செவ்வாய், 31 மார்ச், 2020

குரோனி முதலாளித்துவமும்!
கொரோனா நிவாரணமும்!
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
1995ல் நரசிம்மராவ் காலத்தில் LPG கொள்கைகள்
அறிமுகமாகி நாட்டின் பொருளாதாரத்தையே
திசை திரும்பின. உலக வர்த்தகக் கழகத்தில்
நாம் உறுப்பினர் ஆனோம். இந்தியச் சந்தையில்
அந்நிய நாட்டுப் பொருட்கள் மண்டின.

ஒவ்வொரு ஊரிலும் புதுப் பணக்காரர்கள்
தலையெடுத்தார்கள். இவர்கள் அனைவருமே
அரசியலில் ஈடுபட்டு தங்களின் செல்வாக்கை
அரசியலில் ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள்.

இந்த மில்லேனியத்தின் பிறகான காலக்கட்டத்தில்
இவர்கள் குரோனி முதலாளிகளாக ஆகிப்போனார்கள்.
இத்தகைய குரோனி முதலாளியத்துக்கு ஆக்கமும்
ஊக்கமும் தந்த டாக்டர் மன்மோகன் சிங்கின்
ஆட்சியில் இவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ச்சி அடைந்தார்கள்.

பாரம்பரிய முதலாளிகளின் ஒழுங்கோ சட்ட திட்டமோ
குரோனிகளுக்குக் கிடையாது. எந்த ஒரு ORDERம் அவர்கள்
அறிய மாட்டார்கள். எந்தச் சட்டத்தையும் அவர்கள்
மதிக்க மாட்டார்கள். இவர்களே குரோனிகள்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ராமலிங்க ராஜூவை
உங்களுக்குத் தெரியுமா? இவன் ஒரு குரோனி.

நம்மூர் மாறன் குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறன்
ஒரு குரோனி; இவர் ஒரு பெருங்குரோனி ஆவார்.

ராஜாத்தி அம்மாள் இன்னொரு பெருங்குரோனி. பாரம்பரிய
பூர்ஷ்வா ரத்தன் டாட்டாவின் கண்ணில் விரலை விட்டு
ஆட்டியவர் குரோனி ராஜாத்தி அம்மாள். டாட்டாவின்
சொத்துக்களைத் தான் அபகரித்துக் கொண்டவர்
பெருங்குரோனி ராஜாத்தி அம்மாள். மனிதகுல வரலாறு
கண்டும் கேட்டும் இராத புழுவினும் இழிந்த ஈனத்
தற்குறியான ராஜாத்தி அம்மாள் பாரம்பரிய
பூர்ஷ்வாவான ரத்தன் டாட்டாவின் சொத்துக்களை
அபகரித்துக் கொள்ள முடிகிறது என்றால், குரோனி
முதலாளியத்தின் செல்வாக்கு எத்தகையது என்று
புரிந்து கொள்ளலாம்.

ரத்தன் டாட்டாவுக்கு போன் செய்து அவர் ஒரு குறிப்பிட்ட
துறையில் செய்து வரும் தொழிலை விட்டு விட
வேண்டும் என்று மிரட்டியவர் தயாநிதி மாறன்.
ஆங்கிலப் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு
இந்தச் செய்தி நினைவிருக்கும்.

கொரோனா நிவாரணத்துக்காக பிரதமரும் மாநில
முதல்வர்களும் நிதி கேட்கிறார்கள். பாரம்பரிய
பூர்ஷ்வாக்கள் அனைவரும் கொடுக்கிறார்கள்.
முதல் ஆளாக ரூ 1500 கோடியை டாட்டா கொடுத்துள்ளார்.
முகேஷ் அம்பானி ரூ 500 கோடி கொடுத்துள்ளார்.
அத்துடன் கொரோனா சிகிச்சைக்கான இந்தியாவின் முதல்
மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்துள்ளார்.

குரோனி முதலாளிகளுக்கு இத்தகைய கட்டு திட்டம்
எதுவும் கிடையாது. கொள்ளை அடிப்பது தவிர
வேறு எதிலும் அவர்களுக்கு அக்கறை கிடையாது.
அவர்களும் நன்கொடை கொடுப்பார்கள். எப்போது
தெரியுமா? அரசுக்கு ரூ 1 கோடி நன்கொடை கொடுத்தால்
ரூ 100 கோடி கொள்ளை அடிக்கலாம் என்று இருந்தால்
குரோனிகளும் நன்கொடை கொடுப்பார்கள்.

எனவே தமிழ்நாட்டுக் குரோனிகள் மாறன் குழுமமும் சரி,
ராஜாத்தி அம்மாளும் சரி கொரோனா நிவாரணம் எதுவும்
வழங்கப் போவதில்லை. இதுவே உண்மை!
*****************************************************************











  .   


  

ஞாயிறு, 29 மார்ச், 2020

பொது சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான
சீழ் பிடித்த மூளையின் வக்கிரத்தை முறியடிப்போம்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
அண்மையில் முதல்வர் எடப்பாடி ஓர் அறிவிப்பைச்
செய்தார். தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும்
மருத்துவத் துறையில் பணியாற்றும் அத்தனை
சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஒரு மாதச் சம்பளத்தை
கூடுதலாக வழங்குவதாக அறிவித்தார்.

MBBS டாக்டர்கள், கம்பவுண்டர்கள், செவிலியர்கள்,
ஆண் நர்சிங் உதவியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், மருத்துவமனையின்
துப்புரவுப் பணியாளர்கள் என அனைவருக்கும்
ஒரு மாதச் சம்பளம் கூடுதலாகக் கிடைக்கும்.

கூடுதல் சம்பளம் பெறுபவர்களில் MBBS டாக்டர்கள்
10 சதத்திற்கும் குறைவாகத்தான் இருப்பார்கள். அரசின்
இந்த அறிவிப்பால் அதிகம் பயனடையக் கூடியவர்கள்
சமூகத்தின் அடித்தட்டில் வாழும் துப்புரவுப்
பணியாளர்களும் செவிலியர்களுமே.  
 
ஆரோக்கியமான மனநிலை உடைய யார்  எவரும்
ஒரு மாதச் சம்பளத்தைக் கூடுதலாக வழங்கும்
அரசின் இந்த அறிவிப்பை வரவேற்பது இயல்பு.
ஆனால் புழுக்கள் நெளியும் சீழ் பிடித்த மூளையைக்
கொண்ட ஒரு வக்கிர ஆசாமி, மூத்த பத்திரிகையாளர்
என்ற போர்வையில், தனது மடமையை வெளிப்படுத்தி
உள்ளதைப் பாருங்கள். .

சாவித்திரி கண்ணன் என்ற பெயரில் உள்ள இந்த
வக்கிர ஆசாமி எழுதியதைப் பாருங்கள்:
"மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாதசம்பளம் கூடுதல்  
போனஸ் அறிவித்து மற்றதுறை பணியாளர்கள் குறிப்பாக 
காவல்துறையினரின் வயிற்றெரிச்சலை டாக்டர்கள் மீது திருப்பிவிட்டதோடு,மக்களிடமும் டாகடர்களுக்கே அள்ளி 
வழங்கியவள்ளல் என்ற பெயரும் பெற்றாயிற்று"!

மருத்துவப் பணியாளர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் 
வழங்கியதால், மற்றத் துறைப் பணியாளர்களுக்கு 
எந்த வயிற்றெரிச்சலும் இல்லை. மருத்துவமனையின் 
கக்கூஸ்களைக் கழுவுகின்ற, நோயாளிகளின் புண்களில் 
வழியும் குருதியையும் சீழையும் துடைத்த பேன்டேஜ்
துணிகளை அப்புறப் படுத்தும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் 
நர்சுகளுக்கும், ரத்தம் மலம் மூத்திரம் என்று பரிசோதனைகளைச் 
செய்யும் ஆய்வக உதவியாளர்களுக்கும்  அரசு ஒரு மாத 
ஊதியத்தை வழங்குவதால் யார் எவருக்கும் பொறாமை இல்லை.

தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை இயல்பு பற்றி ஒரு 
இழவும் தெரியாத சாவித்திரி கண்ணன் தன்னுடைய 
மூடத்தனத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அதிதீவிர 
கம்யூனிச எதிர்ப்பாளர் சோ ராமசாமி அவர்களின் 
உப்பைத் தின்று உயிர் வாழ்ந்த இந்த சாவித்திரி கண்ணன் 
இயல்பிலேயே தொழிலாளி வர்க்க விரோதியாக இருப்பதைப் 
புரிந்து கொள்ள முடிகிறது.

சாவித்திரி கண்ணன் போன்ற ஒரு கம்யூனிச விரோதி மட்டுமே 
ஒட்டு மொத்தத் தொழிலாளி வர்க்கத்தை இழிவுபடுத்தி எழுத 
முடியும். கக்கூஸ் கழுவுகிற ஆயாவுக்கு அரசு ஒரு மாத
ஊதியத்தை வழங்கினால், மற்றத் துறையின் அரசு 
ஊழியர்கள் எப்படியடா பொறாமை கொள்வார்கள்?
எப்பேர்ப்பட்ட மானுட விரோதச் சிந்தனை!

போலீஸ்காரன் சொன்னானாம்! எழுதுகிறார்  சாவித்திரி 
கண்ணன்! போலீசுக்கு ஆள்காட்டுகிற புத்தி!

காலமெல்லாம் கம்யூனிச விரோதியாக, மார்க்சிய எதிர்ப்பு 
முகாமின் தலைமைச் சிந்தனையாளர் துக்ளக் சோவின் 
எடுபிடியாக வாழ்ந்த சாவித்திரி கண்ணன் தொழிலாளிகளை 
இழிவு படுத்தி எழுதட்டும். அது அவரின் பிறப்புரிமை.
அதற்குத்தான் அவர் சம்பளம் பெறுகிறார். ஆனால் அவரைத் 
தண்டிப்பது எங்களின் வர்க்கக் கடமை.

கொரோனா பிரச்சினை எல்லாம் முடிந்ததும், அரசு ஊழியர்களின் 
ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறேன். அதற்கு சாவித்திரி கண்ணன் 
வர வேண்டும். வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்.

கடந்த 37 ஆண்டுகளாக தீவிரமாகத் தொழிற்சங்க இயக்கத்தில் 
செயல்பட்டவன் என்ற முறையில் சொல்லுகிறேன்.
தொழிற்சங்க இயக்கம் என்பது தயிர்சாத இயக்கம் அல்ல.
தொழிற்சங்க இயக்கத்தில் வன்முறையைத் தவிர்ப்பது 
என்பது யாராலும் இயலாது.எங்களின் கட்டளைகளைக்குக்  
கீழ்ப்படிய மறுத்தால், வன்முறையைப் பிரயோகிப்போம்.
****************************************************************************************

கோடிக்கால் பூதமடா- தொழிலாளி 
கோபத்தின் ரூபமடா! 




மருதுபாண்டியன்   சாவித்திரி கண்ணன் 
 

சென்னை GHல் உள்ள கக்கூஸ்களை சாவித்திரி கண்ணன் 
போய்க் கழுவட்டும். கூடுதலாக இரண்டு மாத 
ஊதியத்தை அவருக்கு வழங்க நாங்கள் தயார்.
கக்கூஸ் கழுவ சாவித்திரி கண்ணன் தயாரா?


இதெல்லாம் UNENVIABLE JOB என்ற அறிவு கூட 
சாவித்திரி கண்ணனுக்கு கிடையாதா?

படத்தைப் பதிவேற்றும் அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் 
கொடுப்பது தகாது. தாங்கள் கூறியபடி, சோ அவர்கள் 
முதல்வரின் அறிவிப்பை வரவேற்று இருப்பார் என்பதை 
நான் அறிவேன். சாவித்திரி கண்ணன் ஜல்லடை போன்றவர்.
சோ அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களைக் கூட 
அவர் கைவிட்டு விட்டார்.


கொரோனா ஸ்பெஷல் டியூட்டியில் பணிபுரியும் 
அனைவருக்கும் கூடுதல் ஊதியம் வழங்கப் படுகிறது.  உ 

இந்தியப் பெருமுதலாளி டாட்டா கொரோனாவை  ஒழிக்க 
ரூ 500 கோடி வழங்கினார். அடுத்து ரூ 1000 கோடி 
வழங்குவதாக அறிவித்துள்ளார். கலாநிதி மாறன் 
எதுவும் வழங்குவாரா?

நீங்கள் நகைச்சுவைக்காக எழுதுவதை திமுககாரன் 
உண்மை என்று நினைக்கப் போகிறான். அவன் மூளை 
அவ்வளவுதான்.


அவர்களின் உணவுமுறையைத் தடை செய்யக் கோருவதற்கு
யாருக்கும் உரிமை இல்லை. அவன் மலத்தைக் கூட 
உண்பான். அதை நம்மால் தடுக்க இயலுமா?
நாம் அவனுடைய உணவுமுறையைப் பின்பற்றாமல் 
இருந்து கொள்ள வேண்டியதுதான்.  


உண்மைதான். உண்மையாக இருப்பதனாலேயே 
ஒரு விஷயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று 
ஏதேனும் ஒரு சட்டம் இந்த உலகில் இருக்கிறதா?
இல்லை. சீனா மீது விசாரணை கொண்டு வர 
முடியுமானால், அது மிகப்பெரிய விஷயம்.
போர்க்குற்றம் போன்றதே கொரோனா வைரஸைப் 
பரப்பிய குற்றமும்.


கலாநிதி மாறனின் குழுமம் கண்டிப்பாக நிதி 
கொடுக்க வேண்டும். நேர்மையற்ற கொடிய சுரண்டல் 
ஆசாமியான கலாநிதி மாறனுக்கு 
திமுக என்று வக்காலத்து வாங்குவது சரியல்ல.
அவன் காசு கிடைத்தால் இந்தக் கட்சியிலும் சேருவான்.  
ஆசியாவின் முதல் கோடீஸ்வரன்தானே  மாறன்?
கொடுத்தால் என்ன? கையில் குஷ்டம் வந்து விடுகிறதா?    
CSR படி கொடுக்க வேண்டும் அல்லவா?

இது என்ன கயவாளித்தனத்துக்கு வக்காலத்து?
நிதி கொடுக்கவில்லை என்றால் ரோட்டில்  இழுத்துப் 
போட்டு அடிக்க வேண்டுமா அல்லது வக்காலத்து 
வாங்கி கொண்டு இருக்க வேண்டுமா?
கனிமொழி ஏன் இன்னும் தொகுதி நிதியில் இருந்து 
கொரோனா ஒழிப்புக்கு ஒதுக்கவில்லை? அநேகமாக 
எல்லாக் கடசி எம்பிக்களும் ஒதுக்கி விட்டனர்.
கனிமொழியைத் தவிர.
இதெல்லாம் நியாயமா?



ட்ராவிடின்   சு.மனோகரன் சுப்பிரமணியன் 


நாஷ் சமநிலை என்றால் என்ன என்று தெரியாத 
யார் எவராலும் இக்கட்டுரையைப் புரிந்து 
கொள்ள முடியாது.

ஆம், ஆம், துக்ளக் சோவிடமும் அவரின் சீடர்களிடமும் 
சமூக அக்கறை மேலோங்கி நிற்கிறது என்பதுதான் 
உங்களின் பார்வையாக இருக்க முடியும்.

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டது என்ன? 
கொரோனா ஸ்பெஷல் டியூட்டியில் உள்ள மருத்துவ, துப்புரவுப் 
பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் அரசு தருகிறது. 
இதில் மற்றப் பிரிவு ஊழியர்களுக்கு எங்கிருந்து வயிற்று 
எரிச்சல் ஏற்படுகிறது? தொழிலாளர்கள் 
என்ன அவ்வளவு கேவலமானவர்களா?

இதற்கு பதில் சொல்லத் துப்பு இல்லாமல்,     
பதிவுக்குத் தொடர்பற்ற விதத்தில் எதை எதையோ 
உளறுவது நேர்மையற்ற செயல் ஆகும்.

கொரோனா விஷயம் முடியட்டும். நாடு சகஜ நிலைக்குத் 
திரும்பட்டும். அரசு ஊழியர்களின் கூட்டத்தைக் கூட்டுகிறோம்.
அதற்கு நீங்கள் இருவரும் வாருங்கள். தொழிலாளி வர்க்கம் 
என்ன கருதுகிறது என்று நேரில் உணருங்கள். கண்டிப்பாக 
சோ அபிமானிகளான நீங்கள் இருவரும் வர வேண்டும்.
  




திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் பின்னூட்டங்கள் 
அனுமதிக்கப் பட மாட்டாது. 


சன் குழுமம் சுரண்டலைத் தவிர வேறு எதையும் 
அறியாத கயவாளிக் குழுமம். சன் டிவியில் வேலை 
செய்வோருக்கு என்ன சம்பளம் தருகிறார்கள் என்று 
அன்று முதல் இன்று வரை எனக்குத் தெரியும். கொடிய 
சுரண்டல்! 

எந்தத் தர்க்க பூர்வமான விஷயமும் இல்லாத 
பின்னூட்டங்களை எழுதி நேர விரையம் ஏற்படுத்துகிறீர்கள்.
சன் டிவியில் என்ன சம்பளம்? மற்ற டிவியில் என்ன 
சம்பளம்? என்று தெரிந்து கொண்டு பேசும் யாராலும் 
சன் டிவிக்கு வக்காலத்து வாங்க முடியாது.



  
தங்களின் ஒரு நாள் சம்பளத்தை பிரதமரின் 
கொரோனா ஒழிப்பு நிதிக்கு வழங்கும் 
13 லட்சம் ரயில்வே ஊழியர்களை வணங்குவோம்!









   
    

சனி, 28 மார்ச், 2020

கொரோனா ஒழிப்புக்கு தொகுதி நிதியில்
இருந்து ரூ 1 கோடியே 32 லட்சம் வழங்கிய
ஜோதிமணி MPயின் காலில் விழுந்து வணங்குகிறேன்.

(கரூர்) அவர்களைப் பாராட்டுகிறேன்.

திருநாவுக்கரசர், தமிழச்சி தங்கப்பாண்டியன்,
செந்தில்குமார் (தர்மபுரி), P R நடராசன் (கோவை)
பாரிவேந்தர் ஆகிய MPக்கள் தொகுதி நிதியிலிருந்து
ரூ 1 கோடி ஒதுக்கீடு!     கொரோனா தடுப்புக்கு


இது திமுக கயவர்கள் கிளப்பி விட்ட பொய்.
எந்த ஒரு அரசு மருத்துவ மனையிலும், அரசின்
பரிசோதனை மையங்களிலும் கொரோனா
பரிசோதனை இலவசம். இதுதான் உண்மை.


பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தரும்
தொகுதி நிதியில் இருந்து ரூ 1 கோடி வழங்கி உள்ளார்

அதைக்கூடச் செய்யவில்லையே கனிமொழி!


மாறன் குழுமம் கொரோனா ஒழிப்புக்கு
வழங்கிய நிதி எத்தனை கோடி?
----------------------------------------------------------
முதல்வர் எடப்பாடியின் வேண்டுகோளை ஏற்று
தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்
தங்களின் ஒருநாள் ஊதியத்தை கொரோனா
ஒழிப்பு நிதிக்கு அளிக்க உள்ளனர்.

என்னுடைய ஒருநாள் பென்ஷனை முதல்வரின்
நிவாரண நிதிக்கு அனுப்புகிறேன். தற்போது
என்னுடைய வசதி இவ்வளவுதான்!

உழைக்கும் வர்க்கம் தனது சமூகக் கடமையைத்
தயக்கமின்றி ஆற்றி வருகிறது.

ஆசியாவின் பெரும் கோடீஸ்வரக் குடும்பம்
மாறனின் குடும்பம். பெருந்தொழில் அதிபர்கள்
அவர்கள். இதுவரை கொரோனா ஒழிப்புக்கு
பத்துப்பைசா அறிவிக்கவில்லை.

அதனால் என்ன? கலாநிதி மாறனுக்கு முட்டுக்
கொடுக்க கணக்கற்ற சமூக விரோதிகள் வருவார்கள்.
கலாநிதி மாறனின் கூலிப்படை மாறன் குடும்பத்தின்
சுரண்டலை நியாயப் படுத்தும்.
***************************************************



 





வெள்ளி, 27 மார்ச், 2020

கொரோனாவில் இருந்து மயிரிழையில்
உயிர் தப்பிய ராகுல்காந்தி!
------------------------------------------------------------
இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்லசுக்கு கொரோனா
அறிகுறிகள் இருப்பதாகச் செய்தி வந்துள்ளது.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் தன்னைத்
தனிமைச் சிறையில் அடைத்துக் கொண்டுள்ளார்
என்றும் செய்தி வந்துள்ளது.

ஏழை பணக்காரன் வேறுபாடின்றி குப்பன் சுப்பன்
முதல் நாட்டின் அதிபர் வரை கொரோனா பீடித்து
விடுகிறது.

கொரோனாவில் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட
இத்தாலி நாட்டுக்குச் சென்றிருந்தார் ராகுல் காந்தி.
இளைஞரான அவர் அங்கு பல்வேறு கேளிக்கை
விருந்துகளில் பங்கேற்று இருக்கக்கூடும்.

உரிய நேரத்தில் இந்தியா திரும்பினார். அவருக்கு
கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில்
சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. நல்ல வேளையாக
அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதியானது.
மேலும் சில நாட்கள் இத்தாலியில் இருந்திருந்தால்,
அவரை கொரோனா பீடித்து இருக்கக்கூடும்.
கொரோனா பாதிப்பில் சிக்காமல் மயிரிழையில்
தப்பித்த ராகுல் காந்தியை வாழ்த்துவோம்.

கோவில் காளையாக பொறுப்பற்றவராக ராகுல் காந்தி
ஊர் சுற்றுகிறார் என்பதே பலரின் கவலையாக உள்ளது.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்ற உண்மையை
அவருக்கு எடுத்துக்கூற நாதி இல்லை. தமது தாய்க்கு
அவர் கட்டுப்படக் கூடியவராக இல்லை.

ஒருவேளை அவரின் தந்தை உயிரோடு இருந்திருந்தால்,
தந்தையின் கண்டிப்பான வளர்ப்புக்கு ராகுல் காந்தி
ஆளாகி இருந்தால், அவர் முன்னிலும் பொறுப்பானவராக
ஆகி இருக்கக்கூடும். எவ்வளவுதான் பணமும் அதிகாரமும்
இருந்த போதிலும், தகப்பனற்ற வளர்ப்பு என்பது
அதற்கே உரிய குறைகளைக் கொண்டது.

ராஜிவ் காந்தியைக் கொன்ற கயவர்களை ஒருபோதும்
மன்னிக்க முடியாது. இந்திரா, ராஜிவ் என்று அடுத்தடுத்து
5 ஆண்டுகளுக்குள் அந்தக் குடும்பத்தை ஒழித்ததில்
சிஐஏவின் சதி உண்டு. சிஐஏயின் சதியால் பிரதமர்
ஆனவர்தான் வி பி சிங் என்ற உண்மையையும்
நாம் மறந்து விடக்கூடாது.

ஆக ராகுல்காந்தி கொரோனாவில் இருந்து தப்பிய
செய்தி எனக்கு ஆறுதலையும் நிம்மதியையும்
அளிக்கிறது. எத்தகைய பாசாங்கும் இல்லாமல் எனது
மனதில் பட்டதை எழுதுகிறேன்.

ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்டு
இருந்தபோது நானும் மூன்று நாட்கள் அப்பல்லோவில்
ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்காக இருந்தேன். நன்கு
குணமடைந்து நான் வீடு திரும்பியது போல,
ஜெயலலிதாவும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்
என்று மனசார விரும்பினேன். அது நடக்கவில்லை.

இத்தனை வயதில் நோய் நொடி  மயக்க மருந்து
அறுவை சிகிச்சை என அனைத்தையும் பார்த்து
விட்டேன். அல்லோபதி என்னும் அறிவியல் மருத்துவத்தின்
உதவியால் நோய்களை வென்று வாழ்ந்து
கொண்டிருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை
மருத்துவ அறிவியல் எனக்கு இட்ட பிச்சை!

கூடிய விரைவில் நம் நாடும் உலகமும் இந்தக்
கொரோனாவின் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டும்
என்று விரும்புகிறேன். விட்டேத்தியாக அணுக வேண்டிய
கொரோனா பிரச்சினையை, என்னுடைய வயதின்
காரணமாக, என்னுடைய நோய் நொடிகளின்
காரணமாக, சற்று ஈடுபாட்டுடன் அணுகுவதால்
எனக்கு நிம்மதியின்மை ஏற்படுகிறது. ஒரு முப்பது
வயது இளைஞனின் திமிர் பிடித்த மனநிலையுடன்
என்னால் இப்பிரச்சினையை அணுக இயலவில்லை.

எனவே இந்நிலையில் மத்திய மோடி அரசுக்கும்
மாநிலத்தில் எடப்பாடி அரசுக்கும் உரிய ஒத்துழைப்பை
அளிப்பதும் அரசின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதுமே
கொரோனாவை வெல்ல ஏதுவாகும் என்று கருதுகிறேன்.
******************************************************        



 
 

வியாழன், 26 மார்ச், 2020

From
Smt C Gowsalya,
LDC, Cantonment Board,
Wellington 643 231.

To
The Chief Executive Officer,
Cantonment Board,
Wellington 643 231.

Respected madam,

           ref: 1) No.Disciplinary/xx/OS dtd 24.03.2020.  
                  2) Show cause notice

With reference to the above cited memo I humbly submit that  
I have already submitted my reply to the show cause notice.

As soon as I received your orders to present myself at Wellington,
I have started from Coimbatore. There was no buses at that time.
Due to curfew taxi service was also suspended. Practically there
was no transport.

I have asked my husband to drop me at Wellington and we both
traveled about 100 kms through the hilly path in a motor bike
and I reached Wellington, obeying your orders.

Thanking you,

Yours faithfully,
Smt C Gowsalya.

station: Wellington
Date:   



ஊழல் பேர்வழியை ஆதரிக்கும் தற்குறிகள்!
டாக்டரின் இடமாற்றம்: உண்மை நிலை என்ன?
-----------------------------------------------------------------------
ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரிந்து
வருபவர் டாக்டர் சந்திரசேகர். இவர் கடைந்தெடுத்த
ஊழல் பேர்வழி. துறை ரீதியான நடவடிக்கையாக
இவரை தூத்துக்குடி மருத்துவமனைக்கு இடமாற்றம்
செய்து ஸ்டான்லி டீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவ்வளவுதான்! புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவ
அற்பர்கள் அனைவரும் ஊழல் பேர்வழி
சந்திரசேகரனுக்கு ஆதரவாகக் களம் இறங்கி விட்டார்கள்.

டாக்டர்களுக்கு முகக் கவசம் வேண்டுமென்று சந்திரசேகர்
கேட்டதாகவும், அதனால் ஆத்திரம் அடைந்த நிர்வாகம்
அவரை இடமாற்றம் செய்து விட்டதாகவும் புழுவினும்
இழிந்த குட்டி முதலாளித்துவமும் கிறிஸ்துவ  இஸ்லாமிய
மதவெறியர்களும் கூச்சலிட்டனர். முகநூல் முழுவதும்
மலத்தை வாரி இறைத்தனர்.

இவர்களின் பொய்கள் 24 மணி நேரம் கூட வாழவில்லை.
திமுக ஆதரவு முகாமில் இருந்தே குட்டி முதலாளித்துவத்தின்
பொய்கள் கிழித்தெறியப் பட்டன.புழுவினும் இழிந்த
நக்கீரன் கோபாலே, டாக்டர் சந்திர சேகரன் ஒரு ஊழல்
பேர்வழி என்று ஆணித்தரமாக நிரூபித்து உள்ளார்.

தங்களின் வீட்டுப் பெண்களைக் கூட்டிக் கொடுக்கும்
குட்டி முதலாளிய pimps, இத்தகைய பொய்களை எழுதுவது
இயல்பே. அந்தப் பொய்களை நம்பும் மூடர்கள்
தமிழ்நாட்டில்தான் அதிகம்.

முகக்கவசம் கேட்டார் டாக்டர் என்பதே முட்டாள்தனமானது.
எந்த ஒரு மருத்துவ மனையிலும் தேவையான அளவு
முகக்கவசங்கள் வாங்கி வைக்கப் பட்டுள்ளன.

ஒரு டாக்டர் என்பவர் கெசட்டட் ஆபிசர் (Gazatted Officer)
என்பதை தமிழகத்து தற்குறிகள் உணர வேண்டும்.
அப்பாயிண்ட்மென்ட்டின்போதே ஒரு டாக்டர் கெசட்டட்
ஆபிசராக பனி நியமனம் பெறுகிறார்.

ஒரு கெசட்டட் ஆபீஸருக்கு financial powers உண்டு. ரூ 100
செலவில் ஒரு முகக்கவசம் வாங்க வக்கற்றவராக
ஒரு டாக்டர் இருப்பார் என்று அடிமுட்டாள்களால்
மட்டுமே கருத முடியும்.

பொய்களைப் பரப்பும் pimpகளும் அதை நம்பும்
முட்டாள்களும் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று
இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
pimps மற்றும் முட்டாள்கள் இந்தப் பதிவில் தங்கள்
வக்கிரத்தை வெளிப்படுத்த உரிமை இல்லை.
மீறினால் முதுகுத் தொலி உரிக்கப்படும். 
****************************************************





   

 


 
      
From
Smt C Gowsalya
LDC, Cantonment Board,
Wellington 643 231.

To
The Chief Executive Officer
Cantonment Board, Wellington 643 231.

Respected Madam,
                      sub: reply to the show cause notice
                      ref: 1) No. show cause notice 2019-2020/OS dtd 23 March 2020.

With reference to the above cited memo, I most humbly submit the
following reply for your benign consideration and favorable action.

In the said show cause you have stated (first para, 3rd sentence) that I had sought
permission from you to go to Coimbatore. I have duly and properly
sought permission from your goodself to leave Wellington. I beg to state that
I did not leave Wellington without informing or without seeking permission.

My husband Shri V Sathiya Narayanan was unwell and he had to be treated by a
Doctor immediately. He had an injured and swollen leg and hence could not walk
without others help. Since there was no one in his house to take him to the Doctor,
he wanted me to come to Coimbatore to take him to the Doctor.

I was under tremendous pressure to visit my husband who is at Coimbatore.
On reaching Coimbatore, on the night of 20.03.2020, I had taken my husband
to Satish Hospital at Coimbatore and he was treated by Dr Kannagi MBBS, MS.
The relevant prescription slips are enclosed herewith.

When my husband fell ill, that too when he could not walk, I was under the
obligation to rush to his help. This was the circumstance under which I was
forced to go to Coimbatore, leaving Wellington. In Indian society, a woman
has to play many roles like wife, mother, employee etc.

May I kindly request your good self, Madam, to view my act of taking
my husband to the Doctor leniently. I most humbly state that there was no
insubordination on my part. I have learnt the precautionary measures
one has to take in respect of corona virus issued by the Govt of India, and I had
followed them diligently and so there was no endangering the safety of our
cantonment staff or residents.   

Under the circumstances explained above, I most humbly pray your
goodself to please drop the show cause notice taking a lenient view.

Thanking you,

Yours faithfully,
Smt C Gowsalya.

station: Wellington
date: 25.03.2020.
--------------------------------------------------------------------                        

புதன், 25 மார்ச், 2020

கொரோனா பற்றிய உலகின் முதல் வெண்பா!
---------------------------------------------------------------------
செத்தொழி ஓடிவிடு பீடைக் கொரோனாவே
இத்தேயம் தன்னில் உனக்கென்ன வேலை
புறந்தூய்மை தன்னில் உலகின் தலையாய் 
அறமுடையிந் நாட்டிலில்கொ ரோன.
--------------------------------------------------------------
அறமுடை இந்நாட்டில் இல் கொரோன
என்று ஈற்றடியைக் கொண்டு கூட்டவும்.
கொரோன என்பது குறுக்கல்  விகாரம்.
இல் கொரோன என்பதன் பொருள்
இல்லை கொரானா என்பதாகும்.

ஈசன் எந்தை இணையடி நீழலே என்பதில்
நீழல் என்பது நீட்டல் விகாரம்.
அது போல, இல் கொரோன என்பது குறுக்கல்  விகாரம்.
--------------------------------------------------------------------------

வாசக அன்பர்களே,
கொரோனா பற்றிய உலகின் முதல் வெண்பாவை
வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் பேறு பெற்றவர்கள்.

இந்த வெண்பாவை ஆதரிப்பது உங்களை கொரோனாவில் 
இருந்து காக்கும். இந்த வெண்பாவை ஆதரிக்காதவர்களை
கொரோனா தாக்குவதற்கான நிகழ்தகவு = 0.9999999.

புழேந்திப் புலவருக்கும் காளமேகப் புலவருக்கும் பின்
தமிழில் வெண்பா இயற்ற யாரும் இல்லையே!
தமிழ் அநாதை ஆகி விட்டதே!
தமிழ் இலக்கிய வளத்தை இழந்து நிற்கிறதே!
என்றெல்லாம் யார் எவரும் வாழ்ந்த வேண்டாம்!

புகழேந்திப் புலவரின் தொடர்ச்சி நான்தான்.
இன்று என்னை விட்டால் வெண்பா எழுதுவதற்கு
இத்தமிழ்நாட்டில் நாதி கிடையாது!

எனவே இந்த வெண்பாவை ஆதரியுங்கள்!
இதை ஆதரிப்பது உங்கள் கடமை!
 
****************************************************************

மருதுபாண்டியன்

=====================================================

சித்த மருத்துவமும் அல்லோபதியும்!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1920களில்
சித்த மருத்துவமானது தமிழ்நாட்டில் பெரும்
செல்வாக்குடன் விளங்கியது. அதே போல ஆயுர்வேதம்
உள்ளிட்ட இந்திய மருத்துவமும் அன்று பெரும்
செல்வாக்குடன் திகழ்ந்தது.

அக்காலத்தில் 1900, 1910களில் இந்தியாவில் பிளேக்
நோய் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலி
கொண்டது. பிளேக்கை ஒழிக்க சித்த மருத்துவமோ
ஆயுர்வேதமோ எந்த மருந்தையும் கண்டுபிடிக்கவில்லை.

பின்னர் பெரியம்மை (smallpox) நோய் கொள்ளை நோயாய்
வந்தது. சித்த மருத்துவத்திடம் மருந்து இல்லை. ஆங்கில
மருத்துவமே பெரியம்மையை ஒழித்தது.

காலரா மலேரியா போன்ற கொள்ளை நோய்கள்
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பர்மா வரை பரவி நின்றன.
சித்த மருத்துவத்தால் காலராவையோ மலேரியாவையோ
ஒழிக்க முடியவில்லை.

எட்வர்ட் ஜென்னர் என்னும் இங்கிலாந்து மருத்துவர்
பெரியம்மை நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்து
அதை அடியோடு ஒழித்தார்.

ரொனால்டு ராஸ் என்னும் பிரிட்டானிய மருத்துவர்
மலேரியாவை ஒழித்தார்.

சித்த மருத்துவம், ஆயுர் வேதம் ஆகியவை புதுப்பிக்கப்
பட வேண்டும். நவீனமாக வேண்டும்.

அல்லோப்பதி என்பது அறிவியல் ரீதியான மருத்துவம்.
அது evidence based medicineஐக் கொண்டது. இது தொடர்ச்சியாக
update ஆகி வருகிறது.

சித்தமருத்துவம் ஆயுர்வேதம் ஆகியவற்றுக்கு நிச்சயமாக
ஒரு பாத்திரம் உண்டு. அவை அல்லோபதியின்
complimentary மற்றும் supplementaryஆக மட்டுமே இருக்க
முடியும்.
********************************************* 





செவ்வாய், 24 மார்ச், 2020


அல்லாஹு அக்பர்! மார்க்சுஹு அக்பர்!
--------------------------------------------------------------
1) பில்கானவ்
கறாராகச் சொன்னால் மாமனிதன் எனப்படுபவன் துவங்கி வைப்பவன் தான் ஏனெனில் மற்றவர்களைவிட அவன் அதிக தூரம் பார்க்கிறான். அவர்களைவிட விஷயங்களை ஆர்வத்துடன் விரும்புகிறான். சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியின் போக்கில் முன்வைக்கப்படுகின்ற விஞ்ஞான பிரச்சனைகளுக்கு விடை அளிக்கிறான், சமுதாய உறவுகளின் முந்தைய வளர்ச்சியினால் படைக்கப்பட்ட சமுதாய தேவைகளை அவன் சுட்டிக் காட்டுகிறான், அந்த தேவைகளை பூர்த்தி செய்ய அவன் முயற்சி செய்கிறான்," வரலாற்றில் தனிநபர் வகைக்கும் பாத்திரம், பிளக் கா நவ்,

அல்லாஹு அக்பர்! மார்க்சுஹு அக்பர்!
--------------------------------------------------------------
மகத்தான ரஷ்ய சோஷலிஸப் புரட்சியின் நூற்றாண்டு
(1917-2017) இனிதே கழிந்தது.ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால்
இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சி 1925ல் உதயமானது.
அதன் வயது நூறை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசியல் வானில் வசந்தத்தின் இடி முழக்கமாக
1969ல் தோன்றிய நக்சல்பாரி ஆயுதப் பேரெழுச்சியும்
அரை நூற்றாண்டு காலத்தைக் கடந்து நிற்கிறது.

எனில் கம்யூனிசத்தின் வயதுதான் என்ன? அதாவது
மார்க்சியத்தின் வயது என்ன? மார்க்சும் எங்கல்சும் இணைந்து
1848ல் 'கம்யூனிஸ்ட் அறிக்கை'யை எழுதி வெளியிட்டனர்.
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டான 1848ஐ
மார்க்சியத்தின் தொடக்கமாகக் கருதுவதே சாலப்
பொருத்தம் உடையதாகும்.

1848க்கு முன்பே மார்க்சும் எங்கல்சும் இணைந்து சில நூல்களை
எழுதி உள்ளனர். 1844ல் இருவரும் எழுதி 1845ல் வெளியான
புனிதக் குடும்பம் என்ற நூலும், 1846ல் இருவரும் எழுதிய
ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலும் குறிப்பிடத் தக்கவை.
எனினும் இவை பிரதானமாக பொருள்முதல்வாதம்
சார்ந்த நூல்கள். கம்யூனிசத்தை அதிகாரபூர்வமாக
பிரகடனம் செய்த உலகின் முதல் நூல் மார்க்சும் எங்கல்சும்
எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையே ஆகும்.

உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொது
வேலைத்திட்டத்தை மார்க்ஸ் எங்கல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை வழங்குகிறது.

         

திங்கள், 23 மார்ச், 2020

From
Smt C Gowsalya
LDC Cantonment Board
Wellington 643231.

To
The Cheif Executive Officer
Cantonment Board
Wellington 643231.

Respected madam,

Ref: No show cause notice 2019-2020 OS dtd 23 March 2020

With reference to the directive contained in the last para of the
order referred above, I do hereby inform your goodself that
I am exercising self quarantine until 31.03.2020 and am available for
performance of public duties (from my residence at Coimbatore).

Thanking you,
Yours faithfully,
(Smt C Gowsalya)
station; Coimbatore Dt: 23.03.2020.
--------------------------------------------------------

ஞாயிறு, 22 மார்ச், 2020

கொரோனா வைரசும் பிறழ்புரிதல்களும்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
நான் அறிவியல் மன்றம் நடத்தினாலும் கூட, இது
பிரதானமாக இயற்பியல் மன்றம்தான்:
Physics always includes maths என்ற கோட்பாட்டின்படி
இது கணித மன்றமும்தான்!

எனினும் தவிர்க்க இயலாமல் பிற துறைகள் குறித்து
உயிரியல், மருத்துவம், பொது சுகாதாரம் குறித்தும்
தேவை ஒட்டி நியூட்டன் அறிவியல் மன்றம் கட்டுரைகள்
எழுதி வருகிறது. அந்த வகையில் இதுவரை கொரோனா
வைரஸ் குறித்து மூன்று கட்டுரைகளை எழுதி உள்ளோம்.

இன்று வெளியான எமது மூன்றாவது கட்டுரையைப்
படித்த பின்னர், இந்த வைரசின் ஆயுட்காலம் குறித்து
சில கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன. அவற்றுக்கு
விடையளிக்கவே இக்கட்டுரை.

COVID-19 எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பதை அறிய
அமெரிக்க விஞ்ஞானிகள் அண்மையில் பல்வேறு ஆய்வுகளை
மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவானது
New England Journal of Medicine என்ற அறிவியல் ஏட்டில்
ஒரு கட்டுரையாக வெளிவந்தது
(பார்க்க: Neeltje Van Doremalan மற்றும் பலர் எழுதிய கட்டுரை)

பிவரும் பொருட்களில் கொரோனா வைரஸ்
உயிர் வாழும் நேரம் வருமாறு:-
தாமிரம் (Copper surface)...4 மணி நேரம் உயிர் வாழும்.
எஃகு ......  13.1 மணி நேரம்
பிளாஸ்டிக்......15.9  மணி நேரம்.

இந்தத் தரவுகள் விஞ்ஞானி டோரிமலன் எழுதியுள்ள
தரவுகள் ஆகும். இவை வைரசின் அரை ஆயுளைக்
குறிப்பிடுவன.

இங்கு ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை ஆயுள்
(half life) என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
என்னிடம் ஒரு தனிமத்தின் சாம்பிள் 10 கிராம் உள்ளது.
இந்த 10 கிராமானது 5 கிராமாகக் குறைய வேண்டுமென்றால்
அதற்கு ஆகும் கால அளவு அரை ஆயுள் எனப்படும்.

தெளிவுபெற  ஒரு எளிய கணக்கைச் செய்வோம்.
கணக்கைச் செய்தால் அல்லாமல், கோட்பாட்டைப்
புரிந்து கொள்ள இயலாது.

கணக்கு இதுதான்!
----------------------------
என்னிடம் கதிரியக்கத் தன்மை உடைய துத்தநாகத்தின்
(Zinc) ஒரு ஐசோடோப்பின் சாம்பிள் உள்ளது. அதன் அரை
ஆயுள் 5 நிமிடம் ஆகும். என்னிடமுள்ள சாம்பிளின் நிறை
10 கிராம் ஆகும். 15 நிமிடம் கழித்து என்னிடம் எவ்வளவு
சாம்பிள் மிச்சம் இருக்கும்?

T (half) = 5 minutes
Now 15 divided by 5 = 3.
3 half lives have elapsed.

(1/2)^3 = 1/8 = 0.125 (amount remaining after 3 half lives)
Sample remaining = 10 gram x 0.125 = 1.25 gram.    

ஆரம்பத்தில் 10 கிராம் சாம்பிள் இருந்தது.
15 நிமிடம் கழித்து, 1.25 கிராம் சாம்பிள் மட்டுமே
மிச்சம் உள்ளது.

விஞ்ஞானிகள் எழுதிய கட்டுரையில் வைரசின்
அரைஆயுள் தரப்பட்டு உள்ளது. அதிலிருந்து
அந்த வைரஸ் ஒரு மீடியத்தில் எவ்வளவு நேரம்
உயிர் வாழும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு அரைஆயுள் பற்றிய புரிதல் வேண்டும்.
*************************************************




ஒலித்தக்கால் என்னாம்


பின்வரும் பொருட்களில் கொரோனா வைரஸ்
உயிர் வாழும் நேரம் வருமாறு:-
தாமிரம் (Copper surface)...4 மணி நேரம் உயிர் வாழும்.
எஃகு ......  13.1 மணி நேரம்
பிளாஸ்டிக்......15.9  மணி நேரம்.

New England Journal of Medicine என்ற அறிவியல் ஏட்டில்
ஒரு கட்டுரையாக வெளிவந்தது
(பார்க்க: Neeltje Van Doremalan


திருவாளர்கள் கென்னடி, மதிவாணன் கவனத்திற்கு!
------------------------------------------------------------------------
எனது கட்டுரையில் கொடுக்கப்பட்ட கீழ்வரும் விவரங்கள்
சரியானவை.
(கொரோனா வைரஸ் உயிர் வாழும் நேரம் வருமாறு:-
தாமிரம் (Copper surface)...4 மணி நேரம்.
எஃகு ......  13.1 மணி நேரம்
பிளாஸ்டிக்......15.9  மணி நேரம்).

ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க விஞ்ஞானி டோரிமலன்
(Neeltje Van Doremalan) அவர்களின் ஆய்வுக் கட்டுரையில்
மேற்கண்டவாறு உள்ளது. அருள்கூர்ந்து மூலக்
கட்டுரையைப் படிக்கவும். நியூட்டன் அறிவியல்
மன்றமானது விஞ்ஞானிகளின் கட்டுரைகளை
மட்டுமே ஏற்றுக் கொள்ளும். நாங்கள்
ஊடகவியலாளர்கள் எழுதும் கட்டுரைகளைத் துளியும் பொருட்படுத்துவதில்லை ஏனெனில் அவை பிழையானவை.

அருள்கூர்ந்து மூலக்கட்டுரையைப் படிக்கவும். நான்
இதற்கான லிங்க்கை முதல் கமெண்டில் கொடுத்துள்ளேன்.
-----------------------------------------------------------------------------


ஆதாரமற்ற ஒரு சதிக் கோட்பாடு (conspiracy theory) அது.
Bio war, bio weapons ஆகியவற்றுக்கான தேவை
இன்றைய உலகில் இல்லை.


அடுத்த பரிணாமம் என்பது உயிரியல் சார்ந்தது அல்ல.
உயிரியல் சார்ந்த எந்த ஒன்றுக்குமே மிகப்பெரிய
limitations உண்டு. அவை மானுடத் தேவையை
உரிய விதத்தில் நிறைவேற்ற இயலாது.

விரிவான பதில் பின்னர்.

மகாராஷ்டிராவில் பாதிப்புகளின் எண்ணிக்கை
அதிகம். கேரளத்தில் சதவீத அடிப்படையில்
பாதிப்பு அதிகம். கேரளம் சிறிய மாநிலம்.



.



சனி, 21 மார்ச், 2020

கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
கொரோனா வைரஸ் என்று சொல்லும்போது அது
ஒரு ஒற்றை வைரஸ் (single virus) என்ற புரிதலையே
பரந்துபட்ட மக்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால்
கொரோனா வைரஸ் என்பது ஒத்த தன்மை உடைய
பல்வேறு வைரஸ்களின் தொகுப்பு. இந்த வைரஸ்கள்
தாக்கினால் தீவிர சுவாசக் கோளாறுகளும் மூச்சுத்
திணறலும்  ஏற்படும்.

2019 இறுதியில் சீனாவில் யுஹான் (Wuhan, China)
மாகாணத்தில் கண்டறியப்பட்ட வைரசானது
கொரோனா வைரஸ் தொகுப்பில் கடைசியாகச் சேர்க்கப்
பட்டதாகும். கொரோனா வைரஸ் தற்போது COVID-2019
என்று அறியப் படுகிறது.

இந்த வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்? இது
குறித்து பல்வேறு அனுமானங்கள் உலா வருகின்றன.
COVID-19 எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பதை அறிய
அமெரிக்க விஞ்ஞானிகள் அண்மையில் பல்வேறு ஆய்வுகளை
மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவானது
New England Journal of Medicine என்ற அறிவியல் ஏட்டில்
ஒரு கட்டுரையாக வெளிவந்தது
(பார்க்க: Neeltje Van Doremalan மற்றும் பலர் எழுதிய கட்டுரை)

பிவரும் பொருட்களில் கொரோனா வைரஸ்
உயிர் வாழும் நேரம் வருமாறு:-
தாமிரம் (Copper surface)...4 மணி நேரம் உயிர் வாழும்.
எஃகு ......  13.1 மணி நேரம்
பிளாஸ்டிக்......15.9  மணி நேரம்.

துணியின் மீது எவ்வளவு நேரம் உயிர் வாழும் என்ற
ஆய்வு முடிவு இன்னும் வெளிவரவில்லை. சூரிய
வெப்பத்தில் நல்ல உச்சி வெயிலில் இந்த வைரஸ்
எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்பது குறித்தும்
ஆய்வு முடிவு எதுவும் வெளிவரவில்லை. விரைவில்
வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஒரு டீக்கடையில் காப்பர் பாய்லர் இருக்கிறது.
அதன் மீது கொரோனா வைரஸ் வந்து அமர்கிறது
என்று வைத்துக் கொள்வோம். இந்த வைரஸ் அந்த
பாய்லரின் மீது எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்?
அதிகபட்சம் நாலு மணி நேரம் மட்டுமே
உயிருடன் இருக்கும்.
******************************************************

கொரோனா வைரஸ் ஏன் செலக்டிவாக ஒரு சில
நாடுகளை மட்டுமே பாதித்துள்ளது?
-------------------------------------------------------------------------
கொரோனா வைரசின் உயிர்க்கொல்லித் தன்மை
பற்றி உலகம் ஏற்கனவே அறியும்.கொரோனா வைரஸின்
ஒரு வகையான சார்ஸ் வைரஸை மருத்துவ உலகம்
(SARS = Severe Accurate Respiratory Syndrome)
எதிர்கொண்டிருப்பதால், அதன் ஆபத்து
நன்கறியப் பட்ட ஒன்று என்பதால், சீனத்தின் கொரோனா
வந்தவுடனே உலகம் பல மடங்கு சுதாரித்துக் கொண்டது.

COVID-19 வைரஸின் பிறப்பிடம் சீனா என்பதால்,
சீனா மூலமே உலகிற்குப் பரவ முடியும். வேறெந்த
வழியும் கிடையாது. எனவே உலகின் முக்கியமான
அனைத்து நாடுகளும் பயணத்தடைகளை (Travel bans)
ஏற்படுத்தின. சந்தேகத்துக்கு உரிய பயணிகள்
அனைவரும் குவாரன்டைன் செய்யப் பட்டனர்.

மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை எல்லா நாடுகளும்
விதித்தன. சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை,
தொழுகை அனைத்தும் தடை செய்யப்பட்டன. இதன்
மூலம் அறிவுபூர்வமாக நடந்து கொண்டு சவூதி
அரேபியா தன்னையும் தன் நாட்டு மக்களையும்
காப்பாற்றிக் கொண்டது.

சீனா போன்ற காற்று மாசடைந்த, அசுத்தமான ஒரு
தேசத்தில்தான் கொரோனா போன்ற வைரஸ்கள்
பிறக்க முடியும்.

கொரோனா வெளிப்பட்டதுமே, எந்தெந்த நாடுகள்
எல்லாம் சுதாரித்துக் கொண்டு, பயணத் தடைகளை
ஏற்படுத்தி, கொரோனா நுழைய முடியாமல் தடுத்தனவோ
அந்த நாடுகள் எல்லாம் தப்பித்துக் கொண்டன.

இத்தாலியில் அதிகப் பாதிப்புக்கான காரணம் அரசு
மின்னல் வேகத்தில் பயணத் தடைகளை ஏற்படுத்தாததும்,
அரசின் விதிமுறைகளை 100 சதக் கட்டுப்பாட்டுடன்
மக்கள் பின்பர்றாததுமே காரணம். இதன் பின்னணியில்
கிறித்துவ மதத்தின் செல்வாக்கு இருப்பதே மக்களின்
அசட்டை உணர்வுக்கு காரணம்.

ஹஜ் யாத்திரையை ரத்து செய்து, இஸ்லாமியர்கள்
தொழுகைக்கு கூடுவதை அறவே தவிர்த்த சவூதி
அரேபியா, கொரோனாவைப் பொறுத்த மட்டில்
புத்திசாலித் தனமான நாடு.

இந்தியாவில் மோடி அரசானது மிகச் சிறப்பான
நடவடிக்கைகளை எடுத்திருந்தது.விருப்பு வெறுப்பற்று
art of governance அடிப்படையில் விஷயத்தை அணுகும்
யார் எவரும் இதை அட்டியின்றி ஒப்புக் கொள்வர்.
ஒருவேளை டாக்டர் மன்மோகன்சிங்கின் காங்கிரஸ்
அரசு தற்போது இருந்திருக்குமானால், கொரோனா
வேகமாகப் பரவிய நாடுகளில் ஒன்றாக இந்தியா
இருந்திருக்கும். பாலி எண்ணிக்கை வெகு சுலபமாக
ஆயிரக் கணக்கில் இருந்திருக்கும்.

ஆனால் மோடி அரசானது கொரோனா பலிகளின்
எண்ணிக்கையை ஒற்றை இலக்கத்துக்குள் கட்டுக்குள்
வைத்திருப்பது பெரும் நிர்வாகத்திறனின் வெளிப்பாடு.

தமிழகத்திலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
டாக்டர் விஜய பாஸ்கர் மிகச் சிறந்த நிர்வாகத்திறனை
வெளிப்படுத்தி கொரோனாவைக் கட்டுக்குள் வைப்பதில்
பெரும் வெற்றி அடைந்துள்ளார். அன்று முதல் இன்று
வரையிலான திராவிட இயக்க அரசியல்வாதிகளில்
IQ அதிகம் உடையவர் இவரே. டாக்டர் விஜயபாஸ்கருக்குப்
பதிலாக, IQ குன்றிய வேறு எவரேனும் அமைச்சராக
இருந்திருந்தால், கொரோனா பலிகள் இங்கு செஞ்சுரி
அடித்திருக்கும்.

கொரோனாவைப் பொறுத்து மிக மோசமான நிர்வாகத்தை
வெளிப்படுத்தியவர் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
பினராயி விஜயன் கல்வி அறிவற்றவர். தெருச்சண்டையில்
பிறந்து, தெருச்சண்டையில் வளர்ந்து, தெருச்சண்டையைத்
தவிர்த்து வேறெதற்கும் தன் மூளையில் இடம் தராத
பினராயி விஜயன் IQ குன்றியவர். அவரிடம் நிர்வாகத்
திறனை எங்ஙனம் எதிர்பார்க்க இயலும்?

ஒரு சிறிய மாநிலத்தை நிர்வகிக்கத் துப்பற்றவர்தான்
பினராயி விஜயன்.இந்தியாவிலேயே கேரளத்தில்தான்
கொரோனா பாதிப்பு அதிகம். கேரள முதல்வராக
நவீன் பட்நாயக் இருப்பதாக கற்பனை செய்தால்,
அவர் மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்து கொரோனா
பாதிப்பைக் குறைத்திருப்பார்.

மார்க்சியக் காற்று வேகமாக அடித்தபோது, பினராயி
விஜயன் போன்ற எச்சில் இலைகள் கோபுரத்தில் ஒட்டிக்
கொண்டன. இனி இப்படி நடக்காது.

மாவோயிஸ்டுகளைச் சுட்டுக் கொல்லுவது மட்டுமே
நிர்வாகத் திறன் என்று கருதும் பினராயி
விஜயனுக்காக கண்ணீர் சிந்த விரும்புவோர்
வேறிடம் செல்க.    
     
 

 






 




  
IPTVக்கு கொள்ளி வைத்தது யார்?
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
அனலாக் தொழில்நுட்பத்துடன் கூடிய கேபிள் டிவி
கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறையத் தொடங்கியது.

2005-2015 காலக்கட்டத்தில் பல்வேறு தனியார்
தொலைதொடர்பு நிறுவனங்கள் DTH சேவையை
வழங்கத் தொடங்கி இருந்தன. இது செயற்கைக்கோள்
மூலம் டிவி ஒளிபரப்பு மேற்கொள்ளும் சேவை ஆகும்.

Reliance BIG TV, Airtel digital TV, Sun Direct DTH என்று பல
நிறுவனங்கள் DTHல் சக்கைப்போடு போட்டன.

தொலைக்காட்சி சேவை வழங்குதல் BSNLன் வேலை அல்ல.
எனினும் பிராட்பேண்ட் மூலம் டிவி சேவை வழங்க
இயலும். இது IPTV எனப்படும்.
IPTV = Internet Protocol Tele Vision.

BSNL Corporate officeல் இருந்து, IPTV சேவை வழங்க
உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதெல்லாம் 2011-2012
காலக்கட்டம் ஆகும்.

சென்னையில் ஒன்றிரண்டு BSNL வாடிக்கையாளர் சேவை
மையங்களில் IPTVயானது பொதுமக்களுக்கு
public display மூலம் காட்டப்பட்டது.

எனினும் IPTV போதிய வரவேற்பைப் பெறவில்லை.
IPTV பற்றியே மக்களுக்குச் சொல்லப்படவில்லை.

ஆண்டு 2012. அப்போது நான் பணியில் இருந்தேன்.
என்னுடைய அலுவலகத்தில் IPTVஐ நிறுவி
அதை பொதுமக்களின் பார்வைக்கு வைத்தேன்.
IPTV குறித்து தினமும் மக்களுக்கு விளக்கிக்
கூறினேன்; விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்தேன்.

இதனால் கவரப்பட்ட IPTVயின் ஏரியா விநியோகஸ்தர்
முகமது மீரான் என்பவர் என்னுடைய அலுவலகத்தில்
(அனுமதி பெற்று) தங்கியிருந்து IPTVயை promote
பண்ணும் பணியில் ஈடுபட்டார்.

கணிசமான பேர் பிராட்பேண்ட் கனக்சன் பெறறார்கள்.
அவர்களில் சிலர் IPTV போட்டுக் கொண்டார்கள்.
ஆரம்பத்தில் ராஜ் டிவி உரிய கட்டணம் செலுத்தி
IPTVக்குள் தன்னை இணைத்துக் கொண்டது.

எல்லோருடைய எதிர்பார்ப்பும் சன் டிவி மீது இருந்தது.
சன் டிவியானது உரிய கட்டணத்தைச் செலுத்தி,
IPTVக்குள் இடம் பெறும் என்ற நம்பிக்கை கொஞ்சம்
கொஞ்சமாகப் பொய்த்துக் கொண்டே வந்தது.
சன் டிவியானது IPTV க்கு எதிராக இருந்தது இப்போதும்
இருக்கிறது.

கடைசியில் போதிய ஆதரவு இல்லாததால், BSNL தலைமை
அலுவலகம் IPTV சேவையை மூடுவதாக உத்தரவிட்டது.
2013ல் மூடப்பட்டதாக எனக்கு ஞாபகம்.    

IPTVயில் சன் டிவி இணைய வேண்டும் என்று எந்தக்
கட்டாயமும் இல்லை. ஆனால் தயாநிதி மாறன்
இந்தத் துறைக்கு அமைச்சராக வந்ததில் எவ்வித
தார்மீக நியாயமும் இல்லை.

இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில், IPTVக்கு
கலாநிதி மாறன் கொள்ளி வைத்து விட்டார்
என்ற உண்மை மட்டுமே எஞ்சி நிற்கிறது.
****************************************************           
பி.கு: அப்போது நடைபெற்ற FIFA World cup 2012
போட்டியை IPTVயில் தினசரி எனது அலுவலகத்தில்
பொதுமக்கள் கண்டு களித்தனர்.
       



      
IPTV முதலில் வழங்கியது BSNL!
கெடுத்தது மாறன்

பீர் ரெவியூ ஜர்னல்

எவென் CSIR Scence reporter ஐஸ் நோட் பீர் reviewed  

வெள்ளி, 20 மார்ச், 2020


தடைப்பட்டுவிட்ட 5ஜி ஏலம்!
-------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
கொரோனா வைரஸ் புண்ணியம் கட்டிக் கொண்டது.
5ஜி ஏலம் தடைப்பட்டு நிற்கிறது. நிதியாண்டு 2021ன்
முதல் குவார்ட்டரில் ஏலம் நடைபெற வேண்டும்.
நடைபெற வழியில்லை.

5ஜி அலைக்கற்றையின் விலையாக (Base price)
ரூ 5.86 லட்சம் கோடியை ஏலத்தின் ஆரம்ப விலையாக
நிர்ணயித்துள்ளது TRAI.

ரூ 6 லட்சம் கோடி என்பது ஆரம்ப விலை என்றால்,
பலரும் ஏலம் கேட்டுக் கேட்டு, தொகை உயர்ந்து
குறைந்தது ரூ 10 லட்சம் கோடியாவது அரசுக்குக்
கிடைக்கும் என்று சப்புக் கொட்டுகிறார் அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத்.

5G Spectrum:
----------------
Bandwidth: 3.3 GHz to 3.6 GHz
quantum: 8293.95 units.


2010ல் 3ஜி ஏலம் நடைபெற்ற போது, அதற்கான Base priceஆக
ரூ 30,000 கோடியை நிர்ணயித்து இருந்தது TRAI.
ஏலத்தின் இறுதியில் ரூ 67,000 கோடி கிடைத்தது
அரசுக்கு.

ஆனால் இன்று நிலை என்ன?
கபில் சிபல் 2012ல் நடத்திய 2ஜி ஏலம் படுதோல்வி
அடைந்து ஒருவர் கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை.
தற்போதைய 5ஜி ஏலமும் படுதோல்வி அடையும்!
காரணம் நிறுவனங்களிடம் பணம் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++   
பிரதமர் மோடியின் இந்தி உரையும்
அதைத் தமிழில் மொழிபெயர்க்கத் துப்பற்ற
தமிழக ஊடகத்தினரின் மொழித்திறன் இன்மையும்!
-----------------------------------------------------------------------
கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி
நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் தற்போது!

இதை தமிழ் டி வி சானல்கள் ஒழுங்காக
மொழிபெயர்க்கவில்லை. காரணம் இந்தி தெரியாதவர்கள் 
ஊடகங்களில் இருந்து கொண்டு,
தண்டச் சம்பளம் வாங்கிக்கொண்டு திரிவதுதான்!

மோடி பத்துவாக்கியம் பேசினால் ஒரே ஒரு
வாக்கியத்தை மட்டுமே மொழிபெயர்த்துத்
தருகிறது  ஊடகக் கூட்டம்.

எனக்கு இந்தி தெரியும்!
பிரதமர் மோடி மிக எளிய இந்தியில் பேசுகிறார்.
அவர் குஜராத்தியில் பேசினாலும் அல்லது
மராத்தியில் பேசினாலும் என்னால் எளிதாகப்
புரிந்து கொள்ள இயலும்!
இந்த ஊடக நபர்களை நம்பி நான் இல்லை!

பிரதமர்  ஆங்கிலத்தில் பேசினாலும்
தமிழக ஊடகங்களின் மொழிபெயர்ப்பு
இந்த லட்சணத்தில்தான் இருக்கும்!
*************************************************

மருதுபாண்டியன்


நாட்டு மக்களுக்கு உரையாற்றும் வாய்ப்பு
ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கு
மட்டுமே கிடைக்கிற வாய்ப்பு.

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக
இருக்கும்போது, குடியரசுத் தலைவரின் உரையை
இந்தியில் ஆற்றும்படி கலாம் அவர்களை
வாஜ்பாய் கேட்டுக் கொண்டார். கலாம் அவர்களுக்கு
இந்தி தெரியும்.

ஆனால் கலாம் அவர்கள் வாஜ்பாயின் வேண்டுகோளை
ஏற்று இந்தியில் உரையாற்ற இயலாது என்று
தெரிவித்து விட்டார்.

அப்போது வாஜ்பாய் அவர்கள், தமிழில் உரையாற்றலாம்
என்றும் அதற்கு எத்தடையும் இல்லை என்றும்
கலாம் அவர்களிடம் தெரிவித்தார்.
இருப்பினும் கலாம் அவர்கள் ஆங்கிலத்திலேயே
தமது உரையை நிகழ்த்தினார்.

அதற்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த ஆர் வெங்கட்ராமன்
அவர்களும் தமது பதவிக்காலம் முழுவதும்
ஆற்றிய உரை ஆங்கிலத்திலேயே இருந்தது.


ஹெச் ராஜா இலவசமாக மொழிபெயர்ப்பார்.
என்னுடைய மொழிபெயர்ப்புக் கட்டணம் அதிகம்.
 









     

செவ்வாய், 10 மார்ச், 2020

மனிதரில் புனிதர் மாதவராவ் சிந்தியா!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
Politics makes strange bedfellows என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.
அரசியலில் யாரும் யாருடனும் படுக்கலாம் என்று
இதற்குப் பொருள்.

அரசியலில் எந்த விழுமியமும் எந்த அறமும் கிடையாது
என்பதும் மேற்படிப் பழமொழியின் பொருள் என்றும்
நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தன் சொந்த நலனை முன்னிட்டு, சொந்த எதிர்காலத்தை முன்னிட்டு, எந்த ஒரு அரசியல்வாதியும் மேற்கொள்ளும்
நடவடிக்கையை, அறம் விழுமியம் சார்ந்த
துருப்பிடித்த அளவுகோல்களால் அளப்பது நியாயமற்றது.

மபி மாநிலத்தில் காங்கிரசின் தூண்களில் ஒருவர்
மாதவ்ராவ் சிந்தியா. ஆனால் இளம் தலைவர். மபியில்
இவருக்கு எதிராக இருப்பவர்கள் கிழடு கட்டைகள்.
இவரோ ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால்
மக்களிடம் நல்ல அறிமுகமும் செல்வாக்கும்
வாய்ந்தவர்.

மபி முதல்வர் பதவி இவருக்கு மறுக்கப் பட்டது/
அதை இவர் இயல்பாக ஏற்றுக் கொண்டார். அரசியலில்
சீனியருக்குத்தான் பதவி  வழங்கப்படும் என்ற விதியை
இவர் அறிவார்.

மபி காங்கிரசின் மாநிலத் தலைவர் பதவி தனக்கு
வேண்டும் என்று மாதவராவ் விரும்பினார். மாநிலம்
முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து,
கட்சியை வளர்க்கும் அளவுக்கு இவர் ஆற்றலும்
திறமையும் உடையவர். இளைஞர் என்பதால்
இவரால் உழைக்கவும் முடியும். வேறு எவரையும் விட
மாநிலத் தலைவர் பதவிக்கு இவர்தான் பொருத்தமானவர்.
இந்த உண்மை கமல்நாத்-சோனியா- ராகுலுக்கு
நன்கு தெரியும்.

என்றாலும் இவருக்கு காங்கிரசின் மாநிலத் தலைவர்
பதவியும் வழங்கப் படவில்லை. இது மாதவராவுக்குப்
பெரிய அடி! எனவே அவர் சிந்திக்க ஆரம்பித்தார்.

    

  
குரோனி முதலாளித்துவத்தை ஆதரிக்கும்
தமிழகத்தின் குட்டி முதலாளித்துவம்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
யெஸ் வங்கியைப் பற்றி ஒரு இழவும் தெரியாமல்
வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறது
குட்டி முதலாளித்துவம். யெஸ் வங்கியின் Assets என்ன,
Liabilities என்ன என்று ஒரு குட்டி முதலாளித்துவரிடம்
கேட்டேன். அசடு வழிந்த அவர், "அதெல்லாம்
தெரிஞ்சுக்கணுமா தோழர்": என்று கேட்டு, தனது
தற்குறித் தனத்தின் உச்சத்தைத் தொட்டார்.

Yes Bank Ltd, Reconstruction Scheme 2020 என்ற ரிசர்வ் வங்கியின்
ஆவணத்தைப் படித்தீர்களா என்று மேற்படி குட்டி
முதலாளித்துவரிடம் கேட்டேன்.  கேள்வியையே அவரால்
பிரிந்து கொள்ள இயலவில்லை. இரு வெறும் ஐந்து பக்க
ஆவணம்தான் குட்டி முதலாளித்துவரே என்றேன். அந்த
ஆவணம் தமிழில் இருக்கிறதா என்று கேட்டார். இல்லை
என்றேன்.

தமிழகத்தின் குட்டி முதலாளித்துவத்தின் தரமும்
தராதரமும் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.
ஒரு வங்கியின் Assets, Liabilities பற்றி ஒரு இழவும்
தெரியாத ஒரு கசடனோடு, அந்த வங்கியைப் பற்றி
என்ன உரையாடல் நிகழ்த்த முடியும்?

யெஸ் வங்கியானது ரூ ஒரு லட்சத்து நாற்பத்தி
இரண்டாயிரம் கோடி (ரூ 1,42,000 கோடி) கடன்
வழங்கி இருக்கிறதே என்று வானத்துக்கும்
பூமிக்குமாகக் குதிக்கிறார் நமது குட்டி
முதலாளித்துவர். அந்த அளவு பணம் வங்கியில்
இருப்பதனால்தானே கடன் கொடுக்க முடிகிறது
என்ற உண்மை அவரின் மூளையில் உறைக்கவில்லை.

யெஸ் வங்கியின் நெருக்கடி குரோனி முதலாளித்துவத்துடன்
தொடர்பு உடையது. குரோனி முதலாளித்துவத்திடம்
இருந்து தொடர்பற்றதாக யெஸ் வங்கி நெருக்கடியைப்
பார்க்கக் கூடாது.

ஆனால் குரோனி முதலாளித்துவம் என்றால் என்ன
என்று தமிழகத்தின் குட்டி முதலாளித்துவத்துக்குத்
தெரியாது. யார் யாரெல்லாம் குரோனிகள் என்றும்
அவர்களுக்குத் தெரியாது. குறோணிகள் எப்படிப்
பொதுப்பணத்தைச் சூறையாடுவார்கள் என்றும்
அரசனது அவர்களுக்கு எப்படி எப்படி எல்லாம்
சலுகை வழங்கும் என்பதும் குட்டி முதலாளித்துவத்துக்குத்
தெரியாது.

Ignorance is the source of all evils என்றான் சாக்ரட்டீஸ்.
குட்டி முதலாளியத்தன் அறியாமையே சகல
தீமைகளுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.
************************************************
 


 





       
குரோனி முதலாளிகளும் குரோனி முதலாளித்துவமும்!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
குரோனி முதலாளித்துவம் என்பதற்கு பிறழ்நெறி
முதலாளியம் என்று நல்லதொரு தமிழ்ச்சொல்லை
முன்வைத்தேன்.

குரோனி முதலாளித்துவம் என்பதற்கு
சலுகைசார் முதலாளித்துவம் என்றும்
சூறையாடும் முதலாளித்துவம் என்றும்
குத்து மதிப்பான தமிழாக்கமும் உலவுகிறது.
ஒத்த கருத்து வரவில்லை.
எனவே குரோனி முதலாளித்துவம் என்றே எழுதுகிறேன்.

ராஜாத்தி அம்மாள் குரோனி முதலாளிக்கு நல்லதொரு
உதாரணம். கல்வியறிவற்ற ராஜாத்தி அம்மாளுக்காக
ஒரு பெரிய நெட்வொர்க் இயங்குகிறது.

முதலாளித்துவத்துக்கு என்று சில நெறிகள் உண்டு.
குரோனிகள் எந்த நெறிகளையும் கடைப்பிடிப்பதில்லை.
எனவே குரோனி முதலாளிகள் சமூகத்துக்குப்
பெருந்தீங்கு விளைப்பவர்கள். இவர்கள் சிறையில்
அடைக்கப்பட வேண்டும்.

எஃப் எம் ஹுசைன் ராஜிவ் காந்தியின்  ஓவியத்தை
வரைந்தார். அதை பிரியங்காவிடம் கொடுத்தார்.
அவரோ அதை யெஸ் வங்கி அதிபருக்கு ரூ 2 கோடிக்கு
விற்று விட்டார். மக்களின் பணம் ரூ 2 கோடி ஒரே
நிமிடத்தில் பிரியங்கா காந்தியின் வயிற்றில்!
இவை எல்லாம் குரோனி முதலாளியச் செயல்பாடுகள்!

ரகுராம் ராஜன் வர்ணித்த ஒரு IRRATIONAL EXUBERANCE
என்பது இதுதான்!

மும்பை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து
தப்ப முயன்றார் ராணா கபூரின் மகள் ரோஷினி.
அமலாக்கப் பிரிவு அவரைக் கைது செய்து லண்டன்
செல்ழும் முயற்சியைத் தடுத்தது. இவர்கள் எல்லாருமே
குரோனிக் கழுதைகள்!

இந்த நாட்டைக் கெடுக்கும் குரோனிகள் அனைவரும்
கம்பி எண்ணாமல் இந்த நாடு உருப்படாது! இந்தக்
குரோனிக் கழுதைகளை ஆதரிப்பவர்களும்
கயவர்களே.
******************************************************                    

திங்கள், 9 மார்ச், 2020

Yes bank had the deposit book of Rs 2.09 lakh crore at the end of September 2019.
5. Huge Liabilities:
The Yes Bank has a total liability of 24 thousand crore dollars. The bank has a balance sheet of about $40 billion (2.85 lakh crore rupees). The Yes Bank has to pay $ 2 billion to increase the capital base.
================
As on September 30, 2019; the Non-Performing Assets (NPAs) of Public Sector Banks (PSBs) stood at ₹7.27 lakh crore. The private sector banks are also have huge NPA.
-----------------------------------------------------------
izhintha poykalil pukalidam

பொய்களில் புகலிடம்!
---------------------------
தோழர் மருதுபாண்டியன் அவர்களுக்கு,
1) கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் யெஸ் வங்கி
கொடுத்த கடன் ரூ 2,41,000 கோடி என்ற செய்தியில்
உண்மை இல்லை.

2) இந்தச் செய்தியின் சுய முரண்பாடுகளே இச்செய்தி
ஒரு பொய் என்பதை அறிவிக்கும்.

3) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரூ 2,41,000 கோடி
அளவுக்கு எஸ் வங்கி கடன் கொடுத்திருக்கிறது என்றால்,
குறைந்தது அந்த அளவு பணம் (ரூ 2,41,000 கோடி)
வங்கியில் இல்லாமல் கடன் கொடுக்க முடியாது. அந்த
அளவு பணம் உள்ள வங்கி இன்று திடீரென திவால்
ஆக முடியாது.

4) நான் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கடன்
கொடுத்திருக்கிறேன் என்றால், குறைந்தது என்னிடம்
ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் கடன் கொடுக்க
முடியும் அல்லவா?

5) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரூ 2,41,000 கோடி
கடன் கொடுத்திருந்தால், அது வங்கியின் ஆவணங்களில்
இருக்கும். அப்படி எந்த ஆவணமும் இல்லை. இருந்தால்
காட்டுங்கள்.

6) ஒரு கடன் எப்போது வாராக்கடனாக (NPA)
அறிவிக்கப்படும்? நேற்று கடன் கொடுத்து விட்டு
இன்று வாராக்கடன் என்று அறிவிக்க இயலாது.
அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் கடனாகக்
கொடுக்கப்படும்போது, அவை நீண்ட காலக்
கடனாக (long term loan) மட்டுமே தரப்படும்.

7) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரூ 2,41,000 கோடி
கடனாகக் கொடுக்கப் பட்டிருந்தால், அதை
இன்றைக்கே வாராக்கடன் என்று அறிவிக்க இயலாது.
வாராக்கடன் என்று declare செய்வதற்கு நிறைய
சட்ட திட்டங்களும் நடைமுறைகளும் உள்ளன.
எனவே இந்த ரூ 2,41,000 கோடியை அதற்குள்
வாராக்கடன் என்று அறிவிக்க இயலாது.

8) குரோனி முதலாளித்துவம் என்றால் என்ன என்று
தெரியாமல், வங்கி நடைமுறைகள் சட்ட திட்டங்கள்
பற்றி அறிந்திராமல் தமிழ்ச்சமூகம் இருக்கும்போது
இத்தகைய பொய்கள் கொரோனா வைரசாகப்
பரவிக் கொண்டுதான் இருக்கும்.
-----------------------------------------------------
குரோனி முதலாளித்துவத்தின் சரிவே
யெஸ் வங்கியின் நெருக்கடிக்குக் காரணம்!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
1) 2018-19ல் யெஸ் வங்கி ரூ 1,42,000 கோடி அளவுக்கு
கடன் கொடுத்துள்ளது என்ற செய்தியைப் பார்ப்போம்

2) இது மலைக்க வைக்கும் பிரம்மாண்டமான
தொகையாகத் தெரியக் கூடும். அதாவது அன்றாட
வாழ்க்கையில் நண்பர்கள் ஒருவருக்கொருவர்
கைமாத்தாக வாங்கும் ரூ 500, ரூ 1000த்துடன்
ஒப்பிடும்போது இந்த பிரம்மாண்டமான தொகை
பாமரர்களுக்கு மலைப்பைத் தருவதில் வியப்பில்லை.

3) யெஸ் வங்கியானது corporate banking செய்யும்
வங்கி என்பதை உணர வேண்டும்.அது சாதாரண
மக்களுக்கு மட்டும் சேவை வழங்கும் வங்கி அல்ல.
எனவே தொகைகள் பெரிதாகவே இருக்கும். இது நம்
மூளைக்குப் பழக வேண்டும்.

4) 2018-19ல் யெஸ் வங்கி பல்வேறு கார்ப்பொரேட்
வாடிக்கையாளர்களுக்கு ரூ ஒரு லட்சத்து நாற்பத்தி
இரண்டாயிரம் கடன் வழங்கி உள்ளது. இவ்வளவு
பெருந்தொகை கடனாக வழங்கப்பட்டு இருப்பது ஒரு
உண்மையைச் சுட்டிக் காட்டுகிறது. அதாவது
கடந்த ஆண்டில் ரூ 1,42,000 கோடி கடன் வழங்கும்
அளவுக்கு வங்கியின் நிதிநிலைமை ஆரோக்கியமாக
இருந்திருக்கிறது.

5) பணம் இல்லாத வங்கியால் யாருக்கும் கடன்
வழங்க முடியாது. பணம் இருந்தால் மட்டுமே
கடன் வழங்க முடியும். எனவே கடன் வழங்கப் பட்டு
இருக்கிறது என்பதன் பொருள் வங்கியில் பணம்
இருந்திருக்கிறது என்பதே ஆகும்.

6) கோடிக்கணக்கான ரூபாய் கடனாகக்
கொடுக்கும்போது, அது நீண்ட காலக் கடனாகவே
இருக்கும். நேற்று கடன் கொடுத்து விட்டு, இன்று
திருப்பிக் கேட்கும் கடன் அல்ல இது.

7) இந்த ரூ 1,42,000 கோடி பெருந்தொகையால், வங்கிக்கு
ஆபத்து எப்போது ஏற்படும்? இன்னும் பத்தாண்டுகள்
கழித்து ஏற்படக் கூடும். அதாவது இன்னும் பத்தாண்டு
கழித்து, 2029ல் அல்லது 2030ல் இந்தக் கடன்
வங்கிக்குத் திரும்பிச் செலுத்தப் படாமல், வாராக்
கடனாக மாறி விட்டால், அன்றுதான் யெஸ் வங்கிக்கு
ஆபத்து. மற்றப்படி இந்த ரூ 1,42,000 கோடி இப்போதே
இந்த நிமிடமே வாராக்கடனாக ஆகி விட்டது என்று
குட்டி முதலாளித்துவம் கருதுவதில் உண்மை இல்லை.
இதெல்லாம் குட்டி முதலாளித்துவத்தின் அறிவெல்லைக்கு
அப்பாற்பட்ட விஷயம்.

8) அப்படியானால் இன்று 2020ல் யெஸ் வங்கிக்கு
ஏற்பட்ட நெருக்கடிக்கு  என்ன காரணம்?
பத்தாண்டுகளுக்கு முன்பு, 2010ல் அல்லது அதற்கு முன்பு,
கொடுத்த கடன்கள் வாராக்கடன்களாக ஆகி
விட்டதாலேயே இன்று யெஸ் வங்கிக்கு நெருக்கடி
ஏற்பட்டு உள்ளது.


9) இங்கு ஒரு முக்கியமான formulaவை நாம் அறிந்து
கொள்ள வேண்டும். ஒரு வங்கி ஒரு குறிப்பிட்ட
ஆண்டில், say, n, நெருக்கடிக்கு இலக்காகிறது
என்றால், அந்த வங்கி அதற்குப் பத்தாண்டுகள்
முன்பு, அதாவது n minus 10th ஆண்டில் மேற்கொண்ட
கடன் வழங்கும் செயல்பாடுகளே காரணம் ஆகும்.

10) குரோனி முதலாளித்துவம் இருந்தால் மட்டுமே
கார்ப்பொரேட் வங்கிகள் நிலைக்க முடியும்.
2014க்குப் பின் இந்தியாவில் குரோனி முதலாளிகளின்
ஆதிக்கம் இல்லாமல் போய்விட்டது. GST உள்ளிட்ட
சட்ட திட்டங்கள் வந்து விட்டன. எந்த ஒரு நிதிச்
செயல்பாடும் ஆவணப் படுத்தப் படுகிறது. இந்தச்
சூழலில் குரோனி முதலாளித்துவம் வளர
வாய்ப்பில்லை. அன்று நிலவிய பொருளியல் சூழலை
ரகுராம் ராஜன் (Ex RBI GOVERNOR) irrational exuberance
என்கிறார். அவர் கூறிய irrational exuberance என்று
இன்று நிலவவில்லை. 2014க்குப் பின் நிலவவில்லை.

11) கடந்த காலத்தில் யெஸ் வங்கியைப் போன்றே
பல வங்கிகள் சுமார் 10க்கும் மேற்பட்டவை
திவாலாகும் அளவுக்கு நெருக்கடிக்கு இலக்காகின.
அவை அனைத்தையும் அன்றைய காங்கிரஸ் ஆட்சி
காப்பாற்றியது.

12) அதே போல, யெஸ் வங்கியையும் இன்றைய
மோடி அரசு காப்பாற்றுகிறது. வங்கித் தொழில் குறித்த
இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கையை காங்கிரசும்
சரி, பாஜகவும் சரி, பிறழாமல் கடைப்பிடிக்கின்றன.

13) யெஸ் வங்கியின் நெருக்கடி குறித்து குட்டி
முதலாளித்துவம் அதீதமாக அலட்டிக் கொள்கிறது.
இது பெரும் மூடத்தனம் ஆகும்.இந்த அலட்டல்
தேவையில்லை. பொருளுற்பத்தியில் இருந்து
முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு, சமூகத்தின்
பொருளுற்பத்தி பற்றிய எந்த அறிவும் இல்லாத
குட்டி முதலாளித்துவம் யெஸ் வங்கிக்காகக்
கண்ணீர் சிந்த வேண்டியதில்லை.

14) யெஸ் வங்கிக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால்
வானமே இடிந்து விழுந்து விட்டது போன்ற பாவனையைச்
செய்து கொண்டு, குட்டி முதலாளித்துவம் ஒப்பாரி
வைக்கத் தேவையில்லை.  

15) இந்திய வங்கிகளுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம்
Acquisition, Amalgamation, merger ஆகிய நடைமுறைகள்
மூலம் வங்கிகள் பாதுகாக்கப் படுகின்றன.

16) தற்போது யெஸ் வங்கியை ஸ்டேட் வங்கி take over
செய்துள்ளது. அதன் 49 சதப் பங்குகள் தற்போது
ஸ்டேட் வங்கியின் வசம். டெலிகாம் துறையில்
நஷ்டம் அடைந்து வந்த MTNL நிறுவனத்தை BSNL
நிறுவனம் ஏற்றுக் கொண்டது போன்றது இது.

17) ஒட்டு மொத்தப் பொருளுற்பத்தியில் இருந்து
துண்டித்துக் கொண்டு, யெஸ் வங்கியை மட்டும்
தனித்து எடுத்துக் கொண்டு பார்ப்பதும், யெஸ்
வங்கியின் சரிவு என்பது ஏதோ சில தனிநபர்களின்
தவறு என்பது போல் பார்ப்பதும் அறிவியலுக்கு எதிரானது.

18) ராணா கபூரும் அவரால் பயன்பெற்ற சில
கார்ப்போர்ட் முதலாளிகளும் சந்தேகத்துக்கு இடமின்றி
குற்றவாளிகளே. ஆனால் இவர்களைக் கைகாட்டி
விட்டு, விஷயம் இவர்களோடு முடிந்து விட்டது
என்று படுத்துக் கிடப்பது பெரும் அறியாமை ஆகும்.

19) LPG கொள்கைகளுக்குப் பின், இந்தியச் சட்டங்கள்
திருத்தப் படவில்லை. தேவைக்கு ஏற்பப் புதிய
சட்டங்கள் இயற்றப் படவில்லை. திருச்சி இந்தியன்
வங்கியில் ரூ 100 கோடி மோசடி செய்த கே என் நேருவை
இந்தியச் சட்டம் என்ன செய்து விட்டது? நாளையே
அவர் மீண்டும் அமைச்சர் ஆவார்! இதுதான் இந்தியா!

20) Much ado about nothing என்பார் ஷேக்ஸ்பியர்.
யெஸ் வங்கி குறித்த பாமரத்தனமான ஒப்பாரி
ஷேக்ஸ்பியரை நினைவு படுத்துகிறது.ஒரு வங்கி
திவால் ஆவது வரவு எட்டணா செலவு பத்தணா
கதைதான். இதில் quantum mechanical fluctuation
எல்லாம் எதுவும் இல்லை.

21) யெஸ் வங்கி விவகாரம் சில கேள்விகளை
முன்வைக்கிறது. அது மட்டுமே யெஸ் வங்கி தரும்
படிப்பினை! இது தனிநபர் சார்ந்த விஷயம் அல்ல.

அ) வங்கித் தொழிலில் அன்று நிலவிய irrational
exuberance ஏன் இன்று நிலவவில்லை?

ஆ) 2004-2014ல் பொற்காலத்தைச் சந்தித்த குரோனி
முதலாளித்துவம் ஏன் இன்று முடங்கிக் கிடக்கிறது?

இக்கேள்விகளுக்கான விடைதான் யெஸ் வங்கியின்
நெருக்கடிக்கான விடை! இதைத்தவிர வேறு எதைப்
பற்றிப் பேசுவதும் வீண்!
-----------------------------------------------------------------
பின்குறிப்பு:
யெஸ் வங்கியின் Assets என்ன, Liabilities என்ன என்று
தெரியாமலே, யெஸ் வங்கி குறித்து தொண்டை வறளக்
கூச்சலிடுவதால் எப்பயனும் விளையாது.
***********************************************  


  






பணம் இருப்பதால் கடன் கொடுக்க முடிகிறது.
ரூ ஒரு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் கோடி
கடன் கொடுத்துள்ளது யெஸ் வங்கி. அந்த அளவு
பணம் இருந்ததால், அந்த அளவு கடன் கொடுத்துள்ளது.
யெஸ் வங்கியின் Assets மிகவும் அதிகம்.

இந்தியாவில் Liberalization கொள்கைகள் செயல்படுத்தப்
படுகின்றன. எனவே ஒரு வங்கியானது இவ்வளவுதான்
கடன் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எந்தத் 
தடையும் கிடையாது.

மற்ற வங்கிகளோடு யெஸ் வங்கியை ஒப்பிட முடியாது.
இது Corporate banking செய்யும் வங்கி.

ஞாயிறு, 8 மார்ச், 2020

அருவருக்கத்தக்க அறியாமையின் நடுவில்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
இரண்டு செய்திகள்!

1) யெஸ் வங்கி திவால் ஆகும் முன்பு, திருமலை திருப்பதி
தேவஸ்தானம், அவ்வங்கியில் இருந்த தனது ரூ 1300 கோடி
பணத்தை எடுத்து விட்டது.
2) குஜராத்தின் பரோடா நகராட்சி (Vadodara Municipal Corpn)
ரூ 265 கோடி முதலீட்டை எடுத்து விட்டது.

பெரும் ஆச்சரியத்துக்குரிய விஷயமாக இதை
தமிழ்நாட்டின் குட்டி முதலாளித்துவம் கருதுகிறது.
இதன் மூலம் தற்குறித்தனத்தின் உச்சத்தைத்
தொடுகிறது தமிழகத்தின் குட்டி முதலாளித்துவம்.

ஒரு வங்கி திவால் ஆகிறது என்பதில் எந்த ராணுவ
ரகசியமும் இல்லை. திடீரென்று ஒரு நாள் நடுநிசியில்
தெரிய வரும் விஷயமல்ல இது. வங்கியின் நிதிநிலை
பற்றிய விவரங்கள் எவையும் ரகசியம் அல்ல.
அவை பொதுவெளியில் வைக்கப் படுகின்றன.
பொருளாதாரம் சார்ந்த ஆங்கில ஏடுகளில், எகனாமிக்
டைம்ஸ் போன்றவற்றில் வெளியாகின்றன.

முதல் போட்ட வங்கியின் நிதிநிலை ஆரோக்கியமாக
இருக்கிறதா என்று முதல் போட்டவன் எப்போதுமே
கண்காணித்துக் கொண்டு இருப்பான்.
When there is a foul smell, போட்ட பணத்தை எடுத்து
விடுவான்.இது உலக இயற்கை!

சரி, இப்படியே ஒவ்வொரு பணக்காரனும்
கோடிக்கணக்கில் தான் போட்ட பணத்தை எடுத்து
விட்டால், சாதாரண மக்கள் போட்ட பணம் என்ன
ஆகும்? எல்லாப் பணத்தையும் பணக்காரனே
எடுத்து விட்டால், சாதாரண மக்களுக்கு என்ன மிஞ்சும்?

எனவேதான், ரிசர்வ் வங்கி தலையிடுகிறது.
யார் எவரும் ரூ 50,000க்கு (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)
மேல் பணம் எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கிறது.
இந்தத் தடைக்கு அப்புறம் எந்தப் பணக்காரனாவது
தான் போட்ட கோடி ரூபாய் முதலீட்டை எடுக்க முடியுமா?
முடியாதல்லவா! இதன் மூலம் சாதாரண ஏழை எளிய
மக்களின் பணம் பாதுகாக்கப் படுகிறது அல்லவா!

Banking குறித்த விழிப்புணர்வு
பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு
பொருளுற்பத்தி சார்ந்த விழிப்புணர்வு
இவையெல்லாம் தமிழ்நாட்டில்தான் மிகவும் குறைந்து
காணப்படுகிறது. அறியாமை தலைவிரித்து ஆடுகிறது.

தமிழ்நாட்டில்தான் தாழ்வு மனப்பான்மையானது
institutionalize ஆகி உள்ளது. இதற்கெல்லாம் மூல
காரணமாக, தற்குறித்தனமான திராவிடக் கருத்தியல்
விளங்குகிறது.

பொருளுற்பத்தியில் இருந்து முற்றிலும் துண்டித்துக்
கொண்டு, வெறும் பண்பாட்டு விவகாரங்களையே
ஊதிப் பெருக்கி, மக்களை மூடர் கூட்டமாக ஆக்கும்
வேலையே திராவிடத்தின் வேலைத்திட்டமாக
இருக்கிறது.

எனவேதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு
12ஆம் வகுப்புச் சிறுவனுக்குத் தெரிந்த விஷயம் கூட
தமிழ்நாட்டில் உள்ள ஒரு திராவிடப் பெரியவருக்குத்
தெரியவில்லை.

பொருளாதாரம் என்பது கஷ்டமான பாடமெல்லாம்
அல்ல. எக்கனாமிக் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளை
ரெகுலராகப் படித்தாலே பொருளாதாரம் பிடிபட்டு
விடும். IQ குன்றியவர்களும் பொருளாதாரத்தில்
பிரகாசிக்கலாம்.

எப்பேர்ப்பட்ட அறியாமை நிறைந்த சூழலில்
நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போது
அருவருப்புத் தட்டுகிறது.
*******************************************************



 






          
தமிழகம் மகாராஷ்டிரம் ஆகியவை வளர்ச்சி
அடைந்த மாநிலங்கள். ஜார்க்கண்டு, சட்டிஸ்கர்
ஆகியவை பின்தங்கிய மாநிலங்கள்.

ஆனால் சமூகத்தின் பொருளுற்பத்தி பற்றிய
அதாவது பொருளாதாரம் பற்றிய விஷயங்களில்
தமிழ்நாட்டில் பெருத்த அறியாமை நிலவுகிறது.

மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், குஜராத், டில்லி
ஆகிய மாநிலங்களில் பொருளுற்பத்தி சார்ந்த
அறிவு மேலோங்கி நிற்கிறது. ஆனால் தமிழகமோ
ஜார்க்கண்டு போன்ற பின்தங்கிய மாநிலங்களுடன்
சேர்ந்து நிற்கிறது.

சனி, 7 மார்ச், 2020

யானைகள் குழிகளில் விழுகின்றன!
வங்கிகள் திவால் ஆவதும் அவற்றின் மீட்பும்!
கே என் நேருவின் வாராக் கடன் என்ன ஆனது?
பொருளுற்பத்தி பற்றிய கட்டுரைகளின் அணிவகுப்பு!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
குட்டி முதலாளித்துவம் கன குஷியில் இருக்கிறது.
யெஸ் வங்கி (Yes Bank) திவால் ஆகிறது என்ற செய்தி
குட்டி முதலாளித்துவத்தின் செவிகளில் தேனாகப்
பாய்கிறது.

1995ல் நரசிம்மராவ் உலகமய, தனியார்மயப்
பொருளாதாரத்தை அறிமுகம் செய்தார். அதை
டாக்டர் மன்மோகன்சிங்கும் ப சிதம்பரமும்
பெரும் அக்கறையுடன் வளர்த்தெடுத்தார்.

குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டுப் போய்ச் சேர்ந்து
விட்டார் நரசிம்ம ராவ். அதை பாராட்டிச் சீராட்டி
வளர்த்து ஆளாக்கியவர்கள் டாக்டர் மன்மோகன் சிங்கும்
சிதம்பரமும்.

யெஸ் வங்கி ஒரு தனியார் வங்கி. தனியார் மயத்துக்குப்
பின், 2004ல் தொடங்கப் பட்டது. 2004-2014ல், இந்தப்
பத்தாண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி  கண்டது
யெஸ் வங்கி. தனியார் மையத்தின் அதிதீவிர
ஆதரவாளர்களான மன்மோகன்சிங்கும் சிதம்பரமும்     
சிறப்புக் கவனம் எடுத்து யெஸ் வங்கியை வளர்த்தனர்.
தனியார் மயக் கொள்கை தோற்று விடக்கூடாது
என்பதில்தான் மன்மோகன் சிங்கிற்கு எவ்வளவு
அக்கறை!

அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட
குழந்தை சீரழிந்து போவதைப் போல, இன்று யெஸ்
வங்கியும் சீரழிந்து போய் விட்டது.

ஒரு வங்கி திவாலாக என்ன காரணம்?
1) வாராக்கடன் (NPA)
2) வங்கியில் டெபாசிட் செய்ய எவரும் முன்வராத நிலை.

வாராக்கடனுக்கு யார் காரணம்?
1) தொழில்துறை முதலாளிகள்
2) குரோனி முதலாளிகள்.

குரோனி முதலாளிகள் எந்தத் தொழிலையும்
நடத்துவதில்லை. அவர்கள் அரசுப் பணத்தை,
பொதுப்பணத்தைக் கொள்ளையடிக்க மட்டுமே
செய்வார்கள். குரோனி முதலாளிகள் என்ற ஒரு
புதிய வர்க்கத்தை (அதாவது வர்க்க உட்பிரிவை)
உருவாக்கியதே டாக்டர் மன்மோகன்சிங்-சிதம்பரம்
கூட்டணிதான். UPA-I and UPA-II என்பது குரோனி
முதலாளிகளின் சொர்க்கம்.

இந்தியாவிலேயே குரோனி முதலாளிகள்
தமிழ்நாட்டில்தான் அதிகம். ராஜாத்தி அம்மாள்
உலகின் தலைசிறந்த குரோனி முதலாளிகளில் ஒருவர்.
குரோனி முதலாளி என்பதற்கு ஒரு உயிருள்ள
உதாரணத்தைப் பார்ப்போம் (living example).

கடந்த அக்டோபர்  2019ல், அதாவது நாலு மாதத்துக்கு
முன்பு, இந்தியன் வங்கி ஒரு ஏல நோட்டீசை
தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டு
இருந்தது.

திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு, திருச்சி
கண்டோன்மெண்ட்டில் உள்ள இந்தியன் வங்கியில்
ரூ 100 கோடி ரூபாய் நூறு கோடி மட்டும்) கடன்
வாங்கி இருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு
வாங்கிய கடன் இது. ஆனால் வாங்கிய கடனைத்
திருப்பிக் செலுத்தவில்லை. இந்தியன் வங்கி
அதிகாரிகள் கே என் நேருவின் காலில் விழுந்து கதறி
கடனைத் திரும்பிச் செலுத்துமாறு கோரினர்.
நேரு அசையவில்லை. யானை வாய்க்குள் போன
கரும்பு மீளுமா?

எனவே கடன் பெறுவதற்கான நேரு ஈடாக
வைத்திருந்த அவரின் சொத்துக்களை ஏலம்
விடுவதாக இந்தியன் வங்கி அறிவித்து, ஏல
நோட்டீஸை வெளியிட்டு இருந்தது.

திருச்சி புறநகரில் உள்ள சில நிலங்களை ரூ 100 கோடி
கடனுக்கு ஈடாகக் காட்டி இருந்தார். இது வெறும்
பெயரளவிலான ஈடு. அவ்வளவுதான். இதை எவனாவது
ஏமாந்த சோணகிரியிடம் விற்றால் கூட, சில லட்சத்துக்கு
மேல் தேறாது. வாங்கிய கடனோ ரூ 1000 கோடி!
காட்டிய ஈடோ அற்பமான சில லட்சம்!

ரூ 100 கோடி கடன் வாங்கிய நேரு, அந்தப் பெரும்
பணத்தில்  ஏதாவது தொழில் நடத்தினாரா?
பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை
கொடுத்தாரா? இல்லை. இப்படிப்பட்ட ஒருவரைத்தான்
குரோனி முதலாளி என்கிறோம். கே என் நேரு
குரோனி  முதலாளி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

சரி, ஏல நோட்டீஸ் விட்டதே இந்தியன் வங்கி! நேருவை
மீறி அவரின் சொத்தை ஏலம் எடுப்பதற்கு இந்தியாவில்
ஏன் இந்த உலகிலேயே எவனுக்காவது தைரியம்
இருக்கிறதா?

வாராக்கடன் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி
எல்லாம் நாசமாக்கும் என்று இப்போது புரிகிறதா?
வங்கிகள் ஏன் திவால் ஆகின்றன என்று இப்போது
புரிகிறதா? யெஸ் வங்கி எப்படி திவால் ஆகி
இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

கே என் நேருவை ஒரு உதாரணத்திற்குச் சொல்லி
இருக்கிறேன். இவரைப் போன்ற குரோனி முதலாளிகள்
எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். இவர்களைப்
பற்றிய செய்திகள் எந்தப் பத்திரிகையிலும் வராது.

மொத்தத் தமிழ்நாட்டிலும், கே என் நேருவின் ரூ 100 கோடி
மோசடி பற்றி எழுதியவன் நான் ஒருவன் மட்டுமே.
பிரபல CPI, CPM கடசிகளின் ஏடுகளான தீக்கதிரிலும்
ஜனசக்தியிலும் எழுதிக் கிழித்து விட்டார்களா?
அவர்களே குரோனிகள்தானே ஐயா!

மு க ஸ்டாலினிடம் ரூ 25 கோடி வாங்கிய இவர்களை
கம்யூனிஸ்டுகள் என்பதா? அல்லது குரோனிகள்
என்பதா?

CPI, CPMஐ விடுங்கள். அவர்கள் போலிக் கம்யூனிஸ்டுகள்.
நக்சல்பாரிகளின் யோக்கியதை என்ன?
பிரபல நக்சல்பாரி இணையதளமான "வினவு" என்னும்
இணைய தளத்தில் கே என் நேருவின் ரூ 100 கோடி
மோசடி பற்றி, கட்டுரை வேண்டாம், ஒரு செய்தியாவது
வந்ததா? வருமா? காளியப்பன் வர விடுவாரா?
மருதையன்தான் பிரசுரித்து விடுவாரா? CPI,CPM
போலிக் கம்யூனிஸ்டுகள் என்றால், இவர்கள் போலி
நக்சல்பாரிகள், அவ்வளவுதானே!

பிரபல டிவி நெறியாளர்கள் செந்தில், நெல்சன் சேவியர்,
குணசேகரன் ஆகியோரால் ஒரு டிவி விவாதம்
நடத்த முடிந்ததா? முடியுமா? விவாதம் நடத்திய
பிறகு இந்த மூவரும் உயிரோடு இருக்க முடியுமா?
எனவே புத்திசாலித் தனமாக, வாங்க வேண்டியதை
வாங்கிக் கொண்டு ஆசனத் துவாரங்களைப்
பொத்திக் கொள்வதுதானே இங்குள்ள நடைமுறை!

கே என் நேருவின் ரூ 100 கோடி மோசடி பற்றிய எனது
முகநூல் கட்டுரையை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்
கொண்டு, திமுக இணையதள நிர்வாகி திரு தியாகராஜன்
அவர்களுக்கு அனுப்புவதுதான் "மக்கள் ஜனநாயகக்
குடியரசு" ஆசாமிகளின் வேலையா, மூடர்களே!
இதற்குத்தான் கட்சி நடத்துகிறீர்களா கோழைகளே!

நிற்க. மீண்டும் யெஸ் வங்கிக்கு வருவோம்.
யெஸ் வங்கியானது எப்படி திவால் ஆகி இருக்கும்
என்பது படக்காட்சி போல உங்களுக்குத்
புரிந்திருக்கும்.

இருப்பினும் யெஸ் வங்கியில் பணம் போட்ட எவரும்
பயப்பட வேண்டாம். குழியில் விழுந்த யானையை
மீட்பது போல, யெஸ் வங்கியை மத்திய அரசின்
மீட்புக்குழு மீட்டு விட்டது. ஸ்டேட் வங்கியானது
தேவையான முதலைப் போட்டு (ரூ 12,000 கோடி)
யெஸ் வங்கியின் 49 சதம் பங்குகளை வாங்கி
விட்டது. இது யெஸ் வங்கியின் புத்தாக்கத்
திட்டத்தின் ஒரு பகுதி (Revival plan).

ஒரு தனியார் வங்கி திவால் ஆகிறது என்றால்,
தனியார்மயக் கொள்கை தோல்வி அடைகிறது
என்று பொருள். இதை முந்திய மன்மோகன்சிங்
அரசும் சரி, இன்றைய மோடி அரசும் சரி,
அனுமதிக்காது. எனவேதான் விரைந்து நடவடிக்கை
எடுத்து (acted swiftly), யெஸ் வங்கியை மீட்டு இருக்கிறது
மோடி அரசு.

பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்த மட்டில்,
மன்மோகன்சிங் அரசும் மோடி அரசும் LPG
கொள்கைகளையே  பின்பற்றி வருகின்றன. ஏனெனில்
LPG கொள்கைகள் இந்திய ஆளும் வர்க்கத்தின்
கொள்கைகள் ஆகும்.

காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் பொருளாதாரக்
கொள்கைகளைப் பொறுத்த மட்டில், எந்த வேற்றுமையும்
இல்லை என்ற உண்மையை உணராதவர்களால்
இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ள முடியாது.
********************************************************