செவ்வாய், 31 அக்டோபர், 2017

done (18)
ஸ்வர்ணமுகி என்ற நடிகையை தமிழக அரசின்
ஆஸ்தான நர்த்தகியாக (அரசவை நடனப்பெண்)
எம்ஜியார் அறிவித்தது நினைவு இருக்கலாம்.
கவியரசர் கண்ணதாசன் தமிழக அரசவைக்
கவிஞராக இருந்தார்.

இங்கிலாந்திலும் அரசவைக் கவிஞர்கள் உண்டு.
வேர்ட்ஸ்வொர்த். டென்னிசன் ஆகியோர் பிரிட்டிஷ்
அரசவைக் கவிஞர்களாக இருந்தனர். கவிஞர்,
இசைஞர். நர்த்தகி, விதூஷகர் போலவே ஆஸ்தான
மல்லர்களும் உண்டு. (மல்லர் = மற்போர் வீரர்)

சங்கரரின் காலத்தில், பொருள்முதல்வாதத்தின்
ஆஸ்தான மல்லராக சாங்கியம் இருந்தது. இந்தியத்
தத்துவ  ஞானத்தில் முதலில் தோன்றியது சாங்கியமே.
கபிலர் சாங்கியத்தைத் தோற்றுவித்தார் என்று
கூறப்படுகிறது. பௌத்தத்திற்கும் முந்தியது
சாங்கியம் ஆகும். அது மட்டுமல்ல, கருத்து
முதல்வாதத்திற்கும் முந்தியது சாங்கியம்.

வேதங்களுக்கு முந்தியது சாங்கியம் என்பதும்
தன் தத்துவ உள்ளடக்கத்துக்கு  வேதங்களிடம்
இருந்து எக்கடனும் பெறாதது சாங்கியம் என்பதும்
குறிப்பிடத் தக்கது. தீவிரமான கடவுள் மறுப்புத்
தத்துவம் சாங்கியம் என்பதையும் நாம் கணக்கில்
கொள்ள வேண்டும்.

அத்வைதம் ஓர் ஒருமைத் தத்துவம் (monism). இதற்கு
மாறாக, சாங்கியம் இருமைத் தத்துவம் (dualism) ஆகும்.
சாங்கியம் கூறுகிறபடி, இந்தப் பிரபஞ்சம் இரண்டு யதார்த்தங்களைக் கொண்டது (two realities). 1. புருஷன்,
2. பிரகிருதி. புருஷன் என்றால் கணவன் என்று
பொருள் கொண்டு விடக்கூடாது. இங்கு புருஷன்
என்பது உணர்வு அல்லது சிந்தனை (consciousness)
என்றும், பிரகிருதி என்பது பருப்பொருள் (matter)
என்றும் பொருள்படும்.

அதாவது எங்கல்ஸ் கூறுகிற இருப்பும் உணர்வும்
(being and consciousness) என்பதே இது. மார்க்சியம் இன்று
கூறுகிற தத்துவத்தின் அன்றைய வடிவம் இது.
மேலும் ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்ற
முக்குணங்களையும்  கற்பித்தது சாங்கியம்.
இது ஆதிசங்கரரின் நிர்குண பிரம்மம் என்பதற்கு
எதிரானது.

ஆக, தத்துவச் செறிவு மிக்க, தொன்மையான,
பாரம்பரியம் உடைய சாங்கியம் அத்வைதத்திற்கு
பெரும் சவாலாக விளங்கியது.பல்வேறு
பொருள்முதல்வாதப் பிரிவுகளின் தலைவனாகவும்
சாங்கியம் திகழ்ந்தது. எனவே சாங்கியத்தைக்
கண்டு அஞ்சியது அத்வைதம். அதைக் களத்தில்
சந்தித்து  முறியடிக்காமல் அத்வைதம்
வாழ முடியாது என்ற நிலை அன்று இருந்தது.

அத்வைதத்தின் மூல நூல் பிரம்ம சூத்திரம்
என்பதை ஏற்கனவே பார்த்தோம். பிரம்ம
சூத்திரத்தில், சாங்கியத்துக்கு பிரதான
முக்கியத்துவம்  அளித்து, அதை எதிர்த்து
அறுபது சூத்திங்கள் எழுதப்பட்டு உள்ளன.
ஆனால் மீதியுள்ள பிற தத்துவப் பிரிவுகள்
அனைத்தையும் எதிர்த்து எழுதப்பட்டது
கொஞ்சமே.

தத்துவ விவாதத்தில் சாங்கியத்தை எதிர்த்து
முறியடித்து விட்டதாக அத்வைதம் பெருமிதம்
கொண்டது. பொருள்முதல்வாதத்தின் ஆஸ்தான
மல்லரான சாங்கியத்தியே தாங்கள் தோற்கடித்து
விட்டதால், ஏனைய எல்லா மல்லர்களையும்
வீழ்த்தி விட்டதாகவே அர்த்தம் என்றார் ஆதிசங்கரர்.

சாங்கியத்திற்கும் அத்வைதத்திற்கும் நடந்த
இந்த முக்கியமான தத்துவப்போர் குறித்து எந்த
நூலும் தமிழில் இல்லை; எழுதப்படவும் இல்லை.
சாங்கியம் மட்டுமல்ல, பூர்வ மீமாம்சை உள்ளிட்ட
பிற தத்துவப் பிரிவுகளுடன் அத்வைதம் நடத்திய
ஆழமான எந்த விவாதம் பற்றியும் தமிழில் ஒரு
நூலும் இல்லை. எவராலும் எழுதப்படவில்லை.
ஆனால் சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய
மொழிகளில் இதற்கான நூல்கள் எழுதப் பட்டுள்ளன.

மார்க்சியம் சில தத்துவார்த்த வகைமைகளை
(philosophical categories) கொண்டிருக்கிறது. காரண
காரியப் பொருத்தம் (cause and effect) என்பது அத்தகைய
ஒரு வகைமை. ஆதிசங்கரர் தம் காலத்தில்
காரண காரிய பொருத்தத்தை எதிர்த்தார்.
ஆக, பொருள்முதல்வாதத்தின் எல்லா
அம்சங்களையும்  எதிர்த்தவர் ஆதிசங்கரர்.
அதன் மீது தீராப் பகைமை கொண்டிருந்தவர்
ஆதிசங்கரர். கருத்துமுதல்வாதத்தின் வேறு
எந்தப் பிரிவையும் விட, பொருள்முதல்வாதத்துடன்
ஒரு சிறிதும் இணக்கமின்றி, அதன் ஜென்மப்
பகைவனாக, பரம வைரியாக இருந்தவர்
ஆதிசங்கரர்.

பொருள்முதல்வாதத்தின் வரலாற்றிலேயே,
அதன் மீது, அத்வைதம் போல் வேறு எந்தத்
தத்துவமும் இவ்வளவு பகைமை கொண்டு
இருந்ததில்லை என்பது வரலாறு.
------------------------------------------------------------------------------

done (17) ராமசாமி இஸ்மாயில் ஆக மாட்டார்!
அத்வைதம் மார்க்சியம் ஆகாது!
--------------------------------------------------
3) ராமசாமி என்பவர் ராமசாமிதான். அவரை
இஸ்மாயில் என்று கூறுவது ஆள்மாறாட்டம்
(impersonation) ஆகும். இதைப்போல, அத்வைதத்தை
பொருள்முதல்வாதம் என்று கூறுவதும்
ஆள்மாறாட்டமே.

4) ஏனெனில் அத்வைதம் ஒரு  பொருள்மறுப்புத்
தத்துவம் ஆகும் (immaterialism)  பொருளை மறுக்கும்
தத்துவத்தை எடுத்துக் கொண்டு, அது பொருளை
முதன்மைப் படுத்தும் தத்துவமான  பொருள்முதல்வாதம்
என்று கூறுவது ஆள்மாறாட்டம் போன்றதுதான்.

5) ஒன்றை வேறொன்றாகக் காட்டுவது இமாலயத்
தவறு  ஆகும். ஒன்றின் அடிப்படையையே தகர்க்கும்
பாரிய தவறு ஆகும்.ஒன்றின் தனித்தன்மையையே
அழிக்கும் அடாத செயலாகும்.

6) எனவேதான் மானுட சமூகம் மொத்தத்திலும்
ஒன்றை மற்றொன்றாகக் காட்டுவது தடை செய்யப்
பட்டுள்ளது. சட்டங்கள் அதைத் தடுக்கின்றன.
ஆள் மாறாட்டம், கள்ளக் கையெழுத்து போன்றவை
எல்லாம் (impersonation, forgery etc) குற்றங்கள் என்று
சட்டம் தடுக்கிறது. காரணம் இவை ஒன்றை
மற்றொன்றாகக் காட்டி விஷயங்களின் தனித்
தன்மையை அழிப்பவை. 

7) இன்னும் ஒரு எளிய உதாரணம் பார்ப்போம்.
சீட்டுக் கட்டில் உள்ள இஸ்பேட் ராஜாவை
இஸ்பேட் ராஜா என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரை டயமண்ட் ராஜா என்று சொல்வது
ஆள்மாறாட்டம் ஆகும்.

8) உவமை என்பது உணர்த்த வல்லது; உணர
எளியது. புரிந்து கொள்ளக் கடினமான கருத்தையும்
எளிதாகப் புரிய வைக்க உவமைகள் கையாளப்
படுகின்றன. இது தமிழ் மரபு. போல, போன்ற
ஆகியவை உவம உறுப்புகள். மேற்கூறிய
உவமைகள் மூலம் அத்வைதத்தை
பொருள்முதல்வாதம் என்று கூறுவது
எப்பேர்ப்பட்ட  பித்தலாட்டம் என்று உணரலாம்.

(9) அயன் ராண்டின் தத்துவத்தில் A is A என்ற
கோட்பாடு உண்டு. A என்பது A தான்,
B அல்ல என்பதே இது.  அயன் ராண்டின்
சொற்களில்: "A is  A. facts are facts and things are what
they are". ஒன்றை மற்றொன்றாகக் சுட்டுவதை
இந்த மொத்த உலகிலும் எவரும் ஏற்றுக்
கொள்வதில்லை.

10)உணவு என்பது வேறு; மலம் என்பது வேறு.
பொருள்முதல்வாதம் என்பது உணவு. அத்வைதம்
என்பது மலம். மலத்தை உணவாகக் காட்டலாமா?
அத்வைதத்தைப் பொருள்முதல்வாதமாகக் காட்டி
மக்களை ஏமாற்றலாமா?

11) தத்துவத்தில் இந்த ஆள்மாறாட்டத்தை
அனுமதிக்க முடியாது.ஒவ்வொரு தத்துவமும்
தனித்தன்மை உடையது. அத்வைதத்தை
பொருள்முதல்வாதமாகக் காட்டுவது
பிறழ்புரிதலை ஏற்படுத்தும். இது தத்துவார்த்த
மோசடி ஆகும்.

12) பிறழ் புரிதலின் அடிப்படையில் எழுந்துள்ள
எதிர்வினைகளில் சொல்லப்பட்ட ஒவ்வொரு
அம்சத்துக்கும் பதில் கூறுவது (point to point rebuttal)
சாத்தியமில்லை.அது தேவையற்றதும் கூட.

(14) எனினும் இதில் வருந்துவதற்கு ஒன்றுமில்லை.
தமிழ்ச் சமூகத்தில் தத்துவக் கல்வி அதன் குழந்தைப் பருவத்தில்தான் இன்னும் இருக்கிறது என்ற
உண்மையையே இது உணர்த்துகிறது.
****************************************************


done (16) ஆதிசங்கரர் கூறும் பிரம்மம் என்பது
பருப்பொருளா அல்லது கருத்தா?
---------------------------------------------------------------------------
1) "காட்டில் ஒரு மரம் முறிந்து விழும்போது, யாரும்
பார்க்கவில்லை என்றால், முறிந்து விழும் ஓசை
எழுமா?" என்று கேட்டார் பாதிரியார் பெர்க்லி.
(If a tree falls in a forest and no is around to hear it, does it make
a sound?...Bishop George Berkely 1685-1753).

(2) இதே கேள்வியை ஆதிசங்கரரும் கேட்டார் வேறு
வார்த்தைகளில். "யாரும் பார்க்காமல் இருக்கும்போது
ஆகாசம் நீல நிறமாக இருக்குமா?" என்றார் அவர்.

(3) இருவருக்கும் எவ்வளவு அற்புதமான ஒற்றுமை
பாருங்கள்! கருத்துமுதல்வாதத்தின் உச்சம் தொட்ட
கேள்விகள் இவை. தத்துவ அரங்கில் இவ்விரண்டு
கேள்விகளும் மிகவும் பிரசித்தி பெற்றவை; பரவலாக
அறியப்பட்டவை. கருத்துமுதல்வாதிகளால்
ஆராதிக்கப்படும் மேற்கோள்கள் இவை.

(4) புறவுலகம் இயங்குவது கருத்தின் (சிந்தனையின்)
விதிகளாலேயே என்பதை உணர்த்துவதற்கே
இக்கேள்விகளை ஆதிசங்கரரும் பெர்க்லியும் கேட்டனர்.

(5) புறவுலகம் இயங்குவது ஏதன் விதிகளால்?
சிந்தனையின் விதிகளால் புறவுலகம்
இயங்குகிறதா? அல்லது பருப்பொருளின்
விதிகளால் புறவுலகம் இயங்குகிறதா?

(6) மரம் என்பது ஒரு பருப்பொருள் (matter). அது
நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டு சுயேச்சையாக
இருப்பது. அதாவது, அங்கு மரம் இல்லை என்று
நாம் நினைத்தாலும் மரம் இருக்கத்தான் செய்யும்.
இல்லையென்று நாம் நினைப்பதால் மரம் இல்லாமல்
போய்விடுவதில்லை. ஏனெனில் மரம் இருப்பது
நமது சிந்தனையைப் பொறுத்தது அல்ல.

(7) மரம் அதன் உள்ளியக்கத்தால் (internal motion)
முறிந்து விழுகிறது. முறிந்து விழும்போது அதிர்வுகள்
ஏற்படுகின்றன. முறிவு  என்பதே அதிர்வுகளின்
தொகுப்புதான். இந்த அதிர்வுகள் காற்றில்
பரவுகின்றன. அதனால் காற்றில் இறுக்கமும் தளர்வும்
ஏற்பட்டு காற்றின் அழுத்தம் வேறுபடுகிறது. இந்த
அழுத்த வேறுபாடே ஓசை ஆகும்.
(The vibrations cause a variation of pressure in the air making compressions
and rarefactions and thus sound is produced) (compression = இறுக்கம்,
rarefaction = தளர்வு, vibration = அதிர்வு).

(8) ஆக, மரம் எதன் விதிகளுக்கு உட்பட்டு
இயங்குகிறது? பொருளின் விதிகளுக்கு உட்பட்டு
இயங்குகிறது. சிந்தனையின் விதிகளுக்கு
உட்பட்டு மரம் இயங்குவதில்லை.

(9) பொருளின் விதிகளே பொருளின் இயக்கத்தைத்
தீர்மானிக்கின்றன. இதுதான் உண்மை. மாறாக,
சிந்தனையின் விதிகள் பொருளின் இயக்கத்தைத்
தீர்மானிப்பதாக வைத்துக் கொண்டால், என்ன
நடக்க வேண்டும்?

(10) அங்கு மரம் இல்லை என்று நீங்கள் மனதில்
நினைத்தவுடனே, அங்கு மரம் இல்லாமல் போக
வேண்டும். மரம் தீப்பிடித்து எரிகிறது என்று
நீங்கள் நினைத்தவுடன் மரம் தீப்பிடித்து
எரிய வேண்டும். இதெல்லாம் நடக்குமா?
ஒருநாளும் நடக்காது.

11) எனவே, காட்டில் மரம் முறிந்து விழும்போது
யாரும் பார்க்காவிட்டாலும் அங்கு மரம் முறியும்
ஓசை எழும். இது அன்றாட  வாழ்வில் நாம் அனைவரும்
 ஒவ்வொரு கணமும் உணர்கிற விஷயம். இதை
ஏதோ மகத்தான தத்துவச் சிந்தனையாக, பெர்க்லி
பாதிரியார்   கேள்வி எழுப்புகிறார் என்றால், அது
எவ்வளவு பேதைமை!

12)  காட்டில், ஆளரவமே இல்லாத இடத்தில், மிருகங்கள்
வேட்டையாடுவதை  தத்ரூபமாக படம் பிடித்து
சினிமா எடுக்கிறார்களே நேஷனல் ஜியாக்ரபி
சேனலும் டிஸ்கவரி சேனலும். எப்படி? மரத்தின்
உயரமான கிளையில்  காமிராவை வைத்துத்தானே!
யாரும் பார்க்கவில்லை என்பதற்காக, ஓசைகள்
எழாமல் இருக்கின்றனவா?

13) ஆக, பெர்க்லி பாதிரியாரின் தத்துவம் எவ்வளவு
அபத்தம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது
அல்லவா! இது போன்ற ஒரு அபத்தத்தைத்தானே
ஆதிசங்கரரும் சொன்னார்.

(14) யாரும் பார்க்காமல் இருந்தாலும் ஆகாயம்
நீல நிறமாகத்தான் இருக்கும்.
ஏனெனில், ஆகாயம் நீல நிறமாக இருப்பது
ஒளிச்சிதறல் (scattering of light) என்னும் நிகழ்வால்.
நீல நிறம் மிகவும் குறைவான அலைநீளம்
உடையது என்பதால், அது மற்ற நிறங்களை விட
அதிகமாகச் சிதறுகிறது. எனவேதான் ஆகாயம்
நீலமாகத் தெரிகிறது.

(15) ஒளிச்சிதறல் என்பது பொருளின் விதி.
சிந்தனையின் விதி அல்ல. ஆகாயம் நீலமாக
இருப்பதன் காரணம் பொருளின் விதியால்தானே
தவிர, சிந்தனையின் விதியால் அல்ல.

(16) எவர் ஒருவரின் ஆத்மாவோ (சிந்தனையோ)
அல்லது பிரம்மமோ பருப்பொருளை இயக்கவில்லை.
இயற்கை, புறவுலகம், பருப்பொருள், உயிர்கள்
என்று இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே
பொருளின் விதிகளால்தான் இயங்குகிறது. இந்த
இயக்கத்தில் கருத்துக்கோ, சிந்தனைக்கோ,
பிரம்மத்துக்கோ, ஆத்மாவுக்கோ தீர்மானிக்கிற
இடமே இல்லை.

(17) கருத்து இருக்கிறது. அதை எவரும் மறுக்கவில்லை.
ஆனால் கருத்து முதன்மையானது அல்ல என்பதே
பொருள்முதல்வாதம். கருத்தின் விதிகளால் இந்தப்
பிரபஞ்சம் இயங்குவதில்லை என்பதே
பொருள்முதல்வாதம். நன்கு கவனிக்கவும்: கருத்தின்
இருப்பை பொருள்முதல்வாதம் மறுக்கவில்லை.
பொருளைப் பார்த்தபின் நம் மனதில் எழும்
பிரதிபலிப்பே கருத்து என்பதுதான் பொருள்முதல்வாதம்.

(18) ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது பொருளா,
கருத்தா? அது கருத்துதானே தவிர பொருள் அல்ல.
பொருள் என்றால் அதற்கு ஒரு இருப்பு உண்டு.
பிரம்மம் என்பது பொருள்தான் என்றால், அதன்
இருப்பைச் சுட்ட வேண்டும் அல்லவா? ஆதிசங்கரர்
சுட்டிக் காட்டினாரா? இல்லை. ஏன்? அதற்கு
இருப்பு இல்லை. அது கருத்தே தவிர பொருள் அல்ல.

(19) பிரம்மம் என்பது  குணமற்றது (நிர்குண பிரம்மம்);
உருவமற்றது; வரம்பற்றது என்கிறார் ஆதிசங்கரர்.
அது இருப்பும் அற்றது; அதாவது இல்லாத ஒன்று
என்பதையும் நாம் சேர்த்துக் கூற வேண்டும்.
(Brahman is a non entity).

(20) In Advaita Vedanta, Brahman is without 
attributes and strictly impersonal.It can be 
best described as infinite Consciousness and 
infinite Bliss. It is pure knowledge itself.

(21) பிரம்மத்திற்கு ஆதிசங்கரர் கூறும் மேற்கண்ட
வரையறையின்படி, பிரம்மம் என்பது பொருள் அல்ல;
கருத்தே. குணமற்ற, வடிவமற்ற, வரம்பற்ற உணர்வாக
(பிரக்ஞை) உள்ள , வரம்பற்ற பேரின்பமாக உள்ள, சுத்த
அறிவு என்பதுதான் பிரம்மம் என்றால் அது கருத்தே.
அது பொருள் அல்ல. பிரம்மம் என்பது பொருள்
என்பது பித்தலாட்டம்.

(22) இதனால் பிரம்மம் என்பது கருத்தே என்பதும்,
அத்வைதம் கருத்துமுதல்வாதமே என்பதும் மீண்டும்
நிரூபிக்கப் படுகிறது.
***************************************************************** 


.     
  
    

திங்கள், 30 அக்டோபர், 2017

 done டன்தா ங்கள் குறிப்பிட்டுள்ள நூல்கள் பலவும்
பாடப்புத்தக (text books) வகையிலானவை.
மேலும் அவை யாவும் அத்வைத ஆதரவாளர்களின்
நூல்கள். அத்வைதத்தை விதந்தோதும் நூல்கள்.
ஆனால், அத்வைதம் குறித்த விமர்சனபூர்வமான
(critical outlooks) நூல்களாக அவை இல்லை. அத்வைதம்
பிற தத்துவப் பிரிவுகளுடன் உரையாடிய, வாதித்த,
(polemical debates) வாதங்கள் அடங்கிய நூல்களாக
அவை இல்லை. உதாரணமாக, "நியாய தரிசனம்"
என்னும் தத்துவத்துடன் அத்வைதம் நடத்திய
விவாதம் குறித்த, விளக்கக் குறிப்புகளுடன் கூடிய
(with annotations) நூல்கள் யாவும் தமிழில் இல்லை.
**
தாங்கள் குறிப்பிடும் நூல்கள் யாவும், அத்வைதம்
குறித்த  ஒரு மேம்போக்கான புரிதலை மட்டுமே
தரக் கூடியவை. விமர்சன ரீதியாகவும், பிற
பொருள்முதல்வாதத் தத்துவங்களின் நோக்கில்
இருந்து அத்வைதத்தை விமர்சிக்கும் நூல்கள்
எவையும் தமிழில் இல்லை. எனவே ஆய்வு நோக்கில்
அத்வைதத்தை அணுகுவதற்கு தாங்கள் கூறிய
தமிழ் நூல்கள் எவையும் பயன்படாது.

done (15) மார்க்சியத்தின் போதாமையை
அத்வைதம் போக்குமா?
---------------------------------------------------------------------
அத்வைதம் இந்தியாவின் ஒளி பொருந்திய தத்துவம்.
அது மார்க்சியத்துக்கு கொடையளிக்க வல்லது.
எனவே அத்வைதத்தின் சிறந்த அம்சங்களை
மார்க்சியம் சுவீகரித்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு சுவீகரித்துக் கொள்வதன் மூலமே
மார்க்சியத்தின் போதாமை அகலும்.

அத்வைதம் மார்க்சியத்துக்கு வளம் சேர்க்கும்.
மார்க்சியத்தின் தத்துவ வறுமையை அத்வைதம்
போக்கும். மார்க்சியம் ஒன்றும் சர்வரோக
நிவாரணி அல்ல. எனவே எது தன்னிடம் இல்லையோ,
அல்லது எது தன்னிடம் பற்றாக் குறையாக
உள்ளதோ, அதை அத்வைதத்திடம் இருந்து
மார்க்சியம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு பெற்றுக் கொள்ள மறுப்பது நியாயமல்ல.

பொருளுக்கே முதன்மை கொடுப்பதால், மார்க்சியத்தில்
ஆன்மா பற்றிய தெளிவு இல்லை. மனம் பற்றிய
மார்க்சியத்தின் புரிதல் குறைபாடு உடையது.
மனத்தின் ஆற்றல் பற்றி மார்க்சியம் குறைத்து
மதிப்பிடுகிறது. இக்குறைகளாலேயே மார்க்சியம்
தத்துவ வலிமை இழந்து நிற்கிறது; பல்வேறு
குழுக்களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது.
இப்படியாக விமர்சனம் தொடர்கிறது.

மேம்போக்காகவும், நுனிப்புல் தன்மையுடனும்
பொறுப்பற்ற முறையிலும் போகிற போக்கில்
எதையாவது சொல்லி விட்டுப் போவது என்ற
தொனியிலுமே இக்கூற்றுகள் உள்ளன.

பித்துக்குளித் தனத்தின் உச்சத்தைத் தொடும்
இத்தகைய அங்கலாய்ப்புகள் தமிழ்ச் சமூகத்தில்
வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
பரிசீலிப்பதற்கே அருகதையற்ற, கருத்து என்னும்
அந்தஸ்தையே வழங்க முடியாத முழுமுற்றான
அபத்தம்தான் இது. என்றாலும், காய்தல் உவத்தல்
அகற்றி, இதையும் பரிசீலிப்போம்.

மார்க்சியம் சர்வரோக நிவாரணி இல்லைதான்.
மார்க்சியம் மட்டுமல்ல, வேறு எந்தவொரு
தத்துவமும் சர்வரோக நிவாரணி அல்ல.

மார்க்சியத்தின் போதாமையாக இவர்கள் கூறுவன
யாவும் மார்க்சியத்துக்கு மட்டும் உரியன அல்ல.
எல்லா வகையான பொருள்முதல்வாதப்
பிரிவுகளுக்கும் உரியன என்றே பொருள்படும்.
சாங்கியம், நியாயம், பௌத்தம் போன்ற பண்டைய
பொருள்முதல்வாதப் பிரிவுகள் முதல் லுத்விக்
ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் வரையிலான
அனைத்துப் பிரிவுகளுக்கும் இவர்கள் கூறும்
"போதாமை" பொருந்தும். எனவே மொத்தப்
பொருள்முதல்வாதத்தின் மீதான தாக்குதல்
என்றே இது பொருள்படும்.  

இந்தியாவில் மிகவும் பழமையான பொருள்முதல்
வாதம் என்று கபிலரின் சாங்கியத்தைக் கூறலாம்.
அடுத்து வந்த நியாயம் சாங்கியத்தை விட வலுவான
தர்க்க அடிப்படைகளைக் கொண்டிருந்தது.
பௌத்தமும் சமணமும் பொருள்முதல்வாதமே.
உலகத்தைப் படைத்தவர் கடவுள் என்று பௌத்த
சமண சமயங்கள் கூறவில்லை. ஆத்மா என்பதை
அடியோடு மறுத்தவர் புத்தர். அவரின் "நிராத்ம
வாதம்" (theory of no soul) ஆத்மா இல்லை என்று
விளக்குகிறது. அதே நேரத்தில் சமணம் ஆத்மாவை
ஏற்றுக் கொள்கிறது.

இவ்வாறு மார்க்சுக்கு முந்திய பொருள்முதல்வாதப்
பிரிவுகளில் முரண்பாடுகள் இருந்தன. எனவே
மார்க்சியத்தின் பொருள்முதல்வாதத்தை
முறணற்றதாக (consistent) உருவாக்கினர்
மார்க்சும் எங்கல்சும். தம் காலத்தின் அறிவியல்
வளர்ச்சியை முழுவதுமாக உட்கிரகித்துக்
கொண்டதே மார்க்சியப் பொருள்முதல்வாதம் ஆகும்.

எனவே மார்க்சியம் தன் மீதான தாக்குதலை
நவீன அறிவியலின் துணைகொண்டு எதிர்த்து
முறியடிக்க வல்லது. ஆனால் அத்வைதம்
அப்படியல்ல. எட்டாம் நூற்றாண்டுக்குப்
பின்னரான அறிவியலின் வளர்ச்சியானது
அத்வைதத்தில் பிரதிபலிக்கவில்லை. எனவே
அத்வைதம் ஒரு தேங்கிய குட்டை. அசுரத் தனமான
அறிவியல் வளர்ச்சியில் இருந்து தன்னை
முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு, அதன்
விளைவாக வழக்கு வீழ்ந்த தத்துவம் அத்வைதம்.
இன்னும் சொல்லப் போனால், அத்வைதம் ஒரு
முன்னாள் தத்துவம். அது நவீன உலகின்
தத்துவம் அல்ல. இதை அனைத்தும் அடுத்தடுத்த
கட்டுரைகளில் நிரூபிக்கப் படும்.

பொருள், கருத்து,ஆத்மா, மனம் ஆகியவை பற்றி
அத்வைதம் கூறுவன யாவும் மெய்யல்ல என்பதை
அடுத்துக் காணலாம். அத்வைதம் கூறும் பிரம்மம்
என்பது எப்பேர்ப்பட்ட பித்தலாட்டம் என்பதையும்
அடுத்துக் காண்போம்.
------------------------------------------------------------------------------------------

  




  
done (14) கிடக்கிற வேலை கிடக்கட்டும்,
கிழவியைத் தூக்கி மணையில் வை!
மார்க்ஸ் மண்டன மிசுரர் அல்ல!
--------------------------------------------------------------------------
1) தலைவாசலில் அத்வைதம் நின்று கொண்டு
இருக்கிறது; அது மார்க்சியத்துக்கு பேராபத்து
என்று சிலர் கூச்சலிட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

2) கிழடு தட்டிப்போய், எழுந்து நடக்கக்கூடத்
தெம்பில்லாமல் போய், படுத்த படுக்கையாக
மியூசியத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்
பட்டிருக்கும் அத்வைதம் மார்க்சியத்தை சவாலுக்கு
அழைக்கிறது என்பதெல்லாம் புலன்களின்
தீட்சண்யத்தை இழந்து நிற்கும் சிலரின் மனப்
பிராந்தியே தவிர உண்மை அல்ல.

3) மார்க்சியம் நடைமுறையில் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் ஒரு தத்துவம் (It is a philosophy in practice).
ஆனால் அத்வைதமோ வரலாற்றில் மட்டுமே
வாழுகிற தத்துவம். இரண்டுக்கும் பாரதூரமான
வேறுபாடு உண்டு. அதாவது உயிருள்ள மனிதனுக்கும்
செத்த சவத்துக்கும் உள்ள வேறுபாடு.

4) காரல் மார்க்ஸ் உபரி மதிப்புக் கோட்பாட்டை
(Theory of surplus value) உருவாக்கினார். இதற்கு எதிராக
ஆதிசங்கரர் என்ன கோட்பாட்டை உருவாக்கினார்?
ஆதிசங்கரரின் எந்தெந்தக் கோட்பாடுகள் மார்க்சின்
மூலதனம் நூலைச் சவாலுக்கு அழைக்கின்றன?

5) சிறிதும் நாணம் இல்லாமலும், எந்த விதமான
குற்ற உணர்வும் இல்லாமலும் மார்க்சியம்
அத்வைதத்தால் ஆபத்துக்கு உள்ளாகி நிற்கிறது
என்று கூறுவதா?

6) சமகால உலகைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும்
இல்லாமல், மார்க்சியம் தீர்வு கண்டே ஆக வேண்டிய
சமகாலப் பிரச்சினைகள் பற்றிய எந்தப் புரிதலும்
இல்லாமல், அத்வைதப் பூச்சாண்டி காட்டிக் கொண்டு
திரிவது வெட்கங்கெட்ட செய்கை அல்லவா?

7) கிடக்கிற வேலை கிடக்கட்டும், கிழவியைத்
தூக்கி மணையில் வை  என்பது போல,
அத்வைதம்தான் உடனடி கவனத்திற்கான ஒரே
பிரச்சினை என்பதா?

8) மார்க்சியம் என்பது ஒரு ஏகே 47 துப்பாக்கி.
அத்வைதம் என்பது எட்டாம் நூற்றாண்டின்
துருப்பிடித்த வாள். இரண்டும் சமமாகி விடுமா?
ஆதிசங்கரரால் வீழ்த்தப் படுவதற்கு மார்க்ஸ்
என்ன மண்டன மிசுரரா?

9) பொருள்முதல்வாதம் 2500 ஆண்டுத் தொன்மை
மிக்கது. மார்க்ஸ் பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு
முன்பே உலகெங்கும் பொருள்முதல்வாதம்
தத்துவங்களின் அரசனாக இருந்தது. காலந்தோறும்
அது வளர்ந்து கொண்டே இருந்தது. மார்க்ஸ்
முன்வைத்த பொருள்முதல்வாதம் அக்கால
அறிவியலின் சாரத்தை உட்கிரகித்துக் கொண்ட
பொருள்முதல்வாதம்.நியூட்டனின் இயற்பியலை
முற்றிலுமாக உள்வாங்கிக் கொண்ட, நன்கு
வளர்ச்சியடைந்த பொருள்முதல்வாதம். இந்த
உண்மையை ஏற்க மறுப்போர் ஏங்கல்ஸின்
டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலைப் படிக்கவும்.

10) ஆனால் அத்வைதமோ எட்டாம் நூற்றாண்டின்
கால எல்லைக்குள் முடங்கிப்போய், காலந்தோறும்
வளர்ச்சி அடையாமல், நவீன அறிவியலை
உள்வாங்காமல், தேங்கிய குட்டையாக
ஆகிப்போன தத்துவம். காய்ந்து கருவாடாகிப்
போன ஒரு தத்துவம். எனவே மார்க்சியத்துக்கு
எதிராகக் களம் இறங்குவதற்கு அத்வைதத்திடம்
என்ன இருக்கிறது?

11) அத்வைதத்தின் அச்சு அசலான ஐரோப்பியப்
பதிப்பு பெர்க்லி பாதிரியாரின் "பொருள் மறுப்புத்
தத்துவம் (IMMATERIALISM). இவ்விரண்டும் அகநிலைக்
கருத்துமுதல்வாதமே. இவ்விரண்டையுமே தமது
புறவயவாதம் (OBJECTIVISM) என்ற தத்துவத்தால்
அடித்து நொறுக்கித் தூள் தூள் ஆக்கினார்
இருபதாம் நூற்றாண்டின் பெண் எழுத்தாளர்
அயன் ராண்ட்.                  

12) இந்தியாவின் கோடிக்கணக்கான
தொழிலாளர்கள் நடுவே, உழைக்கும் பெண்கள்
நடுவே,விவசாயிகள் நடுவே அத்வைதத்திற்கு
எவ்விதமான அறிமுகமோ செல்வாக்கோ கிடையாது.

13) அத்வைதம் சிறுபான்மையினரான மேட்டுக்குடிகளின்
தத்துவம் (elite philosophy). அது ஒரு லயன்ஸ் கிளப்
தத்துவம். உயர்குடிப் பெண்களின் லேடீஸ் கிளப்
தத்துவம். பட்டுச் சேலைக்கு மேல் ஒட்டியாணம்
அணிபவர்களின் தத்துவம். அவர்கள் அதை
ஆராதிக்கட்டும். நாம் சென்று தடுத்தாட்கொள்ள
வேண்டியதில்லை.

13) அத்வைதம்தான் பிரதான எதிரி என்று
சொல்பவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன?
பிரதான எதிரிகள் ஆயிரம் பேர் இருக்க,
அவர்களை விட்டு விட்டு அத்வைதத்தை எதிரியாகச்
சுட்டுபவர்கள் பின்நவீனத்துவ தாசர்களே.

14) மார்க்சியத்தின் மொத்த எதிர்ப்பும் பின்நவீனத்தை
நோக்கிக் குவிந்து விடக்கூடாது என்பதற்காக,
எதிர்ப்பை திசை  திருப்பவும், மடைமாற்றவுமே
இவர்கள் அத்வைதமே பிரதான எதிரி என்று
வரையறுக்கிறார்கள். இவர்கள் மாறு வேடத்தில்
மார்க்சிய முகாமில் இருக்கும் பின்நவீனத்துவ
தாசர்கள்.

15) சமகால இந்தியச் சூழலை பருண்மையாக ஆய்வு
செய்து சரியான முடிவுக்கு வரும் மார்க்சியர்கள்
எவரும், மார்க்சியத்தின் பிரதான எதிரியாக
பின்நவீனத்துவம், தொண்டு நிறுவனங்கள் (NGOs)
ஆகியவை இருப்பதை உணர்வார்கள்.

16) அத்வைதம் மார்க்சியத்தின் பொருள்முதல்
வாதத்திற்கு ஒவ்வொரு அம்சத்திலும் எதிரிடையான
தத்துவம்தான். என்றாலும் மார்க்சியத்துக்கு
முந்திய பொருள்முதல்வாதத் தத்துவங்களால் விட்டது.
அது ஏற்கனவே வீழ்த்தப் பட்டு விட்டது. மார்க்சியம்
தோன்றிய பிறகு, இந்தியத் தத்துவ  அரங்கிலும்
மார்க்சியம் அத்வைதத்தை வீழ்த்தி விட்டது.

17) அத்வைதம் எதிரி முகாமில் இருப்பதுதான்.
எதிரி முகாமில் உள்ள எல்லாருமே பிரதான
எதிரி ஆக மாட்டார்கள்.எனவே அத்வைதம்
பிரதான எதிரி அல்ல. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும்
வித்தியாசம் தெரிந்தவர்கள் இதை சரியென்று
ஏற்பார்கள்.
*************************************************************
பின்குறிப்பு:8ஆம் அம்சத்தில் குறிப்பிட்டுள்ள மண்டன
மிசுரர் (Mandana Mishra) பற்றிய குறிப்பு; இவர் ஆதிசங்கரர்
காலத்திய வேதாந்தத் தத்துவ ஞானி.பக்தி
மார்க்கத்தவர். ஆதிசங்கரர் இவருடன் வாதம் செய்து
இவரை வென்றார்.
------------------------------------------------------------------------------------------------
      
done டன்அ த்வைதம் நடைமுறை உலகில் (practical world)
வாழவில்லை. ஆனால்  வரலாற்றில் வாழ்கிறது.
எனவே அதற்கு ஏற்ற விதத்தில் அதை எதிர்கொண்டால்
போதும். அத்வைத விவாதம் ஒரு academic விவாதமே.

ஈ எம் எஸ் அவர்கள் அத்வைத ஆதரவாளரே.

ஈ எம் எஸ்ஸின் அத்வைத மயக்கம், மேற்கு வங்க கம்யூனிஸ்டுகளின் விவேகாநந்தர் மீதான அபிமானம்,
இளைஞர்கள் அத்வைதம் கற்பது ஆகிய அனைத்தும்
இருக்கத்தான் செய்கின்றன. இவை இருக்கத்தான்
செய்யும். ஏனெனில் சமகால உலகம் தகவல் தொடர்புத்
துறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அத்வைதம்
பற்றி அமெரிக்க இளைஞர்  ஒருவர் தமது சென்னை
நண்பரிடம் முகநூலில் வினவலாம்.
**
இதனால் எல்லாம் அத்வைதம் ஒரு potential danger என்று
பொருள் ஆகாது. அத்வைதத்தை உரிய விதத்தில்
சந்திக்கலாம். சந்திப்போம். பொருள்முதல்வாதத்தை
அதிக அளவில் எடுத்துச் சென்றாலே  போதும்,
அத்வைதம் காணாமல் போய்விடும்.
**
 அத்வைதத்தை விட, இன்று பின்நவீனத்துவம்
கணிசமான பேரைப் பற்றிக் கொண்டுள்ளது.
அது அத்வைதத்தை விட பல மடங்கு கூடுதலான
ஆபத்து அல்லவா?
**
பிராட்டஸ்டெண்ட் கிறித்துவப் பின்னணி கொண்ட
சால்வேஷன் ஆர்மி (salvation army) போன்ற ஏகாதிபத்திய
நிறுவனங்கள் உலகெங்கும் செய்து வருவது என்ன?
மார்க்சிய எதிர்ப்புப் பிரச்சாரமும் மதமாற்றமும்தானே!
இதற்கான நிதியைக் கொட்டிக் கொடுப்பது யார்?
ஏகாதிபத்தியம்தானே! கணக்கற்ற எதிரிகள் இருக்கும்போது
**
எனவே பிரதான எதிரி என்ற வகைமையில் அத்வைதம்
வருமா? வராது. அது செத்த பாம்புதான்.

இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபேம் (Oxfam) என்ற  ஏகாதிபத்திய
நிறுவனம் இருக்கிறது. இது ஒரு தர்ம ஸ்தாபனம் என்ற
பெயரில் உலகின் ஏழைகளுக்கு தர்மம் (charity) செய்கிறது.
பணத்தையும் கொடுத்து மார்க்சியத்தையும் எதிர்த்துப்
பிரச்சாரம் செய்யும் ஒரு ஆபத்தான அமைப்பு இது.
 
இந்தியாவிலும் oxfam India  அமைப்பு உள்ளது; செயல்படுகிறது.
இந்தியாவில் ஒரு  நிறுவனமாக இது பதிவு செய்து
கொண்டுள்ளது.


done (13)
அத்வைதம் ஒரு நழுவல்வாதம் (philosophy of escapism)!
அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்தா?
---------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
ஒரு தத்துவத்தைப் பரிசீலிக்கும்போது, அதன்
மீதான ஒரு குறைந்தபட்சப் பரிவு இருந்தால்தான்
அதிலுள்ள நல்ல அம்சங்கள் கண்ணில் படும்
என்றார் ஹெச் ஜி வெல்ஸ். இது அத்வைதத்திற்கு
மட்டுமல்ல எல்லாத் தத்துவங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக, தமிழ் வாசகச் சூழலில்,
நேர் எதிரான இரண்டு விஷயங்களை, தத்துவம்,
கோட்பாடு, அரசியல் இப்படி எதையாயினும்,
பரிசீலிக்கும்போது, பரிசீலனைக்கு உரிய நடுநிலை
என்பது அறவே இல்லை. நடுநிலை என்பது காய்தல்
உவத்தல் அகற்றிய மனநிலை ஆகும். நடுநிலை
என்பதற்கு இதுதான் பொருள்.

இதற்கு மாறாக, கண்மூடித்தனமான வெறுப்பைக்
கொட்டி, குப்பையைக் குவிப்பது ஆய்வும் ஆகாது;
பரிசீலனையும் ஆகாது. dispassionate assessment என்று
ஆங்கிலமரபில் கூறப்படுவதை, "காய்தல் உவத்தல்
அகற்றி ஆய்தல் அறிவுடையார் கண்ணதே"
என்கிறது தமிழ் மரபு. இதுதான் முந்திய வாக்கியத்தில்
கூறிய நடுநிலை ஆகும். எனவே தமிழ் மரபைப்
பின்பற்றி, அத்வைதப் பரிசீலனையைத்
தொடங்குவோம்.

அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்து வருமா?
அத்வைதம் மார்க்சியப் பொருள்முதல்வாதத்துக்கு
சவாலாக விளங்குமா? இதுதான் இந்தக் கட்டுரையின்
பேசுபொருள்.

உண்மையிலேயே மிகவும் பலவீனமான ஒரு
கருப்பொருள் இது. மியூசியத்தில் சிவனே என்று
கிடக்கும் அத்வைதம் மார்க்சியத்துக்கு ஆபத்தை
ஏற்படுத்தி விடும் என்பதே ஒரு கற்பனை. கற்பனை
கூட அல்ல, வெறும் பிரமை.

சுரண்டல் வர்க்கங்கள் மியூசியத்தில் உறங்கிக்
கொண்டிருக்கும் அத்வைதத்தை விழிப்புறுத்தி,
மார்க்சியத்துக்கு எதிராகப் பயன்படுத்தும்
ஆபத்து இருக்கிறது என்பதெல்லாம் சிறு
குழந்தைகளின் கனவில்தான் சாத்தியம்.

அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்து என்று
கருதுபவர்கள் பின்வரும் கேள்விக்கு விடையளிக்க
வேண்டும். சமகால இந்தியாவின் பொருள் உற்பத்திக்கு
அத்வைதம் பயன்படுமா? இந்தக் கேள்விக்கான
விடையே, அத்வைதத்தால் ஆபத்தா என்ற
கேள்விக்கும் விடையாகும்.

சமகாலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும்
அத்வைதம் சமூகத்தின் பொருள் உற்பத்தியை
ஊக்குவித்தது இல்லை. ஏனெனில் அத்வைதம்
ஒரு செயலுறுத்தும் தத்துவம் அல்ல.
It is a passive philosophy. புறவுலகை  ஒட்டுமொத்தமாக
நிராகரிக்கும் அத்வைதம் புறவுலகின் அனைத்துப்
பிரச்சினைகளையும் கூடவே நிராகரிக்கிறது.
கோடிக்கணக்கான மக்களின் லெளகீக
வ்யவஹாரங்களை (உலகியல் விவகாரங்களை)
அத்வைதம் கண்டு கொள்ளவே இல்லை
(did not give cognizance even).பிரச்சினைகளின் இருப்பையே
அத்வைதம் அங்கீகரிக்காதபோது, பிரச்சினைகளுக்கு
அதில் தீர்வு எப்படி இருக்க முடியும்?

இந்த விஷயத்தில் பௌத்தம் அத்வைதத்துடன்
கடுமையாக முரண்படுகிறது. மக்களின்
துன்பத்திற்கு என்ன காரணம் என்று ஆழ்ந்து
சிந்தித்தார் புத்தர். அந்தச் சிந்தனையின் விளைவே
பௌத்தம்.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று
கண்டறிந்தார் புத்தர். இந்த உலகின் பிரச்சினைகளுக்கு
இந்த உலகிலேயே தீர்வு கூறினார் புத்தர்.
மறு உலகில் கிட்டப்போகும் சொர்க்கமே தீர்வு
என்ற மதங்களின் போலித் தீர்வை நிராகரித்தவர்
புத்தர். புத்தரைப் போன்று ஆதிசங்கரர் மக்களின்
துன்பத்திற்குக் காரணம் என்ன என்று
சிந்திக்கவில்லை. மிகவும் வசதியாக புறவுலகையே
நிராகரித்ததன்  மூலம், உலகியல் பிரச்சினைகளுக்கு
தீர்வு காணும் நெருக்கடியில் இருந்து  தப்பித்துக்
கொண்டவர் ஆதிசங்கரர். ஆக, அத்வைதம் ஒரு
நழுவல்வாதத் தத்துவம் (philosophy of escapism).

எனவே இந்திய ஆளும் வர்க்கங்களின் கரங்களில்
அத்வைதம் ஒரு வாளாகச் சுழலும் என்ற
கற்பனையெல்லாம் குட்டி முதலாளித்துவ
விடலைகளின் சுயஇன்பமே தவிர வேறல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கிறிஸ்துவ மதப்
பரப்பலுக்கு எதிராக அத்வைதத்தை விவேகானந்தர்
பயன்படுத்தியபோதும், அதை ஒரு கேடயமாகத்தான்
பயன்படுத்தினாரே தவிர, அதை வாளாகப்
பயன்படுத்தவில்லை; பயன்படுத்தவும் முடியாது.
ஏனெனில் அத்வைதம் தற்காப்புக்குப் பயன்படும்
தன்மை கொண்டதே தவிர, தாக்குதலுக்குப்
பயன்படும் தன்மை கொண்டதல்ல என்று உணர்ந்து
இருந்தார் விவேகானந்தர்.

எனவே அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்து
என்பதெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய
நகைச்சுவை.

அப்படியானால், மார்க்சியத்துக்கு ஆபத்து விளைக்க
வல்ல சக்தி எது? பல சக்திகள் இருக்கின்றன.
அவற்றுள் பிரதானமானது .பின்நவீனத்துவம்.
அத்வைதம் ஆன்மிகம் என்ற ஒரே ஒரு துறையுடன்
நின்று போகிறது. ஆனால் பின்நவீனத்துவம்
மார்க்சியம் தலையிட்ட அத்தனை துறைகளிலும்
தானும் நுழைந்திருக்கிறது. அரசியல், பொருளாதாரம்,
அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம், பண்பாடு
என்று வாழ்வியலின் அனைத்துத் துறைகளிலும்
மார்க்சியத்துடன் மல்லுக்கு நிற்கிறது பின்நவீனத்துவம்.

வியட்நாம் போர் போன்று போர் மூலம் மார்க்சியத்தை
வெற்றி கொள்வது என்ற செயல் தந்திரத்தை தற்போது
மாற்றிக் கொண்டுள்ளது ஏகாதிபத்தியம். மாறாக,
உலகெங்கும் NGO அமைப்புகள் என்னும் தன்னார்வக்
குழுக்களைத் தோற்றுவித்து, அவற்றுக்கு நிதியைக்
கொட்டிக் குவித்து, மூன்றாம் உலக நாடுகளில்
மார்க்சியத்துக்கு எதிராகச் செயல்படுவதே
ஏகாதிபத்தியத்தின் இன்றைய செயல்தந்திரம்.

விடுதலை இறையியல் (Liberation Theology) என்ற புதிய
தத்துவத்தை உருவாக்கி, லத்தீன் அமெரிக்க நாடுகளில்
மார்க்சியத்தை முறியடிக்க இன்றும் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது ஏகாதிபத்தியம்.

ஆக, இவை போன்ற அபாயங்களைத்தான் இன்று
மார்க்சியம் களத்தில் சந்திக்க வேண்டி இருக்கிறதே
தவிர, அத்வைதத்தை அல்ல.

அத்வைதத்தை எதிரியாகச் சுட்டுவதன் மூலம்,
மெய்யான எதிரிகளை கண் பார்வையில் இருந்து
மறைக்க முயற்சி செய்வதும் ஒரு தந்திரமே.

இதுவரை கூறியவற்றால், அத்வைதம்
மார்க்சியத்துக்கு இணக்கமானது என்று எவரும்
புரிந்து கொள்ளக் கூடாது. பொருள்முதல்வாதத்திற்கு
நேர் எதிரானது அத்வைதம். என்றாலும் அத்வைதத்தின்
தத்துவ உள்ளடக்கம் பொருள்முதல்வாதத்தால்
என்றோ முறியடிக்கப் பட்டு விட்டது. எனவே
செத்த பாம்பை ஏன் மீண்டும் அடிக்க வேண்டும்?
******************************************************      
    
      

    
done புறநானூற்றில் கடவுள் மறுப்பு
இலக்கியத்தில் சார்வாகம்!
சங்க இலக்கியங்களுள் ஒன்றான புறநாநூறு தமிழர்களின் பண்பாடு வரலாறு போன்ற குறிப்புக்களை நமக்கு வழங்கி தமிழர்களின் வாழ்வியலை விதந்தோதும் நூல்களில் மிக மேன்மையான நூலாகும்.
இந்நூலில் பண்டைய சார்வாகர்களின் உலகாயதப் பொருள்முதல்வாதம் (உலகாயதம்=கடவுள் மறுப்புக் கொள்கை) ஆங்காங்கே இழையோடிருப்பதை நாம் படிக்க முடியும்!
புறநானூற்றில் இடம் பெற்றுள்ள 355ஆம் பாடல் வரிகள் "கடவுளும் இலவே!" என்று முடிகிறது!
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி,
ஒளிறு ஏந்து மருப்பின், களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
விள‌க்க‌ம்:
பகைவர்களின் முன்னே அஞ்சாது நிற்பர்.
ஒளிரும் தந்தங்களை உடைய யானையை வீழ்த்துவர்
யானையை வீழ்த்தி இறந்த எம் முன்னோரின் நினைவைப் போற்றும் நடு கல்லைப் போற்றுவோமே
அன்றி, நெல் (அரிசி) போன்றவற்றைக் கொட்டி வழிபாடும் கடவுள் எங்களுக்கு இல்லை!
(மாங்குடிக் கிழார்)


சாதாவும் ஸ்பெஷலும்!
-----------------------------------------
விசிஷ்டாத்வைதம் என்றால் விசேஷமான அத்வைதம்
என்று பொருள். அதாவது சங்கரரின் அத்வைதம் சாதா
அத்வைதம் என்றால் ராமானுஜரின் அத்வைதம்
ஸ்பெஷல் அத்வைதம் ஆகும். அதாவது அது
சாதா தோசை. இது ஸ்பெஷல் தோசை.
**
இரண்டுமே கருத்துமுதல்வாதம்தான்.
கருத்துமுதல்வாதம் அல்ல பொருள்முதல்வாதமே
உலக மக்களுக்குப் பயன்படும் என்கிறோம்.
**

தமிழ் இலக்கணத்தில் "இனங்குறித்தல்" என்று ஒரு
விதி (rule) உண்டு. சோறு உண்டான் என்றால்
வெறுஞ்சோற்றை மட்டும் உண்டான் என்று பொருள்
அல்ல. சோற்றுடன் குழம்பு, கறி அனைத்தையுமே
உண்டான் என்ற பொருளையே "சோறு உண்டான்"
என்ற தொடர் குறிக்கும். அது போல, அத்வைதத்தின்
மீதான விமர்சனம் எல்லா வகை அத்வைதத்தையும்
குறிக்கும்.



ஞாயிறு, 29 அக்டோபர், 2017

.
நிலாவில் ஈர்ப்பு எவ்வளவு?
சிறுவன் ஜெயித்ததின் ரகசியம்! (விடையும் விளக்கமும்)
-------------------------------------------------------------------------------------------------------
பூமியின் ஈர்ப்பு (acceleration due to gravity) 9.8 மீ/second squared.
நிலாவின் ஈர்ப்பு= 1.622 meter/second squared. அதாவது நிலவின்
ஈர்ப்பு பூமியின் ஈர்ப்பை விட 6 மடங்கு குறைவு. ஈர்ப்பு
குறைவு என்பதால், அதிக உயரம் குதிக்க முடியும்.
கூடைப்பந்தின் வளையம் 10 அடி உயரத்தில் இருக்கும்.
பூமியில் ஈர்ப்பு அதிகம் என்பதால், 2 அடி உயரமுள்ள
சிறுவனால் 10 அடி உயரத்துக்கு எம்பிக் குதித்து
வளையத்திற்குள் பந்தைப் போட  முடியாது.
**
ஆனால் நிலாவில் அதே சிறுவனால் சுலபமாக 10 அடி
உயரத்திற்கு எம்பிக் குதிக்க முடியும். எனவே நிலாவில்
சிறுவனும் கூடைப்பந்து விளையாட முடியும்.
**
சிறுவன் எப்படி ஜெயித்தான்? சிறுவன் குதித்தபோது,
சரியாக 10 அடி உயரத்திற்குச் சற்று மேலே குதித்தான்.
அதனால் வளையம் அழகாக கைக்கு கிட்டியது.
பணத்தைப் போட்டான்; ஜெயித்தான்.
**
பெரிய ஆளால் ஏன் ஜெயிக்க முடியவில்லை?
பெரிய ஆள் குதித்தபோது 10 அடி உயரத்தை விட
மிகவும் அதிகமான உயரத்தை அடைந்து விட்டபடியால்,
(உதாரணமாக 30 அடி) அங்கிருந்து சரியாக வளையத்துக்குள் பந்தைப்
போட  முடியாமல் போனது. பந்து வளையத்திற்குள்
விழாமல் வெளியே விழுந்து விட்டது.


done (12) அத்வைதம் என்னும் தந்தக் கோபுரத் தத்துவம்!
வாசகர்களின் பின்னூட்டங்களுக்கு பதில்!
பாமர மக்களின் உலகியல் பிரச்சினைகளுக்கு
அத்வைதத்தில் தீர்வு இல்லை!
1) அத்வைதம் ஞான மார்க்கத்தை போதித்தது.
மார்க்கம் என்றால் வழி என்று பொருள். அத்வைதம்
கூறும் உன்னத நிலையை ஒருவர் அடைய வேண்டும்
என்றால் அவர் அதற்கான ஞானத்தைப் பெற வேண்டும்.
2) இதற்கு மாறாக, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம்
பக்தி மார்க்கத்தைப் போதித்தது. இடைவிடாத பக்தி
மூலம் விசிஷ்டாத்வைதம் கூறும் உன்னத நிலையை
ஒருவர் எய்த முடியும் என்றார் ராமானுஜர்.
3) ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் ஆகிய இரண்டில்
பக்தி மார்க்கமே எளிதானது; எல்லோராலும்
கடைப்பிடிக்க சுலபமானது. கோடிக்கணக்கான
மக்கள் வறுமையிலும் அறியாமையிலும் உழன்று
கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஞான மார்க்கத்தைப்
பின்பற்றி ஞானத்தை அடைவது எப்போது? இதற்கு
எத்தனை பேர் முன்வருவர்?

4) ஆனால் பக்தி மார்க்கம் சுலபமான வழி.இது மக்களால்
எளிதில் பின்பற்ற முடிந்த வழி. ஞானம் தேவையில்லை;
பக்தியே போதும்; பக்தி இருந்தாலே ஞானம் உட்பட
எல்லாவற்றையும் அடையலாம் என்று போதித்தார்
ராமானுஜர். இப்போதனை வெகுமக்களை எளிதில்
கவர்ந்தது. இதனால் அத்வைதத்தை விட
விஷிஷ்டாத்வைதத்தை ஏற்றுக் கொண்டவர்கள்
பெருகினர். இவ்வாறு ராமனுஜர் அத்வைதத்தை
முறியடித்தார்.

5) ராமானுஜர் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர்,
13ஆம் நூற்றாண்டில் மத்வர் பிறந்தார். இவர் துவைதம்
என்ற தத்துவத்தைத் தோற்றுவித்தார். ராமானுஜரை விட
சங்கரருடன் இவர் அதிகமாக முரண்பட்டவர். சங்கரின்
தத்துவம் அத்வைதம், அதாவது இரண்டல்ல ஒன்றுதான்
என்பது. மத்வரின் தத்துவம் எல்லாமே இரண்டுதான்
என்பது.எனவே தம் பங்குக்கு சங்கரரை அதிகமாகச்
சாடினார் மத்வர். மேலும் மத்வரும் மக்களால்
எளிதில் பின்பற்ற முடிந்த பக்தி மார்க்கத்தையே
போதித்தார். ஆக, ராமானுஜர், மத்வர் ஆகிய
இருவரின் தாக்குதலில் அத்வைதம் நிலைகுலைந்தது.

6) இவ்வாறு மக்களின் ஆதரவு இல்லாமல் மங்கிப்போன
அத்வைதம் அறிவுஜீவிகளின் ஒரு குறுகிய வட்டத்தில்
மட்டுமே செல்வாக்குடன் இருந்தது. பரந்துபட்ட
மக்களின் ஆதரவு (following) அத்வைதத்திற்கு இல்லை.
அத்வைதம் என்பது அறிவுஜீவிகளின் தத்துவம்
(philosophy of intellectuals). அது ஒரு தந்தக் கோபுரத் தத்துவம்.
அது என்றுமே பாமர மக்களின் தத்துவமாக
இருந்ததில்லை. பாமர மக்களின் உலகியல்
பிரச்சினைகளுக்கு அத்வைதத்தில்
ஒரு தீர்வும் இல்லை.

7) மேற்கூறிய யாவும் வரலாற்று நிகழ்வுகள். இவை
உண்மைகள் (FACTS). இவை உள்ளங்கை நெல்லிக்கனி
போல் தெரிபவை.

8) ஆனால் துரதிருஷ்ட வசமாக, வாசகர்களில்
சிலர் மாற்றுக்கருத்து என்ற பெயரில் மேற்கூறிய
உண்மைகளை (facts) மறுத்துக் கொண்டு
இருக்கின்றனர். இவர்கள் factsக்கும் opinionக்கும்
வித்தியாசம் தெரியாதவர்கள்.

9) Facts are sacred but opinions may differ என்பது ஒரு வாழ்வியல்
உண்மை ஆகும். மகாத்மா காந்தி இறந்து விட்டார்
என்ற வாக்கியம் ஒரு உண்மையை, ஒரு விவரத்தைக்
கூறுவது. அது கருத்து அல்ல. அதை எவரும் சர்ச்சைக்கு
உள்ளாக்க முடியாது. மீறி எவரேனும் சர்ச்சைக்கு
உள்ளாக்கினால் அது பேதைமை ஆகும்.

10) அதுபோலவே, அத்வைதம்  தோற்று விட்டது,
அது பின்பற்றுவோர் இல்லாமல் சுருங்கி விட்டது
என்ற கூற்றுகள் உண்மையான விவரங்கள்
(facts) ஆகும். அதில் சர்ச்சைக்கே இடமில்லை.

11) ராமானுஜர், மத்வர் ஆகிய இருவராலும்
முறியடிக்கப்பட்ட அத்வைதம், மக்கள் மன்றத்தில்
இருந்து அகன்று, அறிவுஜீவிகளின் குறுகிய வட்டத்தில்
வாழ்ந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக இதே
நிலையில் நீடித்த அத்வைதத்தை, 18-19ஆம்
நூற்றாண்டுகளில் பரமஹம்சரும் விவேகானந்தரும்
வெளியே எடுத்து மீண்டும் மக்கள் மன்றத்துக்குக்
கொண்டு வந்தனர். தத்துவச் செறிவு மிக்கதும்,
பக்தி சடங்குகளுக்கு முக்கியத்துவம் தராததுமான
அத்வைதம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கிறிஸ்துவ
மதப் பரப்பலுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படும்
என்று பரமஹம்சரும் விவேகானந்தரும்
கண்டறிந்தனர்.

12) பக்தி, சடங்குகள் இல்லாததால்
அத்வைதம் ஒரு பிரபஞ்சத் தன்மையை (universal)
கொண்டிருக்கிறது என்று விவேகானந்தர்
உணர்ந்தார். எனவே மேலை நாடுகளில்
அத்வைதத்தைப் பரப்பினார். முந்திய
வாக்கியத்தில் கூறிய பிரபஞ்சத் தன்மை என்பதை
உள்ளூர்த்தன்மை அற்றது (No localism) என்று
புரிந்து கொள்ள வேண்டும்.

13) இவ்வாறு மங்கி மறைந்து மடிந்து போயிருக்க
வேண்டிய அத்வைதம் ஒரு சிறிய அளவிலான
மறுமலர்ச்சியை பரமஹம்சர் விவேகானந்தரால்
பெற்றது.

14) அத்வைதத்தின் இன்றைய நிலை என்ன? இந்த
2017இல் அத்வைதம் எந்த அளவு இந்திய மக்களிடம்
பரவி உள்ளது? எத்தனை ஆயிரம் பேர் அத்வைதத்தைப்
பின்பற்றுகின்றனர்?  (லட்சம், கோடி என்ற
பேச்சுக்கே இடமில்லை). இதற்கான விடை இதுதான்.

15) அன்று போல் இன்றும் மிகக் குறைவான
அறிவுஜீவிகளின் வட்டார எல்லைக்குள்ளேயே
அத்வைதம் முடங்கிக் கிடக்கிறது. அது
வெகுமக்களின் தத்துவமாக இல்லை. அறிவுஜீவிகளின்
நடுவே கூட, அத்வைதம் பற்றி அறிந்துள்ளோர்தான்
உள்ளனரே தவிர, அத்வைதத்தை வாழ்க்கை
நெறியாக ஏற்றுக்கொண்டு பின்பற்றுவோர்
மிகச் சிலரே.

16) அறிவுஜீவிகளின் நடுவில் அத்வைதத்துக்கு இருந்த
கொஞ்ச நஞ்ச ஆதரவுக்கும் இருபதாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் பெண் எழுத்தாளர் அயன் ராண்ட்
மூலமாக ஒரு பேராபத்து ஏற்பட்டது. இவரின்
புறவயவாதம் (objectivism) என்னும் தத்துவமும்,
அத்தத்துவத்தை விளக்கி அவர் எழுதிய நாவல்களும்
இளம் அறிவுஜீவிகளின் சிந்தனையில் சக்தி மிக்க
தாக்கத்தை ஏற்படுத்தின. அயன் ராண்டின்
புறவயவாதம் சங்கரரின் அத்வைதத்தை
மூடத்தனமான தத்துவம் என்று நிரூபித்து
அத்வைதத்தை தூள் தூளாக நொறுக்கி விட்டது.    

17) மேலே கூறிய அனைத்தும் சர்ச்சைக்கு
அப்பாற்பட்ட உண்மைகள் (indisputable facts).
வரலாறு நிரூபித்துள்ள உண்மைகள். இவற்றைச்
சர்ச்சைக்கு உள்ளாக்க முயல்வது பேதைமையுள்
எல்லாம் பேதைமை ஆகும்.
************************************************************
அத்வைதத்தை முதலில் தோற்கடித்தது
விசிஷ்டாத்வைதம். இந்த முதல்
தோல்வியில் இருந்து அத்வைதத்தால் மீண்டெழ
முடியவில்லை. இது வரலாற்று உண்மை. தொடர்ந்து
மத்வரின் துவைதமும் தனது முதல் எதிரியாக
அத்வைதத்தை வைத்து அதைக் கடுமையாக
எதிர்த்தது. இவற்றால் அத்வைதம் தாக்குப்
பிடிக்க முடியாமல் தோற்று ஓடியது. இது
வரலாறு நிரூபித்த உண்மை.
**
அத்வைதம் பற்றி எழுதும்போது அதை வீழ்த்திய
விசிஷ்டாத்வைதம் பற்றி எழுதாமல் இருக்க
முடியாது.நம் சமகாலத்தில் அயன் ராண்டின்
புறவயவாதம் (objectivism) மிச்சம் மீதியிருந்த
அத்வைதத்தின் செல்வாக்கையும் வெட்டி
வீழ்த்தி விட்டது. எனவே அத்வைதம் பற்றிய
கட்டுரையில், அதை வீழ்த்திய அயன் ராண்ட் பற்றி
எழுதாமல் இருக்க முடியாது.
**


done அத்வைதம்
பின்நவீனத்துவமா?

பின்நவீனத்துவம் என்பது சமகாலத்திய
ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலுக்கு (globalisation)
ஆதரவாகப் பயன்படும் தத்துவம். மார்க்சியத்துக்கு
எதிராக நிறுத்தப்படும் தத்துவம். மார்க்சியத்திற்கு
கணிசமான சேதாரத்தை ஏற்படுத்திய தத்துவம்.
ஆனால் அத்வைதம் அப்படியல்ல. அது சமகால
ஏகாதிபத்தியத்திற்கு  பயன்பட்டதற்கான ஆதாரம்
எதுவும் இல்லை. மார்க்சியத்திற்கு எந்த விதத்திலும்
அத்வைதம் சவாலாக விளங்க முடியாது.

விடுதலை இறையியல் (Liberation Theology) என்பது
ஏகாதிபத்தியத்தாலும் கிறித்துவப் பாதிரியார்களாலும்
உருவாக்கப்பட்டு மார்க்சியத்தை வீழ்த்தும்
நோக்குடன் அறிமுகப் படுத்தப் பட்டது. இது
இந்தியா, தமிழகம் உட்பட உலகெங்கும்
பரீட்சிக்கப் பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில்
இன்றும் செயல்படுத்தப் பட்டது. இதை கிறிஸ்துவ
மார்க்சியம் என்ற கயமைத்தனமான பெயரால்
ஏகாதிபத்தியம் அழைக்கிறது. விடுதலை இறையியல்
என்பது மார்க்சியத்திற்கு .எதிரானது. வெட்டி
வீழ்த்தப்பட வேண்டிய ஒன்று.

தத்துவம் என்பது எவரின் மடியிலும் தவழும் குழந்தை.
பயன்படுத்துகிறவர்களைப் பொறுத்து எந்தத்
தத்துவமும் எந்த முகாமுக்கும் பயன்படும். காரல்
மார்க்சின் சோஷலிஸத் தத்துவத்தை நேரு காலத்திய
காங்கிரஸ் பயன்படுத்தியது என்பது வரலாறு. காகிதப்பூ
மனக்காது, காங்கிரசின் சோஷலிசம் இனிக்காது என்று
அன்று காங்கிரசின் சோஷலிசத்தை திமுக எதிர்த்தது.
எந்தத் தத்துவத்தையும் எவரும் எந்த நோக்கத்துக்கும்
பயன்படுத்தலாம். அதற்கெல்லாம் இடமளிப்பதுதான்
தத்துவம்.

பாஜக ஆர் எஸ் எஸ் முன்வைக்கும் இந்துத்துவம் என்பது
தீவிரமான செயல்பாட்டைக் கோருவது. அத்வைதம்
ஒரு செயலுறுத்தும் தத்துவமே அல்ல. It is very passive.
எனவே இந்துத்துவ சக்திகளுக்கு அத்வைதத்தை
தற்போது தங்களின் நலன்களுக்கு பயன்படுத்தும்
திட்டம் இல்லை.
------------------------------------------------------------
1) ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலைப் படிக்கவும்
அது அத்வைதக் கருத்துக்கள் அடங்கிய நாவல்.

2) கிறிஸ்துவ வெள்ளை ஏகாதிபத்தியத்  சுரண்டலை
எதிர்ப்பதில் பரமஹம்சர் விவேகானந்தருக்கு அத்வைதம்
பயன்பட்டது.

3) ஏகாதிபத்தயங்களுக்கு அத்வைதம் தேவைப்படவில்லை
தற்போது. தேவை ஏற்பட்டால் பயன்படுத்துவர்.

4) தத்துவம் என்பது எவர் மடியிலும் தவழும் குழந்தை.
5) அரவிந்தர், நாரயண குரு அத்வைதிகள். சமூக
சீர்திருத்தத்திற்கு அத்வைதம் பயன்பட்டது.



done
1) அத்வைதம் என்பது ஒரு அருங்காட்சியகத் தத்துவம்.
இந்தியாவில் அது மியூசியத்தின் இருள் நிறைந்த
கடைசி அறையில் வைக்கப் பட்டுள்ளது. அரிஸ்ட்டாட்டில்
முதல் அயன் ராண்ட் வரை நீட்சே உட்பட மேலை
உலகினரின் தத்துவங்கள் இந்தியாவிலும் பிற
கீழ்த்திசை நாடுகளிலும் அறிமுகமான அளவுக்கு
ஆதிசங்கரரின் அத்வைதம் மேலை நாடுகளுக்குச்
சென்று சேரவில்லை. தத்துவங்களின் வரிசையில்
அத்வைதமும் ஒரு தத்துவமாக இடம் பெற்றுள்ளது
என்பதைத் தவிர உலகளவிலும் சரி, இந்திய
அளவிலும் சரி, வேறெந்த சிறப்பையும் அத்வைதம்
பெற்றிருக்கவில்லை.

2) தத்துவம் என்பது உலகை விளக்குவது
(interpreting the world).  உலகை விளக்கும்
தத்துவங்கள் அனைத்தும் கால எல்லைக்கு
உட்பட்டவை. அதாவது எந்தவொரு தத்துவமும்
அது தோன்றிய காலத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு
முழுவதுமாக உட்பட்டது. அந்தந்தக் காலத்தின்
அறிவியல் வளர்ச்சிக்கு உட்பட்டே தத்துவங்களின்
உலக விளக்கம் (interpretation of the world) அமையும்.
இதற்கு எந்தத் தத்துவமும் விலக்கல்ல.

3) எனவே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு
தத்துவம் அளித்த உலக விளக்கமானது காலப்
போக்கில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியில்
தவறானதாகி விடுவதும், அதன் காரணமாக
அத்தத்துவம் வழக்கு வீழ்ந்து விடுவதும் உண்டு.

4) அத்வைதம் அவ்வாறு வழக்கு வீழ்ந்துபோன
ஒரு தத்துவம் ஆகும். புறவுலகின் மெய்மையை
முரட்டுத்தனமாக மறுக்கும் தத்துவம் அத்வைதம்
என்பதை இங்கு நினைவு கூர வேண்டும். அறிவியல்
வளர்ச்சியின் விளைவாக, மனித சமூகம்
இயற்கையை, புறவுலகை நாளும் நாளும் அதிகமாக
அறிந்து கொண்டு, புறவுலகுடன் வினை புரிந்து,
இயற்கையைப் பெருமளவுக்கு மானுட  நலன்களுக்காகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்ட பிறகு, அத்வைதம்
மதிப்பிழந்தது.

5) மனித வாழ்க்கை என்பதே இயற்கையுடன்,
புறவுலகுடன் வினைபுரிவதுதான் என்று ஆன பிறகு,
புறவுலகையே மறுக்கும் அத்வைதம் எவ்வாறு
மானுட சமூகத்தால் ஏற்கப்படும்? இதனால்தான்
அத்வைதம் மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளது.

6) இதற்கு மாறாக, புறவுலகின் மெய்மையை ஏற்கும்
எல்லா விதமான பொருள்முதல்வாத மற்றும்
கருத்துமுதல்வாதத்  தத்துவங்கள் இன்றளவும்
நடைமுறையில் உள்ளன.

7) எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய அத்வைதம்
ராமாநுஜரிடம் தன் முதல் தோல்வியைச் சந்தித்தது.
ராமாநுஜர் பன்னிரண்டாம் நூற்றாண்டில்
முன்மொழிந்த விசிஷ்டாத்வைதம் அத்வைதத்துடன்
தத்துவப்போரில் ஈடுபட்டது. அத்வைதத்தை
வீழ்த்தியது.

8) சங்கரர் ராமானுஜர் இருவரும் கருத்துமுதல்வாதிகளே.
இருவரின் தத்துவமும் கருத்துமுதல்வாதமே.
என்றாலும் புறவுலகு முற்றிலும் பொய் என்ற சங்கரரின்
அப்பாலைக் கருத்தை ராமானுஜர் நிராகரித்தார்.
எனவே, கருத்துமுதல்வாதமே சரி என்ற கொள்கை
உடையவர்கள் கூட, அத்வைதத்தை நிராகரித்து
விஷிஷ்டாத்வைதத்தை ஏற்றனர். ஆக சொந்த
முகாமிலேயே 12ஆம் நூற்றாண்டு வாக்கில்
அத்வைதம் முதல் தோல்வியைச் சந்தித்தது.அன்று
தொடங்கிய சரிவில் இருந்து இன்றுவரை
அத்வைதம் மீளவில்லை.

9) 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஆங்கில
ஆட்சியின் விளைவாக, கிறிஸ்துவம் பெரும்
வேகத்துடனும், அரசின் ஆதரவுடனும் மொத்த
இந்திய சமூகத்தையும் ஆக்கிரமிக்கத்
தொடங்கியது. அப்போது ராமகிருஷ்ண பரமஹம்சர்,
விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி போன்றோர்
கிறிஸ்துவத்தைக் காலத்தில் சந்திக்க அத்வைதத்தைக்
கையில் எடுத்தனர். விவேகானந்தர் வெளிநாடெங்கும்
அத்வைதத்தை அறிமுகப் படுத்தினார். இதன்
விளைவாகவே அத்வைதம் தத்துவ அரங்கில்
ஒரு செகண்ட் ரவுண்ட் (second round) வந்தது.
அத்வைதத்திற்கு இன்றுள்ள கொஞ்ச நஞ்ச
மரியாதைக்கு ஆதிசங்கரர் விவேகானந்தர்
கடமைப் பட்டுள்ளார்.

10) எட்டாம் நூற்றாண்டு தொடங்கி, 19ஆம்
நூற்றாண்டு விவேகானந்தர் வரை, மற்றும்
20ஆம் நூற்றாண்டின் அத்வைதிகளான கேரளத்து
நாராயண குரு வரை அத்வைதம் பலராலும்
விளக்கப்பட்டு வந்துள்ளது. வெளிநாடுகளிலும்
தத்துவத் துறையின் பல்வேறு அறிஞர்கள்
அத்வைதம் குறித்து விரிவாக ஆராய்ந்து பல
நூல்களை எழுதியுள்ளனர்.

11)  பொருள்முதல்வாதத்திற்கு அதன்
ஒவ்வொரு அம்சத்திலும் நேர் எதிரான தத்துவம்
அத்வைதம் ஆகும். முற்றிலும் முரண்பட்ட இரண்டு
விஷயங்களுக்கு உதாரணம் கூற  வேண்டுமென்றால்
பொருள்முதல்வாதத்தையும் அத்வைதத்தையும்
கூறலாம்.

12) அஹம் பிரம்மாஸ்மி (ஆத்மாவே பிரம்மம், நானே பிரம்மம்), தத்வமஸி (நீயும் கடவுளே) ஆகியவை மகா வாக்கியங்கள்
(Grand pronouncements)
உபநிடதங்களின் இந்த மகா வாக்கியங்களின் மீதுதான்
அத்வைதம் எழுந்துள்ளது. அத்வைதம் மட்டுமல்ல,
விசிஷ்டாத்வைதம் போன்ற கருத்துமுதல்வாதப் 
பிரிவுகளும் இந்த மகா வாக்கியங்களை ஏற்பவையே.

13) உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பது
மார்க்சியத்தின் புகழ் பெற்ற வாக்கியம். இதற்கும்
அஹம் பிரம்மாஸ்மிக்கும் என்ன சம்பந்தம்? இவை
இரண்டும் எப்படிப் பொருந்த முடியும்?

14) முதலாளியும் தொழிலாளியும் ஒன்று (தத்வமஸி)
என்று எந்த முதலாளியாவது சொல்வானா?

20) அத்வைதமும் பொருள்முதல்வாதமும்
நீரும் நெருப்பும் போன்றவை. ஒன்று
மற்றொன்றுக்கு எதிரானது. *************************************************************                         


           
    




  

சனி, 28 அக்டோபர், 2017

done அத்வைதம் பின்நவீனத்துவமா?
சமகாலத்தில் அத்வைதம் பின்நவீனத்துவமாக
அவதாரம் எடுத்துள்ளதா?

பதில்: அத்வைதம் பின்நவீனத்துவம் அல்ல. மாறாக
அது முன்புராதனத்துவம் ஆகும். இரண்டும் ஒன்றல்ல.
இரண்டுக்கும் ஓட்டோ உறவோ கிடையாது.

ஒரு தத்துவத்தை அது பிறந்த காலத்தின் சமூகச்
சூழல்களே தோற்றுவிக்கின்றன. அத்வைதம் கி.பி
எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய
கீழைத்தத்துவம் (oriental philosophy). பின்நவீனத்துவம்
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட
சமூகச் சூழல்களில் ஐரோப்பாவில் பிறந்த
மேலைத் தத்துவம் (western philosophy).

இளமைப் பருவத்தில் இருந்த  இந்திய நிலவுடைமைச்
சமூகம் வளர்ந்து கொண்டிருந்தபோது, அத்வைதம்
தோன்றியது. முதலாளித்துவம் உச்சகட்ட வளர்ச்சியை
அடைந்து ஏகாதிபத்தியமாக மாறியிருந்த காலத்தில்
பின்நவீனத்துவம் தோன்றியது.

முதலாளித்துவம் என்றால் என்ன என்றே
ஆதிசங்கரருக்குத் தெரியாது. தமது இந்திய சமூகம்
பின்னாளில் முதலாளித்துவ சமூகமாக மாறும் என்று
கூட அவருக்குத் தெரியாது. ஆன்மிகம் (spiritualism)
என்ற ஒரு துறையைத் தவிர வேறு எதிலும் அத்வைதம்
நாட்டம் கொண்டிருக்கவில்லை. ஆனால்
பின்நவீனத்துவம் அப்படியல்ல. அது வாழ்வியலின்
அனைத்துத் துறைகளிலும் அக்கறை கொண்டு
செயல்பட்டது.

ஆதிசங்கரர் என்ற தனியொரு தத்துவஞானியின்
சிந்தனையும் போதனைகளும் மட்டுமே அத்வைதம்
ஆகும். ஆனால் பின்நவீனத்துவம் என்பது பல்வேறு
காலக் கட்டங்களில், பல்வேறு அறிஞர்கள்
முன்மொழிந்த கோட்பாடுகளின் தொகுப்பாகும்.
இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிற
வேறுபாடுகள்.

தத்துவப் பரிசீலனையில், தத்துவத்தின் உள்ளமைப்பும் கட்டுமானமும் (structure and architecture) எப்படி
இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். ஒரு
தத்துவத்தைத் தீர்மானிக்கிற அம்சம் இதுதான்.

பிரம்மம் என்ற ஒற்றை மூலத்தை ஒற்றை மையத்தை
மட்டுமே கொண்டது அத்வைதம். அதில் விளிம்புக்கோ
பன்மைத்துவத்திற்கோ இடமில்லை. அது முற்றிலுமான
ஒருமைவாதம் (monism). பின்நவீனத்துவம் என்பது
மையம்-விளிம்பு போன்ற பல்வேறு இருமைகளில்,
இரண்டு இரட்டைகளுக்கும் வேறுபாடு இருக்கக்
கூடாது என்று வலியுறுத்தும் தத்துவம். மேலும் அது
பன்மைத்துவத்தை (pluralism) வலியுறுத்தும் தத்துவம்.
பின்நவீனத்துவம் வலியுறுத்துகின்ற எதற்கும்
அத்வைதத்தில் இடமில்லை.

பிரம்மம் என்பதே பிரபஞ்சத்தின் ஒரே உண்மை;
பேருண்மை என்கிறது அத்வைதம். ஆதிசங்கரரின் இக்கருத்தை  பின்நவீனத்துவம் மூர்க்கமாகவும்
இகழ்ச்சியுடனும் நிராகரிக்கிறது. ஒரே உண்மை,
முழு உண்மை என்று மட்டுமல்ல உண்மை என்ற
ஒன்றே கிடையாது என்பதுதான் பின்நவீனத்துவத்தின்
சாரம். இந்தப் பிரபஞ்சத்தில், ஒன்றுக்கொன்று
சமமான, ஒன்றையொன்று சார்ந்த  பல்வேறு
கோட்பாடுகள் (theories) உண்டே தவிர,
உண்மை (truth) என்ற ஒன்று கிடையாது என்பதுதான்
பின்நவீனத்துவம். பொருள்முதல்வாதமும்
உண்மையல்ல; கருத்துமுதல்வாதமும் உண்மையல்ல;
இரண்டும் சம மதிப்புள்ள வெறும் கோட்பாடுகளே
என்பதுதான் பின்நவீனத்துவம். எல்லாக் கோட்பாடுகளும்
அனுமானங்களே தவிர உண்மையல்ல என்கிறது
பின்நவீனத்துவம்.  There is no truth at all என்பதுதான்
பின்நவீனத்துவம். இதை அத்வைதிகள் ஒத்துக்
கொள்வார்களா?

தத்துவம் என்பது எவரின் மடியிலும் தவழும் குழந்தை.
பயன்படுத்துகிறவர்களைப் பொறுத்து எந்தத்
தத்துவமும் எந்த முகாமுக்கும் பயன்படும். காரல்
மார்க்சின் சோஷலிஸத் தத்துவத்தை நேரு காலத்திய
காங்கிரஸ் பயன்படுத்தியது என்பது வரலாறு. காகிதப்பூ
மனக்காது, காங்கிரசின் சோஷலிசம் இனிக்காது என்று
அன்று காங்கிரசின் சோஷலிசத்தை திமுக எதிர்த்தது.
எந்தத் தத்துவத்தையும் எவரும் எந்த நோக்கத்துக்கும்
பயன்படுத்தலாம். அதற்கெல்லாம் இடமளிப்பதுதான்
தத்துவம்.

பாஜக ஆர் எஸ் எஸ் முன்வைக்கும் இந்துத்துவம் என்பது
தீவிரமான செயல்பாட்டைக் கோருவது. அத்வைதம்
ஒரு செயலுறுத்தும் தத்துவமே அல்ல. It is very passive.
எனவே இந்துத்துவ சக்திகளுக்கு அத்வைதத்தை
தற்போது தங்களின் நலன்களுக்கு பயன்படுத்தும்
திட்டம் இல்லை.

பின்நவீனத்துவம் என்பது சமகாலத்திய
ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலுக்கு (globalisation)
ஆதரவாகப் பயன்படும் தத்துவம். மார்க்சியத்துக்கு
எதிராக நிறுத்தப்படும் தத்துவம். மார்க்சியத்திற்கு
கணிசமான சேதாரத்தை ஏற்படுத்திய தத்துவம்.
ஆனால் அத்வைதம் அப்படியல்ல. அது சமகால
ஏகாதிபத்தியத்திற்கு  பயன்பட்டதற்கான ஆதாரம்
எதுவும் இல்லை. மார்க்சியத்திற்கு எந்த விதத்திலும்
அத்வைதம் சவாலாக விளங்க முடியாது

இன்னும் நிறையக் கூறலாம். எனவே அத்வைதமும்
பின்நவீனத்துவமும் ஒன்றல்ல என்பது இதனால்
நிரூபிக்கப் படுகிறது.
------------------------------------------------------------------------------------------


 


done 1) Growth means change
2) define change disappearance of old
3) I think therefore I am Des cartes
4) power of mind
5) if  want to go Mars u have to travel for an year
but in mind travel, u go to Mars in 1 micro second
6) adviath is created to fight materialism
7) வாசகர் கேள்வி பதில்
8) மல்லனை வீஸ்த்திய சங்கரர்
9) பிரும்ம சூத்திரம்
10) Advaitham is not POMO
11) POMO SAYS ALL ARE ASSUMPTIONS
No truth all are mere theories
POMO says even Advaithis a mere theory and not trruth
பௌத்த சமண வேறுபாடு
மூவா முதலா உலகம் என்னும் சமணம்
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அத்வைத நூல்

அறிதல் அறிபடுபொருள் அறிபவன் மூன்றும் ஒன்றே.

விடையும் விளக்கமும்:
-----------------------------------------
வியாழன் பெரிய கோள்.ஆனால் சூரியனைச் சுற்றும்
வேகம் குறைவு. பூமியின் வேகத்தை விடக் குறைவு.
அதாவது மணிக்கு 47,000 கி.மீ (தோராயமாக) வேகத்தில்
வியாழன் பூமியைச் சுற்றி வருகிறது. இது பூமியின்
வேகத்தில் தோராயமாக பாதிதான். பூமியானது
மணிக்கு ஒரு லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனைச்
சுற்றுகிறது என்பதை நீங்கள் அறிந்ததே. சரியான விடையை
எழுதிய தோழருக்கு நன்றி.


மிகவும் பெரிய கருவி என்பதால் மிகவும் நீளமான
கருவி என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை.
பூமியின் மீது சக்தி மிக்க தாக்கத்தை (impact)
ஏற்படுத்தி, பூமியை தன் சுற்றுப்பாதையில்
இருந்து விலக்கும் அளவுக்கு ஆற்றல் உள்ள ஒரு
கருவி என்றே பொருள் கொள்ள வேண்டும்.
செயற்கைக் கோளில் இருந்து வெளியே நீண்டு
பூமியின் மீது ஒரு projectile போல எறியப்பட்டு,
பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு கருவி மிக நீளமானதாக
இருக்கத் தேவையில்லை.

இடதுசாரி அறிவாளிகள் மத்தியில் அயன் ராண்டைப்
படித்தவர்கள் மிகவும் குறைவு. ஆனால் வலதுசாரிகள்
மற்றும் பின்நவீனத்துவ வாசகர்களில்  அயன் ராண்ட்

அத்வைதம் பொருள்முதல்வாதமே என்று கூறுவது
பொருள்முதல்வாதத்தின் மீது மலத்தை வீசி
எறியும் செய்கை ஆகும். இது பொருள்முதல்வாதத்தை
இழிவு படுத்தும் நோக்கம் கொண்டதாகும். இதை
அனுமதிக்க இயலாது.

 

வெள்ளி, 27 அக்டோபர், 2017

done ஆதிசங்கரரும் அயன் ராண்டும் (Ayn Rand)!
Advaita versus Objectivism!
---------------------------------------------------------------------------------
1) அயன் ராண்ட் (Ayn Rand 1905-1982) என்பவர் ஒரு பெண்
எழுத்தாளர். இவர் ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில்
வாழ்ந்தவர். இவர் ஒரு நாவலாசிரியர். இவரின் பல
நாவல்களில் அ) The Fountainhead ஆ) Atlas shrugged ஆகிய
இரண்டு நாவல்களும் பெரும்புகழ் பெற்றவை.
இன்றளவும் உலகெங்கும்  இவ்விரண்டு நாவல்களும்
கொண்டாடப் படுகின்றன. 

2)The Good Earth என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவரும்
இலக்கிய நோபல் பரிசு பெற்றவருமான பெர்ல் எஸ் பக்
(Pearl S Buck) போன்று அயன் ராண்ட்டை கருதக் கூடாது.
பெர்ல் எஸ் பக்கும் ஒரு பெண் எழுத்தாளரே.இவரின்
சம காலத்தவரே அயன் ராண்ட்.

3) மற்ற எழுத்தாளர்களுக்கும் அயன் ராண்டுக்கும்
மாபெரும் வேறுபாடு உண்டு.அயன் ராண்ட் ஒரு
தத்துவஞானியும் (philosopher) ஆவார்.இவரின் மகத்தான
தத்துவம் "புறவயவாதம்"(objectivism) ஆகும்.

4) இவரின் தத்துவங்களைப் புரிந்து கொள்ள இவரின்
Atlas shrugged மற்றும் The Fountainhead நாவல்களைப்
படிக்க வேண்டும். IIT, NITகளில் படிக்கும் ஒவ்வொரு
பொறியியல் மாணவனும் கண்டிப்பாக அன்று
முதல் இன்று வரை The Fountainhead நாவலைப்
படித்து வருகிறான். இந்நாவலின் கதாநாயகன்
ஹோவர்ட் ரோர்க் (Howard Roark) கட்டிடக்கலை
பயிலும் (B.Arch)  ஓரு கலகக்கார மாணவன்.
பழமைவாதத்தை சம்பிரதாயத்தை எதிர்த்து
உறுதியுடன் நின்று தன் சொந்த அறிவின் பலத்தில்
மகத்தான கட்டிடத்தை உருவாக்கியவன்.

5) புறவுலகம் என்னும் யதார்த்தமானது மனித
உணர்வுக்கு அப்பாற்பட்டு சுயேச்சையாக நிற்பது
என்கிறார் ராண்ட். இது பருப்பொருள் பற்றிய
லெனினின் வரையறையுடன் ஒத்து வருவது.

6) "I think therefore I am"--Rane Descartes என்ற தெ கார்த்தேவின்
கருத்துமுதல்வாதத்திற்கு மரண அடி கொடுக்கிறார்
ராண்ட்.

7) மனித உணர்வு என்பது புறநிலை மெய்மையை
(reality) அறிவதே தவிர அதை உருவாக்குவது அல்ல
என்கிறார் ராண்ட். மனிதனால் புறவுலகை,
மெய்மையை  அறிய முடியும் என்றும் மனித அறிவு
அதற்கான தகுதியை உடையது என்றும் கூறுகிறார்
ராண்ட். பகுத்தறிவின் மூலமே மனிதன் அறிவைப்
பெற முடியும் (Reason is man's only means of acquiring knowledge)
என்கிறார் ராண்ட். 

8) அறியொணாவாதத்தை நிராகரிக்கிறார் ராண்ட்.
மதங்களை, இயற்கைக்கு மீறிய ஆற்றலை, 
(supernatural), கருத்துமுதல்வாதத்தின் உள்ளுணர்வு,
இமானுவேல் கான்ட் போன்ற தத்துவஞானிகள்
முன்வைத்த இயற்கைக்கு அப்பாற்பட்ட முற்றிலும்
அகவயமான (purely subjective) பிரக்ஞை ஆகியவற்றை
அடியோடு நிராகரிக்கிறார் ராண்ட். மதம் மனிதனுக்குத்
தேவையற்றது என்கிறார் ராண்ட்.

9) அயன் ராண்டின் புறவயவாதம் பற்றி முழுவதுமாக
இங்கு விவரிப்பதற்கு இல்லை. வாசகர்கள் சுயமாகப்
படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். சுருங்கக்
கூறின், புறவயவாதம் என்பது லட்சியபூர்வ
முதலாளித்துவத்தின் பொருள்முதல்வாதம் ஆகும்.
(materialism of the ideal capitalism)

10)ஆதிசங்கரருக்கும்  அயன் ராண்டுக்கும் என்ன
சம்பந்தம்? ஆதிசங்கரரின் அத்வைதத்தை தத்துவ
அரங்கில் முறியடித்தனர் அயன் ராண்ட் ஆவார்.
அயன் ராண்ட் அத்வைதம் பற்றி அறிந்திருக்கவில்லை
என்பது மெய்யே. ஆனால் கருத்துமுதல்வாதத்தின்
ஒவ்வொரு கூறையும் நேரில் களத்தில் முறியடித்தவர்
ராண்ட்.

11) ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது புலன்களாலும்
பகுத்தறிவாலும் அறிய முடியாதா ஒன்று என்றால்,
அந்த பிரம்மம் பொய்யே என்கிறார் ராண்ட்.

12) பருப்பொருள் இயங்கும் விதிகளாலேயே
புறவுலகம் இயங்குகிறதே அன்றி எவருடைய
பிரக்ஞையாலும் அல்ல என்கிறார் ராண்ட்.

13) மேலும் அறிய விரும்பும் வாசகர்கள் அயன் ராண்டின்
நாவல்களையும் நூல்களையும் படித்துத் தெரிந்து
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். உணவின் ருசி
அதைச் சாப்பிடும்போது தெரியும் (The proof of the
pudding is in eating) என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
அது போல அயன் ராண்டைப் படித்தால்தான் அவரின்
தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆயின்
ஒரு சிரமம் என்னவெனில் அவரின் நூல்கள் யாவும்
ஆங்கிலத்திலேயே உள்ளன; தமிழில் எவரும்
மொழிபெயர்க்கப் போவதில்லை. காலச்சுவடு
கண்ணனுக்குச் சொல்லுங்கள்; அவர் ராண்டின்
நாவல்களை மொழிபெயர்த்துப் பதிப்பிக்கக் கூடும்.

14) ஆதிசங்கரரின் அத்வைதமும் அயன் ராண்டின்
 புறவயவாதமும் வடதுருவம் தென்துருவம் போன்றவை.
தத்துவப்போரில்,சமகாலத்தில், அத்வைதம்
அயன் ராண்டால் வீழ்த்தப்பட்டு உயிர் துறந்து
விட்டது என்பதே உண்மை.

15) சமகாலத்தில், அத்வைதத்தை படித்தவர்களை
விட அயன் ராண்டை படித்தவர்கள் அதிகம். இன்றைய
இளைய தலைமுறையின் அறிவாளிப் பிரிவினருக்கு
அயன் ராண்ட் அறிமுகம் ஆனவரே எனவே அயன்
ராண்ட் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில்
ஆதிசங்கரருக்கு என்ன வேலை?

16) சமகால உற்பத்தியோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற
தத்துவம் அத்வைதம். சமகால உற்பத்திக்கு
எவ்விதத்திலும் பயன்படாத தத்துவம் அத்வைதம்.
அனால் அயன் ராண்ட் அப்படியல்ல.  உற்பத்தியோடு
நெருங்கிய தொடர்புடைய, உற்பத்தியை ஊக்குவிக்கிற
தத்துவம் ராண்டின் புறவயவாதம்.

17) அயன் ராண்டைக் குறிப்பிடாமல் அத்வைதம் பற்றிய
கட்டுரையோ நூலோ எழுதி விட முடியாது.
ராமன்-ராவணன், முருகன்-சூரபத்மன் என்பவை போல
ஆதிசங்கரரும் அயன் ராண்டும் பைனரிகள்.
வீழ்த்தியவர், வீழ்த்தப்பட்டவர், வீழ்த்தப்பட்ட பொருள்
மூன்றையும் ஒருசேரக் குறிப்பிடாமல் ஒரு கதை
முழுமை அடையாது.

18) அயன் ராண்டை குறிப்பிடுவதற்கு மேலும் ஒரு
முக்கிய காரணம் உண்டு. அத்வைத ஆதரவாளர்கள்
எந்தப் பிரிவு மக்கள் திரளிடம் (படித்த அறிவாளிப்
பிரிவினர், அறிவுஜீவி இளைஞர்கள்) அத்வைதத்தைக்
கொண்டு செல்கிறார்களோ அந்தப் பிரிவினர்
அயன் ராண்டை அறிந்தவர்களே. எனவே ஆதிசங்கரர்
(எதிர்) அயன் ராண்ட் (Advaita versus Objectivism) என்று
எதிர் எதிராக நிறுத்த வேண்டிய தேவை
பொருள்முதல்வாதிகளுக்கு இருக்கிறது.

19) ஆதிசங்கரரும் சரி, அயன் ராண்டும் சரி, மேட்டுக்
குடியினரால் ஆராதிக்கப் படுகிறவர்கள்.
குப்பனுக்கும் சுப்பனுக்கும் துலுக்காணத்துக்கும்
ஆதிசங்கரரையும் தெரியாது; அயன் ராண்டையும்
தெரியாது.  இரண்டுமே elite philosophy! என்றாலும்
அயன் ராண்டிடம் உள்ள முற்போக்குக் கூறுகளில்
ஒன்றுகூட ஆதிசங்கரிடம் கிடையாது. அதீதமான
அப்பாலைத் தத்துவம் அத்வைதம்; வாழ்க்கையில்
ஒரு பிரிவினருக்கு நன்கு பயன்படும் தத்துவம்
புறவயவாதம். (தொடரும்)

அத்வைதம்  செயலூக்கமற்ற ஒரு தத்துவம்.
மனிதனைச் செயலுறுத்த அத்வைதம் பயன்படாது.
வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் நிறைவடைந்த
உப்புப்புளி மிளகாய்க்கான போராட்டமே இல்லாத
வாழ்க்கையை வாழ்ந்து வரும் மேட்டுக்குடியினருக்கான
தத்துவம் அத்வைதம். அத்வைதம் ஒரு லயன்ஸ் கிளப்
தத்துவம்; ஒரு லேடீஸ் கிளப் தத்துவம்.
 
-----------------------------------------------------------------------------         

      
   

கடவுளின் வேலையை தானே செய்த
சீன அதிபர் டெங் சியோ பிங்!
பூமி தன்னைத்தான் சுற்றும் வேகத்தை
சீனாவால் குறைக்க முடிந்தது எப்படி?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
1) சீனா ஒரு பிரம்மாண்டமான அணையைக் கட்டி
இருக்கிறது. இது உலகிலேயே மிகப்பெரிய அணை.
இந்தியாவின் எல்லா அணைகளிலும் உள்ள தண்ணீரின் கொள்ளளவைக் காட்டிலும் சீனா கட்டிய இந்த
அணையின் தண்ணீரின் கொள்ளளவு அதிகம்.
முப்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) என்று
இதற்குப் பெயர்.

2) இந்த அணையைக் கட்டியதன் மூலம், பூமி
தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் வேகத்தைக்
குறைத்து விட்டது சீனா. இதன்காரணமாக ஒரு நாள்
என்பது 24 மணி நேரத்தை விட சிறிது அதிகமாகி
விட்டது.

3) இந்த அணை 2012இல் செயல்பாட்டுக்கு வந்தது.
 உலகிலேயே அதிகமான நீர் மின்சாரம் இந்த அணையில்
உற்பத்தி செய்யப்பட்டது. 2014இல் இந்த அணை
நீர் மின் உற்பத்தியில் உலக சாதனை (world record)
நிகழ்த்தியது.

4) மேலும் விவரங்களுக்கு பொது அறிவுப் புத்தகத்தை
அல்லது மனோரமா year bookஐப் படியுங்கள்.

5) இந்த அணையின் பிரம்மாண்டங்களில் பின்வரும்
விஷயங்களில் இயற்பியல் அக்கறை கொள்கிறது.
அ) அணையின் reservoir கடல் மட்டத்திற்கு மேல்
175 மீட்டர் (அதாவது 575 அடி) உயரம் உடையது.
ஆ) நீரின் கொள்ளளவு= 39.3 கன கிலோ மீட்டர்
இ) அணையில் உள்ள நீரின் நிறை (mass)=39 ட்ரில்லியன்
கிலோகிராம். 1 trillion = 10^12. அதாவது 1 டிரில்லியன் என்பது
1 லட்சம் கோடி ஆகும். எனவே நீரின் நிறை
39.3 லட்சம் கோடி கிலோகிராம் ஆகும்.

6) இந்த ஆணை சீனாவில் உள்ளது. அதாவது
பூமியில் உள்ளது. 575 அடி உயரத்தில் உள்ள
39 ட்ரில்லியன் கிலோகிராம் நிறையை வைத்துக்
கொண்டு பூமி தன்னைத்தானே சுற்ற வேண்டும்.

7) பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் பூமத்திய
ரேகைப் பகுதியில் மணிக்கு 1670 கி,மீ (பூமி
சூரியனைச் சுற்றும் வேகம் மணிக்கு தோராயமாக
ஒரு லட்சம் கிலோமீட்டர்). சீனாவின் இந்த
அணையையும் சுமந்து கொண்டு பூமி தன்னைத்
தானே சுற்றும்போது, moment of inertia அதிகமாகி விடுகிறது. இதனால் சுற்றுவதன் வேகம் சிறிது
குறைகிறது. வேகம் குறைவதால், நேரம் அதிகமாகிறது..
இதனால் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தையும்
விட அதிகமாகிறது. எவ்வளவு அதிகமாகி உள்ளது
என்று நாசா கணக்கிட்டுள்ளது. அதன்படி 0.06 மைக்ரோ
செகண்ட் நேரம் அதிகமாகி உள்ளது..

8) சன் யாட்  சென் காலத்தில், 100 ஆண்டுகளுக்கு
முன்பே இந்த அணையைக் கட்ட வேண்டும் என்று
சீனா விரும்பியது. டெங் சியோ பிங் சீன அதிபராக
இருந்தபோது, அணையைக் காட்டும் வேலை
தொடங்கியது.

9) ஆக கடவுள் படைத்த பூமியின் வேகத்தை
மனிதன் மாற்றி விட்டான். டெங் சியோ பிங்
கடவுளாகி விட்டார். இதன் பிறகு
கடவுளுக்கு என்ன மதிப்பு உள்ளது?
***************************************************           


வியாழன், 26 அக்டோபர், 2017

Electron vs. Light Microscopes: Basic Differences

There are not many things that these two microscope types have in common. Both electron and light microscopes are technical devices which are used for visualizing structures that are too small to see with the unaided eye, and both types have relevant areas of applications in biology and the materials sciences. And this is pretty much it. The method of visualizing the structures is very different. Electron Microscopes use electrons and not photons (light rays) for visualization. The first electron microscope was constructed in 1931, compared to optical microscopes they are a very recent invention.

Electron microscopes have certain advantages over optical microscopes:

  • The biggest advantage is that they have a higher resolution and are therefore also able of a higher magnification (up to 2 million times). Light microscopes can show a useful magnification only up to 1000-2000 times. This is a physical limit imposed by the wavelength of the light. Electron microscopes therefore allow for the visualization of structures that would normally be not visible by optical microscopy.
  • Depending on the type of electron microscope, it is possible to view the three dimensional external shape of an object (Scanning Electron Microscope, SEM).
  • In scanning electron microscopy (SEM), due to the nature of electrons, electron microscopes have a greater depth of field compared to light microscopes. The higher resolution may also give the human eye the subjective impression of a higher depth of field.

Electron microscopes have a range of disadvantages as well:

  • They are extremely expensive.
  • Sample preparation is often much more elaborate. It is often necessary to coat the specimen with a very thin layer of metal (such as gold). The metal is able to reflect the electrons.
  • The sample must be completely dry. This makes it impossible to observe living specimens.
  • It is not possible to observe moving specimens (they are dead).
  • It is not possible to observe color. Electrons do not possess a color. The image is only black/white. Sometimes the image is colored artificially to give a better visual impression.
  • They require more training and experience in identifying artifacts that may have been introduced during the sample preparation process.
  • The energy of the electron beam is very high. The sample is therefore exposed to high radiation, and therefore not able to live.
  • The space requirements are high. They may need a whole room.
  • Maintenance costs are high.

When should one use optical (light) microscopes?

One big advantage of light microscopes is the ability to observe living cells. It is possible to observe a wide range of biological activity, such as the uptake of food, cell division and movement. Additionally, it is possible to use in-vivo staining techniques to observe the uptake of colored pigments by the cells. These processes can not be observed in real time using electron microscopes, as the specimen has to be fixed, and completely dehydrated (and is therefore dead). The low cost of optical microscopes makes them useful in a wide range of different areas, such as education, the medical sector or for hobbyists. Generally, optical and electron microscopes have different areas of application and they complement each other.

Different types of electron microscopes

There are two different types of electron microscopes, scanning electron microscopes (SEM) and transmission electron microscopes (TEM). In the TEM method, an electron beam is passed through an extremely thin section of the specimen. You will get a two-dimensional cross-section of the specimen. SEMs, in contrast, visualize the surface structure of the specimen, providing a 3-D impression. The image above was produced by a SEM.

Different types of light microscopes

The two most common types of microscopes are compound microscopes and stereo microscopes (dissecting microscopes). Stereo microscopes are frequently used to observe larger, opaque specimens. They generally do not magnify as much as compound microscopes (around 40x-70x maximum) but give a truly stereoscopic view. This is because the image delivered to each eye is slightly different. Stereo microscopes do not necessarily require elaborate sample preparation.
Compound microscopes magnify up to about 1000x. The specimen has to be sufficiently thin and bright for the microscope light to pass through. The specimen is mounted on a glass slide. Compound microscopes are not capable of producing a 3D (stereoscopic) view, even if they possess two eye pieces. This is because each one of the eyes receives the same image from the objective. The light beam is simply split in two.
------------------------------------------------------------------------------------
Electron microscopes illuminate their specimen using a beam of electrons. Magnetic fields are used to bend beams of electrons, in much the same way as optical lenses are used to bend beams of light in light microscopes. Two types of electron microscopes are widely in use: transmission electron microscope (TEM) and scanning electron microscope (SEM). In transmission electron microscopes, the electron beam passes throughthe specimen. An objective “lens” (which is really a magnet) is used to first produce an image and using a projection “lens” a magnified image can be produced on a fluorescent screen. In scanning electron microscopes, a beam of electrons is fired at the specimen, which causes secondary electrons to be released from the surface of the specimen. Using an anode, these surface electrons can be collected and the surface could be “mapped”.

Typically, the resolution of SEM images are not as high as those from TEM. However, since electrons are not required to pass through the sample in SEM, they can be used to investigate thicker specimen. Furthermore, images produced by SEM reveal more depth details of the surface.

The resolution of an image describes the ability to distinguish between two different points in an image. An image with a higher resolution is sharper and more detailed. Since light waves undergo diffraction, the ability to distinguish between two points on an object is intimately related to the wavelength of light used to view the object. This is explained in the Rayleigh criterion. A wave also cannot reveal details with a spatial separation smaller than its wavelength. This means that the smaller the wavelength used to view an object, the sharper is the image.
Electron microscopes make use of the wave nature of electrons. The deBroglie wavelength (i.e. the wavelength associated with an electron) for electrons accelerated to typical voltages used in TEMs is about 0.01 nm whereas visible light has wavelengths between 400-700 nm. Clearly, then, electron beams are able to reveal much more detail than beams of visible light. In reality, the resolutions of TEMs tend to be of the order of 0.1 nm rather than 0.01 nm due to effects of the magnetic field, but the resolution is still about a 100 times better than the resolution of a light microscope. Resolutions of SEMs are a little lower, of the order of 10 nm.

Difference Between Light Microscope and Electron Microscope

Source of Illumination

Light microscope uses beams of visible light (wavelength 400-700 nm) to illuminate the specimen.
Electron microscope uses electron beams (wavelength ~0.01 nm) to illuminate the specimen.

Magnifying Technique

Light microscope uses optical lenses to bend rays of light and magnify images.
Electron microscope uses magnets to bend rays of electrons and magnify images.

Resolution

Light microscope has lower resolutions compared to electron microscopes, about 200 nm.
Electron microscope can have resolutions of the order 0.1 nm.

Magnification

Light microscopes could have magnifications of around ~×1000.
Electron microscopes can have magnifications of up to~×500000 (SEM).

Operation

Light microscope does not necessarily need a source of electricity to operate.
Electron microscope requires electricity to accelerate electrons. It also requires the samples to be placed in vacuums (otherwise electrons may scatter off air molecules), unlike light microscopes.

Price

Light microscope is much cheaper compared to electron microscopes.
Electron microscope is comparatively more expensive.

Size

Light microscope is small and could be used on a desktop.
Electron microscope is quite large, and could be as tall as a person.


கடவுள் நம்பிக்கை திமுகவினருக்கு
ஏற்பட்டது எப்படி? 500 கிலோ RDX உள்ள .
உளவியல் ஆய்வுக் கட்டுரை இன்று
வெளியாகும். படித்தபின் நிகழும் தற்கொலைக்கு
யாம் பொறுப்பல்ல.

இன்னும் 15 நிமிடங்களில் கட்டுரை வெளியாகும்.
இரவு 10.25 மணிக்கு வெளியாகும். இது உளவியல்
ஆய்வுக் கட்டுரை ஆகும்.

நான் மிகவும் எளிமையாக எழுதி இருக்கிறேன் அம்மா.
நான் எப்போதுமே காலரிக்கு வாசிக்கிறவன். எனவே
technical termsஉடன் கோட்பாடுகளை விளக்கி எழுதப்பட்ட
academic கட்டுரை அல்ல இது. மாபெரும் வெகுஜன
இயக்கமான திமுகவினருக்காக எழுதப்பட்ட கட்டுரை அது.

1) நியூட்டன் அறிவியல் மன்றம், 2) ஒரு சில
மார்க்சிய லெனினியக் கட்சிகளின் அணிகள்
3) CPI, CPM கட்சிகளில் ஒரு சிலர், 4) படித்த பூர்ஷ்வாக்கள்
சிலர் ஆகியோர் மட்டுமே தமிழ்நாட்டில் பொருள்முதல்வாத
நாத்திகர்கள். மீதி அனைவரும் ஒன்று ஆத்திகர்கள்
அல்லது போலி நாத்திகர்கள்.
 
As the $30 billion plan was declared, Chinese administrators have
 encountered heavy inspection from both environmental activists like and scientists. Many consider that the dam will eventually result in disaster. Some worries include the dam trapping pollution, producing earthquakes and mudslides, displacing citizens and according to a report more than 1.3 million people have already been enforced to relocate, and terminating historical locations – alongside with the habitats of rare animals. (The government finally approved that the project was ill conceived – after years of labelling the dam one of the most remarkable pieces of engineering in Chinese history – but the loss is already done.) The last 32 generators went into action in July last year. The flowing water produced by the dam has sufficient power to produce about 22.5 million kilowatts of energy, which is equal to around FIFTEEN nuclear reactors and, obviously, it doesn’t cause worries about radioactive materials being released, which is a very good thing, the terrible effects can be cancelled by most, mostly due to the fact that it’s a clean, effective way of rendering energy for a growing population

Speculating how this could possibly have an influence on the Earth’s rotation? Here’s a perfect source that breaks it down further:

“Three Gorges Dam crosses the Yangtze River in Hubei province, China. It is the world’s largest hydroelectric power station by total capacity, which will be 22,500 MW when completed. When the water level is at maximum….it will flood a total area of 632 km2 of land. The reservoir will contain about 39.3 cubic km (9.43 cubic miles) of water. That water will weigh more than 39 trillion kilograms (42 billion tons). A shift in a mass of that size will impact the rotation of the Earth due to a phenomena known as “the moment of inertia”, which is the inertia of a rigid rotating body with respect to its rotation. The moment of inertia of an object about a given axis describes how difficult it is to change its angular motion about that axis. The longer the distance of a mass to its axis of rotation, the slower it will spin. You may not know it, but you see examples of this in everyday life. For example, a figure skater attempting to spin faster will draw her arms tight to her body, and thereby reduce her moment of inertia. Similarly, a diver attempting to somersault faster will bring his body into a tucked position. Raising 39 trillion kilograms of water 175 meters above sea level will increase the Earth’s moment of inertia, and thus slow its rotation. However, the impact will be extremely small. NASA scientists calculated the shift of such a mass will increase the length of day by only 0.06 microseconds, and make the Earth only very slightly more round in the middle and more flat on the top. It will also shift the pole position by about two centimeters (0.8 inch). Note that a shift in any object’s mass on the Earth relative to its axis of rotation will change its moment of inertia, although most shifts are too small to be measured (but they can be calculated).”   

Earth’s rotation changes regularly, with many changed variables added into the equation. First, we have the moon gradually receding from the Earth changing Earth’s rotation ever-so-slightly.  Earthquakes also help along the process (the mega quake in Japan back in 2011changed Earth’s spin by 2.68 microseconds). Also, every 5 years the length of the day increases and decreases by approximately a millisecond, or roughly 550 times greater than the change produced by the Japanese earthquake.

=================================