வியாழன், 27 பிப்ரவரி, 2020

ராமன் விளைவு என்றால் என்ன?
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
1928ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் நாள் ராமன் விளைவு
(Raman effect) கண்டறியப்பட்டது. கொல்கொத்தா
பல்கலையில் உள்ள தமது ஆய்வுக்கூடத்தில்
இயற்பியல் பேராசிரியர் சர் சி வி ராமன் இதைக்
கண்டறிந்தார்.

பொருளும் ஆற்றலும் ஊடாடும்போது, ராமன் விளைவு
ஏற்படுகிறது. ஒளிபுகும் பொருளின் மீது ஒளி படும்போது
ராமன் விளைவு (Raman effect) நிகழ்கிறது. ராமன் தமது
பரிசோதனைகளில் அங்ககத் திரவங்களான பென்சீன்
(Benzene C6H6), டூலின் (Toluene C7H8) ஆகியவற்றைப் பெரிதும் .பயன்படுத்தினார்.

சற்றேறக் குறைய வேறு வேறான 60 திரவங்களில்
தமது பரிசோதனையைச் செய்து, அதன் முடிவை
ஓர் அறிவியல் பத்திரிக்கையில் வெளியிட்டார்.
நோபல் பரிசு வழங்கும் விழாவின்போது ஆல்கஹால்
(C2H5OH) திரவத்தின் மீதான தமது பரிசோதனையைச்
செய்து காட்டினார்.

ராமனுக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்தில் ஆல்கஹால்
பரிமாறப் பட்டது. அதை அருந்த மறுத்த ராமன்
இப்படிக் கூறினார்:

ஆல்கஹாலின் மீதான ராமன் விளைவை இன்று காலையில்
பார்த்தீர்கள். ஆனால் ராமன் மீதான ஆல்கஹாலின்
விளைவை நீங்கள் பார்க்க முடியாது.

ராமன் விளைவு என்பது இதுதான்:
-----------------------------------------------------
பொருளின் மீது ஒளி படுகிறது; பட்டுச் சிதறுகிறது.
இதை ஒளிச்சிதறல் (scattering) என்கிறோம். ஒளியானது
ஒளிமம் (photon) என்னும் துகள்களால் ஆனது.

பொருளின் மீது பட்ட ஒளிமமும் (incident photon),
சிதறுண்ட ஒளிமமும் (scattered photon) சமமான அளவு
ஆற்றலைக் கொண்டிருப்பது இயல்பான நிகழ்வு.
இத்தகைய சிதறல் ராலே சிதறல் (Rayleigh scattering)
எனப்படும்.

ராலே (Rayleigh 1842-1919) என்பவர் இங்கிலாந்து நாட்டு
இயற்பியல் அறிஞர். நோபல் பரிசு பெற்றவர். இவரின்
ஒளிச்சிதறல் கோட்பாட்டின்படி அமைவதுதான்
ராலே சிதறல் ஆகும்

ராலே சிதறல் மீள்தன்மை உடைய சிதறல்
(elastic scattering) ஆகும். ஒரு பொருளில் ஒரு மாற்றம்
ஏற்பட்ட பின், மீண்டும் அது பழைய நிலைக்குத்
திரும்பினால்  அது மீள்தன்மை உடையது (elastic) எனப்படும்.

அன்றாட வாழ்வில் பயன்படும் ஒரு ரப்பர் கயிற்றை
(rubber band) எடுத்துக் கொண்டு சிறிது இழுத்து நீட்டுங்கள்.
அது நீளும். நீங்கள் நீட்டுவதை நிறுத்திய உடன்,
அது பழைய நிலைக்குத் திரும்புவதை நாம்
உணர்ந்து இருக்கிறோம் அல்லவா! ரப்பர் கயிற்றின்
இத்தன்மையை மீள்தன்மை (elastic) என்கிறோம்.

ராலே சிதறலில், படுஒளிமமானது (incident photon) பொருளின்
மூலக்கூற்றுடன்  வினைபுரிந்து ஒளிச்சிதறல் அடைகிறது.
இவ்வாறு ஒரு மாற்றத்தை அடைந்த பின்னரும்
ஒளிமங்களின் (photons) ஆற்றல் மாறாமல் இருப்பதால்
இது மீள்தன்மை உடைய சிதறல் (elastic scattering) ஆகும்.
இச்சிதறல் பெருவாரியாக நிகழ்வது.

ஆற்றல் மாறவில்லை என்பதற்கு விரிந்த பொருள் உண்டு.
அதாவது சிதறுண்ட ஒளிமங்களின் அ) அலைநீளம்
மாறவில்லை; ஆ) அதிர்வெண் (frequency) மாறவில்லை;
இ) நிறம் மாறவில்லை என்று பொருள். படுஒளிமங்களின்
அலைநீளம், அதிர்வெண், நிறம் ஆகியவற்றையே
சிதறுண்ட ஒளிமங்களும் கொண்டிருக்கும்.

இதற்கு மாறாக, ராமன் சிதறல் (Raman scattering) என்பது
அபூர்வமாக நிகழ்வது. ஒரு பொருளின் மீது ஒளி
பட்டுச் சிதறும்போது, படுஒளிமமும் (incident photon)
சிதறுண்ட ஒளிமமும் (scattered photon) வேறுபட்ட ஆற்றலைக்
கொண்டிருக்கும். இதுவே ராமன் சிதறல் ஆகும்.

இது மீள்தன்மையற்ற சிதறல் (inelastic scattering).
படுஒளிமமானது பொருளின் மூலக்கூறுடன்
வினைபுரிந்து ஒளிச்சிதறல் அடைந்த பின்னர்
ஒளிமங்களின் முன்பிருந்த ஆற்றல் மாறி விடுகிறது.
பழைய ஆற்றல் தக்கவைத்துக் கொள்ளப் படுவதில்லை.
எனவே இது மீள்தன்மையற்ற சிதறல் (inelastic scattering)
ஆகும். ராமன் சிதறலையே ராமன் விளைவு என்கிறோம்.

ராலே சிதறலின்போது சமணத்துறவிகள் போல
அடக்க ஒடுக்கமாக இருக்கும் ஒளிமங்கள் (photons)
ராமனிடம் மட்டும் ஏன் வாலாட்டுகின்றன?

ராலே சிதறலின்போது, பொருளின்மீது படும்
ஒளிமங்களின் ஆற்றலை பொருளின் மூலக்கூறுகள்
உட்கிரகிப்பதில்லை. எனவே பொருளின் மீதான
ஒரு மோதலுக்குப் பின்னரும், ஒளிமங்கள் ஆற்றலை
இழக்காமல் முழுசாக இருக்கின்றன. எனவே
மீள்தன்மை உடைய சிதறல் (elastic scattering) நிகழ்கிறது.

ஆனால் ராமன் சிதறலின்போது என்ன நடக்கிறது?
பொருளின் மீது படும் ஒளிமங்களில் (incident photons)
ஒரு பகுதியானது, அப்பொருளின் மூலக்கூறுகளை
கிளர்ச்சியுற்ற நிலைக்குக் (excited state) கொண்டு செல்கிறது.
இந்நிகழ்வில் ஒளிமங்கள் தமது ஆற்றலை சிறிதளவு
இழந்து, பின் சிதறல் அடைகின்றன.எனவே சிதறுண்ட
ஒளிமங்களின் ஆற்றல் குறைந்து விடுகிறது. அதாவது
படுஒளிமங்களின் அலைநீளத்தை விட, சிதறுண்ட
ஒளிமங்களின் அலைநீளம் அதிகரிக்கிறது; அதிர்வெண்
குறைந்து விடுகிறது.

வேறொன்றும் நிகழ்கிறது. பொருளின் மூலக்கூறுகள்
ஏற்கனவே கிளர்ச்சியுற்ற நிலையில் இருக்குமானால்,
அவற்றின் மீது ஒளி படும்போது, அவற்றின் ஆற்றலை
ஒளிமங்கள் பெற்றுவிடுகின்றன, பின் சிதறல்
அடைகின்றன. இவ்வாறு சிதறுண்ட ஒளிமங்களின்
ஆற்றல் .அதிகரிக்கிறது. அதாவது படுஒளிமங்களின்
அலைநீளத்தை விட, சிதறுண்ட ஒளிமங்களின்
அலைநீளம் குறைந்து விடுகிறது; அதிர்வெண்
அதிகரிக்கிறது.

நிறமாலைமானியில் (spectroscope) இவற்றை ஆய்வு
செய்யும்போது ஆற்றலின் மாற்றங்கள் கோடு
கோடாகத் தெரியும். படுஒளிமமும் சிதறுண்ட
ஒளிமமும் எவ்வித ஆற்றல் மாற்றத்தையும்
அடையாத நிலையில் தெரியும் கோடுகள்
மாற்றமுறாக் கோடுகள் (unmodified lines) எனப்படும்.
இவை ராலே கோடுகள் என்றும் முதன்மைக்
கோடுகள் (primary lines) என்றும் அழைக்கப் படுகின்றன.

ஆற்றலில் மாற்றம் அடைந்த கோடுகள் ராமன் கோடுகள்
(Raman lines) என்று பெயர் பெறுகின்றன. இதிகாச
இலக்கியங்களில் நாம் அறிந்த லட்சுமணக் கோட்டுக்கும்
ராமன் கோட்டுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.
அது இதிகாசம்; இது அறிவியல்.


ஸ்டோக்ஸ் எதிர்ப்பும் ஆதரவும்!
-----------------------------------------------------
ராமன் கோடுகள் இருவகை ஆனவை. ஆற்றல் குறைந்த
கோடுகள் ஸ்டோக்ஸ் கோடுகள் (Stokes lines) எனப்படும்.
ஆற்றல் அதிகரித்த கோடுகள் ஸ்டோக்ஸ் எதிர்ப்புக்
கோடுகள் (Anti Stokes lines) எனப்படும்.

இது என்ன ஸ்டோக்ஸ்  ஆதரவு, ஸ்டோக்ஸ் எதிர்ப்பு?
ஸ்டோக்ஸ்  என்றால் என்ன? ஸ்டோக்ஸ் என்பவர்
( Sir George Stokes 1819-1903) அயர்லாந்து நாட்டின்
இயற்பியலாளர். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலையில்
லூக்காசியன் கணிதப் பேராசிரியராக நெடுங்காலம்
இருந்தவர். உலகின் தலைசிறந்த கல்வியியல்
பதவியாகும் இது. ஸ்டோக்சுக்கு முன்பு நியூட்டனும்
பின்னர் ஸ்டீபன் ஹாக்கிங்கும் வகித்த பதவி இது.

பின்வரும் இரண்டு நிலைகள் ஏற்படும்:-
1) ஒரு பொருளின் மீது படும் ஒளியின் (incident light)
அலைநீளத்தை விட, பட்டுத் திரும்பும் ஒளியின்
அலைநீளம் அதிகமாக இருக்கும். இத்தகைய கோடுகள்
நிறமாலைமானியில் தெரியும். இவை ஸ்டோக்ஸ் கோடுகள்
(Stokes' Lines)  எனப்படும்.

2) அவ்வாறே அலைநீளம் குறைவாக உள்ள ஒளியின்
கோடுகள் ஸ்டோக்ஸ் எதிர்ப்புக் கோடுகள் (Anti Stokes Lines)
எனப்படும். இதை 19ஆம் நூற்றாண்டிலேயே
கண்டறிந்தவர் ஸ்டோக்ஸ். எனவே அவரின் பெயரால்
இக்கோடுகள் வழங்கப் பட்டு வருகின்றன.

3) அலைநீளத்தில் எந்த மாற்றமும் ஏற்படாமல்,
படுஒளிமத்தின் அலைநீளத்தை அப்படியே தக்க வைத்துக்
கொள்ளும் கோடுகள் மாற்றமுறாக் கோடுகள் (unmodified lines)
ஆகும்.

ராமன் கோடுகள் (Raman lines)  என்றாலே, மாற்றம் உறுகின்ற
கோடுகளை மட்டுமே குறிக்கும். மாற்றமுறாத கோடுகளுக்கு
ராமராஜ்யத்தில் இடமில்லை. அவை ராலே ராஜ்யத்தின்
குடிமக்கள் ஆகும்.

மின்காந்தக் கதிர்வீசலைப் பொறுத்த மட்டில்,
அலைநீளம் அதிர்வெண் என்னும் இவ்விரண்டுக்கும் இடையிலான
உறவு இயற்பியலில் கறாரான ஒரு வரையறுப்புக்கு உட்பட்டது.
இது குறித்த ஒரு தெளிவான புரிதல் இயற்பியல்
ஆர்வலர்களுக்கு அவசியம். இல்லையேல் அலைநீளம் அதிர்வெண்
ஆகியவை குறித்த பிறழ்புரிதல் ஏற்பட்டு விடும்.

மின்காந்த நிறமாலையைப் (electromagnetic spectrum) பார்த்தால்,
அதில் பல்வேறு அதிர்வெண்களையும் பல்வேறு அலைநீளங்களையும் கொண்ட ஒளியை நம்மால் காண இயலும். இவை அனைத்தையும் ஒரு
சமன்பாட்டின் மூலம் இயற்பியல் இணைக்கிறது.
எந்தவொரு மின்காந்த அலையின் அலைநீளம், அதிர்வெண் இவ்விரண்டையும் பெருக்கினால், ஒளியின் வேகம் கிடைக்கும்.
(ஒளியின் வேகம் = 299 792 458 மீட்டர்/வினாடி)

c = f  lambda என்னும் இச்சூத்திரத்தில்,
c = ஒளியின் வேகம்
f = frequency (அதிர்வெண்)
lambda = wavelength (அலைநீளம்)


ஒற்றை நிற ஒளி ஏன்?
-----------------------------------
ராமன் தமது பரிசோதனையில் ஒற்றை நிற ஒளியைப்
(monochromatic light) பயன்படுத்தினார். லேசர் விளக்குகள்
இல்லாத அக்காலத்தில் பாதரச விளக்குகளே
(Mercury arc lamps) அவருக்குக் கிடைத்தன. ராமன் ஏன்
ஒற்றை நிற ஒளியைப் பயன்படுத்தினார்?

ஒற்றை நிற ஒளி என்றால் ஒற்றை அலைநீளம் என்று
பொருள். ஒவ்வொரு அலைநீளத்திற்கும் ஒவ்வொரு
கோடு நிறமாலைமானியில் தெரியும். ஒற்றை நிற
ஒளிக்குப் பதிலாக வேறு ஒளியை அதாவது ஒன்றுக்கு
மேற்பட்ட நிறமுள்ள ஒளியைப் பயன்படுத்தினால்
என்ன ஆகும்? நாம் அன்றாடம் உணரும் காணத்தக்க
ஒளியானது (visible light) பல்வேறு அலைநீளங்களைக்
கொண்டது. இதைப் பயன்படுத்தினால், பல்வேறு
கோடுகள் தெரியும். இக்கோடுகளில் எது ராமன் கோடு
என்று கண்டறிய இயலாது.

ராமனின் பரிசோதனை அமைப்பு இரண்டு கோடுகள்
மட்டும் தெரியும் விதத்தில் அமைக்கப் பட்டிருந்தது.
ஒன்று ராலே கோடு. இன்னொன்று ராமன் கோடு.
1928 பெப்ரவரி 28 அன்று ராமன் கோடு தெரிந்தது.
அதுவரை தெரியாமல் இருந்த கோடு அபூர்வமாக
அன்றுதான் தெரிந்தது. அந்த நாள் அபூர்வமான நாள்.
எனவே அந்த நாள் தேசிய அறிவியல் நாள் ஆகியது.

கோடு தெரிந்ததுமே பரவசம் அடைந்தார் ராமன்.
"டேய், கிருஷ்ணா, கோடு தெரியுதுடா" என்று கத்திக்
கொண்டே ஆய்வகத்தை விட்டு வெளியே ஓடினார்
ராமன். கிருஷ்ணன் அவருடைய மாணவர்; உதவியாளர்.
மொத்தப் பல்கலைக் கழகமும் எதுவும் புரியாமல்
ராமனை வியப்புடன் பார்த்தது.

ஆம், அறிவியலின் பேருண்மையைக் கண்டறிந்த
எந்த ஒரு விஞ்ஞானியும் கிளர்ச்சியுறுவது இயற்கையே.
குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும்போது,
ஓர் அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்த ஆர்க்கிமிடிஸ்,
யூரேகா என்று கத்திக் கொண்டே தெருவில் ஓடியது போல
ராமனும் ஓடினார். ஆம், ராமன் அப்போது ground stateல்
இல்லை; அவர் highly excited stateல் இருந்தார்.
*****************************************************




    









==================
Raman Effect:
The monochromatic light is scattered when it is allowed to pass through a substance. The scattered light contains some additional frequencies other than that of incident frequency. This is known as Raman effect.
The lines whose frequencies have been modified in Raman effect are called Raman lines. The lines having frequencies lower than the incident frequency are called Stoke's lines and the lines having frequencies higher than the incident frequency are called Anti-stokes lines. This series of lines in the scattering of light by the atoms and molecules is known as Raman Spectrum.
The Raman effect can be easily understood, by considering the scattering of photon of the incident light with the atoms or molecules. Let the incident light consist of photons of energy .
1. If a photon strikes an atom or a molecule in a liquid, part of the energy of the incident photon may be used to excite that atom of the liquid and the rest is scattered. The spectral line will have lower frequency and it is called stokes line.
2. If a photon strikes an atom or a molecule in a liquid, which is in an excellent state, the scattered photon gains energy. The spectral line will have higher frequency and it is called Anti-stoke's line.
3. In some cases, when a light photon strikes atoms or molecules, photons may be scattered elastically. Then the photons neither gain nor lose energy. The spectral line will have unmodified frequency.
If  is the frequency of incident radiation and  the frequency of scattered radiation of a given molecular sample, then Raman Shift or Raman frequency  is given by the relation .
The Raman shift does not depend upon the frequency of the incident light but it is the characteristic of the substance producing Raman effect. For Stoke's lines,  is positive and for Anti-stoke's lines  is negative.
The intensity of Stoke's line is always greater than the corresponding Anti-stoke's Line. The different processes giving rise to Rayleigh. Stoke's and Anti-stokes lines are shown in Figure.
When a system interacts with a radiation of frequency , it may make an upward transition to a virtual state. A virtual state is not one of the stationary states of the molecules. Most of the molecules of the system return back to the original state from the virtual state which corresponds to Rayleigh scattering. A small fraction may return to states of higher and lower energy giving rise to Stoke's line and Anti-stoke's line respectively.






























    
பிளவுகளின் அமில மழையில்
மார்க்சிஸ்டு லெனினிஸ்டு குழுக்கள்!
தோழர் மருதையன் விலகலை முன்னிட்டு!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
தத்துவச் சீரழிவு அரசியல் சீரழிவுக்கு இட்டுச் செல்லும்.
அரசியல் சீரழிவு அமைப்புச் சீரழிவுக்கு இட்டுச் செல்லும்.
அமைப்புச் சீரழிவு தனிநபர் சீரழிவுக்கு இட்டுச் செல்லும்.

தத்துவம், அரசியல், அமைப்பு, தனிநபர் ஆகியவற்றுக்கு
இடையே ஒரு அந்தாதித் தொடர்பு உண்டு. (இங்கு
தத்துவம் என்பது மார்க்சியத்தைச் சரிவரப்
பிரதிபலிக்காத கட்சிகளின் வேலைத்திட்டத்தைக்
குறிக்குமே தவிர மார்க்சியத்தைக் குறிக்காது)

தோழர் மருதையன் அண்மையில் மாநில அமைப்புக்
கமிட்டியில் இருந்து (SOC CPI ML) விலகியுள்ளார்.
அவருடனும் அவரைத் தொடர்ந்தும் சிலர்
விலகி உள்ளனர்.

மொத்த மாநில அமைப்புக் கமிட்டியிலும், யாரினும்
கூடுதலாக தோழர் மருதையனே மக்களுக்கு நன்கு
அறிமுகம் ஆனவர். எனவே அவரின் விலகல் தமிழக
இடதுசாரி உலகில் அதிர்வுகளைத் தோற்றுவிப்பது
இயல்பே.

முன்னதாக ஒன்றைத் தெளிவுறுத்தி விடுவது உத்தமம்.
மருதையனுக்கு ஆதரவாகவும் மாநில அமைப்புக்
கமிட்டியின் தலைமைக்கு எதிராகவும் எழுதப்படுபவை
அல்ல எனது கட்டுரைகள். தொழுநோயாளிகளின் மீது
பரிவு கொள்வதைப் போல இத்தகைய புகார்களைக்
கூறுவோர் மீது பரிவு கொள்கிறேன்.

மருதையனும் நானும் மத்திய அரசின்
தொலைதொடர்புத் துறையில் பணியாற்றியவர்கள்.
கடந்த கால் நூற்றாண்டு கால தொழிற்சங்க இயக்கத்தில்
மருதையன் எங்களோடும் நாங்கள் அவரோடும்
பரஸ்பரம் இணைந்து செயல்பட்டவர்கள். மாநில
அமைப்புக் கமிட்டிக்கு அப்பாலும் உலகம் இருக்கிறது
என்பதை மேற்படி புகார்தாரர்கள் உணர்வது நல்லது.

தமது விலகலை அறிவிக்கும் கடிதத்தை வினவு
இணையதளத்தில் வெளியிட்ட மருதையன்
தமது விலகலுக்கான மெய்யான காரணத்தை
நியாயமான முறையில் தெரியப் படுத்தவில்லை.
எட்டாம் வகுப்புச் சிறுவன் இந்திய சுதந்திரம் என்ற
தலைப்பில் எழுதிய கட்டுரை போல் உள்ளது
அவரின் கடிதம்.

எனவே பெறுமதி உடைய ஒரு ஆவணமாகக் கருதி
அவரின் கடிதத்தைப் பரிசீலிப்பது இயலாது. ஒருவேளை
பின்னாளில் தமது விலகலுக்கான காரணத்தை
விளக்கி அவர் ஒரு அறிக்கை வெளியிடக் கூடும்.
அந்த அறிக்கையிலும் கூட உண்மை
வெளிப்படுவதற்கான நிகழ்தகவு பூஜ்யமே.

தமது விலகல் கடிதத்தில் உலகப் பிரசித்தி பெற்ற
ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப்பண்ணை வாசகத்தை
நினைவூட்டி இருப்பார் மருதையன்.
(“அமைப்பில் எல்லோரும் சமம்” என்று ஏட்டளவில் 
கூறிக்கொண்டாலும், “சிலர் மட்டும் கூடுதலாகச் சமம்” என்ற 
கருத்து தலைமைத் தோழர்கள் மனதில் இருக்கிறது).

ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று "நிரூபிக்கும்"
ஒரு கட்டுரை புதிய கலாச்சாரத்தில் வெளியானதை
சிலர் படித்திருக்கக் கூடும். தமது அறிவிக்கப்பட்ட
நிலைபாட்டுக்கும் தமது உள்மனசு ஏற்றுக் கொண்ட
நிலைபாட்டுக்கும் இடையே ஒரு சீனப் பெருஞ்சுவர்
இருப்பதை மருதையன் தன்னை அறியாமலே
வெளிப்படுத்தி விட்டாரோ? அல்லது ஜார்ஜ் ஆர்வெல்லின்
வாசகம் ஒரு Universal Truth ஆக நிலைபெற்று விட்டதோ?

நன்கு பழகிய தோழர்கள் "ஒதுங்குவதைக் காணும்போது
மட்டும், சற்றே கண்கள் கலங்குகின்றன" என்கிறார்
மருதையன். தோழர் ஏ எம் கே அவர்கள் மறைந்தபோது,
அவருக்கு வினவு இணையதளத்தில் ஒரு வரி இரங்கல்
கூடத் தெரிவிக்காத, ஏஎம்கேவின் மறைவை போகிற
போக்கில் ஒரு obituary செய்தியாகக் கூடச் சொல்லாத
ஈவிரக்கமற்ற வன்மம் பிடித்த மருதையன் இன்று
புலம்புகிறார்.

தோழர் ஏ எம் கே மீது ஏன் இந்தத் தீண்டாமை? ஏ எம் கே
ஒரு சூத்திரர் என்பதால்தான் அவரின் மறைவின்போது
கூட, அவரை குரூரமாக அவமானப் படுத்தினார்
வன்மம் பிடித்த பார்ப்பனரான மருதையன் என்று நான்
வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறேன்.

மருதையன் மட்டும் பார்ப்பனராக இல்லாமல் வேறு
சாதியினராக இருந்திருந்தால், அவர்  நிச்சயம் ஏ எம் கே
அவர்களின் மறைவுக்கு உரிய அஞ்சலியைச் செலுத்தி
இருப்பார். அவரிடம் வெளிப்பட்டது பார்ப்பன வன்மமே.

மருதையனுக்கு முன்பும் மாநில அமைப்புக் கமிட்டியில்
இருந்து நூற்றுக்கணக்கில் விலகி உள்ளனர். பின்னும்
பலர் விலகக் கூடும். எனினும் இந்த விலகல்கள்
மாநில அமைப்புக் கமிட்டிக்கு மட்டும்  உரித்தானவை
என்றோ, தனித்துவம் உடையவை (unique) என்றோ
கருதுவதில் உண்மை இல்லை. இத்தகைய விலகல்கள்
தமிழகத்தில் செயல்படும் எல்லா மார்க்சிய லெனினிய
அமைப்புகளுக்கும் பொதுவானவையே.

மார்க்சிய லெனினிய அமைப்புகளைப் பொறுத்தமட்டில்
பிளவுகளின் அமில மழையை அவை எதிர்கொண்டே
வருகின்றன. பிளவுபடாத அமைப்பு இல்லை.
அண்மையில் தோழர் ஏ எம் கே அவர்களின் மறைவுக்குப்
பின்னர், மஜஇக அமைப்பும் போல்ஷ்விக் கட்சியும்
இரண்டாகப் பிளவுபட்டன. மூன்றாவதாகச் சிலர்
அமைப்பில் இருந்தே வெளியேற்றப் பட்டனர்.

மூன்று நான்கு துண்டுகளாக உடைந்துதான் லிபரேஷன்
குழு இன்று ஜீவித்துக் கொண்டுள்ளது. இது போல
சொல்லிக் கொண்டே போகலாம். உடைவுகள்,
பிளவுகள், விலகல்கள் என்று மார்க்சிய லெனினிய
அமைப்புகள் மேலும் பலவீனம் அடைந்து வருகின்றன.
இவற்றுள் தனிநபர் சார்ந்த பிளவுகளே இல்லை
என்று எவராலும் சான்றிதழ் அளிக்க இயலாதுதான்.
என்றாலும் பெரும்பான்மையான பிளவுகள்
தத்துவார்த்த நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டவை.
பிளவுகளின் மூல ஊற்று சித்தாந்தம் திவாலாகிப்
போனதே!

நன்கு விஷயம் தெரிந்த மார்க்சிய லெனினியத்
தோழர்கள் தங்களின் தனிப்பட்ட உரையாடல்களின்
போது, 1970 வேலைத் திட்டம் இன்று பொருந்தாது என்று
ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் எவரும்
பொதுவெளியில் அதை ஒத்துக் கொள்வதில்லை.
அடிப்படை நிலைபாடுகள் என்று அறியப்பட்ட
பலவும் இன்று ஆட்டம் கண்டு விட்டன. எல்லா
அமைப்புகளிலும் நிலவும் சித்தாந்தக் குழப்பங்கள்
பற்றி மிக எளிமையாகப் பார்ப்போம்.

1) இந்திய அரசு ஒரு பாசிச அரசு என்கிற வரையறையை
பலரும் ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்.
2) இந்திய அரசு தரகு முதலாளித்துவ அரசு என்ற
வரையறையும் இன்று பலராலும் ஐயுறப் படுகிறது.
3) நிலப் பிரபுத்துவத்திற்கும் பரந்து பட்ட
விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடே
பிரதான முரண்பாடு என்ற வரையறை காலாவதி
ஆகிவிட்டதாகப் பலரும் கருதுகின்றனர்.
4) இந்தியப் புரட்சியின் கட்டம் ஜனநாயகக் கட்டம்
என்பதை நிராகரிக்கப் பலரும் முன்வந்துள்ளனர்.
வெகுசிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று,
கட்டக் கொள்கையையே நிராகரிக்கும் டிராட்ஸ்கியிடம்
அடைக்கலம் புகத் தலைப்பட்டுள்ளனர்.

வேலைத்திட்டம் வகுக்கப்பட்ட 1970களில்,
நாடு முழுவதும் உள்ள கட்சி அணிகள் முழுமனதோடு
ஏற்றுக் கொண்ட அடிப்படை நிலைபாடுகளில் பல
இன்று கேள்விக்கு உள்ளாகி நிற்கின்றன.

மேற்கூறிய நான்கு அம்சங்களும் விதிவிலக்கின்றி
எல்லா அமைப்புகளிலும் முழு அளவில் நிலவுவதாக
யாரும் யாந்திரிகமாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
மார்க்சிய லெனினியக் குழுக்களில் வேறுபட்ட
அளவுகளில் நிலவும் சித்தாந்தப் போக்குகள் இங்கு
தொகுத்துக் காட்டப் பட்டுள்ளன.

1995 முதல் இந்தியாவில் உலகமயக் கொள்கைகள்
புகுத்தப் பட்டன. LPG கொள்கைகள் வேக வேகமாகச்
செயல்பாட்டுக்கு வந்தன. இந்தியச் சந்தையானது
அந்நிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களால்
நிறைந்தது. நாட்டின் பொருள் உற்பத்தி முறையில்
இவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின.

இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகளை
எவ்வாறு எதிர்கொள்வது என்று மார்க்சிஸ்ட் கட்சி (CPM)
உட்பட எந்த ஒரு மார்க்சிய லெனினியக் குழுவும்
புறநிலையில் ஆய்வு நடத்தி சரியானதொரு
மாற்றுத் திட்டத்தை உருவாக்கவில்லை.

1980களில் இந்தியா முழுவதும் என்ஜிஓக்கள் புற்றீசலாய்
வந்து விழுந்தன. ரஜனி கோத்தாரியின் முயற்சியில்
சமூகச் செயல்பாட்டாளர்கள் பலரையும் என்ஜிஓக்கள்
வளைத்துப் பிடித்தன. இந்தியாவின் சமூக அரசியல்
களங்களை என்ஜிஓக்கள் தம்வசப் படுத்திக் கொண்டன.
மக்களுக்காகப் போராடும் உரிமையை
கம்யூனிஸ்டுகளிடம் இருந்து என்ஜிஓக்கள் பறித்துக்
கொண்டன. இதனால் ஒட்டு மொத்த கம்யூனிஸ்ட்
இயக்கமும் வலுவிழந்தது. மாறாக என்ஜிஓக்கள்
மக்களின் ஏகப் பிரதிநிதிகளாய் தங்களை வரித்துக்
கொண்டன.

நாட்டின் சமூக அரசியல் அரங்கை என்ஜிஓக்கள்
கைப்பற்றிக் கொண்டன என்பதன் பொருள்
ஏகாதிபத்தியம் கைப்பற்றிக் கொண்டது என்பதுதான்.
ஏனெனில் என்ஜிஓக்கள் என்பவை ஏகாதிபத்தியத்தின்
குழந்தைகள் மட்டுமல்ல ஏகாதிபத்தியத்தின்
ஆயுதங்களும் ஆகும்.

என்ஜிஓக்களை ஆரம்பத்தில் எதிர்த்துப் போராடிய பல
மார்க்சிய லெனினியக் குழுக்கள் கூட,காலப்போக்கில்
என்ஜிஓக்களிடம் சரண் அடைந்தன. மாவோயிஸ்ட்
கட்சியானது பிரபல என்ஜிஓ அருந்ததி ராயின்
செல்லப் பிள்ளை! ஆரம்பத்தில் என்ஜிஓக்களை
எதிர்த்த மாநில அமைப்புக் கமிட்டியானது,
காலப்போக்கில்  தீஸ்தா செதல்வாத், கூடங்குளம்
உதயகுமார் ஆகியோருக்கு ரசிகர் மன்றம்
அமைப்பதில் தீவிரம் காட்டியது.

நெருப்பு வளையத்தின் நடுவே ஒரு கற்பூரக் கட்டி
போல, வலுக்குறைந்த மார்க்சிய லெனினியக் குழுக்கள்
எவ்வளவு காலம்தான் என்ஜிஓ எதிர்ப்பில் கற்போடு
இருந்து விட முடியும்? போல்ஷ்விக் கடசி மட்டுமே
இன்று வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு என்ஜிஓ
எதிர்ப்பில் உறுதிபட நிற்கிறது. இது ஒரு விதிவிலக்கே!
சாராம்சத்தில், என்ஜிஓக்களின் ஏகாதிபத்திய
அரசியலை எதிர்த்து முறியடிப்பதில் மா லெ குழுக்கள்
தோல்வி அடைந்ததன் காரணம் என்ன?

இந்தியப் புரட்சியின் பிரதான முரண்பாடு
நிலப்பிரபுத்துவத்துக்கும் பரந்துபட்ட மக்களுக்கும்
இடையிலான முரண்பாடே என்ற தவறான
வரையறுப்புத்தான் இதற்குக் காரணம் என்று பலரும்
சிந்திக்கத் தலைப்பட்டு விட்டனர்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள் தலைமையில் திரள
வேண்டிய மக்களைத் திசை திருப்பி, என்ஜிஓக்களின்
தலைமையில் அணிதிரட்டியது யார்? ஏகாதிபத்தியமா
அல்லது நிலப்பிரபுத்துவமா?

இந்தியாவில் எந்த ஒரு சதுர அங்குல நிலப்பரப்பிலும்
எந்த ஒரு கம்யூனிஸ்ட் கடசி இயக்கம் நடத்த
முன்வந்தாலும் அங்கு என்ஜிஓக்களின் இருப்பை
எதிர்கொள்ள நேரும்.அந்த அளவுக்கு என்ஜிஓக்களின்
ஆதிக்கம் இந்தியாவில் தலை விரித்து ஆடுவதற்குக்
காரணம் ஏகாதிபத்தியமா அல்லது நிலப்பிரபுத்துவமா?

இத்தகைய கேள்விகளை ஒவ்வொரு குழுவிலும் உள்ள
சிந்திக்கும் திறன் பெற்ற அணிகள் கேட்கத்
தொடங்கி விட்டார்கள். இவற்றின் ஒட்டு மொத்த
விளைவே இன்று நேரிட்டுள்ள சித்தாந்தக் குழப்பம்.

சித்தாந்தக் குழப்பத்தில் இருக்கும் அணிகளை
விடுவிக்க மார்க்சிய லெனினியக் குழுக்களின்
தலைமையால் முடியவில்லை. காரணம் தலைமைக்
குழுவிலேயே இந்தக் குழப்பம் இருக்கிறது.

இவை தவிர, பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு
தலைமை முதல் கடைசி ஆதரவாளர் வரை அத்தனை
பேரும் ஏதோ ஒரு வகையில் அறிந்தும் அறியாமலும்
இரையாகி உள்ளனர்.

சித்தாந்தக் குழப்பத்தில் இருந்து விடுபட இயலாத
மா லெ குழுக்களின் தலைமை, அமைப்புக்
கட்டுப்பாடு, அமைப்பு முறை ஆகிய ஆயுதங்களைப்
பயன்படுத்தி கேள்வி கேட்பவர்களை ஒடுக்குகிறது.
இதன் விளைவே மா லெ குழுக்களில் இருந்து
பலரும் விலகுவதற்குக் காரணம்.   

ஆக, மா லெ குழுக்கள் சித்தாந்தத் தெளிவை
அடையாமல் பிளவுகளை செயற்கையாகக் கூட
இனி தடுக்க இயலாது.
**************************************************





  


       





























       

புதன், 26 பிப்ரவரி, 2020

Ref: திருவாதிரை குறித்த கட்டுரை:   
----------------------------------------------------
1) இந்த நட்சத்திரம் வானியலில் 
Alpha Orionis எனப்படும். இது Orion constellationல் உள்ளது.

2) இது இங்கிருந்து 724 light year தொலைவில் உள்ளது.
நன்கு கவனிக்கவும்; 724 ஒளியாண்டு.
613 ஒளியாண்டு முதல் 881 ஒளியாண்டு வரையிலான
ரேஞ்சில் 724 ஒளியாண்டு என்று ஐரோப்பிய விண்வெளி 
நிறுவனம் கூறுகிறது.
ESA = European Space Agency.
இந்நிறுவனம் ஒரு space telescope மூலமாக 
ஆராய்ந்ததில் 724 ஒளியாண்டு என்று முடிவுக்கு 
வந்துள்ளது. இந்நிறுவனம் அனுப்பிய 
space telescopeன் பெயர் ஹிப்பார்காஸ் (Hipparcos).

3) திருவாதிரை நட்சத்திரத்தில் இருந்து பூமிக்கு 
ஒளி வந்தடைய எவ்வளவு காலம் ஆகும்?
724 ஒளியாண்டு ஆகும்.

ஒளி 1 நிமிடத்தில் செல்லும் தூரம் = 3 லட்சம் கிமீ 
ஒளி 1 நிமிடத்தில் செல்லும் தூரம் = 1,80,00,000 கிமீ 
அதாவது 1 கோடியே 80 லட்சம் கிமீ 

ஒளி 1 மணி நேரத்தில் செல்லும் தூரம் = 108,00,00,000 கிமீ 
அதாவது 108 கோடி கிமீ. 

4) திருவாதிரை நட்சத்திரம் என்பது M type வகையைச் 
சேர்ந்த சிவப்பு ராட்சதன் ஆகும் (Red giant super).

5) சூரியனின் நிறை = 2x 10^30 kilogram.

6) ஒரு ஒளியாண்டு என்பது 9.5 x  10^12 கிலோமீட்டர்.
அதாவது, 9.5 டிரில்லியன் கிலோமீட்டர்.
-----------------------------------------------------------------------                

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

மேலை நாடுகளில் மாஸ்டர்பேஷன் கிளப்புகள்
என்று உண்டு. மாலே கடசிகள் மகஇக
ஒரு மாஸ்டர்பேஷன் கிளப்பி அவ்வளவே.

வேடந்தாங்கல் போன்றது மகஇக
 

நாற்பதாண்டு காலமாக தான் நேசித்த, தனது வாழ்க்கை
முழுவதையும் அர்ப்பணித்த  மகஇக மற்றும் மாநில
அமைப்புக் கமிட்டியில் இருந்து (SOC CPI ML) விலகிக்
கொண்டிருக்கிறார் தோழர் மருதையன். இந்தத் துயரமான
நேரத்தில் நான் தோழர் மருதையனின் கரங்களை
பேரன்புடன் இறுகப் பற்றிக் கொள்கிறேன்.

வெளியேறுகிறேன் என்பதை விட வெளியேற்றப்
படுகிறேன் என்பதே உண்மை என்கிறார் தோழர்
மருதையன்.ஆம், அமைப்பு சார்ந்த இது போன்ற
விஷயங்களைப் பொறுத்து மார்க்சிய லெனினிய
அமைப்புகளில், செய்வினைக்கும் செயப்பாட்டு
வினைக்கும் வேறுபாடே கிடையாது.

அதிகபட்ச அர்ப்பணிப்பு, அதிகபட்ச தியாகம், கடும்
உழைப்பு ஆகியவற்றால் ஆயிரக் கணக்கான
இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்த தோழர் மருதையன்
ஒரு மார்க்சிய லெனினிய அமைப்பில் நீடிக்க
முடியவில்லை என்பது சமகாலத்தின் துயரங்களில் ஒன்று.
இதற்கு எவ்விதத்திலும் தோழர் மருதையன்
காரணம் அல்ல என்ற என் கருத்தில் மிகப்பலரும்
உடன்படக்கூடும்.





    
      

திங்கள், 24 பிப்ரவரி, 2020

மகஇக விவகாரங்கள்
----------------------------------
சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு, இன்று மருதையன் எழுதியிருக்கும் இதே கருத்துக்களை, இதே மகஇகவிற்கு தலைமை தாங்கும் அமைப்பின் அரங்கில் ஒற்றை ஆளாக முன்வைத்து போராடி, அதனால் இதே போன்று "வெளியேற்றப்பட்டேன்".
வாழ்க்கை ஒரு வட்டம்தான் போலும்.
"பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு – அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும். அதிகாரத்துவப் போக்கிற்கு சப்பை கட்டுவது, பாசிச எதிர்ப்பு போராட்டத்துக்கு நிச்சயமாக வலுச்சேர்க்காது." என எழுதியிருக்கிறார்.
நல்லது. அந்த அதிகாரத்துவத்தை உறுதிபடக் கட்டியெழுப்பியதில், தனக்கும், நாதனுக்கும் உள்ள மறுக்கவியலாத பங்கு குறித்து, ஏதேனும் சுயவிமர்சனம் இக்கட்டுரையில் இருக்கிறதா?
"ஒவ்வொரு விமர்சனத்திலும் ஒரு சுயவிமர்சனம் பொதிந்திருக்கிறது" என அணிகளுக்கு வகுப்பெடுத்தாரே, ஆனால் இந்த மொத்தக் கட்டுரையிலும் சுயவிமர்சனம் மருந்துக்கும் இல்லையே, ஏன்? ஏனெனில், அப்படி ஒரு முழுமையான சுயவிமர்சனம் வெளிவந்தால், இந்த விமர்சனம் உருவாக்கும் சிறிய ஆதரவு அலை சுவடின்றி காணாமல் போய் விடும். குருச்சேவ் குறித்த புகழ்பெற்ற ஜோக்தான் நினைவுக்கு வருகிறது.
ஸ்டாலின் மறைவிற்குப் பிறகு, ஒரு கூட்டத்தில் குருச்சேவ் ஸ்டாலினை கண்டித்துப் பேசிக் கொண்டிருந்தாராம். கூட்டத்திலிருந்து ஒரு குரல், "அப்பொழுது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?" எனக் கேட்டதாம். "யார் இந்த கேள்வியைக் கேட்டது?" என குருச்சேவ் சீறினாராம். ஒரே அமைதி. தொண்டையை சரி செய்து கொண்ட குருச்சேவ், "இப்படித்தான் நாங்களும் அமைதி காத்தோம்!" என்றாராம்.
இந்தப் பத்தாண்டுகளில், அன்று என்னை "சீர்குலைவுவாதி" என முத்திரை குத்தியவர்களில், பலர் வெளியேறி புதிய "சீர்குலைவுவாதிகளாக" மாறும் காட்சிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். சிலர் அமைப்பிற்கு உள்ளேயிருந்து "சீர்குலைவில்" ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்படுவதையும் கேள்விப்படுகிறேன்.
வேடிக்கை என்னவென்றால், இதுவரை இப்படி ஒரு பகிரங்க அறிக்கையைக் கூட நான் வெளியிடவில்லை. அது போகட்டும்.
"அமைப்பு என்பது சிலரின் உடைமையல்ல. தலைமையால் தனது அதிகாரத்தின் துணை கொண்டு, தவறுகளை மறைத்துக் கொள்ள முடியாத ஒரு அமைப்புமுறை உருவாக்கப்பட வேண்டும்." எனவும் எழுதியிருக்கிறார்.
கீழிருந்து மேல் மட்டம் வரை தலைமை தாங்கும் தோழர்களின் தவறுகளை அணிகளிடமிருந்து மறைத்து வைப்பதையே "அமைப்பு முறை", லெனினும், ஸ்டாலினும் வகுத்த போல்சுவிக் கட்சிக் கோட்பாடு என விளக்கம் சொன்னவர்கள், தீடீரென புது விளக்கமும், கோரிக்கையும் எழுப்புவது ஆச்சர்யம் தரவில்லை, கசப்பான நகைச்சுவையாக இருக்கிறது.
"நினைவில் நிழலாடும் தோழர்கள், நிஜத்திலும் நிழல் போலவே ஒதுங்குவதைக் காணும்போது மட்டும், சற்றே கண்கள் கலங்குகின்றன."
மறுபடியும் வேடிக்கைதான். அமைப்பிலிருந்து விலகும் தோழர்களிடம் தீண்டாமையை கடைபிடிப்பதில் மகஇக-வின் புகழ் ஊரறிந்தது. கடந்த காலங்களில் நீங்கள் "செண்டிமெண்ட்" என எள்ளி நகையாடியதைப் போல, நானும் செய்ய விரும்பவில்லை. புரிந்து கொள்ள முடிகிறது. என்னையும், பலரையும் போல கடந்து வாருங்கள்.
மகஇக-வை குறித்து மாத்திரம் பேசுவதில் எனக்கு ஆர்வமில்லை. அதனை ஒரு புரட்சிகர அமைப்பாக கருதுவதிலிருந்து விலகி ஒரு தசாப்தம் முடிந்து விட்டது.
ஒட்டுமொத்தமாக நமது நாட்டிலும், பிற நாடுகளிலும், இடதுசாரி இயக்கங்களில் மிக நீண்ட காலமாக ஜனநாயக மத்தியத்துவம் எனும் கோட்பாடு எவ்வாறு கேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என இளைஞர்கள் வாசித்தறிய வேண்டும் என்பதையே வலியுறுத்த விரும்புகிறேன்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், ஜனநாயக மத்தியத்துவம், தாட் மூன்றுலகக் கோட்பாடு முதலான காலத்தால் தோற்றவை என உறுதியாக நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகளை தூக்கியெறிந்து விட்டு, புதிய நிலைமைகளுக்கேற்ப தன்னை வடிவமைக்கா விட்டால், இன்றைய தேக்க நிலையிலிருந்து மார்க்சியம் என்றும் விடுபட இயலாது.
====================================
எழுதியவர் FB post by Saravana Raja .
=====================================================