வெள்ளி, 28 ஜூலை, 2023

 40 நாளில் நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-3.
---------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------ 
இந்த பூமிக்கு வெளியே கால் வைப்பதற்கு சிறிது இடம் 
கிடைத்தால் தம்மால் இந்த பூமியைப் புரட்டித் தள்ளி 
விட முடியும் என்று ஆர்க்கிமிடிஸ் கூறியதாக ஒரு கதை 
உண்டு. நெம்புகோல் கோட்பாட்டின் படைப்பாளரும் 
ஏடறிந்த வரலாறு கூறும் உலகின் முதல் கணித 
மேதையுமான ஆர்க்கிமிடிஸ் (Archimedes BCE 287-212)
காலத்தில், விண்வெளி மானுடத்தின் அறிவெல்லைக்கு 
அப்பாற்பட்டதாகவே இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் கடந்த 
பின்னரும்கூட இதே நிலைமைதான் நீடித்தது. 

ஜெர்மானிய வானியல் அறிஞர் ஜோஹன்னஸ் கெப்ளர்
(Johannes Kepler 1571-1630) நிலவுக்குச் செல்வதாகக் 
கற்பனை செய்து  சோம்னியம் (Somnium) என்ற 
நாவலை எழுதினர். சோம்னியம் என்ற லத்தீன் 
சொல்லுக்கு கனவு என்று பொருள். 1634ல் பதிப்பிக்கப்பட்ட 
இந்த நாவலில் கெப்ளர் கண்ட கனவு, 335 ஆண்டுகள் கழித்து 
1969ல் நெயில் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் காலடி வைத்தபோது 
நனவாகியது. 

1957 அக்டோபர் 4ஆம் நாளன்று அன்றைய சோவியத் 
ஒன்றியம் (இன்றைய ரஷ்யா) ஸ்புட்னிக்-1 என்ற விண்கலத்தை
விண்வெளிக்கு அனுப்பியபோது ஆயிரம் ஆண்டுகாலத் 
தேக்கம் உடைந்தது.. அந்த நாள் முதல், உலகில் 
விண்வெளி யுகம் (Space era) பிறந்து விட்டது; விண்வெளி 
மனிதனுக்கு வசப்படத் தொடங்கி விட்டது     

இந்திய விண்வெளி வரலாற்றின் சிறப்பு மிக்க நாட்களில் 
ஒன்று கடந்த ஜூலை 14, 2023. அன்றுதான் சந்திரயான்-3
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 
சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் 
செலுத்தப் பட்டது. விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் 
அரிய காட்சியைக் காண வருமாறு இஸ்ரோ விடுத்த 
அழைப்பை ஏற்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் 
ஸ்ரீஹரிகோட்டாவில் திரண்டு சந்திராயன்-3 விண்ணில் 
ஏறும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்தனர்.

சந்திரயான்-3ன் திட்ட இயக்குனராக தமிழ்நாடடைச் சேர்ந்த
வீரமுத்துவேல் பணியாற்றி வருகிறார். சந்திரயான்-3 
திட்டத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களாகப் 
பணியாற்றியோரில் 54 பேர் பெண்கள் என்பது 
பெருமிதத்திற்கு உரியது.    

கோள்சுற்றி இல்லை!
--------------------------------- 
சந்திரயான்-3 என்பது சந்திராயன்-2வின் தொடர்ச்சியே ஆகும்.
(Follow on mission of Chandrayan-2) 2019 ஜுலையில் விண்ணில் 
செலுத்தப்பட்ட சந்திரயான்-2  என்பது "ஒன்றில் மூன்று" 
(three in one) கூறுகள் உள்ளடங்கிய விண்கலம் ஆகும். 
அ) கோள்சுற்றி (orbiter)
ஆ) தரையிறங்கி (lander)
இ) தரையுலாவி (rover)
ஆகியவையே அம்மூன்று கூறுகளாகும்.

இவற்றில் கோள்சுற்றி (orbiter) மட்டுமே வெற்றிகரமாக சந்திரனைச் 
சுற்றி வந்தது. ஆனால் விக்ரம் லேண்டரால் சந்திரனில் 
திட்டமிட்டபடி  மென்தரையிறக்கம் (soft landing)  செய்ய இயலவில்லை.
அதன கருவிகள் பழுதுற்று சந்திரனுக்குச் சற்று உயரத்தில் 
இருந்து சந்திரனின் தரையில் ஏதோ ஓரிடத்தில் விழுந்து
காணாமல் போனது. லேண்டர் தோல்வியுற்றதால் 
அதன் வயிற்றுக்குள் இருந்து வெளிவர வேண்டிய
ரோவர் வெளிவரவில்லை. ஆக சந்திராயன்-2வைப் 
பொறுத்தமட்டில் லேண்டரும் ரோவரும் தோல்வி 
அடைந்து, கோள்சுற்றி மட்டுமே வெற்றி கண்டது.

சந்திரயான்-3ல் கோள்சுற்றி கிடையாது. சந்திரயான்-2வின் 
கோள்சுற்றி வெற்றி அடைந்து விட்டதால் மீண்டும் 
ஒரு கோள்சுற்றியை அனுப்பும் தேவை எழவில்லை. 
எனவே முன்பு தோல்வியுற்ற பணிகளை நிறைவேற்றும் 
பொருட்டு லேண்டர் ரோவர் ஆகிய இரண்டும் மட்டுமே  
சந்திரயான்-3ல் இடம் பெற்றுள்ளன. லேண்டரின் பெயர் 
விக்ரம். ரோவரின் பெயர் பிரக்ஞான். சந்திரயான்-2ல் 
உள்ள அதே பெயர்கள்தான். பெயர்களில் மாற்றம் இல்லை.  

சந்திரனில் மென்மையாகத் தரையிறங்கிய நாடுகள்
(soft landing) இதுவரை மூன்று மட்டுமே. அவை: அ) அமெரிக்கா 
ஆ) ரஷ்யா இ) சீனா. 2023 ஆகஸ்டில் திட்டமிட்டபடி  
சந்திரயான்-3 வெற்றி அடையுமானால் சந்திரனில் 
மென்தரையிறங்கும் நான்காவது நாடாக இந்தியா 
விளங்கும்.     

தென்துருவ ஆய்வே பயனளிப்பது!
------------------------------------------------------ 
இந்தியாவின் சிறப்பு என்னவெனில் மற்ற நாடுகளைப் 
போலன்றி சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்க 
முனைவதாகும். சந்திரயான்-3 வெற்றி அடையுமெனில் 
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் நாடு 
என்ற பெருமையை இந்தியா பெறும்.

பூமியின் துருவப் பகுதிகள் போன்றே சந்திரனின் 
துருவப் பகுதிகளும் அதிக வெப்பநிலைக்கு 
ஆட்படாமல் இருப்பவை. இதனால் பிற பகுதிகளை விட  
துருவப் பகுதிகளை ஆராய்வது சந்திரனைப் பற்றிய 
உண்மைகளை வெளிக் கொணர உதவும். சந்திரனின் 
வட துருவத்தை விட தென் துருவம் அதிகமாக 
நிழலில் மூழ்கி இருக்கும் பகுதி. இங்கு நிரந்தர 
நிழல் பிரதேசங்கள் நிறையவே உண்டு. இங்குள்ள 
பள்ளங்களில் (craters) தண்ணீர் உறைந்த நிலையில் 
இருக்கக்கூடும்.  இக்காரணங்களால் சந்திரனின் 
தென்துருவ ஆய்வு பெரும் முக்கியத்துவம் உடையது.

கோள்சுற்றியான சந்திரயான்-1 2008 அக்டோபரில் 
விண்ணில் செலுத்தப்பட்டு 2009 ஆகஸ்ட் வரை 
வெற்றிகரமாக இயங்கி தகவல்களை அனுப்பியது.
சந்திரயான்-1ல் முதலில் கோள்சுற்றியை மட்டுமே 
அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. டாக்டர் 
அப்துல் கலாமின் ஆலோசனைப்படி கோள்சுற்றியுடன் 
மோதித்தாக்கும் ஒரு இம்பாக்டர் (impactor) கருவியையும்      
அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு Moon impact probe
என்று பெயர். சந்திரனின் தரையில் மோதித்தாக்கி 
அதன் மேற்பரப்பில் உள்ள மண்ணை (sub surface debris) 
இக்கருவியின் மூலமாகத்தான் எடுக்க முடிந்தது.

சந்திரயான்-1ல் நாசாவின் அறிவியல் பரிசோதனைக் கருவி 
(Moon Mineralogy Mapper) வைக்கப் பட்டிருந்தது. இம்பாக்டர் 
எடுத்துத்தந்த மண்ணை இக்கருவி ஆராய்ந்தபோதுதான் 
சந்திரனில் தண்ணீர் உறைந்த நிலையில் இருக்கிறது 
என்ற உண்மையைக் கண்டறிய முடிந்தது. இவ்வாறு 
சந்திரனில் தண்ணீர் இருப்பதை இந்தியா  உலகிற்கு 
முதன் முதலில் அறிவித்தது.

சந்திரனைக் கைப்பற்றுவோம்!
------------------------------------------------
உலகின் இன்றைய மக்கள்தொகை 8 பில்லியன்; அதாவது 
800 கோடி. இதில் இந்தியாவின் மக்கள்தொகை மட்டும் 
140 கோடி. ஜப்பானின் டோக்கியோ நகரம் 1 கோடியே
40 லட்சம் பேருடன் மக்கள்தொகையைப் பொறுத்து 
வெடித்துச் சிதறுகிறது (population explosion). தொடர்ந்து 
அதிகரித்துக் கொண்டே செல்லும் மக்கள்தொகையும்  
பூமி மென்மேலும் மாசடைந்து வருவதும் நமது பூமியை 
வாழத்தகுதியற்ற கோளாக ஆக்கிக் கொண்டிருக்கிறது.     
இந்நிலையில், மனிதர்கள் பூமியைமட்டுமே நம்பி இராமல் 
வேறொரு  கோளை ஆக்கிரமித்துக் கைப்பற்றிக்கொண்டு, 
எதிர்காலத்தில்  அங்கு சென்று வாழத் தயாராக வேண்டும் என்று 
மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் கூறியது பொருள் பொதிந்தது.

பூமிக்கு மிக அருகில் 384,000 கிமீ தொலைவில் சந்திரன் 
உள்ளது. ஒளியின் வேகத்தில் செல்லும் ஒரு சமிக்ஞை 
பூமியில் இருந்து சந்திரனை அடைய வெறும் 1.3 நொடிதான் 
ஆகும். எனவே சந்திரனைக் கைப்பற்றுவதும் அங்கு 
சென்று வாழ்வதும் ஒப்பீட்டளவில் எளிது. சந்திரனில் 
தண்ணீரும் இருக்கிறது என்று இந்தியா மூலம் 
உலகம் அறிந்து கொண்டுள்ளது. சந்திரனில் தண்ணீர் 
இருப்பதானது சந்திரன் மீதான காதலை வெகுவாக 
அதிகரித்துள்ளது. எனவே சந்திரனைக் கைப்பற்ற  
விரும்பும் மனிதகுலத்தின் எதிர்காலத் திட்டங்களுக்கு 
சந்திரயான் போன்ற உருப்படியான தென்துருவ ஆய்வுகள் 
மிகப் பெரிதும் பயனளிக்கும்.   

பயணத் திட்டமும் நோக்கமும்!  
-------------------------------------------
சந்திரயான்-3 ஜூலை 14, 2023 அன்று விண்ணில் செலுத்தப் பட்டது.
இது நிலவின் தென்துருவத்தில், 40ஆம் நாளன்று  
ஆகஸ்டு 23, 2023 அன்று மென்மையாகத் தரையிறங்கும் என்று  
எதிர்பார்க்கப் படுகிறது.

LVM3 என்று பெயரிடப்பட்டுள்ள  GSLV M-3 என்னும் செலுத்து வாகனமே சந்திராயன்-3ஐ விண்ணில் ஏவியது.   

சந்திரயான்-3ன் திட்டச் செலவு மொத்தம் ரூ 615 கோடி
மட்டுமே. கிறிஸ்டோபர் நோலனின் அண்மைப் படமான
ஓப்பன்ஹீமர் 100 மில்லியன் அமெரிக்க டாலர் 
செலவில் எடுக்கப் பட்டது. அதாவது இந்திய மதிப்பில் 
இது ரூ 800 கோடிக்குச் சமம். சந்திரயான்-3ன் செலவு 
கிறிஸ்டோபர் நோலனின் படத்திற்கு ஆன செலவை விட 
ரூ 185 கோடி குறைவு.
    
பின்வரும் மூன்று விஷயங்களை சந்திரயான்-3ன் 
நோக்கங்களாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அ) இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை உலகிற்கு 
எடுத்தியம்புவது (technological demonstration).
ஆ) சந்திரனின் தரையில் ரோவர் நடந்து செல்வது.
இ) சந்திரனில் எந்த இடத்தில் இறங்கினோமோ, அதே 
இடத்தில் அறிவியல் பரிசோதனைகளைச் செய்வது
(conducting in situ experiments). இதற்காக லேண்டரில்
ஏழு அறிவியல் கருவிகள் வைக்கப் பட்டுள்ளன. 

பிற விவரங்கள்!
-----------------------------
லேண்டர், ரோவர் இவ்விரண்டின் வாழ்நாள் ஒரு சந்திர நாள் 
(1 lunar day) மட்டுமே. இது பூமியின் 14 நாட்களுக்குச் சமம்.
4 கிமீ x 2.4 கிமீ பரப்பளவுள்ள இடத்தில் சந்திரயான்-3
தரையிறங்கும்.   

விண்ணில் ஏவப்பட்டபோது சந்திரயானின் மொத்த நிறை 
(launch mass) 3900 கிலோகிராம் ஆகும். உந்துசக்திக்கூறு 
(propulsion module) 2148 கிகி நிறை உடையது. லேண்டரும் 
ரோவரும் சேர்ந்து 1752 கிகி நிறை உடையன. இதில் 
ரோவர் மட்டும் 26 கிகி நிறை உடையது.

விக்ரம் சந்திரனில் தரையிறங்குகையில் அதன் 
வேகம் பின்வருமாறு அமையும்.
செங்குத்து வேகம் (vertical velocity) = வினாடிக்கு 2 மீட்டர் 
அல்லது அதற்கும் குறைவு. இது மணிக்கு 7.2 கிமீ 
என்ற வேகத்திற்குச் சமம் ஆகும். அன்றாட வாழ்க்கையில் 
ஒரு ஸ்கூட்டரில் மணிக்கு 40 கிமீ என்ற வேகத்தில் செல்லும் 
நமக்கு, மணிக்கு 7.2 கிமீ வேகம் என்பது எவ்வளவு 
மெதுவானது என்பதை உணர முடியும். 

கிடைமட்ட வேகம்  (horizontal velocity = வினாடிக்கு அரை மீட்டர் 
அல்லது அதற்கும் குறைவு. இது மணிக்கு 1.8 கிமீ என்ற 
வேகத்திற்குச் சமம். இது சைக்கிளில் மெதுவாகச் செல்லும் 
ஒருவரின் வேகம் போன்றது. இவ்வளவு குறைவான 
வேகத்தில் சென்றால்தான் மென்மையாகத் 
தரையிறங்க முடியும்.

40 நாள் பயணம் ஏன்?
--------------------------------
1969ல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நிலவுக்குச் சென்ற 
அமெரிக்கா நிலவில் தரையிறங்க  4 நாட்களே 
(102 மணி நேரத்திற்குச் சற்று அதிகம்) எடுத்துக் கொண்டது.
ஆனால் இந்தியாவின் சந்திரயான்-3ன் நிலவுப் பயணம் 
40 நாள் ஆகிறது. முந்தைய சந்திரயான்-2ன் 
பயணமும் 47 நாள் ஆனது. நிலவுப் பயணத்திற்கான 
நேரம் அமெரிக்காவுக்கு மணிக்கணக்கிலும் இந்தியாவுக்கு 
மாதக்கணக்கிலும் ஆவது ஏன்? இந்தியாவிடம் தொழில்நுட்பக்க 
குறைபாடு ஏதேனும் உள்ளதா? 

நிலவுப் பயணத்திற்கு இந்தியா அதிக காலம் எடுத்துக்
கொள்வதற்கான காரணம் குறைந்த செலவில் 
நிலவுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற 
நோக்கமே. விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா 
யாருக்கும் சளைத்தது அல்ல. இந்தியா தனது 
தொழில்நுட்ப வலிமையை மென்மேலும் அதிகரித்துக் 
கொள்ள இயலும். ஆனால் அதற்கு கோடானுகோடி ரூபாய் 
செலவாகும். செலவைச் சுருக்கும் பொருட்டே 
இஸ்ரோவின் விஞ்ஞானிகள் நிலவுப் பயணத்தை 
அதிக நாட்கள் கொண்டதாக அமைக்கிறார்கள்.   
சந்திரயான்-3ன் வெற்றிக்குப் பின்னர் இந்தியா 
ஒரு விண்வெளி வல்லரசு என்ற உண்மை உலகெங்கும் 
பிரகடனம் செய்யப்படும். அதற்கு இன்னும் சில 
நாட்கள் பொறுத்திருப்போம்.    
************************************************* 
 
 




  


  

      


 




 
  .   

  


    
    
              

  . 

திங்கள், 17 ஜூலை, 2023

 தொடர்ச்சி... பகுதி-2; 

பொருள் பற்றிய லெனினின் வரையறை!
------------------------------------------------------------- 
பொருள் பற்றிய லெனின் வரையறை 
வருமாறு:-
"பொருள் என்பது மனித சிந்தனையைச் 
சாராமல், அதற்கு அப்பால் புறநிலையில் 
இருக்கின்ற யதார்த்தம் ஆகும். புலன்கள் 
வாயிலாக பொருள் நமது மூலையில் 
பிரதிபலிக்கப் பட்டு அதன் இருப்பை 
நாம் உணர்கிறோம்."

எர்னஸ்ட் மாக் போன்றோரின் பொருள் 
பற்றிய பிறழ்ந்த பார்வையை லெனினின்
வரையறை சரிப்படுத்தியது. லெனினின் 
வரையறையே சரியானது என்பது 
அனைவராலும் உணரப் பட்டது. இன்றளவும் 
லெனினின் "பொருள் என்பது புறநிலை 
யதார்த்தம் (objective reality)" என்ற வரையறை 
பொருந்துகிறது.

லெனின் தமது வரையறையை இருபதாம் 
நூற்றாண்டின் தொடக்கத்தில், அதன் முதல் 
தசாப்தத்தில் (decade) வழங்கினார். அப்போதைய 
அணுக்கருவியலின் வளர்ச்சி குழந்தைப் 
பருவத்தில்தான் இருந்தது. புரோட்டான் 
அப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கவில்லை. 
ருதர்போர்டின் அணுச்சித்திரம் அப்போது 
வெளியாகி இருக்கவில்லை.   

இன்று இந்த 2023ல் லெனினின் வரையறை 
கூறப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகி 
விட்டது. இந்த நூறாண்டு காலத்தில் அறிவியல் 
குறிப்பாக இயற்பியல் அசுரத்தனமாக 
வளர்ந்துள்ளது. Atomic physics, Nuclear physics
ஆகியவற்றைத் தாண்டி Particle physics, 
High energy physics ஆகிய துறைகளைக் 
கொண்டதாக  இயற்பியல் வளர்ந்துள்ளது.

வளர்ந்துள்ள சூழலுக்கு ஏற்ப, பொருளின் 
வரையறை அகல்விரிவானதாகவும் 
ஆழமானதாகவும் (comprehensive and deep)
இருக்க வேண்டும். முழுமையானதாகவும் 
துல்லியமானதாகவும் இருக்க வேண்டும்.
இது நவீன அறிவியலின் தேவை.

பொருள் பற்றிய முழுநிறைவான வரையறையே 
வேறு எதனையும் விட பொருள்முதல்வாதத்திற்கு 
முக்கியமானது. லெனினின் வரையறை 
இன்றளவும் பொருந்தும் என்றபோதிலும், 
பொருள் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் 
விடையளிக்க வல்லதாகவும் அறிவியல் 
வழிப்பட்டதாகவும் உள்ள ஒரு வரையறையை 
நவீன அறிவியல் கோருகிறது.    

கருத்துமுதல்வாதத்தைக் களத்தில் சந்தித்து 
முறியடிக்க வல்லதாக, போக்குணம் 
மிக்கதாக நமது பொருள்முதல்வாதம் இருக்க 
வேண்டும் என்று லெனின் விரும்பினார். பொருள் 
பற்றிய வரையறை கூர்மையானதாகவும் 
முழுமையானதாகவும் துல்லியமானதாகவும் 
இருந்தால்தான் பொருள்முதல்வாதம் 
போர்க்குணம் உடையதாக இருக்கும்.

பொருள் என்பது புறநிலை யதார்த்தம் 
என்னும் லெனினின் பிரசித்தி பெற்ற 
வரையறையானது  தத்துவ வழிப்பட்ட 
வரையறை (philosophical definition) ஆகும். 
அதாவது அவ்வரையறை அறிவியல் 
வரையறை அல்ல. மாறாக அது 
epistemological definition ஆகும்.

லெனின் மறைந்த இந்த நூறாண்டுகளில் 
பொருளின் சாத்தியமான எல்லாப் பண்புகளும் 
(properties of matter) கண்டறியப் பட்டுவிட்டன.
பொருளும் ஆற்றலும் சமம் என்பது பல்லாயிரக் 
கணக்கான பரிசோதனைகளில் உறுதிப் 
படுத்தப் பட்டுள்ளது. இப்போதெல்லாம் 
உயர் ஆற்றல் இயற்பியலில் (high energy physics) 
துகள்களின் நிறையானது அதன் சொந்த 
அலகுகளில் (மில்லி கிராம் etc) குறிப்பிடப் 
படுவதில்லை. மாறாக ஆற்றலின் அலகுகளில் 
குறிப்பிடப் படுகிறது. உகாரணமாக ஹிக்ஸ் 
போஸானின் நிறை 125 GeV/squared ஆகும்.
அதாவது கிக்கா எலக்ட்ரான் வோல்ட் பெர் 
சி ஸ்கொயர்டு என்பதுதான் நிறையின் அழகு.   

சுருங்கக் கூறின் பொருள் குறித்த 
வரையறையானது ஆற்றலையும் 
உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
லெனினுக்குப் பிந்திய நூறாண்டுகளின் 
அறிவியல் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக 
இருக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பொருள் 
குறித்த வரையறையை பின்னர் காணலாம்.
--------------------------------------------------------------------  

                



    

   




        



         
 
பொருள் என்பதன் வரையறை!
------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
அரிஸ்ட்டாட்டில் காலந்தொட்டு நியூட்டன் 
காலம் வரை பொருள் பற்றிய நான்குமூலக் 
கொள்கையே (Four elements theory) மேற்கில் 
ஆட்சி செலுத்தியது. கிழக்கில்  இது 
பஞ்சபூதக் கொள்கையாக இருந்தது.
நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகிய ஐந்துமே 
பஞ்ச பூதங்கள் என்பதை நாம் அறிவோம். 

அரிஸ்டாட்டில் ஐந்தாவதாக நாம் கூறிய 
ஆகாயத்தைத் தவிர்த்து நான்கோடு நிறுத்திக் 
கொண்டார். சாராம்சத்தில் பொருள் பற்றிய 
மேற்கின் வரையறையும் கிழக்கின் 
வரையறையும் சமமே.

மார்க்சும் எங்கல்சும் தங்கள் காலத்தில் 
நிலவிய அரிஸ்டாட்டிலின் வரையறையை 
அப்படியே  பின்பற்றினர். மார்க்சின் ஆசான் 
லூத்விக் ஃபாயர்பாக்கும் அரிஸ்ட்டாட்டிலின் 
வரையறையையே ஏற்றுக் கொண்டிருந்தார்.

மார்க்சின் காலத்தில் ஜான் டால்டன் என்னும் 
ஆங்கில விஞ்ஞானி அணுக்கொள்கையை 
அறிவித்தார்.

எனினும் பொருள் பற்றிய அப்போது நிலவிய 
அரிஸ்டாட்டிலின் வரையறையை டால்டனின் 
கொள்கை மாற்றி அமைக்கவில்லை. அதற்கான 
தேவை எதுவும் அப்போது இல்லை.

மார்க்சும் எங்கல்சும் 19ஆம் நூற்றாண்டில் 
பிறந்து  வாழ்ந்து 19ஆம் நூற்றாண்டிலேயே 
மறைந்தும் விட்டனர். (மார்க்ஸ் மறைவு 
1883ல்; எங்கல்ஸ்  மறைவு 1895ல்). அவர்கள் 
காலத்தில் பொருள்  குறித்த அரிஸ்டாட்டிலின் 
வரையறையை மாற்றுவதற்கான தேவை 
எதுவும் எழவில்லை.

ஆனால் இருபதாம் நூற்றாண்டு அப்படியல்ல.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில 
விஞ்ஞானி ஜே ஜே தாம்சன் எலக்ட்ரானைக் 
கண்டுபிடித்தார். தமது பெயரால் அமைந்த 
அணுச் சித்திரத்தை (Thomson's atomic model) 
வெளியிட்டார். இச்சூழலானது அறிவியலில் 
புதிதாக இரண்டு துறைகளை (atomic physics, 
nuclear physics) உருவாக்கியது.

மேற்கூறிய காரணிகள் பொருள் பற்றிய 
அரிஸ்ட்டாட்டிலின் வரையறையை 
மாற்றுமாறு  வற்புறுத்தின. இக்காலத்தில் 
எர்னஸ்ட் மாக் (Ernest Mach) என்னும் 
இயற்பியல் விஞ்ஞானி பொருள் என்பது 
நிலைத்திருப்பதல்ல என்று அறிவித்தார். 
இயற்பியல் விஞ்ஞானிகள் நடுவே பொருள் 
குறித்த வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.
அவை தீவிரப் பட்டன.    

இக்காலக்கட்டத்தில் மார்க்சியத்தின் 
தலைமைப் பொறுப்பில் லெனின் இருந்தார். 
பொருள் குறித்த சரியான வரையறையை 
உருவாக்க வேண்டியதன் தேவையை அவர் 
உணர்ந்திருந்தார். எர்னஸ்ட் மாக் போன்ற 
விஞ்ஞானிகளின் கருத்தை மறுத்து 
பொருள் பற்றிய சரியான வரையறையை 
உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு 
இருந்தது. எனவே பொருள் என்பது புறநிலை 
யதார்த்தம் (an objective reality) என்ற தமது 
புகழ் பெற்ற வரையறையை அவர் உலகிற்கு 
அளித்தார். (அது பற்றி அடுத்த பகுதியில் 
பார்ப்போம்).


தொடர்ச்சி... பகுதி-2; 
பொருள் பற்றிய லெனினின் வரையறை!
------------------------------------------------------------- 
பொருள் பற்றிய லெனின் வரையறை 
வருமாறு:-
"பொருள் என்பது மனித சிந்தனையைச் 
சாராமல், அதற்கு அப்பால் புறநிலையில் 
இருக்கின்ற யதார்த்தம் ஆகும். புலன்கள் 
வாயிலாக பொருள் நமது மூலையில் 
பிரதிபலிக்கப் பட்டு அதன் இருப்பை 
நாம் உணர்கிறோம்."

எர்னஸ்ட் மாக் போன்றோரின் பொருள் 
பற்றிய பிறழ்ந்த பார்வையை லெனினின்
வரையறை சரிப்படுத்தியது. லெனினின் 
வரையறையே சரியானது என்பது 
அனைவராலும் உணரப் பட்டது. இன்றளவும் 
லெனினின் "பொருள் என்பது புறநிலை 
யதார்த்தம் (objective reality)" என்ற வரையறை 
பொருந்துகிறது.

லெனின் தமது வரையறையை இருபதாம் 
நூற்றாண்டின் தொடக்கத்தில், அதன் முதல் 
தசாப்தத்தில் (decade) வழங்கினார். அப்போதைய 
அணுக்கருவியலின் வளர்ச்சி குழந்தைப் 
பருவத்தில்தான் இருந்தது. புரோட்டான் 
அப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கவில்லை. 
ருதர்போர்டின் அணுச்சித்திரம் அப்போது 
வெளியாகி இருக்கவில்லை.   

இன்று இந்த 2023ல் லெனினின் வரையறை 
கூறப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகி 
விட்டது. இந்த நூறாண்டு காலத்தில் அறிவியல் 
குறிப்பாக இயற்பியல் அசுரத்தனமாக 
வளர்ந்துள்ளது. Atomic physics, Nuclear physics
ஆகியவற்றைத் தாண்டி Particle physics, 
High energy physics ஆகிய துறைகளைக் 
கொண்டதாக  இயற்பியல் வளர்ந்துள்ளது.

வளர்ந்துள்ள சூழலுக்கு ஏற்ப, பொருளின் 
வரையறை அகல்விரிவானதாகவும் 
ஆழமானதாகவும் (comprehensive and deep)
இருக்க வேண்டும். முழுமையானதாகவும் 
துல்லியமானதாகவும் இருக்க வேண்டும்.
இது நவீன அறிவியலின் தேவை.

பொருள் பற்றிய முழுநிறைவான வரையறையே 
வேறு எதனையும் விட பொருள்முதல்வாதத்திற்கு 
முக்கியமானது. லெனினின் வரையறை 
இன்றளவும் பொருந்தும் என்றபோதிலும், 
பொருள் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் 
விடையளிக்க வல்லதாகவும் அறிவியல் 
வழிப்பட்டதாகவும் உள்ள ஒரு வரையறையை 
நவீன அறிவியல் கோருகிறது.    

கருத்துமுதல்வாதத்தைக் களத்தில் சந்தித்து 
முறியடிக்க வல்லதாக, போக்குணம் 
மிக்கதாக நமது பொருள்முதல்வாதம் இருக்க 
வேண்டும் என்று லெனின் விரும்பினார். பொருள் 
பற்றிய வரையறை கூர்மையானதாகவும் 
முழுமையானதாகவும் துல்லியமானதாகவும் 
இருந்தால்தான் பொருள்முதல்வாதம் 
போர்க்குணம் உடையதாக இருக்கும்.

பொருள் என்பது புறநிலை யதார்த்தம் 
என்னும் லெனினின் பிரசித்தி பெற்ற 
வரையறையானது  தத்துவ வழிப்பட்ட 
வரையறை (philosophical definition) ஆகும். 
அதாவது அவ்வரையறை அறிவியல் 
வரையறை அல்ல. மாறாக அது 
epistemological definition ஆகும்.

லெனின் மறைந்த இந்த நூறாண்டுகளில் 
பொருளின் சாத்தியமான எல்லாப் பண்புகளும் 
(properties of matter) கண்டறியப் பட்டுவிட்டன.
பொருளும் ஆற்றலும் சமம் என்பது பல்லாயிரக் 
கணக்கான பரிசோதனைகளில் உறுதிப் 
படுத்தப் பட்டுள்ளது. இப்போதெல்லாம் 
உயர் ஆற்றல் இயற்பியலில் (high energy physics) 
துகள்களின் நிறையானது அதன் சொந்த 
அலகுகளில் (மில்லி கிராம் etc) குறிப்பிடப் 
படுவதில்லை. மாறாக ஆற்றலின் அலகுகளில் 
குறிப்பிடப் படுகிறது. உகாரணமாக ஹிக்ஸ் 
போஸானின் நிறை 125 GeV/squared ஆகும்.
அதாவது கிக்கா எலக்ட்ரான் வோல்ட் பெர் 
சி ஸ்கொயர்டு என்பதுதான் நிறையின் அழகு.   

சுருங்கக் கூறின் பொருள் குறித்த 
வரையறையானது ஆற்றலையும் 
உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
லெனினுக்குப் பிந்திய நூறாண்டுகளின் 
அறிவியல் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக 
இருக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பொருள் 
குறித்த வரையறையை பின்னர் காணலாம்.
--------------------------------------------------------------------  

                



    

   




        



         
 

ஞாயிறு, 16 ஜூலை, 2023

 சந்திரயான்-3 பகுதி 2 details    
------------------------------------------
1) ஜுன் 14ல் விண்கலம் 170-36500 என்ற ஆர்பிட்டில் 
நிலைநிறுத்தப் பட்டது.
2) தற்போது ஒரு சுற்று சுற்றி முடித்த பின்.
ஜூன் 15 அன்று 173/ 41762 என்ற ஆர்பிட்டில் 
விண்கலம் நிலைநிறுத்தப் பட்டுள்ளது.
இது முதல் orbit raising manuver ஆகும்.
Earth bound firing -1ஆகும். 

சந்திரயான்-3 ஜூன் 15 அன்று Perigee 173 km 
Apogee 36500 km என்ற orbitக்கு உயர்த்தப் 
பட்டுள்ளது. இது முதல் Orbit raising maneuver ஆகும். 


இந்தப் படத்தில் ரோவர் எங்கிருக்கிறது 
என்று வாசகர்கள் சொல்ல வேண்டும்.
சொல்லுங்கள்.

Perigee =  புவியண்மை. Apogee = புவிச்சேய்மை.

நான் உருவாக்கிய தமிழ்ச் சொற்கள்;
Perigee =  புவியண்மை. Apogee = புவிச்சேய்மை.
இவற்றின் பொருளை மனதில் பதியுங்கள் வாசகர்களே!


இந்தப் படங்களைப்  பாருங்கள்.

பூமியின் orbitல் சுற்றும் சந்திரயான்-3 அடுத்து 
சந்திரனின் orbitக்குச் செல்லும். அப்போது 
periselene, aposelene பற்றிப் பார்ப்போம்.

இஸ்ரோ எப்போது நிறுவப்பட்டது?
அ) 1948  ஆ) 1952 இ) 1969 ஈ) 1995.
சரியான விடை எது?



விடை:
-----------
மேலே உள்ள படத்தில் வலப்புறத்தில் 
(top right) அந்த லேண்டரின் வயிற்றுக்குள் 
வெளியே தெரியாதபடி இருக்கிறது ரோவர்.

கீழ் உள்ள படத்தில் அந்த pink நிற சரிவுப் 
பலகையில் (இதை ramp என்பர்) இறங்கி 
வருகிறது ரோவர். அடுத்த படத்தில் 
rampல் இருந்து இறங்கி தனியாக நிற்கிறது ரோவர்.
-----------------------------------------

பூமியை சந்திரன் சுற்றி வருகிறது அல்லவா?
என்ன வேகத்தில் சுற்றி வருகிறது?
Find the orbital velocity of the moon.   
----------------------------------------------------------
santhirayaan-3 julay 17

சந்திராயன்-3 ஜுலை 17 மாலையில் perigee 226 km,
apogee 41603 km உள்ள சுற்றுப்பாதைக்கு உயர்த்தப் பட்டது.
(2nd orbit raising manoeuvre).   
  
சந்திரயான்-3ன் orbit raising இங்கிருந்து செய்யப்படுகிறது!
அ) ஸ்ரீஹரிகோட்டா ஆ) மகேந்திரகிரி இ) பெங்களூரு 
ஈ) திருவனந்தபுரம்.    

santhirayaan-3n 

சந்திரயான்-3ன் 3ஆம் orbit raising 
ஜூலை 18ல் முடிந்ததாக  இஸ்ரோ கூறுகிறது. 
ஆனால் orbit detailsஐ (perigee, apogee)
வெளியிடவில்லை.  

3ஆம் orbit raising நடவடிக்கை சந்திரயான்-3ல் 
ஜுலை 18 மாலையில் நடைபெற்றது.
Perigee = 228 km. Apogee = 51400 km.


Perigee = 228 km, Apogee = 51400 km உள்ள  
ஒரு நீள்வட்டச் சுற்றுப்பாதையின் (elliptical orbit)
மையப்பிறழ்ச்சி (eccentricity) என்ன?





    






     





       



பல ஆண்டுகளாக இவற்றையே பயன்படுத்துகிறேன்.

வெள்ளி, 14 ஜூலை, 2023

 விடையும் விளக்கமும்!
129 நாள் ஆகும்!
-----------------------------------------

இந்தக் கணக்கு கெப்ளரின் மூன்றாம்
விதியைப் பயன்படுத்துகிறது.

கெப்ளரின் 3ஆம் விதி இதுதான்:
-------------------------------------------------------
எந்த ஒரு கோளும் சூரியனைச் சுற்றி வர
எடுத்துக் கொள்ளும் காலத்தை T என்போம்.
சூரியனில் இருந்து அந்தந்தக் கோள்கள்
உள்ள தூரத்தை A என்போம். T என்னும்
காலமும் A என்னும் தூரமும் பின்வரும்
விகிதப் பொருத்தத்தில் (proportional)
இருக்கும். அதாவது T^2= A^3. இந்த
விகிதம் சூரியனைச் சுற்றி வரும்
எல்லாக் கோள்களுக்கும் பொருந்தும்.
(
புரிந்து கொள்ளும் பொருட்டு மிகவும்
unconventional formல் சொல்லி இருக்கிறேன்)

(The square of the period of revolution of any planet
is proportional to the cube of the planet's mean
distance from the sun)

கணக்கின் விடை மற்றும் செய்முறை:
----------------------------------------------------------------
சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம்
ஒரு வானியல் அலகு (1 AU) எனப்படும்.
AU = Astronomical Unit ஆகும்.
எனவே கணக்கைச் செய்கையில்
சூரியன்-பூமி தூரத்தை 150,000,000 கிமீ
(15 கோடி கிமீ) என்று எடுத்துக் கொள்ள
வேண்டியதில்லை.

கணக்கில் கொடுத்துள்ள விவரங்கள்
(given data):
----------------------------------------------------------
சூரியன்-பூமி தூரத்தை A என்க. A = 1 AU
பூமிக்கு ஆகும் காலம் T என்க. T =365 days
நமது கற்பனையான பூமியின் தூரம் = S என்க.
S = 1//2 AU (பாதி தூரம் என்பதனால்)
கற்பனை பூமிக்கு ஆகும் காலம் = X என்க.
இப்போது Xஐ கண்டு பிடிக்க வேண்டும்.

கெப்ளரின் 3ஆம் விதிப்படி இக்கணக்கைச்
செய்து விடை காணலாம்.
விடை: 129 நாள் ஆகும்.

ஆக, தூரம் பாதியாகக் குறைந்தால், பூமி
சூரியனைச் சுற்றி வர 129 நாள் ஆகும்.
இக்கணக்கு
IIT JEE தேர்வில் பல ஆண்டுக்கு முன்பு
கேட்கப்பட்ட கேள்வி.
*************************************

வள்ளலாரின் கற்பனாவாதம்!
--------------------------------------------
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்னும் 
முழக்கத்தால் அறியப்படும் வள்ளலார் இந்து மதத்தைச் 
சேர்ந்த ஓர் ஆன்மிகவாதி. ஒரு சிலர் சித்தரிப்பது 
போல் வள்ளலார் கடவுள் மறுப்பாளரோ அல்லது 
சனாதன எதிர்ப்பாளரோ அல்லர்.

ஜீவகாருண்யம் வள்ளலார் வலியுறுத்திய ஒழுக்கம்.
புலால் மறுத்தல், பெண்ணாசையை மறத்தல் ஆகிய 
நெறிகளை மக்களுக்கு அவர் போதித்தார்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
உத்தமர்தம் உறவு வேண்டும் 
என்று தொடரும் பாடலில் 
மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும் 
என்று ஆண்களுக்கு உபதேசித்தார் வள்ளலார்.  

சமுகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று 
வள்ளலாருக்கு ஒரு விருப்பம் இருந்தது. தமது 
விருப்பத்தை நிறைவேற்ற அவர் திட்டம் 
எதையும் வகுக்கவில்லை. உருப்படியான 
நடைமுறை சாத்தியமான வழிவகை எதையும் 
கூறவில்லை. 

மாறாக பெண்ணாசையை மறத்தல், புலால் மறுத்தல், 
ஜீவகாருண்யம் ஆகியவற்றையே கூறினார். அவர் 
விரும்பிய சமூக அமைதி அவருடைய wishful thinking
மட்டுமே. இவ்வாறு கற்பனாவாதத்தில் மூழ்கிக் 
கிடந்தார் வள்ளலார்.

வள்ளலாரோ அவரின் போதனைகளோ சமூக மாற்றத்துக்குப் 
பயன்படும் என்று கருதுவது பேதைமையுள் எல்லாம் 
பேதைமை. வள்ளலார் நல்லவர். ஆனால் கற்பனாவாதி.

காரல் மார்க்சையம் அவரின் தத்துவத்தையும் 
கைகழுவி விட்ட கபோதிகள் வள்ளலாரிடம் போய் 
அடைக்கலம் தேட முயல்கிறார்கள். அந்தோ பரிதாபம்!
-------------------------------------------------------------------------------    

 சந்திரயான்-2வின் 47 நாள் பயணம் ஏன்? (reprint)
---------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
நிலவின் மீது மிக மென்மையாகத் தரையிறங்கப் 
போகிறது சந்திரயான்-2. ஒரு குழந்தையைத் 
தொட்டிலில் கிடத்துவது போன்ற மென்மையான 
நிகழ்வு இது. இதுவரை கவிஞர்களின் ஆளுகையில் 
இருந்து வந்த நிலவு தற்போது விஞ்ஞானிகளின் 
ஆளுகைக்குள் வந்து விட்டது.

சந்திரயான்-2 திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் 
இரண்டு பெண் விஞ்ஞானிகள் இருந்து வரலாறு 
படைக்கின்றனர். முத்தையா வனிதா திட்ட 
இயக்குனராகவும் (project director), ரித்து கரிதால் 
மிஷன் இயக்குனராகவும் (mission director) பொறுப்பேற்று  
இஸ்ரோவுக்குப் பெருமை சேர்க்கின்றனர்.

ஒன்றில் மூன்று!
--------------------------
சந்திரயான்-2 தன்னுள் மூன்று நோக்கங்களைக் 
கொண்ட ஒரு ஒன்றில் மூன்று திட்டம் 
(three in one mission). 
சந்திரனைச் சுற்றி வரப்போகும் ஒரு கோள்சுற்றி 
(orbiter), சந்திரனில் தரையிறங்கும் ஒரு தரையிறங்கி 
(lander), சந்திரனின் தரையில் சிறிது தூரம் நடந்து 
சென்று ஆராயும் ஒரு நடைவண்டி (rover) ஆகிய
மூன்றும் அடங்கிய திட்டமே சந்திரயான்-2 ஆகும்.

இந்திய விண்வெளித் துறையின் தந்தையாகக் 
கருதப்படும் விக்ரம் சாராராய் நினைவாக 
தரையிறங்கிக்கு (lander) விக்ரம் என்று பெயர் 
சூட்டப் பட்டுள்ளது. நடைவண்டிக்கு (rover) 
பிரக்ஞான் என்று பெயர். இதற்கு ஞானம் 
என்று பொருள்.

சந்திரயான்-2ன் மொத்தச் செலவு ரூ 978 கோடி 
மட்டுமே (142 மில்லியன் அமெரிக்க டாலர்). 
பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களின் செலவை
விட இது மிகவும் குறைவாகும். 2017ல் வெளிவந்த 
உலகப்புகழ் பெற்ற கிறிஸ்டோபர் நோலன் 
இயக்கிய டன்கிர்க் (Dunkirk) திரைப்படத்தின் 
செலவு 150 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 
இது சந்திரயானின் செலவை விட ரூ 50 கோடி  
அதிகம். பிரசித்தி பெற்ற அவஞ்சர்ஸ் எண்ட் கேம் 
(Avengers End Game) படத்தின் செலவு 356 மில்லியன் 
அமெரிக்க டாலர்; அதாவது ரூ 2443 கோடி ஆகும். 

சந்திரயானின் செலவைப் போல் இது இரண்டரை 
மடங்கு அதிகம் ஆகும்

செலுத்து வாகனம்!
----------------------------
சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 384,400 கிமீ 
மட்டுமே. சந்திரனில் இருந்து புறப்படும் ஒளி  
1.3 வினாடியில் பூமிக்கு வந்து சேர்ந்து விடும்.
சந்திரயான்-2 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 
22 ஜுலை 2019 இந்திய நேரம் 1443 மணிக்கு
(IST 14:43; UTC 09:13) வெற்றிகரமாக விண்ணில் 
செலுத்தப் பட்டது.

ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த ஒரு 
'செலுத்து வாகனம்' (launch vehilcle) வேண்டும். இதுவே 
ஏவுகணை (rocket) என்று மக்களால் அழைக்கப் 
படுகிறது. சந்திரயான்-2ஐ  விண்ணில் செலுத்திய
ஏவுகணை GSLV Mark-III எனப்படும் புவி ஒத்திசைவு 
செலுத்து வாகனம் ஆகும்.

முன்னதாக 2008 அக்டோபரில் சந்திரயான்-1ஐ 
PSLV C-11 என்னும் துருவப்பாதை செலுத்துவாகனமே 
விண்ணில் செலுத்தியது. 2013 நவம்பரில் செவ்வாய்க் கோளைச் சுற்றிய மங்கள்யானை விண்ணில் 
செலுத்தியதும் PSLV XL C-25 என்னும் துருவ வாகனமே.

GSLV தேர்வானது எப்படி?
-------------------------------------
சந்திரயான்-2ஐச் செலுத்த துருவ வாகனத்தைத்  
(PSLV) தவிர்த்து புவி ஒத்திசைவு வாகனத்தை 
(GSLV) இஸ்ரோ தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்குச் சிறப்பான காரணங்கள் உண்டு.

PSLVயானது தாழ்நிலை புவிச் சுற்றுப்பாதையில் 
(Low Earth Orbit)  விண்கலன்களைச் செலுத்தும் 
விதத்தில் இஸ்ரோவால் வடிவமைக்கப் பட்டது. 
பூமியை ஆராயும் செயற்கைக் கோள்களை
(Earth Observation satellites) விண்ணில் செலுத்த 
உருவானது PSLV. தாழ்புவி சுற்றுப்பாதையானது 
2000 கிமீ உயரம் அல்லது அதற்கும் குறைவான 
உயரத்தைக் கொண்டது. இவ்வளவு குறைந்த 
உயரத்தில் சுற்றினால்தான் பூமியை நன்கு 
கூர்நோக்கி அறிய இயலும். தொலைதொடர்பு 
செயற்கைக் கோள்களைப்போல 36,000 கிமீ 
உயரத்தில் சுற்றி வந்தால் பூமியைக் கூர்நோக்கி
அறிய இயலாது.

துருவச் சுற்றுப்பாதையும் (Polar orbit) தாழ்நிலை 
புவிச் சுற்றுப்பாதையே. ஒவ்வொரு சுழற்சியின்போதும் 
சுற்றப்படும் பொருளின் (இங்கு பூமி) இரண்டு 
துருவங்களையும் (pole to pole) செயற்கைக்கோள் 
கடந்து செல்லும் விதத்தில் அமைந்ததே துருவச் 
சுற்றுப்பாதை. PSLVயானது 1750 கிலோகிராம் வரை 
நிறையுள்ள பளுவை (payload) சூரிய ஒத்திசைவு 
துருவச் சுற்றுப்பாதையில்
(SSPO = Sun Synchronous Polar Orbit) செலுத்த வல்லது.


PSLV நான்கு கட்டங்களைக் கொண்டது. முதல் 
கட்டத்திலும் மூன்றாவது கட்டத்திலும் திடநிலை 
எரிபொருளும், இரண்டாம் மற்றும் நான்காம் 
கட்டத்தில் திரவநிலை எரிபொருளும் கொண்டது.
PSLVயில் கிரையோஜெனிக் எஞ்சின் இல்லை.

GSLVயானது கிரையோஜெனிக் என்ஜினைக் 
கொண்டது. அதிகமான நீள்வட்டத் தன்மை கொண்ட 
(highly elliptical) சுற்றுப்பாதையில் (250 x 36,000 கிமீ) செயற்கைக்கோள்களைச் செலுத்த வல்லது.

சந்திரயான்-2ஐ விண்ணில் செலுத்திய 
GSLV Mark-III என்னும் செலுத்து வாகனம் மூன்று 
பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி திடநிலை 
எரிபொருளால் இயங்குவது. இரண்டாம் பகுதி
திரவநிலை எரிபொருளாலும், மூன்றாம் பகுதி 
கிரையோஜெனிக் எரிபொருளாலும் இயங்குவதாகும். 
செலுத்து வாகனமும் செயற்கைக்கோளும் சுதேசித் 
தொழில்நுட்பத்தால் இஸ்ரோவால் தயாரிக்கப் 
பட்டவை.

GSLV Mark-IIIயானது 4000 கிலோகிராம் நிறையுள்ள 
பளுவை (payload) புவி ஒத்திசைவு இடமாற்றப் 
பாதையில் (GTO = Geosynchronous Transfer Orbit) 
செலுத்த வல்லது.

துருவச் சுற்றுப்பாதையில் விண்கலன்களைச் 
செலுத்தும் நோக்கில்தான் PSLV உருவாக்கப் பட்டது. 
எனினும் அதன் திறன் மற்றும் நம்பகத் தன்மை 
காரணமாக புவி ஒத்திசைவுச் சுற்றுப் பாதையிலும் 
(Geosynchronous), புவிநிலைப்புச் சுற்றுப் பாதையிலும் 
(Geostationary) குறைந்த நிறையுள்ள பளுக்களைச்
செலுத்த (1425 கிகி வரை) இது பயன்படுத்தப் பட்டது.

சந்திரயான்-2ல் உள்ள கோள்சுற்றி 2379 கிகி 
நிறையுள்ளது. விக்ரம் தரையிறங்கி 1471 கிகி 
நிறையுடனும், பிரக்ஞான் நடைவண்டி 27 கிகி 
நிறையுடனும் உள்ளன. இம்மூன்றும் சேர்ந்து 
3877 கிகி நிறையைக் கொண்டுள்ளன. PSLVயானது
1425 கிகி நிறை வரையுள்ள பளுவை மட்டுமே 
கையாள வல்லது. எனவேதான் இஸ்ரோ 
GSLVஐ தேர்ந்தெடுத்தது.

ஏவுகணை நாயகன்!
----------------------------------
இஸ்ரோ இதுவரை 105 விண்வெளி ஆய்வுத் 
திட்டங்களை (spacecraft missions) மேற்கொண்டு 
அவற்றுக்கான செயற்கைக் கோள்களை விண்ணில் 
செலுத்தி உள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைச் 
சேர்ந்தவை. மேலும் 33 நாடுகளின் 297 செயற்கைக் 
கோள்களையம் விண்ணில் செலுத்தி உள்ளது. 
இவை தவிர, சந்திரயான், மங்கள்யான் போன்ற 
பளுவுடன் கூடிய (payload launch missions) 75 ஆய்வு விண்கலன்களையும் மாணவர்களின்
10 செயற்கைக் கோள்களையம் விண்ணில் 
செலுத்தி உள்ளது.

ஆனால் 1975ல் நமது முதல் செயற்கைக்கோளான 
ஆர்யபட்டாவை நம்மால் விண்ணில் செலுத்த 
இயலவில்லை. அதற்கான செலுத்து வாகனம் 
நம்மிடம் இல்லாமல், ரஷ்யாவின் உதவியுடன்
ரஷ்ய விண்வெளித் தளத்தில் இருந்து 
செலுத்தினோம்.

நமது இரண்டாம் செயற்கைக்கோளான 
பாஸ்கராவும் ரஷ்ய உதவியுடன்தான் 
செலுத்தப்பட்டது. இதன் பின்னரே நமது
சொந்த முயற்சியில் பல்வேறு செலுத்து 
வாகனங்களைத் தயாரித்தோம். இன்று 
வெளிநாடுகளின் செயற்கைக்
கோள்களை நாம் விண்ணில் செலுத்தும் அளவுக்கு
வளர்ந்து இருக்கிறோம். இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட
விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், இந்தியாவின்
ஏவுகணை நாயகன் (missile man) டாக்டர் 
அப்துல் கலாம் ஆகியோரை இத்தருணத்தில் 
நினைவு கூர்வோம்.

உலக சாதனை!
------------------------
பெப்ரவரி 2017ல் இஸ்ரோ ஓர் உலக சாதனையை 
நிகழ்த்தியது. ஒரே செலுத்து வாகனத்தின் மூலம் 
104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. 
இவை PSLV C-37 மூலம் செலுத்தப்பட்டன.
இந்த சாதனையை இன்று வரை யாரும் 
முறியடிக்கவில்லை.

முன்னதாக 2014ல் ரஷ்யா ஒரே முறையில் 
37 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி 
இருந்தது. ரஷ்ய சாதனையை எளிதில் முறியடித்தது 
இந்தியா. ஒரு காலத்தில் செயற்கைக்கோளைச்
செலுத்துவதற்கான ஏவுகணை இல்லாமல் ரஷ்ய 
உதவியை நாடிய இந்தியா இன்று ரஷ்ய சாதனையை 
முறியடித்திருக்கிறது. விண்வெளித் துறையில் 
இந்தியாவின் அசுர வளர்ச்சியை இது காட்டுகிறது.

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற எலான் மஸ்க் 
(Elon Musk)  ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்னும் தனியார் 
விண்வெளி நிறுவனத்தின் தலைவர். மின்சாரக் 
கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின்
தலைவரும் இவரே. அமெரிக்காவில் தனியாருக்கும் 
செயற்கைக் கோள்களைத் தயாரிக்கவும் விண்ணில் 
செலுத்தவும் அனுமதி உண்டு. இவரின் ஸ்பேஸ் எக்ஸ் 
நிறுவனம் மே 2019ல் ஒரே செலுத்து வாகனத்தின் 
மூலம் ஒரே முறையில் 60 செயற்கைக் கோள்களை 
விண்ணில் செலுத்தி உள்ளது. என்றாலும் இவராலும் 
இன்று வரை இஸ்ரோவின் சாதனையை முறியடிக்க 
இயலவில்லை.

வட்டப்பாதையில் சுற்றுதல்!
-------------------------------------------
சந்திரயான்-2ன் கோள்சுற்றியின் (orbiter) வாழ்நாள் 
ஓராண்டு ஆகும். இந்த ஓராண்டு காலமும் இது 
சந்திரனைச் சுற்றி வந்து முப்பரிமாண படங்களை 
எடுக்கும். இதில் 8 அறிவியல் கருவிகள் வைக்கப்பட்டு 
உள்ளன.இது சந்திரனை 100 x 100 கிமீ என்ற துருவச் 
சுற்றுப்பாதையில் (lunar polar orbit)  சுற்றி வரும். 

சந்திரனுக்கு அருகில் வரும்போது 100 கிமீ தூரமும் 
(periselene), சந்திரனை விட்டு அப்பால் செல்லும்போதும் 
100 கிமீ தூரமும் (aposelene) கொண்டது இந்தச்
சுற்றுப்பாதை. உண்மையில் இது மையப்பிறழ்ச்சி 
பூஜ்யம் கொண்ட (eccentricity = 0) வட்டச் சுற்றுப் 
பாதையே ஆகும்.

இந்த இடத்தில் சந்திரயான்-1 நவம்பர் 2008ல் இதே 
போன்ற துருவச் சுற்றுப்பாதையில் சந்திரனைச் 
சுற்ற ஆரம்பித்தபோது எப்படிச் சுற்றியது 
என்பதைப் பார்ப்போம்.

அப்போது 200 x 200 கிமீ அளவுள்ள சுற்றுப்பாதையில் 
அது சுற்றியது. தற்போது சந்திரயான்-2 சந்திரனை 
முன்பை விட 100 கிமீ நெருங்கி 100 x 100 கிமீ  
அளவுள்ள வட்டச் சுற்றுப்பாதையில் சுற்றப் 
போகிறது. எனவே இது எடுக்கும் படங்களும் 
மேற்கொள்ளும் ஆய்வுகளும் முன்பை விடத் 
துல்லியமாக இருக்கும்.  

மென்மையான தரையிறக்கம்!
------------------------------------------------
விக்ரம் சந்திரனின் தென் துருவத்தில் 
மென்மையாகத் தரையிறங்கப் போகிறது. இந்த 
மென்மைத் தரையிறக்கம் (soft landing) முக்கியத்துவம் 
வாய்ந்தது.இதுவரை மூன்று நாடுகள் மட்டுமே 
(ரஷ்யா, அமெரிக்கா, சீனா) இவ்வாறு வெற்றிகரமாக 
மென்மைத் தரையிறக்கம் செய்துள்ளன. 

செப்டம்பர் 7ஆம் தேதியன்று விக்ரம் சந்திரனில் 
மென்மையாகத் தரையிறங்கத் திட்டமிடப் 
பட்டுள்ளது. இறங்கியதும் அறிவியல் பரிசோதனை 
செய்வதற்காக விக்ரமில் நான்கு கருவிகள் 
வைக்கப் பட்டுள்ளன.

சந்திரயான்-1 சந்திரனைச் சுற்றி வருவதை மட்டுமே 
முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது. அதில் 
இருந்த ஒரு கருவி (moon impact probe) சந்திரனின் மீது
வேகமாக மோதித் தரையிறங்கியது. இது மோதி 
இறங்குவதாகும் (crash landing). இது எளிது. ஆனால் 
மெதுவாகத் தரையிறங்குவது சிக்கலானது.
இது திகில் நிறைந்த 15 நிமிடங்களைக் கொண்டது  
என்கிறார் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன்.

பூமியின் துருவப் பகுதிகள் போன்றே சந்திரனின் 
துருவப் பகுதிகளும் அதீத வெப்பநிலைக்கு 
ஆட்படாமல் இருப்பதால், பிற பகுதிகளை விட  
துருவப் பகுதிகளை ஆராய்வது சந்திரனைப் பற்றிய 
உண்மைகளை . வெளிக் கொணரும். சந்திரனின் 
வட துருவத்தை விட தென் துருவம் அதிகமாக 
நிழலில் மூழ்கி இருக்கும் பகுதி. இங்கு நிரந்தர 
நிழல் பிரதேசங்கள் நிறையவே உண்டு;  எனவே 
தென்துருவப் பகுதியில் தரையிறங்குகிறது விக்ரம்.

சந்திரனின் தென்துருவத்தில் விக்ரம் எங்கே 
தரையிறங்கும்? இதற்காக இரண்டு இடங்களை 
இஸ்ரோ தெரிவு செய்துள்ளது. இவை இரண்டும்
32 x 11 கிமீ அளவுள்ள நீள்வட்டங்கள் ஆகும். 
இவ்விரண்டில் எதில் தரையிறங்குவது என்று 
சந்திரனின் துருவச் சுற்றுப்பாதையில்
கோள்சுற்றியானது நிலைநிறுத்தப்பட்ட பின்னர் 
இஸ்ரோ முடிவு செய்யும்.

விக்ரமின் வாழ்நாள் ஒரு சந்திர நாள் (one lunar day) 
மட்டுமே. இது பூமியின் 14 நாட்களுக்குச் சமம். 
சந்திரனில் பகல் அதிக வெப்பமாகவும் இரவு 
அதிகக் குளிராகவும் இருக்கும். பகலில்
127 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இரவில் 
மைனஸ் 173 டிகிரி செல்சியஸ் குளிரும் இருக்கும் 
(சற்றுத் தோராயமாக).

 சந்திரனின் தரையில் பரிசோதனை!
---------------------------------------------------------
விக்ரம் தரையிறங்கிய பின், அதிலிருந்து பிரக்ஞான் 
நடைவண்டி (rover) வெளிக்கிளம்பும். சந்திரனின் 
தரையில் அரை கிமீ தூரம் வரை இந்த ஆறு சக்கர 
வண்டியால் நடந்து செல்ல இயலும்.

இதில் அறிவியல் பரிசோதனைக் கருவிகள் 
இரண்டு வைக்கப்பட்டு உள்ளன. விக்ரமும் 
பிரக்ஞானும் நிலவின் தரையிலேயே 
பரிசோதனைகளை மேற்கொள்ளும் (in situ experiments). 
தரையிறங்கிய இடத்திலேயே பரிசோதனைகளைச் 
செய்வது பூமியில் செய்யும் பரிசோதனைகளை 
விடத்  துல்லியமானது.

சந்திரயானின் கோள்சுற்றியும், விக்ரம் 
தரையிறங்கியும் பெங்களூருக்கு அருகில் உள்ள 
பைலாலு (Byalalu) என்ற ஊரில் உள்ள ஆழ்வெளி 
மையத்துடன் (IDSN = Indian Deep Space Network)
தொடர்பு கொள்ளும். அங்கிருந்து கட்டளைகளைப் 
பெறும். பிரக்ஞான் நடைவண்டியால் விக்ரமுடன் 
மட்டுமே தொடர்பு கொள்ள இயலும். இவ்வாறு 
விண்ணில் பறக்கும் சந்திரயானை
பூமியில் இருந்தே வழிநடத்துகிறோம்.

நிலவில் தண்ணீர்!
---------------------------
நவம்பர் 14, 2008ல் சந்திரயான்-1ல் இருந்த கருவியானது
(Moon Impact Probe) நிலவில் மோதி நிலவின் தரையின் 
கீழ்ப்பரப்பில் உள்ள மண்ணை (subsurface debris) 
அள்ளிக் கொண்டு வந்தது. இதைப் பகுத்தாய்ந்து, 
சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதைக் 
கண்டறிந்தது. எனினும் குளம் அல்லது ஏரியில் 
தண்ணீர் இருப்பது போல நிலவிலும் தண்ணீர் 
இருக்கிறது என்று இதற்குப் பொருள் கொள்ளக் 
கூடாது. நிலவில் தண்ணீர் திரவ நிலையில் இல்லை. 
ஆனால் உறைந்த நிலையில் இருப்பதை சந்திரயான்-1 
கண்டறிந்தது.

உறைந்த நிலையில் தண்ணீர் என்பதன் பொருள் 
நம் வீட்டில் உள்ள குளிர்பதனப் பெட்டியில் தண்ணீர் 
உறைந்து பனிக்கட்டியாக இருப்பது போன்றதல்ல. 
ரஷ்யாவில் உள்ள சைபீரியா பனிப்பாலைவனப் 
பகுதியில் நிலத்தடி உறைபனியாக (permafrost) 
தண்ணீர் உள்ளது. இது போலவே நிலவிலும் 
நிலத்தடி உறைபனியாக தண்ணீர் இருக்கக்கூடும்

அல்லது தண்ணீர் தனித்து இல்லாமல் ஏதேனும் 
கனிமங்களுடன் கலந்து உறைந்து அந்தக் 
கனிமமாகவே மாறிப்போன நிலையிலும்
இருக்கக்கூடும். உதாரணமாக ஆபடைட் (apatite) 
என்னும் பாஸ்பேட் குழுவைச் சேர்ந்த கனிமத்தில் 
ஹைடிராக்சில் அயனிகள் (hydroxyl ions) உள்ளன. 
இந்த வடிவிலும் தண்ணீர் இருக்கக் கூடும்.

47 நாள் நீண்ட பயணம்!
---------------------------------------
முதன் முதலில் சந்திரனில் மென்மையாகத் 
தரையிறங்கிய பெருமை அன்றைய சோவியத் 
ஒன்றியத்துக்கு (இன்றைய ரஷ்யா) உரியது. 
சோவியத்தின் லூனா 9 என்ற விண்கலன் 
31 ஜனவரி 1966ல் புறப்பட்டு, 3 பெப்ரவரி 1966ல் 
சந்திரனில் தரை இறங்கியது. இதற்கு வெறும் 
80 மணி நேரமே ஆனது.

இதற்கு நான்கு மாதம் கழித்து, அமெரிக்காவின் 
சர்வேயர் 1 என்ற விண்கலன் 1966 மே 30ல் புறப்பட்டு  
1966 ஜூன் 2ல் சந்திரனில் மென்மையாகத் தரை 
இறங்கியது. இதற்கு 63 மணி 30 நிமிடம் ஆனது.

சீனா 2013ல் முதன் முறையாக சந்திரனில் 
மென்மையாகத் தரை இறங்கியது. சாங்கே 3 
விண்கலன் இதற்கு 14 நாள் எடுத்துக் கொண்டது 
( 1 டிசம்பர் 2013 முதல் 14 டிசம்பர் 2013 வரை).

ஆனால் ஜூலை 22, 2019ல் புறப்பட்ட இந்தியாவின் 
சந்திரயான்-2  செப்டம்பர் 7ல் சந்திரனில் 
தரையிறங்கத் திட்டமிட்டு உள்ளது. இது
47 நாள் கொண்ட நீண்ட பயணம் ஆகும். 
மற்ற நாடுகள் 64 மணி நேரத்திலும் 80 மணி 
நேரத்திலும் சந்திரனில் தரை இறங்கும்போது 
இந்தியா ஏன் 47 நாட்கள் எடுத்துக் கொள்கிறது?

இதற்கு ஒரே காரணம் பணம்தான்! நம்பவே முடியாத 
அளவு குறைந்த செலவில் இந்தியா இத்திட்டத்தைச் 
செயல்படுத்துகிறது. அமெரிக்காவின்
செலுத்துவாகனமான Saturn V அளவில் பெரியது; 
110 மீட்டர் உயரமும் 3000 டன் நிறையும் கொண்டது. 
பெரும் பொருட் செலவில் உருவாக்கப் பட்டது. 

இந்தியாவின் GSLV Mark III 43.4 மீ உயரமும் 640 டன் 
நிறையும் கொண்டது. வல்லவனுக்குப் புல்லும் 
ஆயுதம் என்பது போல குறைந்த செலவில் 
நிறைந்த சாதனைகளைப் படைக்கிறது இந்தியா.
****************************************************















               

வியாழன், 13 ஜூலை, 2023

 கணக்கின் விடையும் விளக்கமும்:

---------------------------------------------
விடை: அந்த எண்கள்: 5, 8, 12.

விளக்கம்:
------------------
இந்தக் கணக்கு எப்படி IIT கேள்வித்தாளில்
இடம்பெற்றது என்று வாசகர்கள்
வியப்படையலாம்.

ஆனால், அன்று 1983இல் AP,GP பாடங்கள்
11ஆம் வகுப்பில்தான் இருந்தன.
இன்று அவை 10ஆம் வகுப்பிலேயே
இடம் பெற்றுள்ளன.

AP, GP யின் பண்புகள் இந்தக்
கணக்கின் விடைகாணப்
பயன்படுகின்றன. இதோ பாருங்கள்:

3,4,5,..... என்பது ஓர் AP. இங்கு நடுவில்
உள்ள 4 = (5+3)/2 என்பது ஒரு AP யின்
பண்பு. எனவே இதை வைத்து ஒரு
சமன்பாட்டை உருவாக்குகிறோம்.

அடுத்து, 10, 100, 1000,.....என்ற GPயைக்
கருதுக. இங்கு நடுவில் உள்ள 100இன்
வர்க்கம் = 100^2 = 10 x 1000 என்பதைக்
கருதுக. இதைக் கொண்டு
ஒரு சமன்பாட்டை அமைக்கலாம்.

தற்போது 3 சமன்பாடுகள் உள்ளன.
1) a+b+c = 25
2) 2a = b +2
3) c ^2= 18 b

இவற்றைத் தீர்த்தால், a, b, c = முறையே 5, 8, 12 என்ற
விடை கிடைக்கிறது.
-----------------------------
இஸ்ரோ விஞ்ஞானிகளும் 
குட்டி முதலாளித்துவத் தற்குறிகளும்!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------

செவ்வாய், 11 ஜூலை, 2023

 சந்திரயான்-2: உயிருடன் இருக்கும் விக்ரம்

------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன்

நியூட்டன் அறிவியல் மன்றம் 

(அறிவியல் ஒளி அக்டோபர் 2019 இதழில் வெளியானது) 

---------------------------------------------------------------------

அந்த செப்டம்பர் வெள்ளியன்று இரவு உலகமே 

விழித்துக் கொண்டிருந்து சந்திரயான் நிலவில் 

தரைஇறங்குவதைக் காணக் காத்திருந்தது. 

ஆனால் விக்ரம் லேண்டர் நிலவில்

தரையிஏங்கும் முன்பே, அதில் இருந்து 

சமிக்ஞைகள் வருவது நின்று விட்டது. 

மென்தரையிறக்கம் (soft landing) நிகழவில்லை, 

விக்ரம் திட்டமிட்ட பாதையை விட்டு 

விலகி விட்டது.     


விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் 

நிகழ்வு 15 நிமிட நிகழ்வு ஆகும். இதை 

15 நிமிட பயங்கரம் என்று இஸ்ரோ தலைவர் 

சிவன் குறிப்பிட்டார்.


நமது பூமிக்கு வளிமண்டலம் (atmosphere) உண்டு. 

ஆனால் சந்திரனுக்கு வளிமண்டலம் எதுவும் 

கிடையாது. அதாவது சந்திரனில் காற்று 

கிடையாது. பொருட்களை எரிய வைக்கும் 

ஆக்சிஜன் கிடையாது. வளிமண்டலம்

உள்ள கோள்களில் இறங்கும் முறை வேறு; 

வளிமண்டலமே இல்லாத சந்திரனில் 

இறங்கும் முறை வேறு.


எதிர்த்திசையில் இயக்கப்படும் ராக்கெட்

(retro rocket firing) என்ற முறையில்தான் 

உயரத்தில் இருந்து கீழே தரையில் 

இறங்க வேண்டும்.


நாம் எந்த திசையில் செல்ல வேண்டுமோ 

அதற்கு எதிர்த்திசையில் ராக்கெட்டை இயக்க 

வேண்டும். அதாவது கீழே இறங்க 

வேண்டுமென்றால் மேல் நோக்கி

ராக்கெட்டை இயக்க வேண்டும்.


தரையிறங்கும் நிகழ்வின் திட்டம் இதுதான்.

விக்ரம் லேண்டர் 30 கிமீ உயரத்தில் இருந்து 

நிலவில் தரையிறங்க வேண்டும்.  

திட்டமிட்டபடி, முதல் 10 நிமிடங்களில்

இது நிகழ்ந்து, உயரம் 7.4 கிமீ ஆகக் குறைந்து 

விட்டது. லேண்டரின் வேகம் இப்போது 

526 கிமீ/மணி.


11 நிமிடம் 8 வினாடிகளில் உயரம் மேலும் 

குறைந்து 5  கிமீ ஆகி விட்டது. இப்போது 

லேண்டரின்  வேகம் 331.2 கிமீ/மணி.


அடுத்த 2 நிமிடத்திற்குள் உயரம் 400 மீட்டராகக்

குறைய வேண்டும். அதன் பிறகு 100 மீட்டராகக் 

குறைந்து, இறுதிக் கட்டத்தில் 10 மீட்டர் 

உயரத்தில் இருந்து கொண்டு கிடைமட்ட 

திசைவேகத்தை பூஜ்யமாக ஆக்கிக் கொண்டு

மென்மையாகத் தரையிறங்க வேண்டும். 

ஆனால் 400 மீட்டர் என்ற கட்டத்தையே

லேண்டர் அடையவில்லை. மாறாக 5 கிமீ   

உயரத்தில் இருந்து 2.1 கிமீ உயரத்துக்கு 

குறைந்து விட்டபோது   விக்ரமில் இருந்து 

சமிக்ஞைகள் வருவது நின்று விட்டது.


ஆக, 15 நிமிடங்களில், 12 நிமிட நேரம் வரை 

எல்லாம் சரியாக இருந்து, அதன் பிறகு 

சிக்கல் நேரிட்டு உள்ளது. அதாவது கடைசி 

மூன்று நிமிடங்களில் எல்லாம்

கைமீறிப் போய் உள்ளது.


ஆயின், லேண்டருக்கு என்ன நேர்ந்திருக்கும்?

ஈர்ப்பு விசைக் கோட்பாட்டின்படி, நிலவின் 

தரையில் இருந்து .2.1 கிமீ உயரத்தில் உள்ள 

லேண்டரை நிலவானது தன்னை நோக்கி ஈர்க்கும்.


லேண்டரின் நிறை  = 1498 கிலோகிராம்

நிலவின் நிறை = 7.342 x 10^22 கிலோகிராம்

இரண்டுக்கும் இடையிலான தூரம் = 2.1 km

நியூட்டனின் எதிர்மறை வர்க்க விதிப்படி

(inverse square law of gravitation), விக்ரமை தன்னை 

நோக்கி இழுக்கும் நிலவின் ஈர்ப்பு விசையை

GMm/r^2 என்ற சூத்திரத்தின் மூலம் கணக்கிடலாம்.


விக்ரமுக்கும் நிலவுக்கும் இடையில் ஈர்ப்பு 

விசை தவிர வேறெந்த விசையும் செயல்பட 

வாய்ப்பில்லை. ஏனெனில் நிலவில் வளிமண்டலம் 

இல்லை. எனவே 1498 கிகி என்ற அற்ப நிறையுள்ள 

விக்ரமை, 10^22 என்ற அளவில் நிறையுள்ள

நிலவானது தன்னைநோக்கி இழுப்பதில் வெற்றி 

அடைந்திருக்கும். எனவே விக்ரமானது நிலவில் 

தரையிறங்குவதைத் தவிர அதாவது 

நிலவின் தரையில் விழுவதைத் தவிர வேறு 

வழியில்லை.


திட்டமிட்டபடி மென்மையான தரையிறக்கம் 

நிகழவில்லை. ஆனாலும் விக்ரம் நிலவின் 

தரையில் விழுந்து கிடக்கிறது.


நாற்காலிக்கு நான்கு கால்கள் இருப்பது போல

விக்ரமுக்கும் நான்கு கால்கள் உண்டு.

ஒரு நாற்காலி தரையில் இருப்பது போல,

அந்த நிலையில் விக்ரம் நிலவின் தரையில்

இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை.


அப்படியானால் தலைகீழாக, நான்கு கால்களும்

மேலே தூக்கிய நிலையில் விக்ரம் விழுந்து 

கிடக்கிறதா?


இல்லை. 180 டிகிரி கோண மாற்றத்துடன் விக்ரம்

விழுந்தால் மட்டுமே கால்கள் மேல்நோக்கிய 

நிலையில் விழ முடியும். அப்படி விழவில்லை 

என்று அனுமானிக்கலாம்.


ஒரு டிரப்பீசியத்தின் வடிவில் விக்ரமின்

உடல் அமைந்துள்ளது. 90 டிகிரிக்குக் குறைவான

ஒரு குறுங்கோணத்தை அது நிலவின் தரையுடன்

ஏற்படுத்திய நிலையில் விழுந்து கிடக்கக் கூடும்.

இஸ்ரோ கூறுவதன்படி, விக்ரம் எந்த நொறுங்கலும்

இல்லாமல், உடையாமல், முழுசாக இருக்கிறது

என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்த நிலையில் விக்ரம் தொடர்ந்து இயங்கத்

(either partially or wholly) தேவையான மின்சக்தி 

கிடைக்க வாய்ப்பு உள்ளது. விக்ரமில் அதன் 

உடலில் பாட்டரி (inbuilt battery) உள்ளது. மேலும் 

அதில் உள்ள சூரியத் தகடுகள்

சூரிய ஒளியைப் பெற வாய்ப்பு உள்ளது. 

எனவே விக்ரம் . உயிருடன் இருக்கும். 

தொடர்ந்து இயங்கும்.


விக்ரம் பிறழ்ந்த நிலையில் இருப்பதால், அதில்

இருந்து ரோவர் வெளிவருவது கடினம். விக்ரமில்

உள்ள சரிவுப் பாதை (ramp) தடங்கலுக்கு

உள்ளாகி இருப்பதால், அது முறையாகத் 

திறக்கப்பட்டு பிரக்யான் ரோவர் வெளியே 

வரும் வாய்ப்பு குறைவு.

 

இப்படி விக்ரம் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும்

அதிலிருந்து சமிக்ஞைகள் வராவிட்டால், நமக்கு

எந்தப் பயனும் இல்லை. விக்ரமின் ஆயுள்காலம்

பூமிக் கணக்குப்படி 14 நாள்தான். அதன் பிறகு

நிலவில் இருளும் குளிரும் வரத் தொடங்கும்.

சூரியத் தகடுகள் வேலை செய்யாது.விக்ரமின்

ஆயுள் முடிந்து விடும்.


எனவே 14 நாளுக்குள் தகவல் தொடர்பைக்

சீரமைக்க முடிந்தால் நல்லது. இல்லையேல்

லேண்டர் மற்றும் ரோவரால் பயன் இல்லாமல்

போகும்.


நிலவின் தரையில் கிடக்கும் விக்ரம் லேண்டரின்

தெர்மல் இமேஜ் கிடைத்துள்ளது என்கிறார் டாக்டர் சிவன்.

தெர்மல் இமேஜ் (thermal image) என்றால் என்ன?

உங்களிடம் உள்ள காமிராவைக் கொண்டு

தெர்மல் இமேஜ் படங்களை எடுக்க முடியாது.

அதற்கு அகச்சிவப்பு காமிரா (infra red) வேண்டும்.

நம்மிடம் உள்ள வழக்கமான காமிரா (optical camera)

காணத்தக்க ஒளியைப்  (visible light)

பயன்படுத்திப் படம் எடுக்கிறது.

அகச்சிவப்பு (Infra red) காமிராவானது அகச்சிவப்புக் 

கதிர்களைப் பயன்படுத்திப் படங்களை எடுக்கிறது.

காணத்தக்க ஒளி (visible light) என்பது 400 முதல் 700

நானோமீட்டர் என்ற அலைநீளத்தில் இருக்கும்.

அகச்சிவப்பு ஒளி என்பது 700 நானோ மீட்டர் முதல்

1 மில்லி மீட்டர் வரையிலான அலைநீளம் 

கொண்டிருக்கும்.


ஹெர்ஸ்ச்செல் (William Herschel) என்னும் பிரிட்டிஷ் 

வானியலாளர்தான்  அகச்சிவப்புக் கதிர்களைக் 

கண்டு பிடித்தவர்.

ஒரு அகச்சிவப்புப் படம் என்பது பல

வண்ணங்களைக் கொண்டதாக இருக்கும்.

வெப்பநிலையைப் பொறுத்து வண்ணங்கள் வேறுபடும்.

இவ்வாறு வெப்பநிலையைப் பொறுத்து வண்ணங்கள்

வேறுபட்ட படமே அகச்சிவப்புப் படம் ஆகும்.

இதைத்தான் டாக்டர் சிவன் தெர்மல் இமேஜ் என்கிறார்.

நிலவை வெற்றிகரமாகச் சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்த 

படமான தெர்மல் இமேஜ் மூலம் விக்ரம் லேண்டர் 

நிலவின் தரையில் விழுந்து கிடப்பது உறுதி செய்யப் 

பட்டுள்ளது.


தரையிறங்குவதில் பின்னடைவு ஏற்பட்டிருந்த போதிலும் 

மொத்தத்தில் சந்திரயான் திட்டம் வெற்றியே! 

யானை படுத்தாலும்  குதிரை மட்டம் அல்லவா! 

ஆர்பிட்டரின்  ஆயுளை மேலும் ஓராண்டு நீடிக்கச் 

செய்வதன் மூலம்  இந்தப் பின்னடைவை ஈடு கட்டலாம்.

***********************************************************