திங்கள், 31 மே, 2021

 மார்க்சியமும் ஹோமியோபதியும் ஒன்றுக்கொன்று 

எதிரானவை. ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.

இவ்விரண்டுக்கும் இடையிலான முரண்பாடு பகைத் 

தன்மை வாய்ந்த முரண்பாடு (antagonistic contradiction).

பகை முரண்பாடாக இருக்கின்ற காரணத்தால்,

இவை இரண்டும், அதாவது, மார்க்சியமும் 

ஹோமியோபதியும் ஒன்றையொன்று அழிக்க 

முனையும். இவ்விரண்டில் எது சரியானதா, எது 

அறிவியல்பூர்வமானதோ அது மட்டுமே வெல்லும். 

மற்றது அழிந்து ஒழிந்து போய்விடும்.


மார்க்சியம் நூறு சதமும் அறிவியல்பூர்வமானது.

ஹோமியோபதி ஒரு போலி அறிவியல். எனவே 

மார்க்சியத்துக்கும் ஹோமியோபதிக்குமான இந்தச் 

சண்டையில் மார்க்சியம் வெல்லும்; ஹோமியோபதி 

தோற்று அழியும். ஏனெனில் போலி அறிவியலால் 

சரியான அறிவியலான மார்க்சியத்தை ஒருபோதும்

வெல்ல இயலாது. மார்க்சியம் ஒருபோதும் தோற்காது.


ஜெர்மானியத் தத்துவப் பேரறிஞர் ஹெக்கல் என்பவர் 

(Hegel 1770-1831) இயங்கியல் (அல்லது முரண்தர்க்கவியல்)

என்னும் கோட்பாட்டை உருவாக்கினார். எந்த ஒரு 

விஷயத்திலும் உண்மை என்ன என்று கண்டறியப் 

பயன்படும் முறையே இயங்கியல் (dialectics) ஆகும்.


ஹெக்கலின் இயங்கியலைத் திருத்தியும் செப்பனிட்டும் 

மேம்படுத்தியும் மார்க்சிய இயங்கியலை உருவாக்கினர்

மார்க்சும் எங்கல்சும். ஹோமியோபதி மார்க்சிய 

இயங்கியலுக்கு எதிரானது. நோயும் மருந்தும் 

முரண்பட்டவை என்ற அடிப்படை உண்மையையே 

ஏற்றுக் கொள்ள ஹோமியோபதி மறுக்கிறது.


   

 

   


     


 ஹோமியோபதியும் மார்க்சியமும்!

----------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

---------------------------------------------

ஹோமியோபதி இந்த மண்ணின் மருத்துவம் அல்ல.

அது ஜெர்மனி நாட்டில் இருந்து இறக்குமதி 

செய்யப் பட்டது. சாமுவேல் ஹானிமன் 

(Samuel Hahnemann 1755-1843) என்னும் ஜெர்மானிய 

மருத்துவர் ஹோமியோபதியை உருவாக்கினார்.


நோயைக் குணப்படுத்தும் தத்துவம் 

ஹோமியோபதியைப் பொறுத்த மட்டில் 

இதுதான்! அதாவது, மருந்து என்பது நோயை 

ஒத்தது (Let likes be cured by likes).  


ஹோமியோபதியில் இருந்து வேறுபட்ட ஒரு 

தத்துவத்தை நோயைக் குணப்படுத்தும் தத்துவமாகக் 

கொண்டவை இந்தியாவின் ஆயுர்வேதம், 

சித்த மருத்துவம் மற்றும் அல்லோபதி என்னும் ஆங்கில 

மருத்துவம் ஆகிய மூன்றும்.


இவற்றின் நோயைக் குணப்படுத்தும் தத்துவம் 

இதுதான்! அதாவது மருந்து என்பது நோய்க்கு 

எதிரிடையானது என்பதுதான் (Let likes be cured 

by dislikes)     


ஓரிடத்தில் நெருப்பு எரிகிறது. கொழுந்து விட்டு 

எரிகிறது. இதை அணைக்க வேண்டும்.

ஹோமியோபதி என்ன சொல்கிறது? நெருப்பை 

நெருப்பே அணைக்கும் என்கிறது ஹோமியோபதி.


அல்லோபதியும் ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் 

என்ன சொல்கின்றன? நெருப்பைத் தண்ணீர்தான்  

அணைக்கும் என்கின்றன. நெருப்பை நெருப்பே 

அணைக்கும் என்பது தவறு என்றும் நெருப்புக்கு 

எதிரிடையான தண்ணீர்தான் நெருப்பை அணைக்கும் 

என்றும் அவை கூறுகின்றன.


ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகிய இரண்டும் 

ஒன்றுதான். ஒரே மருத்துவமானது வட இந்தியாவில் 

ஆயுர்வேதம் என்றும் தென்னிந்தியாவில் சித்த 

மருத்துவம் என்றும் பெயர் பெற்றுள்ளன. தற்காலத்தில் 

இவை இரண்டும் கூட்டாக இந்திய மருத்துவம் 

(Indian Medicine) என்று பெயர் பெற்றுள்ளன.   

   

மேற்கூறிய ஓர் எளிய அறிமுகத்துடன் இக்கட்டுரையின் 

கருப்பொருளுக்கு வருவோம். இக்கட்டுரை பல்வேறு 

மருத்துவ முறைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு எது 

சிறந்தது என்று முடிவு செய்யும் கட்டுரை அல்ல. 


மார்க்சியம் ஹோமியோபதியை எப்படிப் பார்க்கிறது 

என்பது மட்டுமே இக்கட்டுரையின் கருப்பொருள் 

ஆகும். மார்க்சியத்துக்கும் ஹோமியோபதிக்கும் 

உள்ள தொடர்பு என்ன, கம்யூனிச நாடுகள் என்று 

அறியப்பட்ட சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா),

சீனா போன்ற நாடுகளில் ஹோமியோபதிக்கு இருந்த 

இடம் என்ன, ஸ்டாலின், மாவோ போன்ற 

மார்க்சிய மூல ஆசான்களின் ஹோமியோபதி 

குறித்த நிலைப்பாடு என்ன ஆகியவற்றைக் கூறுவது 

மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.     


சாமுவேல் ஹானிமன், மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய 

மூவருமே கிட்டத்தட்ட சமகாலத்தவர்கள்; 19ஆம் 

நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். மார்க்ஸ் எங்கல்சை 

விட ஹானிமன் 60 ஆண்டுகள் மூத்தவர். மார்க்ஸ் 

காலத்தில் ஹோமியோபதி மருத்துவம் செயல்பாட்டுக்கு 

வந்திருந்தது. மார்க்சும் எங்கல்சும் ஹோமியோபதி 

மருத்துவம் பற்றி நன்கு அறிந்து இருந்தனர். என்றாலும்

அவர்கள் ஹோமியோபதியை ஏற்கவோ ஆதரிக்கவோ 

இல்லை. கறாராகச் சொல்வதானால், மார்க்சும் எங்கல்சும், சக ஜெர்மானியரான சாமுவேல்  ஹானிமனின் 

ஹோமியோபதியைப் பொருட்படுத்தவே இல்லை.


தங்கள் காலத்தில் நடைபெற்ற எந்த ஒரு சிறிய அறிவியல் 

வளர்ச்சியையும் விட்டு விடாமல், அவற்றை நன்கு கற்று 

மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பழக்கம் உடைய மார்க்சும்

எங்கல்சும் ஹோமியோபதியைப் பொருட்படுத்தவில்லை. 

காரணம் அதை அவர்கள் அறிவியல் என்று கருதவில்லை.


1917ல் ரஷ்யப் புரட்சி ஏற்பட்டது; போல்ஷ்விக்குகள் 

அரசு அதிகாரத்தைக் கைப்பற்றினர். 

(போல்ஷ்விக்குகள் = ரஷ்யக் கம்யூனிஸ்டுகள்).

லெனின் ரஷ்ய அதிபர் ஆகிறார். 1922ல் சோவியத் 

ஒன்றியம் (Soviet Union) உருவாகிறது. 1924ல் 

லெனினின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின்

ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். 1924 முதல் 1954 

வரை முப்பதாண்டுகள் ஸ்டாலின் ரஷ்யாவை ஆண்டார்.


ஸ்டாலின் காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் 

ஹோமியோபதி தடை செய்யப் படுகிறது. இது அதிபர் 

ஸ்டாலினின் தனிப்பட்ட முடிவு அல்ல. இது CPSUவின் 

முடிவு. (CPSU = Communist Party of Soviet Union)         


சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியானது 

சோவியத் நாட்டின் அறிஞர்கள், விஞ்ஞானிகள், 

மருத்துவர்கள் ஆகியோரிடம் நன்கு விவாதித்து 

இறுதியில் ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் 

(Homeopathy is a pseudoscience) என்ற முடிவுக்கு வந்தது. 

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவை ஏற்று 

அதிபர் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தில் 

ஹோமியோபதியைத் தடை செய்தார். 

ஹோமியோபதி மருத்துவ மனைகள் அல்லோப்பதி 

மருத்துவ மனைகளாக மாற்றப் பட்டன. போலி அறிவியலான  ஹோமியோபதியை ஆதரித்த பலர் 

சிறைக்கு அனுப்பப் பட்டனர்.


ஹோமியோபதியின் ஆதரவாளர்கள் ஸ்டாலின் ஒரு 

சர்வாதிகாரி என்றும் எந்த நியாயமும் இல்லாமல் 

ஹோமியோபதியை அவர் தடை செய்தார் என்றும் 

கூறுகிறார்கள். 1954ல் ஸ்டாலின் மறைந்ததும் 

குருச்சேவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஆகிறார்.

ஸ்டாலின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசு 

நடவடிக்கைகளை ரத்து செய்தவர் குருச்சேவ். என்றாலும்  

அவர் ஹோமியோபதி மீதான தடையை நீக்கவில்லை.


பிரஷ்னேவ், கோர்ப்பச்சேவ் என்று சோவியத்தின் 

அதிபர்களாக வந்தவர்கள் யாரும் ஹோமியோபதியை 

அங்கீகரிக்கவில்லை. அதன் மீதான தடையை 

நீக்கவில்லை.


சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறி ரஷ்யா மட்டுமே 

எஞ்சியது. போரிஸ் யெல்ட்சின், விளாதிமிர் புடின் ஆகிய 

அதிபர்கள் ரஷ்யாவை ஆண்டனர். இவர்கள் காலத்தில் 

ரஷ்யா ஒரு அப்பட்டமான முதலாளித்துவ நாடாக மாறி 

இருந்தது.


ஆனாலும் புடினின் ரஷ்யாவிலும் ஹோமியோபதி 

மீதான தடை நீக்கப் படவில்லை. தொடர்ந்து தடை 

நீடித்தது. ஆக கம்யூனிச ஸ்டாலின் காலம் முதல் 

முதலாளித்துவ புடின் காலம் வரை ரஷ்யாவில் 

ஹோமியோபதி தடை செய்யப்பட்டே இருந்தது. அதன் 

மீதான தடையை நீக்க புடின் முன்வரவில்லை.


ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு பெரும் 

தத்துவங்களான மார்க்சியமும் முதலாளித்துவமும்  

ரஷ்யாவில் ஹோமியோபதியை நிராகரித்து இருந்தன.

ஹோமியோபதி மீதான தடை 1924 முதல் இன்று வரை, 

நூறாண்டு காலமாக நீடித்து வருகிறது. இதற்குக் காரணம் 

ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் (pseudo science)  என்பதே. 


அடுத்து சீனாவில் ஹோமியோபதியின் நிலை என்ன 

என்று பார்ப்போம். 1949ல் சீனா விடுதலை அடைந்தது.

கம்யூனிஸ்ட் நாடான சீனாவின் அதிபர் மாவோ 

பாரம்பரிய சீன மருத்துவத்திற்கு பெரிய அளவில் 

முக்கியத்துவம் அளித்தார். அரசு முற்றிலுமாக 

பாரம்பரிய சீன மருத்துவத்தை ஆதரித்தது.

கூடவே அல்லோபதியையும் சீனா ஏற்றுக் 

கொண்டு ஆதரித்து வந்தது.


சீனாவில் ஹோமியோபதி என்ற பேச்சுக்கே இடமில்லை.

சீனாவில் ஹோமியோபதி பரவவும் இல்லை. சீனாவில் 

ஹோமியோபதியை நுழைக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் 

மாவோ ஆதரவு அளிக்கவில்லை. 1976ல் மாவோ மறைந்து     

ஹுவா குவா ஃபெங், டெங் சியோ பிங் ஆகியோர் 

அதிபர்களாக பின்னரும் கூட சீனாவில் ஹோமியோபதி 

செல்வாக்குப் பெறவில்லை. ஹோமியோபதிக்கு 

இன்றளவும் சீன அரசின் ஆதரவும் இல்லை. இதற்குக் 

காரணம் ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் 

என்பதுதான்.


மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ 

ஆகிய மார்க்சிய மூல ஆசான்கள் ஐவரும் 

ஹோமியோபதியை ஏற்கவில்லை; அங்கீகரிக்கவில்லை.


ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் என்று மார்க்சியம் 

மிகத் தெளிவாக உணர்ந்துள்ளது. எனவே ஹோமியோபதி 

தோன்றியது முதல் இன்று வரை மார்க்சியமானது 

ஹோமியோபதிக்கு  எதிரானதாகவே உள்ளது. 

ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் என்பது 

மார்க்சியத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிலைபாடு 

மட்டுமின்றி நூறாண்டுக்கு மேல் நிலைபேறு 

உடையதும் இன்றும் நடைமுறைப் படுத்தப்பட்டு 

வருவதுமான நிலைபாடு.


மார்க்சியமும் ஹோமியோபதியும் ஒன்றுக்கொன்று 

எதிரானவை. ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.

இவ்விரண்டுக்கும் இடையிலான முரண்பாடு பகைத் 

தன்மை வாய்ந்த முரண்பாடு (antagonistic contradiction).

பகை முரண்பாடாக இருக்கின்ற காரணத்தால்,

இவை இரண்டும், அதாவது, மார்க்சியமும் 

ஹோமியோபதியும் ஒன்றையொன்று அழிக்க 

முனையும். இவ்விரண்டில் எது சரியானதா, எது 

அறிவியல்பூர்வமானதோ அது மட்டுமே வெல்லும். 

மற்றது அழிந்து ஒழிந்து போய்விடும்.


மார்க்சியம் நூறு சதமும் அறிவியல்பூர்வமானது.

ஹோமியோபதி ஒரு போலி அறிவியல். எனவே 

மார்க்சியத்துக்கும் ஹோமியோபதிக்குமான இந்தச் 

சண்டையில் மார்க்சியம் வெல்லும்; ஹோமியோபதி 

தோற்று அழியும். ஏனெனில் போலி அறிவியலான  

ஹோமியோபதியால், சரியான அறிவியலான 

மார்க்சியத்தை ஒருபோதும் வெல்ல இயலாது. 


ஜெர்மானியத் தத்துவப் பேரறிஞர் ஹெக்கல் என்பவர் 

(Hegel 1770-1831) இயங்கியல் (அல்லது முரண்தர்க்கவியல்)

என்னும் கோட்பாட்டை உருவாக்கினார். எந்த ஒரு 

விஷயத்திலும் உண்மை என்ன என்று கண்டறியப் 

பயன்படும் முறையே இயங்கியல் (dialectics) ஆகும்.

ஹெக்கலின் இயங்கியலைத் திருத்தியும் செப்பனிட்டும் 

மேம்படுத்தியும் மார்க்சிய இயங்கியலை உருவாக்கினர்

மார்க்சும் எங்கல்சும். 


மார்க்சிய இயங்கியலுக்கு எதிரானது ஹோமியோபதி. 

மேலும் மார்க்சியப் பொருள்முதல்வாதத்தைத் தூக்கி 

எறிந்து விட்டு, கருத்துமுதல்வாத (idealism) அடிப்படையில் 

ஹோமியோபதியை உருவாக்கினார் சாமுவேல் ஹானிமன். 

ஹோமியோபதியின் மருந்து கொடுக்கும் கோட்பாடு 

அதீதமாக நீர்த்துப் போகச் செய்தல் (extreme dilution)

என்பதாகும்.


ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சமையல் உப்பை 

(சோடியம் குளோரைடு) சேர்த்து ஒரு கரைசலை 

உருவாக்குவோம். இதில் மேலும் மேலும் தண்ணீர் கலந்து 

கரைசலை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும். 

எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக நீர்த்துப் போகச் 

செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு மருந்தானது 

வீரியம் மிக்கதாக ஆகிறது. இதுதான் ஹோமியோபதியின்    மருந்து கொடுக்கும் தத்துவம்.


மேற்சொன்ன உதாரணத்தில் 1 லிட்டர் தண்ணீரில் சோடியம் 

குளோரைடின் ஒரே ஒரு மூலக்கூறு கூட இருக்கக் கூடாது.

அந்த அளவுக்கு அதை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும்.   


இதன் அர்த்தம் என்னவெனில், பொருளானது மறைந்து 

போக வேண்டும். பொருள் மறைந்து போகிறது என்று 

சொல்லும்போது அங்கு ஆதிசங்கரர் வந்து விடுகிறார்.

அத்வைதம் வந்து விடுகிறது. 


ஆக ஹோமியோபதி என்பது ஒரு பொருள் மறுப்பு 

மருத்துவம். பொருளை மறுத்து விட்டு அதனிடத்தில் 

கருத்தை வைக்கும் மருத்துவமே ஹோமியோபதி. 

எனவே ஹோமியோபதி என்பது போலி அறிவியல் 

என்பது நிரூபணம் ஆகிறது. 

 

இந்தியாவில் ஹோமியோபதிக்கு செல்வாக்கு உள்ளது.

அறிவியல் தற்குறித் தேசமான இந்தியாவில் போலி 

அறிவியலான ஹோமியோபதி செல்வாக்குப் பெறுவது 

இயல்பானதே.


தமிழ்நாட்டில் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் 

நடுவில் ஹோமியோபதி பெரும் செல்வாக்குப் 

பெற்றுள்ளது. வேறு வர்க்கத்தினர் குறிப்பாக உழைக்கும் 

வர்க்கத்தினர் யாரும் ஹோமியோபதியை ஏற்கத்தக்க  

மருத்துவமாகக் கருதவில்லை. 


உழைக்கும் மக்களைப்  பொறுத்தமட்டில், அல்லோபதி 

என்னும் ஆங்கில மருத்துவத்தையும் சித்த மருத்துவம் 

என்னும் தமிழ் மருத்துவத்தையுமே  நாடுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் குவியும் ஏழை எளிய மக்களின் 

கூட்டம் இதை நிரூபிக்கிறது.


ஹோமியோபதிக்கு ரசிகர் மன்றங்களை வைத்து 

நடத்துபவர்கள் தமிழ்நாட்டின் குட்டி முதலாளித்துவர்கள்

மட்டுமே. 


தங்களை இடதுசாரிகள் என்றும் 

மார்க்சியர்கள் என்றும் 

நக்சல்பாரிகள் என்றும் 

மாவோயிஸ்டுகள் என்றும் 

அழைத்துக் கொள்ளும் குட்டி முதலாளித்துவ 

அன்பர்கள் அனைவருமே ஹோமியோபதியின் 

மீது காதல் கொண்டு கிடக்கிறார்கள்.


ஹோமியோபதியை எதிர்ப்பதோ அல்லது 

ஹோமியோபதியின் பிடியில் இருந்து மக்களை 

விடுவிப்பதோ இக்கட்டுரையாளரின் நோக்கம் அல்ல.

   

யார் எவரும் தங்களுக்கு என்ன மருத்துவம் பிடிக்குமோ 

அதைப் பின்பற்றலாம். ஹோமியோபதியே சிறந்த 

மருத்துவம் என்று கருதுபவர்கள் தாராளமாக அதைப் 

பின்பற்றலாம். அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது 

இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. ஒன்றே ஒன்றை மட்டும் 

இக்கட்டுரை வலியுறுத்துகிறது.அது இதுதான்!


ஹோமியோபதியை மார்க்சியம் எதிர்ப்பதால்,   

ஹோமியோபதியைப் பின்பற்றுவோர் எவரும் 

மார்க்சிஸ்ட்டுகள் ஆக மாட்டார்கள். அவர்கள் தங்களை 

மார்க்சிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்வது மோசடி ஆகும்.


ஹோமியோபதியை ஆதரிப்போர் பொருள்முதல்வாதத்தை 

எதிர்க்கிறார்கள். எனவே இயல்பாகவே அவர்கள் 

மார்க்சியத்தின் எதிரிகளாகி விடுகிறார்கள்


ஹோமியோபதி, மார்க்சியம் என்னும் இவ்விரண்டில்,  

எவர் ஒருவரும் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் 

ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றி வரலாம். அதற்கு 

அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் ஒருவர் 

இரண்டையும் வைத்துக் கொள்ள இயலாது.


கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது கூடாது.

ஹோமியோபதிக் கூழை விரும்புவோர் மார்க்சிய 

மீசையை மழித்து விட வேண்டும். மார்க்சிய மீசையே 

முக்கியம் என்போர் ஹோமியோபதிக் கூழை 

சாக்கடையில் கொட்டி விட வேண்டும். இது மட்டுமே 

இக்கட்டுரை சொல்லும் ஒரே செய்தி!

***************************************************** 




    






                       



  

 ஹோமியோபதியும் மார்க்சியமும்!

----------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

---------------------------------------------

ஹோமியோபதி இந்த மண்ணின் மருத்துவம் அல்ல.

அது ஜெர்மனி நாட்டில் இருந்து இறக்குமதி 

செய்யப் பட்டது. சாமுவேல் ஹானிமன் 

(Samuel Hahnemann 1755-1843) என்னும் ஜெர்மானிய 

மருத்துவர் ஹோமியோபதியை உருவாக்கினார்.


நோயைக் குணப்படுத்தும் தத்துவம் 

ஹோமியோபதியைப் பொறுத்த மட்டில் 

இதுதான்! அதாவது, மருந்து என்பது நோயை 

ஒத்தது (Let likes be cured by likes).  


ஹோமியோபதியில் இருந்து வேறுபட்ட ஒரு 

தத்துவத்தை நோயைக் குணப்படுத்தும் தத்துவமாகக் 

கொண்டவை இந்தியாவின் ஆயுர்வேதம், 

சித்த மருத்துவம், அல்லோபதி என்னும் ஆங்கில 

மருத்துவம் ஆகிய மூன்றும்.


இவற்றின் நோயைக் குணப்படுத்தும் தத்துவம் 

இதுதான்! அதாவது மருந்து என்பது நோய்க்கு 

எதிரிடையானது என்பதுதான் (Let likes be cured 

by dislikes)     


ஓரிடத்தில் நெருப்பு எரிகிறது. கொழுந்து விட்டு 

எரிகிறது. இதை அணைக்க வேண்டும்.

ஹோமியோபதி என்ன சொல்கிறது? நெருப்பை 

நெருப்பே அணைக்கும் என்கிறது ஹோமியோபதி.


அல்லோபதியும் ஆயுர்வேதமும் என்ன 

சொல்கின்றன? நெருப்பைத் தண்ணீர்தான்  

அணைக்கும் என்கின்றன. நெருப்பை நெருப்பே 

அணைக்கும் என்பது மூடத்தனம் என்று 

அவை கூறுகின்றன.


சித்த மருத்துவமும் இதைத்தான் சொல்கிறது.

ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகிய

இரண்டும் ஒன்றுதான். ஒரே மருத்துவமானது 

வட இந்தியாவில் ஆயுர்வேதம் என்றும் 

தென்னிந்தியாவில் சித்த மருத்துவம் என்றும் 

பெயர் பெற்றுள்ளன. தற்காலத்தில் இவை 

இரண்டும் கூட்டாக இந்திய மருத்துவம் 

(Indian Medicine) என்று பெயர் பெற்றுள்ளன.   


மேற்கூறிய ஓர் எளிய அறிமுகத்துடன் 

இக்கட்டுரையின் கருப்பொருளுக்கு வருவோம்.

இக்கட்டுரை பல்வேறு மருத்துவ முறைகளை 

ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு எது சிறந்தது என்று 

முடிவு செய்யும் கட்டுரை அல்ல. 


மார்க்சியம் ஹோமியோபதியை எப்படிப் பார்க்கிறது 

என்பது மட்டுமே இக்கட்டுரையின் கருப்பொருள் 

ஆகும். மார்க்சியத்துக்கும் ஹோமியோபதிக்கும் 

உள்ள தொடர்பு என்ன, கம்யூனிச நாடுகள் என்று 

அறியப்பட்ட சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யா),

சீனா போன்ற நாடுகளில் ஹோமியோபதிக்கு இருந்த 

இடம் என்ன, ஸ்டாலின், மாவோ போன்ற 

மார்க்சிய மூல ஆசான்களின் ஹோமியோபதி 

குறித்த நிலைப்பாடு என்ன ஆகியவற்றைக் கூறுவது 

மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.     


சாமுவேல் ஹானிமன், மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய 

மூவருமே கிட்டத்தட்ட சமகாலத்தவர்கள்; 19ஆம் 

நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். மார்க்ஸ் எங்கல்சை 

விட ஹானிமன் 60 ஆண்டுகள் மூத்தவர். மார்க்ஸ் 

காலத்தில் ஹோமியோபதி மருத்துவம் 

செயல்பாட்டுக்கு வந்திருந்தது. மார்க்சும் 

ஏங்கல்சும் ஹோமியோபதி மருத்துவம் 

பற்றி நன்கு அறிந்து இருந்தனர். என்றாலும்

அவர்கள் ஹோமியோபதியை ஏற்கவோ 

ஆதரிக்கவோ இல்லை. கறாராகச்

சொல்வதானால், மார்க்சும் எங்கல்சும்

ஹோமியோபதியைப் பொருட்படுத்தவே இல்லை.


தங்கள் காலத்தில் நடைபெற்ற எந்த ஓவர் சிறிய 

அறிவியல் வளர்ச்சியையும் விட்டு விடாமல் 

அவற்றை நன்கு காற்றும் அறிந்தும் மக்களுக்கு 

எடுத்துச் சொல்லும் பழக்கம் உடைய மார்க்சும்

எங்கல்சும் ஹோமியோபதியைப் பொருட்படுத்த

வில்லை. அதை அவர்கள் அறிவியல் என்று  ஏற்றுக் 

கொள்ளவில்லை.     


1917ல் ரஷ்யப் புரட்சி ஏற்பட்டது; போல்ஷ்விக்குகள் 

அரசு அதிகாரத்தைக் கைப்பற்றினர். 

(போல்ஷ்விக்குகள் = ரஷ்யக் கம்யூனிஸ்டுகள்).

லெனின் ரஷ்ய அதிபர் ஆகிறார். 1922ல் சோவியத் 

ஒன்றியம் (Soviet Union) உருவாகிறது. 1924ல் 

லெனினின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின்

ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். 1924 முதல் 1954 

வரை முப்பதாண்டுகள் ஸ்டாலின் ரஷ்யாவை ஆண்டார்.


ஸ்டாலின் காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் 

ஹோமியோபதி தடை செய்யப் படுகிறது.

இது அதிபர் ஸ்டாலினின் தனிப்பட்ட 

முடிவு அல்ல. இது CPSUவின் முடிவு. 

(CPSU = Communist Party of Soviet Union)         


சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் 

கட்சியானது சோவியத் நாட்டின் அறிஞர்கள், 

விஞ்ஞானிகள், மருத்துவர்கள் ஆகியோரிடம் 

நன்கு விவாதித்து இறுதியில் ஹோமியோபதி 

ஒரு போலி அறிவியல் (Homeopathy is a pseudoscience)

என்ற முடிவுக்கு வந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் 

கட்சியின் இந்த முடிவை ஏற்று அதிபர் ஸ்டாலின் 

சோவியத் ஒன்றியத்தில் ஹோமியோபதியைத் 

தடை செய்தார். ஹோமியோபதி மருத்துவ 

மனைகள் அல்லோப்பதி மருத்துவ மனைகளாக 

மாற்றப் பட்டன. ஹோமியோபதியை ஆதரித்து 

ஸ்டாலினின் அரசை எதிர்த்த பலர் சிறைக்கு 

அனுப்பப் பட்டனர்.        



  

   

சனி, 29 மே, 2021

 மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை!

--------------------------------------------------------------

1) மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய 

கல்விக் கொள்கை உண்மையில் மோடி அரசின் 

சுய சிந்தனையில் விளைந்தது அல்ல. அது 

இந்தியாவில் ஏற்கனவே இருந்து வந்த பல்வேறு 

கல்விக் கொள்கைகளின் தொகுப்பு. மோடி அரசு 

புதிதாக எதையும் சொல்லி விட வில்லை.


2) நேரு காலத்தில் கல்விக் கொள்கை என்ற தனிப் 

பெயரில் எதுவும் இல்லை. என்றாலும் கல்வி 

பற்றிய சில கொள்கைகள் நேரு அரசுக்கு இருந்தன.


3) 1968ல் இந்திரா காந்தி ஒரு கல்விக் கொள்கையைக் 

கொண்டு வந்தார் அது இந்திரா கல்விக்கொள்கை.


4) 1986ல் ராஜிவ் காந்தி ஒரு கல்விக் கொள்கையைக் 

கொண்டு வந்தார். இதுவும் புதிய கொள்கை அல்ல.

ஏற்கனவே இருந்து வந்த இந்திரா காந்தி கல்விக் 

கொள்கையைச் சற்று நவீனப் படுத்தினார் 

ராஜிவ் காந்தி.கணினிக் கல்வி, நவீன மயம்,

ஆகியவற்றுக்கு ராஜிவ் முக்கியத்துவம் அளித்தார்.


5) பின்னர் 19992-95ல் நரசிம்மராவ் ஒரு கல்விக் 

கொள்கையைக் கொண்டு வந்தார். இதுவும் முற்றிலும் 

புதிய கல்விக் கொள்கை அல்ல. ஏற்கனவே இருந்து 

வந்த ராஜிவ் காந்தி கல்விக் கொள்கையில் உலகமயச் 

சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்தார்.


6) ஆக மோடி அரசு முற்றிலும் புதிதாக ஒரு கல்விக் 

கொள்கையைக் கொண்டு வந்து விடவில்லை. 

சொல்லப் போனால் இது புதிய கல்விக் கொள்கை 

என்று அழைக்கப் படுவதற்குப் பொருத்தமற்றது.

இந்தியாவில் காலங்காலமாக இருந்து வந்த,

முந்திய அரசுகள் நடைமுறைப் படுத்தி வந்த 

கல்விக் கொள்கையை மோடி அரசு அப்படியே 

எடுத்துக் கொண்டு, அதில் சம காலத்தின் தேவைக்கு 

ஏற்ப சில மாற்றங்களை செய்கிறது. அவ்வளவுதான்.


7) அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த 

பல்வேறு அரசுகளின் கல்வி கொள்கையை மறுபதிப்புச் 

செய்துள்ளது மோடி அரசு. ஆக புதிய கல்விக் கொள்கை 

என்பது ஒரு மறுபதிப்பு (A reprint).


8) மும்மொழித் திட்டம் என்பதும் 

அலுவல் மொழியான இந்தியைக் கற்க வேண்டும் என்பதும் 

சமஸ்கிருதத்துக்கு ஆதரவு என்பதும் 

மோடியால் முதன் முதலில் சொல்லப் படுவது அல்ல.

மேற்கூறிய மூன்றும் இந்தியாவின்  கல்விக் கொள்கையில் 

பாஜக ஆடசி வருவதற்கு முன்னரே உள்ளன.  

ஏற்கனவே உள்ள கல்விக் கொள்கை என்ன சொல்கிறதோ 

அதையே மோடி அரசின் கொள்கையும் சொல்கிறது.

        .


9) மும்மொழித்திட்டம் என்பது நேரு அரசின் 

கல்விக் கொள்கை என்ன கூறியதோ  அதை 

கிளிப்பிள்ளையாகத் திரும்பிச் சொல்வதுதான் 

மோடி அரசின்  கல்விக் கொள்கை.


10) The state government should adopt and vigorously implement 

Three language formula. இது 1968ல் உள்ள இந்திரா காந்தி 

கல்விக் கொள்கையில் உள்ள அம்சம். ஆக, இந்திரா 

காந்தியின் கல்விக் கொள்கை என்ன சொல்கிறதோ 

அதையே மோடியும் சொல்கிறார். ஒரே விஷயத்தை 

இந்திரா காந்தி சொல்கிறபோது தலையைத் தலையை 

ஆட்டிக் கொண்டு ஏற்றுக் கொள்வதும், அதே 

விஷயத்தை மோடி அரசு சொன்னால் மறுப்பதும் 

நியாயம் அல்ல. 

-----------------------------------------------------------------------


    

திங்கள், 24 மே, 2021

 மார்க்சிய அறிஞர் தோழர் எஸ் என் நாகராசன்

மறைந்தார்! செவ்வஞ்சலி செலுத்துவோம்!

--------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------

முதுபெரும் மார்க்சிய சிந்தனையாளரும் 

இறுதி மூச்சுவரை மார்க்சியத்தில் ஊன்றி

நின்றவருமான மதிப்புக்குரிய தோழர் 

எஸ் என் நாகராசன் (வயது 94) இன்று அதிகாலை 

(24.05.2021) முதுமை காரணமாகவும் கொரோனா 

தொற்று காரணமாகவும் உயிர் நீத்தார் என்ற  

செய்தி நம்மையெல்லாம் சோகத்தில் ஆழ்த்துகிறது.


இரண்டாண்டுகளுக்கு முன்பு சென்னை தி நகரில்

அவர் தங்கியிருந்தபோது, நாலைந்து முறை அவரது 

இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தேன்.

அவர் பேசப்பேச நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இதன் மூலம் அவரின் மார்க்சியப் புரிதல் மற்றும் 

அவர் முன்மொழியும் மார்க்சியத் தீர்வுகள் ஆகியவை 

பற்றி நன்கறிந்து கொண்டேன்.


பல ஆண்டுகளுக்கு முன்பு தலைவரும் ஆசானும் 

ஆகிய தோழர் ஏ எம் கே அவர்கள் மூலமாக

தோழர் எஸ் என் நாகராசன் பற்றி அறிந்து கொண்டேன்.

அவர் மிகவும் நேர்மையான கம்யூனிஸ்ட் என்று 

ஏ எம் கே அவர்கள் கூறியதை இங்கு நினைவு கூர்கிறேன்.


தோழர் எஸ் என் நாகராசன் அவர்கள் பிறர் எவரிடம்

இருந்தும் தமது சுயசிந்தனையால் தம்மை 

வேறுபடுத்திக் கொண்டவர். தமிழக இந்திய மார்க்சிய 

முகாமில் சுயசிந்தனை என்பது அறவே இல்லாத 

ஒன்று; அல்லது வெகு அபூர்வமானது. 


டெம்ப்ளேட் (template) சிந்தனை எனப்படும் 

அச்சு முறுக்குச் சிந்தனை மட்டுமே இங்கு உண்டு. 

தயாராக வைத்திருக்கும் அச்சில், மாவை ஊற்றி 

முறுக்குப் பிழிவது போல மார்க்சியத் தீர்வுகள் 

பிழியப்பட்டு விடும்.  


சுயசிந்தனை அற்றுப்போன ஒரு சூழலில் தோழர் 

எஸ் என் அவர்களின் ஆழமான மார்க்சியக் 

கோட்பாடுகள் இங்கு மார்க்சியர்களிடையே 

மிகக் குறைவாகக் கூட விவாதிக்கப் படவில்லை.

இதன் விளைவாக கோட்பாட்டு ரீதியானதும் 

கட்டம் கட்டமானதுமான மார்க்சிய வளர்ச்சி 

இங்கு சித்திக்கவே இல்லை.


மேலை மார்க்சியம் என்றும் கீழை மார்க்சியம் என்றும் 

மார்க்சியத்தை இரண்டு பிரிவகளாகப் பிரித்தார் 

தோழர் எஸ் என். வசதி கருதியோ சௌகரியம் 

கருதியோ மார்க்சியத்தை இரண்டாகவோ, ஏன், 

இருபதாகவோ கூட பிரித்துக் கொள்ளலாம்.

ஆனால் அந்தப் பிரிவினைகளுக்கு எந்த விதமான 

கோட்பாட்டு நியாயமும் கிடையாது என்பதுதான்  

சரியான புரிதல். ஆனால் ஐரோப்பிய மார்க்சியம் 

கீழை நாடுகளின் (இந்தியா சீனா ஜப்பான்) மார்க்சியம்    

என்னும் இரண்டுக்கும் இடையில் கறாரான கோட்பாட்டு

ரீதியிலான பிரிவினைக்கு இடம் உண்டு என்கிறார் 

எஸ் என். இதை  ஏற்பதற்கில்லை. .


அறிவியல் குறித்த தோழர் ஸ்டாலின் அவர்களின் 

கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு நிலைபாட்டைக் 

கொண்டிருந்தார் எஸ் என். இது தவறான நிலைபாடாகும். 


என்றபோதிலும் எஸ் என் அசலான சிந்தனையாளர்.

மார்க்சிய மூல ஆசான்களின் படைப்புகளை மிகவும் 

ஆழ்ந்து கற்றவர். தமது சிந்தனை மற்றும் பகுப்பாய்வு 

ஆகியவற்றின் விளைவாக அவர் வந்தடைந்த பல 

முடிவுகள் ஒன்று ஏற்கப்படவில்லை அல்லது 

பொருட்படுத்தப் படவில்லை. இதற்குக் காரணம்

மார்க்சியர்களிடம் இன்றும் மேலோங்கி நிற்கும் 

நுனிப்புல் தன்மையிலானதும் பெரும் போதாமை 

உடையதுமான தத்துவார்த்த அறிவே ஆகும்.


இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் 

நக்சல்பாரிக்குப் பின்னர், பெரும் தத்துவார்த்த

விவாதத்துக்குரிய கோட்பாடுகளை முன்வைத்தவர் 

நாகராசன். அவரின் முன்வைப்புகளைப் 

பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டு அவற்றை 

விவாதித்துச் சரியான முடிவுக்கு வர வேண்டியது

இந்திய மார்க்சியர்கள் கடமை ஆகும்.


தோழர் எஸ் என் நாகராசன் அவர்களுக்கு 

செவ்வஞ்சலி செலுத்துவோம்!

----------------------------------------------------------

                 

          

  . 


    


 இந்தியாவில் கொரோனா மரணங்கள்!

மாநிலவாரியான அட்டவணை!  

தமிழ்நாட்டில் கொரோனா மரணம் அதிகம் ஏன்?

-----------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

------------------------------------------------------

இந்தியா முழுவதும் நிகழ்ந்த மரணம் = 2,99,266.

(மே 22, 2021 முடிவில்).


இனி 28 மாநிலங்களில் குறிப்பிடத்தக்க 

எண்ணிக்கையில் மரணம் நிகழ்ந்த 

மாநிலங்களைப் பார்ப்போம்.

Negligible death toll உள்ள மாநிலங்களைத் 

தனியாகப் பார்ப்போம். 


கொரோனா மரணங்கள் (மே 22, 2021 முடிவில்).

--------------------------------------------------------------------- 

1) மகாராஷ்டிரா = 87,300

2) கர்நாடகம் = 24,658

3) டெல்லி = 23,013 

4) தமிழ்நாடு = 20,046

5) உத்திரப் பிரதேசம் = 18,978

6) மேற்கு வங்கம் = 14,208

7) பஞ்சாப் = 13,089

8) சட்டிஸ்கர் = 12,494

9) ஆந்திரா = 10,022   


இந்தியாவின் மொத்த மாநிலங்கள் = 28.

இந்த 28ல் 9 மாநிலங்களில் மட்டுமே 

நான்கு இலக்க எண்ணிக்கையில் 

கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.


இந்திய மாநிலங்களில் மிகக் குறைவான 

கொரோனா மரணம் நிகழ்ந்துள்ள மாநிலம் 

மிசோரம் ஆகும். மரணம் = 31 மட்டுமே.


கொரோனா மரணத்தில் முதலிடம் பெறுவது 

மகாராஷ்டிரா மாநிலம். மரணம் = 87,300.


மேற்கு வங்கம் தமிழ்நாட்டை விட மக்கள்தொகை 

அதிகமான மாநிலம். என்றாலும் தமிழ்நாட்டை 

விட கொரோனா மரணங்கள் இங்கு குறைவு.  

தமிழ்நாட்டில் 20046; மேற்கு வங்கத்தில் 14,208.

தமிழ்நாட்டை விட 6000 மரணம் மே வங்கத்தில் குறைவு.


இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலம் உத்திரப் 

பிரதேசம். இங்கு மக்கள்தொகை = 20 கோடி.

(2011 மார்ச் சென்சஸ்படி 19,95,81,477).

ஆனால் இங்கு கொரோனா மரணம் குறைவு.

மரணம் = 18978 மட்டுமே.


தமிழ்நாட்டின் மக்கள்தொகை = 7.21கோடி.

(2011 சென்சஸ்படி, 7,21,47,030). உத்திரப் 

பிரதேசத்தின் மக்கள்தொகை தமிழ்நாட்டை 

விட சற்றேறக் குறைய மூன்று மடங்கு அதிகம்.

அப்படியானால் கொரோனா மரணங்களும்

மூன்று மடங்கு இருக்கும் என்று நினைத்தால் 

அது தப்பு. தமிழ்நாட்டை விட உபியில் 

மரணங்கள் குறைவு. தமிழ்நாடு = 20,046.

உபி = 18,978.      


கேரளத்தில் கொரோனா மரணம் = 7170.

கேரளத்தின் மக்கள்தொகை = 3.34 கோடி.

மக்கள்தொகையில் இந்தியாவின் 13ஆவது 

பெரிய மாநிலம் கேரளம் (13th largest state)  


பீகார் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் 

ஒன்று. இதன் மக்கள்தொகை = 10.4 கோடி.

மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது

பெரிய மாநிலம் இது. ஆனால் இங்கு 

கொரோனா மரணம் மிகவும் குறைவு.

நம்ப முடியாத அளவு குறைவு. எவ்வளவு 

தெரியுமா? 4442 மரணங்கள்தான்.  


10 கோடி மக்கள்தொகை உள்ள பீகாரில் 

மரணம் 4442 மட்டுமே. ஆனால் 3 கோடி 

மக்கள்தொகை உள்ள கேரளத்தில் 

மரணம் 7170.ஆகும்.பீகாரை விட 

2600 மரணங்கள் கேரளத்தில் அதிகம். 


இக்கட்டுரையில் உள்ள அனைத்து 

மக்கள்தொகை விவரங்களும் 2011 

சென்சஸ்படி உள்ளவை)

  

மத்தியப் பிரதேசம்: 

மக்கள் தொகை = 7.26 கோடி (7,26,26,809)

கொரோனா மரணம் = 7483.


ராஜஸ்தான் மக்கள்தொகை = 6.85 கோடி 

கொரோனா மரணம் = 7590. 


மேலும் குஜராத்தில் 9523 மரணங்களும், 

அரியானாவில் 7415 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.


இந்தி பெல்ட் எனப்படும் உபி, மபி, பீகார்,

ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களிலும் 

சேர்த்து மொத்த மக்கள்தொகை = 44.46 கோடி.

நான்கு மாநிலங்களிலும் 

மொத்த கொரோனா மரணம் = 38493.  


தமிழ்நாடு (புதுச்சேரி உட்பட) 

கொரோனா மரணம் = 21,371.

ஆந்திராவில் மரணம் = 10,022

கேரளத்தில் மரணம் = 7170

கர்நாடகம், தெலுங்கானா ஆகிய  மாநிலங்களைக்  

கணக்கில் கொள்ளாமலேயே, 

பின்வரும் மூன்று மாநிலங்களில் நிகழ்ந்த 

மரணங்கள் (தநா+ஆந்திரா+கேரளம்) = 38,563.


இது உபி, பீகார், மபி ராஜஸ்தானை விட அதிகம். 

மேற்கூறிய மூன்று மாநிலங்களிலும் சேர்த்து 

மக்கள்தொகை = 15.50 கோடி.


44.5 கோடி மக்கள்தொகை உள்ள நான்கு 

இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களில் 

கொரோனா மரணம் = 38,493.


15.5 கோடி மக்கள்தொகை உள்ள மூன்று 

தென்னிந்திய மாநிலங்களில் 

கொரோனா மரணம் = 38,563.


வட இந்தியர்கள் பின்தங்கியவர்கள்,

பிற்போக்குச் சிந்தனை உடையவர்கள் 

என்றெல்லாம் வாய்நீலாம் காட்டுகிறோம்.

ஆனால் அங்கு, மக்கள்தொகை அதிகம்;

கொரோனா மரணம் குறைவு.


மிகவும் முற்போக்கான தமிழ்நாடு கேரளம் 

உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் 

மக்கள்தொகை குறைவு. ஆனால் 

கொரோனா மரணம் அதிகம்!


இதற்கு என்ன காரணம்?

வட இந்தியர்களும், இந்தி பேசுவோரும் 

கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக் 

கொள்வதில் முன்னணியில் இருக்கிறார்கள்.

அங்கு தடுப்பொசிகளை எதிர்த்து எந்த 

விதமான பிற்போக்குப் பிரச்சாரமும் 

நடைபெறுவதில்லை.


ஆனால் தமிழ்நாட்டில் அப்படி அல்ல.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 

தடுப்பூசியை எதிர்க்கும் கடைந்தெடுத்த 

பிற்போக்குப் பிரச்சாரம் நடைபெறுகிறது.


போலி முற்போக்கு, போலிக் கம்யூனிஸ்டு,

போலி நக்சல்பாரி, போலி இடதுசாரி என்று 

சகல தரப்பினராலும் வெறித்தனமாக 

தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் தமிழ்நாட்டில் 

செய்யப் படுகிறது. அதன் காரணமாகவே 

இங்கு கொரோனா மரணம் அதிகம் நிகழ்கிறது.    


இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 

கடைந்தெடுத்த பிற்போக்குப் பிண்டங்கள் 

முற்போக்கு வேடம் தரித்துக் கொண்டு 

சமூக விரோதச் செயல்களைச் செய்கின்றன.

தமிழ்நாட்டில் அதிகரித்து விட்ட கொரோனா 

மரணங்களுக்கு தடுப்பூசியை எதிர்க்கும் 

பிற்போக்குப் பிண்டங்களே பொறுப்பு.  

*********************************************************  



 

ஞாயிறு, 23 மே, 2021

 எது எப்படியானாலும் நாம் வெல்வோம். வென்றுகொண்டிருக்கிறோம்.

தலைக்கு வந்தது நிச்சயம்
தலைப்பாகையுடன் போய்விடும்.
ஏனென்றால்
பிற நாட்டினரைக் கொன்று குவித்த
ஏகாதிபத்திய வெறியின் ரத்தக் கறை
நம் கரங்களில் இல்லை.
பூர்வ குடிகளின் பிணக்குவியலின் மேல்
நம் சாம்ராஜ்ஜியம் எழுப்பப்பட்டிருக்கவில்லை
அடிமைகளின் ரத்தத்தை உறிஞ்சி
நம் வயல்கள் செழித்திருக்கவில்லை
அந்நிய கலாசாரத்தை அழித்து
நம் மதம் வளர்திருக்கவில்லை
வர்க்க எதிரிகளின் மரண ஓலங்களினால்
நிறைந்திருக்கவில்லை நம் வான் வெளிகள்
நிச்சயம் நம் பூமியிலும்
நம்மால் கண்ணீர் துளிகள் சிந்தவைக்கப்பட்டிருக்கின்றன
ஆனால், நம்மைப் போல்
தன்னைத் தானே சீர்திருத்திக் கொண்ட நாடு தரணியில் வேறில்லை
நம் தேசத்தின் வழிகாட்டிகளின் ஆன்மாக்கள் சர்வே பவந்து சுகினஹ என்று அனைவரின் நலனுக்காகவுமே துடித்திருக்கின்றன
அது நம்மை வழிகாட்டும்வரை
அந்த முன்னோர்களின் ஆசிகள் நமக்கு இருக்கும்வரை அவர்களிடமிருந்து நாம் விலகாமல் இருக்கும்வரை
எந்தப் பேரிடரையும் எதிர்த்து
இந்த நம் தேசம் எழுந்து நிற்கு

 அறுவைச் சிகிச்சைகளில் மயக்க மருந்தாகப் பயன்படும் குளோராஃபார்ம் 1830 ல் கண்டு பிடிக்கப்பட்டு விட்டாலும் அதை அறுவைச் சிகிச்சைகளின் போது மனிதர்களுக்குப் பயன்படுத்தலாம் என்று 1847 ல் உலகுக்கு அறிவித்தவர் ஸ்காட்லாண்டைச் சேர்ந்த ஜேம்ஸ் சிம்சன்தான் . குறிப்பாக பிரசவத்தின் போது வலி தெரியாமல் இருக்க பெண்களுக்குப் பயன்படுத்தலாம் என்று அவர் அறிவித்ததும் கிறித்துவ மத அமைப்புகளில் இருந்து பெரும் எதிர்ப்பு உருவாகிவிட்டது .

ஏவாள் கடவுளின் கட்டளையை மீறியதற்காக பெண் இனத்தின் மீது கடவுள் உருவாக்கியதே பிரசவவலி . அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று கொந்தளித்து விட்டார்கள் . சிம்சன் பலவிதங்களில் அந்த எதிர்ப்பைச் சமாளிக்க முயற்சி செய்தார் .
“ ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஒன்றை உருவி ஏவாளை உருவாக்குவதற்காக கடவுள் செய்த முதல் அறுவைச் சிகிட்சையில் வலி தெரியாமல் இருக்க கடவுளே ஆதாமை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்திதான் அந்த செயலைச் செய்து முடித்தார் “ என மதநூல்களில் உள்ளதையே கூறிக் கூடப் பார்த்தார் . கொஞ்சம் ஆதரவு இருந்தாலும் எதிர்ப்புகள் கூடிக் கொண்டேதான் போயின . சிம்சன் பரிதவித்தார் .
அந்த சூழலில் விக்டோரியா மகாராணி ஓர் அறிவிப்பை வெளியிட்டார் – “ எனது அடுத்த பிரசவத்தில் நான் குளோராஃபார்ம் பயன்படுத்தப் போகிறேன் . “ அவ்வளவுதான் எதிர்ப்புகள் அடங்கிப் போய்விட்டன . மகாராணி வாய் திறந்தார் ; சிம்சனுக்கும் க்ளோரோஃபார்முக்கும் வெற்றி வந்து.

சனி, 15 மே, 2021

 இந்தியாவின் ஆகப் பிற்போக்கான மாநிலம்

தமிழ்நாடு என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது!

-----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------

கொரோனா தடுப்பூசி கட்டம் கட்டமாக இந்தியாவில் 

போடப் பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவாக்சின் 

(covishield, covaxin) என்னும் இரண்டு வகையான 

தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்படுகின்றன.


முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களான 

மருத்துவர்கள், நர்சுகள், காவல்துறையினர் 

முதலியோருக்குப்  போடப்பட்டது. இவர்களின் 

எண்ணிக்கை மூன்று கோடி என்று மதிப்பிடப் 

பட்டது. இந்த மூன்று கோடிப்பேருக்கு தடுப்பூசி 

செலுத்தும் திட்டம் ஜனவரி 16, 2021 அன்று

தொடங்கி மார்ச்சில் முடிவுற்றது.


அடுத்து அ) 60 வயதினர் மற்றும் ஆ) 45 வயது 

நிரம்பியோரில் இரண்டு நோய்களை உடையவர்கள் 

ஆகியோருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் 

தொடங்கியது. மே முதல் தேதி தொடங்கி 

தற்போது வரை 18 வயது நிரம்பிய அனைவருக்கும் 

தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. 

மே மாத இறுதியில் ரஷ்யாவில் இருந்து 

தருவிக்கப்படும் ஸ்புட்னிக் வி (Sputnik V) என்னும் 

மூன்றாவது தடுப்பூசி விரைவில் செலுத்தப்பட உள்ளது.


சில அதிகாரபூர்வமான புள்ளி விவரங்களைப் 

பார்ப்போம். தற்போது மே 2021ல் தடுப்பூசி 

செலுத்துதலின் மூன்றாவது கட்டம் நடைபெற்றுக் 

கொண்டிருக்கிறது. மே 15, 2021 காலை  7 மணி 

நிலவரப்படி உள்ள தரவுகளைப் பார்ப்போம்.


இந்தியாவில் இதுவரை இரண்டு தவணைகளும் 

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை

18 கோடியைத் தாண்டி விட்டது (18,04,57,579).   

முதல் தவணை செலுத்திக் கொண்டோர் = 14 கோடி 

இரண்டாம் தவணை செலுத்தியோர் = 4 கோடி.


பொதுமக்களுக்கு தடுப்பூசி  போடத் தொடங்கியது 

மார்ச் 1 முதல். இன்று மே 15, 2021 வரை இரண்டரை 

மாதங்கள்தான் ஆகி உள்ளது. இந்த இரண்டரை 

மாதங்களில் 18 கோடிப்பேருக்கு தடுப்பூசி போடப் 

பட்டிருப்பது உலகில் வேறெந்த நாட்டிலும் 

இல்லாத ஒன்றாகும்.


இந்தியாவில் போடப்பட்ட 18 கோடி தடுப்பூசிகளில்

மூன்றில் இரண்டு பங்கு (67 சதவீதம்) தடுப்பூசிகள்  

10 மாநிலங்களில் போடப்பட்டு உள்ளன. அந்த 

10 மாநிலங்களும் பின்வருமாறு:-


1) மகாராஷ்டிரா 1 கோடியே 95 லட்சம் தடுப்பூசிகள் 

2) ராஜஸ்தான் 1 கோடியே 49 லட்சம் 

3) குஜராத் 1 கோடியே 48 லட்சம்

4) உத்திரப் பிரதேசம் 1 கோடியே 46 லட்சம்

5) மேற்கு வங்கம் 1 கோடியே 25 லட்சம் 

6) கர்நாடகம் 1 கோடியே 11 லட்சம் 

7) மத்தியப் பிரதேசம் 89 லட்சம் 

8) பீகார் 85 லட்சம் 

9) கேரளம் 82 லட்சம் 

10) ஆந்திரா 74 லட்சம்.


முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு இல்லை.

படித்தவர்கள் நிரம்பிய, முற்போக்காளர்கள் 

நிரம்பிய தமிழ்நாடு ஏன் முதல் பத்து 

இடங்களுக்குள் வரவில்லை?      


நியாயமாக தமிழ்நாடு அல்லவா தடுப்பூசி 

போடுவதில் முதல் இடத்தில் இருந்திருக்க 

வேண்டும்? ஆனால் இல்லையே!



ஞாயிறு, 9 மே, 2021

 கொரோனாவில் இருந்து தற்காத்துக் 

கொள்வது எப்படி?

சில எளிய வழிமுறைகள்!

------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம்

------------------------------------------------ 

1) தினமும் ஆவி பிடிக்கவும்! (steam inhaling) 

அது சுவாசப் பாதையைச் சீர் செய்யும்!


2) தினமும் குறைந்தது இரண்டு வேளை 

மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்த  

பாலை அருந்துக. சுகர் உள்ளவர்கள் 

நீர்த்த பாலில் மஞ்சள் தூள் சேர்த்து 

அருந்தலாம். இங்கு பால் அல்ல, மஞ்சளே  

முக்கியம்.


3) தினமும் வெயிலில் உடம்பு படும்படியாக 

அரை மணி நேரம் நிற்கவும். இது முக்கியம்.


4) இரண்டு தவணை தடுப்பூசிகளைப் 

போட்டுக்கொள்ளவும். தடுப்பூசி போடாமல் 

இருப்பது தற்கொலை செய்து கொள்வதற்குச் 

சமம்.


5) டெட்டால் சோப்புப் போட்டு தினமும் 

நன்றாகக் கை கழுவுக! தினசரி 10 முறை 

கழுவுதல் நல்லது.


6) முகக் கவசத்தைப் பெயருக்கு அணிவது 

கூடாது. ஏனோதானோ என்று அணியாமல் 

அக்கறையுடன் அணியவும்.

மருத்துவ முகமூடி(surgical mask),

துணி முகமூடி (cloth mask) ஆகிய 

இரண்டையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

துணி முகமூடிகளை நன்கு துவைத்து 

அணிந்து கொள்ளுவோர், அதிக காலத்திற்கு

ஒன்றையே அணிவதைத் தவிர்க்கவும்.

மூக்கு, வாய் இரண்டையும் நன்கு இறுக்கி 

மூடும் விதத்தில் முகமூடியை அணியவும்.    


7) உடலின் நோய்த்தடுப்புச் சக்தியை 

அதிகரிப்பதை நோக்கியே உங்களின்  

உணவு உட்கொள்ளுதல் இருக்க வேண்டும்.


8) மட்டன், மீன், சிக்கன், மாட்டுக்கறி 

ஆகியவை நல்ல புரதம் ஆகும். ஆனால் 

இறைச்சிக் கடையில் மணிக்கணக்கில் 

காத்துக் கிடந்து மட்டனோடு சேர்த்து 

கொரோனா வைரசையும் வாங்கிக் 

கொண்டு வீட்டுக்குப் போவது 

முட்டாள்தனம்.  


9) மீன் கடையிலும், இறைச்சிக் கடையிலும் 

தினமும் 5 நிமிட நேரம் நின்றாலே போதும்!

உங்களை கொரோனா வைரஸ் தொற்றிக் 

கொள்ளும் வாய்ப்பு (probability) மிக அதிகம்;

say 60%. 


இறைச்சிக் கடைகளில் கியூவில் 

நிற்பவர்கள் சமூக இடைவெளியைக் 

கடைப்பிடிக்க மாட்டார்கள்.மூன்று அடி 

இடைவெளியை இறைச்சிக் கடைகளில்

கடைப்பிடிக்க இயலாது. 

இதுவே உண்மை நிலை.      


10) எனவே இறைச்சி உண்பதைக் கைவிட்டு 

காய்கறிகளை (vegetables) வாங்கி உண்ணவும்.

இது பாதுகாப்பானது. கொரோனா வந்தாலும் 

கவலையில்லை; இறைச்சிதான் உண்பேன் என்று 

பிடிவாதம் பிடிப்பவர்கள், வாங்கிய இறைச்சியை 

நன்கு சுத்தம் செய்து, குக்கரில் வைத்து 

முழுமையாக வேகவைத்து உண்ணவும்.

முக்கால் வேக்காடு, முக்காலே அரைக்கால் 

வேக்காடு ஆகியவற்றைத் தவிர்க்கவும். 


11) இது வெயில் நேரம். எனவே தினமும் இரண்டு 

முறை குளிக்கவும். திருநெல்வேலிக்காரனுக்கு 

இதை நான் சொல்ல வேண்டியதில்லை. யாரும் 

சொல்லாமலே அவன் தினமும் குறைந்தது 

இரண்டு முறை குளிப்பான். இரண்டு முறை 

குளிக்க வேண்டும் என்ற கட்டளை அவனது 

DNAவில் உள்ளது.


12) அந்தரங்க சுத்தம், அந்தரங்க உறுப்புகளின் 

சுத்தம், மணிக்கணக்கில் உட்கார்ந்து இருக்கும் 

இடத்தின் சுத்தம், படுக்கையின் சுத்தம், 

உள்ளாடைகளின் சுத்தம் ஆகிய அனைத்தையும் 

பேணவும். படுக்கை விரிப்பை, தலையணை 

உறைகளை  அடிக்கடி மாற்றவும்; துவைக்கவும்.


13) கணவன் மனைவி உடலுறவு கொள்வதில் 

தடையில்லை. ஆனால் உறவுக்கு முன் இருவரும் 

நன்கு பல் துலக்கி, நன்கு குளித்து விடவும். 

உடலுறவின் FREQUENCY: Per day frequency, 

per week frequency, per month frequency

ஆகியவற்றை இயன்ற அளவு குறைவாக

வைத்துக் கொள்வது நல்லது. 

A very low frequency is safe.


14) கொரோனாவை மனித குலம் எதிர்த்துப் 

போராடி முறியடிக்கும். எனவே நம்பிக்கை

கொள்க. எச்சரிக்கையாக இருங்கள். அதே 

நேரத்தில் நம்பிக்கையோடு இருங்கள்.

மனிதனால் அனைத்தையும் வெல்ல 

முடியும் என்கிறார் கம்பர்! கல்வியில் 

பெரியவரான கம்பர்!


வேறுள குழுவை எல்லாம் 

மானுடம் வென்றதம்மா!

.....கம்பன்   

---------------------------------------------------

பின்குறிப்பு:

இக்கட்டுரையாளர் மருத்துவரோ தொற்றுநோய் 

நிபுணரோ (pathologist) அல்லர். எனினும் மக்களால் 

அங்கீகரிக்கப்பட்ட சிறந்த அறிவியல் பரப்புநர் 

(science communicator). உலக சுகாதாரக் கழகம் 

(WHO), இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை 

ஆகிய அமைப்புகளிடம் இருந்து கொரோனா (COVID 19)

பற்றிய அறிவுறுத்தல்களை நேரடியாகப் பெற்று 

மக்களுக்கு எடுத்துச் சொல்பவர்.


Print media, Visual electronic media, Social media ஆகிய 

ஊடகங்களிலும், பொதுவெளியிலும் கொரோனா 

குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். 

டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் ஈர்க்கப்பட்டு 

நியூட்டன் அறிவியல் மன்றம் என்னும் 

அமைப்பினை நிறுவி  கடந்த 20 ஆண்டுகளாக 

அறிவியலைப் பரப்பி வருபவர்.

*********************************************************      . 

        

 


கடைப்பிடிப்பதில்லை என்பதைப் பார்க்கிறோம்.

நிகழும் ஏற்படும் கூட்ட நெரிசலில்  

துவைத்த துணிகளை நல்ல வெயிலில் 

உலர்த்துங்கள். மொட்டை மாடிக்குச் 

சென்று வெயிலில் காயப்போடுங்கள். கொளுத்தும் 



கபசுரக் குடிநீரை தேவையை ஒட்டி அளவோடு 

அருந்தலாம். ஓரளவு குறைந்த விலையில் 

கிடைக்கும் ராஜம் சுக்கு காப்பியை அருந்தலாம்.


வெள்ளி, 7 மே, 2021

 காற்றில் கரைந்த கற்பூரமாக மார்க்சிஸ்ட் கட்சி!

மகிஷாஷுர மர்த்தினியாக மமதா பானர்ஜி!

2021 மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் புகுப்பாய்வு!

---------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------------

ஐகிரி நந்தினி நந்தித மேதினி

விஷ்வ வினோதினி நந்தனுதே 

கிரிவர விந்திய ஷிரோதினி வாஸினி 

விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுனுதே.  


மேற்கு வங்கத்தில் 2011 சட்ட மன்றத் தேர்தலில் 

மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைகிறது. மார்க்சிஸ்ட் 

முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆட்சியை 

இழக்கிறார். முதல் முறையாக மமதா பானர்ஜி 

2011 மே மாதத்தில் ஆட்சியைப் பிடிக்கிறார்.


மேற்கு வங்க சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 

294 இடங்களில் மமதாவின் திரிணமூல் கட்சி

184 இடங்களைப் பிடிக்கிறது. திரணமூல் கட்சியும்

காங்கிரசும் ஒரே கூட்டணியில் ஒன்றிணைந்து 

தேர்தலைச் சந்தித்தன. காங்கிரஸ் 42 இடங்களைப் 

பிடித்தது. திரிணமூல்+காங்கிரஸ் கூட்டணி 

226 இடங்களில் வென்றது/    


அப்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது 

முன்னணி பெற்றிருந்த இடங்கள் வருமாறு:-

மார்க்சிஸ்ட் CPM  = 40

கம்யூனிஸ்ட் CPI = 02

பார்வர்டு பிளாக் = 11

புரட்சி சோஷலிஸ்ட் RSP = 07

ஆக மொத்தம் இடது கட்சிகள் = 60.


சுருங்கக் கூறின்,

2011 சட்டமன்றத் தேர்தல், மேற்கு வங்கம்:

மொத்த இடங்கள் = 294

திரணமூல்+காங்கிரஸ் கூட்டணி = 226 (184+42)

இடது முன்னணி = 60.


இந்த 2011 தேர்தலில் பாஜக பிச்சரிலேயே 

இல்லை (Not in the picture) என்பது நம் கவனத்துக்கு 

உரியது. 2011 தேர்தலில் பாஜக போட்டி இட்டதா?

ஆம். 189 இடங்களில் போட்டி இட்டது. ஆனால் ஒரு 

இடம் கூட பாஜகவுக்கு கிடைக்கவில்லை..

***********

ஐந்தாண்டுகள் உருண்டோடின. 2016 தேர்தலும் 

வந்தது. திரிணமூல் கட்சியே மீண்டும் வெற்றி 

பெற்றது. இரண்டாவது முறையாக மமதா 

பானர்ஜி முதல்வர் ஆனார்.    

 

2016 தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது கூட்டணியை 

மாற்றிக் கொண்டது. 2011 தேர்தலில் திரிணமுல்

காட்ச்சியுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 

இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டுச் 

சேர்ந்தது.


மொத்தமுள்ள 294 இடங்களில், மார்க்சிஸ்ட் கட்சி

148 இடங்களிலும், காங்கிரஸ் 92 இடங்களிலும், 

மீதியில் சிறிய இடதுசாரிக் கட்சிகளும் 

போட்டி இட்டன. இவ்வாறு மார்க்சிஸ்ட்+காங்கிரஸ் 

கூட்டணி 294 இடங்களிலும் போட்டி இட்டது.


திரிணமூல் கட்சி 293 இடங்களில் தனித்துப் 

போட்டி இட்டது.  


பாரதிய ஜனதா கட்சி 291 இடங்களில் போட்டி 

இட்டது.  


தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.

திரிணமூல் கட்சி = 211.

மார்க்சிஸ்ட்+காங்கிரஸ் கூட்டணி = 76.

(காங்கிரஸ் = 44: மார்க்சிஸ்ட் = 26; பிற = 6).

பாஜக = 3.


திரிணமூல் கட்சியின் வாக்கு சதவீதம் = 44.91

மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் = 19.75

காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் =  12.25.

பாஜகவின் வாக்கு சதவீதம் = 10.16.


இந்த இடத்தில் இந்தியத் தேர்தல் முறையின் 

தனிச்சிறப்பு மிக்க ஒரு அம்சத்தைப் பார்ப்போம்.

வெற்றிக் கம்பத்தை யார் முதலில் தொடுவது 

என்னும் முறையே இந்தியத் தேர்தல் முறையாகும்.

ஆங்கிலத்தில் இது FIRST PAST THE POST எனப்படும்.


10.16 சதவீதம் வாக்குகளைப் பெற்ற பாஜக மூன்று 

இடங்களை மட்டுமே பெறுகிறது. பாஜகவை விட 

2.09 சதவீதமே கூடுதலான வாக்குகளைப் பெற்ற 

அதாவது 12.25 சதவீத வாக்குகளைப் பெற்ற

காங்கிரஸ் 44 இடங்களைப் பெறுகிறது.   

  

ஆக, 2016 மே மாதத்தில் மேற்கு வங்க சட்ட 

மன்றத்துக்குள் முதன் முறையாக மூன்று 

உறுப்பினர்களுடன் பாஜக நுழைகிறது. 

*************

சரி, இனி அண்மையில் நடந்து முடிந்த 2021

(முடிவு அறிவிப்பு: மே 2, 2021) சட்ட மன்றத் 

தேர்தலையும் முடிவுகளையும் பார்ப்போம்.


இடையில் 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் 

முடிவுகளை மனத்தில் கொள்ளுவோம்.

2019ல் கட்சிகள் பெற்ற இடங்கள் வருமாறு:-


மொத்த இடங்கள் -42

திரிணமூல் கட்சி = 22

பாஜக =18 

காங்கிரஸ் = 2

மார்க்சிஸ்ட் = 0. 


2021 சட்ட மன்றத் தேர்தலின்போது இரண்டு 

வேட்பாளர்கள் இறந்து விட்டதால், 

மேற்கு வங்கத்தில் 292 இடங்களுக்கு 

மட்டுமே தேர்தல் நடைபெற்றது.


இத்தேர்தலிலும் முன்பு போலவே காங்கிரசும் 

மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் 

கட்சிகளும் ஒரே கூட்டணியாக இருந்து 

தேர்தலைச் சந்தித்தன. 


திரிணமூல் கட்சி தனித்துப் போட்டி இட்டது. 

அது போலவே பாஜகவும் தனித்துப் போட்டி இட்டது. 

(எல்லாத் தரப்பிலும் கூட்டணியில் இடம் பெற்ற 

துண்டு துக்காணிக் கட்சிகளை நான் இங்கு 

கணக்கில் சேர்க்கவில்லை).

 

2021 தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

------------------------------------------------------------

கட்சி, வெற்றி, போட்டியிட்டது, வாக்கு சதம். 

திரிணமூல் = 213 (290ல் போட்டி), வாக்கு 47.94%

பாஜக = 77 (293); வாக்கு 38.13%

மார்க்சிஸ்ட் = 0 (137); வாக்கு 4.73%

காங்கிரஸ் = 0 (91); வாக்கு 2.94%


காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் பிற இடதுசாரிக் 

கட்சிகள் அனைத்தும் பெற்ற இடங்கள் பூஜ்யம்.

காங்கிரஸ் = பூஜ்யம் 

மார்க்சிஸ்ட் = பூஜ்யம் 

கம்யூனிஸ்ட் CPI = பூஜ்யம்.

பார்வர்டு பிளாக் = பூஜ்யம் 

புரட்சி சோஷலிஸ்ட் = பூஜ்யம்.


1977 ஜூனில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி

தொடங்கியது ஜோதிபாசு முதல்வராக இருந்தார்.

1977 ஜூன் முதல் 2000 நவம்பர் வரை ஜோதிபாசுவே 

முதல்வர். அடுத்து புத்ததேவ் பட்டாச்சார்யா 

நவம்பர் 2000 முதல் மே 2011 வரை முதல்வராக 

இருந்தார். ஜோதிபாசுவும் புத்ததேவும் சேர்ந்து 

35 ஆண்டுகள் NON STOPஆக மேற்கு வங்கத்தை 

ஆண்டனர்.


இவ்வளவு பாரம்பரியம் மிக்க மார்க்சிஸ்ட் கட்சி,

35 ஆண்டுகள் NON STOPஆக ஆண்ட மார்க்சிஸ்ட் 

கட்சி, இன்று காற்றில் கரைந்த கற்பூரமாக 

ஆகிப்போனது. இது ஏன்? என்ன காரணம்?

சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?


காங்கிரஸைப் பொறுத்தமட்டில், மேற்கு வங்க

மக்களால் கடவுளாக மதிக்கப்பட்ட பி சி ராய் 

(B C Roy), பி சி சென் (P C Sen), அஜய் முகர்ஜி,

Notorious சித்தார்த்த சங்கர் ரே என்று கொடி கட்டி 

ஆண்ட கட்சி.இன்று பூஜ்யத்தில் நிற்கிறது.


2016ல் 44 இடங்களை வென்ற காங்கிரஸ் 

2021ல் பூஜ்யம் ஆனது. மகிஷாஷுர மர்த்தினி

மமதா காங்கிரசைக் கொன்று விட்டார் 


2016ல் 26 இடங்களில் வென்ற மார்க்சிஸ்ட் கட்சி

2021ல் பூஜ்யம் ஆனது, முன்னதாக 2019 

நாடாளுமன்றத் தேர்தலிலும் பூஜ்யம் ஆனது.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் பெறுவது பூஜ்யம்.

காரணம் மகிஷாஷுர மர்த்தினி மம்தா

மார்க்சிஸ்ட் கட்சியை அடித்துக் கொன்று விட்டார்.     

மமதாவால் கொலை செய்யப்பட்டு இறந்து போன 

மார்க்சிஸ்ட் கட்சியை பாஜக குழி தோண்டிப் 

புதைத்து விட்டது. 


காங்கிரஸ் ஒரு பூர்ஷ்வாக் கட்சி. எனவே அது 

அழிவதிலோ, புழுத்துச் சாவதிலோ ஆச்சரியத்துக்கு 

இடமில்லை. ஆனால் வெல்லற்கரிய தத்துவமான 

மார்க்சியத்தால் வழிகாட்டப் பெற்ற மார்க்சிஸ்ட் 

கட்சி இப்படி INFINITYயில் இருந்து ZEROவுக்கு 

வந்து சேர்ந்திருப்பது.வியப்புக்கு உரியதுதான்.

A POINT OF NO RETURN என்ற இடத்துக்கு 

மார்க்சிஸ்ட் கட்சி வந்து சேர்ந்து விட்டது.

இது எப்படி நிகழ்ந்தது? 


இது குறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

***************************************************************


       

    

 

      

வியாழன், 6 மே, 2021

radio carbon dating

------------------------ 


கார்பன் அணுவுல 12 புரோட்டான், 12 நியூட்ரான், 12 எலட்ரான் இருக்கும்”


அதே மாதிரி கார்பன் 14 அப்படின்னு ஒரு ISOTOPE இருக்கு”
“ Carbon 14 ஆ”
“ஆமா. Carbon 14 ல, ரெண்டு நியூட்ரான் அதிகமா இருக்கும். அங்க 12 நியூட்ட்ரானுக்கு பதிலா 14 நியூட்ரான் இருக்கும்”
Carbon 14 கதிர்களை வெளியிடும். அதாவது Radio active rays வெளியிடும்”

“இப்ப என் உடம்புல எவ்வளவு Carbon 12 இருக்கோ அதே அளவுதான் Carbon 14 ம் இருக்கும். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் வெளியாகுற Carbon 14 ன என் உடம்பு வெளிய இருந்து எடுத்துக்கும்”
“அப்போ உயிரோட இருக்கிறவரைக்கும் நம்ம உடம்புல Carbon 12 ம் , Carbon 14 ம் சம அளவுல இருக்கும்”
“சமமா இருக்கும். மனிதனோட உயிர் போனதுக்கு பிறகு Carbon 14 கதிரா வெளியே போக ஆரம்பிக்கும்”
“ஒரு கிராம் கார்பன் 14 கதிரா வெளியேறி அரை கிராம் கார்பன் 14 ஆகறதுக்கு தோராயமா 5600 வருடங்கள் எடுத்துக்கும்”

“ஆமா அதோட எடைல பாதி ஆகுறதுக்கு Carbon 14 வந்து 5000 years எடுத்துக்கும். இத Half life period ன்னு சொல்லுவாங்க”
“இப்ப ஒரு பழமையான பொருளோட வயதை கண்டுபிடிக்க அதுல ஒரு பகுதி எடுத்துப்பாங்க. அதுல இருக்கிற Carbon 12 அளவ கணக்கிடுவாங்க. அது 100 சதவிகிதம்னு எடுத்துப்பாங்க. அப்புறம் அதுல Carbon 14 எவ்வளவுன்னு கணக்கிடுவாங்க. Carbon 12 இருக்கிற அளவுல Carbon 14 எவ்வளவு இருக்குன்னு பாப்பாங்க”
“அத வைச்சி Carbon 14 சதவிகிதம் கணக்கிடுவாங்க அப்படித்தானே”
இப்போ Carbon 14 பாதி அளவுதான் இருக்குதுன்னா அது 50% இருக்குன்னு அர்த்தம்”
“ஒஹோ”
”Carbon 14 100% to 50 % ஆக எவ்ளோ வருசம் எடுத்துக்கும்”
“5600 வருடங்கள்”
“அப்போ அந்த பொருளோட வயது 5600 வருடங்கள்”
“ஒருவேளை Carbon 14 வந்து 25 % இருந்தா.”
“ 100 டு 50 அக 5600 வருடங்கள். 50 டூ 25 ஆக 5600 வருடங்கள் மொத்தமா”
“5600 + 5600 = 11200 வருடங்கள்
”இதை அடிப்படையா வைச்சி அதுக்கு ஃபார்முலா இருக்கு. அத வைச்சி வயசு கண்டுபிடிப்பாங்க. இதுதான் Carbon dating.

 மேற்கு வங்கம் 2021 தேர்தல் முடிவு பகுப்பாய்வு 

--------------------------------------------------------------------------

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்ற 

இடம் = 77. இதில் 41 பேர் தலித்துகள் (SC ST)

இவர்கள் மேற்கு வங்கத்தின் பூர்வ குடிகள்.  

சட்டமன்றத் தேர்தல், 2016 முடிவுகள்
திரிமுனால் காங்கிரஸ் .. 44.91% ( 211 )
கம்னியூஸ்ட்.. 19.75% ( 26 )
காங்கிரஸ்.. 12.25% ( 44 )
பிஜேபி... 10.16% ( 3 )
#சட்டமன்றத் தேர்தல், 2021 முடிவுகள்
திரிமுனால் காங்கிரஸ் .. 47.94% ( 213 )
கம்னியூஸ்ட்.. 4.72% ( 0 )
காங்கிரஸ்.. 2.94% ( 0 )
பிஜேபி... 38.13% ( 77 )
பிஜேபி 10 % ல் இருந்து 38% ஒட்டு வாங்கி இருக்கிறது.. 3 ல் இருந்து 77 தொதியை பிஜேபி கைப்பற்றி உள்ளது
இந்த கேடு கெட்ட காங்கிரஸ் 12% ல் இருந்து 2% ஒட்டு வாங்கி இருக்கிறது..
கம்னியூஸ்ட் காங்கிரஸ் இரண்டும் சேர்ந்து 2016 ல் 32 % ஒட்டு வாங்கியிருக்கிறது .. 2021 ல் இரண்டும் சேர்ந்து 4.72% ஒட்டு வாங்கியிருக்கிறது..
இவ்வளவு மோசமாக கம்னியூஸ்ட் காங்கிரஸ் ஒட்டு வங்கியை இழந்த பிறகும் 90 தொகுதிகளில் மம்தா 1000 க்கும் குறைவான ஓட்டில் ஜெயித்து இருக்கிறார் .. அப்படியானால் பிஜேபியின் பலத்தை பாருங்கள்
டெல்லியில் என்ன நடந்ததோ அதுவே வங்காளத்தில் நடந்து உள்ளது ,, அதாவது காங்கிரஸ் கம்னியூஸ்ட் இரண்டு கட்சியினரும் பிஜேபி வர கூடாது என்று திரிமுனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போட்டு விட்டார்கள் .. இதுதான் அங்கேயும் நடந்தது
காங்கிரஸ் காரன் செயலை பாருங்கள் தனக்கு இரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்பது தான்
விளைவு காங்கிரஸ் கட்சிக்கு இருந்த 44 தொகுதியும் காணாமல் போயாச்சு .. அரக்கி ஆட்சியில் அமர்ந்தாள் இதுல வேற இவங்க தலைவர் ராகுல் காந்தி பிஜேபி யை அழித்த மம்தா வாழ்க என்று வாழ்த்து சொல்லுகிறார்.. தன் கட்சியை தேட வக்கில்லாத ராகுல் அடுத்தவரை புகழ்கிறார்

திங்கள், 3 மே, 2021

 பாஜகவுக்குப் பல்லக்குத் தூக்கும் அதிமுக!

பல்லக்குத் தூக்குவதில் முன்னோடி யார்?

---------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி

--------------------------------------------------------  

அன்று 2001 சட்டமன்றத் தேர்தலில் 

திமுகவுடன் பாஜக கூட்டணி கண்டது!

4 இடங்களில் பாஜக வெற்றி!


1) காரைக்குடி:: ஹெச் ராஜா 

2) மயிலாடுதுறை: ஜெகவீர பாண்டியன் 

3) மயிலாப்பூர்: கே என் லட்சுமணன் 

4) தளி: கே வி முரளிதரன் 

ஆகிய நான்கு பேரை தமிழக சட்டமன்றத்துக்கு 

அழைத்துச் சென்றார் கலைஞர்.


தற்போது, 20 ஆண்டு கழித்து, 2021ல் 

அதிமுக நான்கு பேரை சட்டமன்றத்துக்கு 

அழைத்துச் செல்கிறது. அதிமுகவுடன்  

பாஜக கூட்டணி! பாஜக 4 இடங்களில் வெற்றி!


1) திருநெல்வேலி: நயினார் நாகேந்திரன் 

2) நாகர்கோவில்: எம் ஆர் காந்தி 

3) மொடக்குறிச்சி: டாக்டர் சி கே சரஸ்வதி 

4) கோவை தெற்கு: வானதி சீனிவாசன்.


திமுகவும் அதிமுகவும் சரி சமம்! இரண்டு 

கட்சிகளுமே பாஜகவுக்கு சேவகம் செய்த  

கட்சிகள்தான்! அன்று வாஜ்பாய்க்கு காவடி 

எடுத்தார் கலைஞர். இன்று மோடிக்கு காவடி 

எடுக்கிறார் எடப்பாடியார். 


தூக்கி வைத்த கால்களுக்கு முருகையா!

துத்திப்பூ ஜல்லடமாம் முருகையா!

எடுத்து வைத்த கால்களுக்கு முருகையா!

எருக்கம்பூ ஜல்லடமாம் முருகையா!

(திருச்செந்தூர் முருகன் காவடிப் பாட்டு)   


அன்று 2001ல் தமிழக பாஜக தலைவர் 

டாக்டர் கிருபாநிதி! இன்று தமிழக பாஜகவின்  

தலைவர் டாக்டர் எல் முருகன்.


அன்று 2001ல் திமுக பாஜக கூட்டணியில் 

இடம் பெற்று பாஜகவுக்கு பல்லக்குத் தூக்கிய 

கட்சிகள் எவை எவை என்று பார்ப்போம்!


பல்லக்கினுள்ளே ஹெச் ராஜா அமர்ந்திருக்கிறார்.

பின்வரும் கட்சிகள் பல்லக்கைத் தங்களின் 

தோள்களில் தூக்கிச் சென்றன.


1) திமுக (பல்லக்குத் தூக்கியவர் கலைஞர்)  

2) புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி) 

3) புதிய நீதிக் கட்சி (ஏ சி சண்முகம்)  

4) விடுதலைச் சிறுத்தைகள் (தொல் திருமாவாவன்)

விசிக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 

போட்டி இட்டது.

5) காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை (ப சிதம்பரம்)

இக்கட்சி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 

போட்டி இட்டது.

6) தமிழக முஸ்லீம் இயக்க ஜமாஅத் (ஜெ எம் ஹாரூன்)   

இக்கட்சியும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 

போட்டி இட்டது.


மேலும் 7) மக்கள் தமிழ் தேசம் (எஸ் கண்ணப்பன்)

8) எம்ஜியார் அதிமுக (எஸ் திருநாவுக்கரசர்)

9) எம்ஜியார் கழகம் (ஆர் எம் வீரப்பன்)

10) கொங்குநாடு மக்கள் கட்சி (ஏ எம் ராஜா)

11) தமிழர் பூமி (கு ப கிருஷ்ணன்)

12) தமிழ்நாடு முத்தரையர் சங்கம் (குழ செல்லையா)   

13) தொண்டர் காங்கிரஸ் (குமரி ஆனந்தன்)

14) இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி 

(வேட்டவலம் மணிகண்டன்)   

     

ஆகிய மேற்கூறிய 14 கட்சிகளும் திமுக-பாஜக 

கூட்டணியில் இடம்பெற்று பாஜகவுக்கு 

சேவகம் செய்தன. ஹெச் ராஜாவுக்கு 

பல்லக்குத் தூக்கின.


பல்லக்கினுள் சொகுசாக அமர்ந்திருந்தார் 

ஹெச் ராஜா. கலைஞரோடு சேர்ந்து 

ஹெச் ராஜாவுக்குப் பல்லக்குத் தூக்கியவர்களில் 

காங்கிரசின் ப சிதம்பரம், ஜே.எம் ஹாரூன்,

குமரி அனந்தன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

மேலும் மிகவும் சிறப்பாக பல்லக்குத் தூக்கியவர் 

தொல் திருமாவளவன் அவர்கள்.


பாஜகவின் ஹெச் ராஜா உட்படநான்கு பேரை 

இவர்கள் பல்லக்குத் தூக்கி தமிழக சட்ட 

மன்றத்துக்குச் சுமந்து சென்று சட்டமன்ற 

இருக்கைகளில் அமர்த்தினார். 


ஹைகோர்ட்டானது மயிராவது என்று பேசினார்  

ஹெச் ராஜா! இந்தத் திமிர் அவருக்கு எங்கிருந்து 

வந்தது?


அந்தத் திமிர் கலைஞரால் வந்தது!

அந்தத் திமிர் ப சிதம்பரத்தால் வந்தது!

அந்தத் திமிர் தொல் திருமாவளவனால் வந்தது.


கலைஞரும் ப சிதம்பரமும் தொல் 

திருமாவளவனும் போட்டி போட்டுக் கொண்டு 

பல்லக்குத் தூக்கினால், ஹெச் ராஜாவுக்கு 

திமிர் வரத்தானே செய்யும்?


இன்று பாஜக எதிர்ப்புப் பேசும் அத்தனை பேரும்

அன்று 2001ல் பாஜகவுக்கு பல்லக்குத் தூக்கியவர்களே.

இவர்கள் யாரும் புனிதர்கள் அல்ல.

இவர்கள் எல்லோருமே பாஜகவிடம் சோரம் 

போனவர்கள்தானே! 


இது கல்லில் எழுத்தாக எழுதப்பட்ட தமிழகத்தின் 

அண்மைக்கால வரலாறு! நான் ஏதோ ஹைதர் அலி 

காலத்தின் வரலாற்றைச் சொல்லவில்லை.

இது நேற்றைய வரலாறு!  2001ன் வரலாறு!

வெறும் 20 ஆண்டுக்கு முந்திய தமிழக வரலாறு!

இதை எவராவது மறுக்க முடியுமா?

மறுத்துப் பார் என்று சவால் விடுகிறேன்.


பாஜக வாழ்க! பல்லக்குத் தூக்கிகள் வாழ்க!

பல்லக்குத் தூக்கி கலைஞர் 

பல்லக்குத் தூக்கி ப சிதம்பரம் 

பல்லக்குத் தூக்கி தொல் திருமாவளவன்

பல்லக்குத் தூக்கி ஜே எம் ஹாரூன் 

ஆகியோரின் செயலைப் போற்றுவோம்!


அவர்களின் வழியில் தொடர்ந்து பாஜகவிடம் 

சோரம் போவோம்!

Lightly, O lightly we bear her along,

We bear her along like a pearl on a string.

She sways like a flower in the wind of our song;

She skims like a bird on the foam of a stream,

She floats like a laugh from the lips of a dream.

Gaily, O gaily we glide and we sing,

We bear her along like a pearl on a string.

(The palanquin bearers, a poem by Sarojini Naidu) 

*******************************************************

      



 .