ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

Aryan Dravidian issue
----------------------------


திராவிடவாதிகளின் மிகப்பெரிய உருட்டுகளில் ஒன்று...
"ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்க்க வந்த நாடோடிகள்" என்பது தான்... ஆரிய வருகை என்பது மிகப்பெரிய பொய் என்று கூற பல காரணங்கள் உண்டு...
முதலில் இந்த கைபர் போலன் கணவாய் என்பது தற்போது பாகிஸ்தானின் வட எல்லையில் உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவை இமயமலைக்கு இடையில் உள்ளது என்றும் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தாலும்... இந்தியாவிற்குள் வர சிந்து எனும் பெரிய நதியையும் அதன் கிளை நதிகளையும் கடந்து வர வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்...
வரலாறு ரீதியாக சிந்து நதியை முதலில் கடந்து வந்ததாக சொல்லப்படுபவர் அலெக்ஸாண்டர். அதுவும் கிமு.326ல்... பெரும் படையோடு வந்த அலெக்ஸாண்டர் கைபர் கணவாய் வழியாக வந்த போதும்... அடுத்து பெருந்தடையாக இருந்தது சிந்து நதி தான்... சுழல்களை உண்டாக்கும் வேகமான நீரோட்டமுள்ள சிந்து நதியை கடப்பது... அத்தனை பெரிய படையோடு வந்த அலெக்ஸாண்டருக்கே பெரும் சவாலாகிப் போனது. படகுகளை பாகமாக பிரித்து சுமந்து வந்து... கரையில் வைத்து கட்டி... கடந்த போதும்... சுழலில் சிக்கி பலர் மடிந்து போயினர் என்கிறது வரலாறு. சிந்து நதியை கடக்க முடியாமல் தான் பாரசீகர்கள் இந்தியாவில் இருந்தவர்களை இந்துக்கள் என்று அழைக்கக் காரணமானது...
அப்படிப்பட்ட சிந்து நதியை ஆடுமாடுகளோடு நாடோடியாக திரிபவர்கள் கடந்து வந்ததாக கூறுவதே பெரிய வரலாற்றுப் பிழை...
அடுத்ததாக கிபி.1200களில் செங்கிஸ்கான் இந்தியாவிற்குள் நுழைய தயங்கி... பாரசீகத்திற்கு படையை திருப்பிப்போகக் காரணமும் சிந்துநதி தான்..
பிறகு தைமூர் கிபி.1300களில் தனது முன்னோரான செங்கிஸ்கான் போலல்லாமல் சிந்து நதியை கடந்தே தீரவேண்டும் என்று முடிவு செய்து... பல படகுகளை வரிசையாக இணைத்துக் கட்டி... தற்காலிக பாலம் கட்டி... மிகுந்த சிரமத்தோடு கடந்ததாக கூறப்படுகிறது..
பெரும் படைகளை கொண்டவர்களே கடக்கத் திணறிய ஆபத்தான ஆற்றில்... ஆரியர்கள் ஆடுமாடுகளை இறக்கி மேய்க்க வந்தார்களாம்...
அதையும் மூளையில்லாத கூட்டங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறது...
ஆரியர் வருகை என்பது திராவிட கிருத்தவ முகலாயக் கட்டுக்கதை... கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்தவர்கள் இஸ்லாமியர்களும் கிருத்தவர்களும் தான்..

1 கருத்து:

  1. ஆரியர்கள் ஆடு/மாடு மேய்த்தவர்கள் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்டுள்ள உரை இது. ஆனால், ஆரியர்கள் குதிரைகளைப் பயன்படுத்தினார்கள், ஆடு/மாடுகளை அல்ல?

    பதிலளிநீக்கு