செவ்வாய், 29 நவம்பர், 2022

கடவுள் நம்பிக்கை எவ்வளவு காலம் நீடிக்கும்?
எப்போதுதான் முடிவுக்கு வரும்?
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திலும் கடவுள் என்பவர் 
எங்குமே இல்லை. என்றுமே இருந்ததும் இல்லை.
God does not exist.

ஆனாலும் இல்லாத கடவுளின் மீதான நம்பிக்கை 
மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆறறிவு  
வரையிலான அனைத்து உயிர்களிலும், மனிதனுக்கு 
மட்டுமே கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. 

பிற எந்த விலங்கிற்கோ, பறவைக்கோ, 
புழு பூச்சிகளுக்கோ, மீன்களுக்கோ 
கடவுள் என்ற கோட்பாடே (concept) கிடையாது.
கடவுள் என்ற perceptionஏ ஒன்று முதல் ஐந்தறிவு
வரையிலான எந்த உயிர்களுக்கும் கிடையாது. 
அது மனிதனுக்கு மட்டுமே உரித்தான ஒரு உணர்வு.

ஆதி மனிதர்களிடம் கடவுள் என்ற கோட்பாடே 
கிடையாது. அப்படி ஒரு கோட்பாடு அன்று 
விலங்கோடு விலங்காக வாழ்ந்த அத்தொடக்க கால 
மனிதர்களிடம் இல்லை. கடவுள் என்ற கோட்பாடே 
உருவாகாதபோது கடவுள் மீதான நம்பிக்கை 
எப்படி உருவாகும்?

மனிதன் இயற்கையை ஓரளவு அறிந்த பின்னர், 
இயற்கையை தனக்கு உகந்தவாறு மெதுமெதுவாக 
மாற்றியமைக்கத் தொடங்கிய பிறகு, ஓரளவு 
சிந்திக்கத் தொடங்கிய பிறகு,இயற்கையின் 
பிரம்மாண்டத்தின் முன் தன்னைத் தூசென 
உணர்ந்தான்.இயற்கையை வணங்கத் 
தொண்டங்கினான்.

இயற்கையோடு தொடர்ந்து வினைபுரிந்து வந்த 
மனிதன், அவ்வினையின் ஊடும் தொடர்ந்த 
சிந்தனையின் ஊடும் படைப்பு (creation)  
என்னும் கருத்தாக்கத்துக்கு வந்து படைத்தவன் 
ஒருவன் இருக்கக் கூடும் என்று முடிவெய்தி 
கடவுளைப் படைத்தான்.

மனித அறிவுதான் கடவுளைப் படைத்தது.
மனித சிந்தனைதான் கடவுளைப் படைத்தது.
மனிதனின் படைப்பிலேயே மிகவும் எளியதும் 
மிகவும் ஆற்றல் மிக்கதுமான படைப்பு கடவுள்தான்.

இதுதான் ஒளிவீசும் உண்மை! இதற்கு மாறாக, 
கடவுள்தான் அனைத்தையும் படைத்தார் என்று 
கூறுவது பேதைமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.

கடவுள் என்ற ஒருவர் மனிதனால் படைக்கப்பட்டது 
முதலே, அப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா என்ற 
கேள்வியும் கூடவே எழுந்தது. இது குறித்த வாதப் 
பிரதிவாதங்கள் மனிதர்களிடம் ஆதி முதலே 
தலையெடுத்தன. ஸ்டீபன் ஹாக்கிங் இதை 
பண்டைய முரண்பாடு (ancient conflict) என்கிறார்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் 
இன்றும் தொடர்கிறது; நாளையும் தொடரும்.
சரி, என்றுதான் இந்த விவாதம் முடிவுக்கு வரும்?

இந்த விவாதத்துக்கு முடிவே இல்லை. முடிவு 
இருக்கவும் இயலாது. ஏனெனில் கடவுள் இல்லை 
என்ற உண்மையும், கடவுள் இருக்கிறார் என்ற 
கற்பனையும் ஒருபோதும் ஒரு புள்ளியில் 
வெட்டிக் கொள்ளாது (will never intersect).

அடுத்து, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி 
சமூக-அரசியல் கேள்வி அல்ல. அது தத்துவக் 
கேள்வி (It is a philosophical question). பொருள்முதல்வாதமும்         
கருத்துமுதல்வாதமும் இறுதிவரை இருந்து கொண்டே 
இருக்கும். காலப்போக்கில் ஒன்று வலிமை 
பெறுவதும், இன்னொன்று வலிமை குன்றுவதும்  
நிகழும். ஆயினும் அவை இரண்டும் இருந்து 
கொண்டே இருக்கும். அவற்றுள் எந்த ஒன்றும் 
இறந்து விடாது.

எனவே கடவுள் இருக்கிறார், இல்லை என்னும் நிலை 
50:50 என்ற விகிதத்தில் இருந்து காலப்போக்கில் 
சமநிலை குலைந்து, 05:95 என்ற நிலைகூட வரக் 
கூடும். எனவே கடவுள் இருக்கிறாரா என்ற விவாதம் 
ever greenஆக இருந்து கொண்டே இருக்கும்.
***************************************   
  

      

மூல ஆசான்கள் மார்க்ஸ் எங்கல்சோ அல்லது 
தோழர் ஏ எம் கே அவர்களோ எவரும் 
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.
எனவே ஏ எம் கே அவர்களை தாராளமாக 
விமர்சிக்கலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சி
மேலிட்டு ஏ எம் கே மீது அவதூறுகளை 
வாரிஇறைப்பது ஏற்புடையதல்ல. அது 
தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

2018ல் ஏ எம் கே அவர்கள் மறைந்தபோது,
பலரும் அஞ்சலை செலுத்தினர்; பல 
அமைப்புகளும் இரங்கல் தெரிவித்து 
அறிக்கை வெளியிட்டன. 

ஆனால் வினவு இணையதளமோ, மாநில 
அமைப்புக் கமிட்டியோ (SOC) ஏ எம் கே
மறைவுக்கு எந்த இரங்கல் குறிப்பும் 
வெளியிடவில்லை.

இப்படிப்பட்ட வினவு தரப்பினர், அதாவது 
பிளவுண்ட இவர்களின் எல்லாத் தரப்பினருமே 
ஏ எம் கே அவர்களின் தியாக வாழ்வுக்கு உறை 
போடக் காண மாட்டார்கள்.

BHEL நிறுவனத்தில் பெல் சிட்டி ஊழல் என்று 
பல கோடி ரூபாய் ரியல் எஸ்டேட் ஊழல் செய்த 
பேர்வழிகளைக் கொண்ட வினவு ஆசாமிகள், 
தியாகத்தின் சுடரொளியாய்த் திகழும் கடந்த 
அரை நூற்றாண்டு காலமாக குடும்பத்தைத் 
துறந்து, சுகங்களைத் துறந்து புரட்சிக்குத்
தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட 
ஏ எம் கே அவர்களை பற்றிப்பேச எந்த 
அருகதையும் இல்லை. இதை வினவு-மகஇக-SOC 
மற்றும் மருதையனின் வினைசெய் 
கும்பல் உணர்வது நல்லது.  
       
        
 1990களில் சோவியத் வீழ்ந்தது.கிழக்கு ஐரோப்பிய 
நாடுகளில் சோசலிசம் என்ற பெயரிலான 
கொடுங்கோல் ஆட்சியும் ஊழல் ஆடம்பரமும் 
வெளிப்பட்டன. முன்னதாக 1980ல் 
பின்நவீனத்துவம் மெதுமெதுவாக இந்திய 
அரசியலை விழுங்கி கொண்டிருந்தது.
ஏகாதிபத்திய NGOக்கள்   
 

ஞாயிறு, 27 நவம்பர், 2022

 Answers (QUIZ on COP-27)
---------------------
GENERAL HINTS
--------------------------
Gases that trap heat in the earth's atmosphere are Green house gases.
They are:
1) CO2
2) CH4
3) N2O
4) FLUORINATED GASES:
Hydrofluro carbons
perfluro carbons
sulpherhexa fluoride
Nitrogen trifluoride  
5) water vapour 
6) ozone
-----------------
CO2 LEVEL 2021 = 414.72 ppm.
----------------

QUIZ ON COP-27. ANSWERS with Notes.
-----------------------------------------------
1) Sharm El Sheikh, Egypt.
2) Antonio Guterres
3) 15 days. Nov 6-20.
4) over 35,000. (Thirtyfive thousand) 
5) Paris agreement. Was made in 2015. This is legally binding.
Agreed to by 196 countries which participated in COP 21.

6) 1.5 degree Celsius. The global temperature increase should be 
restricted to 1.5 degree C to 2 degree C. But preferably 1.5 degree C.
7) Glasgow, UK.
8) Yes; it was so decided.
9) From among the DEVELOPING countries, those countries which are 
VULNERABLE to climate induced disasters alone are eligible.
In short vulnerable developing countries.
10) IPCC =Inter governmental Panel on Climate Change.

11) Green house gases.
Carbon di oxide
Methane
Nitrous oxide
Water vapour
Ozone
Hydrofluro carbons
etc etc. ( See the list at the top)

12) ppm = parts per million.
13) CO2. (Carbon di oxide).
14) 414.72 ppm. But this answer will do: CO2 level has crossed 400.
15) Nitrogen. It is 78 per cent.(Next is Oxygen which is 21 per cent)

16) CO2. (Carbon di oxide)
17) solar energy, wind energy, nuclear energy etc.
18) Aralvoymozhi (Muppandhal) is famous for WIND MILLS
and wind energy generation. It is  the biggest cluster of wind mills 
which may be around several thousands.
19)  Bhadla solar park in Jodhpur district, Rajasthan.
20) 1.4 million is the number of all vehicles 
(2, 3 and 4 wheelers taken together). The answer 1 million
is enough. A n approximate figure only is asked.
************************************************        
 

சனி, 26 நவம்பர், 2022

காட்சி கண்கொள்ளாக் காட்சி!
ஏவுகணை மூலம் செயற்கைக்கோளை 
விண்ணில் செலுத்தும் காட்சி!
போலிப்பகுத்தறிவுவாதிகளின் புறக்கணிப்பு ஏன்?
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
கண்ணுள்ளவர் காணக் கடவர்!
சென்னைக்கு மிக அருகில் உள்ள ஊர் ஸ்ரீஹரிகோட்டா!
விண்கலன்களை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் 
ஏவுதளம் இங்கு உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தது.
இது ஒரு கடற்கரையோரச் சிறுநகரம். சென்னையில் 
இருந்து சுமார் 100 கிமீ தூரம்! 2 மணி நேரப் பயணம்! 
அவ்வளவுதான்! 

நான் பணியாற்றிய தொலைதொடர்பு 
அலுவலகத்தில், 1970களிலேயே 
ஸ்ரீஹரிகோட்டா-சென்னை ஒரு ஹாட்லைன் 
உண்டு. டெலிபிரிண்டர்/டெலக்ஸ் லைன், 
டெலிபோன் லைன் (STD) ஆகிய ஹாட்லைன் 
வசதி உண்டு. சர்க்யூட்டின் பெயர் 
ஷார் (SHAR). இப்போதும் அதே பெயர்தான். 
 அப்போதெல்லாம் ஸ்ரீஹரிகோட்டா ஒரு 
coastal villageதான்.

நீங்கள் ஸ்ரீஹரிகோட்டா போய் இருக்கிறீர்களா?
இல்லை எனறு சொல்கிறீர்கள். சொல்லிக் கொள்ளுங்கள்!
நான் போயிருக்கிறேன்.

ஜெருசலேம், மெக்கா, காசி போகிறோமோ இல்லையோ 
ஸ்ரீஹரிகோட்டா போக வேண்டும். ஒரு அறிவியல் 
மாணவனுக்கு, ஒரு அறிவியல் ஆர்வலனுக்கு,
ஸ்ரீஹரிகோட்டாதான் ஜெருசலேம்.

அடிக்கொருதரம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயற்கைக் 
கோள்களைச் சுமந்து கொண்டு ஏவுகணைகள்
விண்ணில் செலுத்தப் படுகின்றன. இன்றைய நாள் 
(26 நவம்பர் 2022) அப்படிப்பட்ட ஒரு பொன்னாள்.

இன்று காலை 1156 மணிக்கு PSLV C-54 XL என்னும் 
ஏவுகணை, மொத்தம் 9 செயற்கைக் கோள்களைச் 
சுமந்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் 
விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் 
இருந்து விண்ணில் செலுத்தப் பட்டது.

இக்காட்சியைத் திரளான பொதுமக்களும் 
மாணவர்களும் அறிவியல் ஆர்வலர்களும்          
நேரில் கண்டு களித்தனர்.

எப்போதெல்லாம் ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப் 
படுகின்றனவோ, அப்போதெல்லாம் அக்காட்சியை 
வந்து காணுமாறு பொதுமக்களை இஸ்ரோ 
அழைக்கிறது. இஸ்ரோவின் அழைப்பை ஏற்று 
ஐஐடி மாணவர்கள், ASTROPHYSICS மற்றும் PHYSICS 
மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள் வந்து 
பார்க்கின்றனர்.

அரசுப்பள்ளி மாணவர்களை அங்குள்ள அறிவியல் 
ஆசிரியர்கள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்து வர 
வேண்டும். அங்கு நடைபெறும் நிகழ்வுகளை 
மாணவர்கள் நேரில் பார்ப்பதானது பாடப் 
புத்தகத்தில் உள்ள இரண்டு அத்தியாயங்களைப் 
படித்து முடிப்பதற்குச் சமம்.

நம்மூருக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அது என்ன 
தெரியுமா? இங்குதான் போலிப்பகுத்தறிவுவாதிகள் 
மிகவும் அதிகம். விடுதல் வீரமணி, கொளத்தூர் 
மணி, கோவை ராமகிருஷ்ணன் என்று ஆளுக்கொரு 
அமைப்பு வைத்துக் கொண்டு போலிப்பகுத்தறிவை 
விலைக்கு விற்றுக் காசு பார்க்கும் கபோதிகள்
நிறைந்த மாநிலம் நம் தமிழ்நாடு!

இந்தியா தனது முதல் ஏவுகணையை எப்போது 
விண்ணில் செலுத்தியது? மாணவர்களும் போட்டித் 
தேர்வு எழுதுபவர்களும் இக்கேள்விக்குச் சரியான 
பதிலை அளிக்க வேண்டும். (இது குறித்து முழு 
விவரமும் அறிய விரும்புவோர் அறிவியல் ஒளி 
இதழில் (செப்டம்பர் 2022) நான் எழுதிய கட்டுரையைப் 
படிக்கலாம்).

அன்று முதல் இன்று வரை இஸ்ரோ பல நூற்றுக் 
கணக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் 
செலுத்தி உள்ளது. அந்நிகழ்வுகளை ஆயிரக் 
கணக்கான பொதுமக்கள் நேரில் கண்டு 
களித்துள்ளனர்.

ஆனால் என்றைக்காவது வீரமணி, கொளத்தூர் மணி, 
விடுதலை ராசேந்திரன் வகையறாக்கள் ஸ்ரீஹரிகோட்டா 
சென்று ஏவுகணை விண்ணில் செலுத்தப் படுவதைப் 
பார்த்து இருக்கிறார்களா?

அல்லது தங்கள் கட்சித் தொண்டர்களை, "போய்ப்
பார்த்து விட்டு வாருங்கள்" என்று ஸ்ரீஹரிகோட்டாவுக்கு 
அனுப்பி வைத்து இருக்கிறீர்களா? கிடையாது.

ஏனெனில் அவர்கள் போலிப் பகுத்தறிவுவாதிகள்!
அவர்கள் யாரும் பொருள்முதல்வாதிகள் அல்ல.

வாசகர்களே,
அடுத்த satellite launchன்போது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு 
நேரில் சென்று launch நிகழ்வைக் கண்டு களியுங்கள்.

இன்றைய launchன்போது போய்ப்பார்க்க எனக்கும் 
ஆசைதான்! இப்போது இயலாது. உடலும் வயதும் 
அனுமதிக்க மறுக்கின்றன. நான் ஏற்கனவே 
போயிருக்கிறேன். போக வேண்டிய எல்லா இடத்துக்கும் 
அநேகமாக நான் போயிருக்கிறேன். இதுவரையிலும் 
போகாத, இனிமேல் போக வேண்டிய ஒரு இடம் 
இருக்கிறது. அது சுடுகாடுதான்!

ஆனால் அங்கும் நான் செல்லப் போவதில்லை. என் 
உடலை மருத்துவக் கல்லூரிக்கு முழுஉடல்தானம் 
என்று எழுதி வைத்து விட்டேன்.

இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு, இஸ்ரோவின்
அடுத்த launchன்போது ஒன்றிரண்டு பேராவது 
சென்றால், நான் பிறவிப்பயனை எய்தி விடுவேன்.
****************************************************                     

   




வெள்ளி, 25 நவம்பர், 2022

 QUIZ on COP-27
----------------------
Answer all the questions.
All questions carry equal marks.
Maximum marks: 20 x 1 = 20.               Time: 20 minutes.
-------------------------------------------------------------------------
1) In which city was the UN conference on climate change, COP-27 held?
2) Who is the present Secretary General of UNO?
3) What was the duration in terms of days of the COP-27?
4) What was the total number of participants in the COP-27?
5) Name the international treaty on climate change which was adopted 
at COP-21.

6) What is the target limit of temperature increase prescribed for the earth 
to be safe from global warming?
7) Where was the previous climate convention, COP-26 held?
8) Was it decided to establish a compensatory fund for 
climate induced disasters in COP-27? 
9) Which type of countries were declared eligible to receive the compensation 
towards climate induced disasters in COP-27?
10) What is the full form of IPCC?

11) Name few green house gases.
12) Give the full form of the most frequently used unit "ppm."
13) Of all the green house gases, which gas does contribute more 
to global warming? 
14) What was the level of CO2 in earth's atmosphere at the end of the year 2021?  
15) Which gas is the major constituent of the earth's atmosphere? 

16) Which gas is sent into the atmosphere by burning fossil fuels?
17) Name any two renewable energy sources.
18) What Aralvoymizhi of Kanyakumari district is famous for? 
19) Name the largest solar power plant of India.
20) How many electric vehicles (2, 3 and 4 wheelers) are on 
the road in India now? Give a figure of fair approximation.
---------------------------------------------------------------------------
பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் 
வீரஞ்செறிந்த போராட்டங்களின் 
பின்னர் தொழிற்சங்கம் அமைக்கும் 
உரிமைக்கான சட்டத்தை 
(Indian Trade Union Act 1926) பிரிட்டிஷ் 
அரசு கொண்டு வந்தது. இந்தியாவில் 
தொழிற்சங்க உரிமைகளை 
கம்யூனிஸ்டுகள் போராடிப் பெறறார்கள்.
 
இதைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் 
அரசு மீரத் சதி வழக்கை கம்யூனிஸ்ட் 
தலைவர்கள் மீது சுமத்தியது. இது 
நடந்தது 1929ல். எஸ் ஏ டாங்கே, 
எஸ் வி காட்டே, முசாபர் அகமது 
ஆகிய தலைவர்கள் மீது சதி வழக்கைத் 
தொடுத்து அடக்குமுறையை ஏவியது 
பிரிட்டிஷ் அரசு.

மும்பை நகரில் உள்ள தொழிலாளர்கள் 
அன்று நியாயமான கோரிக்கைகளுக்காக 
AITUC தலைமையில் போராடியபோது 
பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு ஆதரவான 
நிலை எடுத்து தலித் தொழிலாளர்கள் 
வேலைநிறுத்தம் செய்ய மாட்டார்கள் 
என்று அறிவித்தார் அம்பேத்கார்.

எஸ் ஏ டாங்கே, எஸ் வி கட்டே, முசாபர் 
அகமது மீது சதி வழக்கும் சிறையும்.
ஆனால் அம்பேத்காரை அரவணைத்தது 
அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய 
அரசு. இதில் எங்கே இருந்து நட்பு 
முரண்பாடு வர வாய்ப்பு உள்ளது? 

பிரிட்டிஷுக்கு அடிமைபட்டுக் கிடந்த 
காலத்தில் இந்திய சமூகத்தின் 
பிரதான முரண்பாடு எது?
அடிமைப் படுத்திய பிரிட்டிஷாருடன் 
உள்ள முரண்பாடுதான்  பிரதான 
முரண்பாடு. சாதிப் பிரச்சினை, 
மொழிப்பிரச்சினை, பெண்ணுரிமைப் 
பிரச்சினை ஆகிய அனைத்தும் 
பிரதான முரண்பாடுகள் அல்ல.

அம்பேத்கார் மிகவும் தெளிவாகவும் 
உணர்வுபூர்வமாகவும் பிரிட்டிஷ் 
ஏகாதிபத்தியத்தை  ஆதரித்தார். 
பிரிட்டீஷாரின் நம்பகமான விசுவாசியாக
இருந்தார். கோட்பாட்டு ரீதியாக 
கம்யூனிசத்தை எதிர்த்தார். எனவே 
அவருடன் கம்யூனிஸ்டுகளுக்கு 
இருந்த முரண்பாடு நட்பு முரண்பாடு அல்ல.
நட்பு முரண்பாடு இருக்கவும் இயலாது.

  
 
  சதி வழக்கும் சிறையும்! ஆனால்   

வியாழன், 24 நவம்பர், 2022

 உலகக் கோப்பை கால்பந்தில் இந்தியா பைனல்சுக்கு முன்னேறும் என்ற ஒரு கழுமாரிப் பயலின் முதுகுத் தொலியை உரிக்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி!

புதன், 23 நவம்பர், 2022

ஏக இந்தியப் புரட்சியும் பின்நவீனத்துவமும்!
தேசிய இன விடுதலைக்கான  முன்நிபந்தனை எது?
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------
1) இந்தியப் புரட்சி என்பது ஏக இந்தியப் புரட்சிதானே 
தவிர தேசியஇனவாரியான தனித்தனிப் புரட்சி அல்ல.

2) ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியாகப் புரட்சி
நடத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவது 
மார்க்சிய லெனினியத்துக்கு விரோதமானது.   

3) ஜனநாயகப் புரட்சியாக இருந்தாலும் சரி,
சோஷலிஸப் புரட்சியாக இருந்தாலும் சரி,
அது அகில இந்தியா முழுமைக்குமான புரட்சியாக 
இருக்க வேண்டும். அதாவது இந்தியாவில் உள்ள 
அனைத்து தேசிய இனங்களுக்குமான ஒருங்கிணைந்த 
புரட்சியாக இருக்க வேண்டும்.

4) இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடமாக 
இருப்பதாகக் கொண்டாலும், அதை முன்னிட்டு, 
ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியாகப் புரட்சி 
செய்வதற்கான நியாயம் அமைந்து விடவில்லை.

5) புரட்சி வெற்றியடைந்து பாட்டாளி வர்க்க அரசு 
அமைந்தவுடன் தேசியஇனங்கள் அனைத்துக்கும் 
சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டு விடும்.
இந்த உரிமை பிரிந்து போகும் உரிமையையும் 
உள்ளடக்கியதாகும்.

6) தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை முதல் 
விடுதலை வரையிலான சிக்கல்கள் அனைத்தும்,
(தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பது 
உள்ளிட்டு) பாட்டாளி வர்க்கப் புரட்சியுடனும் 
சோஷலிசத்துடனும்  பிணைக்கப் பட்டவை.
புரட்சி வெற்றி அடைந்த ஒரு சோஷலிச சமூக 
அமைப்பில்தான் தேசிய இன்ச் சிக்கல்கள் 
அனைத்துக்கும் தீர்வு கிட்டும். சோஷலிசத்துக்கு 
முன்பு தேசியஇனச் சிக்கல்களுக்கு எவ்வித விடிவும் 
கிட்டாது. நிலவுகிற முதலாளிய சமூக அமைப்பிலேயே 
தேசிய இனச்சிக்கல்களைத் தீர்த்து விட முடியும் 
என்று எண்ணுவது பகல் கனவு காண்பதாகும்.
சுருங்கக் கூறின், சோசலிசம் இல்லாமல் தேசிய இன
விடுதலை சாத்தியமே இல்லை.

7) சமூக மாற்றம் இல்லாமல் தேசிய இன விடுதலை இல்லை.
சோஷலிசத்துக்கான பாடத்தையைக் கடக்காமல் 
தேசிய இன விடுதலைக்கான பாதையை அடைய 
முடியாது.

8) நிலவுகிற முதலாளிய சமூக அமைப்பிலேயே 
தேசிய இன விடுதலையை அடைந்து விடலாம் 
என்பது பின்நவீனத்துவக் கண்ணோட்டம் ஆகும்.
பின்நவீனத்துவத்தின் சாராம்சம் என்னவெனில், 
எதையும் துண்டு துண்டாக உடைப்பதாகும்.
இது ஆங்கிலத்தில் fragmentation எனப்படுகிறது.

9) பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முழுமையைத் 
தகர்த்து, சாதிய விடுதலை தனி, பெண்ணிய 
விடுதலை தனி, தேசியஇன விடுதலை தனி என்று 
ஒவ்வொன்றையும் பகுதி பகுதியாகப் பிரித்து 
இறுதியில் புரட்சியைச் சீர்குலைக்கும் நோக்குடனே 
பின்நவீனத்துவம் தேசிய இந விடுதலையின் மீது 
கவனத்தைக் குவிக்கிறது. இந்த வஞ்சக வலையில் 
பாட்டாளி வர்க்கமோ கம்யூனிஸ்டுகளோ விழுந்து 
விடக்கூடாது.

10) புரட்சி என்பது ஆளும் வர்க்கத்தை அதன் ஆட்சிப் 
பரப்பு முழுவதிலும் (entire jurisdiction) எதிர்ப்பதாகும்.
தமிழ் தேசிய இனம் மட்டும் தனித் தமிழ்நாட்டுக்கான
"புரட்சி"யை தமிழ்நாட்டின் எல்லைக்குள் மட்டும் 
நடத்துமென்றால் என்ன ஆகும்? ஆளும் வர்க்கத்தை 
அதன் ஆட்சிப் பரப்பு முழுமையிலும் எதிர்க்கும் 
கடமையில் இருந்து வழுவி, ஆளும் வர்க்கத்தின் 
மீதான அடையாள எதிர்ப்பாக மட்டுமே சுருங்கிப் 
போகும். வர்க்கப் போராட்டமாக மலராது.

11) டிராட்ஸ்கியவாதிகள் தனியொரு நாட்டில் புரட்சி 
என்பதை ஏற்காதவர்கள். ஒரு நாட்டில் மட்டும் 
தனியாகப் புரட்சி நடத்த முடியாது என்னும் 
அவர்களின் கொள்கை திருத்தல்வாதம் ஆகும்.
அதற்கு மாறாக, பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு 
இரையான குட்டி முதலாளித்துவர்கள் ஒரு நாட்டுக்கு 
உள்ளேயே ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் 
தனித்தனிப் புரட்சியைப் பரிந்துரைக்கிறார்கள்.
இந்தியாவில் இருபது தேசிய இனங்கள் இருக்குமென்றால்,
இந்தியாவுக்கு உள்ளேயே இருபது தனித்தனிப்
புரட்ச்சிகளை நடத்த வேண்டும் என்கிறார்கள் 
குட்டி முதலாளிய பின்நவீனத்துவர்கள். இது
கோமாளிக்கூத்து மட்டுமல்ல, திருத்தல்வாதமும் ஆகும்.

12) இந்தியாவில் புரட்சி  நடந்து பாட்டாளி வர்க்க 
அரசு காலை 10.00 மணிக்கு பதவி ஏற்குமெனில், 
காலை 10.01 மணிக்கு தேசிய இனங்களின் 
பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும். 
பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய  
உரிமை வழங்கப்படும். இது உறுதி.சோஷலிசம் வரும்வரை 
காத்திருப்பதைத் தவிர தேசிய இனங்களின் சுயநிர்ணய 
உரிமை அல்லது விடுதலைக்கு வேறு குறுக்கு வழி 
எதுவும் இல்லை.

13) இதுதான் இன்றைய உலக ஒழுங்கு (world order).
ஏகாதிபத்தியம், பாட்டாளி வர்க்கப் புரட்சி என்னும் 
இரண்டின் சகாப்தமான நமது சமகால உலகில்,
இன்றைய உலக ஒழுங்கு இப்படித்தான் இருக்கிறது 
எனும்போது, சோஷலிசத்திற்குக் குறைவான எதுவும்  
தேசிய இனங்களின் விடுதலையைப் பெற்றுத்  தராது. 
தேசிய இனங்களின் விடுதலையைச் சாதிக்க 
சோஷலிசத்தை அடைய வேண்டும் என்பது 
முன்நிபந்தனை ஆகும். இதைத்தவிர ஏனைய 
தீர்வுகள் போலியானவை மட்டுமல்ல; அவை 
அப்பட்டமான கற்பனாவாதம் ஆகும். 

இது உண்மை! இது மட்டுமே உண்மை!
மார்க்சிய லெனினியம் வழங்கும் தீர்வு இது.
இது மட்டுமே தீர்வு. 
*********************************************

  


 
             

  

செவ்வாய், 22 நவம்பர், 2022

 தமிழ் இளைஞர்களின் தாழ்வு மனப்பான்மை!

பெ மணியரசன், சீமானின் தடித்தனம்!

-----------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------

போனவாரம் (19.11.2022) முக்கியமான ஒரு தேர்வு நம் 

தமிழ்நாட்டில் பல மையங்களில் நடைபெற்றது.

ரன்ன தேர்வு அது?


அது TNPSC தேர்வு. அதிலும் GROUP I தேர்வு.

Prelim  என்னும் தொடக்கநிலைத் தேர்வு.


Group I தேர்வு என்றால் அதிகாரிகளை 

நியமிப்பதற்கான தேர்வு. தேர்வில் தேறி வேலை 

கிடைத்தால், எடுத்த எடுப்பிலேயே அதிகாரம் 

மிக்க உயர் அதிகாரி பதவி கிடைக்கும். பச்சை 

மையால் கையெழுத்திடலாம். கெஜட் பதிவு 

பெற்ற அதிகாரி வேலையை தங்கத் தாம்பாளத்தில்

வைத்துக் கொடுப்பார்கள்.


இந்தத் தேர்வில் 

1) தமிழர்கள்

2) தென்னிந்தியர்கள் (மலையாளி, தெலுங்கர், கன்னடர்)

3) வட இந்தியர்கள்         

உள்ளிட்ட மூன்று தரப்பினர் கலந்து கொண்டனர்.


வட இந்தியர்களிலும் தென்னிந்தியர்களிலும் 

அநேகமாக விண்ணப்பித்த அனைவரும் 

தேர்வு எழுதி விட்டனர். ஆப்சென்ட் ஆனவர்கள் 

மிக மிகக் குறைவு.  1 சதவீதம் மட்டுமே ஆப்சென்ட் 

ஆயினர்.


ஆனால் முட்டாள் தமிழர்கள் இவ்வளவு முக்கியமான 

தேர்வில் அக்கறை காட்டவில்லை. 41 சதவீதம் பேர்

ஆப்சென்ட் ஆனார்கள். 5 சதவீதம் வரையிலான 

absentism இயல்பானது. ஆனால் முட்டாள் தமிழன் 

41 சதவீதம் பேர் இத்தேர்வை எழுதவில்லை.

பின்பு வேலை எங்கிருந்து கிடைக்கும்?


எட்டுக்கோடித் தமிழர்களையும் தொடர்ந்து 

காலங்காலமாக தாழ்வு மனப்பான்மையில் 

ஆழ்த்தி வைத்திருக்கிறது திராவிட இயக்கம்.

ஈ வே ராமசாமி, அண்ணாத்துரை, கருணாநிதி என்று 

திராவிடத் தலைவர்களும், விசிக போன்ற 

தாழ்வு மனப்பான்மையின் ஊற்றுக் கண்ணாகத்

திகழும் மக்கள் விரோத அமைப்புகளும் 

`தேர்வுகளை சந்திக்க அஞ்சும் கோழைகளாக 

தமிழ் இளைஞர்களை மாற்றி விட்டனர்.


இதனால்தான் தமிழ் இளைஞர்கள் தேர்வு 

என்றதுமே தீயை மிதித்தால் போன்று 

அலறுகின்றனர். உலகம் மொத்தமும் 

உள்ள தாழ்வு மனப்பான்மையைத் தங்களின் 

மூளைகளில் ஏற்றிக் கொண்டு வாழத் தகுதியற்ற 

மாமிசப் பிண்டங்களாக உயிர் பிழைத்துக் 

கொண்டிருக்கின்றனர்.


பெ மணியரசன், சீமான் போன்ற தற்குறித்

தலைவர்களுக்கு இது தெரியுமா?

ஒரு இழவும் தெரியாது. இந்தத் தற்குறிகளை

சும்மா விடலாமா?

******************************************************  


       

ஞாயிறு, 20 நவம்பர், 2022

விண்வெளியில் செலுத்தப்பட்ட ஒரு ராக்கெட்!
விண்வெளி வரலாற்றில் ஒரு மைல்கல்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------
டாக்டர் விக்ரம் சாராபாய் தெரியுமா?
இஸ்ரோவின் தலைவர்! இந்திய விண்வெளிச் 
சாதனைகளின் தந்தை!

அவருடைய பெயரில் ஒரு ராக்கெட்.
அதுதான் விக்ரம்!

எலான் மஸ்க் தெரியுமா? தெரியாதவர்கள் 
எலான் மஸ்க் என்ற தலைப்பில் அறிவியல் ஒளி 
ஏட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய 
கட்டுரையைப் படிக்கலாம்.

எலான் மஸ்க் ஒரு விண்வெளி நிறுவனத்தை 
நடத்தி வருகிறார். அதன் பெயர் ஸ்பேஸ் எக்ஸ்.
அது ஒரு தனியார் நிறுவனம்.

அது போலஇந்தியாவிலும் விண்வெளித் தனியார் 
நிறுவனம் ஒன்று உள்ளது. அதன் பெயர் 
ஸ்கை ரூட் (SKYROOT). 
முழுப்பெயர் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ். 

ஸ்கைரூட்டின் உரிமையாளர் யார்?
இருவர். இவ்விருவரும் முன்னாள் இஸ்ரோ 
விஞ்ஞானிகள்.
1) பவன் குமார் சந்தனா. இவர்தான் CEO. 
2) நாக பாரத் டக்கா.

அங்கே எலான் மாஸ்க்! ஸ்பேஸ் எக்ஸ்!
இங்கே ஸ்கைரூட்! பவன் குமார் சந்தனா!

ஸ்கைரூட் நிறுவனம் அண்மையில் நவம்பர் 18ல் 
(18.11.2022) காலை 11.30 மணியளவில் விக்ரம்-எஸ் 
என்ற ராக்கெட்டை விண்வெளியில் வெற்றிகரமாகச்
செலுத்தியது.

1) இது தனியாரால் உருவாக்கப்பட்ட ராக்கெட்.
2) இதன் நிறம் வெள்ளை மற்றும் நீலம். 
3) இதன் நிறை = 546 கிலோகிராம்.
4) ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி 
மையத்தில் இருந்து ஏவப் பட்டது.

5) விண்ணில் செலுத்தப்பட்ட 20 வினாடிகளில் 
இந்த ராக்கெட் 5 மாக் வேகத்தை எட்டியது.
1 மாக் என்பது ஒலியின் வேகம் ஆகும்.
மாக் (Mach) என்பது விஞ்ஞானியின் பெயர்.
மாக் குறித்த இணைக்கப்பட்ட படத்தைப் 
பார்க்கவும்.

6) இந்த மிஷனின் பெயர் ப்ராரம்ப். ஆரம்பம் என்று 
பொருள்.

தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இன்னும் நிறைய 
உண்டு. வாசகர்கள் முயன்று அறிந்திட வேண்டும்.     
  ------------------------------------------------------
மாக் என்றால் என்ன"
ஒலியின் வேகம் என்ன?
------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
ஸ்கைரூட் அனுப்பிய ராக்கெட் 
விண்ணில் செலுத்தப்பட்ட 20ஆவது விநாடியிலேயே 
5 மாக் வேகத்தை அடைந்தது.
மாக் என்றால் என்ன?
மாக் (Mach) என்ற பெயர் எப்படி வந்தது?

ஒலியின் வேகம் என்ன?
மாணவர்களும் போட்டித் தேர்வர்களும் 
தெரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல 
மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதில் ஒரு கணக்கு கொடுக்க வேண்டும்.
அது இப்போது வேண்டாம்.
முதலில் மாக் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். 

     
     

சனி, 19 நவம்பர், 2022

காலநிலைச் சீர்குலைவின் பேராபத்து! 
தப்பிக்குமா பூமி?
------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம். 
-----------------------------------------------
பூமி சூடேறிக் கொண்டே போகிறது. பூமியின் வெப்பம் 
தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலைமை 
எங்கு கொண்டுபோய் விடும்? ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும் 
வெப்பத்தால் பனிப்பாளங்களும் கிளேசியர்கள் 
என்னும் பனியாறுகளும் உருகும்; உலகெங்கும் கடல் மட்டம் 
உயர்ந்து கடலோர நகரங்களை விழுங்கும்; பருவங்கள் தப்பும்.
முடிவடைய வேண்டிய காலத்தையும் தாண்டி பருவங்கள் நீடிக்கும்.
மழைக்காலம் இயல்பான அளவை விட சில வாரங்கள் கூடுதலாக 
நீடிக்கும்; அதுபோன்றே வெயில் காலமும். அதீத மழையும் 
அதீத வெப்பமுமாக காலநிலை தாறுமாறாகும்; சுருங்கக் கூறின் 
பூமி வாழத் தகுதியற்றதாக ஆகும். 

புவி வெப்பமடைவதைத் தடுத்தாக வேண்டும். எப்படித் 
தடுப்பது? இது கூட்டு முயற்சி. ஊர்கூடித் தேர் இழுக்கும் 
வேலை. பூமியில் வாழும் 800 கோடி மக்களுக்கும் இந்தப் 
பொறுப்பு உண்டு. கடந்த காலங்களில் புவியை அதிகமாகச்
சூடேற்றிய தவற்றைச் செய்த வளர்ந்த நாடுகளுக்கு கூடுதலான 
பொறுப்பு உண்டு.   

இச்சூழலில் அண்மையில் எகிப்து நாட்டில் உள்ள ஷாம் எல் ஷேக் 
என்னும்  கடற்கரை நகரில், காலநிலை குறித்த உலக நாடுகளின் 
27ஆம் மாநாடு 2022 நவம்பர் 6-18 நாட்களில் நடைபெற்றது. 
ஐநா சபை முன்னின்று நடத்திய இம்மாநாடு சுருக்கமாக 
COP 27 என்று அழைக்கப் படுகிறது.COP என்பது Conference Of Parties
to the United Nations Framework Convention on Climate Change என்பதன் 
சுருக்கம் ஆகும். COP 27 மாநாட்டின் தனிச்சிறப்பு என்னவெனில், 
இதற்கு முந்திய மாநாடுகளில் சாத்தியப்படாத முக்கியமானதொரு 
முடிவை இம்மாநாட்டில் நிறைவேற்ற முடிந்தது என்பதாகும்.
அது பற்றி அறிந்திடும் முன்னர் காலநிலை மாடுகளின் 
சுருக்கமான வரலாற்றைச் சற்றே தெரிந்து கொள்வோம்.    

பெர்லின் முதல் பாரிஸ் வரை!
---------------------------------------------
காலநிலை மாநாடுகள் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் 
மேலாக உலகில் நடந்து வருகின்றன. முதல் காலநிலை மாநாடு 
(COP 1) 1995 மார்ச்சில் பெர்லின் நகரில் நடைபெற்றது. உலக நாடுகளின் 
மாநாட்டை ஆண்டுதோறும் கூட்டுவது என்றும் நச்சு வாயுக்களின் 
வளிமண்டல சேகரத்தைத் குறைப்பதன் மூலம் புவி வெப்பமடைவதைத் 
கட்டுப்படுத்துவது என்றும் பெர்லின் மாநாட்டில் முடிவு செய்யப் 
பட்டது.

இம்முடிவின்படி ஆண்டுதோறும் காலநிலை 
மாநாடுகள் நடைபெற்று வந்தன. இந்த வரலாற்றில் நவம்பர் 2015ல் 
பாரிஸ் நகரில் நடைபெற்ற 21ஆம் காலநிலை மாநாடு 
(COP 21) பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக வரலாற்றில் 
நிலைத்து நிற்கத்தக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு முடிவு 
பாரிஸ் மாநாட்டில் எடுக்கப் பட்டது. பூமியை வாழத் தகுதி உடையதாகத் 
தொடர்ந்து வைத்திருக்கக் கூடிய உயர்ந்த முடிவு இது.

பாரிஸ் உடன்பாடு!
-----------------------------
இந்த முடிவு என்னவெனில்,  உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து,   
பூமியின் வெப்ப அதிகரிப்பை ஒன்றரை டிகிரி 
செல்சியசுக்குள் (1.5 டிகிரி C) அடக்கி விட வேண்டும். 
அதாவது எதிர்வரும் காலங்களில் பூமியின் சராசரி வெப்பம் 
எவ்வளவுதான் அதிகரித்தாலும், அந்த அதிகரிப்பு 1.5 டிகிரி 
செல்சியசுக்குள் இருக்க வேண்டும்; எக்காரணம் கொண்டும் 
வெப்ப அதிகரிப்பானது 1.5 டிகிரி செல்சியசைத் தாண்டி விடக் கூடாது. இதை உறுதி செய்வது எல்லா உலக நாடுகளின் கடமை ஆகும். இதுதான் பாரிஸ் 
உடன்பாடு என்று அழைக்கப்பட்டது. 

தொழிற்புரட்சிக்கு முன்பு (pre industrial period) பூமியின் சராசரி வெப்பம்
எவ்வளவு இருந்ததோ அந்த வெப்பநிலையை குறிப்புச் சட்டகமாக 
(reference point) எடுத்துக்கொண்டு அதிலிருந்து அதிகரிக்கும் 
வெப்பமானது 1.5 டிகிரி செல்சியசுக்குள்  அடங்கி விட வேண்டும் 
என்பதை உறுதி செய்வதே உலக நாடுகளின் கடமை ஆகும்.  
தொழிற்புரட்சி இங்கிலாந்தில் 1760ல் ஏற்பட்டதால் அதற்கு முன்பிருந்த 
காலம் என்பதன் பொருள் 1750ஆம் ஆண்டும் அதற்கு முன்பும் என்பதாகும். 
தொழிற்புரட்சிக்கு முந்திய காலத்தின் சராசரி வெப்பம் என்ன 
என்பதை ஐ நா நியமிக்கும் விஞ்ஞானிகள் முடிவு செய்வார்கள். 

இந்த உடன்பாட்டில் 195 நாடுகள் கையெழுத்திட்டன. மத்திய கிழக்கில்
உள்ள எண்ணெய் வள நாடுகளான ஈரான், ஈராக் உள்ளிட்ட சில நாடுகள் 
கையெழுத்திடவில்லை.பின்னர் ஈராக் கையெழுத்திட்டது. ஈரான் 
இன்று வரை கையெழுத்திடவில்லை. டொனால்டு டிரம்ப் காலத்தில் 
2020ல் விலகிக் கொண்ட அமெரிக்கா ஜோ பைடன் காலத்தில் 
2021ல் மீண்டும் சேர்ந்து கொண்டது. 

மேலும் தங்களால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட எதுவும் சேகரம் ஆகாமல், பூஜ்ய உமிழ்வு (zero emission) என்ற இலக்கை 2050க்குள் எட்டி விடுவதாகவும் கையெழுத்திட்ட நாடுகள் உறுதி அளித்தன. பாரிஸ் உடன்பாடு அதில் கையெழுத்திட்ட நாடுகளை சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தும் சர்வதேச உடன்பாடு ஆகும் (A legally binding international treaty 
on climate change). டிசம்பர் 2015ல் இறுதி செய்யப்பட்ட இந்த உடன்பாடு
நவம்பர் 2016ல் செயல்பாட்டுக்கு வந்தது.      

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி!
-----------------------------------------
2015 நவம்பரில் பாரிஸ் உடன்பாடு எட்டப்பட்டது. 2022 நவம்பரில் 
ஷாம் எல் ஷேக் (எகிப்து) மாநாடு நடைபெற்றபோது ஏழு ஆண்டுகள் 
முடிந்திருந்தன. கார்பன் சேகரத்தைக் குறைப்பதில் உலக நாடுகள் 
எவ்வளவு வெற்றி அடைந்துள்ளன என்று அளந்து பார்க்கும் 
கடமை மாநாட்டுக்கு இருந்தது.  

மாநாட்டின் தொடக்கவுரையில்,  ஐநா பொதுச் செயலாளர் 
அன்டோனியோ கட்ரெஸ் கூறிய ஒரு வாசகம் இன்று 
உலகப்புகழ் பெற்று விட்டது.
"காலநிலையை நரகமாக்கும் வழிகளில்  இருந்து விடுபட்டு 
வெளியேற உதவும் சொகுசுப் பாதையே புதுப்பிக்கத் தக்க 
எரிசக்தி" (Renewable energy is the exit ramp from the climate 
hell highway) என்ற  அவரின் வாக்கியம் மெய்யாகவே மந்திர 
வாசகம்தான்.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற 
எரிபொருட்கள் ஹைடிரோ கார்பன்கள் எனப்படும். இவை 
புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அல்ல. இவை தீர்ந்து போகக் 
கூடியவை. உலகெங்கும் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் 
இருந்து காலகாலத்திற்கும் நிலக்கரி கிடைத்துக் 
கொண்டிராது. எரிவாயுக் கிணறுகள் அமுதசுரபிகள் அல்ல. 
அவற்றில் இருந்து நிரந்தரமாக மீத்தேன் கிடைத்துக் 
கொண்டிராது. அதிகபட்சம் 2050க்குள் உலகெங்கும் 
சுரங்கங்களின் நிலக்கரி தீர்ந்து விடக்கூடும். காற்றாலை 
மின்சக்தி, சூரிய மின்சக்தி, அணு மின்சக்தி ஆகியவையே 
புதுப்பிக்கத் தக்கவை. பூமியின் காலநிலை நரகமாகி விடாமல் 
தடுக்கும் வல்லமை இவற்றுக்கு மட்டுமே உண்டு. சூழலை 
மாசாக்காத இவற்றைத் தவிர்த்து விட்டு, நிலக்கரியை 
நாடுவது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ஆகும்.     

முதல் பத்து நாடுகளின் நச்சு!
----------------------------------------------
ஒவ்வொரு ஆண்டும் 30 கிகா டன் கார்பன் டை ஆக்ஸைடு 
உலக நாடுகளால் வளிமண்டலத்தில் சேகரம் ஆகிறது. 
(1 கிகா = 1 பில்லியன்; 1 பில்லியன் = 100 கோடி; 
1 டன் = 1000 கிலோகிராம்). கார்பனை வளி மண்டலத்துக்கு 
ஏற்றி சூழலை மாசுபடுத்தும் நாடுகளில் பின்வரும் 
நாடுகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன. 2020ஆம் ஆண்டில் 
இந்நாடுகள் ஏற்றி அனுப்பிய கார்பனின் அளவு வருமாறு:-  

1) சீனா ...11680 மில்லியன் டன்.
2) அமெரிக்கா ... 4535 மி.டன்.
3) இந்தியா ... 2411 மி.டன். 
4) ரஷ்யா ... 1674 மி.டன்.      
5) ஜப்பான் ... 1061 மி.டன்.

அடுத்த ஐந்து இடங்களில் ஈரான், ஜெர்மனி, தென்கொரியா,
சவூதி அரேபியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உள்ளன.
கார்பன் மாசைக் குறைப்பதில் இப்பத்து நாடுகளும் 
மற்ற நாடுகளை விட அதிக அளவிலும் தீவிரமாகவும் 
பங்காற்ற வேண்டிய கடமையைக் கொண்டுள்ளன.      

கடந்த ஆண்டில் (2021) ஐநாவின் காலநிலை மாநாடு இங்கிலாந்தின் 
கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது. இந்த ஓராண்டில் 
உலக நாடுகள் எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் 
குறைத்திருக்கின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே 
மிஞ்சுகிறது. ஒரு சதவீதம் அளவு மட்டுமே உலக நாடுகள் 
குறைத்துள்ளன. இதன் விளைவாக, 2030க்குள் 30 முதல் 45 சதவீதம் 
அளவு கடுமையாகக் குறைத்தால் மட்டுமே நம்மால் 1.5 டிகிரி 
செல்ஸியஸ் என்ற இலக்கை எட்ட இயலும். இப்படி 
எச்சரிக்கப்பட்டது எகிப்து மாநாட்டில்.

பெருநிதியம் உருவாக்கம்!
----------------------------------------
எகிப்து மாநாட்டின் சிறப்பம்சம் என்னவெனில் வெறுங்கை முழம் 
போடாது என்று உணர்ந்து கொண்டதுதான். ஆம், கார்பன் 
உமிழ்வுகளைக் குறைப்பது என்பது பெரும் பணத்தைச் 
செலவழித்தால் மட்டுமே சாத்தியப்படும். வளரும் நாடுகள் 
என்று அழைக்கப்படும் ஏழை நாடுகளால் கார்பன் உமிழ்வுகளைக் 
குறைப்பதாள் ஏற்படும் செல்வுகளைத் தாங்க இயலாது.
எனவே வளர்ந்த நாடுகள் அல்லது ஐநா போன்ற அமைப்புகள் 
ஏழை நாடுகளுக்கு நிதி வழங்கினால் மட்டுமே அவற்றால் 
புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த முடியும். 

எகிப்து மாநாடு இந்த உண்மையை உணர்ந்து ஏழை நாடுகளுக்கு 
வழங்குவதற்காக ஒரு நிதியை உருவாக்க முடிவு செய்துள்ளது
(COP 27 has decided to establish and operationalize a loss and damage fund).
இது இழப்பு மற்றும் சேதாரத்தை ஈடுகட்டும் நிதி ஆகும்.

கடற்கரையை ஒட்டித் தடுப்புச் சுவர்களை எழுப்புவது முதல் 
வறட்சியைத் தடுக்கும் பயிர்களை சாகுபடி செய்வது வரையிலான  
செயல்பாடுகளை மேற்கொள்ள ஏழை நாடுகளுக்கு பெரும் நிதி  
தேவைப்படும். இதற்கான நிதியை பாரிஸ் உடன்பாட்டு
நாடுகள் தங்களுக்குள் முடிவெடுத்து வழங்க வேண்டும்.

ஒரு கணக்கீட்டின்படி, இத்தகைய செயல்பாடுகளுக்கு 2030ஆம் 
ஆண்டு வரை, ஆண்டொன்றுக்கு 340 பில்லியன் அமெரிக்க டாலர் 
தேவைப்படும் என்று எகிப்து மாநாடு மதிப்பிடுகிறது. இந்த அளவிலான 
நிதியை உருவாக்குவதும், தேவையை ஒட்டி ஏழை நாடுகளுக்கு 
நிதியை வழங்குவதன் மூலமுமே புவியின் வெப்பநிலை
1.5 டிகிரி செல்சியசுக்குள் காட்டுக்கு அடங்கி இருக்குமாறு 
செய்ய நம்மால் இயலும் என்ற உண்மையை எகிப்து மாநாடு 
நன்கு உணர்ந்துள்ளது. எனவே புவி வெப்பமடைவதைத் 
தடுப்பதில் முதன் முறையாக ஒரு வெளிச்சம் தெரிகிறது; 
நம்பிக்கையும் பிறக்கிறது.  
     
கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சிகளை ரஷ்ய-உக்ரைன் 
போர் வெகுவாகச் சீர்குலைத்து விட்டது. எனவே உலக நாடுகள் 
தங்களுக்கு இடையில் போர் மூளாமல் பார்த்துக் கொள்ள 
வேண்டும்.

வேறுபடும் வெப்பநிலை!
---------------------------------------
கார்பன் டை ஆக்சைடு மட்டுமின்றி மீத்தேன்,  ஓசோன், நைட்ரஸ் 
ஆக்சைடு முதலிய வாயுக்களும் பூமியின் வளிமண்டலத்தில் 
உள்ளன. இவை அனைத்தும் பசுங்குடில் வாயுக்கள் 
(Greenhouse gases) என்று அழைக்கப் படுகின்றன. இவை வளிமண்டலத்தில் 
இருந்து கொண்டு பூமியின் வெப்பத்தைக் கிரகித்துக் கொண்டு 
மீண்டும் பூமிக்கே அனுப்புகின்றன. இதனால் பூமி சூடாகிறது.
(Global warming occurs). இவ்வாயுக்கள் வளிமண்டலத்தில் இல்லாமல் 
இருந்தால் பூமியின் வெப்பமானது அண்ட வெளிக்குச் சென்று விடும்.
பூமி சூடேறாது. 

பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட அளவில் வெப்பம் 
நிலவுகிறது. சவூதி அரேபியாவில் 45 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும் 
இந்தியாவின் கார்கில் போன்ற பகுதிகளில் மைனஸ் அளவில் 
வெப்பமும் நிலவுகின்றன. 

பூமியின் அதிகபட்ச வெப்பமானது லிபிய பாலைவனத்தில் 
(Libyan desert) 58 டிகிரி செல்சியஸ் என்று அளக்கப் பட்டுள்ளது. 
குறைந்தபட்ச வெப்பநிலை (coldest temperature) அண்டார்டிகாவில் 
உள்ள வோஸ்டாக் ஸ்டேஷன் (Vostak station) என்ற இடத்தில் 
மைனஸ் 88 டிகிரி செல்சியஸ் என்று அளக்கப் பட்டுள்ளது.   
ஒட்டு மொத்த பூமியையும் பார்த்தால், 
பூமிப்பந்தின் சராசரி வெப்பம் 15 டிகிரி செல்சியசாக இருக்கிறது.

முதலாம் தொழிற்புரட்சி ஏற்பட்ட 1750ஆம் ஆண்டு முதல் 
இன்று நான்காம் தொழிற்புரட்சிக் காலம் வரையிலான 
இந்த  270 ஆண்டுகளில் முந்திய காலத்தை விட, பூமியின் 
வெப்பம் உயர்ந்து கொண்டே வருகிறது. பசுங்குடில் வாயுக்கள் 
பூமியின் வளிமண்டலத்தில் மிகுதியாகச் சேர்ந்து விட்டதாலேயே 
பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  

தொழிற்புரட்சி 1.0 காலத்தில் பூமியின் வளிமண்டலத்தில் 
கார்பன் டை  ஆக்ஸைடு 280 ppm என்ற அளவில் இருந்தது.
இன்று 2022ல் 421 ppm என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
(ppm = part per million; பத்து லட்சத்தில் எத்தனை 
பங்கு என்பதே ppm).

நமது வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயுவே அதிகம். இது
78 சதவீதம் உள்ளது. அடுத்து ஆக்சிஜன் 21 சதவீதம்.
இவ்விரண்டும் சேர்ந்து 99 சதவீதம் ஆகி விடுகிறது.
மீதியுள்ள 1 சதவீதத்தில் ஆர்கான் வாயு 0.9 சதவீதமும்
ஏனைய வாயுக்கள் அனைத்தும் சேர்ந்து (கார்பன் டை ஆக்சைடு,
மீத்தேன் முதலியன) 0.1 சதவீதமும் உள்ளன. எனவேதான் 
பசுங்குடில் வாயுக்களை ppm என்ற அளவில் அளக்கிறோம்.      

வளிமண்டலத்தில் மாசு!
--------------------------------------
சில ஆண்டுகளுக்கு முன், 350 கிளப் என்ற பெயரில் 
வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடின் அளவை 
350 ppm என்ற அளவில் தக்க வைக்க வேண்டுமென்று 
பரப்புரை செய்யும் விழிப்புணர்வு மன்றங்கள் உலகெங்கும் 
தோன்றின. 350 ppm என்பது பாதுகாப்பான அளவாகும் (safety level).
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இம்மன்றங்களைத் 
தோற்றுவித்தனர். இவை புவி வெப்பமடைதலின் அபாயம் 
குறித்து மக்களுக்கு உணர்த்தின. தற்போது 
2022ல் வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு 421 ppm என்பதாக 
உயர்ந்து விட்டது (71 ppm உயர்வு). இது அபாய அளவாகும் (dangerous level) 

தற்போதைய சூழலில், கார்பன் டை ஆக்ஸைடை மட்டுமின்றி, 
புவியை வெப்பமாக்கும் ஏனைய பசுங்குடில் வாயுக்களையும் 
எதிர்த்துப் போராட வேண்டும். எனவே பூமியின் வெப்பஅதிகரிப்பை 
1.5 டிகிரி செல்சியசுக்குள் அடக்க வேண்டுமென்று மக்களிடையே  
விழிப்புணர்வுப் பரப்புரை செய்யும் "1.5 கிளப்"களை உருவாக்குவோம்.
பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் இத்தகைய 
மன்றங்களை உருவாக்க வேண்டும்.

இறுதியாக இந்தியா இது விஷயத்தில் என்ன செய்கிறது 
என்று பார்ப்போம். காலநிலையைச் சீர்குலைக்கும் 
செயல்பாடுகளை இந்தியா தீவிரமாகக் குறைத்து வருகிறது.
பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு முற்றிலுமாக 2030ல்  
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்பதன் அறிகுறிகள் தெரிகின்றன. சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய சூரிய மின்னாலை ராஜஸ்தான் ஜோத்புர் 
மாவட்டத்தில் 14000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இன்னும் பல்வேறு 
செயல்பாடுகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு  
பூமியின் வெப்பத்தைக் குறைப்பதில் இந்தியா காத்திரமான 
பங்காற்றி வருகிறது.
*********************************************** 
  
 
 

    
       














   




கணிதமும் இயக்கவியலும்!
------------------------------------------
1878ல் தமது 57ஆம் வயதில் square root of minus 1 பற்றி  
எங்கல்ஸ் பேசுகிறார். (பார்க்க: எங்கல்ஸ் எழுதிய 
Anti Duhring என்னும் நூல்) இந்நூலை எழுதும்போது 
கணிதம் அறிவியல் ஆகியவற்றில் தமக்கு இருந்த 
போதாமையை அவர் உணர்ந்தார். எனவே கணிதம் 
அறிவியலை சுயமாகக் கற்க முயன்றார்.

அப்படிக் கற்றபோது square root of minus 1 பற்றி 
அறிந்ததும் பிரமிப்புக்கு உள்ளானார். அதை 
அவரின் சிந்தை ஏற்கவில்லை. எனவே 
அதை முரண்பாடு (contradiction) என்று வர்ணித்தார்.

கணிதத்தை கசடறக் கற்ற ஒரு அறிஞன் 
ஒன்றை முரண்பாடு என்று சொல்வதற்கும், 
ஒரு பள்ளிச் சிறுவனின் புரிதலில் இருந்து அதை 
முரண்பாடு என்று சொல்வதற்கும் இடையிலான 
வேறுபாட்டை நுண்மாண் நுழைபுலம் மிக்கோர் 
அறிவர்.

அடுத்து, அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் 
முரண்பாடு என்பது வேறு. எங்கல்ஸ் கூறிய 
முரண்பாடு என்பது வேறு. எங்கல்ஸ் கூறிய 
முரண்பாடு என்பது இயக்கவியல் முரண்பாடு 
(dialectical contradiction) ஆகும். இயக்கவியல் 
கற்று, அதை நன்கு புரிந்து கொண்டோருக்கு  
மட்டுமே இயக்கவியல் முரண்பாடு பற்றிய
தெளிவு கிட்டும். (படிக்க: ஹெக்கல் மற்றும் 
மார்க்சின் இயக்கவியல்).

ஹெக்கலிய முரண்பாடு (Hegelian contradiction)
என்னும் templateஐக் கையில் எடுத்துக் கொண்டு 
கணிதம், இயற்பியல், வேதியியல் என்று 
ஒவ்வொரு துறையிலும் அதைப் பொருத்திப் 
பார்த்து,ஹெக்கலிய முரண்பாட்டைச் 
சரியென்று நிரூபிக்கும் முயற்சியில் இருந்தபோது 
எங்கல்ஸ் கூறியதே square root of minus 1 என்பது 
ஒரு contradiction என்பது. பார்த்த மாத்திரத்தில் 
மைனஸ் 1ன் வர்க்கமூலம் என்ரூ பேசுவதே எந்த 
ஒரு laymanக்கும் முரண்பாடாகவே தெரியும். 
It is a visible contradiction; easily understandable contradiction.

ஆனால் அது ஒரு முரண்பாடு என்று கூறி, அதைக் 
குப்பையில் வீசியிருந்தால் கணிதம் வளர்ந்து 
இருக்காது. கணிதமானது இயல் எண்களோடு
(Natural numbers) நின்று போயிருக்கும். எனவே 
மெய்யெண் கற்பனை எண் ஆகிய எல்லாமுமே 
கணிதத்திற்குத் தேவை. 

இயல் எண்கள் எப்போதுமே கொடுத்து வைத்தவை.
அவற்றுக்கு கிடைக்கும் பேறுகள் பிற எண்களுக்குக் 
கிடைப்பதில்லை.

இன்றைய உலகின் கணித அறிவுக்கும் 
எங்கல்ஸ் வாழ்ந்த காலத்தின் (1878) கணித 
அறிவுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு 
உண்டு. எங்கல்ஸ் வாழ்ந்த காலத்தில் நம் 
தமிழகக் கணித மேதை ராமானுஜன் 
பிறந்திருக்கவே இல்லை. எனவே அன்றைய 
கணிதம் ராமானுஜனின் பங்களிப்பைப் 
பெற்றிராத கணிதம். எனவே மெய்யெண் 
கற்பனை எண் ஆகிய எல்லாமுமே 
கணிதத்திற்குத் தேவை.    

எனது இப்பதிவானது கணிதம் பற்றிய academic பதிவு 
மட்டும் அல்ல. அது மார்க்சியப் பொருள்முதல்வாதப் 
பதிவும் ஆகும். எனவே இப்பதிவைப் புரிந்து
கொள்ள கணிதம் மற்றும் இயங்கியலில் 
(Hegelian and Marxian dialectics) காத்திரமான புரிதல் 
தேவைப்படுகிறது. எனவே எங்கல்ஸ் கூறிய 
absurd contradiction என்பது தவறானது. 

வளர்ச்சிக்குப் பயன்படாது என்ற பொருளில் 
எங்கல்ஸ் கூறியிருந்தார். அதை ஒருவர் 
முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் 
இயக்கவியல் விதிகள் அனைத்தும் வளர்ச்சிக்கானவை 
(Dialectical laws are laws of GROWTH).

இறுதியாக, மார்க்சம் எங்கல்சும் கடவுள்கள் அல்ல.
அவர்களைக் கடவுள்களாக மார்க்சியம் கருதுவதில்லை.
எனவே மார்க்ஸ் எங்கல்சை விமர்சிக்கத் தடை 
இல்லை. ஆனால் எங்கல்ஸ் சரியான கணிதத் 
தளத்தின்மீது நின்றுகொண்டுதான் பேசுகிறார் 
என்று மார்க்சிய மூல ஆசான் எங்கல்சுக்கே மிகுந்த 
மேட்டிமைத்தனத்துடன் சான்றிதழ் வழங்க முற்படுவது
அகந்தையை அன்றோ வெளிப்படுத்துகிறது! 
-----------------------------------------------------------------

  

  
  
          

      
   

 
 
  

வெள்ளி, 18 நவம்பர், 2022

காதலின் இயற்பியல் கவிதையை 
விளங்கிக் கொள்ள உதவும் படங்கள்!
--------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------

1) பேரபோலா (parabola) 
படம் பார்க்கவும்.

2) ஐசோடோப் (isotope) -- ஒரு தனிமத்துக்கும் அதன் 
ஐசோடோப்புக்கும் periodictableல் ஒரே இடம்தான். 
எனவேதான் ஐசோடோப் என்று பெயர்.   

3) அசிம்ப்டோட் (asymptote)- தொலைத் தொடுகோடு.

4) டார்க் (torque).
டார்க் என்று தமிழில் எழுதினால் dark என்று 
பொருள் கொள்ள வாய்ப்புண்டு.
Torque is the measure of the force that can cause an object 
to rotate about an axis. Force is what causes an object 
to accelerate in linear kinematics.

5) மல்டிமீட்டர் -- voltage, resistance, current  இம்மூன்றையும் 
அளக்கும் ஒரு கருவி. BSc physics மாணவன் வைத்திருப்பான்.
DEE மாணவன், EEE பொறியியல் மாணவன் வைத்திருப்பான்.

6) நானோ நொடி -- nano second.        
---------------------------------------------------------------------
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து 
வீரப்போர் புரிந்த மகத்தான போராளி வ உ சி.
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்-அடி 
மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம் 
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்-எங்கள் 
பாரத தேசமென்று தோள் தட்டுவோம்.    

1757ல் நடைபெற்ற பிளாசிப்போரில் வெற்றி பெற்றதைத் 
தொடர்ந்து ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியின் 
ஆட்சி இந்தியாவில் தொடங்கியது. நூறாண்டு கழிந்த 
பின்னர் 1857ல் நாடு முழுவதும் இந்திய சுதந்திரத்திற்கான 
போர் நடைபெற்றது. நானா சாஹிப், ஜான்சி ராணி 
லட்சுமிபாய், தாந்தியா தோபே உள்ளிட்ட பல 
இந்தியத் தலைவர்கள் பிரிட்டிஷ் படைகளை களத்தில்
எதிர்கொண்டனர். பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு
எதிரான இந்தியாவின் சுதந்திர வேட்கையின் 
நாடு தழுவியதும் அழுத்தமானதுமான அடையாளமாக
முதல் இந்திய சுதந்திரப்போர் (1857) விளங்கியது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசிய 
காங்கிரஸ் கட்சி இந்திய சுதந்திரத்திற்காகப் போராடும் 
நாடு தழுவிய அமைப்பாகத் திகழ்ந்தது. அதன் 
தலைவர்களான லஜபதி ராய், விபின் சந்திர பால்,
பால கங்காதர திலகர் ஆகியோர் நாடு முழுவதும் 
சுதந்திரக் கனலை மூட்டினர்.

திலகரின் சீடராகத் தம்மை வரித்துக் கொண்ட வ உ சி 
பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் இணைந்து 
தமிழ்நாட்டில் சுதந்திர வேட்கையை மூட்டினார்.

விதேசிப் பொருளாதாரம் சுதேசிப் பொருளாதாரத்தை 
விழுங்கி விடாமல் தடுக்கும் பொருட்டு 
சுதேசிக் கப்பல் ஓட்டினார் வ உ சி. தூத்துக்குடியில்
ஆலைத் தொழிலாளர்களைத் திரட்டி சுரண்டலுக்கு 
எதிராகப் போராடினார்.

இதனால் எல்லாம் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களின்
கோபத்துக்கு இரையானார். சிறைப்பட்டார்; செக்கிழுத்தார்.

வ உ சி மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி.
இந்திய சுதந்திரப்போரின் இலச்சினையும் அடையாளமும் 
அவரே. அடிமைப்படுத்திய பிரிட்டிஷை எதிர்த்து சுதேசிக் 
கப்பலோட்டி பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் மீது 
பலத்த தாக்குதல் தொடுத்தார். இந்திய தேசிய 
விடுதலையின் வீர மரபைத் தோற்றுவித்தவர் அவரே.
பன்முகத் தன்மை வாய்ந்த பேராளுமைக்குச் 
சொந்தக்காரர் எனினும், முதலும் முடிவுமாக 
வ உ சி இந்திய விடுதலை வீரரும் மாபெரும் 
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியும் ஆவார்.

வ உ சியின் நினைவை நெஞ்சில்  ஏந்துவோம்!
-------------------------------------------------------------------------
                

செவ்வாய், 15 நவம்பர், 2022

கற்பனைக் காலம் (imaginary time) என்றால் என்ன?
ஸ்டீபன் ஹாக்கிங் கற்பனைக் காலத்தை 
ஏன் உருவாக்கினார்?
-----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------- 
பிரபஞ்சம் என்பது எப்போதுமே இருந்துவரும் ஒன்றல்ல.
மாறாக, பிரபஞ்சம், காலம் இரண்டுக்குமே ஒரு 
தொடக்கம் உண்டு. 1500 கோடி ஆண்டுகளுக்கு 
முந்திய பெருவெடிப்புத்தான் அந்தத் தொடக்கம்.
மெய்யான காலத்தின் தொடக்கம் ஒரு முற்றொருமை 
(singularity) ஆகும். முற்றொருமையில் இயற்பியல் விதிகள் 
செயல்படாது. 
------ஸ்டீபன் ஹாக்கிங் 1996ல் நிகழ்த்திய உரை------- 

The universe has not existed for ever. Rather, the universe, and time itself, 
had a beginning in the Big Bang, about 15 billion years ago. The beginning 
of real time, would have been a singularity, at which the laws of physics 
would have broken down.
(Stephan Hawking in a lecture made in 1996). 

முற்றொருமைகளால் விளையும் சிக்கல்களைத் 
தவிர்ப்பதற்காக ஹாக்கிங் கற்பனைக் காலம் 
(imaginary time) என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்குகிறார். 
இது குவாண்டம் கொள்கையில் இருந்து எடுக்கப்பட்டது.  

பிரபஞ்சம் எப்படித் தொடங்கியது என்று குவாண்டம் 
கொள்கையால் யூகித்து அறிய முடியும். கற்பனைக்காலம் 
எனப்படும் முற்றிலும் புதியதொரு சிந்தனையை 
குவாண்டம் கொள்கை வழங்குகிறது. கற்பனைக்காலம் 
என்பது அறிவியல் புனைகதைகளில் வருவது போன்று 
தோன்றலாம். இருந்தபோதிலும் அது ஒரு உண்மையான 
அறிவியல் கோட்பாடு ஆகும்.  
------ஸ்டீபன் ஹாக்கிங் 1996ல் நிகழ்த்திய உரை------- 

Quantum theory can predict how the universe had begun. Quantum theory 
introduces a new idea, that of imaginary time. Imaginary time may sound 
like science fiction. But nevertheless, it is a genuine scientific concept.
(Stephan Hawking in a lecture made in 1996). 

கிடை அச்சான x அச்சை (abscissa) மெய்யான காலமாகக்  
கொண்டால், செங்குத்தான y அச்சு (ordinate) 
கற்பனைக் காலம் ஆகும். 

இப்போது மூன்று பரிமாணங்களை "வெளி"யிலும் 
(space) கற்பனைக் காலத்தை நான்காவது 
பரிமாணமாகவும் எடுத்துக் கொண்டால், நமக்கு நான்கு 
பரிமாணம் உடைய வெளி-காலம் கிடைத்து விடுகிறது. 
இது யூக்ளிட்டின் வெளி போன்று அமைகிறது.

1983ல் ஹாக்கிங், கலிபோர்னியா பேராசிரியர் 
ஜேம்ஸ் ஹார்ட்டில் (James Hartle) இருவரும் இணைந்து 
"பிரபஞ்சத்துக்கு எல்லைக் கோடுகள் இல்லை" 
(No boundary proposal) என்னும் கோட்பாட்டு முன்மொழிவைச் 
செய்தனர். இதன்படி, மூன்று பரிமாணங்கள் கொண்ட 
"வெளி"யும் (space) கற்பனைக் காலமும் சேர்ந்த 
நாற்பரிமான வெளி-காலமானது வரம்புக்கு 
உட்பட்டதாக (finite) அமைகிறது என்றும் அதே நேரத்தில் 
அதற்கு எல்லைக்கோடுகள் (boundaries) எதுவும் இல்லை           
என்றும் ஹாக்கிங்-ஹார்ட்டில் கூறினர் (finite but no boundaries).

எல்லைக்கோடு இல்லை (no boundary) என்பதை எப்படிப் 
புரிந்து கொள்வது?  நமது பூமியைக் கருதுங்கள்.
அது ஒரு கோளம்; அதாவது ஒரு உருண்டை. அதற்கு 
ஏதாவது எல்லைக்கோடு (boundary) இருக்கிறதா?
இல்லை! எப்படி இருக்கும்? அது உருண்டையாக 
இருப்பதால் எங்கு தடவிப் பார்த்தாலும் 
ஒன்றுபோலத்தானே இருக்கிறது! இந்தக் கோட்டைத் 
தாண்டினால் பாதாளம் என்று ஏதேனும் ஒரு 
எல்லைக்கோடு பூமியின் மீது வரையப்பட்டுள்ளதா?
இல்லை அல்லவா? 

ஆக நமது பூமிக்கு எல்லைக்கோடு இல்லை என்று புரிந்து 
கொள்ள முடிகிறது அல்லவா? இது போலவே  ஹாக்கிங்கின் 
நாற்பரிமாண வெளி-கற்பனைக் காலத்துக்கும் 
எல்லைக்கோடு இல்லை (no boundary). இதன் பொருள் 
கற்பனைக் காலத்தின் திசையில் எந்தவொரு 
முற்றொருமையும் இல்லை (no singularity). மேலும் பூமி 
போன்றே ஹாக்கிங்கின் வெளி-காலம் அமைந்திருப்பதால் 
அங்கு எல்லைக்கோடும் இல்லை.

ஆக முற்றொருமையும் இல்லாத எல்லைக்கோடும் 
இல்லாத ஒரு வெளி-காலம் நமக்குக் கிடைத்து 
விடுகிறது. இவ்விரண்டும் இல்லாத இடங்களில் 
இயற்பியல் விதிகள் தாராளமாகச் செயல்படும்.
பிரபஞ்சத்தின் தொடக்க நிலைமையான 
பெருவெடிப்பின்போது இயற்பியல் விதிகள் 
செயல்படாமல் போயின. அதற்குக் காரணம் அங்கு 
ஒரு முற்றொருமை (singularity) இருந்ததுதான்   
என்று நாம் அறிவோம். 

தற்போது முற்றொருமையை (singularity) கற்பனைக் 
காலத்தின் மூலம் ஹாக்கிங் அழித்து விட்டதால் 
இயற்பியல் விதிகளுக்கு எந்தத் தடையும் இல்லை. 
எனவே பிரபஞ்சம் தோன்றியது பற்றியும் அதன் 
அடுத்தடுத்த கட்ட வளர்ச்சி பற்றியும் இயற்பியல் 
விதிகளால் கறாராகவும் துல்லியமாகவும் கணிக்க 
இயலும்.

கற்பனைக் காலத்தில் பிரபஞ்சத்தின் நிலைமை என்ன 
என்று நம்மால் அறிய முடியுமானால், மெய்யான 
காலத்தில் (real time) பிரபஞ்சத்தின் நிலைமை 
எப்படி இருக்கும் என்பதையும் நம்மால் கணிக்க 
முடியும். எனவே குவாண்டம் கொள்கையின் கொடையும் 
ஹாக்கிங்கின் கண்டுபிடிப்புமான கற்பனைக்
காலமானது முற்றொருமையில் (singularity) சிறைப்பட்டுக்
கிடந்த இயற்பியலை சிறை மீட்டு விட்டது. இயற்பியல் 
உலகை ஆழத் தொடங்கி விட்டது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கற்பனைக் காலம்
பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில், கற்பனை 
எண்களைப் பற்றி முதலில் அறிந்து கொள்வது நல்லது.
11ஆம் வகுப்பின் கணக்குப் பாடப் புத்தகத்தை வாங்கிப்
படியுங்கள். 
-------------------தொடரும்----------------------------------
********************************************************  
படத்தில்:
ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தபோது, அவரின் நினைவாக 
நடைபெற்ற ஹாக்கிங் படத்திறப்பு மற்றும் அஞ்சலி 
நிகழ்ச்சியில் பங்கேற்று, கற்பனைக்காலம் பற்றி 
உரை நிகழ்த்தியபோது எடுத்த படம்.
-------------------------------------------------------------------------  
பின்குறிப்பு:
மதிப்பு காண்க:
(3+7i)+(4+2i).
மனிதகுல வரலாற்றில் இதைவிட எளிமையான 
ஒரு கணக்கு கிடையாது. இதைக் கண்டிப்பாக 
சால்வ் பண்ண வேண்டும்.