செவ்வாய், 10 மார்ச், 2020

மனிதரில் புனிதர் மாதவராவ் சிந்தியா!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
Politics makes strange bedfellows என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.
அரசியலில் யாரும் யாருடனும் படுக்கலாம் என்று
இதற்குப் பொருள்.

அரசியலில் எந்த விழுமியமும் எந்த அறமும் கிடையாது
என்பதும் மேற்படிப் பழமொழியின் பொருள் என்றும்
நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தன் சொந்த நலனை முன்னிட்டு, சொந்த எதிர்காலத்தை முன்னிட்டு, எந்த ஒரு அரசியல்வாதியும் மேற்கொள்ளும்
நடவடிக்கையை, அறம் விழுமியம் சார்ந்த
துருப்பிடித்த அளவுகோல்களால் அளப்பது நியாயமற்றது.

மபி மாநிலத்தில் காங்கிரசின் தூண்களில் ஒருவர்
மாதவ்ராவ் சிந்தியா. ஆனால் இளம் தலைவர். மபியில்
இவருக்கு எதிராக இருப்பவர்கள் கிழடு கட்டைகள்.
இவரோ ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால்
மக்களிடம் நல்ல அறிமுகமும் செல்வாக்கும்
வாய்ந்தவர்.

மபி முதல்வர் பதவி இவருக்கு மறுக்கப் பட்டது/
அதை இவர் இயல்பாக ஏற்றுக் கொண்டார். அரசியலில்
சீனியருக்குத்தான் பதவி  வழங்கப்படும் என்ற விதியை
இவர் அறிவார்.

மபி காங்கிரசின் மாநிலத் தலைவர் பதவி தனக்கு
வேண்டும் என்று மாதவராவ் விரும்பினார். மாநிலம்
முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து,
கட்சியை வளர்க்கும் அளவுக்கு இவர் ஆற்றலும்
திறமையும் உடையவர். இளைஞர் என்பதால்
இவரால் உழைக்கவும் முடியும். வேறு எவரையும் விட
மாநிலத் தலைவர் பதவிக்கு இவர்தான் பொருத்தமானவர்.
இந்த உண்மை கமல்நாத்-சோனியா- ராகுலுக்கு
நன்கு தெரியும்.

என்றாலும் இவருக்கு காங்கிரசின் மாநிலத் தலைவர்
பதவியும் வழங்கப் படவில்லை. இது மாதவராவுக்குப்
பெரிய அடி! எனவே அவர் சிந்திக்க ஆரம்பித்தார்.

    

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக