திங்கள், 2 அக்டோபர், 2017

மஞ்சள் துண்டு அணிந்து பகுத்தறிவின் வீழ்ச்சியை
தொடங்கியவர் கலைஞர்.
முன் ஏர் சரியில்லை.
பின் ஏரும் அப்படியே!

பக்தி, வழிபாட்டில் இந்தியாவிலேயே விருது வழங்க
முதலிடம் பெறும் பெண்மணியாக
துர்கா ஸ்டாலின் தேர்வு! விஸ்வ இந்து பரிஷத் முடிவு!
விருது வழங்க சென்னை வருகிறார் RSS தலைவர்
மோகன் பகவத்! பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி கோவிலில்
வைத்து விருது வழங்கத் திட்டம்! 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்!!!
போலியான வாக்கு வங்கிக் கோரிக்கை!
--------------------------------------------------------------------------------------
கொள்கை சார்ந்த விஷயங்களில் சமரசத்துக்கே
இடமில்லை. கடவுள் இல்லை என்று உதடு கூறுகிறது.
இருக்கிறார் என்று உள்ளம் கூறுகிறது. முன்பெல்லாம்
ரகசியமாக சாமி கும்பிட்ட திமுகவினர் இப்போது
பகிரங்கமாக சாமி கும்பிடுகிறார்கள். அதே நேரத்தில்
பகுத்தறிவாளர் என்று போலியாக உரிமை கூறும்போது
அதை அனுமதிக்க முடியாது.

தன் கல்லூரியில் (கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி)
பார்ப்பனர்களை வைத்து புரோகித சடங்கு செய்யும்
துரைமுருகன் அவர்கள்  அனைத்து சாதியையும்
அர்ச்சகராக வேண்டும் என்று பேசுவது
எப்பேர்ப்பட்ட மோசடி?
*************************************************************
ஏமாறுவதற்கோ அவமானப் படுவதற்கோ இங்கு எதுவும்
இல்லை. உங்கள் அனுமானம் முற்றிலும் தவறு.
நான் என்றுமே திமுக உறுப்பினராக
இருந்தது இல்லை. பல தலைவர்களை நிர்வாணமாகப்
பார்த்தவன் நான். ( நிர்வாணம் = கொள்கை நிர்வாணம்)
பொருள்முதல்வாதம் பற்றி திமுகவில் ஒருவருக்கும்
தெரியாது. RSSக்கு எதிராக இருக்கிறது என்பதற்காக
மட்டுமே திமுகவை ஆதரிக்க இயலும். இன்று அந்த
அடிப்படையும் போய் விட்டது.
    

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக