செவ்வாய், 31 மே, 2022

குறிப்பிடத்தக்க IQ உள்ள  
தமிழ்நாட்டு அரசியல்  தலைவர்களில் ஒருவரான 
டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
----------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------
டாக்டர் அன்புமணி ராமதாஸ் படித்தவர். எனவே இவர்
தமிழக அரசியலில் ஒரு misfit. அதாவது அரசியலுக்குப் 
பொருத்தமற்றவர். இவர் மட்டும் SSLC பெயிலாகிப்
போய், அத்தோடு படிப்பை நிறுத்தி இருந்தார் 
என்றால், இந்நேரம் அவர் தமிழக அரசின் ஒரு 
அமைச்சராக ஆகி இருக்க முடியும்.

தமிழ்நாட்டு அரசியலில் முட்டாள் பயல்களும் 
ஈனத் தற்குறிகளுமே வெற்றி பெற முடியும்.
இந்நிலையில் படித்தவரான அன்புமணிக்கு இங்கு  
என்ன எதிர்காலம் இருக்க முடியும்? படிக்கிற 
காலத்தில், ப்ளஸ் டூவில், மாவட்ட அளவில் முதல்வராக 
(District First) வந்திருக்கிறார் அன்புமணி. இதெல்லாம்  
அன்புமணியின் தகுதிக்குறைவாகவே அமையும்.

நியூட்டன் அறிவியல் மன்றம் டாக்டர் அன்புமணியின் 
IQவை அளந்திருக்கிறது. தமிழக அரசியல் 
தலைவர்களில், IQவைப் பொறுத்தமட்டில் டாக்டர் 
அன்புமணி இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
முதல் இடத்தில் இருப்பவர் பொறியியல் படித்த 
அண்ணாமலை.

இங்கு ப சிதம்பரம் அவர்கள் தேசியத் தலைவராக 
தேசிய அரசியலில் இருப்பவர். எனவே தமிழக
அரசியல் தலைவர்களில் ப சிதம்பரம் இடம் 
பெறவில்லை என்பதை வாசகர்கள் கவனம் 
கொள்ள வேண்டும்.

ராசியில் என்பது முட்டாள்களுக்கானது. ஒரு pimp 
எளிதில் success ஆகி விடுவான். ஆனால் ஒரு 
மிகச்சிறிய வெற்றியைப் பெறுவதற்குக்கூட 
படித்தவரான அன்புமணி வருத்தப்பட்டுப் 
பாரஞ் சுமக்க வேண்டும். அதே நேரத்தில் 
அன்புமணியும் வாரிசு அரசியலால்தான் 
முன்னிலைக்கு வந்தார் என்பதையும் பார்க்க 
வேண்டும். 

பாருங்களேன், ஒரு தற்குறிக்குப் பிறந்த ஒரு 
தற்குறிக் கூத்தாடிப் பயல் அமைச்சராகப் 
போகிறான்! அடுத்து துணை முதல்வரும் ஆகி 
விடுவான்! பின்னர் நேரடியாக முதல்வரும் 
ஆகி விடுவான்!  ஆனால் முறையே மருத்துவமும்  
பொறியியலும் படித்த அன்புமணியும் 
அண்ணாமலையும் என்ன செய்வார்கள்?

அன்புமணி முதல்வராகும் தகுதி படைத்தவர்!
அண்ணாமலையோ பிரதமராகும் தகுதி படைத்தவர்!
120ஐ IQவை வைத்துக் கொண்டு, இந்திய அரசியல் 
தலைவர்களிலேயே IQவில் முதல் இடத்தில் 
இருக்கும் ப சிதம்பரத்தால் இன்னும் பிரதமர் 
ஆக முடியவில்லை.வாய்ப்புகள் வந்த 
போதெல்லாம் சிதம்பரத்தைக் காயடித்தார்  
சோனியா.

ஆக இதுதான் தமிழக அரசியல் நிலவரம்.
IQ அதிகமாக இருப்பவர்கள் என்ன செய்யலாம்?
அரசியலை விட்டு விலகலாம்.
--------------------------------------------------------------------
பின்குறிப்பு::
நியூட்டன் அறிவியல் மன்றம் அளந்து அறிந்தபடி 
பின்வரும் சூத்திரத் தலைவர்களின் IQ 
இவ்வாறு அமைகிறது::

1) சூத்திர அண்ணாமலை... 118.
2) சூத்திர அன்புமணி ............106.   
************************************************* 



 .    

பிறிது மொழிதல் அணி பயிலும் இக்கட்டுரையைத் 
தற்குறிகள் படிக்க வேண்டாம்! வேண்டாம்!!
ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் அர்த்தம் என்ன 
என்று பார்ப்பது பேதைமையுள் எல்லாம் பேதைமை!
--------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------- 
ஒரு சொல்லுக்கு அதன் மொழியில் என்ன அர்த்தமோ 
அதுதான் அந்தச் சொல்லின் அர்த்தம். புரிகிறதா?

ஒரு ஆங்கிலச் சொல் இருக்கிறது. இதற்கு ஆங்கில 
மொழியில் என்ன அர்த்தமோ, அதுதான் அச்சொல்லின் 
அர்த்தம். அச்சொல்லுக்கு தெலுங்கு மொழியில் என்ன 
அர்த்தமோ, அந்த அர்த்தம் அச்சொல்லின் அர்த்தம் 
ஆகாது. அப்படிக் கருதுவது பேதைமை! ஒரு 
உதாரணத்தைப் பார்ப்போம்.

Sooth saying என்று ஒரு ஆங்கிலச் சொல் உண்டு.
இதற்கு அருள்வாக்கு கூறுதல், நல்ல விதமாகக் 
குறி சொல்லுதல், இதம் தரும் சொற்களைக் கூறுதல் 
என்று பொருள்.

இல்லை, இல்லை, SOOTH என்ற சொல்லுக்கு தமிழில் 
சூத்து என்று பொருள். எனவே sooth saying என்றால் 
சூத்தைப் பற்றிக் கூறுவது என்று பொருள் 
கொண்டால் என்ன செய்வது?

தமிழ்நாட்டில்தான் போலிகள் மிகவும் அதிகம்..
போலி முற்போக்குக் கபோதிகளும், போலி 
இடதுசாரித்  தற்குறிகளும் இன்ன பிற கழிசடைகள் 
அனைவரும் sooth saying என்றால் சூத்தைப் பற்றிக் 
கூறுவது என்றுதான் பொருள் கொள்கிறார்கள்.       

தமிழில் மட்டும்தான் எப்படிப் பொருள் கொள்ள 
வேண்டும் என்று இலக்கணம் உண்டு. பொருள்கோள் 
பற்றி எத்தனை போலி முற்போக்குக் கபோதிகளுக்குத் 
தெரியும்?

செய்யுளுக்குப் பொருள் கொள்ளுவது எப்படி என்று 
தமிழ் இலக்கணம் கற்றுத் தருகிறது. யாற்றுநீர்ப் 
பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள் 
என்றெல்லாம் பொருள்கோள் உண்டு. ஒரு எடுத்துக் 
காட்டைப் பார்ப்போம்.

தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் 
வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே 
வங்கத்துச் சென்றார் வரின்.

இப்பாடலுக்கு நேரடியாகப் பொருள் கொண்டால் 
தாறுமாறாக வரும். எனவே  முறையான 
பொருள்கோளைப் பின்பற்றி இதற்குப் பொருள் 
காண வேண்டும். இப்பாடலுக்குரிய முறையான 
பொருள்கோள் எது? கொண்டுகூட்டுப் பொருள்கோள் 
எனப்படும் பொருள்கோளே.

உடுத்ததுவும் மேய்த்ததுவம் உம்பர்கோன் தன்னால் 
எடுத்ததுவும் பள்ளிக் கியையப்--படுத்ததுவும்
அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும் 
பொன்னா வரையிலை காய்பூ.

இது காளமேகப் புலவரின் பாடல். சைவ சித்தாந்த 
நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட காளமேகப் புலவர் 
தனிப்பாடல் திரட்டு என்ற நூலை வாங்கிப் 
படியுங்கள். இந்தப் பாடலை நான் எட்டாம் வகுப்பு 
படிக்கும்போது (1966ல்) முதன் முதலாக அறிந்தேன்.

இதற்கு எப்படிப் பொருள் கொள்ளுவது? இப்பாடல் 
கண்ணனைப் பற்றிய பாடல். உடுத்தது பொன்,
மேய்த்தது ஆ, எடுத்தது வரை, படுத்தது இலை
(ஆலிலை) என்று பொருள் கொள்ள வேண்டும்.

எடுத்தது வரை என்றால் எடுத்தது மலை என்று 
பொருள். கண்ணன் கோவர்த்தனகிரியைத் 
தோளில் தூக்கியதைக் குறிக்கிறது. விரிவாக 
எழுத இடமில்லை. அப்படி எழுதினாலும் 
தமிழ்நாட்டுத் தற்குறிகளுக்கு என்ன புரிந்து விடும்?
இப்பாடலுக்கு உரியது முறை நிரல்நிறைப் 
பொருள்கோள் ஆகும்.
 

அந்தக் காலத்தில் செய்யுளுக்குத்தான் பொருள்கோள் 
இருந்தது. உரைநடைக்கு இல்லை. அது தேவையும் 
இல்லை. இன்றோ உரைநடைக்கும் பொருள்கோள் 
தேவைப் படுகிறது. அந்த அளவில் இருக்கிறது 
தமிழ் வளர்ச்சி!

மீண்டும் sooth saying என்ற சொல்லுக்கு வருவோம்.
ஒரு சொல்லைப் பேசும் முன்பு அல்லது எழுதும் முன்பு  
சொல்லின் மூலம் என்ன, வரலாறு என்ன 
என்றெல்லாம் பார்க்க வேண்டாமா என்று 
சிலர் அங்கலாய்க்கின்றனர். 

நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதே என்று ஒரு 
பழமொழி உண்டு. கூடவே மொழி மூலமும் 
பார்க்காதே  என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பல சொற்களுக்கு முற்காலத்தில் வழங்கிய 
பொருள் இன்று இல்லையே! ஏன்? அது 
அப்படித்தான்! மொழி தொடர்ந்து இயங்கிக்  
கொண்டே இருக்கிறது. இயங்குகிற போக்கில் 
அது மாறிக்கொண்டும் இருக்கிறது. எனவே 
சொற்களின் பொருள் மாறும். இது மொழியின் 
தவிர்க்க இயலாத பண்பு.

பொன்மலர் நாற்றம் உடைத்து என்பது தமிழில் 
வழங்கும் பொன்மொழி. இங்கு நாற்றம் என்பது 
நறுமணம் என்ற பொருளில் ஆளப்படுகிறது.

"நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்"
என்கிறாள் ஆண்டாள் (திருப்பாவை).  இங்கும் 
நாற்றம் என்பது நறுமணம் என்ற பொருளில் 
வழங்கப் படுகிறது.

ஆனால் இன்று என்ன பொருள் முட்டாள்களே?
இன்று நாற்றம் என்றால் கெட்ட நாற்றம் என்று 
பொருள். Chemistry Labல் போய் அங்குள்ள 
H2S ஏனப்படும் ஹைட்ரஜன் சல்பைடு வாயுவைத் 
திறந்து வெளியே விடுங்கள். அவ்வளவுதான் 
நாற்றம் குடலைப் புரட்டும். திருநெல்வேலி சென்ட்ரல் 
கஃபேயில் சாப்பிட்ட டிபன் வாந்தியாக வந்து விடும்.

எனவே நாற்றம் என்பதற்கு இன்றைய பொருள் 
என்னவோ அதுதான் பொருள்.முன்பு என்ன பொருள் 
வழங்கப்பட்டது என்பது சொற்பிரயோகத்திற்குத்
தேவையற்றது. 

அடுத்து sir (சார்) என்ற ஆங்கிலச் சொல். இதன் 
etymologyயின் படி, (etymology = வரலாறு) I will ever 
remain your slave என்பதுதான் sir என்று மாறியுள்ளது.
எனவே சார் என்று சொல்லாதீர்கள், அது 
அடிமைத்தனத்தைக் குறிக்கும் சொல் என்று சில
குட்டி முதலாளித்துவ அசடுகள் கூறுவது உண்டு.        

நான் மத்திய அரசில் மூன்று தசாப்தங்களுக்கு 
மேல் பணியாற்றியவன். சார் என்ற சொல்லை 
என்னுடைய ஒட்டு மொத்தப் பணிக்காலத்தில்   
மூன்று லட்சம் முறைகள் உச்சரித்து இருப்பேன். 
அது போல மற்றவர்கள் என்னை சார் என்று 
கூப்பிட்டதும் குறிப்பிட்டதும், அது ஒரு மூன்று 
லட்சம் முறை இருக்கும். இவ்வளவு தூரம் 
பயன்பாடு மிக்க ஒரு சொல்லை எப்படிப் 
புறக்கணிக்க இயலும்? ஏன் புறக்கணிக்க 
வேண்டும்?

நான் இங்கு யாப்புறுத்த வருவது என்னவெனில்,
ஒரு சொல்லின் முந்தைய  வரலாறு எப்படி இருந்தாலும் 
அதை இன்று பார்க்க வேண்டிய தேவை இல்லை.
சொற்பிரயோகத்திற்கு முந்திய வரலாறு கணக்கில் 
கொள்ளப்பட வேண்டியதில்லை. 

மொழி எப்படி உயிருடன் இருக்கிறது? அது மக்களால் 
பேசப்படுவதால்! ஒவ்வொரு செல்லின் etymologyஐயும்  
தெரிந்து வைத்துக்கொண்டுதான் அச்சொல்லைப்  
பிரயோகிக்க வேண்டும் என்று தொல்காப்பியம் உட்பட 
உலகில் எந்த மொழியும் சொல்லவில்லை. அப்படி 
எந்த இலக்கணமும் சொல்லவில்லை. 

எனவே ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கில மொழியில் 
என்ன பொருளோ அதுதான் கணக்கு. அகராதியை 
எடுங்கள். அந்த ஆங்கிலச் சொல்லுக்கு அகராதி 
தரும் பொருள் என்ன என்று பாருங்கள். அதுதான் 
அச்சொல்லின் பொருள். 

அதை விடுத்து அச்சொல்லுக்கு தமிழில் என்ன 
பொருள், எத்தியோப்பிய மொழியில் என்ன 
பொருள் என்று பார்த்துக் கொண்டிருப்பவன் 
புத்தி பேதலித்தவன். சொற்களின் பிரயோகத்திற்கு 
மொழி வரலாறோ சொற்களின் பிறப்பியல் வரலாறோ 
(etymology) தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 
தொல்காப்பியத்தைப் படித்து விட்டா எட்டுக் 
கோடித் தமிழனும் தமிழ் பேசுகிறான்?

"வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்" என்கிறார் 
தொல்காப்பியர். செய்யுளை விட வழக்கிற்கே 
முதன்மை கொடுக்கிறார். தொல்காப்பியர் இப்படிக்
கூறியுள்ளதன பொருள் தமிழ்நாட்டில் ஒரு நாலைந்து 
பேருக்குத்தன் தெரியும். என்ன செய்ய? தமிழ்க 
கல்வியின் லட்சணம் அந்த மட்டத்தில் உள்ளது.
இதை எழுதும்போது எனக்கு கண்ணீர் வருகிறது.

என்னோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தத் 
தாலியறுத்த தமிழ்ப்பற்று என்னை விட்டுத் 
தொலைய மாட்டேன் என்கிறதே!

வாரணம் பொருத மார்பும்
வரையினை எடுத்த தோளும் 
நாரத முனிவர்க் கேற்ப
நயம்பட உரைத்த நாவும் 
தாரணி மௌலி பத்தும் 
சங்கரன் தந்த வாளும்
வீரமும் களத்தே போக்கி
.......       ............       ..................
என்று எழுதி இருப்பார் கம்பர். வீரமும் 
என்பதுடன் தமிழ்ப்பற்றும் என்று நான் 
சேர்த்துக் கொள்கிறேன்.
தமிழ்ப்பற்றும் சேர்ந்து போகட்டும். வெறுங்கையோடு 
வீடு ஏக விரும்புகிறேன். ((இங்கு வீடு என்பது houseதான்.
ஆறாம் பொருள் இன்பம் வீடு என்று நான்காவதாக 
வரும் வீடு அல்ல)/ 

இந்தக் கட்டுரையில் பிறிது மொழிதல் அணி
பயில்கிறது. சொல்ல வந்த பொருளை நேரடியாகச் 
சொல்லாமல், வேறு ஒரு பொருளைச் சொல்வதன் 
மூலம் சொல்ல வந்த பொருளை உணர்த்துவதே 
பிறிது மொழிதல் அணி ஆகும்.

இதற்கான புகழ் பெற்ற உதாரணமாக பள்ளி 
ஆசிரியர்கள் பின்வரும் குறளைக் கூறுவர்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 
சால மிகுத்துப் பெயின்.   
இக்குறளில் பிறிது மொழிதல் அணி பயில்கிறது.

இறுதியாக, வேற்றுப் பொருள்வைப்பணி என்று 
ஓர் அணி இருக்கிறது. அதை ஒரு உதாரணத்துடன் 
யாராவது விளக்க இயலுமா? , பிறிது மொழிதல் 
அணிக்கும் வேற்றுப் பொருள் வைப்பணிக்கும் 
உள்ள வேறுபாடு பற்றி யாராவது விளக்க இயலுமா?
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
மறைந்த பழம் பெரும் நடிகர் காளி என் ரத்தினம் 
நடித்த ஒரு படத்தில் தேவடியாக் கச்சேரி என்ற 
பதம் அடிக்கடி வரும். அச்சொல் அந்தக் காலத்தில் 
இழிவான பொருளில் வழங்கப்படவில்லை. இன்று 
தேவடியாக் கச்சேரி என்று வசனம் எழுதினால் 
முதுகுத் தொலியை உரித்து விடுவார்கள்.
***************************************************

திங்கள், 30 மே, 2022

பத்திரிகையாளர்கள் மீது 
கிஷோர் கே சுவாமி புகார்!
உண்மை வெளிவர வேண்டும்!
-----------------------------------------------
கிஷோர் கே சாமி என்னும் குட்டி முதலாளித்துவ 
அரசியல் ஆர்வலரை நம்மில் பலர் அறிந்திருக்கலாம்.
திமுக ஆட்சி வந்ததுமே கிஷோர் கே சுவாமி 
கைது செய்யப்பட்டார்.

அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதனால் 
ஆறு மாத காலம் அவர் சிறையில் இருக்க நேரிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரபல 
பத்திரிகையாளர்கள் கிஷோர் கே சுவாமியின்
விவகாரத்தில் தலையிட்டு உள்ளனர். அவர்கள் 
அ) குணசேகரன் ஆ) கார்த்திகைச் செல்வன் 

1) பார்ப்பனரான கிஷோர் கே சுவாமிக்கு 
சிறையில் சைவ உணவு கொடுக்கக் கூடாது என்றும் 
மாமிச உணவைக் கொடுக்க வேண்டும் என்றும்   
போலீஸ் அதிகாரிகளிடம் கார்த்திகைச் செல்வன் 
வலியுறுத்தியதாக கிஷோர் கே சுவாமி புகார் 
தெரிவிக்கிறார். (பார்க்க:: தாமரை யூடியூப்)

2) கிஷோர் கே சுவாமியை புழல் சிறையில் அடைக்கக் 
கூடாது என்றும், அதற்குப் பதிலாக செங்கல்பட்டு
சிறையில் அடைக்க வேண்டும் என்றும் 
சிறையில் அவரை நிர்வாணப் படுத்த வேண்டும் 
என்றும் குணசேகரன் கூறியதாக கிஷோர் கே
சுவாமி புகார் தெரிவிக்கிறார்.
(பார்க்க: தாமரை யூடியூப்)

குணசேகரன், கார்த்திகச் செல்வன் இருவர் மீதும்
கிஷோர் கே சுவாமி கூறியுள்ள புகார்கள் மிகவும் 
தீவிரமானவை. இந்தப் புகார்கள் உண்மையா 
என்று தெரியவில்லை.

புகார்கள் பொய் என்றால், கிஷோர் கே சுவாமி 
மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவர் 
சொன்னது பொய் என்று நிரூபிக்க வேண்டியது 
ஊடகவியலாளர்கள் குணசேகரன் கார்த்திகைச் 
செல்வன் ஆகிய இருவரின் கடமை ஆகும்.

எது உண்மை? தெரியப்படுத்துங்கள் குணசேகரன் 
அவர்களே! கார்த்திகைச் செல்வன் அவர்களே!
************************************************
         
   

ஞாயிறு, 29 மே, 2022

 SAFETY33

1) ராஜிவ் படுகொலை கட்டுரைகள் தொகுப்பு-1
-----------------------------------------------------------------------------------

சோனியாவுக்கும் சுப்பிரமணியம் சுவாமிக்கும்
ராஜிவ் கொலைச் சதியில் பங்கு உண்டா?
ராஜிவ் படுகொலையில் யாருக்கெல்லாம்
பங்கு உண்டு? யாருக்கெல்லாம் பங்கு இல்லை?
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
ராஜிவ் படுகொலை செய்யப் பட்டபோது அவருக்கு
வயது 47தான். உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு
அவருக்கு 74 வயது ஆகி இருக்கும்.
ராஜிவ் படுகொலையில் ஜெயலலிதாவுக்குப்
பங்கு உண்டு என்று ஒரு அபத்தமான கருத்து
நிலவியது; இன்றும் நிலவுகிறது. மே 21 ஸ்ரீபெரும்புதூர்
கூட்டத்தில் ஏன் ஜெயா பங்கேற்கவில்லை என்று
கேள்வி கேட்கிறது குட்டி முதலாளித்துவம்.
மே 21 அன்று பொண்டாட்டியோடு படுக்காதவன்
எல்லாம் பொண்டாட்டியைக் கொல்லப் போகிறான்
என்பது மாதிரியான ஒரு அபத்தமான தர்க்கம் இது.
அதிமுக ஒரு கட்சி. காங்கிரசும் ஒரு கட்சி. இரண்டும்
கூட்டணி வைத்து இருந்தாலும், தனித்தனியாகவும்
கூட்டம் போடுவார்கள்; சேர்ந்தும் கூட்டம்
போடுவார்கள். இதெல்லாம் அந்தந்தக்
கட்சிகளின் உரிமை, சௌகரியம் முதலியவற்றைப்
பொறுத்தது. இதை வைத்துக் கொண்டு
ஜெயலலிதாவுக்கு ராஜிவ் கொலைச் சதியில்
பங்குண்டு என்பவன் மிகப்பெரிய மன நோயாளி.
அடுத்து கலைஞர். கலைஞர்தான் புலிகளோடு
சேர்ந்து கொண்டு ராஜீவைக் கொன்று விட்டார்
என்ற பிரச்சாரத்தை அதிமுக, காங்கிரஸ் இரு
கட்சிகளும் முழுவீச்சில் நடத்தின. திமுக அக்கினிப்
பிரவேசம் செய்து தன்னை நிரூபிக்க வேண்டும்
என்று பேசினார் வாழப்பாடி. மு க ஸ்டாலினுக்கு
கொலைச்சதி பற்றித் தெரியும் என்று பேசியவர்
வாழப்பாடி.
மே 21ல் ஸ்ரீபெரும்புதூரில் நடக்க இருந்த
கூட்டத்தை திமுக ரத்து செய்தது ஏன் என்ற கேள்வி
எல்லாத் தரப்பில் இருந்தும் கலைஞரை நோக்கி
வீசப்பட்டது. ஒரே நாளில் ஒரே ஊரில் திமுக,
காங்கிரஸ் இரு கட்சிகளின் கூட்டம் என்றால்
ஏற்படும் உராய்வைத் தவிர்க்கும் (to avoid friction)
நோக்கில் இயல்பாக கலைஞர் எடுத்த முடிவு
அவரைப் பெரும் சங்கடத்தில் தள்ளியது.
எனவே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க,
ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் சொல்லியதால்தான்
கூட்டத்தை ரத்து செய்தேன் என்று கலைஞர்
சாமர்த்தியமாக அறிவித்தார். ஆனால் ஆளுநர்
பீஷ்ம நாராயண் சிங்கோ தான் கலைஞரிடம்
அப்படிச் சொல்லவில்லை என்று கூறி கலைஞரை
மேலும் சங்கடத்தில் மாட்டி வைத்து விட்டார்.
உண்மையில் ராஜிவ் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டா? கொலை பற்றி அவருக்கு முன்பே
தெரியுமா?
ஆபிரஹாம் லிங்கன் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டு என்பது எவ்வளவு உண்மையோ
அந்த அளவுக்கு உண்மைதான் ராஜிவ் கொலையில்
கலைஞருக்குப் பங்கு உண்டு என்பதும்.
வாசகர்கள் கவனத்திற்கு:
ஆபிரஹாம் லிங்கன் கொலையுண்டது 1865ல்.
கலைஞர் பிறந்தது 1924ல். அதாவது லிங்கன்
கொலை நடந்து 58 ஆண்டு கழித்து கலைஞர்
பிறந்துள்ளார். கலைஞரின் தந்தை முத்துவேலரே
அப்போது பிறந்திருக்கவில்லை!
இருந்தாலும், ராஜிவ் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டு; ஜெயலலிதாவுக்குப் பங்கு உண்டு
என்று பிதற்றிக் கொண்டு திரியும் தற்குறிகள்
தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு.
அடுத்து டாக்டர் சுப்பிரமணியம் சுவாமிக்குப்
பங்கு உண்டா என்பது ஒரு கேள்வி. 28 ஆண்டுகளாக
உயிரோடு இருக்கும் கேள்வி. கேள்வி கேட்டு வாயை
மூடுவதற்கு முன்பே, உண்டு உண்டு என்று கோரஸாக
குட்டி முதலாளித்துவம் பதில் சொல்லும். தமிழ்நாட்டில்
பின் எப்படிப் பதில் வரும்!
சு சுவாமிக்கு எத்தகைய பங்கும் கிடையாது என்பதே
உண்மை. சந்தேகம் பலருக்கு இருக்கலாம்.
ஆனால் ஒருபோதும் சந்தேகமானது நிரூபணத்தின்
இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்று
ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
(The suspicion can not take the place of proof).
சந்திரா சாமிக்கு நெருக்கமானவர்கள் என்றால்
அது சந்திர சேகரும் நரசிம்மராவும்தான்.சு சுவாமி
நெருக்கமானவர் அல்ல. சந்திரா சாமியைப்
பொறுத்த மட்டில், சு சுவாமி ஒரு Guest; அவ்வளவுதான்.
வீட்டுக்கு வந்து ஒரு காப்பி சாப்பிட்டு விட்டுப்
போகலாம்; அவ்வளவுதான்.
எல்லா விஷயங்களையும் சந்திரா சாமியானவர்
சு சுவாமியிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்.
அவரிடம் இருந்து ஒன்றிரண்டு விஷயங்களைத்
தெரிந்து கொண்டு, அவர் சொல்லாத விஷயத்தையும்
யூகித்துச் சொல்லும் சு சுவாமி தன்னை மிகவும்
சக்தி வாய்ந்த மனிதராகக் காட்டிக் கொள்வார்.
உண்மையில் சு சுவாமி ஒரு வெத்து வெட்டு.
ராஜீவைக் கொல்லும் அளவுக்கு அவருக்கு சக்தி
இருக்குமானால், அதன் பிறகு அவர் அமைச்சராகி
இருப்பார். தொடர்ந்து அமைச்சராக இருந்து
கொண்டே இருப்பார்.
ஆனால் கடைசியாக அவர் அமைச்சராக இருந்தது
ஜூன் 1991ல். அதாவது சந்திரசேகர் பிரதமராக
இருந்தபோது சுவாமி அமைச்சராக இருந்தார்.
அதன் பிறகு இன்று வரை அவர் அமைச்சராக
முடியவில்லை.
அமைச்சரை விடுங்கள். எம்பி பதவி பற்றிப்
பார்ப்போம். இந்தியாவில் தேசிய அரசியலில்
உள்ள ஒரு அரசியல்வாதி எம்பியாக இருந்தால்
மட்டுமே மதிப்பு. அது மட்டுமல்ல, எம்பியாக
இருந்தால் மட்டுமே காரியம் சாதிக்க முடியும்.
இல்லாவிட்டால் மயிருக்குச் சமம்.
சு சுவாமி கடைசியாக எப்போது எம்பியாக
இருந்தார்? 1998-99ல் மதுரை எம்பியாக இருந்தார்.
அதன் பிறகு, ஒரு எம்பியாக ஆவதற்காக நாய்
படாத பாடு பட்டார். முடியவில்லை. 1999ல்
இருந்து 2016 வரை 17 ஆண்டுகள் சு சுவாமி
எம்பியாகக் கூட இல்லை.
2014ல் பாஜக ஆட்சி வந்ததும் மோடியிடம் எம்பி
பதவி கேட்டு காவடி தூக்கினார். மோடிக்கு
இவருக்கு ஒரு எம்பி பதவி அழ விருப்பமில்லை.
கடைசியில் வேறு வழியின்றி, 2016ல் கேவலம்
ஒரு நியமன எம்பி பதவியைக் கொடுத்தார்.
சினிமா நடிகர்கள் சிவாஜி கணேசன், நடிகை
,நர்கீஸ்,கிரிக்கெட்டின் டெண்டுல்கர்
போன்றவர்களுக்கு ஒரு கெளரவத்திற்காகக்
கொடுக்கும் ராஜ்யசபா நியமன எம்பி பதவியை
பெருத்த முயற்சிக்குப் பின்னர் சு சுவாமி அடைந்து
இருக்கிறார்.இதுதான் சுவாமியின் அந்தஸ்து.
நியமன எம்பியாக இருந்ததால், கடந்த ஜனாதிபதி
தேர்தலில் சுவாமி வாக்களிக்கவில்லை
(NOT eligible to vote).
ராஜிவ் கொலைச்சதியில் சுவாமிக்குப் பங்கு
இருக்குமானால், இந்திய அரசியலில் இவர்
புறக்கணிக்க முடியாத சக்தியாகி இருப்பார்.
ஆனால் இவரோ ஒரு எம்பி பதவிக்கு 17 வருஷம்
ஏங்கிக்கிடந்தார்.சிந்திக்கும் திறன் உள்ளவர்கள்
இதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆக ராஜிவ் கொலையில் சு சுவாமிக்குப் பங்கு
எதுவும் இல்லை என்பதைத் தர்க்க ரீதியாக
நிரூபித்து இருக்கிறேன்.
கலைஞர், ஜெயலலிதா, சு சுவாமி ஆகிய
மூவருக்கும் ராஜிவ் படுகொலையில் எந்தத்
தொடர்பும் இல்லை. இந்த உண்மை இங்கே
நிரூபிக்கப் பட்டு இருக்கிறது.
இது கட்டுரை அல்ல. இது தீர்ப்பு. 28 வருஷத்துக்கு
முன்னால் சொன்ன முட்டாள்தனமான கருத்தை
இன்றைக்கும் சொல்லிக் கொண்டு இருப்பது
என்னுடைய இந்தத் தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு
வரட்டும்.
இதையும் மீறி, எந்த முட்டாளாவது கலைஞருக்குப்
பங்கு, சுவாமிக்குப் பங்கு என்று பிதற்றிக்
கொண்டிருந்தால் ...............
வேண்டாம், நான் சாபம் விடக் கூடாது. என்னுடைய
சாபம் உடனே பலித்து விடும்.
----------------------------------------------------------------------------------
தொடரும்
அடுத்து: சோனியா, வாழப்பாடி, மூப்பனார்,
குமரன் பத்மநாபன்

 SAFETY 222 

சோனியாவுக்கும் சுப்பிரமணியம் சுவாமிக்கும்
ராஜிவ் கொலைச் சதியில் பங்கு உண்டா?
ராஜிவ் படுகொலையில் யாருக்கெல்லாம்
பங்கு உண்டு? யாருக்கெல்லாம் பங்கு இல்லை?
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
ராஜிவ் படுகொலை செய்யப் பட்டபோது அவருக்கு
வயது 47தான். உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு
அவருக்கு 74 வயது ஆகி இருக்கும்.

ராஜிவ் படுகொலையில் ஜெயலலிதாவுக்குப்
பங்கு உண்டு என்று ஒரு அபத்தமான கருத்து
நிலவியது; இன்றும் நிலவுகிறது. மே 21 ஸ்ரீபெரும்புதூர்
கூட்டத்தில் ஏன் ஜெயா பங்கேற்கவில்லை என்று
கேள்வி கேட்கிறது குட்டி முதலாளித்துவம்.

மே 21 அன்று பொண்டாட்டியோடு படுக்காதவன்
எல்லாம் பொண்டாட்டியைக் கொல்லப் போகிறான்
என்பது மாதிரியான ஒரு அபத்தமான தர்க்கம் இது.

அதிமுக ஒரு கட்சி. காங்கிரசும் ஒரு கட்சி. இரண்டும்
கூட்டணி வைத்து இருந்தாலும், தனித்தனியாகவும்
கூட்டம் போடுவார்கள்; சேர்ந்தும் கூட்டம்
போடுவார்கள். இதெல்லாம் அந்தந்தக்
கட்சிகளின் உரிமை, சௌகரியம் முதலியவற்றைப்
பொறுத்தது. இதை வைத்துக் கொண்டு
ஜெயலலிதாவுக்கு ராஜிவ் கொலைச் சதியில்
பங்குண்டு என்பவன் மிகப்பெரிய மன நோயாளி.

அடுத்து கலைஞர். கலைஞர்தான் புலிகளோடு
சேர்ந்து கொண்டு ராஜீவைக் கொன்று விட்டார்
என்ற பிரச்சாரத்தை அதிமுக, காங்கிரஸ் இரு
கட்சிகளும் முழுவீச்சில் நடத்தின. திமுக அக்கினிப்
பிரவேசம் செய்து  தன்னை நிரூபிக்க வேண்டும்
என்று பேசினார் வாழப்பாடி. மு க ஸ்டாலினுக்கு
கொலைச்சதி பற்றித் தெரியும் என்று பேசியவர்
வாழப்பாடி.

மே 21ல் ஸ்ரீபெரும்புதூரில் நடக்க இருந்த
கூட்டத்தை திமுக ரத்து செய்தது ஏன் என்ற கேள்வி
எல்லாத் தரப்பில் இருந்தும் கலைஞரை நோக்கி
வீசப்பட்டது. ஒரே நாளில் ஒரே ஊரில் திமுக,
காங்கிரஸ் இரு கட்சிகளின் கூட்டம் என்றால்
ஏற்படும் உராய்வைத் தவிர்க்கும் (to avoid friction)
நோக்கில் இயல்பாக கலைஞர் எடுத்த முடிவு
அவரைப் பெரும் சங்கடத்தில் தள்ளியது.

எனவே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க,
ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் சொல்லியதால்தான்
கூட்டத்தை ரத்து செய்தேன் என்று கலைஞர்
சாமர்த்தியமாக அறிவித்தார். ஆனால் ஆளுநர்
பீஷ்ம நாராயண் சிங்கோ தான் கலைஞரிடம்
அப்படிச் சொல்லவில்லை என்று கூறி கலைஞரை
மேலும் சங்கடத்தில் மாட்டி வைத்து விட்டார்.

உண்மையில் ராஜிவ் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டா? கொலை பற்றி அவருக்கு முன்பே
தெரியுமா?

ஆபிரஹாம் லிங்கன் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டு என்பது எவ்வளவு உண்மையோ
அந்த அளவுக்கு உண்மைதான் ராஜிவ் கொலையில்
கலைஞருக்குப் பங்கு உண்டு என்பதும்.

வாசகர்கள் கவனத்திற்கு:
ஆபிரஹாம் லிங்கன் கொலையுண்டது 1865ல்.
கலைஞர் பிறந்தது 1924ல். அதாவது லிங்கன்
கொலை நடந்து 58 ஆண்டு கழித்து கலைஞர்
பிறந்துள்ளார். கலைஞரின் தந்தை முத்துவேலரே
அப்போது பிறந்திருக்கவில்லை!

இருந்தாலும், ராஜிவ் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டு; ஜெயலலிதாவுக்குப் பங்கு உண்டு
என்று பிதற்றிக் கொண்டு திரியும்  தற்குறிகள்
தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு.

அடுத்து டாக்டர் சுப்பிரமணியம் சுவாமிக்குப்
பங்கு உண்டா என்பது ஒரு கேள்வி. 28 ஆண்டுகளாக
உயிரோடு இருக்கும் கேள்வி. கேள்வி கேட்டு வாயை
மூடுவதற்கு முன்பே, உண்டு உண்டு என்று கோரஸாக
குட்டி முதலாளித்துவம் பதில் சொல்லும். தமிழ்நாட்டில்
பின் எப்படிப் பதில் வரும்!

சு சுவாமிக்கு எத்தகைய பங்கும் கிடையாது என்பதே
உண்மை. சந்தேகம் பலருக்கு இருக்கலாம்.
ஆனால் ஒருபோதும் சந்தேகமானது நிரூபணத்தின்
இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்று
ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
(The suspicion can not take the place of proof).

சந்திரா சாமிக்கு நெருக்கமானவர்கள் என்றால்
அது சந்திர சேகரும் நரசிம்மராவும்தான்.சு சுவாமி
நெருக்கமானவர் அல்ல. சந்திரா சாமியைப்
பொறுத்த மட்டில், சு சுவாமி ஒரு Guest; அவ்வளவுதான்.
வீட்டுக்கு வந்து ஒரு காப்பி சாப்பிட்டு விட்டுப்
போகலாம்; அவ்வளவுதான்.

எல்லா விஷயங்களையும் சந்திரா சாமியானவர்
சு சுவாமியிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்.
அவரிடம் இருந்து ஒன்றிரண்டு விஷயங்களைத்
தெரிந்து கொண்டு, அவர் சொல்லாத விஷயத்தையும்
யூகித்துச் சொல்லும் சு சுவாமி தன்னை மிகவும்
சக்தி வாய்ந்த மனிதராகக் காட்டிக் கொள்வார்.

உண்மையில் சு சுவாமி ஒரு வெத்து வெட்டு.
ராஜீவைக் கொல்லும் அளவுக்கு அவருக்கு சக்தி
இருக்குமானால், அதன் பிறகு அவர் அமைச்சராகி
இருப்பார். தொடர்ந்து அமைச்சராக இருந்து
கொண்டே இருப்பார்.

ஆனால் கடைசியாக அவர் அமைச்சராக இருந்தது
ஜூன் 1991ல். அதாவது சந்திரசேகர் பிரதமராக
இருந்தபோது சுவாமி அமைச்சராக இருந்தார்.
அதன் பிறகு இன்று வரை அவர் அமைச்சராக
முடியவில்லை.

அமைச்சரை விடுங்கள். எம்பி பதவி பற்றிப்
பார்ப்போம். இந்தியாவில் தேசிய அரசியலில்
உள்ள ஒரு அரசியல்வாதி எம்பியாக இருந்தால்
மட்டுமே மதிப்பு. அது மட்டுமல்ல, எம்பியாக
இருந்தால் மட்டுமே காரியம் சாதிக்க முடியும்.
இல்லாவிட்டால் மயிருக்குச் சமம்.

சு சுவாமி கடைசியாக எப்போது எம்பியாக
இருந்தார்? 1998-99ல் மதுரை எம்பியாக இருந்தார்.
அதன் பிறகு, ஒரு எம்பியாக ஆவதற்காக நாய்
படாத பாடு பட்டார். முடியவில்லை. 1999ல்
இருந்து 2016 வரை 17 ஆண்டுகள் சு சுவாமி
எம்பியாகக் கூட இல்லை.

2014ல் பாஜக ஆட்சி வந்ததும் மோடியிடம் எம்பி
பதவி கேட்டு காவடி தூக்கினார். மோடிக்கு
இவருக்கு ஒரு எம்பி பதவி அழ விருப்பமில்லை.
கடைசியில் வேறு வழியின்றி, 2016ல் கேவலம்
ஒரு நியமன எம்பி பதவியைக் கொடுத்தார்.
சினிமா நடிகர்கள் சிவாஜி கணேசன், நடிகை
,நர்கீஸ்,கிரிக்கெட்டின் டெண்டுல்கர்
போன்றவர்களுக்கு ஒரு கெளரவத்திற்காகக்
கொடுக்கும் ராஜ்யசபா நியமன எம்பி பதவியை
பெருத்த முயற்சிக்குப் பின்னர் சு சுவாமி அடைந்து
இருக்கிறார்.இதுதான் சுவாமியின் அந்தஸ்து.
நியமன எம்பியாக இருந்ததால், கடந்த  ஜனாதிபதி
தேர்தலில் சுவாமி வாக்களிக்கவில்லை
(NOT eligible to vote). 

ராஜிவ் கொலைச்சதியில் சுவாமிக்குப் பங்கு
இருக்குமானால், இந்திய அரசியலில் இவர்
புறக்கணிக்க முடியாத சக்தியாகி இருப்பார்.
ஆனால் இவரோ ஒரு எம்பி பதவிக்கு 17 வருஷம்
ஏங்கிக்கிடந்தார்.சிந்திக்கும் திறன் உள்ளவர்கள்
இதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆக ராஜிவ் கொலையில் சு சுவாமிக்குப் பங்கு
எதுவும் இல்லை என்பதைத் தர்க்க ரீதியாக
நிரூபித்து இருக்கிறேன்.

கலைஞர், ஜெயலலிதா, சு சுவாமி ஆகிய
மூவருக்கும் ராஜிவ் படுகொலையில் எந்தத்
தொடர்பும் இல்லை. இந்த உண்மை இங்கே
நிரூபிக்கப் பட்டு இருக்கிறது.

இது கட்டுரை அல்ல. இது தீர்ப்பு. 28 வருஷத்துக்கு
முன்னால் சொன்ன முட்டாள்தனமான கருத்தை
இன்றைக்கும் சொல்லிக் கொண்டு இருப்பது
என்னுடைய இந்தத் தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு
வரட்டும்.

இதையும் மீறி, எந்த முட்டாளாவது கலைஞருக்குப்
பங்கு, சுவாமிக்குப் பங்கு என்று பிதற்றிக்
கொண்டிருந்தால் ...............
வேண்டாம், நான் சாபம் விடக் கூடாது. என்னுடைய
சாபம் உடனே பலித்து விடும்.
----------------------------------------------------------------------------------------
தொடரும்
அடுத்து: சோனியா, வாழப்பாடி, மூப்பனார்,
குமரன் பத்மநாபன்.
*************************************************************

ராஜிவ் படுகொலை பற்றிய எமது கட்டுரைத்
தொடரில் முன்வைத்த வாதங்கள், தர்க்கங்களை
இதுவரை எவர் ஒருவரும் மறுக்கவில்லை. ஏனெனில்
மறுப்பதற்கு இடம் தராத மிகவும் காத்திரமான
வலுவான தர்க்கங்கள் அவை. அவை உண்மையை
எடுத்துக் கூறுவதோடு நில்லாமல், உண்மையை
நிரூபிக்கவும் செய்கின்றன.இதற்கு பதிலளிக்க
வக்கற்ற நிலையில் எவரேனும் அவதூறுகளையோ
வசையையோ முன்வைத்து விட்டுத்
தப்பிக்கலாம் என்று நினைத்தால் அது முடியாது.
அத்தகையவர்களின் முதுகெலும்புகள்
குறிக்கப்படும்.



         சோனியாவுக்கும் சுப்பிரமணியம் சுவாமிக்கும்

ராஜிவ் கொலைச் சதியில் பங்கு உண்டா?
ராஜிவ் படுகொலையில் யாருக்கெல்லாம்
பங்கு உண்டு? யாருக்கெல்லாம் பங்கு இல்லை?
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
ராஜிவ் படுகொலை செய்யப் பட்டபோது அவருக்கு
வயது 47தான். உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு
அவருக்கு 74 வயது ஆகி இருக்கும்.

ராஜிவ் படுகொலையில் ஜெயலலிதாவுக்குப்
பங்கு உண்டு என்று ஒரு அபத்தமான கருத்து
நிலவியது; இன்றும் நிலவுகிறது. மே 21 ஸ்ரீபெரும்புதூர்
கூட்டத்தில் ஏன் ஜெயா பங்கேற்கவில்லை என்று
கேள்வி கேட்கிறது குட்டி முதலாளித்துவம்.

மே 21 அன்று பொண்டாட்டியோடு படுக்காதவன்
எல்லாம் பொண்டாட்டியைக் கொல்லப் போகிறான்
என்பது மாதிரியான ஒரு அபத்தமான தர்க்கம் இது.

அதிமுக ஒரு கட்சி. காங்கிரசும் ஒரு கட்சி. இரண்டும்
கூட்டணி வைத்து இருந்தாலும், தனித்தனியாகவும்
கூட்டம் போடுவார்கள்; சேர்ந்தும் கூட்டம்
போடுவார்கள். இதெல்லாம் அந்தந்தக்
கட்சிகளின் உரிமை, சௌகரியம் முதலியவற்றைப்
பொறுத்தது. இதை வைத்துக் கொண்டு
ஜெயலலிதாவுக்கு ராஜிவ் கொலைச் சதியில்
பங்குண்டு என்பவன் மிகப்பெரிய மன நோயாளி.

அடுத்து கலைஞர். கலைஞர்தான் புலிகளோடு
சேர்ந்து கொண்டு ராஜீவைக் கொன்று விட்டார்
என்ற பிரச்சாரத்தை அதிமுக, காங்கிரஸ் இரு
கட்சிகளும் முழுவீச்சில் நடத்தின. திமுக அக்கினிப்
பிரவேசம் செய்து  தன்னை நிரூபிக்க வேண்டும்
என்று பேசினார் வாழப்பாடி. மு க ஸ்டாலினுக்கு
கொலைச்சதி பற்றித் தெரியும் என்று பேசியவர்
வாழப்பாடி.

மே 21ல் ஸ்ரீபெரும்புதூரில் நடக்க இருந்த
கூட்டத்தை திமுக ரத்து செய்தது ஏன் என்ற கேள்வி
எல்லாத் தரப்பில் இருந்தும் கலைஞரை நோக்கி
வீசப்பட்டது. ஒரே நாளில் ஒரே ஊரில் திமுக,
காங்கிரஸ் இரு கட்சிகளின் கூட்டம் என்றால்
ஏற்படும் உராய்வைத் தவிர்க்கும் (to avoid friction)
நோக்கில் இயல்பாக கலைஞர் எடுத்த முடிவு
அவரைப் பெரும் சங்கடத்தில் தள்ளியது.

எனவே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க,
ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் சொல்லியதால்தான்
கூட்டத்தை ரத்து செய்தேன் என்று கலைஞர்
சாமர்த்தியமாக அறிவித்தார். ஆனால் ஆளுநர்
பீஷ்ம நாராயண் சிங்கோ தான் கலைஞரிடம்
அப்படிச் சொல்லவில்லை என்று கூறி கலைஞரை
மேலும் சங்கடத்தில் மாட்டி வைத்து விட்டார்.

உண்மையில் ராஜிவ் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டா? கொலை பற்றி அவருக்கு முன்பே
தெரியுமா?

ஆபிரஹாம் லிங்கன் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டு என்பது எவ்வளவு உண்மையோ
அந்த அளவுக்கு உண்மைதான் ராஜிவ் கொலையில்
கலைஞருக்குப் பங்கு உண்டு என்பதும்.

வாசகர்கள் கவனத்திற்கு:
ஆபிரஹாம் லிங்கன் கொலையுண்டது 1865ல்.
கலைஞர் பிறந்தது 1924ல். அதாவது லிங்கன்
கொலை நடந்து 58 ஆண்டு கழித்து கலைஞர்
பிறந்துள்ளார். கலைஞரின் தந்தை முத்துவேலரே
அப்போது பிறந்திருக்கவில்லை!

இருந்தாலும், ராஜிவ் கொலையில் கலைஞருக்குப்
பங்கு உண்டு; ஜெயலலிதாவுக்குப் பங்கு உண்டு
என்று பிதற்றிக் கொண்டு திரியும்  தற்குறிகள்
தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு.

அடுத்து டாக்டர் சுப்பிரமணியம் சுவாமிக்குப்
பங்கு உண்டா என்பது ஒரு கேள்வி. 28 ஆண்டுகளாக
உயிரோடு இருக்கும் கேள்வி. கேள்வி கேட்டு வாயை
மூடுவதற்கு முன்பே, உண்டு உண்டு என்று கோரஸாக
குட்டி முதலாளித்துவம் பதில் சொல்லும். தமிழ்நாட்டில்
பின் எப்படிப் பதில் வரும்!

சு சுவாமிக்கு எத்தகைய பங்கும் கிடையாது என்பதே
உண்மை. சந்தேகம் பலருக்கு இருக்கலாம்.
ஆனால் ஒருபோதும் சந்தேகமானது நிரூபணத்தின்
இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்று
ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
(The suspicion can not take the place of proof).

சந்திரா சாமிக்கு நெருக்கமானவர்கள் என்றால்
அது சந்திர சேகரும் நரசிம்மராவும்தான்.சு சுவாமி
நெருக்கமானவர் அல்ல. சந்திரா சாமியைப்
பொறுத்த மட்டில், சு சுவாமி ஒரு Guest; அவ்வளவுதான்.
வீட்டுக்கு வந்து ஒரு காப்பி சாப்பிட்டு விட்டுப்
போகலாம்; அவ்வளவுதான்.

எல்லா விஷயங்களையும் சந்திரா சாமியானவர்
சு சுவாமியிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்.
அவரிடம் இருந்து ஒன்றிரண்டு விஷயங்களைத்
தெரிந்து கொண்டு, அவர் சொல்லாத விஷயத்தையும்
யூகித்துச் சொல்லும் சு சுவாமி தன்னை மிகவும்
சக்தி வாய்ந்த மனிதராகக் காட்டிக் கொள்வார்.

உண்மையில் சு சுவாமி ஒரு வெத்து வெட்டு.
ராஜீவைக் கொல்லும் அளவுக்கு அவருக்கு சக்தி
இருக்குமானால், அதன் பிறகு அவர் அமைச்சராகி
இருப்பார். தொடர்ந்து அமைச்சராக இருந்து
கொண்டே இருப்பார்.

ஆனால் கடைசியாக அவர் அமைச்சராக இருந்தது
ஜூன் 1991ல். அதாவது சந்திரசேகர் பிரதமராக
இருந்தபோது சுவாமி அமைச்சராக இருந்தார்.
அதன் பிறகு இன்று வரை அவர் அமைச்சராக
முடியவில்லை.

அமைச்சரை விடுங்கள். எம்பி பதவி பற்றிப்
பார்ப்போம். இந்தியாவில் தேசிய அரசியலில்
உள்ள ஒரு அரசியல்வாதி எம்பியாக இருந்தால்
மட்டுமே மதிப்பு. அது மட்டுமல்ல, எம்பியாக
இருந்தால் மட்டுமே காரியம் சாதிக்க முடியும்.
இல்லாவிட்டால் மயிருக்குச் சமம்.

சு சுவாமி கடைசியாக எப்போது எம்பியாக
இருந்தார்? 1998-99ல் மதுரை எம்பியாக இருந்தார்.
அதன் பிறகு, ஒரு எம்பியாக ஆவதற்காக நாய்
படாத பாடு பட்டார். முடியவில்லை. 1999ல்
இருந்து 2016 வரை 17 ஆண்டுகள் சு சுவாமி
எம்பியாகக் கூட இல்லை.

2014ல் பாஜக ஆட்சி வந்ததும் மோடியிடம் எம்பி
பதவி கேட்டு காவடி தூக்கினார். மோடிக்கு
இவருக்கு ஒரு எம்பி பதவி அழ விருப்பமில்லை.
கடைசியில் வேறு வழியின்றி, 2016ல் கேவலம்
ஒரு நியமன எம்பி பதவியைக் கொடுத்தார்.
சினிமா நடிகர்கள் சிவாஜி கணேசன், நடிகை
,நர்கீஸ்,கிரிக்கெட்டின் டெண்டுல்கர்
போன்றவர்களுக்கு ஒரு கெளரவத்திற்காகக்
கொடுக்கும் ராஜ்யசபா நியமன எம்பி பதவியை
பெருத்த முயற்சிக்குப் பின்னர் சு சுவாமி அடைந்து
இருக்கிறார்.இதுதான் சுவாமியின் அந்தஸ்து.
நியமன எம்பியாக இருந்ததால், கடந்த  ஜனாதிபதி
தேர்தலில் சுவாமி வாக்களிக்கவில்லை
(NOT eligible to vote). 

ராஜிவ் கொலைச்சதியில் சுவாமிக்குப் பங்கு
இருக்குமானால், இந்திய அரசியலில் இவர்
புறக்கணிக்க முடியாத சக்தியாகி இருப்பார்.
ஆனால் இவரோ ஒரு எம்பி பதவிக்கு 17 வருஷம்
ஏங்கிக்கிடந்தார்.சிந்திக்கும் திறன் உள்ளவர்கள்
இதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆக ராஜிவ் கொலையில் சு சுவாமிக்குப் பங்கு
எதுவும் இல்லை என்பதைத் தர்க்க ரீதியாக
நிரூபித்து இருக்கிறேன்.

கலைஞர், ஜெயலலிதா, சு சுவாமி ஆகிய
மூவருக்கும் ராஜிவ் படுகொலையில் எந்தத்
தொடர்பும் இல்லை. இந்த உண்மை இங்கே
நிரூபிக்கப் பட்டு இருக்கிறது.

இது கட்டுரை அல்ல. இது தீர்ப்பு. 28 வருஷத்துக்கு
முன்னால் சொன்ன முட்டாள்தனமான கருத்தை
இன்றைக்கும் சொல்லிக் கொண்டு இருப்பது
என்னுடைய இந்தத் தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு
வரட்டும்.

இதையும் மீறி, எந்த முட்டாளாவது கலைஞருக்குப்
பங்கு, சுவாமிக்குப் பங்கு என்று பிதற்றிக்
கொண்டிருந்தால் ...............
வேண்டாம், நான் சாபம் விடக் கூடாது. என்னுடைய
சாபம் உடனே பலித்து விடும்.
----------------------------------------------------------------------------------------
தொடரும்
அடுத்து: சோனியா, வாழப்பாடி, மூப்பனார்,
குமரன் பத்மநாபன்.
*************************************************************

ராஜிவ் படுகொலை பற்றிய எமது கட்டுரைத்
தொடரில் முன்வைத்த வாதங்கள், தர்க்கங்களை
இதுவரை எவர் ஒருவரும் மறுக்கவில்லை. ஏனெனில்
மறுப்பதற்கு இடம் தராத மிகவும் காத்திரமான
வலுவான தர்க்கங்கள் அவை. அவை உண்மையை
எடுத்துக் கூறுவதோடு நில்லாமல், உண்மையை
நிரூபிக்கவும் செய்கின்றன.இதற்கு பதிலளிக்க
வக்கற்ற நிலையில் எவரேனும் அவதூறுகளையோ
வசையையோ முன்வைத்து விட்டுத்
தப்பிக்கலாம் என்று நினைத்தால் அது முடியாது.
அத்தகையவர்களின் முதுகெலும்புகள்
குறிக்கப்படும்.



         

 SAFETY 1 மூன்று தூக்குத் தண்டனை பெற வேண்டிய

குற்றவாளி சந்திரா சாமியை
ஈழ ஆதரவுப் போலிகள்  எதிர்க்காமல் இருந்தது ஏன்?
கலைஞரும் ஏன் எதிர்க்கவில்லை?
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
சந்திரா சாமி! ராஜிவ் படுகொலையில் முக்கிய
குற்றவாளிகளில் ஒருவர். ராஜிவ் கொலைச்சதி,
சதி நிறைவேற்றம், போலீசிடம் மாட்டாத
ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் உதவி கேட்டு
வந்தால், அவர்களை வெளிநாடு தப்பிச் செல்ல
உதவி செய்தல் என்று ராஜிவ் படுகொலையின்
அத்தனை அம்சங்களிலும் தொடர்பு உடையவர்
சந்திரா சாமி.

இவர் பிடிபட்டு இருந்தால், நிச்சயமாக மூன்று
மரண தண்டனைகள், ஐந்து ஆயுள் தண்டனைகள்
என்று தடா நீதிமன்றம் அவருக்கு வழங்கி இருக்கும்.
ஆனால், கடந்த ஆண்டு சந்திரா சாமி இறந்து விட்டார். 
எனவே இனி அவரைப் பற்றிப் பேசுவதால்
அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை..

சந்திரா சாமிக்கு வேண்டியவர்கள் மிகவும் பெரிய
இடத்தில் இருந்த இருவர். 1. ராஜிவ் கொலை நடந்த
போது, பிரதமராக இருந்த சந்திர சேகர். 2. ராஜிவ்
கொலைக்குப் பின் பிரதமராக வந்த நரசிம்ம ராவ்.
இவர்கள் இருவரின் அரவணைப்பு காரணமாக,
சந்திராசாமியின் நிழலைக்கூட எவரும் நெருங்க
முடியாத நிலை இருந்தது.

இங்கு ஒரு முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்புகிறேன்.
தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு என்றும் ராஜிவ்
கொலையாளிகளுக்கு ஆதரவு என்றும் தீவிரமாக
இயங்கி வருகிற எவராவது இதுவரை சந்திராசாமியைக்
கண்டித்து ஒரு வார்த்தை பேசியதுண்டா?

வைகோ, நெடுமாறன் இவ்விருவரும் என்றாவது
சந்திரா சாமியைக் கண்டித்து ஒரு சொல் சொல்லி
இருப்பார்களா? கிடையாது. ஆரம்பத்தில் நேர்மையாக
இருந்து, பின் சந்தர்ப்பவாதச் சாக்கடையில்
விழுந்த திருச்சி வேலுச்சாமி, 1990களில் சந்திரா
சாமியை அம்பலப் படுத்திப் பேசினாரே,
அப்போது வைகோவோ நெடுமாறனோ அதை
ஆதரித்தது உண்டா? கிடையாது.

வைகோவும் நெடுமாறனும் திருச்சி வேலுச்சாமியுடன்
ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டதோ, அல்லது
அவருடன் இணக்கமாகச் செயல்பட்டு சந்திரா
சாமியை அம்பலப் படுத்தியதோ உண்டா?
கிடையாது.

ஏன்? சந்திரா சாமி புலிகளின் நண்பர். புலிகளுக்கு
ஆயுத சப்ளை செய்யும் தரகர். அதிநவீன
ஆயுதங்களை, ஆயுத வியாபாரிகளிடம் இருந்து
வாங்கி புலிகளுக்கு விற்பவர் சந்திரா சாமி.
அது மட்டுமல்ல, ஆயுதங்கள் கடல்  வழியாக,
புலிகளின் இருப்பிடம் சென்று சேரும் வரை,
உளவுத்துறை, இந்தியக்  கடற்படை ஆகியோரிடம்
சிக்காமல் பாதுகாத்து, பத்திரமாகக் கொண்டு
சேர்ப்பவர் சந்திரா சாமி.

எனவே சந்திரா சாமியைக் கண்டிப்பது என்பது
புலிகளையே கண்டிப்பதாகும். இதை வைகோவும்
நெடுமாறனும் செய்வார்களா? செய்ய முடியுமா?
செய்தால் அவர்கள் உயிருடன் இருக்க முடியுமா?

எனவேதான், ராஜிவ் கொலைக் குற்றவாளி சந்திரா
சாமியைக் கைது செய் என்று ஒருநாளும்
குரல் எழுப்பவில்லை வைகோவும் நெடுமாறனும்.
சந்திரா சாமி இல்லாமல் ராஜிவ் கொலை
நடந்திருக்காது என்று நன்கு தெரிந்தவர்கள்
வைகோவும் நெடுமாறனும். (கவனிக்கவும்: இந்த
உண்மை ராஜிவ் கொலையுண்ட பிறகு
அவர்களுக்குத் தெரிய வந்தது).

சரி, இவர்கள் புலிகளின் கூலிகள். இவர்களை
விட்டுத் தள்ளுங்கள். கலைஞர் கருணாநிதி
ஏன் சந்திரா சாமியைக் கண்டித்து ஒரு குரல்
கூட எழுப்பவில்லை? அவர்தான் ராஜிவ்
கொலையால் அதிகமான பாதிப்புக்கு உள்ளானவர்.
பொய்யாக தன் மீது சுமத்தப்பட்ட ராஜிவ்
கொலைப்பழியைச் சுமந்தவர்.(அந்தக் காலத்தில்
கருணாநிதிதான் கொலைகாரன் என்று வாழப்பாடி
ராமமூர்த்தி பேசாத பேச்சா?)

இவ்வளவு பாதிப்புக்குப் பின்னரும் ஏன் கலைஞர்
சந்திரா சாமியை அம்பலப் படுத்தவில்லை?
ஏனென்றால், கலைஞரால் அது முடியாது. சந்திரா
சாமியை எதிர்த்து கலைஞர் ஓர் அறிக்கை
விடுத்த மறு நிமிடமே, அவரைச் சிறையில்
தள்ளி இருப்பார்கள். அல்லது கொன்று கூட
இருப்பார்கள். இதுதான் உண்மை.

எனவே ஜெயின் கமிஷனில் மூச்சுப் பிடிக்க
வாதாடிய திமுக வழக்கறிஞர் திண்டிவனம்
வெங்கட் ராமன்,சந்திரா சாமியைக் கண்டால்
குனிந்து கும்பிட்டு ஆசி வாங்கி கொண்டு
மரியாதையோடு போய் விடுவார். துஷ்டனைக்
கண்டால் தூர விளக்கு என்பதே கலைஞர்
அவருக்கு இட்ட கட்டளை!

ராஜிவ் கொலையில் சிவராசனுக்கு எவ்வளவு
முக்கியத்துவம் உண்டோ, அதே அளவு
முக்கியத்துவம் உடையவர் சந்திரா சாமி.
ராஜிவ் கொலையின் முக்கியமான குற்றவாளி
சந்திரா சாமி.

ஈழ ஆதரவு என்றும், எழுவர் விடுதலை என்றும்
பிதற்றித் திரியும் குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்கள் எவராவது சந்திரா சாமியை என்றாவது
கண்டித்தது உண்டா?

 நளினி, பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலைக்கு
பெரும் தடையாக இருந்தவர் சந்திரா சாமி
என்பது அதிகாரத் தாழ்வாரங்களில்
உள்ளவர்களுக்குத் தெரியும். வைகோ நெடுமாறன்
வகையறாவுக்கும் தெரியும். என்றாலும், வைகோ
நெடுமாறன், சீமான், திருமுருகன், கொளத்தூர் மணி
வகையறாக்கள் யாராவது சந்திரா சாமியைக்
கண்டித்தது உண்டா? கிடையாது. ஏன்? பயம்!
இதுதான் இந்தப் போலிகளின் யோக்கியதை! 

சுப்பிரமணியம் சுவாமி, சோனியா, மூப்பனார்,
ஜெயலலிதா பற்றி அடுத்த கட்டுரையில்
பார்ப்போம்.

பின்குறிப்பு:
சந்திரா சாமி, சந்திரசேகர், நரசிம்ம ராவ் ஆகிய
மூவருமே இன்று உயிருடன் இல்லை.   
*********************************************************
தொடரும்
---------------------------------------------------------------------------------------
 

சனி, 28 மே, 2022

கண்ணால் பார்க்க முடியாத கருத்துளையைப் 
புகைப்படம் எடுத்து விட்டோம்!
----------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
பாயும் ஒளி நீ எனக்கு 
பார்க்கும் விழி நான் உனக்கு 
என்றார் பாரதியார். ஒளியும் விழியும் சேர்ந்தால்தான் 
பார்க்க இயலும் என்ற அறிவியல் உண்மையை 
எடுத்துரைக்கிறார் பாரதியார்.

ஒரு கருந்துளையை யாராலும் பார்க்க முடியாது.
கருந்துளையின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சலாம்.
அந்த வெளிச்சம் கருந்துளையில் பட்டு, பிரதிபலித்து 
நமது விழியில் பட்டால்தான் பார்வை சாத்தியம் ஆகும்.   
ஆனால் கருந்துளையின் மீது விழுந்த வெளிச்சம் 
அதனால் விழுங்கப்பட்டு விடும். நமது கண்ணுக்கு வராது.
எனவே கருந்துளையை யாரும் பார்க்க முடியாது.

அப்படி யாராலும் பார்க்க முடியாத கருந்துளையை 
இன்று புகைப்படம் எடுத்து உலகிற்குக் காட்டி
வருகிறது நவீன அறிவியல். இது அறிவியலின் வரலாற்றில் 
மற்றுமொரு மைல்கல். மூடப்பட்டுள்ள அனைத்துப் 
பூட்டுக்களுக்கும் அறிவியலிடம் சாவிகள் இருக்கின்றன.  

 
பால்வீதி மண்டலக் கருந்துளை!
-----------------------------------------------
மே 12, 2022 என்னும் இந்நாள் உலக வானியல் வரலாற்றில் 
சிறப்பிடம் பெற்றதொரு திருநாளாகும். இந்நாளில் ஒரு 
கருந்துளையை நம்மால் புகைப்படம் எடுக்க முடிந்தது. 
அதுவும் நமது பால்வீதி மண்டலத்தில் உள்ள ஒரு 
கருந்துளையைப் புகைப்படம் எடுத்துள்ளனர் 
வானியல் அறிஞர்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2019ல் (ஏப்ரல் 10, 2019)
அறிவியலின் வரலாற்றிலேயே முதன் முதலாக 
ஒரு கருந்துளை புகைப்படம் எடுக்கப் பட்டது. அந்தக் 
கருந்துளை மெஸ்சியர் 87 (சுருக்கமாக M-87) என்னும் 
காலக்சியில் உள்ளது. சார்லஸ் மெஸ்சியர் 
(Charles Messier 1730-1817) என்னும் பிரெஞ்சு வானியல் அறிஞரின் 
நினைவாக அந்த காலக்சிக்கு மெஸ்சியர் என்று பெயரிடப் 
பட்டுள்ளது.

மெஸ்சியர் காலக்சியானது கன்னி ராசி மண்டலத்தில் 
(Virgo constellation) உள்ளது. இந்த காலக்சியின் நடு மையத்தில் 
உள்ள கருந்துளையே M-87 கருந்துளை ஆகும். காலக்சியின் 
பெயரே கருந்துளைக்கும் வைக்கப் பட்டுள்ளது.
2019ல் இந்தக் கருந்துளையைத்தான் (M-87) வானியல் 
அறிஞர்கள் புகைப்படம் எடுத்தனர். உலகில் புகைப்படம் 
எடுக்கப்பட்ட முதல் கருந்துளை இதுதான். 

தனுஷ் ராசி மண்டலக் கருந்துளை!
---------------------------------------------------- 
தற்போது 2022ல் நமது பால்வீதி காலக்சியில் உள்ள 
சஜிட்டாரியஸ் ஏ ஸ்டார் (Sagittarius A*)  என்னும் கருந்துளையைப் 
புகைப்படம் எடுத்துள்ளனர். உலகில் புகைப்படம் 
எடுக்கப்பட்ட இரண்டாவது கருந்துளை இது.

Sagittarius A ஸ்டார் என்றால் என்ன பொருள்? தனுஷ் ராசிக்கு 
ஆங்கிலத்தில் Sagittarius என்று பெயர்.அந்தக் 
கருந்துளையானது தனுஷ் ராசி மண்டலத்தில் 
இருக்கிறது. எனவே அதன் அடிப்படையில் 
அதற்கு Sagittarius A* என்று பெயரிடப் பட்டுள்ளது.


ராசி மண்டலங்கள்!
--------------------------------
இந்த இடத்தில் ராசி மண்டலங்கள் மற்றும் பிற 
நட்சத்திரக் கூட்டங்கள் குறித்து அறிந்து கொள்வோம். 
விண்கோளத்தில் (Celestial sphere) 88 நட்சத்திரக் 
கூட்டங்கள் (constellations) உள்ளன. இந்த 88 நட்சத்திரக் 
கூட்டங்களும் IAU எனப்படும்  சர்வதேச வானியல் 
சங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டவை.
(IAU = International Astronomical Union).

மேற்கூறிய 88 நட்சத்திரக் கூட்டங்களில் 
12 நட்சத்திரக் கூட்டங்கள் ராசி மண்டலங்கள் 
(zodiac constellations)  என்று தனிப்பெயர் பெற்றுள்ளன.

ராசி என்றால் சித்திரம், உருவம் என்று பொருள். 
ஆரம்ப கால மனிதர்களுக்கு, அவர்கள் வானத்தைப் 
பார்த்தபோது,நட்சத்திரக் கூட்டங்கள் என்ன உருவத்தில் 
தெரிந்ததோ, அந்த உருவத்தையே அந்த 
நட்சத்திரக் கூட்டத்தின் பெயராக வைத்தார்கள்.
   
ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக் கூட்டம் ஆடு போலத்
தெரிந்தபோது, அதற்கு ஆடு என்றே பெயரிட்டார்கள்.
அதைத்தான் நாம் மேஷம் என்கிறோம். ஆங்கிலத்தில் 
Aries (அய்ரீஸ்) என்கிறார்கள். அய்ரீஸ் என்றால் 
செம்மறி ஆடு என்று பொருள்.

12 ராசி மண்டலங்களையும் உள்ளடக்கிய ராசிப் 
பிராந்தியம் (zodiac region) வானில் எங்கே இருக்கிறது?
வானில் ஒரு வளையம் (belt) போல ராசிப்பிராந்தியம் 
தெரியும். பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையில் 
இந்த ராசிப் பிராந்தியம் (zodiac region) உள்ளது.

பூமியில் இருந்து பார்க்கும்போது, ஓராண்டில் 
இந்த ராசிப் பிராந்தியத்தில் உள்ள 12 ராசி மண்டலங்கள் 
ஒவ்வொன்றிலும் சூரியன் நுழைந்து வெளியேறுகிற  
தோற்றத்தைப் பார்க்க முடியும். அதாவது அப்படித் 
தோற்றமளிக்கும் (apparent but not actual)..

தற்போது நமக்கு மிகவும் பயன் தரும் 12 ராசி மண்டலங்களையும்  
அவற்றின் ஆங்கிலப் பெயர்களையும் அறிந்து கொள்வோம்.
1.. மேஷம் --- Aries 
2.. ரிஷபம்---- Taurus 
3... மிதுனம் ----- Gemini 
4.. கடகம்------- Cancer 

5.. சிம்மம் ---Leo
6.. கன்னி ----Virgo 
7.. துலாம் ---Libra
8.. விருச்சிகம்-- Scorpio

9.. தனுஷ் ----Sagittarius 
10...மகரம் ---Capricorn 
11.. கும்பம் ---Aquarius
12..மீனம் ----Pisces       


ஒளியாண்டு எவ்வளவு தொலைவு?
---------------------------------------------------
சரி, சஜிட்டாரியஸ் ஏ ஸ்டார் என்னும் கருந்துளை பூமியில் இருந்து 
எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? 26,673 ஒளியாண்டு 
தூரத்தில் இருக்கிறது.

ஒரு ஒளியாண்டு என்பது ஓராண்டில் ஒளி செல்லும் 
தூரம் ஆகும். ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிமீ தூரத்தைக் 
கடக்கிறது ஒளி. இப்படியே ஒரு ஆண்டில் எவ்வளவு 
தூரத்தைக் கடக்கும்? 9.5 டிரில்லியன் கிமீ தூரத்தைக் 
கடக்கும். எனவே ஒரு ஒளியாண்டு என்பது 9.5 டிரில்லியன் 
கிலோமீட்டர் தூரம் ஆகும்.(1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி).

சஜிட்டாரியஸ் ஏ ஸ்டார் என்னும் இந்தக் கருந்துளை பூமியில் 
இருந்து 26,673 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது என்றால் 
அத்தூரத்தை கிலோமீட்டரில் கூறிப் பார்ப்போமா!  

1 ly = 9.5 x 10^12 km.
 26673 ly = 26673 x 9.5 x 10^12 km  
= 253393 x 10^12 km 
= 2.5 x 10^5 x 10^12 km 
= 2.5 x 10^17 km 
= 0.25 x 10^18 km 
= 0.25 குவின்டில்லியன் கிமீ.    

(10^12 = 1 டிரில்லியன்;
10^15 = 1 குவாட்ரில்லியன் 
10^18 = 1 குவின்டில்லியன்)    

நிகழ்வெல்லைத் தொலைநோக்கி (Event Horizon Telescope) என்ற 

பெயரிலான 300க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 

விஞ்ஞானிகளின் உலகளாவிய ஒரு குழுதான் இவ்விரு 

கருந்துளைகளையும் படம் எடுத்துள்ளது.


கருந்துளையின் நிழல்!

----------------------------------- 

கருந்துளையைப் படம் எடுப்பது என்பதன் பொருள் 

உண்மையில் கருந்துளையின் நிழலைப் படம் 

எடுப்பதாகும். ஏனெனில் கருந்துளையை

எவரும் படம் பிடிக்க இயலாது.  எப்படி என்று பார்ப்போம்.


ஒரு புகைப்படம் எடுக்க இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும்..

ஒன்று, பொருளின் மீது வெளிச்சம் பட வேண்டும்; இரண்டு,

அந்த வெளிச்சம் பிரதிபலிக்கப் பட்டு காமிராவுக்கு வர

வேண்டும்.உலகெங்கும் இப்படித்தான் புகைப்படங்கள்

எடுக்கப் படுகின்றன. ஆனால் கருந்துளையை இந்த முறையில்

புகைப்படம் எடுக்க முடியாது. கருந்துளையின் மீது வெளிச்சத்தைப்

பாய்ச்சுகிறோம் என்று வைத்துக் கொண்டால், அந்த வெளிச்சத்தை

கருந்துளை விழுங்கி விடும். கருந்துளைக்கு உள்ளே போன

வெளிச்சம் மீண்டு வெளியே வராது. அதாவது காமிராவுக்கு 

வெளிச்சம் வந்து சேராது. இதனால் பிரதிபலிப்பு நடைபெறாது. 

எனவே புகைப்படம் எடுக்க இயலாது. 


அப்படியானால் கருந்துளையைப் புகைப்படம் எடுத்தோம் 

என்பதன் பொருள் என்ன? கருந்துளையை அல்ல, அதன் நிழலைத்தான் புகைப்படம் எடுக்க இயலும். எனவே கருந்துளையின் நிழலைத்தான் 

புகைப்படம் எடுத்துள்ளோம் என்பதே பொருள்.. 

(We have obtained the image of the shadow of a black hole).


நிகழ்வெல்லை!

------------------------ 

இதைப் புரிந்து கொள்ள ஒரு கருந்துளையின் நிகழ்வெல்லை

(event horizon) பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு கருந்துளையையும் அது தவிர்த்த புறவுலகையும்

பிரிப்பது நிகழ்வெல்லை ஆகும். கருந்துளைக்கு அருகில்

ஒரு விண்கலம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

நிகழ்வெல்லைக்கு அப்பால் வெளிப்புறமாக இருக்கும் வரை

அந்த விண்கலத்திற்கு கருந்துளையால் பாதிப்பில்லை.

நிகழ்வெல்லைக்கு உட்புறமாக அந்த விண்கலம் கொண்டு 

வரப்படுமென்றால், அது கருந்துளைக்கு உள்ளே 

இழுக்கப்பட்டு விடும். அதன் பிறகு அதன் வாழ்வு முடிந்து 

விடும். ஆக நிகழ்வெல்லை என்பது ஒரு லட்சுமணக் கோடு 

ஆகும். இக்கோட்டை மீறுவதானது பேரழிவைத் தருவிக்கும். 



சரி, கருந்துளையின் நிழலை எப்படிப் படம் பிடிப்பது?

கருந்துளையின் நிழல் நிகழ்வெல்லையில் விழும்போது,

அதைப் படம் பிடித்துள்ளோம். 


ஒரு கருந்துளை என்பது பிரம்மாண்டமான நிறை 

கொண்ட ஒரு மையத்தைக் கொண்டிருக்கும்.

இந்த மையப் பகுதியில் இருந்து ஒளியோ துகளோ எதுவும்

வெளிவராது  எனினும் இந்த மையத்தைச் சுற்றி  வாயுக்களும்

விண் தூசுகளும் சற்றேறக்குறைய ஒளியின் வேகத்தில்

(நொடிக்கு 3 லட்சம் கிமீ) பறந்து கொண்டிருக்கும். கருந்துளை

பெரும் வெப்பம் உடையது என்பதால், இந்த வெப்பத்தின்

காரணமாக சுழலும் துகள்கள் கண்ணைப் பறிக்கும்

பிரகாசத்துடன் ஒளிரும். கோடி சூரியன்களின் பிரகாசத்துடன்

இது காட்சி அளிக்கும். இந்த ஒளிவெள்ளத்தில் கருந்துளையின்

உருவம் நிழல் வடிவத்தில் நிகழ்வெல்லையின் மீது விழும்.

இதைத்தான் தற்போது படம் எடுத்துள்ளோம். 


ஆக ஏதோ ஒரூ உருவத்தை அல்ல, திட்டவட்டமாக 

ஒரு கருந்துளையின் நிழலைப் படம் எடுத்துள்ளோம்.

ஒரு கருந்துளை, அதைச் சுற்றிச் சூழ்ந்துள்ள வெளிச்சம், 

அந்த வெளிச்சத்தின் விளைவாக ஏற்படும் கருந்துளையின் 

நிழல், அந்த நிழலானது கருந்துளையின் நிகழ்வெல்லையின் 

மீது விழுதல் என்னும் வரிசையான நிகழ்வுகளைக்  

கணக்கில் கொண்டு, நிகழ்வெல்லையின் மீது விழுந்த 

கருந்துளையின் நிழலைச் சிறைப் பிடித்து விட்டோம்.

இது வானவியல் வரலாற்றில் மானுடத்தின் மதிப்பு மிக்க  

சாதனை!


ரேடியோ தொலைநோக்கிகள்!

---------------------------------------------

கருந்துளையின் நிழலைப் புகைப்படம் எடுக்க 

வேண்டுமெனில் பிரம்மாண்டமான பூமியின் அளவு 

பெரிய தொலைநோக்கி வேண்டும். அப்படிப்பட்ட 

பெரியதொரு ஒற்றைத் தொலைநோக்கி இன்றைய 

தொழில்நுட்பத்தில் சாத்தியம் இல்லை. எனவே எட்டு 

தொலைநோக்கிகளை உலகின் பல்வேறு  

இடங்களில் வைத்து அவற்றின் ஒருங்கிணைக்கப்பட்ட 

திறனைப் பயன்படுத்துகிறது EHT (Event Horizon Telescope) 

ஆராய்ச்சியாளர்களின் குழு.


பூமியின் அளவு பெரிய ஒரு தொலைநோக்கி இருந்தால், 

(பூமியின் சுற்றளவு 40,000 கிமீ), அதன் பிரிதிறன் 

(resolving power) எவ்வளவு இருக்குமோ 

அதற்குச் சமமான பிரிதிறனை இந்த எட்டு 

தொலைநோக்கிகளின் சேர்க்கை கொண்டிருக்கிறது.

ஸ்பெயினில் தொடங்கி தென்துருவம் வரை, சிலியில் 

தொடங்கி ஹவாய் வரை இத்தொலைநோக்கிகள் 

வைக்கப் பட்டிருந்தன.  


2017ல் எட்டு தொலைநோக்கிகளைக் கொண்டிருந்த 

EHT குழு தற்போது 11 தொலைநோக்கிகளைக் 

கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் அளவில் 

பெரிய ரேடியோ தொலைநோக்கிகள் ஆகும். 


குவியல் குவியலாக தரவுகள்!
--------------------------------------------- 

இந்தத் தொலைநோக்கிகளில் இருந்து பெறப்பட்ட 

தரவுகள் பிரமிக்க வைப்பவை. அவை 4 petabytes 

அளவுள்ள தரவுகள் (peta = 10^15) ஆகும். அதாவது 

4 குவாட்ரில்லியன் தரவுகள் ஆகும். இவ்வளவு 

அதிகமான தரவுகளை இணையம் மூலமாக 

அனுப்ப இயலாது. அது அதிக காலம் பிடிக்கும்.

எனவே இத்தரவுகள் வன் தகடுகளில் (hard discs)

சேமிக்கப்பட்டு ஆகாய விமானம் மூலமாக 

அனுப்பப் பட்டன.


இத்தரவுகள் ஆண்டுக்கணக்கில் பகுப்பாய்வு 

செய்யப்பட்டு இறுதியில் கருந்துளையின் 

சித்திரம் இப்படித்தான் இருக்கும் என்று 

நிர்ணயிக்கப் பட்டது. அந்தச் சித்திரத்தைத்தான்  

சஜிட்டாரியஸ் ஏ ஸ்டாரின் புகைப்படம் என்று 

உலகிற்கு அறிவித்தது EHT குழு.


கருந்துளை என்றால் என்ன?
------------------------------------------
நிறை மிகுந்த சில நட்சத்திரங்கள் தம் அந்திம 
காலத்தில் கருந்துளைகளாக மாற்றம் அடைவதற்கான 
வாய்ப்பைக் கொண்டவை. ஒரு நட்சத்திரம் கருந்துளையாக மாற வேண்டுமெனில், குறைந்தபட்சமாக அது சூரியனின் நிறையை 
விட 1.4 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். நமது 
சூரியனின் நிறை சற்றுத் தோராயமாக 2 x 10^30 கிகி ஆகும். 
இதன் 1.4 மடங்கு என்பது 2.8 x 10^30 கிலோகிராம் ஆகும். 
இந்த அளவு நிறையுள்ள ஒரு நட்சத்திரமே பின்னாளில் நியூட்ரான் நட்சத்திரமாகவோ கருந்துளையாகவோ  மாற இயலும்.  

2020ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசில் பாதி  
கருந்துளைகளின் உருவாக்கம் பற்றிய கோட்பாட்டுப் 
பங்களிப்புக்காக ஆக்ஸ்போர்டு பேராசிரியர் ரோகர் 
பென்ரோசுக்கு வழங்கப் பட்டது. நமது பால்வீதி காலக்சியில் 
ஒரு பெருநிறைக் கருந்துளை இருப்பதைக் 
கண்டுபிடித்த ஆர் ஜென்செல் மற்றும் ஆண்டிரியா கெஸ் 
ஆகிய இருவருக்கும் மீதியுள்ள பாதிப் பரிசு பகிர்ந்து
வழங்கப் பட்டது.

தற்போது நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் 
கண்டு பிடித்த கருந்துளையின் புகைப்படமும் 
எடுக்கப்பட்டு விட்டது. இவை அனைத்தும் ஐன்ஸ்டைனின் 
பொதுச் சார்பியல் கோட்பாட்டை மென்மேலும் 
உறுதிப் படுத்துகின்றன.
*********************************************** 


   





 (3)