வியாழன், 20 பிப்ரவரி, 2020

சுனில் மிட்டலை செருப்பால் அடிக்கப் பாய்ந்த ஆ ராசா!
தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!
சஞ்சார் பவனில் நடந்தது என்ன?
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
சுனில் மிட்டல் யார் தெரியுமா? அவர்தான் ஏர்டெல்
நிறுவனத்தின் அதிபர். இன்றளவும் டெலிகாம்
துறையில் கொடி கட்டிப் பறப்பவர்.

DoTயின் கிடுக்கிப்பிடி, DoTக்கு ஆதரவான உச்சநீதிமன்றத்
தீர்ப்பு ஆகியவற்றால் மிகவும் தளர்ந்து போயிருக்கிறார்
சுனில் மிட்டல். 2005-15 காலத்தில் தொலைதொடர்பின்
சக்கரவர்த்தியாகக் கோலோச்சியவர்தான் மிட்டல்.

அப்போது டாட்டாவுக்கு ஆதரவாக அன்றைய
தொலைதொடர்பு அமைச்சர் ஆ ராசா சில
நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, ஆ ராசாவை
நேருக்கு நேர் சந்தித்து எச்சரித்தவர்தான் மிட்டல்.
மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல உன்னை நசுக்கி
விடுவேன் என்று ஆ ராசாவை மிரட்டியவர்தான் மிட்டல்.

தற்போது ஏர்டெல் நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய
கட்டணம் ரூ 35,586 கோடி (towards AGR dues). எல்லாக்
கதவுகளும் அடைக்கப்பட்டு விட்ட நிலையில், இந்த
ரூ 35,586 கோடியை கட்டித்தான் ஆக வேண்டும்
என்பதை உணர்ந்த மிட்டல் திங்களன்று (பெப்ரவரி 17, 2020)
சஞ்சார் பவன் சென்றார்.

கைத்தாங்கலாகக் கூட்டி வந்தார்கள் மிட்டலை.
அந்த நேரம் சஞ்சார் பவனில் அவ்வளவாகக் கூட்டம்
இல்லை. சுனில் மிட்டல் அமர வைக்கப்பட்ட சோபாவுக்குப்
பின்புறம் உள்ள ஒரு சோபாவில் உட்கார்ந்திருந்த ஆ ராசா
எகனாமிக் டைம்சை விரித்து தன் முகத்தை மறைத்துக்
கொண்டிருந்தார்.

இளைப்பாறி முடித்ததும், கேஷ் கவுன்டருக்குச் சென்று
ரூ 10,000 கோடியை (ரூபாய் பத்தாயிரம் கோடி மட்டும்)
செலுத்திய மிட்டல் அதற்கான ரசீதையும் பெற்றுக்
கொண்டு திரும்பினார். மிட்டலுக்கு ரசீது கிடைத்த
உடனேயே, ஆ ராசா எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையை
வீசி எறிந்து விட்டு தலையைக் குனிந்தார். அடுத்த
5 நொடிகளில் தலையை நிமிர்த்திய ஆ ராசாவின்
கைகளில் ஒரு செருப்பு இருந்தது. கண்ணில் பழிவாங்கும்
வெறி இருந்தது.

அடுத்த 5 நொடிகளில் மிட்டல் இன்னும் முன்னே வந்து
விட்டார்.ஆ ராசா பொசிஷன் எடுத்து விட்டார்.
கவுன்ட் டௌன் ஆரம்பமாகி விட்டது. t5, t4, t3, t2, t1, t0
என்ற வரிசையில் t0ல் சம்பவம் நடந்து விடும்.

நேரம் t4ல், அங்கிருந்த ஒரு CBI அதிகாரி, மிட்டல்
கைத்தாங்கலாக வருவதையும், அந்தப் பாதையில்
ஆ ராசா செருப்புடன் நிற்பதையும் காண்கிறார்.
t3ல் நடக்க இருப்பது என்ன என்பதை உணர்கிறார்.
t2ல் அதைத் தடுக்க நினைத்து, t1ல் தடுத்தும்
விடுகிறார். ஆக சஞ்சார் பவனில் எந்த வில்லங்கமும்
நிகழாமல் சுபம் என்று முடிவடைகிறது.
**************************************************************
ஆ ராசாவுக்கு முன்பு தொலைதொடர்பு அமைச்சராக
இருந்தவர் தயாநிதி மாறன். அவர் சுனில் மிட்டலுக்கு
பல சலுகைகள் வழங்கி அவரின் நன்மதிப்பைப்
பெற்றவர். மேலும் டாட்டா குழுமத்துக்கு மாறன்
எதிரானவர். அவரின் சொத்துக்களை வாங்கப்
போவதாகச் சொல்லிக் கொண்டு, டாட்டாவை
மாறன் மிரட்டிய செய்தி அன்று எல்லாப்
பத்திரிகைகளிலும் வந்தது.

மாறனுக்குப் பின் அமைச்சராக வந்த ஆ ராசா
டாட்டா குழுமத்துக்குச் சேவை செய்யும்
நோக்குடனே அமைச்சராக்கப் பட்டவர்.
எனவே டாட்டாவுக்கு அநேக சலுகைகள் செய்தவர்.
இதனால் மிட்டலின் பகையைச் சம்பாதித்தவர்.

2ஜி ஊழலில் தயாநிதி மாறன் கேட்டுக் கொண்டபடி,
ஆ ராசாவை அசிங்கப் படுத்தியதில் சுனில்
மிட்டலின் பங்கு அதிகம்.
      
-----------------------------------------------------------------
               


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக