
தற்போது மோர்  விநியோகம் எதுவும் 
நானறிந்து 70 ஆண்டுகளாகக் கிடையாது.
இது  முக்கிய வழியில் உள்ள ஒருவகை 
ஜங்ஷன் போன்ற இடம். சின்ன பஸ் ஸ்டான்ட் 
என்றும் நான் சிறுவனாக இருந்தபோது 
சொல்வார்கள். எனக்கு மிகவும் பிடித்த இடம்.

பனிப்போர் குறித்த விவாதம்!

 


        

வெள்ளி, 25 மார்ச், 2022

 வாசகர்களுக்கு வேண்டுகோள்!

----------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------

உலகப்போர் வராது என்று நிரூபித்து 

பல கட்டுரைகள் எழுதி உள்ளேன். இடதுசாரி அன்பர்கள் 

இக்கட்டுரைகளைப் படித்துப் பார்த்து 

தங்களின் தவறான, பிற்போக்கான 

கருத்துக்களை மாற்றிக் கொள்ளுமாறு 

வேண்டுகிறேன்.


இல்லை எண்களின் கருத்து சரியானதுதான் 

என்று நீங்கள் பிடிவாதம் பிடிப்பீர்களென்றால் 

என்னுடைய தியரியை தவறு என்று 

நிரூபியுங்கள். Come on, disprove my theory.


வெறுமனே வாயில் கொழுக்கட்டையை 

அடித்துக்கொண்டு கோழைகளாக 

மனதுக்குள் புலம்பிக் கொண்டு 

இருக்காதீர்கள்.

       


போலி இடதுசாரித் தற்குறிகள்

அனைவருமே சிந்தனைக் குள்ளர்கள்!


உண்மை! உண்மை!

உரக்கக் கத்திச் சொல்லுங்கள்!

குட்டி முதலாளித்துவத் தற்குறிகளின் 

மண்டைக்குள் உங்கள் சத்தம் கேட்கட்டும்!


கிருஷ்ணசாமி தியாகராஜன் 


குட்டி முதலாளித்துவமும் உலகப்போரும்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

-------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------

1) உலகப்போர் வராது என்று நிரூபிக்கும் 

பல கட்டுரைகளை எழுதி முகநூலில் 

வெளியிட்டுள்ளேன்.

 

2) தங்களை இடதுசாரிகள் என்றும் 

மார்க்சிஸ்டுகள் என்றும் 

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் என்றும் 

கருதிக் கொள்வோர் அனைவரும்

மேலே குறிப்பிட்ட எனது கட்டுரைகளை 

அருள்கூர்ந்து படித்துப் பார்க்கும்படி 

வேண்டுகிறேன்.


3) எனது கட்டுரைகளைப் படித்து முடித்ததும் 

உலகப்போர் வரும் என்ற உங்களின் கருத்து

தவறானது என்றும் பிற்போக்கானது என்றும் 

அறிவியலுக்கு எதிரானது என்றும் தெரியவரும்.


4) அப்படித் தெரிய வந்தால், உங்களின் 

தவறான கருத்தை மாற்றிக் கொள்ளுமாறு 

பணிவுடன் வேண்டுகிறேன்.


5) இல்லை, இல்லை, எங்களின் கருத்து சரிதான் 

என்று நீங்கள் கருதுவீர்களென்றால், நான் 

முன்வைத்த உலகப்போர் வராது என்ற தியரி 

தப்பு என்று நிரூபியுங்கள்.


6) இரண்டில் ஒன்று செய்யுங்கள். ஒன்று என்னுடைய 

தியரியை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது 

என்னுடைய தியரி தப்பு என்று நிரூபியுங்கள்.

இதில் எதையும் செய்யாமல், வாயில் 

கொழுக்கட்டையை அடைத்துக்கொண்டு,

மனதில் புழுங்கிக்கொண்டு நாட்பட்ட 

மலச்சிக்கலுக்கு ஆளாகி அவஸ்தைப் படாதீர்கள்.

---------------------------------------------------------------

பின்குறிப்பு:

நாஷ் சமநிலையை உலகப்போருக்குப் 

பொருத்தி, அது பொருந்தும் என்று நிரூபித்தவன் 

நான் ஒருவன் மட்டுமே. 2017ல் வடகொரியாவின் 

அணுவெடிப்பின்போதே நாஷ் சமநிலை குறித்து 

கட்டுரை எழுதினேன் (பார்க்க: அறிவியல் ஒளி 2017)  


மேலும் சத்யம் டிவியின் ஒரு மணி நேர விவாத 

நிகழ்ச்சியில் பங்கேற்று 2018ல் நாஷ் சமநிலை 

பற்றி டிவியில் விளக்கியுள்ளேன். எனவே நாஷ் 

சமநிலை பற்றிக் குறிப்பிடும்போது, மறக்காமல் 

அது என்னுடைய கருத்து (பி இளங்கோ) என்று 

நீங்கள் குறிப்பிட வேண்டும். attribution is necessary. 

பதிப்புரிமையை மீற வேண்டாம். piracy தவிர்க்கவும்.

----------------------------------------------------------------------   

         

  

 


உலகப்போர் ஏன் வராது?
உலகப்போரின் சகாப்தம் முடிந்து விட்டது!
அணுஆயுத உலகப்போருக்கான நிகழ்தகவு  பூஜ்யமே!
------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
முன்குறிப்பு:
நாஷ் சமநிலை பேணப்படும் வரை உலகப்போர் வராது 
(அறிவியல் ஒளி மார்ச் 2022) என்ற என் கட்டுரை
மீதான விளக்கம்.
--------------------------------------------------------------   
இரண்டாம் உலகப்போர் 1945ல் முடிவடைந்தபோது
பாசிசத்தை வீழ்த்திய சோவியத் ஒன்றியம் 
உலக நாடுகளின் மதிப்பைப் பெற்றது. தொடர்ந்து 
முதலாளித்துவ முகாம், சோஷலிச முகாம் என்று 
உலகம் இரண்டு முகாம்களாகச் செயல்பட்டு வந்தது.  
ஐநா சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில், ரத்து 
அதிகாரம் (veto power) உள்ள ஐந்து நாடுகளில் 
சோவியத் ஒன்றியமும் சீனாவும் இருந்தன.

சுருங்கக் கூறின், அமெரிக்கா தலைமையிலான
முதலாளித்துவ முகாம் என்றும் சோவியத் ஒன்றியம் 
தலைமையிலான சோஷலிச முகாம் என்றும் உலகம் 
இரண்டு முகாம்களாகப் பிளவுபட்டுக் கிடந்தது.
அமெரிக்கா சோவியத் ஆகிய நாடுகளுக்கு இடையில்
பனிப்போர் (cold war) எனப்படும் கெடுபிடிப்போர் 
நடந்து கொண்டே இருந்தது.

ஆனால் 1990ன் தொடக்கத்தில், சோவியத் ஒன்றியம்
உடைந்து சிதறியது அதன் குடியரசுகள் அத்தனையும் 
தனி நாடுகள் ஆயின. ரஷ்யாவில் சோசலிசம் 
ஒழிக்கப்பட்டு முதலாளித்துவமும் பல கட்சி
ஆட்சி முறையும் நடைமுறைக்கு வந்தன. 

சீனாவிலும் மாவோவின் மறைவுக்குப் பின்னர், 
முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் ஏற்படுத்தப் 
பட்டது. எனவே 1990களின் தொடக்கத்தில் உலகில் 
நிலவி வந்த இரண்டு முகாம்கள் என்ற நிலை 
மாறியது. உலகில் சோஷலிச முகாம் இல்லாத 
நிலையில், அமெரிக்கா  தலைமையிலான 
முதலாளித்துவ முகாம் மட்டுமே ஒற்றை முகாமாக
உலகில் நிலவி வருகிறது.

இன்று உலகில் ஒரே ஒரு முகாம்தான். அதுவும் 
முதலாளித்துவ முகாம்தான். உலக வர்த்தகக் கழகத்தில் 
(WTO) இன்று 164 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபா, வெனிசுலா ஆகிய 
நாடுகள் WTOவில் உறுப்பினராக உள்ளன. நாடுகளுக்கு 
இடையிலான வர்த்தகம் உலக மயமாகி உள்ளது.
எந்த ஒரு நாடும் எந்த ஒரு நாட்டிலும் சென்று 
வியாபாரம் செய்யலாம். 

அமெரிக்கா சீனா பனிப்போர் நிலவிய காலத்தில் 
இரு நாடுகளும் அணுஆயுதப் போட்டியில் 
இறங்கின. இன்று அணுஆயுதப் போட்டி எதுவும் 
இல்லை. மாறிய சூழ்நிலையில் அணுஆயுதங்களும் 
தமது முந்தைய பாத்திரத்தை வகிக்க இயலவில்லை.

மேற்கூறிய காரணிகள் அனைத்தையும்  சேர்த்து 
யோசித்துப் பாருங்கள். உலகப்போர் என்பது 
எப்போது வரும்? இரண்டு வலுவாவான எதிரிகள் 
இருந்தால் மட்டுமே ஒரு உலகப் போருக்கான 
முகாந்திரம் இருக்கும்.  இரண்டு வலுவான எதிரிகள்
இருந்தால் மட்டுமே ஒரு உலகப்போர் வரும்.

இன்றைய உலகில் கடும் முரண்பாடுகளைக் கொண்ட,
அதாவது தீவிரமான பகை முரண்பாடுகளைக் 
கொண்ட, ஒருவருக்கொருவர் எதிரிகளான இரண்டு 
நாடுகளோ, இரண்டு முகாம்களோ இருக்கின்றனவா?
இல்லை. எனவே உலகப்போர் எப்படி வரும்? வராது.

இதன் பொருள் போர்களே இல்லாத உலகைச் சமைத்து 
விட்டோம் என்பதல்ல.போர்கள் இருக்கும். ஆனால் 
உலகப் போர் இருக்காது. போர் என்பதும் உலகப்போர் 
என்பதும் வேறு வேறானவை (qualitatively different). 
நாடுகளுக்கு இடையிலான போர் உலகப்போராக 
பரிணமிக்காது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் 
போர் நடைபெற்றது. அது உலகப்போராகி விட்டதா?
இல்லையே!

எனவே உலகப்போர் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
கணித ரீதியாக இதைச் சொல்வதானால்,  சமகால 
உலகில் எந்த ஒரு நாடும் நாஷ் சமநிலையைப் 
பேணவே விரும்பும்; அதை ஒருபோதும் மீறாது.

ஆக உலகப்போர் வராது.
உலகப்போரின் சகாப்தம் முடிந்து விட்டது.
அணுஆயுத உலகப்போர் என்பதற்கு வாய்ப்பே 
இல்லை. அதற்கான நிகழ்தகவு பூஜ்யம்.
மேலே கூறிய அனைத்தையும் நிரூபித்து 
உள்ளேன். QED.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு: 
எனது தேற்றத்தை DISPROVE செய்ய முன்வருவோரை 
வரவேற்கிறேன்.
*************************************************     
 

     
     

  
 
       
நவீன ராணுவப் போர்த்தந்திரம்!
------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
முன்குறிப்பு:
நாஷ் சமநிலை பேணப்படும் வரை 
உலகப்போர் வராது என்ற என் கட்டுரை 
(அறிவியல் ஒளி ஏடு மார்ச் 2022) மீதான 
எதிர்வினைகளுக்கு எனது பதில்!
-----------------------------------------------------
என்னுடைய கட்டுரையில் கூறப்பட்டுள்ள 
அனைத்தும் நிரூபிக்கப்பட்ட 
உண்மைகளாகும். பைனாமியல்  தேற்றம் 
எவ்வாறு நிரூபிக்கப்பட்ட ஒன்றோ,
டி மோவிர் தேற்றம் (De Moivre's theorem) 
எவ்வாறு நிரூபிக்கப்பட்ட ஒன்றோ, 
அவ்வாறே உலகப்போர் வராது என்பது 
இக்கட்டுரையில் கணித ரீதியாக 
நிரூபிக்கப் பட்டுள்ள ஒன்றாகும்.

இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள 
வேண்டுமெனில், Modern Military Strategy பற்றிய 
தெளிந்த அறிவு வேண்டும். முதலாம் உலகப் 
போர் 1919ல் முடிவடைந்தது. இன்று 
நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. எனவே நூறு 
ஆண்டுக்கு  முந்தி முதலாளித்துவம் எப்படி 
நடந்து கொண்டதோ, அதே போலத்தான் 
இப்போதும் நடந்து கொள்ளும்  என்று 
குட்டி முதலாளித்துவம் கருதுகிறது.

இந்த நூறு ஆண்டுகளின் மாற்றத்தை குட்டி 
முதலாளித்துவம் கணக்கில் எடுக்கவில்லை; 
ஆனால் உலக முதலாளித்துவம் கணக்கில் 
எடுக்கிறது.

எனவே இன்று இந்த 2022ல் உலக 
முதலாளித்துவமோ அல்லது 
ஏகாதிபத்தியங்களோ எப்படி எப்படி காய் 
நகர்த்துகிறார் என்று துல்லியமாகத் தெரிய 
வேண்டும். அதற்குத்தான் Modern Military Strategy 
பற்றி சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். 
அதைத்  தெரிந்து கொள்ளாமல் இந்தக் 
கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது..

உலகெங்கும் உள்ள ராணுவப் பயிற்சிக் 
கல்லூரிகளின் curriculum மற்றும் syllabusல் 
Modern Military Strategy இடம் பெற்று உள்ளது. 
இந்தியாவின் ராணுவப் பயிற்சிக் கல்லூரியான 
IMA எனப்படும் Indian Military Academy
டேராடூனில் உள்ளது. அங்கு ராணுவ 
அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் கல்வியிலும் 
பயிற்சியிலும் 
அ) Modern Military Strategy 
ஆ) Nash equilibrium
இ) Game theory
ஈ) MAD doctrine ஆகியவையெல்லாம் உள்ளன.

அவற்றில் ஒரு முழுமையான அறிவு இருந்தால் 
மட்டுமே உலக முதலாளித்துவம் இன்று 
என்ன செய்யும், அதன் போர்த்தந்திரம் என்ன 
என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.

எனவே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ 
என்ற ரீதியில் எதையேனும் கூறுவது நகைப்புக்கு 
இடமாகும். உரிய பதில் சொல்ல இயலாமல், 
திருத்தல்வாதம் என்று கூறுவது சொற்காமுகம் 
(phrase mongering) ஆகும். அது கேலிக்கிடமாகும்.
     
எனவே இன்றைய சூழலில் உலக முதலாளித்துவ 
முகாமில் உள்ள எந்த ஒரு state actorம் அதாவது 
எந்த ஒரு நாடும் நாஷ் சமநிலையை மீற இயலாது.

இன்று உலகில் ஒரே ஒரு முகாம்தான் 
உள்ளது. லெனின், ஸ்டாலின் காலத்திலும் 
மாவோ காலத்திலும் உலகில் இரண்டு 
முகாம்கள் இருந்தன. முதலாளித்துவ 
முகாம், சோஷலிச முகாம் என்று இரண்டு 
முகாம்கள். ஒன்றுக்கொன்று பகையான 
இரண்டு முகாம்கள். இன்று ஒரே ஒரு 
முகாம்தான்.  எனவே நாஷ் சமநிலையை 
மீறுவதற்கான probability குறைவு.

இதற்கு முன்பு வடகொரியா அணுவெடிப்புச் 
சோதனையை நடத்தியபோது, 2017ல் 
நாஷ் சமநிலை மீறப்படாது என்று அறிவியல் ஒளி 
ஏட்டில் நீண்டதொரு கட்டுரை எழுதினேன். நான் 
சொன்னது உண்மை ஆனது. 
நான் சொன்னதை மீறி எதுவும் நடக்கவில்லை.

எனவே நாஷ் சமநிலையை எவரும் மீறப் 
போவதில்லை. எனவே உலகப்போர் 
வரப்போவதில்லை.
இதை நிரூபித்துள்ளேன்.
(புள்ளியியல் ரீதியாகவும்  கணித ரீதியாகவும்)

உங்களில் யார் வேண்டுமானாலும் இதை 
disprove செய்யலாம். உலகப்போர் வருமா 
என்று கேட்டால் இது ஒரு science subject. உலக 
முதலாளித்துவம் எப்படிக் காய் நகர்த்தும் 
என்பது பற்றிய அறிவுடைமை இல்லாமல் 
இதற்குப் பதிலளிக்க இயலாது.

மேலும் இது ஒரு pure science subject  
என்பதாலும் Modern Military Strategy இதில் 
உள்ளடங்கி இருப்பதாலும், எல்லோராலும் 
இதற்கு விடை சொல்ல இயலாது 
என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். 
---------------------------------------------------------------   
  
    
   
      

நவீன ராணுவப் போர்த்தந்திரம்!
------------------------------------------------
என்னுடைய கட்டுரையில் கூறப்பட்டுள்ள 
அனைத்தும் நிரூபிக்கப்பட்ட 
உண்மைகளாகும். பைனாமியல்  தேற்றம் 
எவ்வாறு நிரூபிக்கப்பட்ட ஒன்றோ,
டி மோவிர் தேற்றம் (De Moivre's theorem) 
எவ்வாறு நிரூபிக்கப்பட்ட ஒன்றோ, 
அவ்வாறே உலகப்போர் வராது என்பது 
இக்கட்டுரையில் கணித ரீதியாக 
நிரூபிக்கப் பட்டுள்ள ஒன்றாகும்.

இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள 
வேண்டுமெனில், Modern Military Strategy பற்றிய 
தெளிந்த அறிவு வேண்டும். முதலாம் உலகப் 
போர் 1919ல் முடிவடைந்தது. இன்று 
நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. எனவே நூறு 
ஆண்டுக்கு  முந்தி முதலாளித்துவம் எப்படி 
நடந்து கொண்டதோ, அதே போலத்தான் 
இப்போதும் நடந்து கொள்ளும்  என்று 
குட்டி முதலாளித்துவம் கருதுகிறது.

இந்த நூறு ஆண்டுகளின் மாற்றத்தை குட்டி 
முதலாளித்துவம் கணக்கில் எடுக்கவில்லை; 
ஆனால் உலக முதலாளித்துவம் கணக்கில் 
எடுக்கிறது.

எனவே இன்று இந்த 2022ல் உலக 
முதலாளித்துவமோ அல்லது 
ஏகாதிபத்தியங்களோ எப்படி எப்படி காய் 
நகர்த்துகிறார் என்று துல்லியமாகத் தெரிய 
வேண்டும். அதற்குத்தான் Modern Military Strategy 
பற்றி சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். 
அதைத்  தெரிந்து கொள்ளாமல் இந்தக் 
கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது..

உலகெங்கும் உள்ள ராணுவப் பயிற்சிக் 
கல்லூரிகளின் curriculum மற்றும் syllabusல் 
Modern Military Strategy இடம் பெற்று உள்ளது. 
இந்தியாவின் ராணுவப் பயிற்சிக் கல்லூரியான 
IMA எனப்படும் Indian Military Academy
டேராடூனில் உள்ளது. அங்கு ராணுவ 
அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் கல்வியிலும் 
பயிற்சியிலும் 
அ) Modern Military Strategy 
ஆ) Nash equilibrium
இ) Game theory
ஈ) MAD doctrine ஆகியவையெல்லாம் உள்ளன.

அவற்றில் ஒரு முழுமையான அறிவு இருந்தால் 
மட்டுமே உலக முதலாளித்துவம் இன்று 
என்ன செய்யும், அதன் போர்த்தந்திரம் என்ன 
என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.

எனவே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ 
என்ற ரீதியில் எதையேனும் கூறுவது நகைப்புக்கு 
இடமாகும். உரிய பதில் சொல்ல இயலாமல், 
திருத்தல்வாதம் என்று கூறுவது சொற்காமுகம் 
(phrase mongering) ஆகும். அது கேலிக்கிடமாகும்.
     
எனவே இன்றைய சூழலில் உலக முதலாளித்துவ 
முகாமில் உள்ள எந்த ஒரு state actorம் அதாவது 
எந்த ஒரு நாடும் நாஷ் சமநிலையை மீற இயலாது.

இன்று உலகில் ஒரே ஒரு முகாம்தான் 
உள்ளது. லெனின், ஸ்டாலின் காலத்திலும் 
மாவோ காலத்திலும் உலகில் இரண்டு 
முகாம்கள் இருந்தன. முதலாளித்துவ 
முகாம், சோஷலிச முகாம் என்று இரண்டு 
முகாம்கள். ஒன்றுக்கொன்று பகையான 
இரண்டு முகாம்கள். இன்று ஒரே ஒரு 
முகாம்தான்.  எனவே நாஷ் சமநிலையை 
மீறுவதற்கான probability குறைவு.

இதற்கு முன்பு வடகொரியா அணுவெடிப்புச் 
சோதனையை நடத்தியபோது, 2017ல் 
நாஷ் சமநிலை மீறப்படாது என்று அறிவியல் ஒளி 
ஏட்டில் நீண்டதொரு கட்டுரை எழுதினேன். நான் 
சொன்னது உண்மை ஆனது. 
நான் சொன்னதை மீறி எதுவும் நடக்கவில்லை.

எனவே நாஷ் சமநிலையை எவரும் மீறப் 
போவதில்லை. எனவே உலகப்போர் 
வரப்போவதில்லை.
இதை நிரூபித்துள்ளேன்.
(புள்ளியியல் ரீதியாகவும்  கணித ரீதியாகவும்)

உங்களில் யார் வேண்டுமானாலும் இதை 
disprove செய்யலாம். உலகப்போர் வருமா 
என்று கேட்டால் இது ஒரு science subject. உலக 
முதலாளித்துவம் எப்படிக் காய் நகர்த்தும் 
என்பது பற்றிய அறிவுடைமை இல்லாமல் 
இதற்குப் பதிலளிக்க இயலாது.

 

போலிக்கம்யூனிஸ்டுகளின் போர்க்குணமற்ற 
பொருள்முதல்வாதத்தை 
ஆர் எஸ் எஸ்சின் கருத்துமுதல்வாதம் வீழ்த்தி விட்டது!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
லெனின் மிக அழகாகச் சொன்னார்:  
போர்க்குணமற்ற பொருள்முதல்வாதத்தை மிக 
எளிதில் கருத்துமுதல்வாதம் வென்று விடும் என்று.

(போர்க்குணமற்ற பொருள்முதல்வாதம்) 
போராடி வாகை சூடும் ஒன்றாக இல்லாமல் 
போராடி வீழ்த்தப்படும் ஒன்றாக இருக்கும் 
என்றார் லெனின்.

தமிழகத்தின் பிரபலமான போலிக் கம்யூனிஸ்ட் 
கட்சிகளான CPI, CPM கட்சிகள் மெலிதானதும் 
மிகவும் மேம்போக்கானதுமான பொருள்முதல் 
வாதத்தையே கைக்கொண்டிருந்தன.

இவ்வளவு வலுவிழந்த பொருள்முதல்வாதத்தை 
ஆர் எஸ் எஸ்சின் வலிமையான கருத்துமுதல்வாதம் 
எளிதில் வீழ்த்தி விட்டது.

கோடானுகோடி மக்கள் கடவுளை வணங்குகிறார்கள்.
தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை கடவுளிடம்,
மதங்களிடம், பொளிச் சாமியார்களிடம் 
தேடுகிறார்கள். இது அவர்களின் பின்தங்கிய 
உணர்வுநிலையைக் காட்டும். 

பரந்துபட்ட மக்களின் உணர்வுநிலையை 
மேம்படுத்தவும் அதை முற்போக்கானதாக 
ஆக்கவும் பாடுபட வேண்டியது மார்க்சிஸ்டுகளின் 
கடமை. இதற்கு மாறாக, மார்க்சிஸ்ட் கட்சியானது 
மக்களின் பின்தங்கிய உணர்வுநிலைக்கு வால் 
பிடிப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

ஆன்மிகத்தில் தீர்வு இல்லை என்றும் 
மார்க்சியத்தில் மட்டுமே தீர்வு உள்ளது என்றும்
மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய மார்க்சிஸ்டுகள் 
தாங்களே ஆன்மிகத்தில் தீர்வை நாடி நிற்பது 
எவ்வளவு கேலிக்கூத்து!
-------------------------------------------------------------------------------- 
           


 வெடித்துச் சிதறக் காத்திருக்கும் திருவாதிரை!
---------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------

வியாழன், 24 மார்ச், 2022

 வெண்பா வெண்பா வெண்பா!

-----------------------------------------------

கொரோனா பற்றிய உலகின் முதல் வெண்பா!

---------------------------------------------------------------

செத்தொழி ஓடிவிடு பீடைக் கொரோனாவே  

இத்தேயம் தன்னில் உனக்கென்ன வேலை 

புறந்தூய்மை தன்னில் உலகின் தலையாய்    

அறமுடையிந் நாட்டிலில்கொ ரோன.   

---------------------------------------------------


10ஆம் வகுப்புக் கணக்கு வெண்பாவாக!

----------------------------------------------------------------

ஐம்பத் திரண்டுள கட்டில் இருந்து 

உருவுக ஒன்றை அதுமன் னருமிலை

ஏஸ்எனும் எல்லை அதீதமும் இல்லை

பிறிது நிகழ்தகவு சொல். 

-----------------------------------------------------


மக்கட்பேறு பற்றிய வெண்பா!

-----------------------------------------------

ஆணும் அழகும் புணர்வதில் இன்பம் 

புணர்ந்தே புதல்வரைக் கொள்வதில் இன்பம் 

வலிவுறு மாநிலம் ஓங்கிடச் செய்யும்

புலிநிகர் மைந்தர் பொலிவு.

----------------------------------------------------



திங்கள், 21 மார்ச், 2022

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை 
மூடத்தனமாக எதிர்க்கும் கருவின் குற்றங்களே,
கோழைகளே! உங்களின் பதில் என்னடா?
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
1) கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ்காரர். பாஜக 
எதிர்ப்பாளர். கேம்பிரிட்ஜில் படித்தவர். இவர் 
சொல்லுகிறார்: மின்னணு வாக்குப் பதிவு 
எந்திரங்கள் பாதுகாப்பானவை என்று.

2) அசதுதீன் ஒவாய்சி ஹைதரபாத்காரர்.  
மஜ்லிஸ் கடசித்த தலைவர்; பாஜகவை தீவிரமாக 
எதிர்ப்பவர். இவர் லண்டனில் சென்று பாரிஸ்டர் 
பட்டம் பெற்றவர். இவர் கூறுகிறார்: EVM எந்திரங்கள் 
பாதுகாப்பானவை. அவற்றில் யாரும் எந்த மோசடியும் 
செய்ய முடியாது என்று.

3) டாக்டர் பிரணாய் ராய் யார் தெரியுமா? மெத்தப் 
படித்தவர். இவர் NDTV என்னும் ஆங்கிலTVயின் அதிபர். 
இந்தியாவின் முதல் செபாலஜிஸ்ட். இவர் VERDICT 
என்னும் ஆங்கில நூலை எழுதியுள்ளார். அதில் அவர் 
கூறுகிறார்: இந்தியாவின் EVM எந்திரங்கள் மிகவும் 
பாதுகாப்பானவை; அவற்றில் யாரும் எந்த 
மோசடியும் செய்ய முடியாது என்று.    

4) எத்தனை பேர் எடுத்துச் சொன்னாலும் 
தமிழ்நாட்டில் உள்ள கூமுட்டைகள், படித்த முட்டாள் 
மற்றும் படிக்காத முட்டாள் என்று சகல தரப்பினரும் 
EVMகளில் மோசடி செய்ய முடியும் என்று சொல்லிக் 
கொண்டு இருக்கிறார்கள். 

5) அச்சு ஊடகம், மின்னணு ஊடகம், சமூக ஊடகம் 
ஆகிய மூன்று விதமான ஊடகங்களிலும், EVMகள் 
பாதுகாப்பானவை என்றும் அவற்றில் யார் எவரும் 
எந்த மோசடியும் செய்ய முடியாது என்றும் விளக்கி 
நிறைய வீடியோக்களை நியூட்டன் அறிவியல் 
மன்றம் வெளியிட்டு உள்ளது. அறிவியல் ஏடுகளில் 
கட்டுரை எழுதியுள்ளது. சமூக ஊடகங்களில் 
தீவிரமாக எழுதி உள்ளது.

6) EVMகள் பாதுகாப்பற்றவை என்று பிதற்றித் திரியும் 
கோழைகள் நியூட்டன் அறிவியல் மன்றம் முன்வைத்த 
எந்தவொரு அறிவியல் உண்மையையும் மறுக்கவில்லை;
மறுக்க இயலவில்லை. அவர்கள் தொடுத்த கேள்விகளின் 
முதுகெலும்பை முறிக்கும் பதில்களை நியூட்டன் அறிவியல் 
மன்றம் கொடுத்துள்ளது.
 

7) தங்களின் தரப்பில் வைக்கப்பட்ட தர்க்கம், வாதம்
உள்ளிட்ட அனைத்தும் பொய் என்று நிரூபிக்கப் 
பட்ட பின்னரும் அறிவியலை எதிர்க்கும் 
முட்டாள்களான EVM எதிர்ப்பாளர்கள் திருந்தவில்லை.
அவர்கள் கருவின் குற்றங்கள்; நேர்மையற்றவர்கள்.
தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இழிந்த கோழைகள்.

8) நியூட்டன் அறிவியல் மன்றம் முன்வைத்த 
உண்மைகளை கோழைகளும் கருவின் 
குற்றங்களுமான அஞ்ஞானப் பீடைகள் 
இன்று வரை மறுக்கவில்லை; மறுக்க இயலவில்லை.
கோழைகளே, இப்போது கூட நீங்கள் மறுக்கலாம்,
உங்களின் மூளையில் ஏதாவது கனம் இருந்தால். 
************************************************
       
 
தற்குறித் தனத்தின் உச்சம் தொட்ட
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ஊழியர்!
மானமும் அறிவும் இல்லாத ஹோமியோபதி முட்டாள்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
மார்ச் 8ஆம் தேதி சென்னையில் ஒரு அரசியல் வகுப்பு
நடைபெற்றது. ஒரு மார்க்சிய லெனினியக் கட்சி
நடத்திய அரசியல் வகுப்பு அது. மொத்தம் 13 பேர்
வந்திருந்தனர்.

வகுப்பு எடுத்தவரை எனக்கு நன்றாகத் தெரியும்.
அவர் பெயர் தோளர் துலுக்காணம்! அந்த ஆள் ஒரு
ஹோமியோபதி மருத்துவர்..அப்படியானால் BHMS
மருத்துவப் பட்டப் படிப்பு படித்த மருத்துவர் என்று
கருதிவிடக் கூடாது.

நமது ஆள் துலுக்காணம் SSLC பெயிலாகப் போனவர்.
1969ல் SSLC தேர்வு எழுதியபோது கணக்கு, ஆங்கிலம்,
அறிவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் அவருக்குப்
பிடுங்கி விட்டது. செப்டம்பர் எழுதினார்; அதே
ரிசல்ட்தான். அத்தோடு படிப்புக்கு முழுக்குப் போட்டு
ஹோமியோபதி வைத்தியராகி விட்டார். அதாவது
போலி வைத்தியராகி விட்டார்.

இவர் அன்று (மார்ச் 8) நடத்திய அரசியல் வகுப்பு ஐந்து
மாநிலத் தேர்தல் முடிவுகளும் பாஜகவும் என்ற பொருள்
பற்றியது. மார்ச் 10, 2022 அன்று ஐந்து மாநிலத் தேர்தல்களின்
முடிவு வெளிவந்தது. இவரின் வகுப்பு அதற்கு முந்தியது;

அடித்துப் பேசிய முக்கியமான விஷயம்!
----------------------------------------------------------------
அரசியல் வகுப்பில் துலுக்காணம் அடித்துப் பேசினார்.
தற்குறிகளுக்கே உரிய, அறிவுக்கு ஒவ்வாத ஒரு
முரட்டுத்தனம் அவரின் பேச்சில் மேலோங்கி நின்றது.

உத்தரக் காண்டிலும் கோவாவிலும் பாஜக தோற்கும்
என்றும் காங்கிரஸ்தான் அங்கு ஆட்சிக்கு வரும் என்றும்
துலுக்காணம் கூறினார். பஞ்சாப்பில் தொங்கு சட்டமன்றம்
அமையும் என்றும் காங்கிரஸ் அதிக இடங்களைப்
பெறும் என்றும் ஆருடம் கூறினார் துலுக்காணம்.

உபியில் செத்தாண்டா சாமியாரு என்று உற்சாக
மிகுதியில் கூவினார் துலுக்காணம். பாஜக மந்திரி ஒரு
கயவாளிப்பய காரை ஏத்தி ஒரு ஆளக் கொண்ணுருக்கான்;
விவசாயிகள் சும்மா விட மாட்டான் பாரு! ஆதித்தனாரின்
குண்டி வேட்டியை உருவி விட்டுருவான் பாரு என்றார்
துலுக்காணம். யோகி ஆதித்யநாத்தின் பெயரை
ஆதித்தனார் என்றே உச்சரித்தார் துலுக்காணம்.
SSLC பெயிலாகிப்போன ஒரு தற்குறியிடம் என்ன
பெரிய உச்சரிப்புத் தெளிவை எதிர்பார்க்க முடியும்?


தொடர்ந்து வகுப்பை நடத்திய துலுக்காணம் உபியில்
7 கட்டமாகத் தேர்தல் நடைபெறுவது தேவையற்றது.
தமிழ்நாட்டில் ஒரு கட்டமாகத்தானே 2021 தேர்தல்
நடைபெற்றது. பாஜவுக்குச் சாதகமாக வேண்டுமென்றே
இப்படி 7 கட்டமாகத் தேர்தலை நடத்துகிறது தேர்தல்
கமிஷன் என்றார் துலுக்காணம். பாஜகவுக்கு ஆதாயம்
கிடைப்பதற்காகவே 7 கட்டத் தேர்தல் என்று அடித்துப்
பேசினார் துலுக்காணம்.

துலுக்காணம் சொல்வது உண்மையா? பரிசீலிப்போம்.
அடைந்த காலத் தேர்தல்களை பரிசீலிப்போம்.
2007ல் 7 கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
07.04.2007 முதல் 08.05.2007 வரை ஏழு கட்டங்களாக
தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மாயாவதி
முதல்வர் ஆனார்.

2012லும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
பெப்ரவரி 8 முதல் மார்ச் 3 வரை 7 கட்டத் தேர்தல்.
இத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் முதல்வர் ஆனார்.

2017 தேர்தல் முந்திய தேர்தல்களைப் போலவே
பெப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக
நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜகவின் யோகி
ஆதித்யநாத் முதல்வர் ஆனார்.

2022 தேர்தலும் முந்திய தேர்தல்களைப் போலவே
பெப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக
நடைபெற்றது.

உபியில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற
நான்கு சட்டமன்றத் தேர்தல்களுமே 7 கட்டங்களாகவே
நடைபெற்றுள்ளன என்று பார்த்தோம். ஆனால்
குட்டி முதலாளித்துவத் தற்குறி, என்ன கூறுகிறான்
என்று பாருங்கள்.

அறியாமையே சகல தீமைகளுக்கும் தாய் என்றார்
சாக்ரட்டீஸ். அதற்கு கண்கண்ட சாட்சி யாரென்றால்
புழுத்த தற்குறி துலுக்காணம்தான். இவனெல்லாம்
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டாம்! ஈனப்பயல்கள்.
----------------------------------------------------------
பின்குறிப்பு;
மார்க்சிஸ்ட் அல்லாத ஹோமியோபதி வைத்தியர்களை
இப்பதிவு குறிப்பிடவில்லை. எனவே அவர்கள் இதில் வருந்த
ஒன்றுமில்லை. ஹோமியோபதியை ஆதரிக்கும் எந்த
மார்க்சிஸ்டும் பதிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்க மாட்டான்.
திருடனைத் தேள் கொட்டினால் அவன் கத்த முடியுமா?
மார்க்சியம் ஹோமியோபதியை ஏற்கவில்லை. எனவே
வெளிப்படையாக ஹோமியோபதியை ஆதரிக்கத்
தைரியம் இல்லாத மூடர்கள் மார்க்சிஸ்டுகள் நடுவே உண்டு.

பின்குறிப்பு-2:
2ஆம் பத்தியில் தோளர் துலுக்காணம் என்று எழுதப்
பட்டதில் எழுத்துப்பிழை எதுவும் இல்லை.
********************************************************
வெறிபிடித்த ஒரு பாஜக மந்திரி விவசாயிகளின் மீது 
கார் ஏற்றிக் கொன்ற கொடூரம் நிகழ்ந்த இடமான 
லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள 
8 தொகுதிகளிலும் பாஜக வென்றது எப்படி?
--------------------------------------------------------------------- 
உபி இந்தியாவின் ஆகப்பெரிய மாநிலம். மக்கள்தொகை 
22 கோடி. வாக்காளர்கள் 15 கோடி. 2022 சட்ட மன்றத் 
தேர்தலில் வாக்குப் பதிவு 60 சதவீதம்.

உபியில் மொத்தம் மாவட்டங்கள். அதில் ஒன்று 
லக்கிம்பூர் கெரி. அந்த மாவட்டத்தில் பின்வரும் 
8 சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன.

1) பலியா 2) நிகாஷன் 3) கோலா கோகர்நாத் 4) ஸ்ரீநகர் 
5) தௌரஹ்ரா 6) லக்கிம்பூர், 7) கஸ்தா 8) முஹம்மதி.
(Palia, Nighasan, Gola Gokarnath, Sri Nagar, Dhaurahra, 
Lakhimpur, Kasta, and Mohammadi)

இந்த 8 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
அமோகமான வெற்றி. மிக அதிகமான வாக்கு 
வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் இந்த எட்டிலும் டெபாசிட் இழந்துள்ளது.

தொகுதி: பலியா 
ஹெச் குமார் சஹ்னி (பாஜக) = 1,18,864 (50.2%)
பி எஸ் கக்கு (சமாஜ்வாதி) = 80,735 (34.1%)
ஜாஹிர் உசைன் (பகுஜன்) = 27,849 (11.76%)
ரிஷால் அஹமது (காங்) = 4514 (1.91%)
பாஜக 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

சமாஜ்வாதி, பகுஜன், காங்கிரஸ் ஆகிய மூன்று 
கட்சிகள் பெற்ற வாக்குகளைக் கூட்டினாலும்,
அப்போதும் பாஜக கட்சிதான் 5000க்கும் மேலான 
வாக்குகள் அதிகம் பெற்று நிற்கிறது.

காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்து கேவலப் பட்டு 
உள்ளது. பிரியங்கா காந்தி உபியில் 209 பேரணிகளை 
ROAD SHOWக்களை நடத்தினார். அதன் பிறகும் 
காங்கிரஸ் வெறும் 4514 வாக்குகளை மட்டுமே 
பெற்றுள்ளது.    

இன்னொரு தொகுதியைப் பார்ப்போம்.
தொகுதி: லக்கிம்பூர் 
யோகேஷ் வர்மா (பாஜக) = 1,27,663 (47.38%)
உகாஸ் வி மாதுர் (சமாஜ்) = 1,07,085 (39.74%)
மோகன் பாஜ்பாய் (பகுஜன்) = 24,014 (8.91%)
ரவிசங்கர் திருவேதி (காங்) = 2834 (1.05%)

பாஜக 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
காங்கிரஸ் வெறும் ஒரு சதவீதம் வாக்குகளை 
மட்டுமே பெற்று கேவலப்பட்டது.

மொத்த உபியிலும் காங்கிரஸ் 2.34 சதவீதம் 
வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இடங்களைப் 
பொறுத்தமட்டில் 2 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

மந்திரி கார் ஏத்தி விவசாயியைக் கொண்ணு போட்டான்!
மந்திரி மகன்தான் கார ஒட்டினானாம்!
அரெஸ்ட் பானு! ஜாமீன் கொடுக்காதே!

ஆனால் உபியில் லக்கிம்பூர் கெரியில் காங்கிரசின் 
முழக்கங்களும் போலி முற்போக்குகளின் வெறிக் 
கூச்சல்களும் எடுபடவில்லை. காரணம் அவற்றில் 
உண்மை மருந்துக்கும் இல்லை என்று விவசாயிகள் 
அறிவார்கள்.

லக்கிம்பூர் கெரியில், ஒரு விவசாயி கார் ஏற்றிக் 
கொல்லப்பட்ட இடத்தில் எப்படி அத்தனை 
இடங்களையும் பாஜக ஜெயித்துள்ளது?
இக்கேள்விக்கு மெய்யான விடையை அறியாமல் 
யாரும் அரசியல் செய்ய முடியாது.
*******************************************************