திங்கள், 23 செப்டம்பர், 2013

publisher's note

பதிப்பாளர் குறிப்பு 
--------------------------  
நெல்லை இளவரசவேலனின் 
தான்சேனும் 
குளியலறைப் பாடகர்களும் 
என்ற கட்டுரையில் உள்ள  கருத்துக்கள்  
கட்டுரையாளரின் 
கருத்துக்களே அன்றி 
தமிழ் மார்க்சியம் வலைப்பூவின் 
கருத்துக்கள் அல்ல. 
-----பதிப்பாளர்........... 

வியாழன், 19 செப்டம்பர், 2013

TANSEN AND BATHROOM SINGERS

தான்சேனும் குளியலறைப் பாடகர்களும்!
------------------------------------------------------------  
        நெல்லை இளவரச வேலன் 
----------------------------------------------------------------------------------------------------------------- 

வரும் நாட்களில் இந்தியத் துணைக் கண்டம் ஒரு பேரெழுச்சியைச் 
சந்திக்க இருக்கிறது. சூத்திரர் நரேந்திர மோடியை, பிரதமர் 
வேட்பாளராக பாஜக அறிவித்து இருப்பது இதற்குக் கட்டியம் கூறுகிறது.

130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் 
100 கோடி சூத்திரர்கள் இருந்தும், பிரதமர் பதவி என்பது,
ஏடன் தோட்டத்து ஆப்பிளைப் போல தடுக்கப் பட்ட கனியாகவே 
சூத்திரனுக்கு இருந்து வருகிறது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக மாற்றமே இல்லாமல் நீடித்து வரும் இந்த அநீதிக்கு, 
மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்ற முடிவு
பிராயச்சித்தம் செய்கிறது!

இந்த முடிவு சமூக நீதிக்கான லட்சியப் பயணத்தில் 
இலக்கை நெருங்கி நிற்கும் ஒரு மைல்கல். அடிமைச் சூத்திரர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை எற்படுத்த வல்ல இந்த வாய்ப்பு,
        ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் 
         வாராது போல் வந்த மாமணி 
போன்றது.

முதல் முத்தம் 
---------------------  
"கலை கல்வி அத்தனையும் பார்ப்பானுக்கே 
கனகமணிச் செல்வமெல்லாம் பார்ப்பானுக்கே
நிலவு தாங்கும் மாளிகைகள் பார்ப்பானுக்கே 
நெடுங்கோவில் கருவறைகள் பார்ப்பானுக்கே 
தலைமை கொள்ளும் அதிகாரம் பார்ப்பானுக்கே 
தமிழர்களின் உழைப்பெல்லாம் பார்ப்பானுக்கே 
பல இன்னும் பகருவதேன்; பார்ப்பானுக்காய்ப் 
பாடுபட்டுப் பாடுபட்டே தமிழன் செத்தான்."
          ( புலவர் புலமைப் பித்தன்)   
புலமைப் பித்தனின் குமுறல்கள் முடிவுக்கு வருகின்றன.
தலைமை கொள்ளும் அதிகாரம் பார்ப்பானுக்கே 
என்பது மாறி,
தலைமை கொள்ளும் அதிகாரம் சூத்திரனுக்கே 
என்னும் புதுமொழி, கோடானுகோடிச் சூத்திரர்களின்
இதழ்களில் இடப்படும் முதல் முத்தம்.

உஞ்ச விருத்தியால் அல்ல!
---------------------------------------  
மோடியின் மேலோங்கல் (  elevation )
யாசித்துப் பெற்றதல்ல. ஆரிய வர்க்கத்தின் 
கருணையின் கசிவு அல்ல.
இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப் பட்டதல்ல.

     குஜராத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 
     ஹாட் டிரிக் வெற்றி!
     சிறந்த நிர்வாகத்திறன்!
     இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம்!
     கடும் உழைப்பில் இந்தியத் துணைக் கண்டத்தில் 
     கலைஞருக்கு  அடுத்த படியாகச் 
     சொல்லத்தக்க ஒரே தலைவர்! 
பட்டியலை நிறைக்கும் இத்தகைய சிறப்புகளால் 
பெற்ற வெற்றி இது.
தகுதியும் திறமையும் , தரணி ஆளும் தகைமையும்
சூத்திரனுக்கு உண்டு என்று 
நிரூபித்துப் பெற்ற வெற்றி இது.

இரும்பு மனிதர் அத்வானியை வீழ்த்திப் பெற்ற வெற்றி இது!
காத்திருக்கும் பிரதமர் ( PRIME MINISTER in waiting ) என்று 
வர்ணிக்கப் பட்ட ஆரிய மாலா 
சுஷ்மா சுவராஜை  வீழ்த்திப்  பெற்ற வெற்றி இது!

பார்ப்பனர்கள் பல்லக்குத் தூக்கிகளாக.....
--------------------------------------------------------  
பல்லக்கில் அமர்பவன் பார்ப்பான் !
தோளில் சுமப்பவன் சூத்திரன் !
     இதுதான் உலக நீதி!
     இதுதான் ராஜ நீதி!!
இன்று மோடி நிகழ்த்திய ரசவாதத்தால்,
        சூத்திரன் பல்லக்கில் அமரவும்   
         பார்ப்பான் தூக்கிச் சுமக்கவும் 
என்பதான தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதுதான் அடிப்படை மாற்றம் என்பது ( PARADIGM SHIFT ).
      " LIGHTLY O , LIGHTLY WE BEAR HER ALONG 
       WE BEAR HER ALONG LIKE A PEARL on A STRING
       GAILY O , GAILY WE GLIDE AND WE SING!"
          ( THE PALANQUIN BEARERS , SAROJINI NAIDU )

கலைஞரால் கூட மறுக்க இயலாது!
--------------------------------------------------  
 RSS-பாஜக அமைப்புகள் பார்ப்பனர்களின் குருபீடம்!
சூத்திரர்களுக்கோ அது பலிபீடம்!
ஆனால் இன்று, சமூக நீதிப் போர்வாளின் 
வீரியச் சுழற்சியில் 
ஆரியம் தன மகுடத்தை இழக்கிறது!
சூத்திரனின் தலையில் மகுடம் ஏறுகிறது! 
புஷ்ய மித்திர சுங்கனின் வாரிசுகள் 
மணிமுடி இழக்கிறார்கள்!
சந்திர குப்த  மௌரியனின் வாரிசுகள் 
மணிமுடி தரிக்கிறார்கள்!
மோடி (எதிர்) அத்வானி என்பதும் 
ஆரிய திராவிடப் போரே என்பதைக்
 கலைஞரால் கூட மறுக்க இயலாது.

களங்கம் கழுவப் பட்டது!
-----------------------------------   
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக 
ஆக்கியதன் மூலம் , RSS - பாஜக அமைப்புகள் 
தங்கள் மீது படிந்த நூற்றாண்டு காலக் 
கறையைக் கழுவிக் கொண்டுள்ளன. 
இதை வரவேற்காமல் இருப்பது நியாயமா?

தெளிந்த முடிவு!
-----------------------  
RSS - பாஜக அமைப்புகள்,  சூத்திர பஞ்சமர்களுக்கு
வாய்ப்பு அளிக்கிறோம் என்ற பெயரில்,
திறமையும் முன்முயற்சியும் அற்ற 
எடை குறைந்த ( POLITICAL LIGHTWAITS )
அரசியல்வாதிகளுக்கு, தலைமைப் பதவி  
கொடுத்து விட்டு, பின்னிருக்கையில் அமர்ந்து 
வாகனம் ஓட்டுவது உண்டு! ( BACK SEAT DRIVING )
பங்காரு லட்சுமணனுக்கு அகில இந்தியத் தலைமை,
டாக்டர் கிருபாநிதிக்கு தமிழகத் தலைமை 
என்பன இதற்கு உதாரணங்கள். 

நரேந்திர மோடி இத்தகைய 
ஒரு பொம்மை (PUPPET ) அல்ல.
சுய சிந்தனை, சுயமான திட்டங்கள்,
சர்வாதிகாரப் போக்கு என்று அமைந்த 
மோடியின் ஆளுமையை நன்கு தெரிந்தே 
அவருக்குப் பொறுப்பு அளித்து உள்ளது பாஜக.
ஆக, மோடிக்கு மகுடம்  என்பது
ஒரு கண்துடைப்புச் செயல் அல்ல. 
மாறாகத் தெளிந்த முடிவு இது! 
( A CONSCIOUS DECISION !)

சூத்திரர்களின் முற்றத்தில் பந்து!
----------------------------------------------  
பார்ப்பன ஆதிக்கம் என்பதெல்லாம் முடிந்து போன விஷயம்.
இன்னும் எத்தனை நாளைக்கு ஆரியப் பேயை 
ஓட்டிக் கொண்டே   காலம் தள்ளுவீர்கள் என்று 
வேதபுரத்து அம்பிகள் கேட்கலாம்.
பார்ப்பன ஆதிக்கம் எப்படிச் சுடும் என்பது
சூடு பட்டவனுக்குத் தான் தெரியும் 
( THE WEARER KNOWS WHERE THE SHOE PINCHES!)
வேதபுரிக் கூட்டத்தால் உணர முடியாத வலி இது.


மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்தாலும் சரி--
துப்பாக்கிக் குண்டு துளைத்து 
ரத்தம் சிந்திச் செத்தாலும் சரி--
சூத்திரனைப் பார்ப்பான் அங்கீகரிக்க மாட்டான்.
அங்கீகரித்த வரலாறு 
இந்தியத் துணைக் கண்டத்தில் கிடையாது.

இந்தச் சூழலின் கனத்தில்தான், 
மோடியின்  மேலோங்கலைப்  பார்க்க வேண்டும்.
சூழலில் இருந்து துண்டித்துக் கொண்டு 
தனித்த  ஒரு நிகழ்வாக இதைப் பார்ப்பது அறிவீனம்.  
எனவே, மோடியின் மேலோங்கல், ( elevation )
பார்ப்பன சூத்திரப் போரில், 
ஆயிரம் தலைமுறைகளின் தோல்விக்குப் பிறகு,
சூத்திர வர்க்கம் முதல் முதலாகப் பெரும் வெற்றி இது.

வரலாறு வழங்கி இருக்கும் இந்த வாய்ப்பை 
100 கோடிச் சூத்திரர்களும் சரியாகப் பயன் படுத்திக் கொள்ள 
வேண்டும்.இது வரை, BC, MBC க்கு எதிராக இருந்த பாஜகவே 
மோடியை முன்னிறுத்தும் போது,
நூறு கோடிச் சூத்திரர்களாகிய நாம் 
மோடியைப் பிரதமர் ஆக்க 
ஓய்வின்றி உழைக்க வேண்டும்.
பார்ப்பான் தன கடமையைக் 
குறைவின்றிச் செய்து விட்டான்;
இனி நம் கடமை மட்டுமே பாக்கி இருக்கிறது.
ஆம்; தற்போது பந்து நம்மிடம் உள்ளது.

குளியலறைப் பாடகர்கள்!
-------------------------------------   
      மோடி பிரதமர் ஆகக் கூடாது என்பது 
      சூத்திரன் பிரதமர் ஆகக் கூடாது 
       என்னும் வன்மமே!

மோடியின் வெற்றி வாய்ப்புகள் 
தொடர்ந்து ஒளி  சிந்துகின்றன.
HE IS UNSTOPPABLE என்கிறார்கள் 
அரசியல் நோக்கர்கள்.
எட்டிய தூரம் வரை, 
மோடிக்குச் சமமான போட்டியாளராக 
எவரும் தென்படவில்லை.
மன்மோகன் சிங்கும் சோனியாவும் 
முடிந்து போன அத்தியாயங்கள்.
ராகுல் காந்தி ஒரு கோவில் காளை. 
தலைமைப் பண்பு இல்லாதவர்.
பத்து ஆண்டுகளாக MP ஆக இருக்கும் இவர்,
நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பேசி 
என்றாவது நாட்டின் கவனத்தை 
ஈர்த்தது உண்டா?
சுருங்கக் கூறின்,
     ராகுல் ஒரு குளியலறைப் பாடகர்!
       மோடியோ தான்சேன்!

கடமையும் மடமையும்!
---------------------------------   
பின்-கோத்ரா வன்முறைக்கு மோடி பொறுப்பல்ல. 
ஈழத்தில் ராஜ பக்சேவுடன்
கள்ளக் கூட்டுச் சேர்ந்து,
ஒரு லட்சம் தமிழர்களை--
ஒரு லட்சம் சூத்திரர்களைக் 
கொன்று இனப் படுகொலை செய்த 
காங்கிரசுக்கு மோடியைக் குறை கூற 
அருகதை இல்லை.

     ஒரு சூத்திரனைப் பிரதமர் ஆக்குவது 
     ஒவ்வொரு சூத்திரனின் கடமை!
      இதைச் செய்யத் தவறுவது மடமை!!

********************************************************************************  

    
         

புதன், 18 செப்டம்பர், 2013

IRAVANAN PATHILKAL

இராவணன் பதில்கள் 
எண் :2 ... 18/09/2013
--------------------------------------------------------------------------    

ஜனாதிபதி பதவி  வழங்குவதாக 
உறுதி கூறிய பின் தான் 
அத்வானி சமாதானம் அடைந்தார் என்று கூறப்படுகிறதே!

(கி. முத்துராஜா, மதுரவாயல்)

"ஆசைகள் குதிரைகள் ஆனால் பிச்சைக்காரன் கூட குதிரைச் சவாரி செய்வான்" 
  ( "IF WISHES WERE HORSES THEN BEGGERS WOULD RIDE")
என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
ராஜ்நாத் சிங் வழங்க,
அத்வானி பெற 
ஜனாதிபதி பதவி என்ன 
சிட்டுக்குருவி லேகியமா?
இதை நம்பினார் அத்வானி என்றால்,
அவர் முட்டாள்களின் சொர்க்கத்தில்
 ( fool's paradise ) 
வாழ்கிறார் என்று பொருள்.
---------------------------------------------------------------------------------------------------------  

சூத்திரரான தா பாண்டியன்
சூத்திரரான நரேந்திர மோடியை 
எதிர்ப்பதன் மர்மம் என்ன?

(அ பசுல் உசேன், ராயப்பேட்டை)

நரேந்திர மோடி சூத்திரர் 
ஜெயலலிதா பிராமணர் 
பிராமணனே ஆளப் பிறந்தவன் என்ற 
சனாதன தர்மத்தைக் காக்க வேண்டிய 
பாஜகவே, கனி இருப்பக் காய் கவர்ந்தற்று 
என்பது போல், மோடியைத் தெரிவு செய்து 
விட்டதே என்று மனம் புழுங்குகிறார் போலும் 
இந்த சத்சூத்திரர்! 
---------------------------------------------------------------------------------------

தி இந்து தமிழ்ப் பதிப்பு வந்திருக்கிறதே!

( உ. ரெங்க நாயகி, மயிலாப்பூர்)

தி இந்து என்ன வாழ்கிறது?
தின இந்து என்றோ 
தமிழ் இந்து என்றோ 
வெறும் இந்து என்றோ 
பெயர் வைத்துத் தொலைப்பதில் 
சவுண்டிகளுக்கு என்ன சங்கடம்? 
ஏன் தீயை வைக்க வேண்டும்?

ஆங்கிலம் ஒரு விவஸ்தை கெட்ட  மொழி.
THE என்கிற DEFINITE ARTICLE -ஐ 
முன்னே போடாமல், பெயர்ச் சொல்லை எழுத முடியாது.
THE CHIEF MINISTER ,
THE GOVERNOR , 
THE HEADMASTER 
என்று தீயை வைத்தால் தான்    
ஆங்கிலம் ஆகும்.

தமிழ் சொற்செட்டு நிறைந்த மொழி.
முதல்வர், ஆளுனர்.தலைமை ஆசிரியர்  என்று 
தீ வைக்காமல் எழுதினால் போதும்.
தமிழனுக்கு மானமும் சுரணையும்
வராத வரையில் 
சவுண்டி ராம்கள் தமிழனின் மூளையில்  
மலம் கழித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை ஏன்  
மக்கள் கவிஞர் என்கின்றனர்?

( பே. மயில்வாகனன், பரங்கிமலை)

ஆசிரியர் தகுதித் தேர்வில் வரக் கூடிய கேள்வியா இது?
காலம் மறந்து விட்ட ஒரு கவிஞனை நினைவு  
வைத்துக் கொண்டு கேட்கின்றீர்கள்,  நன்றி.

     அக்காளுக்கு வளைகாப்பு 
     அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
என்று எழுதியதாலும் 
     அக்காளுக்கு சீமந்தம் 
     அத்திம்பேர் முகத்திலே மந்தஹாசம் 
என்று எழுதாததாலும் தான் அவர் மக்கள் கவிஞர்.
----------------------------------------------------------------------------------------

பெருந்திரள்   விருப்பமும் 
அரசியல்  அழுத்தமும் தான் 
நிர்பயா  வழக்கில் குற்றவாளிகளுக்கு  
 மரண தண்டனை 
கிடைக்கக் காரணம் என்கிறாரே, குற்றவாளிகளின் வழக்கறிஞர்!

கி.ராமசுப்பு, கோவில்பட்டி)

அப்படியே இருந்தாலும் அதில் என்ன தவறு?
நீதி என்பது வழங்கப் பட்டால் மட்டும் போதாது;
வழங்கப்பட்டதாகத் தெரியவும் வேண்டும் தானே!
நிர்பயா வழக்கிலாவது எதிரும் புதிருமாக இருந்த அரசியல் கட்சிகள் ( காங், பாஜக)
ஒன்று பட்டு நின்றது நல்லது தானே.

சூரியநெல்லி வல்லுறவு வழக்கில் 
சிக்கிய குரியன் 
( காங், மாநிலங்களவைத் துணைத் தலைவர்)
பதவி விலகக் கோரி, 
நாடாளுமன்றத்தில் அமளி நடந்தபோது 
பாஜக அதில் கலந்து கொள்ளவில்லை.
ஏனெனில் குரியனின் வழக்கறிஞரே 
பாஜகவின் அருண் ஜெட்லிதான்.

மக்களுக்கு எதிராக கள்ளக் கூட்டு வைப்பதையே 
குலத்தொழிலாகக் கொண்ட அரசியல் கட்சிகள் 
நிர்பயா வழக்கில் ஒன்று பட்டு 
நின்றார்கள் என்றால் 
அதைச் சாதித்தது மக்களின் ஒற்றுமைதான்.
---------------------------------------------------------------------------------------------------------

எந்த சுவரொட்டியைப் பார்த்தால் நீங்கள் 
ஆச்சரியப் படமாட்டீர்கள்?

( பி. மாசிலாமணி, வீரவநல்லூர் )

 பின்வரும் சுவரொட்டியைப் படித்தால் நான் மட்டுமல்ல,
தமிழ்நாட்டில் உள்ள ஏழரைக் கோடித் தமிழர்களும் 
ஆச்சரியப் பட மாட்டார்கள்:

          பொருள்: 
         போயஸ் தோட்டத்துக் கழிப்பறையின் 
                              சந்தன நறுமணம் 
          சிறப்புச் சொற்பொழிவு:  தா. பாண்டியன் 
           இடம்: பாலன் இல்லம்.
----------------------------------------------------------------------------------------------------------  

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ யாருடன் கூட்டு வைப்பார்?

( மீ. முருகானந்தம், காருகுறிச்சி )

பாஜகவுடன் கூட்டு வைப்பது என்று 
வைகோ ஏற்கனவே 
முடிவு செய்து விட்டார்.அண்மையில் நடந்த விருதுநகர் மாநாட்டிலும் 
இது   பூடகமாகச் சொல்லப்பட்டு விட்டது.
 நரேந்திர மோடியைப் பிரதமர் ஆக்கும்  
புனிதப் பணியில் வைகோ
உடல், பொருள்,ஆவியைப் பணயம் 
வைக்கச் சித்தம் ஆகி விட்டார்.
---------------------------------------------------------------------------------------------------------  

மோடி அலை வீசத் தொடங்கி விட்டதாமே !

( சே. பங்கஜம், பழனி ) 

வட கிழக்குப் பருவக்காற்று
வீசத் தொடங்கும் முன்பே 
மோடி அலை வீசத் தொடங்கி விட்டதாக 
ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------

நரேந்திர மோடி பிரதமர் ஆவதில் என்ன தவறு?
ஒரு சூத்திரர்  பிரதமர் ஆவதில் 
உங்கள் மூஞ்சியில் ஏன் சுருக்கம் விழுகிறது?

( ஜானகி பிரசாத், மாங்காடு )

இது போன்ற குற்றச் சாட்டில் இருந்து தப்பிப்பதற்காக
அடையாள அரசியல் செய்யும் எல்லாரும் 
( BC , MBC அமைப்புகள் )  நரேந்திர மோடியை 
ஆதரிக்க நேரும்.
-----------------------------------------------------------------------------------------------------------   


 
           

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

135TH BIRTHDAY OF THANTHAI PERIYAAR

தந்தை பெரியாரின் 135ஆவது           பிறந்த நாள்.
           (செப்டம்பர் 17 )
----------------------------------------------------------    

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு 
என்றார் பெரியார்.

யாரும் யாருக்கும் அடிமை இல்லை ;
யாரும் யாருக்கும் எஜமானன் இல்லை 
என்றார் பெரியார்.

தொண்டு செய்த பழுத்த பழம் 
தூய தாடி மார்பில் விழும் 
மண்டைச் சுரப்பை உலகு தொழும் 
மனக் குகையில் சிறுத்தை எழும்

என்றார் பெரியாரைப் பற்றி  பாவேந்தர் பாரதிதாசன்.

ஐ.நா சபையின் யுனெஸ்கோ மன்றம் 
தந்தை பெரியாருக்கு 
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் 
என்ற விருதை வழங்கியது.

பெரியாரைப் பின்பற்றுவோம் !
மானமுள்ள மனிதர்களாய் வாழ்வோம்!

***********************************************  

IRAAVANAN PATHILKAL

இராவணன் பதில்கள் 
--------------------------------------------------------------    
நிர்பயா  வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த பின்னும் கூட, குற்றங்கள் குறையவில்லையே, கவுகாத்தியில் ஒரு பத்து வயதுச் சிறுமியை ஐந்து மைனர் பையன்கள் வல்லுறவு செய்துள்ளனரே!  

( இரா.மனோகர், சேத்துப்பட்டு )

அரச மரத்தைச் சுற்றி விட்டு உடனே அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தால் எப்படி?  ஒரு தனி மனிதன் சட்டென்று முடிவு எடுப்பான்;
மாறி விடுவான். ஆனால் ஒரு சமூகம் மாற்றம் அடைய காலம் 
நிறைய ஆகும். வழக்குகளை விரைந்து முடிப்பதும், கடும் தண்டனை
வழங்குவதுமான நிகழ்ச்சிப்போக்கு 
தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்போது தான், 
அது சமூகத்தின் பொது மனத்தில் உறைக்கும்; 
சமூகம் படிப்பினை பெறும். 
இதற்கெல்லாம் குறைந்தது பத்து ஆண்டுகளாவது ஆகும். 
திடீர் சாம்பார், திடீர் புளியோதரை மாதிரி 
சமூகத்தில் திடீர்த் தீர்வு ( instant  remedy )  எதுவும் கிடையாது.
--------------------------------------------------------------------------------------------------------

இந்து   மதத்தின் பெருமையை நிலைநாட்டியவர் என்று தமிழ்நாட்டில் இருந்து யாரையேனும் கூற முடியுமா?

( ப.செல்வராசு, பல்லாவரம் ) 

ஏன் முடியாது? காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் தேவநாதன் இருக்கும் வரை உதாரணத்திற்கா பஞ்சம்?
----------------------------------------------------------------------------------------------------------
அடையாள அரசியல் என்றால் என்ன?

( கா.நாதமுனி, அயன்புரம் )

இன்ன சாதி, இன்ன மதம், இன்ன தேசிய இனம் என்ற அடையாளத்தின் அடிப்படையில் அமைப்பு தொடங்கி ,
 மக்களைத் திரட்டி அரசியல் செய்வது 
அடையாள அரசியல்.
 யாதவர் பேரவை, கொங்கு வேளாளர் கூட்டமைப்பு 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றெல்லாம் இருக்கிற அமைப்புகள் 
அடையாள அரசியலின் வெளிப்பாடுகள்.
---------------------------------------------------------------------------------------------------------

இன்றைய இளைய தலைமுறை ஆங்கில வழியில் படித்தும் கூட ஆங்கிலத்தில் புலமை இல்லாமல் இருக்கிறதே, ஏன்?

(மீ. பார்வதி, பெரம்பூர்)

அவர்கள் அண்ணாவைப் படிக்க வேண்டும்.  அண்ணா ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளர்.அவர் பேச ஆரம்பித்தால் வார்த்தைகள் வரிசையாய் வந்து கைகட்டி நிற்கும். ஒரு சுவாரசியமான  உதாரணம்.
இந்திய மாணவர்களின் கல்வித் தரம் குறித்து அண்ணா கூறியது:
( இதில் எத்தனை முறை tion என்று முடியும் வார்த்தைகள் வருகின்றன 
என்று எண்ணிப் பார்த்துச் சொல்லுங்கள்!)
 
" AFTER A LONG CONSIDERATION, CONSULTATION AND  CONFABULATION  I have 
COME to THE CONCLUSION THAT THE LONDON MATRICULATION examination is 
NOT A botheration to THE STUDENTS OF OUR NATION WHOSE OCCUPATION is 
irrigation AND CULTIVATION ."
---------------------------------------------------------------------------------------------------------

கருத்து சுதந்திரத்தை எதுவரை அனுமதிக்கலாம்?

( செ. மாணிக்கம், எழும்பூர்)

பாட்டாளி வர்க்க சர்வ தேச கீதம் பற்றித் தெரியுமா?
 உலகம் முழுவதும் உள்ள 
 கம்யூனிஸ்ட் தோழர்களுக்கான பொதுவான கீதம்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில்  (ரஷ்யா) செம்படையின் அணிவகுப்பின் போது இசைக்கப் படும் இசையே இப்பாடலுக்கான இசை

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் 
பாரில் கடையரே எழுங்கள் வீறு கொண்டு தோழர்காள் 
கொட்டு முரசு கண்டன முழக்கம் எங்கும் குமுறிட 
குதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட .
       
          என்று  தொடங்கும் அப்பாடலில் பின்வரும் பத்தி 
          ( STANZA ) கருத்து சுதந்திரத்தின் வரம்பை  தெளிவு படுத்தும்.

நாளை எண்ணி வட்டி சேர்க்கும் 
ஞமலிகட்கு இங்கு இடமில்லை 
நாம் உணர்த்தும் நீதியை 
மறுப்பவர்க்கு இங்கு இடமில்லை.

இதுதான் வரம்பு! மக்கள் நலன் சாராத , 
மக்களின் எதிரிகளின் கருத்துகளுக்கு இடம் தரக்கூடாது.  
---------------------------------------------------------------------------------------------------------

நரேந்திர மோடியை விட ஜெயலலிதா தான் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்கிறாரே, தா. பாண்டியன்!

( சி. கடற்கரை, வண்ணை )

"சித்தம் எல்லாம் எனக்கு ஜெ மயமே 
ஜெவைச் சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே "

என்பதுதான் தா.பா வின் தாரக மந்திரம்.
ஜெ.வின் காலில் விழுந்தால் எழுந்திருக்கவே மாட்டாராம் 
தா.பா என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
இப்படிப் பட்ட ஒரு ஜென்மம் வேறு எப்படித் தான் பேச முடியும்?
----------------------------------------------------------------------------------------------------------

மத்திய மாநில அரசுகள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும்
 கைது செய்து சிறையில் தள்ள முடியும் அல்லவா?

( ரா.ஜானகி, திருவல்லிக்கேணி )

முடியும், இரண்டே இரண்டு பேரைத் தவிர;
அவர்கள்: 1) டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி 
                     2) கூடங்குளம் உதயகுமார் 
சி.ஐ.ஏ ஏஜண்டுகளைக் கைது செய்யும் திராணி எந்த மாநில 
அரசுக்கு அல்லது மத்திய அரசுக்கு இருக்கிறது?
-----------------------------------------------------------------------------------------------------



ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

NARENDRA MODI AS PM CANDIDATE OF BJP: COMMENTS

அத்வானியின் மரணமும்
மோடியின் உதயமும்!
----------------------------------
அத்வானியின் மரணம் என்ற தொடர் 
வாசகர்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம்.
ஒரு அரசியல்வாதியைப் பொருத்தமட்டில், அவரது அரசியல் ரீதியான  மரணத்துடன் எல்லாமும் முடிந்து விடுகிறது.
உயிரியல் ரீதியான மரணம் மிச்சம் இருக்கிறது 
என்பது ஒருவிஷயமே அல்ல. 
எனவே அத்வானி இறந்து விட்டார்
என்பது யதார்த்தம்.
துளியும் மிகை இல்லாத யதார்த்தம்.

அத்வானியின் மரணமும் மோடியின் உதயமும் ஒரு நாணயத்தின் இரண்டு
பக்கங்கள்.நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்ற பாரதீய ஜனதா கட்சியின் அறிவிப்பு, அத்வானியின் கருமாதிக்கான அறிவிப்பே தவிர வேறல்ல.

அத்வானி ஒரு கடிதம் எழுதி உள்ளாராம். தாமரைக் கூட்டத்தில் ஒருவரும்
அதைப்படிக்க வில்லையாம். சுதேசியை விரும்பும் பாரதிய ஜனதா கட்சியின்
புது டில்லி தலைமைச் செயலக அலுவலகத்தின் மேற்கத்திய பாணி கழிப்பறையில் ( western toilet ) அத்வானியின் கடிதத்தின் ஜெராக்ஸ் நகல்கள்
கழிவு துடைக்கும் காகிதங்களாக வைக்கப் பட்டு உள்ளனவாம்.

ஆக, அத்வானியின் சகாப்தம் முடிந்து விட்டது !
ஆகப்பெரிய தீமையின் உருவமாக
வலம் வந்த அத்வானிக்கு
கொள்ளி வைக்கப்பட்டு விட்டது. 
காண்பதற்கு ஒரு கண் கொள்ளாக் காட்சி இது!

மோடி மட்டும் இல்லாமல் இருந்தால், இன்னமும் அத்வானி காட்டில்தான் மழை பெய்து கொண்டிருக்கும்.சுப்பிரமணியக்  கடவுள் சூரனை சம்ஹாரம்
செய்ததைப்போல , மோடி அத்வானியை சம்ஹாரம் செய்து விட்டார்.

வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்!
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்!
அத்வானியை மோடியால்தான் வீழ்த்த முடியும்!
ராகுல் காந்தியின் காகித அம்புகள் அத்வானியைக் காயப் படுத்தி விடாது; விடவில்லை என்பது வரலாறு!


ஆக இந்த அடிப்படையில், நம் ஒவ்வொருவருடைய உள்மனமும் 
மோடியை வரவேற்கிறது! நம் சிந்தனையில் செயல்படும் 
ஆழ்மன உளவியல் அது!


காங்கிரசின் கையாலாகாத்தனம்!
----------------------------------------------
நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியானதைத் 
தொடர்ந்து, காங்கிரஸ்தலைவர்கள் ஆற்றிய எதிர்வினை, காங்கிரசின் கையாலாகாத் தனத்தை அம்பலப் படுத்தியது.

ராகுல் காந்தி ஒரு பிளேபாய்!
ராஜ்யபாரத்தைச் சுமக்க விரும்பாதவர்.எண்பது கோடி மக்களுக்கு உணவு அளிக்கும் காங்கிரசின்மகத்தான திட்டமான உணவுப் பாதுகாப்பு மசோதா
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டபோது ராகுலின் பங்கு என்ன?      

என்னதான் தூக்கித் தூக்கி நிறுத்தினாலும்,
பொத்துப் பொத்தென்று  விழுந்து விடுகிறாரே ராகுல்!
இந்த மண்குதிரையின் தலைமையிலா 
2014 தேர்தலை காங்கிரஸ் சந்திக்க முடியும்?

பிரதமர் பதவிக்கான போட்டியானது, 
மன்மோகன்சிங் versus அத்வானி என்று இருக்குமேயானால், 
செத்த பாம்பு versus செத்த பாம்பு என்ற அடிப்படையில்,
இரு தரப்பும் சமநிலையில் இருக்கும்.

ஆனால், காங்கிரசில்   மன்மோகனுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை;
அதேபோல் பாஜகவில் அத்வானிக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை   
என்று ஆனா பின்னால், மோடியை எதிர்கொள்ளும் திராணி எங்கு
இருக்கிறது காங்கிரசிடம்?

ஆக மோடியை முன்நிறுத்தியதன் மூலம், தேர்தல் களத்தில்
பாஜக வெகுவாக முன்னேறிய நிலையில் இருக்கிறது.

மோடிக்கான சாதக அம்சங்கள்:
-------------------------------------------   
1) கட்சிக்குள் தொண்டர்கள், அணிகள், இடைநிலைத் தலைவர்கள் 
என்று ( the  entire rank and file of the party ) கட்சி முழுவதும் மோடியின் பின்னால் அணிவகுத்து நிற்கிறது.

2) இணைய தளத்தில் செயல்படும் சுமார் பத்துக்கோடி இளைஞர்களின் 
ஆதரவு மோடிக்கு இருக்கிறது.

3) கார்ப்பரேட்  நிறுவனங்களின்  ஆதரவு இருக்கிறது.

4) சிறந்த நிர்வாகி, சட்டென்று முடிவு எடுப்பவர், ஆற்றல் வாய்ந்தவர் 
என்பன போன்ற பிம்பங்கள் கட்டப் பட்டுள்ளன. 

5) முந்திய காலத்தில் 
ராஜீவ் காந்திக்கு இருந்த இளைஞர்களின் ஆதரவு, 
தற்போது மோடிக்கு இருக்கிறது.   

6) பாஜக போன்ற உயர்சாதிக் கட்சியில்,
நரேந்திர மோடிபோன்ற பிற்பட்ட வகுப்புத் தலைவர் 
பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்கிற உயர்ந்த நிலையை 
அடைந்து இருப்பது, பிற்பட்ட சாதி மக்களின் ஆதரவை 
பாஜகவுக்குப் பெற்றுத் தரும்.    

7) இந்தியாவில் இதுவரை உயர்குடிப் பிறப்பும்,
செல்வச் செழிப்பும் உடைய 
பாரம்பரியமான குடும்பத்தில் இருந்துதான் 
பிரதமர்கள் வந்தனர். 
முதல் முறையாக, குடும்ப பாரம்பரியம் ஏதுமற்ற, 
ரயில் நிலையத்தில் தேநீர் விற்ற,
ஒரு சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த மோடி 
பிரதமர் பதவிக்குப் போட்டி இடுகிறார் என்பது 
பாஜகவுக்கு வெகுமக்களின் ஆதரவைப்பெர்றுத் தரும்.   

ஆக,மோடியைத் தேர்ந்து எடுத்ததன் மூலம் பாஜக, 
தனக்கு மிகவும் ஆதாயம் தரும்  
மிகச் சரியான முடிவை எடுத்துள்ளது.

மானுட வரலாறு முழுவதும், தலைமைக்கான கோட்பாடு 
அன்றும் இன்றும்  ஒரே கோட்பாடுதான். 
"எங்களில் சிறந்தவன் எங்கள் தலைவன்" 
என்பதுதான் அந்தக் கோட்பாடு.
அந்தக் கோட்பாட்டை மிகச் சரியாக 
நடைமுறைப் படுத்தி உள்ளது பாஜக!!

இதில் காங்கிரசுக் கபோதிகளுக்கு வேண்டுமானால் 
வயிற்றுப் பொருமல் இருக்கலாம்.
மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்?

*************************************************************************  
   

சனி, 14 செப்டம்பர், 2013

DEATH TOLL RISES TO 48 IN MUZAFARPUR!

சாவு எண்ணிக்கை 48 ஆக உயர்வு!
உ.பி முசாபர்பூரில் கலவரம்
இன்னும் அடங்கவில்லை!
-------------------------------------  
முசாபர்பூரில் கலவரம் இன்னும் அடங்கவில்லை.
கலவரம் அடங்கி விடுவதை, 
முதல்வர் அகிலேஷ் யாதவ் விரும்பவில்லை.

செப் 13 வரை பலி மொத்தம் 48.

கரன் கௌசிக் என்ற
 18 வயதுப் பையனை 
சல்மான், சுஹையீல்
என்ற இரு இளைஞர்கள் 
கடத்திச்  சென்று கொலை செய்து 
இடுகாட்டில் புதைத்து உள்ளனர்.
இக்கோர நிகழ்வு 
மீரத் நகரின் அருகில் உள்ள 
சிவில் லைன் போலிஸ் சரகத்தில் 
நடந்து உள்ளது.

பலிகள் இன்னும் தொடரும்.
பிணங்களின் மீது நடந்து சென்று அதிகாரத்தைச் 
சுவைக்க நினைக்கும் கயவர்கள் இருக்கும் வரை.    

தகவல் ஆதாரம்: இந்து ஏடு 
THE HINDU dated SEP 14, 2013..
PAGE :16,  sub caption : DEATH TOLL RISES to 48
correspondent: mr ATIQ KHAN 

----------------------------------------------------------------------------------------------- 

IS DETTERANT PUNISHMENT A MUST OR NOT? RESPONSE TO DHINAMANI'S EDITORIAL

தினமணி (14.09.2013 சனி)
வைத்தியநாத அய்யரின் 
தலையங்கத்துக்கு மறுப்பு!
--------------------------------------  
"தண்டனை தீர்வாகாது!" என்ற தலையங்கத்தை 
தினமணி எழுதி உள்ளது. டெல்லி பாலியல் வன்கொடுமை 
வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை 
வழங்கப் பட்டதைக் கண்டித்து தலையங்கம் தீட்டி உள்ளார் வைத்தியநாத  அய்யர். 

தூக்குத் தண்டனையால் வல்லுறவுக் குற்றங்கள் 
குறைந்து விடுமா? என்று கேள்வி எழுப்புகிறார் அய்யர்.
குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனைக்குப் பதில் 
பத்மஸ்ரீ வழங்க வேண்டும் என்கிறாரா  அய்யர்?

இளை ஞ்ர்கள்தான் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள் 
என்கிறார் அய்யர். வயோதிகம் பீடித்து விட்ட  
காரணத்தால், தன்னால் இளைஞர்களைப் போல்  
வல்லுறவில் ஈடுபட முடியவில்லையே என்று 
அங்கலாய்க்கிறாரோ  அய்யர்!!

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர்,  வடஇந்திய போலிச்சாமியார் அசாராம் பாபு, 
சூரியநெல்லி பாலியல் வன்கொடுமைக் குற்றவாளி 
குரியன், இன்னும் பல பாதிரியார்கள்... 
இவர்கள் எல்லாம் 
வயோதிகத்தை வெற்றி கண்டு 
வல்லுறவுக் குற்றங்களில் 
ஈடுபட்டதைத தந்திரமாக மறைக்கிறார் அய்யர்.

"பாலியல் குற்றங்கள் உணர்ச்சி சார்ந்தவை; உணர்வெழுச்சியால்   
மட்டுமே நடைபெறுபவை" என்கிறார் அய்யர்.
சட்டென்று உணர்ச்சி வசப்பட்டா( IN A  SPUR OF THE MOMENT )  பாலுறவுக் குற்றங்களில் ஜெயேந்திரர் 
ஈடுபட்டார்? திட்டமிட்டு, தொடர்ந்து, நியம நிஷ்டையோடு 
குலத்தொழில் போல நடைபெற்றவை அல்லவா ஜெயேந்திரரின் 
பாலுறவுக் குற்றங்கள்!  

மிதமிஞ்சிய பணமும் அதிகார பலமும் கொண்டு கொழுப்பேறிப் போன 
கயவர்கள் செய்யும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களே நாட்டில் 
அதிகம். 

எண்பது வயதைக் கடந்த பிறகும் கூட,வல்லுறவுக் குற்றத்துக்கு இலக்கு ஆகாமல் , பாலியல் இச்சைக்கு வடிகால் தேடியவர்  என் டி திவாரி. 

இவை எல்லாம் காட்டுவது என்னவென்றால், பாலியல் வல்லுறவுக் 
குற்றங்களுக்கு வாலிபமோ வயோதிகமோ தடையில்லை என்பதைத் தான்.

நிற்க. தலையங்கத்தில் அய்யர் ஒரு வாதத்தை முன்வைத்துள்ளார்.
கடுமையான தண்டனை மட்டுமே குற்றத்தைக் குறைத்து விடாது என்கிறார்.
முட்டாள்தனமான வாதம் இது.
அய்யர் மட்டுமின்றி,
தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெற்று 
கருத்து முத்துக்களை உதிர்க்கும் 
பல்வேறு குட்டி  முதலாளித்துவ  
நுனிப்புல் அறிவு ஜீவிகளான 
"கருத்து கந்தசாமிகள்" 
அய்யரின் கருத்தைத் தான் வாந்தி எடுக்கின்றனர்.

கடுமையான தண்டனைகள் நிச்சயமாகக் குற்றத்தை குறைக்கும் என்பது 
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டு விட்ட ஒன்று.                                                        
 ' DOCTRINE OF DETERRENCE' என்று ஒரு கோட்பாடு உண்டு. அச்சுறுத்தும் கோட்பாடு என்று சுமாராக இதை மொழி பெயர்க்கலாம்.கடுமையான தண்டனையானது,  கடுமையான இழப்பையும் கடுமையான பின்விளைவையும் ஏற்படுத்தும் என்ற அச்சம் மனித மனங்களில் தீவிரமாகச் செயல்படும். 
இது நிச்சயம் குற்றத்தைக் குறைக்கும்.

உலகில் மொத்தம் ஒன்பது நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன.
எல்லா நாடுகளிலும் சேர்ந்து மொத்தம் 22000 அணு ஆயுதங்கள் உள்ளன. 
இருந்தாலும் எந்த நாடும் இதுவரை எந்தப் போரிலும் அணு ஆயுதத்தைப் பிரயோகிக்க வில்லை. காரணம் மேலே கூறிய அச்சுறுத்தும் கோட்பாடுதான். உலக நாடுகளின் ராணுவ அறிவியலில்( MILITARY STRATEGY ),
MAD ( MUTUALLY ASSURED DESTRUCTION ) எனப்படும்  கோட்பாடு பயன்படுகிறது. இக்கோட்பாடு DOCTRINE OF DETERRENCE என்ற அச்சுறுத்தும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது.மனித மனங்களில் அச்சுறுத்தும் கோட்பாடு செயல்படுகிறது என்பதற்கு இது அசைக்க முடியாத ஆதாரமாகத் திகழ்கிறது.

எனவே கடுமையான தண்டனை குற்றத்தைக் குறைக்கும் என்பது; 
குறைப்பதில் பங்கு வகிக்கும் என்பது 
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்று.

இந்தியாவில் சகட்டு மேனிக்கு மரண தண்டனை வழங்கப் படுவதில்லை.
அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப் படுகிறது. அவ்வாறு கீழமை நீதிமன்றங்கள்  மரண தண்டனை வழங்கினாலும் 
மேல் முறையீட்டில்உயர்,  உச்ச நீதிமன்றங்கள் அவற்றை ஆயுள் தண்டனையாக மாற்றி விடுகின்றன. ஒருவேளை உச்ச நீதிமன்றமும் 
மரண தண்டனையை உறுதிப்படுத்தினாலும், ஜனாதிபதியின் கருணை 
குற்றவாளிகளைக் காப்பாற்றி விடுகிறது. 


பிரதிபா பட்டீல் ஜனாதிபதியாக இருந்தபோது, முப்பதுக்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு கருணை புரிந்து,
மரண தண்டனையை ஆயுள்  தண்டனையாக மாற்றி உள்ளார்.  

நிலைமை இவ்வாறு இருக்க, 
அரிதினும் அரிதான வழக்குகளில்,
மிக மிக அபூர்வமாக 
மரண தண்டனை வழங்கப் படும்போது 
வைத்தியநாத ஐயர்கள்  வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்க வேண்டிய அவசியம் என்ன?

எனவே, இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில்,
மரண தண்டனை வேண்டும் என்ற கருத்தே சரியானது 
என்பது மெய்ப்படுகிறது!

           ...........................................................................................................


   
தண்டனைக்கும் குற்றத்துக்கும் உள்ள
உறவு என்ன?
---------------------------------------------------------------  
அறிவியல் கூறுவது என்ன?
---------------------------------------------------------------   
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் 
எல்லா உயிரினங்களுக்கும்
தூண்டலுக்குத் துலங்கல் என்ற பண்பு உண்டு. 
( there will be a  response when there is a disturbance.)

எனவே மனித மனம், பாராட்டப் படும்போது 
உற்சாகம் அடையும்; ஊக்கம் பெறும்.
எனவேதான் பத்மஸ்ரீ முதல் பாரத ரத்னா வரை,
சாஹித்ய  அகாடமி முதல் ஞான பீடப்  பரிசு வரை 
பரிசுகள் வழங்கப் படுகின்றன.
பரிசுக்கு உரிய செயலைத்தொடர்ந்து செய்வதற்கு
ஏதுவான ஊக்கத்தை இப்பரிசுகள் வழங்குகின்றன.

அது போலவே, 
தண்டனைகள் வழங்கப் படும்போது
மனம் திருந்தும். 
தண்டனைக்கு உரிய செயலைச் 
செய்யக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கும்.

இதுதான் மனித மனம் இயங்கும் முறை.
இந்திய தண்டனைச் சட்டம் ( IPC )
குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை வழங்கும் 
சட்டம். (THE PUNISHMENT SHOULD COMMENSURATE with THE GRAVITY OF THE OFFENCE என்ற 
கோட்பாட்டின் 
அடிப்படையில் அமைந்த சட்டம்.)

எனவே தண்டனை கடுமையாக இருக்கும் போது
குற்றங்கள் குறையும் என்ற கோட்பாடு சரியான கோட்பாடு.
அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு.
மனித மனம் எவ்வாறு இயங்குகிறது 
என்பதைப் புரிந்து கொண்டு, 
அதன் அடிப்படையில் அமைந்த கோட்பாடு.
தனி மனித உளவியலைப் பேசுகிற விஞ்ஞானம் சைக்கலாஜி.
ஒட்டுமொத்த மானுடத்தின் உளவியலைப் பேசுகிற 
விஞ்ஞானம் ANTHROPOLOGICAL PSYCOLOGY என்று 
அழைக்கப் படுகிறது. 

Criminology, Psycology மற்றும் Anthropological psycology ஆகிய  அறிவியல் கோட்பாடுகளின் 
அடிப்படையில் அமைந்ததுதான் 
இந்தியாவின் தண்டனைக் கோட்பாடு.
தண்டனை கடுமையாக இருக்கும் போது மட்டுமே 
குற்றங்கள் குறையும். இதுதான் அறிவியல். 

வள்ளுவரும் இதைத்தான் கூறுகிறார்:

கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்.

பயிர்களைக் காப்பாற்ற களைகளைப் பிடுங்கி
எறிவது அவசியம் என்பதுதான் இந்தக் குறளின் பொருள்.

அதுபோல, ஒரு சமுதாயம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றால், 
அங்கு குற்றங்கள் குறைவாக இருக்க வேண்டும். 
அதற்கான வழிகளில் ஒன்றுதான் 
கடுமையான தண்டனைகள் வழங்குவதன் முலம் 
குற்றங்களைக் குறைப்பது.
இது மட்டுமே வழி என்பதல்ல.
ஆனாலும் இது நிச்சயமான உத்தரவாதமான வழி!

சாம பேத தான தண்டம் என்கிறான் சாணக்கியன்.
தண்டம் கடைசியாகத் தான் பிரயோகிக்கப் படும்.
என்றாலும் தண்டம் இல்லாமல் வெற்றி இல்லை.
அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்னும் தமிழ்ப் பழமொழியும் 
இதைத்தான் கூறுகிறது.

எனவே, மரண தண்டனை அவசியம்.
***************************************************                 
     
 

WILL THE DETERRENT PUNISHMENT RESULT IN THE DECLINE OF CRIME RATE?

கடுமையான தண்டனை வழங்குவதால்
குற்றங்கள் குறைந்து விடாது.
 இது சரியா?
--------------------------------------------- 
1) தொலைக்காட்சி விவாதங்கள், சிறு பத்திரிகைகளில் கட்டுரைகள்
இவற்றில் எல்லாம், 
கடுமையான தண்டனைகளால் 
குற்றங்களைக் குறைத்து விட முடியாது 
என்ற வாதம் மேலோங்கி நிற்கிறது.

2) இந்தக் கூற்றுக்கு எதேனும் ஆதாரம் உண்டா? இந்த வாதத்துக்கு
வலு சேர்க்கும் புள்ளி விவரங்கள் உண்டா?

3) கிடையாது என்பதே உண்மை.

4) ஆனாலும் நெஞ்சாரப் 
பொய்தன்னைச் சொல்கின்ற
குட்டி முதலாளித்துவ அரைகுறை அறிவு ஜீவிகள்
எந்த விதமான ஆதாரமும் இல்லாமல்,
" கடுமையான தண்டனையால்  குற்றங்கள் குறைந்து விடாது"
என்ற தங்களின் உளறல்,
 புள்ளி விவரங்களால் நிருபிக்கப்பட்ட உண்மை
என்பது போல்
 பம்மாத்துப் பண்ணி வருகின்றனர்.

5)கட்டணக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிப்பவன் முதல்
ஜிஆர்டியில் தங்கம் வாங்கும் சீமாட்டி வரை
எல்லோரும் கத்தை கத்தையான புள்ளி விவரங்களைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு 
திரிவது போலவும், .....
இந்தியாவின் தேசியக் குலத்தொழிலே புள்ளி விவரம் சேகரிப்பதுதான்
என்பது போலவும் .....
இந்தக் குட்டி முதலாளித்துவ அறிவு (!)ஜீவிகள்
செய்யும் பாசாங்கு
அருவருப்பைத் தருகிறது.

6)அரசோ தனியார் நிறுவனங்களோ,
கடுமையான தண்டனை விதிப்பதால்
குற்றங்கள் குறைந்து விடாது என்ற
 வாதத்துக்கு வலுச்சேர்க்கும் விதத்தில்
எத்தகைய புள்ளி விவரங்களையும்
சேகரிக்க வில்லை என்பதே உண்மை.

7)அப்படியானால் இந்தக் கேள்விக்கு
என்னதான் பதில்?
தண்டனைக்கும் குற்றத்துக்கும் உள்ள உறவுதான் என்ன?
தண்டனையை கடுமை ஆக்கினால்
குற்றங்கள் குறையாது என்றால்,
குற்றங்களைக் குறைப்பதற்கான வழிதான் என்ன?

8) மேற்கண்ட கேள்விகளுக்கு
அறிவியல் கூறும் தீர்வு என்ன என்பதைப் பார்ப்போம்.
                         ...................... .......தொடரும்.........

வெள்ளி, 13 செப்டம்பர், 2013


death sentence to Delhi gang rape culprits

நிர்பயா வழக்கில் நாடு போற்றும் தீர்ப்பு!
நான்கு கயவர்களுக்கும் மரண தண்டனை!!
-----------------------------------------------------------------------------------  
புது டில்லி சாகேத் நீதிமன்ற நீதியரசர் மேதகு யோகேஷ் கன்னா 
 நிர்பயா   வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கி உள்ளார். குற்றவாளிகள் என்று அறிவிக்கப் பட்ட நான்கு கயவர்களுக்கும் மரண தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டி உள்ளார்.

செப்டம்பர் 13, 2013 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் மூலம் நீதித்துறை மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. 

தீர்ப்பை வரவேற்போம். நான்கு கயவர்களும் தூக்கில் இடப்படும் வரை போராடுவோம். உயர்நீதி   மன்றம் , உச்சநீதி  மன்றம், ஜனாதிபதியிடம் கருணை மனு, மனித உரிமை என்ற பெயரிலான கயமை ஆகிய 
தடைகளைத் தாண்டி இறுதிக் கட்டத்தில் வெல்லும் வரை போராடுவோம். 

இத்தீர்ப்பின் மூலம்,
1) குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்து உள்ளது.
2) பாதிக்கப் பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைத்து உள்ளது.
3)இத்தகைய கொடூரங்கள் சகித்துக் கொள்ளப் பட மாட்டாது 
    என்ற செய்தி சமூகத்துக்கு உரத்துச் சொல்லப்பட்டு  உள்ளது.
********************************************************************************* 

வியாழன், 12 செப்டம்பர், 2013

SHOULD THE CAPITAL PUNISHMENT CONTINUE?

மரண தண்டனைவேண்டாம் 
என்று கூறுவோர்க்குச் சில கேள்விகள்!!
----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------------------------------------------------------
 1)விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்தில் அரசாட்சி நடத்திய காலத்தில்,
     அவர்களிடம் மரண தண்டனை உண்டு. 
    தமிழ் ஈழ தேசியத் தலைவர்  மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழ் 
     ஈழத்தின் நீதி   பரிபாலனத்தில் மரண தண்டனையை முக்கியமாக   இடம்   பெறச் செய்து இருந்தார்.  

2) தளபதி மாத்தையா இயக்கத்துக்குத் துரோகம் செய்து தளபதி கிட்டுவைக் காட்டிக் கொடுத்தார். 
இதற்காக புலிகள் அவருக்கு மரண தண்டனை 
விதித்து நிறைவேற்றினர்.

3)  TULF  தலைவர் அமிர்த லிங்கம் அமைதிப் படையை ஆதரித்து துரோகி யானார். புலிகள் அவருக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றினர்.
இன்னும் உதாரணங்கள் உண்டு; பட்டியல் நீளும் என்பதால் தவிர்க்கிறோம்.

4) மேதகு பிரபாகரன் அவர்கள் 
மரண தண்டனை வேண்டும் என்ற கருத்துக் 
கொண்டவர். 
மரண தண்டனை வேண்டாம் என்று கூச்சலிடும்   நண்பர்கள்
மேதகு  பிரபாகரன் அவர்களின் எதிரிகள் அல்லவா!

5) ரஷ்ய அதிபராக ஸ்டாலின் இருந்த போது , 
ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் 
மத்திய கமிட்டி உறுப்பினர்களில் முக்கால் வாசிப் பேர் துரோகிகள் ஆகி விட்டனர் என்று கூறி அனைவருக்கும் மரண தண்டனை விதித்தார்.

6) முன்னாள் கம்யூனிச நாடுகளான ரஷ்யா, சீனாவில் இன்றும் மரண தண்டனை உண்டு.

7)இஸ்லாமிய நாடுகளில் அன்றும் இன்றும் மரண தண்டனை உண்டு.

8 )உலகின் எல்லா விடுதலை இயக்கங்களிலும் மரண தண்டனை உண் டு .
LTTE  முதல் PLO (பாலஸ்தின விடுதலை இயக்கம்) வரை.

9) எனவே மரண தண்டனை வேண்டாம் என்ற கூச்சல் ,   
மேதகு பிரபாகரன் அவர்கள் மற்றும் ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் புரட்சிகரமான 
கருத்துக்களுக்கு எதிரானது என்பது மேலே சொன்ன கருத்துகள் மூலம் 
நிருபிக்கப் பட்டு விட்டது அல்லவா!
....................................   வாதங்கள் தொடரும்   .........................
......

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

capital punishment: right or wrong?

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? 
--------------------------------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------------------------------- 
      
மரண தண்டனை என்ற கோட்பாட்டை எதிர்த்து நாடு முழுவதும் 
குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

இவை யாருடைய குரல்கள்? இவை குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கிகளின் குரல்கள். 

கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால் , மரண தண்டனை வேண்டாம் என்ற கருத்து தாராளவாத முதலாளிகளின் கருத்து. இது மார்க்சியக் கருத்தோ புரட்சிகரக் கருத்தோ அல்ல.பாட்டாளி வர்க்கத்தின்  கருத்தோ அல்லது உழைக்கும் மக்களின்   கருத்தோ அல்ல.  ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு,  பாதாம் அல்வாவும்   முந்திரிப் பருப்பு பக்கோடாவும் தின்று கொண்டு,
வாட் திஸ் இண்டியா ! நான்சென்ஸ்!! என்று தம்  மேட்டிமைத் தனமான 
கருத்து முத்துக்களை இந்திய மக்கள்  முன் உதிர்க்கும்  இவர்கள்தான் 
மேற்சொன்ன தாராளவாத முதலாளித்துவக் கருத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள். இவர்கள் தான் மரண தண்டனை வேண்டாம் என்று 
கூச்சல் போடுபவர்கள்.

இவர்கள் போராட்டம் நடத்த மாட்டார்கள்; சிறைக்குப் போக மாட்டார்கள்.
புரட்சி என்பது ஒரு மாலை நேரத்து விருந்து என்று கருதும் இந்தக் கோழைகள், மூடர்கள்  " மரண தண்டனை வேண்டாம்" என்பது போன்ற 
பாதிப்பு ஏற்படுத்தாத கோரிக்கைகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். இதன் முலம் இந்தக் கோழைகளுக்கு ஒரு முற்போக்கு முகமூடி கிடைத்து விடுகிறது! இதற்குத்தான் இந்தக் கூச்சல்!

1967-இல் இந்தியாவில் விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய புரட்சி வெடித்தது.
நக்சல்பாரிப் புரட்சி என்ற பெயரிலான இந்தப் புரட்சியை, மார்க்சிய-லெனினிய கட்சி நடத்தியது.மகத்தான புரட்சியாளர் சாரு மஜும்தார் இந்த நக்சல்பாரி புரட்சியைத் தலைமை தாங்கி நடத்தினார்.வர்க்க எதிரியை அழித்து ஒழிப்பது   
 ( annihilation of class enemies ) என்ற கோட்பாட்டை முன்வைத்து நடைமுறைப் படுத்தினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அழித்தொழிப்புகள் 
நடைபெற்றன; அதாவது வர்க்க எதிரிகள் கொலை செய்யப் பட்டார்கள்.
சீனாவிலும் தலைவர் மாவோ தலைமையில் பல்வேறு அழித்தொழிப்புகள் 
நடைபெற்றன.சாரூ  மஜும்தாரின் கோட்பாடு  அடிப்படையில் மார்க்சியக் கோட்பாடாகும். காரல் மார்க்சே தம்முடைய கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற நூலில் குறிப்பிட்ட கோட்பாடாகும். ( பார்க்க: let the ruling classes tremble over a communist revolution ) இந்தக் கோட்பாட்டில்  நம்பிக்கை உடையவர்கள் எவ்வாறு மரண தண்டனையை  எதிர்க்க முடியும்?         .......தொடரும்......

திங்கள், 9 செப்டம்பர், 2013

பற்றி எரிகிறது முசாபர் நகர் (உபி )! 31 உயிர்கள் பலி!!
-------------------------------------------------------------------------  
மதக் கலவரத்தால் பற்றி எரியும் உபியில் இன்னும் அமைதி திரும்பவில்லை.
31 உயிர்கள் பலி ! 100க்கு மேற்பட்டோருக்குக் காயம் ! 130 பேர் கைது! 1000 பேர் மீது வழக்குப் பதிவு!!!!
     தொடர்ந்த ஊரடங்கு!  கண்டவுடன் சுட உத்தரவு !ராணுவத்தின் கொடி  அணிவகுப்பு !! என்னதான் நடக்கிறது முசாபர்நகரில் ? கலவரம் எப்படி ஆரம்பித்தது?

         காமவெறியால் விளைந்த கலவரம்!
        ----------------------------------------------------- 
முசாபர்நகர் சன்சாத் பகுதியில் , ஷா நவாஸ் என்ற முஸ்லிம் வாலிபன் 
ஒரு இந்துப் பெண்ணிடம் பாலியல் வன்முறையைப் பிரயோகித்தான் .
அந்தப் பெண் தன வீட்டில் புகார் செய்தாள். அந்தப் பெண்ணீன் அண்ணனும் அவன் நண்பனும் சென்று முஸ்லிம் வாலிபன் ஷா நவாசிடம் தட்டிக் கேட்டனர் . அந்தப் பகுதி முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் பகுதி . சிறிது நேரத்தில் எல்லா முஸ்லிம்களும் அங்கு திரண்டு விட்டனர். தட்டிக் கேட்ட இந்து வாலிபர்கள்  ( சச்சின் , கெளரவ் ) இருவரும்  முஸ்லிம்களால் அடித்துக் கொல்லப் பட்டனர். நிகழ்ந்த வன்முறையில் ஷா நவாசும் கொல்லப் பட்டான். 
இதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. கலவரம் தொடர்கிறது.

முசாபர் நகர் மக்கள் தொகையில் இந்துக்களும் முஸ்லிம்களும் சரி சமமாக உள்ளனர் .விவசாயம் சிறப்பாக நடைபெறும் மாவட்டம் அது. ஜாட்  இன மக்கள் கரும்பு பயிரிடும்  விவசாயத்தில் சிறந்து விளங்கி பொருளாதார நிலையில் மேம்பட்டு உள்ளனர். தற்போதைய ஜாட் -முஸ்லிம் கலவரத்தில் 
ஜாட்டுகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஜாட் இனத தலைவரான அஜித் சிங்கை முசாபர் நகரில் நுழையக் கூடாது என்று தடை விதித்துள்ளது அகிலேஷ் யாதவ் அரசு. பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அமைதியை நிலை நாட்டும்படி அகிலேஷ் யாதவ்வுக்கு கட்டளை இட்டுள்ளார். கூடிய விரைவில் முசாபர் நகரில் அமைதி திரும்பும் என்று நம்புவோமாக!