செவ்வாய், 10 மார்ச், 2020

குரோனி முதலாளிகளும் குரோனி முதலாளித்துவமும்!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
குரோனி முதலாளித்துவம் என்பதற்கு பிறழ்நெறி
முதலாளியம் என்று நல்லதொரு தமிழ்ச்சொல்லை
முன்வைத்தேன்.

குரோனி முதலாளித்துவம் என்பதற்கு
சலுகைசார் முதலாளித்துவம் என்றும்
சூறையாடும் முதலாளித்துவம் என்றும்
குத்து மதிப்பான தமிழாக்கமும் உலவுகிறது.
ஒத்த கருத்து வரவில்லை.
எனவே குரோனி முதலாளித்துவம் என்றே எழுதுகிறேன்.

ராஜாத்தி அம்மாள் குரோனி முதலாளிக்கு நல்லதொரு
உதாரணம். கல்வியறிவற்ற ராஜாத்தி அம்மாளுக்காக
ஒரு பெரிய நெட்வொர்க் இயங்குகிறது.

முதலாளித்துவத்துக்கு என்று சில நெறிகள் உண்டு.
குரோனிகள் எந்த நெறிகளையும் கடைப்பிடிப்பதில்லை.
எனவே குரோனி முதலாளிகள் சமூகத்துக்குப்
பெருந்தீங்கு விளைப்பவர்கள். இவர்கள் சிறையில்
அடைக்கப்பட வேண்டும்.

எஃப் எம் ஹுசைன் ராஜிவ் காந்தியின்  ஓவியத்தை
வரைந்தார். அதை பிரியங்காவிடம் கொடுத்தார்.
அவரோ அதை யெஸ் வங்கி அதிபருக்கு ரூ 2 கோடிக்கு
விற்று விட்டார். மக்களின் பணம் ரூ 2 கோடி ஒரே
நிமிடத்தில் பிரியங்கா காந்தியின் வயிற்றில்!
இவை எல்லாம் குரோனி முதலாளியச் செயல்பாடுகள்!

ரகுராம் ராஜன் வர்ணித்த ஒரு IRRATIONAL EXUBERANCE
என்பது இதுதான்!

மும்பை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து
தப்ப முயன்றார் ராணா கபூரின் மகள் ரோஷினி.
அமலாக்கப் பிரிவு அவரைக் கைது செய்து லண்டன்
செல்ழும் முயற்சியைத் தடுத்தது. இவர்கள் எல்லாருமே
குரோனிக் கழுதைகள்!

இந்த நாட்டைக் கெடுக்கும் குரோனிகள் அனைவரும்
கம்பி எண்ணாமல் இந்த நாடு உருப்படாது! இந்தக்
குரோனிக் கழுதைகளை ஆதரிப்பவர்களும்
கயவர்களே.
******************************************************                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக