செவ்வாய், 17 அக்டோபர், 2017

ராகுகாலம் பற்றி  அறிந்து கொள்வதே பகுத்தறிவு!
அதிமுக எம்எல்ஏ தூசி மோகனின் கல்விப்பணி!
பள்ளி மாணவர்களுக்கு ராகுகாலம் கற்பித்தார்!
-------------------------------------------------------------------------------------
1) திருவண்ணாமலை மாவட்டத்தில் கொடைநகர் என்ற
ஊரில் ஒரு தொடக்கப் பள்ளி உள்ளது. திருவத்திபுரம்
நகராட்சிக்கு உட்பட்டது. இந்தப் பள்ளியில் ஆய்வு
நடத்துவதாகக்  கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு தூசி கே மோகன் சென்றார்.
(தகவல் ஆதாரம்: தினத்தந்தி 14.10.2017)

2) பள்ளிக்குச் சென்ற மோகன் பள்ளி மாணவர்களுக்கு
பாடம் நடத்த ஆரம்பித்தார். என்ன பாடம்?
ராகுகால நேரம் எது? அதை எப்படி ஞாபகம்
வைத்துக் கொள்வது என்று பாடம் நடத்தினார்.

3) ராகுகால எமகண்ட நேரங்களை கரும்பலகையில்
எழுதிக் காட்டினார்.
(தகவல் ஆதாரம்: விடுதலை மின்னிதழ் 17.10.2017)

4) போலிப்பகுத்தறிவும் போலி நாத்திகமும் எவ்வளவு
பெரிய வீழ்ச்சியில் கொண்டு போய் விட்டன!

5) பொருள்முதல்வாத அறிவு இல்லாமல் நாத்திகமும்
பகுத்தறிவும் பேசினால் அது கேவலமான
மூட நம்பிக்கைகளுக்கே இட்டுச் செல்லும்.
************************************************************ 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக