புதன், 25 மே, 2022

 ராஜிவ் காந்தி படுகொலைக்காக

பெரியார் திடலில் CBI அதிகாரிகளிடம் பிடிபட்ட  

பேரறிவாளனுக்கு  நீதிமன்றம் வழங்கிய 

தண்டனைகள் என்னென்ன?

---------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------

ராஜிவ் காந்தி படுகொலை மே 21,1991ல்

நிகழ்த்தப் பட்டது. சம்பவம் நடந்து 

21 நாட்களுக்குப் பின்னரே, ஜூன் 11, 19991ல் 

பேரறிவாளன் போலீசிடம் பிடிபடுகிறார்.


கொலைச்சதியில் பங்கேற்று விட்டு, கொலைச்சதி 

சார்ந்த தடயங்களை அப்புறப் படுத்தி விட்டு 

நல்ல பிள்ளை போல பெரியார் திடலில் வந்து 

பதுங்கிக் கொண்டார் பேரறிவாளன்


குண்டு வெடிப்பு வன்முறை போன்ற 

கொடிய வன்முறையை தந்தை பெரியார் 

ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.

தந்தை பெரியார் மட்டுமல்ல ஆசிரியர் 

வீரமணி அவர்களோ அவரின் கட்சியில் உள்ள 

ஏனைய திராவிடர் கழகத் தலைவர்களோ

வன்முறையை குண்டு வைப்பதை ஏற்றுக் 

கொள்ளாதவர்கள்.


இந்நிலையில் ராஜிவ் படுகொலையின் 

கொலைச்சதியில் பங்கேற்று விட்டு 

பேரறிவாளன் பெரியார் திடலில் 

புகலிடம் தேடி இருப்பதை ஆசிரியர் 

வீரமணி அவர்களோ, திக தலைவர்களோ 

விரும்பவில்லை.


அப்போது திக தலைவர்களில் ஒருவரான 

கலி பூங்குன்றன் போலீசின் கொடுமைக்கு 

இலக்கானார். விசாரணை என்ற பெயரில் 

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் CBI போலீசார் 

கலி பூங்குன்றனின் முதுகுத் தொலியை 

உரித்து விட்டனர்.


எனவே பேரறிவாளனைத் தேடி, CBI போலீசார் 

பெரியார் திடலுக்கு வந்ததுமே, ஆசிரியர் 

வீரமணி அவர்கள் பேரறிவாளனை போலீசில் 

தயக்கமின்றி ஒப்படைத்து விட்டார். 


பேரறிவாளனின் சிறைவாசம் ஜூன் 11, 1991ல் 

தொடங்குகிறது. பூந்தமல்லி தடா நீதிமன்றம் 

1998 ஜனவரியில் தனது தீர்ப்பை வழங்குகிறது.

நீதியரசர் நவநீதம் அவர்கள் குற்றம் 

சாட்டப்பட்ட அனைவருக்கும் (26 பேருக்கும்)

மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.


பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள்:

1) 3 மாத சிறை 

2) ஓரண்டு சிறை 

3) இரண்டு ஆண்டு சிறை 

4) மூன்றாண்டு சிறை 

5) இரண்டு ஆயுள் தண்டனைகள் 

6) மரண தண்டனை.


அண்மையில் (மே 2022ல்) உச்சநீதிமன்றம் 

அவரின் ஆயுள் தண்டனையை தண்டனைக் 

குறைப்பு (remission) செய்து பேரறிவாளனை 

விடுதலை செய்துள்ளது 

 

பேரறிவாளனுக்கு ஒரு மரண தண்டனை 

இரண்டு ஆயுள் தண்டனை என்பதை 

ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு தீவிரமான தண்டனைகள் வழங்கப் 

பட்டுள்ளபோது, அந்த அளவுக்கு அவர் புரிந்த 

குற்றங்கள் என்ன என்று உச்ச நீதிமன்றத்

தீர்ப்புரையைப் படித்துப் பார்த்து வாசகர்கள் 

உண்மையை  அறியலாம்.


நல்ல ஆங்கிலப் புலமையும் சட்டம் சார்ந்த 

அடிப்படை அறிவும் உள்ள வாசகர்கள் 

உச்ச நீதிமன்றத் தீர்ப்புரையை நன்கு 

படிக்குமாறு வேண்டுகிறேன்.

**************************************          

 

  

    .    

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக