வெள்ளி, 27 மே, 2022

ராஜிவ் கொலைச்சதியில் முக்கியமான ஒருவர்
நேமிசந்த் ஜெயின் என்பவர்!
எழுவர் விடுதலை எப்போது?
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
ராஜிவ் காந்தி படுகொலையை முற்றிலும்
தட்டையாகப் புரிந்து கொள்பவர்களே அதிகம்.
குறைந்த பட்சமாக 
1. ராஜிவ் கொலைச்சதி  (conspiracy) 
2. கொலைச்சதி நிறைவேற்றம் (execution of conspiracy)
என்று இரண்டு பெரும் அம்சங்களாக ராஜிவ்
படுகொலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ராஜிவ் கொலைச்சதியை நிறைவேற்றியவர்கள்
யார் என்று நமக்கெல்லாம் தெரியும். தாணு.
சுபா, நளினி, முருகன்,பேரறிவாளன் உள்ளிட்ட
சிவராசன் குழுவினர் கொலைச்சதியை நிறைவேற்றினர்.
இதை ஆங்கிலத்தில் execution part என்று சொல்வார்கள்.

இந்த நிறைவேற்றும் பகுதியில் (execution part) சிவராசன்
குழுவினர் மட்டுமின்றி, விடுதலைப் புலிகளும் 
இடம் பெறுகின்ற்னர்.விடுதலைப் புலிகள்
என்றால், 1. பிரபாகரன் 2. பொட்டு அம்மான் 3. அகிலா
என்ற மூவர் மீதும் கொலைக்குற்றம் சாட்டப்
பட்டுள்ளது.

ஆனால் இந்த மூவரோடு நின்று விடுவதல்ல நாம்
 பேசுகிற நிறைவேற்றும் பகுதி. அடுத்து 4)ஆன்டன்
பாலசிங்கம் 5) கேபி எனப்படும் குமரன் பத்மநாபன்
6) லண்டனில் இருந்த கிட்டு ஆகியோரையும்
கணக்கில் கொள்ள வேண்டும்.

மாத்தையா, கருணா ஆகியோருக்கு இந்தச் சதி
பற்றித் தெரியாது என்பது உறுதிப் படுத்தப்
பட்டிருக்கிறது. ஆக, விடுதலைப் புலிகளில்
குறைந்தது ஆறு பேர் ராஜிவ் படுகொலையின்
நிறைவேற்றும் பகுதியில் (execution part) உள்ளவர்கள்.

இவர்களின் கட்டளையின் பேரில் சிவராசன்
தலைமையிலான 26 பேருக்கும் மேற்பட்ட குழு
ராஜீவின் படுகொலையை (The actual execution)
நிறைவேற்றியது. இதில் சிலர் ஏற்கனவே 
உயிரிழந்து விட்டனர். எனவே அவர்களைக்
கணக்கில் சேர்க்கவில்லை.

ஆக, இதுவரை பார்த்தது நிறைவேற்றும் பகுதியில்
(execution part) யார் யார் என்பதைத்தான்.
இனி கொலைச்சதியில் (conspiracy) யார் யார் என்று
பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்க்கும்போது, முக்கியமான நபராக
வருகிறவர்தான் நேமிசந்த் ஜெயின். இந்தப்
பெயரில் இவரை அறிந்தவர்கள் சொற்பம்.
இவர்தான் சந்திராசாமி (1948-2017) எனப்படும்
சாமியார். இவர் கடந்த ஆண்டில், 2017ல்
இறந்து விட்டார். இவர் ஜெயின் சமூகத்தைச்
சார்ந்த மார்வாடி ஆவார்.

இவர் சர்வதேச ஆயுத வியாபாரத்தில் ஓர்
பிரபலமான இடைத்தரகர். உலகெங்கும்
ஆயுதம் தேவைப்படும் அரசுகளுக்கும்,
அரசு எதிர்ப்புக் குழுக்களும் ஒருங்கே
ஆயுதம் வாங்கித் தருபவர் இவர்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்த மட்டில்
அவர்களுக்கு மிகவும் நெருக்கமான மிகவும்
வேண்டிய ஆயுதத் தரகர் சந்திராசாமி.
புலிகளுக்குத் தேவையான பல்வேறு நவீன
உயர் ரக ஆயுதங்களை இந்தியக் கடல்
வழியாக வட இலங்கைக் கடற்கரைக்கு
அனுப்பி வைப்பதில் இவர் ஆற்றல் மிக்கவர்.
இவருக்கு கடற்படையிலும் உளவுத்துறையிலும்  
பெருத்த செல்வாக்கு உண்டு. எனவே
புலிகளுக்கும் இவருக்கும் பரஸ்பரம்
மிகவும் நெருக்கமான உயிரோட்டமான
தொடர்பும் உறவும் உண்டு.

ராஜீவைக் கொலை செய்த பெல்ட் வெடிகுண்டை
சிவராசனிடம் வழங்கியவர் இவரே. ஆனால்
இவரின் பயங்கரவாத சதிச் செயல்கள் அனைத்தும்
திட்டமிட்டு மறைக்கப் பட்டன. ராஜிவ் கொலைக்குப்
பின்னர் பதவியேற்ற மத்திய நரசிம்மராவ் அரசு
இவரின் பெயர் கூட வெளிவந்து விடாமல்
இவரைப் பாதுகாத்தது.

ஆக ராஜிவ் கொலைச்சதி விடுதலைப் புலிகளோடு
நின்று விடவில்லை. அவர்களையும் தாண்டி சதி
விரிகிறது. அதில் சர்வதேச அளவிலான உளவு
அமைப்புகள் சிலவும் ஏதேனும் ஒரு விதத்தில்
பங்கு பெற்றன. அது பற்றி அடுத்துக் காண்போம்.

விடுதலைப் புலிகள் நிறைவேற்றும் பகுதியை
(execution part) மட்டுமே சேர்ந்தவர்கள் என்பதை
மீண்டும் மனத்தில் கொள்ளவும். ஆக, சதிப்பகுதி
என்று ஆராயும்போது, அதன் முதல்கண்ணியாக
இருந்தவர் சந்திரா சாமி என்னும் நேமிசந்த் ஜெயின்.  

ராஜிவ் கொல்லப்பட வேண்டும் என்று விரும்பிய
அன்னியச் சக்திகள் நிறையவே இருந்தன. அப்படி
விரும்பிய ஒரே ஒரு இந்தியச் சக்தி சந்திரா சாமி
மட்டுமே. ராஜீவின்  கொலையை நிறைவேற்றும்
பொறுப்பை விடுதலைப் புலிகள் எடுத்துக்
கொண்டதுமே, புலிகளால் இதைச் சிறப்பாக
நிறைவேற்ற முடியும் என்று சர்வதேச சக்திகளுக்கு 
நம்பிக்கை ஏற்படுத்தியவர் சந்திரா சாமி. புலிகள்
மீது அவநம்பிக்கை இருக்குமேயானால் இந்த
வேலை அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டு இருக்காது.

ஆக சர்வதேச சக்திகளின் அங்கீகாரத்துடனும்
கண்காணிப்புடனும் ராஜிவ் கொலையை
நிறைவேற்றும் பெரும் பொறுப்பை புலிகள் ஏற்றனர்.
இதை நிறைவேற்றுவது சுலபமான பணி அல்ல.
அதிகாரத் தாழ்வாரங்களில் உள்ள பலரின்
ஆதரவு இல்லாமல் இந்த வேலை முடிந்து இருக்காது.

படுகொலைக்குப் பின்னர், போலீசிடம்
பிடிபட்டவர்கள் எல்லா உண்மைகளையம்
சொல்லி விடாமல் பார்த்துக் கொள்வதில்
இருந்து, அவர்களின் குடும்பங்களைப்
பராமரிப்பது உட்பட தேவையான அனைத்துப்
பணிகளையும் செய்தவர்கள் யார்?
ராஜிவ் கொலைச்சதியில் பங்கேற்ற சர்வதேச
சக்திகளே. அவர்கள் நியமித்த ஏஜெண்டுகளே.
       
ராஜிவ் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்ட
ஆதிரை என்பவர் திருமணம் செய்து கொண்டு
சுவிட்சர்லாந்தில் கணவருடன் குடியேறி
வாழ்ந்து வருகிறார். இதற்கான செலவை
ஏகாதிபத்திய NGO அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.

நளினியின் மகள் ஹரித்ரா லண்டனில்
மருத்துவம் படிக்கிறார். இவருக்குத் திருமணம்
விரைவில் நடக்க இருக்கிறது.ஹரித்ராவின் தாய்
தந்தை (நளினி, முருகன்) இருவரும் சிறையில்
இருக்கும்போதும், வெளிநாட்டில் உயர்கல்வி
படிக்கும் ஹரித்ராவின் செலவை ஏகாதிபத்திய
NGO அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.

பேரறிவாளனின் வழக்கு உச்சநீதிமன்றத்திலும்
உயர்நீதிமன்றத்திலும் ஜெத்மலானி போன்ற
கோடிக்கணக்கான ரூபாய் கட்டணம் வாங்கும்
வழக்கறிஞர்களால் நடத்தப் பட்டது. அதிகமான
மனுக்கள் மூலம் உச்சநீதிமன்றத்தில்  பலமுறை
வழக்குத் தொடுத்தவர் பேரறிவாளன்.

நடிகர் சஞ்சய் தத்துக்கு எந்த அடிப்படையில்
பரோல் தரப்பட்டது என்று மஹாராஷ்டிர அரசைக்
கேள்வி  கேட்டு வழக்குத் தொடுத்தவர் பேரறிவாளன்.
இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தகுதிக்கு மீறிய இத்தகைய வழக்குச் செலவுகளை,
குடும்பப் பராமரிப்புச் செலவுகளை ஏகாதிபத்திய
NGO அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றன.  

ராஜிவ் படுகொலை நிறைவேற்றம் (EXECUTION) என்ற
நிகழ்வில் பங்கேற்ற அத்தனை பேருமே, அதாவது
ராஜிவ்  கொலையில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருமே
(உயிரிழந்தவர்களைச் சேர்க்காமல்)
அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் கொலைச்
சதியை நிறைவேற்ற உரிய கூலியைப் பெற்றுக்
கொண்டு வேலை செய்தவர்களே.
(They are all paid servants of the foreign imperialists)

27 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட  அந்த ஏழு
பேரையும் இன்றே விடுதலை செய்யலாம். உயிருடன்
இருந்தபோதிலும் அவர்கள் நடைப்பிணங்களாகவே
இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதால்
பெரிய தீங்கு எதுவும் நிகழ்ந்து விடாது.

ஆனால் இன்னும் எஞ்சியிருக்கும் சில உண்மைகளும்
முழுவதுமாகப் புதையுண்டு போகும் வரை,
ஏகாதிபத்திய ஆதரவு சக்திகள் அவர்களை
விடுதலை செய்யாது..
இதுதான் உண்மை.
.......................தொடரும்...........................
*********************************************************   

இந்தியச் சக்தி ஒருவர்தான். மற்றவர்கள் சக்தி அல்ல.
நேரடியாக ஈடுபட்ட சக்தி சந்திரா சாமி மட்டுமே.
வேறு யார்?
  
சுப்பிரமணியம் சுவாமி ஒரு சக்தி
( a powerful force) என்று வரையறுக்கும்
அளவுக்கு வலிமையானவர் அல்ல. அவர் வெத்துவேட்டு
ஆசாமி. சில விஷயங்கள் அவருக்குத் தெரிய வரும் 
அதை வைத்துக் கொண்டு பரபரப்புக் கிளப்புவார்.
அவ்வளவுதான். குட்டி முதலாளித்துவ நுனிப்புல்
ஆசாமிகள் டாக்டர் சுவாமியை பேராற்றல்
உள்ள ஒரு சக்தியாகக் கருதுவார்கள். அதில்
உண்மை இல்லை.

கேவலம் ஒரு MP  அவருக்கு ராஜ்யசபாவில் கிடைக்க
வழியில்லை. வெறும் நியமன MP தான் அவர்.
அவருக்கு சக்தி இருக்குமேயானால், ஒவ்வொரு
கட்சியும் அவரை MPயாக ஆக்கி தங்கள் பக்கம்
வைத்துக் கொல்லப் போட்டி போடுவார்கள்.   


அதே போல, சோனியா காந்தி நிச்சயமாக ஒரு
சக்திதான். ஆனாலும் அவருக்கு இதில் பங்கு
கிடையாது. பங்கு உண்டு என்று  சொன்னார்
சுப்பிரமணியம் சுவாமி. அதில் உண்மை இல்லை.
ராஜிவ் கொலையில் மூப்பனாருக்குப் பங்கு உண்டு
என்று சொன்னார் ஜெயலலிதா. அது போலத்தான்
இதுவும். ஏன், கருணாநிதிதான் ராஜீவைக் கொலை
செய்தார் என்று பிரச்சாரம் செய்தானே
அதிமுககாரன் 1991ல். இதெல்லாம் உண்மை கிடையாது.
சந்திரா சாமியின் சக்தியில் 1000ல் ஒரு பங்கு
கூட சு சுவாமியிடம் கிடையாது.


ராஜிவ் கொலை என்பது சர்வதேச கொலைச்சதி.
அதில் வைகோவுக்குப் பங்கு எதுவும் கிடையாது.
அவர் புலி ஆதரவுப் பேச்சாளர். அதற்கு உரிய
சம்பளம் அவருக்கு புலிகளிடம் இருந்து வந்த விடும்.
சதி கிதிக்கெல்லாம் அவருக்கு ஒர்த் கிடையாது.

இன்னும் வரும்.

1995ல் அப்போதைய பாஜக அரசு, அதாவது வாஜ்பாய்
அரசு, சு சுவாமி மீது சந்தேகம் கொண்டு, 1995ல்
அவர் மேற்கொண்ட லண்டன் பயணம் பற்றி
விசாரிக்குமாறு MDMA அமைப்பை
(பல நோக்கு புலனாய்வுக் குழு) கேட்டுக் கொண்டது.
MDMAவும் விசாரித்தது.ஆனால் சுவாமிக்கு எதிராக
எதுவும் கிடைக்கவில்லை.  .

 

 . 
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக