திங்கள், 30 அக்டோபர், 2017

done டன்அ த்வைதம் நடைமுறை உலகில் (practical world)
வாழவில்லை. ஆனால்  வரலாற்றில் வாழ்கிறது.
எனவே அதற்கு ஏற்ற விதத்தில் அதை எதிர்கொண்டால்
போதும். அத்வைத விவாதம் ஒரு academic விவாதமே.

ஈ எம் எஸ் அவர்கள் அத்வைத ஆதரவாளரே.

ஈ எம் எஸ்ஸின் அத்வைத மயக்கம், மேற்கு வங்க கம்யூனிஸ்டுகளின் விவேகாநந்தர் மீதான அபிமானம்,
இளைஞர்கள் அத்வைதம் கற்பது ஆகிய அனைத்தும்
இருக்கத்தான் செய்கின்றன. இவை இருக்கத்தான்
செய்யும். ஏனெனில் சமகால உலகம் தகவல் தொடர்புத்
துறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அத்வைதம்
பற்றி அமெரிக்க இளைஞர்  ஒருவர் தமது சென்னை
நண்பரிடம் முகநூலில் வினவலாம்.
**
இதனால் எல்லாம் அத்வைதம் ஒரு potential danger என்று
பொருள் ஆகாது. அத்வைதத்தை உரிய விதத்தில்
சந்திக்கலாம். சந்திப்போம். பொருள்முதல்வாதத்தை
அதிக அளவில் எடுத்துச் சென்றாலே  போதும்,
அத்வைதம் காணாமல் போய்விடும்.
**
 அத்வைதத்தை விட, இன்று பின்நவீனத்துவம்
கணிசமான பேரைப் பற்றிக் கொண்டுள்ளது.
அது அத்வைதத்தை விட பல மடங்கு கூடுதலான
ஆபத்து அல்லவா?
**
பிராட்டஸ்டெண்ட் கிறித்துவப் பின்னணி கொண்ட
சால்வேஷன் ஆர்மி (salvation army) போன்ற ஏகாதிபத்திய
நிறுவனங்கள் உலகெங்கும் செய்து வருவது என்ன?
மார்க்சிய எதிர்ப்புப் பிரச்சாரமும் மதமாற்றமும்தானே!
இதற்கான நிதியைக் கொட்டிக் கொடுப்பது யார்?
ஏகாதிபத்தியம்தானே! கணக்கற்ற எதிரிகள் இருக்கும்போது
**
எனவே பிரதான எதிரி என்ற வகைமையில் அத்வைதம்
வருமா? வராது. அது செத்த பாம்புதான்.

இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபேம் (Oxfam) என்ற  ஏகாதிபத்திய
நிறுவனம் இருக்கிறது. இது ஒரு தர்ம ஸ்தாபனம் என்ற
பெயரில் உலகின் ஏழைகளுக்கு தர்மம் (charity) செய்கிறது.
பணத்தையும் கொடுத்து மார்க்சியத்தையும் எதிர்த்துப்
பிரச்சாரம் செய்யும் ஒரு ஆபத்தான அமைப்பு இது.
 
இந்தியாவிலும் oxfam India  அமைப்பு உள்ளது; செயல்படுகிறது.
இந்தியாவில் ஒரு  நிறுவனமாக இது பதிவு செய்து
கொண்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக