ஞாயிறு, 31 மார்ச், 2019

செயற்கைக்கோள் நிபுணர்கள் கவனத்திற்கு!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
பறந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளை
நடுவானில் ஓர் ஏவுகணை மூலம் அண்மையில் இந்தியா
அழித்தது. மிஷன் சக்தி என்று இந்நிகழ்வுக்குப்
பெயரிடப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து முகநூலில் அநேகர்
செயற்கைக்கோள்கள் பற்றியும் ஏவுகணை பற்றியும்
அரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். தடுக்கி விழுந்தால்
முகநூலில் ஏவுகணை நிபுணர்கள் மீதுதான் விழ
வேண்டும் என்ற நிலை இருந்தது.

நியூட்டன் அறிவியல் மன்றம் இதை வரவேற்கிறது.
செயற்கைக்கோள் குறித்த பேரார்வம் மக்களுக்கு
இருக்கையில், அது குறித்த அறிவியல் பதிவுகளைப்
போதிய அளவு எழுதவில்லையே என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் நாணமுறுகிறது.

எனவே செயற்கைக்கோள் குறித்த மிகவும் எளியதொரு
கணக்குடன் நியூட்டன் அறிவியல் மன்றம் தனது
கடமையைச் செய்யத் தொடங்குகிறது.

பின்வரும் கணக்கிற்கு விடை காண்க:
---------------------------------------------------------
ஒரு செயற்கைக்கோள் பூமியை நீள்வட்டப்பாதையில்
சுற்றி வருகிறது. அதன் சேய்மை அண்மை இவற்றுக்கு
இடையிலான வேறுபாடு 30,000 கிமீ. அதன் அரைப்பேரச்சு
16,000 கிமீ. அப்படியானால் சுற்றுப்பாதையின்
மையப்பிறழ்வு என்ன?

கணக்கின் ஆங்கில வடிவம் வருமாறு:
---------------------------------------------------------
The difference between apogee and perigee of an elliptical eccentric orbit
of a satellite is 30,000 km and its semi major axis is 16,000 km.Determine
the eccentricity of the orbit.

The English version of the question alone is valid and binding.

மனிதகுல வரலாற்றில் இதைவிட எளிமையான ஒரு
கணக்கு இருக்க முடியாது. எனவே வாசகர்களிடம்
இருந்து விடைகள் காட்டாற்று வெள்ளமாய் வரும்
என்று நம்புகிறோம்.

இந்தக் கணக்கைச் செய்து செயற்கைக்கோள் பற்றிப்
பேசும் தகுதியைப் பெறுங்கள்.
***************************************************


விண்வெளி யுகமும்
விண்வெளியில் சேரும் குப்பைகளும்!
'மிஷன் சக்தி'யால்  விண்வெளியில்
குப்பை சேரவில்லை, எப்படி?
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
இருபதாம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில்
விண்வெளியுகம் தோன்றியது. 1957 அக்டோபர 4ல்
அன்றைய சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா)
ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில்
செலுத்தியது. அந்த நாள் முதல் விண்வெளி யுகம்
(space age) தொடங்குகிறது.

இந்த பூமிக்கு வெளியே கால் வைப்பதற்கு இடம் கிடைத்தால்
நான் இந்த பூமியைப் புரட்டித்த தள்ளி விடுவேன் என்றார்
ஆர்க்கிமெடிஸ். சொன்ன காலம் பொது சகாப்தத்திற்கு முன்,
பொசமு 3ஆம் நூற்றாண்டில்.

மார்க்சிய மூல ஆசான்களின் காலத்தில் விண்வெளிக்கு
மனிதன் செல்ல முடியும் என்பது இருக்கட்டும், ஒரு
செயற்கைக்கோளை அனுப்ப முடியும் என்ற எண்ணமே
கிடையாது. மார்க்ஸ் 1883ல், எங்கல்ஸ் 1895ல்,
லெனின் 1924ல், ஸ்டாலின் 1954ல் மறைந்த போது
விண்வெளி யுகம் என்ற ஒன்றே தொடங்கி இருக்கவில்லை.

விண்வெளி யுகம் தொடங்கியதை அறிந்த ஒரே ஒரு
மார்க்சிய மூல ஆசான் மாவோ மட்டுமே. மாவோ
மறைந்தது 1976ல். விண்வெளி யுகம் தொடங்கி
19 ஆண்டுகளின் பின் மாவோ மறைந்தார்.

1961 ஏப்ரலில் முதன் முதலில் சோவியத் ஒன்றியத்தின்
யூரி ககாரின் விண்வெளியில் பறந்தார்.அப்போது
சோவியத் அதிபராக இருந்தவர் குருச்சேவ்.

விண்வெளி யுகத்தின் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவும்
சோவியத் ஒன்றியமும் விண்வெளியில் ஆதிக்கம்
செலுத்தின. பின்னர் சீனா இந்தியா ஆகிய நாடுகள்
விண்வெளியில் முன்னணிக்கு வந்தன.

விண்வெளி பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில்,
முதலில் விண்வெளி எப்படி வரையறுக்கப் படுகிறது
என்று தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாமே வெளிதான்
(space) என்றாலும், விண்வெளி என்பதற்கு தனித்த
அர்த்தம் உள்ளது

உலகிலேயே உயர்ந்த மலைச்சிகரம் எவரெஸ்ட் சிகரம்.
இதன் உயரம் என்ன? 8848 மீட்டர்! (எட்டு எட்டா நாலு எட்டு
என்ற வாக்கியத்தை நினைவில் கொள்க). 8848 மீட்டர்
என்பது ஏறத்தாழ 9 கிமீ அல்லது 29,000 அடி  ஆகும்.
எவரெஸ்ட் சிகரத்தை டென்சிங் நார்கே, பச்சேந்திரி பால்
ஆகியோர் எந்த விண்கலத்திலும் பறந்து செல்லாமல்,
மலையேற்றம் மூலமாகவே அடைந்துள்ளனர்.

 சாதாரணமாக ஆகாய விமானங்கள் எவ்வளவு உயரத்தில்
பறக்கின்றன? 35,000 அடி உயரம் என்பது மிகவும்
சம்பிரதாயமான உயரம். இந்த உயரத்தில் பறக்காமல்
இருந்தால் என்ன ஆகும்? 29,000 அடி உயரத்தில் இருக்கும்
இமயமலையில் விமானம் மோதி விடும்.

ஜெட் விமானங்கள் இன்னும் அதிகமான உயரத்தில்
பறக்க வல்லவை. போர் விமானங்கள் சர்வ சாதாரணமாக
50,000 அடி உயரத்தில் பறக்கும். புள்ளி விவரங்களின்படி,
1976ல் ஒரு விமானம் 85,135 அடி உயரத்தில் பறந்திருக்கிறது.
எனினும் ஒவ்வொரு விமானமும் அனுமதிக்கப்பட்ட
உயரத்தில் மட்டுமே (certified altitude) பறக்க வேண்டும்
என்பது விமானப் போக்குவரத்து விதி.

ஏனெனில் விமானத்தில் உயரே செல்லச் செல்ல
1) காற்றின் அடர்த்தி குறைந்து கொண்டே செல்லும்
2) எனவே காற்றில் உள்ள ஆக்சிஜனும் குறைந்து கொண்டே
செல்லும். 3) காற்றின் அழுத்தமும் குறைந்து கொண்டே
செல்லும்.

மேற்கூறிய 3 மட்டுமின்றி இன்னொன்றும் உயரம்
அதிகரிக்க அதிகரிக்கக் குறையும். அது எது?
வாசகர்கள் விடை சொல்ல வேண்டும். சொல்ல
மாட்டீர்கள். எனவே நானே சொல்லி விடுகிறேன்.

வெப்பநிலையும் குறையும் (temperature will decrease).
வெப்பநிலை ஏன் குறைகிறது? அழுத்தம் குறையும்போது
வெப்பநிலையும் குறைய வேண்டும் அல்லவா?
அழுத்தமும் வெப்பநிலையும் ஒன்றுக்கொன்று நேர்விகிதப்
பொருத்தத்தில் உள்ளவை அல்லவா?

அழுத்தம் வெப்பநிலை இரண்டையும் தொடர்பு படுத்தும்
இயற்பியல் விதி என்ன? 9ஆம் வகுப்பில் படித்த
இயற்பியல் பாடம் நினைவுக்கு வருகிறதா?
பாயில் விதி மற்றும் சார்லஸ் விதி (Boyle's law and Charles' law
பற்றிப் படித்ததை நினைவுகூருங்கள். Ideal Gas equation எனப்படும்
PV = nRT என்பதையும் நினைவுகூருங்கள்.

விமானங்கள் பறக்கும் உயரத்தை கிலோமீட்டரில்
கணக்கிடுவோம்.
35,000 அடி என்பது 10.7 கிமீ.
40,000 அடி என்பது 12 கிமீ.
50,000 அடி என்பது 15 கிமீ.
பொதுவாக விமானங்கள் 10 கிமீ முதல் 12 கிமீ
வரையிலான உயரத்தில் பறக்கும்.

இந்த இடத்தில் பூமியின் வளிமண்டலம் (atmosphere) பற்றிய
புரிதல் அவசியம். பூமியின் வளிமண்டலம் அடுக்கடுக்காக
இருக்கிறது. இது பூமியின் மீது போர்த்தப்பட்ட ஒரு கனத்த
கம்பளிப் போர்வையைப் போல பூமியைப் பாதுகாக்கிறது.

வளிமண்டலத்தில் 78 சதம் நைட்ரஜன் மற்றும் 21 சதம்
ஆக்சிஜன் ஆக இவ்விரண்டும் சேர்ந்து மொத்தம் 99 சதம்.
மீதி 1 சதத்தில் பெரும்பகுதி ஆர்கான் என்னும் வாயு.

வளிமண்டலம் 5 அடுக்குகளாக உள்ளது. வளிமண்டலத்தின்
மொத்த நிறையில் ஏறத்தாழ முக்கால் பகுதி முதல் அடுக்கான
troposphere என்ற அடுக்கில் உள்ளது. இந்த அடுக்கு தொடுவானம்
முதல் 12 கிமீ உயரம் வரை பரவி உள்ளது. விமானங்கள்
இந்த அடுக்கில்தான் பறக்கின்றன.

வெளி (space) என்பது பொதுவான பெயர். outer space என்றும்
deep space என்றும் வெளியைப் பிரித்துக் கொள்கிறோம்.
வளிமண்டலத்தையும் விண்வெளியையும் கார்மன் கோடு
(Karman line) என்ற கற்பனைக்கோடு பிரிக்கிறது.இது
100 கிமீ உயரத்தில் வரையப் பட்டுள்ளது.  



சரி, இப்போது விண்வெளிக்  குப்பைக்கு (space debris) வருவோம்.
Every activity in space generates debris.    


  
     

சனி, 30 மார்ச், 2019

மானுட சமூகத்தின் நீண்ட நெடிய வரலாற்றில்
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் (1950 முதல் இன்று வரை
மற்றும் நாளையும் சிறிது காலத்திற்கு) உலகப்போரைத்
தடுத்து நிற்பது அணுகுண்டுகளே. இவை ஒரு அச்சுறுத்தியாக
(deterrent) செயல்படுகின்றன.

நவீன ராணுவப் போர்த்தந்திர சாஸ்திரத்தில் (modern military strategy)
இது தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது (The role of nuclear boms as a
deterrent). MAD policy என்று ஒரு கொள்கை உள்ளது.
இதை அணுஆயுத நாடுகள் கடைப்பிடிக்கின்றன.
MAD = Mutually Assured Destruction என்பதே MAD policy ஆகும்.
பரஸ்பரம் சர்வ நாசம் என்பது இதன் பொருள்.

எனவேதான் அணுஆயுத நாடுகள் அனைத்தும் Nash Equilibrium
என்னும் சமநிலையைக் கடைப்பிடிக்கின்றன. இங்கு நாடுகள்
என்பது state actorsஐ மட்டும் அதாவது இறையாண்மை
உடைய அரசுகளை மட்டுமே குறிக்கும்.

பயங்கரவாதிகள், உதாரணமாக ISIS போன்றோர்
Non state actors என்ற வகைமையில் வருவர். இவர்களிடம்
அணுஆயுதங்கள் சிக்கி விடக்கூடாது என்பதே உலக
நாடுகளின் கவலை.
---------------------------------------------------------------------------------------
2019 நாடாளுமன்றத் தேர்தல்!
வெற்றி யாருக்கு? கருத்துக் கணிப்பு!
20 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு!
அன்புமணி ஜெயிப்பாரா? ஓ பி எஸ் மகன் என்ன ஆவார்?
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
எமது கருத்துக் கணிப்பின் முதல் பகுதியாக
40 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு மட்டும்
கருத்துக் கணிப்பு வெளியிடப் படுகிறது.
இந்த 20 தொகுதிகளுக்கு மட்டுமே களத்தில் இருந்து
எமக்கு உரிய தரவுகள் வந்துள்ளன.

இது முதல்நிலை கருத்துக்கணிப்பு ஆகும்.
எனவே இடையில் நிகழும் மாற்றங்கள் மற்றும்
இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட்டது.

எமது கருத்துக் கணிப்புகளின்
நம்பகத் தன்மை (confidence level)= 95.2 சதம் ஆகும்.
சரித்தன்மை மற்றும் துல்லியம் = 97.4 சதம் ஆகும்.
quantum uncertainty = 2.6 சதம் ஆகும்.

இனி 20 தொகுதிகளின் கணிப்பைப் பார்க்கலாம்.

1) தஞ்சாவூர் ... பழனி மாணிக்கம் திமுக வெற்றி.
2) திருச்சி ..........திருநாவுக்கரசர் காங்கிரஸ் வெற்றி
3) தருமபுரி .......டாக்டர் அன்புமணி பாமக வெற்றி.
4) தேனி.............. தங்க தமிழ்ச்செல்வன் அமமுக வெற்றி.
5) புதுச்சேரி.......வைத்தியலிங்கம் காங்கிரஸ் வெற்றி.

6) திருநெல்வேலி மனோஜ் பாண்டியன் அதிமுக வெற்றி.
7) திண்டுக்கல்  பி வேலுச்சாமி திமுக வெற்றி.
8) விருதுநகர் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் வெற்றி.
9) விழுப்புரம் வடிவேல் ராவணன் பாமக வெற்றி.
10) கரூர் தம்பி துரை அதிமுக வெற்றி.

11) மத்திய சென்னை தயாநிதி மாறன் திமுக வெற்றி.
12) வடசென்னை கலாநிதி வீராச்சாமி திமுக வெற்றி.
13) தென்சென்னை அதிமுக வெற்றி.
14) கோயம்புத்தூர் சி பி ராதாகிருஷ்ணன் பாஜக வெற்றி.
15)  

கருத்துக்கணிப்பு மேற்கொண்ட முறை:
--------------------------------------------------------------
மரபார்ந்த கருத்துக்கணிப்புக் கோட்பாடுகளின்
(psephological principles) அடிப்படையில் இக்கணிப்பு
மேற்கொள்ளப் படவில்லை. மாறாக, quantum predictions
என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இக்கணிப்பு
மேற்கொள்ளப் படுகிறது. quantum predictions என்ற
கோட்பாடு நியூட்டன் அறிவியல் மன்றம் சொந்தமாக
உருவாக்கியுள்ள கோட்பாடாகும்.

மனித சிந்தனையை ஒரு cognitive variableஆக எடுத்துக்
கொண்டு, வாக்களிப்பது என்னும் decision makingஐ
ஒரு cognitive processஆக எடுத்துக் கொண்டு, இவை
அனைத்தும் quantum theoryக்கும், அதன் inherentஆக உள்ள
quantum uncertaintyக்கும் உட்பட்டவை என்ற அடிப்படையை
வைத்துக் கொண்டு, physical eventsஐ இவற்றுடன் பொருத்திப்
பார்த்து இந்தக் கணிப்பு மேற்கொள்ளப் படுகிறது.

மனிதகுல வரலாற்றிலேயே quantum predictions என்ற
கோட்பாட்டின் அடிப்படையில் கருத்துக் கணிப்பை
மேற்கொள்ளுவது நியூட்டன் அறிவியல் மன்றமே.    

அடுத்தடுத்த பட்டியல்களை களத்தில் இருந்து
தரவுகள் வெளியானவுடன் காணலாம்.
***************************************************

விண்வெளியில் குப்பை சேரவில்லை!
----------------------------------------------------------
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது;
News 18ல் ஊடகச் செய்தியாளர்கள் அறிவியல்
அறியாதவர்கள். தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதையில்
வெறும் 274 கிமீ உயரத்தில் (altitude) நடைபெற்றதுதான்
இந்த நிகழ்வு.

விண்வெளியில் ஒரு நிலையத்தை நிறுவி இருக்கிறோம்.
1998ல் நிறுவப்பட்ட இந்த நிலையம் (International Space Station)
300 கிமீ உயரத்தில் உள்ள ஒரு சுற்றுப்பாதையில் சுற்றி
வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான விண்வெளிச்
சோதனைகள் நிகழ்த்தப் படுகின்றன. இதனால்
ஏற்படாத குப்பைகள் ஒரு kinetic kill நிகழ்வால்
ஏற்படுகிறது என்பது அறிவீனம்.

274 கிமீ உயரத்தில் உண்டாக்கப்படும் குப்பைகள்
விண்வெளியில் மிதக்கக் கூடியவை அல்ல. அவை
பூமிக்கு வந்து சேர்ந்து விடும். அல்லது வரும் வழியிலேயே
எரிந்து சாம்பலாகி விடும். எனவே விண்வெளியைக்
குப்பை ஆக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
பூமியின் ஈர்ப்புவிசை 274 கிமீ உயரத்தில் மட்டுமல்ல.
அதற்கு மேலும் ஆட்சி செலுத்துகிறது. எனவே 274கிமீ
உயரத்தில் உண்டாக்கப்பட்ட குப்பை விண்வெளியில்
மிதந்து கொண்டு இருக்க முடியாது.

அருள்கூர்ந்து அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை
வெளியிடும் செய்திகளை புறக்கணிக்குமாறு
வேண்டுகிறோம்.

தோழமையுள்ள,
நியூட்டன் அறிவியல் மன்றம்.




அணுகுண்டுப் பூச்சாண்டி!
-----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------
இரண்டாம் உலகப் போர் 1939-45 ஆண்டுகளில் நடந்தது.
தற்போது இந்த 2019ல் 73 ஆண்டுகள் கடந்து விட்டன இரண்டாம்
உலகப்போர் நடந்து.

ஏன் ஒரு மூன்றாம் உலகப்போர் நடக்கவில்லை?
நடக்காது. ஏனெனில் அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டு
விட்டன. உலகில் எட்டு நாடுகள் அணுகுண்டு வைத்து
இருக்கின்றன.

ஆம், உலக அமைதிக்குக் காரணம் அணுகுண்டுதான்.
பயங்கரமான பேரழிவு ஆயுதமான அணுகுண்டுதான்
உலகப்போர் வராமல் தடுத்து நிற்கிறது.

இந்த உண்மையை முதன் முதலில் சொன்னது
நியூட்டன் அறிவியல் மன்றம்தான். இதை விளக்கி
பல்வேறு கூட்டங்களில் பேசியுள்ளேன்.

நாஷ் சமநிலை (Nash equilibrium) உலகில் பேணப்படுகிறது.
எனவே எந்த நாடும் அணுகுண்டை ஒரு போரில்
பயன்படுத்தாது.

ஒருகாலத்தில் அணுகுண்டுத் தொழில்நுட்பம்தான்
உலகின் தலைசிறந்த முதல்தர தொழில்நுட்பமாக
இருந்தது. இன்று அதெல்லாம் காலாவதி ஆகிவிட்டது.

அப்படியானால், இன்று உலகின் முதல்தரத்
தொழில்நுட்பம் எது? வேறு எதுவும் இல்லை;
ஏவுகணைத் தொழில்நுட்பம்தான்.

இந்தியாவில் இதற்கு வித்திட்ட டாக்டர் அப்துல் கலாம் மிகப்
பொருத்தமாகவே missile man என்று அழைக்கப்
பட்டார்.

நியூட்டன் அறிவியல் மன்றம் இப்பொருளில் எழுதியுள்ள
கட்டுரைகளைப் படியுங்கள். தெளிவு கிடைக்கும்.
********************************************************      

முற்றிலும் தவறான செய்தி!
உண்மை அறியுங்கள் ஊடக நண்பர்களே!
----------------------------------------------------------------
ஒரு தொகுதியில் 384 பேர் போட்டியிட்டாலும்
மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலமே
தேர்தல் நடக்கும்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
1) 2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாடு முழுவதும் உள்ள
543 தொகுதிகளிலும் EVM மூலமாகத் தேர்தல் நடைபெற
உள்ளது.

2) EVMகள் மூன்று வகையானவை. அவை: M-1, M-2, M-3 ஆகியவை. 
2014 தேர்தல் வரை M-1 மற்றும் M-2 வகை எந்திரங்கள்
பயன்படுத்தப் பட்டன. ஆனால் 2019 தேர்தலில் M-3 வகை
எந்திரங்கள் மூலம் தேர்தல் நடக்கும்.

3) இந்திய நாடு முழுவதும், நாடாளுமன்றத் தேர்தலில்
சுமார் 10.6 லட்சம் வாக்குச் சாவடிகள் (Polling Booths)
அமைக்கப் பட உள்ளன. இவற்றில் பயன்படுத்திட
பின்வரும் EVM யூனிட்டுகள் தயாராக உள்ளன.

6) வாக்களிக்கும் பகுதி (Ballot Unit) = 22.3 லட்சம் (M-3 வகை)
கட்டுப்பாடு யூனிட் (Conttrol Unit) = 16.3 லட்சம் (M-3 வகை)
VVPAT = 17.3 லட்சம் (M-3 வகை)
என்ற எண்ணிக்கையில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம்
EVMகள் உள்ளன. இவை அனைத்தும் M-3 வகை
எந்திரங்கள் ஆகும்.

7) M-1 மற்றும் M-2 வகை எந்திரங்கள் 2019 நாடாளுமன்ற மற்றும்
சட்டமன்றத் தேர்தல் பயன்பாட்டில் இல்லை. அவை
தேர்தல் ஆணையத்தின் பரணில் அடுக்கப் பட்டுள்ளன.

8) M-3 வகை எந்திரங்களில், ஒரு தொகுதியில் 384 வேட்பாளர்
வரை நிற்கலாம். ஒரு பாலட் யூனிட்டில் 16 வேட்பாளர்கள்
வரை இடம் பெறுவர். 24 பாலட் யூனிட்களை ஒன்றிணைப்பதன்
மூலம் 384 வேட்பாளர்கள் வரை (நோட்டா உட்பட )
(24 x 16 = 384) ஒரு தொகுதியில் உள்ளடக்கலாம்.

9) பழைய M-1 மற்றும் M-2 வகை எந்திரங்களில் ஒரு
தொகுதியில் EVM பயன்படுத்தப்பட வேண்டும் என்றால்,
வேட்பாளர்களின் எண்ணிக்கை 64 அல்லது 64க்குள்
இருக்க வேண்டும். அனால் இந்த M-3 வகை எந்திரங்களில்
வேட்பாளர்களின் எண்ணிக்கை 384 வரை இருந்தாலும் ,
EVM மூலமாகவே தேர்தல் நடத்த முடியும்.

10) அறிவியல் ஒளி பெப்ரவரி 2019 சிறப்பு மலரில்
வெளியாகி உள்ள நியூட்டன் அறிவியல் மன்றம்
எழுதியுள்ள மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலுமா என்ற கட்டுரையை
ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.
***********************************************

வெள்ளி, 29 மார்ச், 2019

செயற்கைக்கோள் தகர்ப்பு : இந்திய அவசரத்தின் காரணம்.
நாசா, சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இருக்கிறது. 2028ஆம் வருடம் அனுப்ப வேண்டும் என திட்டம் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்க, அமெரிக்க ஜனாதிபதி, 2024ஆம் ஆண்டே அனுப்ப வேண்டும் என தேதியை நான்கு வருடம் முன்னோக்கி நகர்த்தி இருக்கிறார்.
இந்த தேதி முன்னகர்த்தல் நாசா உட்பட அனைவரையும் ஆச்சரியப்படுத்திய அதே சமயத்தில், பெரும் விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது - அதாவது, இது சாத்தியப்படுமா, தேவைப்படும் அதிகப்படியான பணத்தை காங்கிரஸ் ஒதுக்குமா - போன்ற விவாதங்கள். (நோட் - ராகுல் காங்கிரஸ் அல்ல, அமெரிக்க காங்கிரஸ்)!
அமெரிக்க அதிபர், தாம் இரண்டாம் முறை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப் படுவோம் என தீவிரமாக நம்புகிறார். அதனால், அவர் பதவியின் இறுதியில் இந்த சாதனை நிகழ்ந்தால், விண்வெளி வரலாற்றில் இன்னுமொரு மையில்-கல்லை எட்ட டிரம்ப் உதவினார் என வரலாறு பேசும் என்பது அவர் எண்ணம்.
மற்றொரு விஷயம், சீனா, விண்வெளி ஆதிக்கம் செலுத்துவதில் நான்கு-கால் பாய்ச்சலில் சென்று கொண்டு இருக்கிறது. அது, அமெரிக்காவை முந்தி விடக் கூடாது என்பத்தில் டிரம்ப் கவனமாக இருக்கிறார்.
ரஷ்யா இப்போது பிரச்சனையே இல்லை. இதில் பார்க்கப்பட வேண்டிய விஷயம், சீனாவுடன் போட்டி போட இந்தியா இருக்கிறது - அமெரிக்கவுக்கு இணையாக விண்வெளி ஆதிக்கம் செலுத்த சீனா முனைய, சீனாவிற்கு இணையாக ஆதிக்கம் செலுத்த இந்தியா முனைய, சீனாவுக்கு போட்டியாக இந்தியா வருவது நல்லதுதான் என அமெரிக்கா நினைக்க, நிக்சன் காலத்து இந்திய வெறுப்பை அமெரிக்கா கைவிட்டு, இந்தியாவிற்கு சர்வதேச அளவில் ஆதரவாக செயல்பட - ஒரு முக்கோணக் காதல் போல, ஒரு முக்கோண வால்பிடிகள் நடக்கிறது.
இப்போது Mission Shakti எனும் பெயரில் இந்தியா, தன் 740 கிலோ எடை உள்ள, 300 கிலோமீட்டர்கள் உயரத்தில் இருந்த செயற்கைக் கோளை தகர்த்து இருக்கிறது. விஞ்ஞான உலகில் இந்த செயற்கைக் கோள் தகர்ப்புக்கு எதிர்ப்பு இல்லை, காரணம் 2007 ஆம் ஆண்டு சீனா செய்ததைப் போல பைத்தியக்காரத் தனத்தை இந்தியா செய்யவில்லை, தகர்ந்த செயற்கைக்கோளின் குப்பைகள் இரண்டே மாதத்திற்குள் சுவடே இல்லாமல் காணாமல் போய்விடும். சீனாவின் சோதனையால் விளைந்த குப்பைகள் இன்னமும் பூமியை சுற்றிக்கொண்டு இருக்கின்றன.
இந்தியாவின் Mission Shakti, அமெரிக்கா, 2008 ஆம் ஆண்டு நடத்திய Burnt Frost exerciseக்கு இணையானது. இந்த Burnt Frost exercise உருவாக்கிய விண்வெளிக் குப்பை சுவடு தெரியாமல் அழிய 18 மாதங்கள் ஆனது.
இந்திய செயற்கைக்கோள் தகர்ப்புக்கு அமெரிக்கா லேசாக முணுமுணுத்தது, அதோடு சரி. இதனை இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டும் - முன்பு முணுக் என்றால் பொருளாதாரத் தடை பேசிய அமெரிக்காவா இது?
சீனாவின் ASAT ஆயுதங்கள் இதுவரை, அமெரிக்க செயற்கைக் கோள்களை நோக்கியே இருந்தது, இனி, இந்தியாவின் செயற்கைக் கோள்களை நோக்கியும் இருக்க வேண்டும்.
எதிர்காலப் போர்களில், ஒரு நாட்டின் செயற்கைக் கோளகள்தான், அதன் கண்களாகவும், காதுகளாகவும் இருக்கும். எதிரி நாட்டின் செயற்கைக் கோள்கள் அழிக்கப்பட்டால், அவை குருடாகவும், செவிடாகவும் ஆகிவிடும், பிறகு வெல்வது எளிது.
மேலும், செயற்கைக் கோள் தகர்ப்பு என்பது, ஏவுகணைப் பாதுகாப்பின் முதற்படி. ஒரு செயற்கைக் கோள், எந்தப் பாதையில் சுற்றுகிறது, என்ன வேகத்தில் சுற்றுகிறது, எந்த நேரத்தில் எந்த இடத்திற்கு வரும் என எல்லாம் முதலிலேயே தெரிந்திருக்கும், ரேடார் வைத்து துல்லியமாக கண்காணிக்க முடியும். ஏவுகணை என்பது எப்போது எதிரியால் ஏவப்படும் எனத் தெரியாது, ரேடாரில் மிகச் சிறியதாகதான் தெரியும். அதனை ட்ராக் செய்து அழிப்பது, செயற்கைக் கோளை அழிப்பதை விட சற்று கடினம். ஏவுகணை வந்து தாக்கும் முன்னரே, அதனை வானிலேயே அழிக்க உதவும் ஒரு missile shield system தான் அடுத்த படி.
இந்தியா ICBM எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதா? - இதற்கு நேரடி பதில் : இல்லை, மறைமுகமாக அதற்கு கொஞ்சம்-கொஞ்சமாக முயற்சித்துக் கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம். இஸ்ரேலுடன் எந்த அளவிற்கு இந்தியா ஒட்டுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் அந்தத் தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவை அடைந்துவிடும்.
சரி.
தேர்தல் திருவிழா நடக்கும் காலத்தில் தான் இந்தியா இந்த செயற்கைக் கோள் தகர்ப்பு திட்டத்தை செயற்படுத்த வேண்டுமா? கொஞ்சம் தள்ளிப் போட்டு இருக்கலாமே எனும் விமர்சனம் இந்திய அரசியல்வாதிகளாலும், மீடியாவிலும் வைக்கப்படுகிறது.
NPT - Non-Proliferation Treaty - அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் என்று ஒன்று இருக்கிறது, அது ஜனவரி 1967 ஆம் ஆண்டுக்கு முன் அணு வெடிப்பு சோதனை நடத்திய நாடுகளுக்கு தனி அதிகாரத்தையும், மற்ற நாடுகளுக்கு குறைந்த அதிகாரத்தையும் அளிக்கும் ஒப்பந்தம். இதில் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா, தெற்கு சூடான் தவிர ஏனைய 190 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. இதன் படி, ஜனவரி 1967க்கு முன் அணு வெடிப்பு சோதனை நடத்திய நாடுகளுக்கு விசேஷ அந்தஸ்து உண்டு, அவை அணு வெடிப்பு சோதனைகள் நடத்தலாம், மற்ற நாடுகள் நடத்தக் கூடாது.
இந்தியா இதில் இடம் பெற வேண்டும் என்பதற்காக அபோதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஷ்திரி அணு வெடிப்பு சோதனை செய்ய முயன்றார், அது நனவாகும் முன்னமே அவர் இறந்தார். ஒருவேளை, அவர் தாஷ்கண்ட்டில் இறக்காமல் இருந்திருந்தால் அப்போதே அணு வெடிப்பு நடந்து இந்தியா NPTயின் வீட்டோ அதிகாரத்துடன் கூடிய முழு உறுப்பினர் ஆகி இருக்கும். அது நடக்காமல் போனதால், இன்று வரை இந்தியா உறுப்பினராக முடியவில்லை - முட்டுக்கட்டை போடும் ஒரே நாடு - சீனா!
அதே போல, செயற்கைக் கோள் தகர்ப்பை கட்டுப்படுத்தும், அது தொடர்பான சோதனைகளையோ, வெடிப்புகளையோ நடத்திடக் கூடாது எனும் ASAT Ban மற்றும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது குறித்தான ஒப்பந்தம் கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி ஒரு உலகளாவிய ஒப்பந்தம் வந்து, அதில் இதுவரை சோதனை செய்யாத நாடுகள் இனி சோதனை செய்யக்கூடாது என ஒரு ஷரத்து வருமானால் இந்தியாவிற்கு பெரும் இழப்பு. இந்தியர்கள் ஏற்கனவே விண்வெளிப் பயணங்கள் செய்துவிட்ட படியால், அது பிரச்சனை இல்லை. அமெரிக்கா இதனை கவனத்தில் கொண்டே, இரண்டாவது சந்திர விஜயத் தேதியைப் பற்றி சந்திக்கிறது.
இப்போது இந்தியா முதற் சோதனையிலேயே செயற்கைக் கோள் தகர்ப்பில் தன் திறனை உலகிற்கு பறைசாற்றி விட்டது. இனி, அப்படி ஒரு ஒப்பந்தம் வந்தாலும், இந்தியா, வீட்டோ அதிகாரத்துடன் கூடிய முழு உறுப்பினராக இருக்கும்.
NPT மற்றும் ஐநா நிரந்தர உறுப்பினர் பதவிகளில் சொதப்பியது போல, இனி இந்தியா மந்தமாக இருக்காது என்றும் உலகிற்கு சொல்லியாகி விட்டது.
இப்போது, விண்வெளிப் பரப்பில் ஆயுத சோதனைகள் நடத்தக் கூடாது என்று ஐநாவில் ஒரு தீர்மானமும், PPWT - Proposal of Placement of Weapons Treaty எனும் விண்வெளி ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தை தீவிரமாக முன்னெடுக்கும் நாடு எது தெரியுமா?
சீனா!
இப்போது புரிந்ததா - இந்தியா ஏன் அவசர-அவசரமாக தேர்தல் காலம் என்று பார்க்காமல் ஒரு பெரும் கொள்கை முடிவை எடுத்து செயலில் இறங்கியது என்று!
PPWT ஒப்பந்தம் எப்போது தீர்மானமாகி, நடைமுறைக்கு வரும்?
இது மில்லியன் டாலர் கேள்வி - நாளையும் வரலாம், அடுத்த வருடமும் வரலாம்.
எப்போது வேண்டுமானாலும் வரட்டும், இனி இந்தியாவை ஒதுக்கி வைத்து விட்டு, இந்த ஒப்பந்தம் செயற்பாட்டிற்கு வர முடியாது!
.
விண்ணில் பறக்கும் செயற்கைக்கோளைத்
தாக்கி அழிக்கும் ஏவுகணை!
(அறிவியல் ஒளிக்கு அனுப்பிய கட்டுரையில் இருந்து
சில பகுதிகள்! முழுக்கட்டுரையையும் வெளியிட இயலாது)
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
ஒரு மரத்தின் கிளையில் சில காக்கைகள் அமர்ந்திருக்கின்றன.
பறவைகளைச் சுடும் துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவர்
அக்காக்கைகளில் ஒன்றைச் சுட்டு வீழ்த்துகிறார்.

காக்கை மட்டுமின்றி, குருவி, புறா, கொக்கு ஆகிய
பறவைகளை கவண் முதல் துப்பாக்கி வரையிலான
கருவிகளைக் கொண்டு சுட்டு வீழ்த்துவது பல்லாயிரம்
ஆண்டுகளாக மனிதர்களின் பழக்கமாக இருந்து வருகிறது.
மகாபாரதம் கூறும் பிரசித்தி பெற்ற அர்ச்சுனன்-கிளி கதை
இவற்றுள் தொன்மையானது.

இந்த அனைத்துக் கதைகளிலும் வரும் பறவைகள்
எல்லாம் நிலையாக ஓரிடத்தில் இருப்பவை (stationary).
அதாவது இவை நகர்பவை அல்ல (not in motion ).
பறக்கும் கிளியை அர்ச்சுனன் வீழ்த்தினான் என்று
கதை இல்லை. மரக்கிளையில் சிவனே என்று
இருக்கும் கிளியைத்தான் அர்ச்சுனன் வீழ்த்தினான்.
ஏனெனில் துரோணர் காலத்தில் ஒரு நகரும் பொருளை
வீழ்த்தும் தொழில்நுட்பம் இல்லை. அதற்கான
அறிவியலும் இல்லை.

நகரும் பொருட்களை (objects in motion)  பற்றிய கணித அறிவு
17ஆம் நூற்றாண்டு வரையிலான மானுடத்திடம் இல்லை.
எண் கணிதம்,வடிவியல், அல்ஜீப்ரா, முக்கோணவியல்
ஆகிய கணிதத்துறைகள் அனைத்துமே நிலையாக
இருக்கும் பொருட்களை (stationary quantities) பற்றியதுதான்.

17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான், ஒருபுறம் நியூட்டனும்
மறுபுறம் லீபினிட்சும் (Gottfried Leibniz) தத்தம் சொந்த முயற்சியில்
ஒருவரை ஒருவர் சாராது கால்குலசைக் கண்டுபிடித்தனர்.
கால்குலஸ் என்பது நகரும் பொருட்களைப் பற்றிய
கணிதம் ஆகும். இயங்கிக் கொண்டிருக்கும் பொருட்களின்
மீதான கணித விசாரணையே (mathematical investigation
over the moving quantities) கால்குலஸ் ஆகும். ஆக அல்ஜிப்ராவும்
வடிவியலும் தங்களின் தாடையை உடைத்துக்
கொண்டும் தீர்வு காண இயலாத சிக்கல்களுக்கு நகரும் கணிதமான கால்குலஸ் மட்டுமே தீர்வு அளித்தது.

வீழ்த்தப்பட்ட செயற்கைக்கோள் எந்த நாட்டினது?:
------------------------------------------------------------------------
இந்திய விண்வெளி வரலாற்றில் மார்ச் 27, 2019 என்பது
சிறப்புக்குரிய ஒரு நாள் ஆகும். ஒடிஷா மாநிலத்தின்
பாலசோர் கடற்கரைக்கு அருகில் வங்கக் கடலில் ஒரு
சிறிய தீவு உள்ளது. அத்தீவுக்கு விஞ்ஞானி
அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

அன்று காலை 11.10 மணிக்கு அத்தீவில் இருந்து,
இடை மறித்துத்தாக்கும் ஓர் ஏவுகணை (interceptor missile)
புறப்பட்டு, விண்ணில் பறந்து கொண்டிருந்த ஒரு
செயற்கைக்கோளைத் தாக்கி அழித்தது.
மிஷன் சக்தி (Mission Shakthi) என்று பெயரிடப்பட்ட
இந்நிகழ்வு வெற்றி அடைந்து வரலாற்றில் இடம் பெற்றது.

இந்த மொத்த நிகழ்வும் மூன்று நிமிடத்திற்குள் நடந்து முடிந்து
விட்டது. அழிக்கப்பட்ட செயற்கைக்கோளும் நம்முடையதுதான்.
ஜனவரி 24, 2019ல் இஸ்ரோவால் ஏவப்பட்ட மைக்ரோசேட்
எனப்படும் (Microsat-R) 740 கிலோகிராம் நிறையுள்ள
புவி கூர்நோக்கு செயற்கைக்கோளே அது.

274 கிமீ உயரத்தில் தாழ்நிலை புவி சுற்றுப்பாதையில் (LEO)
நொடிக்கு 7.8 கிமீ வேகத்தில் புவியைச் சுற்றி வந்தபோது இது அழிக்கப்பட்டது.
******************************************************************

வியாழன், 28 மார்ச், 2019

விண்ணில் பறக்கும் செயற்கைக்கோளைத்
தாக்கி அழிக்கும் ஏவுகணை!
--------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
ஒரு மரத்தின் கிளையில் சில காக்கைகள் அமர்ந்திருக்கின்றன.
பறவைகளைச் சுடும் துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவர்
அக்காக்கைகளில் ஒன்றைச் சுட்டு வீழ்த்துகிறார்.

காக்கை மட்டுமின்றி, குருவி, புறா, கொக்கு ஆகிய
பறவைகளை கவண் முதல் துப்பாக்கி வரையிலான கருவிகளைக்
கொண்டு சுட்டு வீழ்த்துவது பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களின்
பழக்கமாக இருந்து வருகிறது. மகாபாரதம் கூறும் பிரசித்தி பெற்ற
அர்ச்சுனன்-கிளி கதை இவற்றுள் தொன்மையானது.

இந்த அனைத்துக் கதைகளிலும் வரும் பறவைகள்
எல்லாம் நிலையாக ஓரிடத்தில் இருப்பவை (stationary).
அதாவது இவை நகர்பவை அல்ல (not in motion ).
பறக்கும் கிளியை அர்ச்சுனன் வீழ்த்தினான் என்று
கதை இல்லை. மரக்கிளையில் சிவனே என்று
இருக்கும் கிளியைத்தான் அர்ச்சுனன் வீழ்த்தினான்.
ஏனெனில் துரோணர் காலத்தில் ஒரு நகரும் பொருளை
வீழ்த்தும் தொழில்நுட்பம் இல்லை. அதற்கான அறிவியலும் இல்லை.

நகரும் பொருட்களை (objects in motion)  பற்றிய கணித அறிவு
17ஆம் நூற்றாண்டு வரையிலான மானுடத்திடம் இல்லை.
எண் கணிதம்,வடிவியல், அல்ஜீப்ரா, முக்கோணவியல்
ஆகிய கணிதத்துறைகள் அனைத்துமே நிலையாக
இருக்கும் பொருட்களை (stationary quantities) பற்றியதுதான்.

17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான், ஒருபுறம் நியூட்டனும்
மறுபுறம் லீபினிட்சும் (Gottfried Leibniz) தத்தம் சொந்த முயற்சியில்
ஒருவரை ஒருவர் சாராது கால்குலசைக் கண்டுபிடித்தனர்.
கால்குலஸ் என்பது நகரும் பொருட்களைப் பற்றிய
கணிதம் ஆகும். இயங்கிக் கொண்டிருக்கும் பொருட்களின்
மீதான கணித விசாரணையே (mathematical investigation over the moving quantities)
கால்குலஸ் ஆகும். ஆக அல்ஜிப்ராவும் வடிவியலும் தங்களின்
தாடையை உடைத்துக் கொண்டும் தீர்வு காண இயலாத சிக்கல்களுக்கு நகரும் கணிதமான கால்குலஸ் மட்டுமே தீர்வு அளித்தது.

தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள்:
--------------------------------------------------------------
ஒரு செயற்கைக் கோள் என்பது நகரும் பொருள்
(moving object). அது ஒருபோதும் நிலையாக
ஓரிடத்தில் நிற்பதில்லை. செயற்கைக் கோள்கள்
பலவகையானவை. அவற்றின் சுழற்சி வேகமும்
அவ்வாறே வேறுபடுபவை.

சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி
நடைபெறுகிறது. இதை உலகின் அனைத்துத்
தொலைக்காட்சிகளும் ஒளிபரப்புகின்றன.
இந்த ஒளிபரப்புக்குப் பயன்படும் செயற்கைக் கோள்கள்
எவை? இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்
(communication satellites) எனப்படும்.

ஆரம்ப கால "இன்சாட்" முதல் அண்மையில் (பெப்ரவரி 2019)
விண்ணில் செலுத்தப்பட்ட GSAT-31 வரை இவை அனைத்துமே
தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள்தான். இவை பொதுவாக
பூமத்திய ரேகைக்கு மேல் 36,000 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்
படுகின்றன. இவற்றின் சுற்றுப்பாதை புவிநிலைப்புச் சுற்றுப்பாதை (geostationary orbit) எனப்படும்.

இந்த செயற்கைக்கோள்கள் எவ்வளவு வேகத்தில்
சுற்றுகின்றன? வேகம் என்பது உயரத்தைப் பொறுத்துத்
தீர்மானிக்கப் படுகிறது. 36,000 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்
பட்ட செயற்கைக் கோள்கள் மணிக்கு 11,300 கிமீ வேகத்தில்
சுற்றுகின்றன.

தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதை:
---------------------------------------------------
உளவு பார்க்கும் செயற்கைக்கோள்கள் (reconnaissance satellites),
பூமியைக் கூர்நோக்கி ஆய்வு செய்யும் கூர்நோக்கு
செயற்கைக் கோள்கள் (Earth observational satellites)  ஆகிய
செயற்கைக்கோள்களும் உண்டு. இவை தகவல்
தொடர்பு செயற்கைக் கோள்கள் போல 36,000 கிமீ
உயரத்தில் நிலைநிறுத்தப் படுபவை அல்ல.
மாறாக மிக மிகக் குறைவான உயரத்தில்
நிலைநிறுத்தப் படுபவை. 200 கிமீ உயரம் முதல் 2000 கிமீ
உயரம் வரை என்ற வரம்புக்குள் இவற்றின் சுற்றுப்பாதை
அமையும். இச்சுற்றுப்பாதை தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதை
(Low Earth Orbit) எனப்படும்.

உளவு செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்படும்
உயரம் மிகவும் குறைவு என்பதால், இந்த செயற்கைக்
கோள்கள் அதிக வேகத்தில் சுற்ற வேண்டும். அதாவது
தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களின் வேகமான
மணிக்கு 11,300 கிமீ என்பதை விட மிகவும் அதிகமாக இருக்க
வேண்டும்.

எனவே உளவு செயற்கைக் கோள்கள் மணிக்கு 28,000 கிமீ
வேகத்தில் சுற்ற வேண்டும். அதாவது தகவல் தொடர்பு
செயற்கைக்கோள்களின் வேகத்தை விட இரண்டரை
மடங்கு வேகத்தில் சுற்ற வேண்டும்.

குறைந்த உயரத்தில் தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதையில்
(Low Earth Orbit) சுற்றும் செயற்கைக் கோள்கள் அதிக வேகத்தில்
சுற்ற வேண்டும் என்பது செயற்கைக்கோளின் இயக்கம்
பற்றிய விதி. உயரம் அதிகரிக்க அதிகரிக்க செயற்கைக்கோளின் வேகத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

உளவு செயற்கைக்கோளின் வேகம் மணிக்கு 28,000 கிமீ என்பதை
ஒரு வினாடிக்கு 8 கிமீ வேகம் என்று புரிந்து கொண்டால்,
விஷயத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.. அதாவது ஒரு வினாடி
நேரத்துக்குள் இந்த உளவு செயற்கைக் கோள் 8 கிமீ தூரம் நகர்ந்து விடும்.

எனவே இதை வீழ்த்த எண்ணும் ஒருவரிடம் அதிதுல்லியக் கணக்கீடு இருத்தல் வேண்டும். உதாரணமாக சென்னை எழும்பூரில் செயற்கைக்கோள்
இருக்கிறது என்ற கணிப்பில் ஒரு வினாடி பிசகினால் கூட,
8 கிமீக்கு அப்பாலுள்ள மாம்பலத்திற்கு செயற்கைக்கோள்
சென்று விடும்; வீழ்த்த முடியாது. இந்தச் சூழலில்தான், செயற்கைக்கோளை வீழ்த்திய இந்தியாவின் சாதனையை எடைபோட்டுப் பார்க்க வேண்டும்.

வீழ்த்தப்பட்ட இலக்கு குறித்த விவரங்கள்:
-----------------------------------------------------------------
இந்திய விண்வெளி வரலாற்றில் மார்ச் 27, 2019 என்பது
சிறப்புக்குரிய ஒரு நாள் ஆகும். ஒடிஷா மாநிலத்தின் பாலசோர் கடற்கரைக்கு அருகில் வங்கக் கடலில் ஒரு சிறிய தீவு உள்ளது. அத்தீவுக்கு விஞ்ஞானி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அன்று காலை 11.10 மணிக்கு அத்தீவில் இருந்து, இடை மறித்துத்தாக்கும் ஓர் ஏவுகணை (interceptor missile) புறப்பட்டு, விண்ணில் பறந்து கொண்டிருந்த ஒரு செயற்கைக்கோளைத் தாக்கி அழித்தது. மிஷன் சக்தி (Mission Shakthi) என்று பெயரிடப்பட்ட இந்நிகழ்வு வெற்றி அடைந்து வரலாற்றில் இடம் பெற்றது.

இந்த மொத்த நிகழ்வும் மூன்று நிமிடத்திற்குள் நடந்து முடிந்து
விட்டது. அழிக்கப்பட்ட செயற்கைக்கோளும் நம்முடையதுதான்.
ஜனவரி 24, 2019ல் இஸ்ரோவால் ஏவப்பட்ட மைக்ரோசேட் எனப்படும்
(Microsat-R) 740 கிலோகிராம் நிறையுள்ள புவி கூர்நோக்கு
செயற்கைக்கோளே அது. 274 கிமீ உயரத்தில் தாழ்நிலை புவி சுற்றுப்பாதையில் (LEO) நொடிக்கு 7.8 கிமீ வேகத்தில் புவியைச் சுற்றி வந்தபோது இது அழிக்கப்பட்டது.

மிஷன் சக்தி என்னும் இந்தத் தொழில்நுட்பச் செயல்பாடு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால்
(DRDO) மேற்கொள்ளப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டுத்
தொழில்நுட்பத்தால் ஆனது என்று DRDOவின் தலைமை
இயக்குனர் ஜி சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

300 விஞ்ஞானிகள் மற்றும் DRDO ஊழியர்கள் ஒன்றிணைந்து
இத்திட்டத்தில் பணியாற்றினர். இந்த இடைமறித்துத் தாக்கும்
ஏவுகணை 18 டன் நிறை கொண்டது. நம்மிடம் உள்ள
பிருத்வி ஏவுகணை 80 கிமீ உயரத்தில் உள்ள இலக்கைத்
தாக்கி அழிக்கும். இது 300 கிமீ உயரத்தில் உள்ள
இலக்கைத் தாக்கி அழிக்கும். இதுவரை
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள்
மட்டுமே இத்திறனைப் பெற்றிருந்தன. இந்த வரிசையில்
நான்காவதாக இந்தியா இணைந்துள்ளது.

விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோளை குறிபார்த்துத்
தாக்கி அழிப்பது எளிதல்ல. தற்போது அழிக்கப்பட்ட
செயற்கைக்கோள் வினாடிக்கு 7.8 கிமீ வேகத்தில் (மணிக்கு 28000 கிமீ)
புவியைச் சுற்றுவது; 740 கிலோகிராம் நிறை மட்டுமே கொண்டது.
பரந்த விண்வெளியில் இது ஒரு சிறு புள்ளி போலத்தான்
தெரியும். ஒரு நாளில் 10 நிமிடம் மட்டுமே இந்தச் செயற்கைக்கோள்
இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும். இலக்கை ஊடறுப்பதற்கு (intercepting the target) ஒரு வினாடிக்கும்  குறைவான நேரமே
நமக்குக் கிடைக்கிறது. செயற்கைக்கோளுக்கும் ஏவுகணைக்கும்
இடையிலான சார்புத் திசைவேகம் (relative velocity) வினாடிக்கு
10 கிமீ ஆகும். ஒருபுறம் செயற்கைக்கோளின் குறைந்த நிறையம்
மறுபுறம் அதன் அதிக வேகமும் அதன் இடத்தைக் கண்டறிந்து
(detecting) தாக்கி அழிப்பதை  மிகவும் கடினமானதாக ஆக்குகிறது.

எந்த எரிபொருளையோ வெடிமருந்தையோ பயன்படுத்தி
இச்செயற்கைக்கோள் அழிக்கப் படவில்லை அதிவேகத்தில்
செல்லும் செயற்கைக்கோளின் இயங்கு சக்தியைப் பயன்படுத்தியே
(kinetic energy) இது அழிக்கப்பட்டது.

நம் நாட்டை வேவு பார்க்கும் நோக்கத்துடன் எந்தவொரு
செயற்கைக்கோளோ அல்லது ஏவுகணையோ இந்திய
வான் எல்லைக்குள் நுழைந்தாலும் அது உடனடியாக
சுட்டு வீழ்த்தப்படும் என்ற எச்சரிக்கையை மிஷன் சக்தி
உலகிற்கு உணர்த்தி உள்ளது. இந்திய விஞ்ஞானிகளின்
ஆற்றலும் அர்ப்பணிப்பும் குன்றிலிட்ட விளக்காய் ஒளிர்கிறது.
*****************************************************************

  











    







    .

         
மிஷன் சக்தி மீது என்ன குறை காணலாம் என தேச விரோதிகள் சிலர் கேள்விகளை எழுப்புகிறார்கள், அதற்கு அடியேனின் விளக்கம்.
1) தாழ்வு நிலையில் சுற்றும் செயற்க்கை கோள்களை அழிப்பதில் என்ன பயன் ? ஜியோ ஸ்டேஷநரி எனப்படும் தொலை தூர செயற்க்கை கோள்களை அழிக்க இயலுமா ?
Low Earth Orbit எனப்படும் தாழ்வு நிலையில்தான் உளவு செயற்கைக்கோள்கள் செயல்படும், ஜியோ சாட்டிலைட்டுகள் அதிக சிக்னலை வெளிப்படுத்தும் தட்பவெப்ப மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குதான் பயன்படுத்தப் படுகிறது. ஆகையால் "லோ எர்த் ஆர்பிட்" செயற்க்கைகோள்களை தாக்கி அழிப்பதுதான் இங்கு முக்கியம்.
2) ஏற்கனவே 5000 கிலோமீட்டர் செல்லும் அக்னி 5 ரக ஏவுகணை இருக்கையில் 380 கி.மீ சென்று தாக்குவதில் என்ன பெரிய சாதனை ?
லோ எர்த் ஆர்பிட் செயற்கைக்கோள்கள் மிக வேகமாக நகரக் கூடியவை. 380 கி.மீ உயரத்தில் கிட்டத்தட்ட 2000 கி.மீ பரப்பளவுக்கு மணிக்கு 25000 கிலோமீட்டர் வேகத்தில் நகரும். (ஆம் ஒரு ஃபைட்டர் ஜெட் கூட மணிக்கு 2000 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்லும். உதாரணத்திற்கு "இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்" எனப்படும் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையம் 400 கி.மீ. உயரத்தில் மணிக்கு 28000 கி.மீ. வேகத்தில் செல்கிறது) அகண்ட வானத்தில் அசுர வேகத்தில் நகரும் ஒரு சிறு புள்ளியை சரியாக தாக்கி அழிப்பதற்கு மிகச்சிறந்த கனித அலாகிரதங்கள் தேவைப்படுகின்றன. மிக அதிக வேகம் தேவைப்படுகிறது. இது அசையாமல் நிற்கும் ஒரு இலக்கை அழிப்பது போல் இல்லை. மேலும் புவியீர்ப்பிற்கு எதிராக 380 கி..மீ. உயரத்தில் செல்வது என்பது குறுக்களவில் செல்லும் பல ஆயிரம் கிலோமீட்டருக்கு ஒப்பாகும்.
3) இதில் மோடிக்கு என்ன பெருமை ?
2007 ல் சீனா "ஏண்ட் சாட்டிலைட்' மிசைலை ஏவிய போது உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தன. ஆகையால் இந்த முயற்சியை எடுக்க மோடி அவர்களை போன்ற ஆளுமை கொண்ட தலைவர்களால் மட்டுமே இயலும். விஞ்ஞானிகளின் இந்த முயற்சிக்கு முழு ஒப்புதலை தந்து, ஊக்குவித்து இதை செயல்படுத்தி உள்ளார் மோடி அவர்கள். ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தில் களமிறங்க விஞ்ஞானிகள் ஒப்புதல் கேட்ட போது ஒரு தெளிவில்லாமல் இதை மறுத்து விட்டது காங்கிரஸ் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
4) இதனால் என்ன பயன் ?
இனி வரும் காலங்களில் எல்லாமே மின்னணு போர்கள்தான். போர்களில் செயற்கை கோள்களின் பங்கு மிக முக்கியமானது. நம் இலக்குகளை துல்லியமாக அடையாளம் காணக்கூடிய எதிரி நாட்டு உளவு செயற்கைகோள்கள் நமக்கு மிக மிக அபாயகரமானவை. அவற்றை அவசியப்பட்டால் நம்மால் அழிக்க இயலும் என்பது மிகப்பெரிய தொழில்நுட்பத் திறன். இதை வார்த்தைகளால் விளக்க இயலாது. இதன் மூலம் 130 கோடி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர் நம் விஞ்ஞானிகள். அவர்கள் பாதம் பணிந்து நாம் மேலும் முன்னேறுவோம்.

நாம் இன்றைக்கு நடத்தியிருக்கும் சோதனை ஆனது வான்வெளியிலே சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கை கோளை தாக்கி அழிப்பது.
செயற்கைகோளை தாக்கி அழிக்க அதிவேகத்திலே போய் மோதவேண்டும். அதுவும் சரியான நேரத்திலே. அங்கே குண்டெல்லாம் வீசி அது வெடிக்கட்டும் என காத்திருக்கமுடியாது.
ஏனென்றால் செய்ற்கைகோளும் நகர்ந்து கொண்டே இருக்கும். ஒர் நொடிக்கு 7.8 கிலோமீட்டர் வேகத்திலே நகர்ந்து கொண்டிருக்கும். மணிக்கு 28080 கிலோமீட்டர்கள். 90 நிமிடங்களிலே பூமியை சுற்றி வந்துவிடும்.
இப்படி மணிக்கு இருபத்தெட்டாயிரம் கிலோமீட்டர் வேகத்திலே நகரும் ஒரு பொருளை கீழிருந்து தாக்கி அழிக்க வேண்டும். செயற்கைகோள் என்பது நம்முடைய கார் அல்லது ஆட்டோ அளவுக்குத்தான் அகல நீளமும் இருக்கும். ஆக தாக்கவேண்டிய புள்ளியும் மிகவும் சிறியது.
ஏவுகணை தாக்குதலிலே ஒரு விஷயம் சொல்லுவார்கள். இலக்கை நோக்கி தாக்கும்போது எவ்வளவு சரியாக தாக்கும் என. பொதுவாக இது கிலோமிட்டர்களிலே இருக்கும். அதாவது ஒரு இடத்தை தாக்கினால் அதை சுற்றியுள்ள ஒரு கிலோமிட்டர் இடத்திலே எங்கு வேண்டுமானாலும் விழலாம்.
ஆனா முன்னேறிய நாடுகளோ இதை மீட்டர்களிலே வைத்திருக்கும். 200 மீட்டரிலே இருந்து 500 மீட்டர் வரை என. அமெரிக்காவின் சில ஏவுகணைகள் 90 மீட்டருக்குள் தாக்கும்.
ஆனால் செயற்கைகோளை தாக்கி அழிக்க சில மிட்டருக்குள் இது இருக்கவேண்டும். இல்லாவிடில் தாண்டி போய்விடும். இருபத்தி எட்டாயிரம் கிலோமிட்டர் வேகத்திலே செயற்கைகோள் நகர்ந்து கொண்டிருக்கிறது என ஞாபகம் வைங்க.
இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனா இதை பலமுறை முயன்று 5 தடவையிலே தான் வென்றது.
நாமோ முதல் தடவையிலேயே வென்றிருக்கீறோம்.
இதே போல் செவ்வாய்க்கு கோள் அனுப்பிய போதும் ஒரே தடவையிலே வென்றோம் என ஞாபகம் வைங்க.
சரி இதை எதுக்கு செய்யனும்? மேலே சுத்தும் கோளை அழித்து என்ன பிரயோசனம் அப்படீனா இதே போல் வேகமாக நகரும் ஏவுகணைகளையும் இங்கே சுட்டு வீழ்த்தலாம். அது தான் இதன் முக்கியத்துவம்.
இப்போ சீனா ஒரு ஏவுகணை நம் மீது வீசினா அதை வானிலேயே சுட்டு வீழ்த்த முடியும். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எல்லாமே இந்த செயற்கை கோள் போல நம்முடைய காற்று மண்டலத்துக்கு வெளியே போய்விட்டு திரும்ப கீழிறிங்கி அடிக்கும்.
அதனால் தான் அவைகளை கீழேயே சுட்டு வீழ்த்துவது கடினம். அப்படியே சுட்டாலும் நம் மீதே விழும்.
பதிலுக்கு விண்வெளியிலே அடிச்சு உடைச்சிட்டா? கீழே விழும்போது சாம்பல் கூட இருக்காது.
இதிலே இன்னோர் வெற்றியும் இருக்கிறது.
இப்போதைய சோதனை 300 கிலோமீட்டர் தூரத்திலே செய்யப்பட்டது. மற்ற நாடுகளோ 50-100 கிலோமிட்டரிலே தான் செய்திருக்கின்றன.
உலகிலேயே மூன்று நாடுகளிலே இருந்தது நாம் இப்போது நான்காவது நாடாக சேர்ந்திருக்கிறோம்.
கடைசியாக இதையெல்லாம் மோடி தேர்தலுக்கு செய்கிறார் என்பவர்களிடம் ஆமாம் அதுக்கு என்ன இப்போ?
2007 சீனா இப்படி ஒரு சோதனையை நடத்திய போதும் நம்மிடம் இருப்பதாக சொல்லி சந்தோசப்பட்டார்களே ஒழிய நடத்திக்காட்டவில்லை.
மோடி நடத்திகாட்டியிருக்கிறார்.
இது பாக்கிஸ்தான் நம்மீது ஏவுகணைகளை வீசுவதாக சொன்னதற்கு பதிலடியாக செய்யபட்ட சோதனை.
ஏவுகணை கிளம்பினாலே அப்போதே சுட்டு வீழ்த்தப்படும் என மோடி பதில் சொல்கிறார்.
அது தேர்தலுக்கு என சொன்னால் அப்படி சொல்பவர்கள் யார் என மக்கள் உணரவேண்டும்.
நாட்டின் பாதுகாப்புக்கு செய்யப்படும் சோதனைகளையும் தேர்தல் கீர்தல் என சொன்னால் அது யாருக்கு பலன் என்பதையும் மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.
அடுத்து? அடுத்து என்ன?
வான்வெளியிலே ஒரு ஆராய்ச்சிக்கூடம் தான்.
நன்றி நண்பர் Raja sankarஅவர்களுக்கு
The fresh success of the interceptor missile mission on Sunday has demonstrated the country's capability to neutralise adversarial satellites in space, according to V.K. Saraswat, Scientific Adviser to the Defence Minister.
India has “all the technologies and building blocks which can be used for anti-satellite missions” in the low-earth and polar orbits. However, “India's policy is that it will not weaponise space, and we are committed to the peaceful uses of outer space,” he said.
Out of the six interceptor missions conducted so far by the Defence Research and Development Organisation (DRDO), five have been successful.

“Fantastic success”

Dr. Saraswat, who is also the DRDO Director-General, called Sunday's mission “a fantastic success.” The interceptor boasted new technologies such as directional warhead, fibre-optic gyroscopes and a radio-frequency seeker that guided the interceptor to attack the incoming “enemy missile” at an altitude of 16 km above the Bay of Bengal.
The incoming missile, a modified Prithvi, blasted off at 9.32 a.m. from the launch complex III of the Integrated Test Range at Chandipur, Orissa. It mimicked the trajectory of a ballistic missile with a 600-km range. In no time, radars at different locations swung into action, tracking the “enemy” missile, constructing its trajectory and passing on the information in real time to the Mission Control Centre (MCC) to launch the interceptor, an Advanced Air Defence (AAD) missile. It had a directional warhead to go so close to the adversarial missile before exploding to inflict the maximum damage on it. The interceptor had state-of-the-art guidance systems to achieve a manoeuvrable trajectory.
The MCC identified the attacker as a ballistic missile and assigned it to the Launch Control Centre (LCC) on Wheeler Island. After making quick calculations, the LCC launched the interceptor “right on the dot at the required instant,” Dr. Saraswat said. The AAD soared into the sky at 9.37 a.m. from Wheeler Island to take care of the “threat.”
The interceptor manoeuvred in the direction of the target, which was called the “least energy manoeuvre,” he said. The interceptor raced into the sky at 4.5 Mach. In the terminal phase of the attacker's flight, as it was hurtling towards the earth, the interceptor's radio frequency seeker “acquired the target, rolled the interceptor in the right direction and, when it was a few metres from the target, gave the command to the directional warhead to explode,” Dr. Saraswat explained.
The warhead detonated, blasting the attacker to pieces. The ground-based radars and the sensors on board the targeted missile tracked the debris, which rained down over the Bay of Bengal, “confirming a very good kill,” the DRDO Director-General said. “Based on the data from the target, a 100 per cent kill was achieved.” The radars were located at Konark and Kendrapara, near Paradip, in Orissa.
V.L.N. Rao, Programme Director; Avinash Chander, Director, Advanced Systems Laboratory, DRDO, Hyderabad; K. Sekhar, Chief Controller (Missile Systems and Low Intensity Conflict), DRDO; and S.P. Dash, Director, ITR, were present on Wheeler Island. Defence Minister A.K. Antony congratulated the DRDO missile technologists on the successful demonstration of the ballistic missile defence system.
Dr. Saraswat said the next test would be done later this year to intercept a 2000-km-range incoming missile at an altitude of 150 km. India's plans for putting in place the first phase of the two-layered ballistic missile defence shield by 2012 and the second phase by 2016 were on course. This would be done by integrating it with the Air Defence System of the Indian Air Force and the Army.
Only the U.S., Russia, France, Israel and India have the capability to put in place a ballistic missile defence shield. China is still developing it. It conducted an anti-ballistic missile test on January 11, 2010. The target missile, launched from Xichang, was intercepted and destroyed at an altitude of 700 km by a KT-2 variant missile that took off from near Korla in Xinjiang province. hindu 2011

புதன், 27 மார்ச், 2019

From
P ILANGO SUBRAMANIAN
Retired employee,
Dept of Telecom, Govt of India
Subiksha flats
5/5, sixth street, Sowrashtra Nagar,
Choolaimedu, Chennai 6000 094.

To
Shri C Palanichamy
Inquiry Officer and Sanitary Inspector
Cantonment Board
Wellington 643 242
Tamil Nadu.


Sir,
       sub: consent to function as defence assistant-inquiry against Smt C Gowsalya-reg
       ref: Letter from Smt C Gowsalya dtd 08th March 2019.

I do hereby express my consent to work as defence assistant in the inquiry against
Smt C Gowsalya, Lower Division Clerk under suspension, Cantonment Board,
Wellington 643 242, Tamilnadu.

I am a pensioner aged 65 receiving pension from the Exchequer, Govt of India.
I have served in the Telecom Department, Ministry of Communications and Information
Technology and subsequently in BSNL Tamilnadu circle and Chennai Telephones
and retired in July 2013.

I am not a legal practitioner.

I do hereby certify that this would be the one and only case at my disposal if I am
permitted to offer my services as defence assistant.

I wish to add that in the event of serving as defence assistant in the said inquiry
I wont claim any TA or DA from the Cantonment Board, Wellington for attending
the inquiry.

I have enclosed herewith the copy of my PPO (Pension Payment Order)
and Pan card as proof of identity.

The summons may be sent to me to the address given above or through my
client Smt C Gowsalya.

My email id is ilangophysics@gmail.com
My mobile is 94442 30176.

Thanking you,

Yours truly,
.
(P ILANGO SUBRAMANIAN)

Encl: Copies of my Pension Payment Order and PAN card as proof of identity.

station: Chennai 600 094
date: 27th March 2019.
--------------------------------------------------------------------

From
Smt C Gowsalya
LDC (under suspension)
Cantonment Board
Wellington 643 242
Tamil Nadu.

To
Shri C Palanichamy
Inquiry Officer and
Sanitary Inspector
Cantonment Board
Wellington 643 242
Tamil Nadu.

Respected Sir,

                         sub: nomination of defence assistant-reg
                         ref: Wellington Cantonment Board No. Disciplinary/47/OS dtd 26 March 2019

I am very much thankful to the Appointing and the Disciplinary Authority who had
accepted my request to engage a defence assistant in the ongoing inquiry.

I do hereby nominate Shri P Ilango Subramanian, retired Telecom and BSNL employee
as my defence assistant to help me in the ongoing inquiry.

Shri P Ilango Subramanian aged 65 has given his consent to offer his services as
defence assistant and he is ready to attend the inquiry as and when he is summoned.
He is not a legal practitioner and my case is the only case at his disposal. The necessary
documents are also enclosed herewith as proof of identity of the proposed defence assistant.

I kindly request you, sir, to accept the above nomination and permit me to attend
the inquiry along with my defence assistant.

The summons may kindly be issued to him either through me or directly through post
to the address given below. If permitted he is ready to speak to the Inquiry Officer
over phone to convey his consent.

P Ilango Subramanian
Subiksha flats
5/5, sixth street, Sowrashtra Nagar,
Choolaimedu, Chennai 600 094.
mobile: 94442 30176
email: ilangophysics@gmail.com


Thanking you,

Yours faithfully,
........................
(Smt C Gowsalya)

Station: Wellington
Date: 27 March 2019.
Encl: Copy of the consent letter referred as above.



செவ்வாய், 26 மார்ச், 2019

கனிமொழியின் வெற்றிக்காக கோவிலில் வழிபாடு!
-------------------------------------------------------------------------------
திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்தில்
ராஜாத்தி அம்மாள்!
சண்முகார்ச்சனை செய்து வழிபட்டார். 

சண்முகார்ச்சனை செய்து வழிபடுமாறு
தந்தை பெரியார் கூறியுள்ளார் என்று
கனிமொழி கூறக்கூடும்!

திராவிடப் புழுத்தறிவு!
புழுத்தறிவு ஓங்குக!

பிற்போக்குக் கருத்தை வெளியிட்ட
போலிப்பெண்ணியவாதி மருத்துவர் ஷாலினி!
ஆங்கிலம் தெரியாத முட்டாள்கள் என்று
தமிழர்களைச் சாடிய ஷாலினியே,
ஆங்கிலப் புலமைக்கான போட்டிக்கு வரத் தயாரா?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் திருமதி/செல்வி
ஷாலினி அண்மையில் ஒரு முகநூல் பதிவை
எழுதி இருந்தார். உண்மையில் அது ஒரு பகிரப்பட்ட
பதிவு.

பிரபல பிளாக் மெயிலர் சவுக்கு சங்கர் என்பவரின்
பதிவைப் பகிர்ந்திருந்த திருமதி/செல்வி ஷாலினி
அதில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு வாசகம்
அவருக்குப் பெருஞ்சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

"தேன் ஒழுகப் பேசும் ஆண்களிடம் பெண்கள் வீழ்ந்து
விடுகிறார்கள் என்பதே மானுடத்தின் துயரம்".
இதுதான் அவ்வாசகத்தின் பொருள்.
மூல ஆங்கில வாசகம் இதுதான்:
Women falling for the SweetTalkingMale is the tragedy of Humankind!!   

இந்த வாசகத்துடன் சீமானின் நாம் தமிழர் கட்சியின்
20 பெண் வேட்பாளர்களின் படங்களும் வெளியிடப்
பட்டிருந்தன. சீமானின் ஏமாற்று வேலைக்கு இந்தப்
பெண்கள் பலியாகி விட்டார்கள் என்பதே ஷாலினி
உணர்த்தும் பொருள்.

ஷாலினியின் இந்தக் கருத்து அடிமுட்டாள் தனமானது.
கடைந்தெடுத்த பிற்போக்குத் தனமானது.
ஷாலினி ஒரு போலிப் பெண்ணியவாதி என்பதை
அவரே தமது வாசகம் மூலம் நிரூபித்து இருக்கிறார்.

புழுவினும் இழிந்த ஷாலினியின் இந்தப் பிற்போக்குக்
கருத்து சமூகத்தின் கண்டனத்தைச் சம்பாதித்தது.
எதிர்ப்பு வலுத்தது.

டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியினர்
மட்டுமே ஷாலினியின் பிற்போக்குக் கருத்தை
வரவேற்றனர். நைச்சியமாகப் பேசும் ஆண்களிடம்
பெண்கள் ஏமாந்து நாடகக் காதல் வலையில் சிக்கி
விடுகின்றனர் என்ற பாட்டாளி மக்களின் கட்சியின்
கருத்தைத்தான் ஷாலினி வெளிப்படுத்தி இருக்கிறார்.

தனது போலிப் பெண்ணியம் அம்பலம் ஆகி விட்டதால்
அதிர்ச்சி அடைந்த புழுவினும் இழிந்த ஷாலினி
மன்னிப்புக் கேட்கவோ தமது கருத்தைத் திரும்பப்
பெறவோ தயாராக இல்லை.

மாறாக, தான் சரியாகத்தான் எழுதி இருப்பதாகவும்
ஆங்கிலம் தெரியாத முட்டாள்கள் தான் எழுதிய
வாசகத்தின் பொருளைப் புரிந்து கொள்ள முடியாமல்
தன்னை எதிர்ப்பதாகவும் ஒரு பதிவை எழுதினார்.
அவர் எழுதிய பதிவு வருமாறு:-
" ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும்
உதாரணம்: falling for என்றால் காதலிப்பது மட்டுமல்ல
[fall for something] to believe that a trick or a joke is true
எக: How could you fall for such an obvious trick?" 

கடைந்தெடுத்த கயமைத்தனத்துடன் எழுதப்பட்ட
இந்தப் பதிவை மொத்தத் தமிழ்ச் சமூகமும்
வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு தற்குறி இயக்கத்தைச் சேர்ந்தவருக்கு இவ்வளவு
திமிர் இருக்கக் கூடாது. இதைத் தட்டிக் கேட்காமல்
விட்டால், என்ன ஆகும்? மு க அழகிரியும் மு க ஸ்டாலினுமே
ஆங்கிலப் புலமையில் தமிழ் நாட்டில் தலைசிறந்து
விளங்குபவர்கள் என்று நாளையே இந்தப் புழுவினும்
இழிந்த பிற்போக்குக் கசடுகள் மக்களை நம்ப வைக்கும்.

எனவே நியூட்டன் அறிவியல் மன்றம் திருமதி/ செல்வி
ஷாலினியை ஆங்கிலப் புலமைக்கான ஒரு போட்டிக்கு
அழைக்கிறது. இந்தப் போட்டியில் நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் தலைவர் தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
அவர்கள் பங்கேற்று திருமதி/செல்வி ஷாலினியுடன்
நேரடியாகப் போட்டி இடுவார்.

தகுதி வாய்ந்த நடுவர்களைக் கொண்டு தக்கோர்
இப்போட்டியை நடத்த முன்வர வேண்டும். இல்லையேல்
நியூட்டன் அறிவியல் மன்றமே இப்போட்டியை .நடத்தும்.
இப்போட்டியில் எவர் வெல்கிறார் என்று தமிழ்ச்
சமூகம் அறியட்டும்.

திருமதி/செல்வி ஷாலினிக்கு தமது ஆங்கிலப் புலமையில்
நம்பிக்கை இருந்தால் அவர் என்னுடன் போட்டிக்கு வரட்டும்.
நான் தயார்.

NB: This post may sound like a heresy but the anti feminist character
of this strumpet is to be exposed.
*********************************************************
பின்குறிப்பு: இந்தியப் புரட்சிக்குத் தலைமையேற்று
வழிநடத்திக் கொண்டிருந்த மார்க்சிய லெனினியக்
கட்சியின் PC மற்றும் CC அமைப்புகளின் தேவைக்கேற்ற
இருவழி மொழிபெயர்ப்புப் பணியில் திறன்பெற்ற ஒருவர்
இழிந்தவொரு குட்டி முதலாளித்துவ scumஉடன்
பொருதுவது துரதிருஷ்டவசமானது. எனினும் இச்சூழலில்
தவிர்க்க இயலாதது.
*****************************************************
 

 


        
முகிலனின் தலைமறைவுக்கும்
அவரின் அகத்துறை நடத்தைக்கும் இடையிலான
CAUSE AND EFFECT relationship பற்றி!
 அவிழும் மர்மங்கள்!
-------------------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------
ஒதியமரத் தின்கீழே முத்து மாமா கோழி
ஒன்றையொன்று பார்ப்பதென்னே முத்துமாமா
எதுசெய்ய நினைத்தனவோ முத்துமாமா-நாமும்
அதுசெய்ய அட்டியென்ன முத்துமாமா.

முதல்மனைவி நானிருக்க முத்துமாமா
அந்த மூளியை நீ எண்ணலாமா முத்துமாமா?
...........................................................................................
----------- பாவேந்தர் பாரதிதாசன்.

முக்கோணக் காதல் கதைகள் இலக்கிய உலகத்திற்குப்
புதியன அல்ல. நாவல்களிலும் திரைப்படங்களிலும்
இக்கருப்பொருள் பற்றி நிறையவே பேசப்பட்டுள்ளது
என்பதை அறிவார்ந்த வாசகர்கள் அறிவார்கள்.

சமகால இந்திய சமூகத்தின் பாலியல் ஒழுக்கம்
ஒருவனுக்கு ஒருத்தி (one to one concept) என்ற கோட்பாட்டை
அடித்தளமாகக் கொண்டது. நமது நீதி நூல்களும்
இதையே வலியுறுத்துகின்றன.

பிறனில் விழையாமை என்று ஓர் அதிகாரத்தையே
எழுதி உள்ளார் வள்ளுவர்.
(பிறனில் விழையாமை = பிறன் மனைவியை விரும்பாமை)
கடவுள் ராமன் ஏகபத்தினி விரதனாகச் சித்தரிக்கப்
படுகிறார்.

"ஒக்க மாட்ட ஒக்க பாணமு
ஒக்க பத்னீ விரதுடே மனஸா"
என்கிற பிரபலமான தியாகராஜ கீர்த்தனையை
இசையறிவு உடையோர் அறிந்திருக்கக் கூடும்.   

புத்தரும் இதே ஒழுக்கத்தையே தீவிரமாக வலியுறுத்துகிறார்.
பிறன் மனைவியை விரும்புதல் " பிழையுறு காமம்"
என்கிறார் அஷ்டாங்க மார்க்கத்தில் புத்தர்.

கிறித்துவத்திலும் இதே ஒழுக்கம் வலியுறுத்தப்
படுகிறது. மோசேயின் பத்துக் கட்டளைகளில்
ஆறாவது கட்டளை " Thou shalt commit adultery" என்பதாகும்.
இதற்கும் தமிழில் பொருள் கூற வேண்டியிருப்பது
எரிச்சலை ஏற்படுத்துகிறது. யாராவது பாதிரியாரிடம்
சென்று விளக்கம் பெறவும்.

சட்டமும் இதே கோட்பாட்டின் (one to one concept)
அடிப்படையில்தான் எழுதப் பட்டுள்ளது. பலதார மணம்,
இருதார மணம் ஆகியவற்றை சட்டம் தடை செய்துள்ளது.

திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட உடலுறவு (extra marital sex)
adultery என்று வரையறுக்கப்பட்டு இந்திய தண்டனைச்
சட்டத்தால் தடுக்கப் பட்டுள்ளது. (பார்க்க: IPC பிரிவு 497).
அண்மையில் செப்டம்பர் 2018ல் உச்சநீதிமன்றத்தின்
ஐந்து பேர் கொண்ட அமர்வு மேற்கூறிய பிரிவு 497ஐ
ரத்து செய்து தீர்ப்பளித்தது.

திராவிடத் தற்குறிக்கும் புரியும்படி சொல்ல
வேண்டுமென்றால், அடுத்தவன் பொண்டாட்டியோடு
படுத்தால் (இருவரின் சம்மதத்துடன்), அது சட்டப்படி
குற்றமல்ல. இந்த உறவு  consensual sex என்று அழைக்கப்
படுகிறது. சம்மதம் இல்லாமல் உறவு கொண்டால்,
அது rape என்ற வகையில் வரும். வாசகர்கள் adultery,
consensual sex, rape ஆகியவை பற்றிய சட்ட அறிவை
உரிய நூல்களை படித்துப் பெறவும்.

சொல்ல வந்த விஷயத்தை எடுத்த எடுப்பில் நேரடியாகச்
சொல்ல இயலவில்லை. தமிழ் வாசகச் சூழலின்
புரிதல் மட்டத்தைக் கணக்கில் எடுக்காமல் எதையும்
கூற முனைவது புரிதலின்மையை ஏற்படுத்தக் கூடும்.

இந்தச் சூழலின் பின்னணியில் முகிலன் ஆட்பட்டுள்ள
முக்கோண விவகாரத்தை அணுக வேண்டும்.
முதலிலேயே ஒன்றை வலியுறுத்த விரும்புகிறோம்.
முகிலனின் ஒழுக்கமோ பாலியல் நடத்தையோ
இக்கட்டுரையின் பேசுபொருள் அல்ல. தமிழ்ச் சமூகமும்
அது பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை.

முகிலன் ஏகபத்தினி விரதனாக இருக்கிறாரா அல்லது
உமனைசராக இருக்கிறாரா என்பது குறித்து இங்கு
யாருக்கும் அக்கறை இல்லை. முகிலனுக்கு
நெருக்கமானவர்கள், அவரின் நலம் விரும்பிகள்,
சுற்றத்தார், உறவினர் ஆகியோருக்கு முகிலனின்
நடத்தை குறித்து அக்கறை இருக்கக் கூடும். அல்லது
இல்லாமலும் இருக்கக் கூடும். எமக்கு அறவே இல்லை.
இதுதான் உண்மை.

எனினும் முகிலனின் ஒழுக்கம் குறித்து இன்று சமூகத்தில்
பேசப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் ஒழுக்கம்
குறித்த அக்கறையோ அல்லது முகிலனின் நலம்
விரும்புதலோ அல்ல. பின் ஏன் முகிலனின் பாலியல்
விவகாரங்கள் சமூகத்தில் அலசப் படுகின்றன?

முகிலன் தலைமறைவாக இருப்பதற்கும் அவரின்
பாலியல் நடத்தைக்கும் இடையிலான cause and effect
உறவு காரணமாகவே முகிலனின் பாலியல்
ஒழுக்க மீறல்கள் சமூகத்தின் அக்கறைக்கு
உரியதாகி விட்டன.

நடிகர் கமல் ஹாசன் நடித்து வெளியான ஒரு திரைப்படம்
நாம் விவாதிக்கும் விஷயத்தைக் கருப்பொருளாகக்
கொண்டது. "பாபநாசம்" என்ற அத்திரைப்படத்தில்
ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் இளவயது மகன்
காணாமல் போய்விடுவான். பாலியல் பிறழ்வால்
பிஞ்சிலேயே பழுத்துவிட்ட அந்த இளைஞன் ஒரு
இளம்பெண்ணிடம் அத்து மீறும்போது அடித்துக்
கொல்லப் படுவான். போலீஸ் நிலையத்தின்
புதிய கட்டிடத்தின் அடியிலேயே அவன் கொன்று புதைக்கப்
போட்டிருப்பான். படம் முடியும் வரை அவன் என்ன ஆனான்
என்றோ எங்கு புதைக்கப் பட்டான் என்றோ யாருக்கும்
தெரியாது. இப்படியாக பாபநாசம் படத்தின் கதை போகும்.

Truth is stranger than fiction! ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின்
கொலை குறித்த மர்மங்கள் ஏன் இன்னும் மர்மங்களாகவே
இருக்கின்றன? செல்வாக்கு மிக்க பாதிக்கப்பட்ட
 அந்தக் குடும்பம் கூட ஏன் இன்னும் அமைதி காக்கிறது?
உண்மை அனைவரும் அறிந்ததே! உண்மைகள் அதிகார
பூர்வமாக வெளியிடப் படவில்லை. அவ்வளவே.
மேற்படி பிரமுகரின் கதை ஒரு திரைப்படமாகவே
எடுக்கப்பட்டது. இளைஞர்களும் ஸ்ரீராமஜெயம் எழுதும்
இளம்பெண்களும் அப்படத்தைப் பார்த்திருக்கக் கூடும்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று.

எனவே முகிலனின் தலைமறைவுக்கும் அவரின்
பாலியல் நடத்தைப் பிறழ்வுக்கும் இடையில்
ஒரு cause and effect relation ship உள்ளது என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் கூறுகிறது. இதற்கான
நிகழ்தகவு 0.8 என்றும் நியூட்டன் அறிவியல் மன்றம்
quantify செய்துள்ளது. இதை எவரும் challenge
செய்யலாம். அவ்வாறு challenge செய்யப்படும் பட்சத்தில்
எமது நிகழ்தகவுக் கணக்கீடு சரியானதே என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் நிரூபிக்கத் தயாராக உள்ளது.

நிகழ்தகவுக் கோட்பாட்டின்படி, நிகழ்தகவானது
பூஜ்யத்துக்கும் 1க்கும் இடையில் உள்ளது. The probability
of any event always lies between 0 and 1 (both inclusive). The maximum
probability =1 and the minimum probability = 0.

எனவே ஏனைய வாய்ப்புகளுக்கான நிகழ்தகவு
0.2 என்ற அளவில் இருக்கிறது என்பதையும் நியூட்டன்
அறிவியல் மன்றம் ஏற்கிறது.

சில குட்டி முதலாளித்துவ அன்பர்கள், "முதலில் முகிலன்
வரட்டும்; அவர் வந்த  பிறகு அவரின் பாலியல் பிறழ்வு
குறித்து விவாதிக்கலாம்" என்று ஒரு அபத்தத்தை
முன்வைக்கிறார்கள். This proposal is apparently intelligent
but actually foolish!

முகிலன் காணாமல் போனதற்கு அவரின் பாலியல்
பிறழ்வு காரணம் என்பதாலேயே அவரின் பாலியல்
நடத்தை குறித்து சமூகம் அக்கறை கொள்கிறது.
மற்றப்படி அவரின் பாலியல் பிறழ்வுகள் குறித்து
இச்சமூகத்திற்கு எவ்வித அக்கறையும் இல்லை.
அப்படி இருக்கையில் இச்சமூகம் முகிலன் வந்த பிறகு
அவரின் பாலியல் பிறழ்வு குறித்து விவாதிக்க வேண்டிய
தேவை என்ன?

காரல் மார்க்ஸ் ஓரிடத்தில் கூறுவார்:
"அரசன் பெண்பித்தனாக இருப்பதற்கும் அரசனின்
குதிரை லாயக்காரன் பெண்பித்தனாக இருப்பதற்கும்
வித்தியாசம் உண்டு" என்பார் மார்க்ஸ்.

அரசன் பெண்பித்தனாக இருந்தால், அதனால்
நாட்டுக்கோ மக்களுக்கோ பாதிப்பு ஏற்படும்.
ஆனால் அரசனின் குதிரைலாயக்காரன்
பெண்பித்தனாக இருந்தால் அதனால் அவன்
பொண்டாட்டிக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். எனவே
குதிரை லாயக்காரனின் பெண்பித்து என்பது
சமூகத்தின் விவாதப் பொருளாக இருக்காது.
இங்கு முகிலன் ஒரு குதிரை லாயக்காரன்!

ஈட்டுபுகழ் நந்தி பாண நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் காட்டில் அழும்
பேயென்றாள் அன்னை பிறர் நரியென்றார் தோழி
நாயென்றாள் நீயென்றேன் நான்.
----------நந்திக் கலம்பகம்
(சந்தி பிரித்து எழுதப் பட்டுள்ளது)
*************************************************

         




  






4G அலைக்கற்றை BSNL இடம் இல்லையா?
உண்மை நிலவரம் என்ன?
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
1) இந்தியாவில் மொபைல் சேவை 1995ல் அறிமுகம் ஆனது.
முதன் முதலில் மொபைல் தொலைபேசியில் பேசிய
பெருமைக்கு உரியவர்கள் பின்வரும் இருவர்:
மேற்கு வாங்க முதல்வர் ஜோதி பாசு
தொலைத்தொடர்பு அமைச்சர் சுக்ராம்.
காலம்: ஜூலை 1995.
அப்போது நடந்தது காங்கிரஸ் ஆட்சி.
பிரதமர் நரசிம்ம ராவ்.

2) இந்த மொபைல் சேவைக்காக 2G அலைக்கற்றை
வழங்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் மட்டுமே
மொபைல் சேவையில் அனுமதிக்கப் பட்டன.

3) அப்போது BSNL நிறுவனம் உருவாகவில்லை. அது
01.10.2000ல்தான் உருவாக்கப் பட்டது. BSNL உருவானபோது
பிரதமராக இருந்தவர் வாஜ்பாய்.

4) தொலைபேசி சேவை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்
பட்டது. அ) Basic services  ஆ) value added services.
மொபைல் சேவையானது value added services என்ற பிரிவின்
கீழ் வந்தது. தனியார் நிறுவனங்கள் மட்டுமே VASல்
அனுமதிக்கப் பட்டன.

5) பின்னர் இந்தியாவில் 3G அலைக்கற்றை (2100 MHz)
ஏலம் விடப்பட்டது. ஏலம் விட்ட அமைச்சர் யார் தெரியுமா?
இந்தக் கேள்விக்கு நியூட்டன் அறிவியல் மன்றத்தைத்
தவிர எல்லாருமே தவறான பதிலைத்தான் சொல்வார்கள்.
ஆ ராசா அவர்கள்தான் 3G அலைக்கற்றையை ஏலம்
விட்டவர்.

6) 2010ல் நடந்த மேற்கூறிய 3G அலைக்கற்றை ஏலம்
இந்திய அரசுக்குப் பெரும் வருவாயை ஈட்டித் தந்தது.
ரூ 30,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று அரசு
எதிர்பார்த்தது. Base price was fixed by DOT and TRAI at
Rs 30,000 crore. ஆனால் இந்த 3G ஏலத்தின் மூலம்
அரசுக்கு 67000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
எதிர்பார்த்த வருமானம் = ரூ 30,000 கோடி.
கிடைத்த வருமானம் = ரூ 67,000 கோடி.

7) இந்த 3G ஏலத்தில் BSNL பங்கெடுக்கவில்லை.
எனினும் BSNLக்கு 3G அலைக்கற்றை வழங்கப்
பட்டது. இதற்காக BSNL எவ்வித upfront paymentம்
செலுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால்
3G ஏலம் நடப்பதற்கு பல மாதங்கள் முன்னரே
BSNLக்கு 3G அலைக்கற்றை வழங்கப் பட்டது.

8) என்றாலும் BSNL நிறுவனத்தால் 3G சேவையை
வழங்க இயலவில்லை. (But the roll out of 3G service was not
made by BSNL). இக்கட்டுரை ஆசிரியர் பங்கேற்ற ஒரு
கூட்டத்தில், அன்றைய சென்னைத் தொலைபேசியின்
பொது மேலாளர் (Chief General Manager) மதிப்புக்குரிய
சுப்பிரமணியன் BE M.Tech ITS அவர்கள், " இன்னும்
நம்மால் 3G  சேவை roll out செய்ய முடியவில்லை;
3G அலைக்கற்றையை வாங்கி ஊறுகாய் போட்டு
இருக்கிறோம்" என்று கூறியது நினைவில்
நிழலாடுகிறது.

9) சரி, இப்போது 4Gக்கு வருவோம். BSNL இடம் 4G இல்லை
என்று  யார் யாரெல்லாமோ கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரத்தில்
4G விவகாரத்தில் ஒரு உண்மையை அனைவரும்
தெரிந்து கொள்ள வேண்டும்.

10) இந்தியாவிலேயே முதன் முதலில் 4G அலைக்
கற்றையைப் பெற்றது BSNL நிறுவனம்தான். எந்தவித
upfront paymentம் செலுத்தாமல் மத்திய அரசு BSNLக்கு
4G அலைக்கற்றையை வழங்கி இருந்தது. இதுதான்
உண்மை.

11) இந்தக் கட்டுரையை எழுதுகிற நானும் படிக்கிற
நீங்களும் உயிரோடு இருப்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை BSNLஇடம் 4G இருந்தது என்ற விவரம்.

12) BSNLக்கு வழங்கப்பட்ட 4G அலைக்கற்றை Wimax spectrum
என்ற பெயரிலான அலைக்கற்றை ஆகும். இது BWA spectrum
என்று அழைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தை
நடத்தியவர் யார் தெரியுமா? வேறு யார்? ஆ ராசாதான்.
வழக்கம் போல ஏலத்தில் பங்கெடுக்காமலும்
upfront payment செலுத்தாமலும் BSNLக்கு இந்த
அலைக்கற்றை வழங்கப் பட்டது.

13) WiMax = Worldwide Interoperability of Microwave access.
bandwidth = 3500 MHz.

14) Spectrum என்பது குறித்தும் LTE technology என்பது
குறித்தும் வளமானதும் ஆரோக்கியமானதுமான
புரிதல் வாசகர்களுக்கு இருத்தல் வேண்டும்.
அப்போதுதான் இந்தக் கட்டுரையைப் புரிந்து
கொள்ள முடியும். (LTE = Long Term Evolution)

15) தலைமுறை சார்ந்த அலைக்கற்றைகளுக்கு
பரிணாம வளர்ச்சி உண்டு. உதாரணமாக 2Gயில்
இருந்து 3G பின்வரும் கட்டங்களைக் கடந்து வந்தது.
2G, GPRS, EDGE, UMTS (3G).

16) தன்னிடம் இருந்த WiMax அலைக்கற்றையைப்
பயன்படுத்தி BSNL நிறுவனம் 4G சேவையைத்
தொடங்கி இருக்க வேண்டும். சில LSAகளில்
தொடங்கியது. ஆனால் தொடர்ந்து நடத்தவில்லை.

17) ஒரு கட்டத்தில் BSNL நிறுவனமானது இந்த
அலைக் கற்றையை அரசிடம் திருப்பி ஒப்படைத்து விட்டது.
Yes, the spectrum was returned by BSNL.

18) வாசகர்கள் இதை நம்பத் தயங்கலாம். அவர்கள்
இணைக்கப்பட்டுள்ள அல்லது முதல் கமென்டில்
கொடுக்கப்பட்ட இணைப்பைப் படிக்கலாம்.
Bharat Sanchar Nigam has offered to surrender the broadband spectrum it bought from the Government last year. The PSU, after having failed to launch wireless broadband services, has asked the Government to refund the money it paid for acquiring the spectrum.
Confirming the move Mr R K Upadhyay, Chairman, BSNL, told Business Line, “We want to give the spectrum back because we are using it to offer services only in rural areas. The government can take back the spectrum and own it while we can continue to meet the social obligation of connecting the rural areas.”
(Business Line September 30, 2011.)
-------------------------------------------------------------------------------------------------------  
        
பரதேசி நிறுவனங்களும்
பணக்கார BSNLம்!
------------------------------------------
33 ஏக்கர் பரப்பளவில் அமைந்த
BSNL நிறுவனத்தின் பயிற்சி நிலையம்
மறைமலை நகரில் உள்ளது.
இது சென்னைத் தொலைபேசிக்குச் சொந்தமானது.
பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளது.

இந்த அளவு சொத்து வேறு எந்தத் தனியார் தொலைதொடர்பு
நிறுவனத்திற்கும் கிடையாது.

இன்று (25.03.2019) இந்தப் பயிற்சி நிலையத்திற்கு
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் ஒரு விசிட்.

BSNL திவால் ஆகிறது, BSNL மூடப்படுகிறது, BSNLஐ
அம்பானிக்கு விற்கப் போகிறார்கள் என்றெல்லாம்
வதந்தியைக் கிளப்பும் புழுவினும் இழிந்த scumகளின்
உடம்பில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சூடு போட
நியூட்டன் அறிவியல் மன்றம் உறுதி
பூண்டுள்ளது.   
-----------------------------------------------------------------------


      

திங்கள், 25 மார்ச், 2019

சரியான விடையும் விளக்கமும்!
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
இந்தக் கணக்கு 10ஆம் வகுப்பு CBSE கனக்குப் பாடப்
புத்தகத்தில் உள்ள EXERCISE பகுதியில் இருந்து எடுக்கப்
பட்டுள்ளது. எனவே 10ஆம் வகுப்பு மாணவனின் புரிதலில்
இருந்து இக்கணக்கைப் பார்க்க வேண்டும்.

தரை (horizontal), விமானம் பறக்கும் உயரம் (altitude),
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தானவை
(perfectly perpendicular). இந்தியாவில் plus 2 வரையிலுமே
யூக்ளிடின் வடிவியல்தான் (Euclidean geometry). இது flat space
geometryதானே தவிர curved space geometry அல்ல.

எனவே மொத்தப் பிரபஞ்சத்திலும் உள்ள வெளி (space)
முழுவதும் வளைந்த வெளி (curved space) என்ற புரிதலுடன்
இக்கணக்கை அணுகுதல் கூடாது.

ஆக, இக்கணக்கில் ஒரு செங்கோண முக்கோணம்
கிடைக்கிறது. அதன் கர்ணமே (hypotenuse) விமானம் கடந்த
தூரம் (distance traveled) ஆகும்.

Therefore,
altitude (divided by) distance traveled = opposite side (divided by) hypotenuse
= sin 10 = 0.0174

which implies,  distance traveled = altitude (divided by) sin 10
= 600 (divided by) 0.0174
= 3.456 km.

Distance traveled by the plane =  3.456 km.
********************************************           

CBSE, TN state  bboard, or European text books இப்படி
எதுவாயினும், இந்தப் பாடப் புத்தகங்களின்
நோக்கம் ஒன்றுதான். அது இதுதான்.

மாணவனுக்கு sin, cos, tan விகிதங்களை உணர்த்துவது
மட்டுமே ஒரே நோக்கம்.
opposite side (divided by) hypotenuse = sin theetta
adjacent side (divided by) hypotenuse = cos theetta
opposite side (divided by) adjacent side = tan theetta

இவ்வாறு முக்கோணங்களின் பக்கங்களுக்கும் அவற்றின்
கோணங்களுக்கும் இடையிலான கணித உறவை
மாணவனின் மூளையில் ஏற்றுவதுதான் Trigonometry text booksன்
ஒரே நோக்கம் என்பதை அறிக.

என்னுடைய அனுபவத்தில் CBSE Board examல் 2 மார்க்
கேள்வியாகக் கூட இந்தக் கணக்கை இதுவரை
கேட்டதில்லை/இனிமேலும் கேட்கப் போவதில்லை.
ஏனெனில் கேள்வித்தாளில் இடம் பெறும் அளவுக்குத்
தகுதி வாய்ந்த கேள்வி அல்ல இது. ஓரளவேனும்
கடினத் தன்மை உடைய கேள்வியைத்தான் கேட்பார்கள்.
எனவே இக்கணக்கு trigonometry பாடத்தை
மாணவர்களுக்கு விளக்கும் நோக்கத்தை மட்டும்
கொண்டது.    

   

ஞாயிறு, 24 மார்ச், 2019

முகிலன் எங்கே? இதோ இங்கே!
தனியொருவனின் சொந்தச் சிக்கலை
மொத்த சமூகத்தின் சிக்கலாக ஆக்குவது தகாது!
முகிலன் தலைமறைவு: உள்மர்மம் என்ன?
-----------------------------------------------------------------------------
ஆக்கம்: கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
                  மாலை வரும் நேரமெல்லாம்
                  மன்னன் வரக் காத்திருந்தேன்
                  வழியெங்கும் விழி வைத்துப்
                  பார்த்த விழி பூத்திருந்தேன்.

முகில்கள் சேர்ந்து நிலவை மறைக்கும். நிலவும் மறையும்.
ஆயினும் முகில்கள் மறைவதில்லை. எனவே அவர் விரைவில்
இல்லம் ஏகுவார் என்று கூறியிருந்தார் திருமதி பூங்கொடி,
முகிலனின் துணைவியார், மன்னிக்கவும், மனைவியார்.

வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
சென்னிமலையில் பூங்கொடியின் இல்லக் கதவு
தேய்ந்து வருகிறது.

பூங்கொடியைப் போன்றே இன்னொரு பெண்ணும்
முகிலன் வந்து விடுவார் என்ற நம்பிக்கையுடன்
குளித்தலையில் காத்திருக்கிறார். இவர் ராஜேஸ்வரி
என்னும் மடந்தை.

மன்னவன் உங்கள் பொன்னுடல்
அன்றோ இந்திர லோகம்!
அந்தி மாலையில் அந்த மாரனின் கணையில்
ஏன் இந்த வேகம்? ஏன் இந்த வேகம்?

விரகதாபங்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும்
யுக்தி அறிந்தவை. அவை பரத்தமை உடைய தலைவனின்பால்
நாணுத்துறவு உரைப்பவை.

எனினும் பின்னவளை முன்னவள் ஏற்பதில்லை.
"மன்னவன் பணியென்றாகில்
நும் பணி  மறுப்பனோ
என் பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றதன்றோ"
என்று கருதும் பெருந்தன்மை ஆடவர்க்கு மட்டும்
உரியதேயன்றி, பெண்டிர்க்கு உவப்பதில்லை.

ஏற்றவளை வரிசிலையோன் இயம்பாமுன் இகலரக்கி
சேற்றவளை தன்கணவன் அருகிருப்பச் சினந்திறுகிச்
சூற்றவளை நீருழக்கும் துறைகெழுநீர் வளநாடா
மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம் என்றாள்.

ஆறறிவு படைத்த மானுட இனத்தில் மட்டுமின்றி,
குறையறிவு உடைய தவளை இனத்திலும் கூட
சக்களத்திகள் ஒத்துப் போவதில்லை என்பதை
கம்பரின் பாடல் வாயிலாக உணர்கிறோம்.
Two watches never compromise as two ladies
never compromise என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.
ஆக ஐரோப்பாவிலும் இதே நிலைதான்!

நீங்கள் இருவரும் இப்படி ஒற்றுமையின்றிச்
சண்டையிட்டுக் கொண்டிருந்தால், நான் யாருக்கும்
பயன்படாமல் போய் விடுவேன் என்று மிரட்டுகிறாரோ
முகிலன்! நீங்கள் இருவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு
வாருங்கள்; அதன் பிறகு நான் வருகிறேன் என்று
நிபந்தனை விதிக்கிறாரோ முகிலன்! இதுதான் முகிலனின்
மறைவு உணர்த்தும் செய்தியோ?

சிறப்புப்பிரிவு (CB CID) காவல் துறையின்
அழைப்பாணையை ஏற்று, நேற்று (23.03.2019) முகிலன்
குறித்து சாட்சியம் அளிக்கச் சென்றிருந்தேன்.
Clueless என்ற நிலையில்தான் காவல்துறையும்
இருக்கிறது என்று அறிந்தேன்.

நமது காவல்துறை தூங்கும் எவனையும் எழுப்பி விடும்
ஆற்றல் உடையது. ஆனால் தூங்குவது போல்
நடிக்கும் எவரையும் எந்தக் காவல்துறையாலும் 
எழுப்ப இயலாது.

ஆக சிக்கலுக்குத் தீர்வு இதுதான்! தனது மறைவிடத்தில்
இருந்து முகிலன் வெளியே வர வேண்டும். தனது சொந்தச்
சிக்கலை ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டின் சிக்கலாக
முகிலன் ஆக்கி இருப்பது பெருங்குற்றம். இது தமிழ்ச்
சமூகத்திற்கு முகிலன் செய்துள்ள பெரும் அநியாயம்!
இதை உடனடியாக அவர் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இதைச் செய்ய முகிலன் தயாராகவும் இருக்கக் கூடும்.
எவரேனும் தலையிட்டு பெண்டிர் இருவருக்கும்
இடையில் ஓர் இணக்கப்பாட்டை உருவாக்க
மாட்டார்களா என்று முகிலன் ஏங்கவும் கூடும்.
அவ்வாறு ஓர் இணக்கம் இருவருக்கும் இடையில்
உருவாக்கப்பட்டு விடும் என்றால், முகிலன் தமது
அஞ்ஞாத வாசத்தை (கரந்து உறைதலை) உதறித்
தள்ளி முகங்காட்ட மறுக்க மாட்டார் என்பதே மெய்ந்நிலை.

இணக்கப்பாட்டை உருவாக்க வல்ல நீதியரசர்களுக்குத்
தமிழ்நாட்டில் பஞ்சமே இல்லை. உச்சநீதிமன்ற நீதியரசர்
மேதகு கொளத்தூர் மணி போன்ற ஆன்றவிந்தடங்கிய
சான்றோர் பலர் வாழும் ஊர்தானே நம்மூர்! வேறு எந்த
ஊருக்கு இச்சிறப்பு உண்டு?

ஆக,  முகிலன் வருகிறார்! பெண்களின் வேண்டுதலுக்கு
இறைவன் செவி சாய்க்காமல் இருக்க மாட்டான் அன்றோ!
வண்ணநறு மலர்சொரிந்து வானோர் ஆர்க்க
முகில் கிழித்து வெளிவரட்டும் முகிலன்! பெண்டிர்
பூரிப்பு எய்தட்டும். அவர்கள் அணிந்திருக்கும்
வாம மேகலை இற்று விழட்டும்.வளர வேண்டியது
வளரட்டும்!

சேக்ஸ்பியரின் மாக்பெத் போன்றோ, ஒதெல்லோ
போன்றோ துன்பியலாக முடியாமல், டெம்பஸ்ட்
(The Tempest) போன்று முகிலனின் கதை இன்பியலாக
முடியட்டும்!

கள்ளவிழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலை வரை கேட்பதுண்டோ?

காவியத்து நாயகனின்
கட்டழகு மார்பினிலே
சுகம் என்ன சுகம் என்று
மோகனப்பண் பாடியதோ!
-------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1. கலிங்கத்துப் பரணி (கடை திறப்பு), கம்ப ராமாயணம்,
புலவர் புலமைப்பித்தன் பாடல் ஆகியவற்றில் இருந்து
மேற்கோள்கள் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

2. இக்கட்டுரை இலக்கியப் பயிற்சி உடையோர் மற்றும்
IQ > or = 110 உடையோரை நோக்கி எழுதப்பட்டது. எனவே
பிறழ் புரிதலைத் தவிர்க்க, IQ < 110 உடையோர்
இக்கட்டுரையைப் படிக்காமல் இருந்து ஒத்துழைப்பு
நல்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

3. நியூட்டன் அறிவியல் மன்றமானது
குட்டி முதலாளித்துவத்துக்கு கருத்து சுதந்திரம் எதையும்
வழங்குவதில்லை. எனவே குட்டி முதலாளித்துவமானது
இக்கட்டுரை மீதான எவ்வித எதிர்மறைக் கருத்தையும்
சொல்ல அனுமதி இல்லை. இது போன்ற பதிவுகள்
ONE WAY TRAFFIC போன்றவை என்பதையும் இது
annihilation நடந்த இடம் இனி நடக்கும் இடமும் கூட
என்பதையும் குட்டி முதலாளித்துவர்கள் கருத்தில் கொள்க.
*******************************************************




            





வியாழன், 21 மார்ச், 2019

ஒரு தொகுதியில் 384 பேர் போட்டியிட்டாலும்
மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலமே
தேர்தல் நடக்கும்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
1) 2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாடு முழுவதும் உள்ள
543 தொகுதிகளிலும் EVM மூலமாகத் தேர்தல் நடைபெற
உள்ளது.

2) EVMகள் மூன்று வகையானவை. அவை: M-1, M-2, M-3 ஆகியவை. 
2014 தேர்தல் வரை M-1 மற்றும் M-2 வகை எந்திரங்கள்
பயன்படுத்தப் பட்டன. ஆனால் 2019 தேர்தலில் M-3 வகை
எந்திரங்கள் மூலம் தேர்தல் நடக்கும்.

3) இந்திய நாடு முழுவதும், நாடாளுமன்றத் தேர்தலில்
சுமார் 10.6 லட்சம் வாக்குச் சாவடிகள் (Polling Booths)
அமைக்கப் பட உள்ளன. இவற்றில் பயன்படுத்திட
பின்வரும் EVM யூனிட்டுகள் தயாராக உள்ளன.

6) வாக்களிக்கும் பகுதி (Ballot Unit) = 22.3 லட்சம் (M-3 வகை)
கட்டுப்பாடு யூனிட் (Conttrol Unit) = 16.3 லட்சம் (M-3 வகை)
VVPAT = 17.3 லட்சம் (M-3 வகை)
என்ற எண்ணிக்கையில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம்
EVMகள் உள்ளன. இவை அனைத்தும் M-3 வகை
எந்திரங்கள் ஆகும்.

7) M-1 மற்றும் M-2 வகை எந்திரங்கள் 2019 நாடாளுமன்ற மற்றும்
சட்டமன்றத் தேர்தல் பயன்பாட்டில் இல்லை. அவை
தேர்தல் ஆணையத்தின் பரணில் அடுக்கப் பட்டுள்ளன.

8) M-3 வகை எந்திரங்களில், ஒரு தொகுதியில் 384 வேட்பாளர்
வரை நிற்கலாம். ஒரு பாலட் யூனிட்டில் 16 வேட்பாளர்கள்
வரை இடம் பெறுவர். 24 பாலட் யூனிட்களை ஒன்றிணைப்பதன்
மூலம் 384 வேட்பாளர்கள் வரை (நோட்டா உட்பட )
(24 x 16 = 384) ஒரு தொகுதியில் உள்ளடக்கலாம்.

9) பழைய M-1 மற்றும் M-2 வகை எந்திரங்களில் ஒரு
தொகுதியில் EVM பயன்படுத்தப்பட வேண்டும் என்றால்,
வேட்பாளர்களின் எண்ணிக்கை 64 அல்லது 64க்குள்
இருக்க வேண்டும். அனால் இந்த M-3 வகை எந்திரங்களில்
வேட்பாளர்களின் எண்ணிக்கை 384 வரை இருந்தாலும் ,
EVM மூலமாகவே தேர்தல் நடத்த முடியும்.

10) அறிவியல் ஒளி பெப்ரவரி 2019 சிறப்பு மலரில்
வெளியாகி உள்ள நியூட்டன் அறிவியல் மன்றம்
எழுதியுள்ள மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலுமா என்ற கட்டுரையை
ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.
***********************************************

11) MP தேர்தலுக்கான டெபாசிட் தொகை எவ்வளவு?
பொதுத்தொகுதியாக இருந்தால் ரூ 25000. தனித்
தொகுதியாக இருந்தால் ரூ 12500.

12) 385 வேட்பாளர்களை நிறுத்தினால்தான் வாக்குச்சீட்டு
முறைக்கு மீண்டும் போக முடியும். அப்படியானால்,
385 வேட்பாளர்களுக்கும் டெபாசிட் தொகையாக
எவ்வளவு செலுத்த வேண்டி இருக்கும்?
ரூ 25000 x 385 =  ரூ 9,625,000 அதாவது ரூ 96 லட்சம்
வேண்டும். அதாவது ரூ 1 கோடி வேண்டும்.
***************************************************  

புதன், 20 மார்ச், 2019

ஆங்கிலம் தெரியாத முட்டாள்கள்!
----------------------------------------------------
ஆங்கிலம் இன்று தமிழர்கள் நடுவில்
பெரும் செல்வாக்குடன் உள்ளது.
இதற்கு வித்திட்டவர் அறிஞர் அண்ணாவே!
திமுக பெண் கவிஞர் சல்மா பெருமிதம்!

ஆங்கிலம் வாழ்க!
அறிஞர் அண்ணா வாழ்க!
ஆங்கிலம் தெரியாத முட்டாள்கள் ஒழிக!
தமிழ் ஒழிக!
-------------------------------------------------------------
On March 7, in a modest house overlooking a narrow street in Chennimalai in Tamil Nadu’s Erode, CP Poongodi, 42, lay on a shawl spread out on the floor, trying to sleep. It was the 20th day since her husband disappeared and she was no closer to finding him. She was exhausted, Poongodi said, physically and mentally.


Shanmugam Thangasamy, 52, an environmental activist better known as RS Mugilan, went missing not long after addressing a press conference in Chennai on February 15 where he accused senior police officials of colluding with Sterlite to “orchestrate violence” during protests against the company’s polluting copper smelter in Thoothukudi in May last year. He named then Inspector General of Police Shailesh Kumar Yadav and his deputy Kapil Kumar Saratkar, who were both transferred after the police firing on the protesters killed at least 13 people.
After they were married in 1996, Poongodi said, Mugilan encouraged her to study desktop publishing. A year later she set up a small designing and printing shop in Chennimalai. The shop, two houses away, has been shut since Mugilan went missing.
“He always encouraged me to live independently, without being dependent on him,” said Poongodi. “He spent most of his time working on environmental issues. And he would seldom stay home.”
Indeed, despite all the hardship, she made sure to send their only son back to college in Coimbatore where he is studying for a master’s in environmental science. She also sent her mother-in-law to stay with a relative in Chennai, Poongodi said, because the aged woman would weep whenever anybody came asking about Mugilan and it was taking a toll her health
The day before he disappeared, Mugilan released a video titled Sterlite Hidden Truth in which he accused the police officers Saratkar and Yadav of colluding with Sterlite officials to unleash violence during the May 22 protests. Separately, in a press statement, he accused the police of burning vehicles and blaming anti-Sterlite protestors.
He reiterated his allegations at the press conference in Chennai the following day. Afterwards, Mugilan met VP Ponnarasan and some other friends. At around 10.30 pm, Ponnarasan and Mugilan reached the Egmore railway station. While Ponnarasan took the Mangalore Express to Karur, Mugilan boarded a train to Madurai. He never reached.
According to his friends, Mugilan feared he had put his life in danger by addressing the press conference. Sridhar Nedunchezhyian, the last person Mugilan apparently spoke to, at around 10.55 pm on February 15, said the activist shared his fears with him.

“So I asked him how he was travelling and what time he expected to reach Madurai,” said Nedunchezhiyan, who resides in the city. “He had received threats from Sterlite and police. The train was supposed to reach Madurai at around 10.30 am but it came only at 2.30 pm. Why was there such a long delay?”
When Nedunchezhiyan could not contact Mugilan on his phone, he went looking for him at the railway station. “We knew something had gone wrong when we could not trace him anywhere,” he said.
He informed some other friends and when they all failed to locate the activist, they approached the High Court on February 18, filing a habeas corpus petition through the advocate Henri Tiphagne. The petition was heard the same day. The court issued notices to the Chennai police commissioner as well as the police chiefs of Villupuram and Kanchipuram.
When the plea came up for the next hearing on March 4, the police denied Mugilan was in their custody. The next day, The Times of India reported that the government’s counsel had also informed the court that the inquiry into the activist’s disappearance was being conducted by the Crime Branch, which had already questioned at least 148 people. The court directed the Crime Branch to file a status report and adjourned the matter till March 18.
Among those questioned were some of Mugilan’s friends. They alleged that the Crime Branch only posed “irrelevant questions”. “I was asked who Henri Tiphagne was, how he had engaged Sudha Ramalingam as the lawyer and why she was ready to assist without taking fees,” said I Aseervatham, Tamil Nadu coordinator of the human rights group People’s Watch whom Mugilan had contacted a day before he went missing. “All this is irrelevant to the case. We have filed a petition asking them to trace Mugilan. Why are the police asking such questions instead of trying to find Mugilan’s whereabouts?”
Gunaselan added, “It is not the Crime Branch is incapable of doing it. With the latest technology, it is very easy to track a person through his phone or trace him using the CCTV footage.”
Gunaselan, who was also questioned, said the police asked him why the activist had contacted him and how he met his expenses. “I told them Mugilan had spoken to me about the threat he was facing for exposing Sterlite and also the sand mining mafia,” he added. “They did not note this down. We are ready to cooperate with the inquiry, but why are they not asking relevant questions?”

கோடெஸி Scroll in