சனி, 14 அக்டோபர், 2017

done யோகம் என்பதில் தத்துவச் செறிவு மிக மிகக்
குறைவு. உண்மையில் யோகம் என்பது பல்வேறு
பயிற்சி முறைகளின் தொகுப்பே. இப்பயிற்சி முறைகள்
குறைந்தது மூவாயிரம் ஆண்டுப் பழமை மிக்கவை.
கவுதம புத்தரே யோகப்பயிற்சிகளை மேற்கொண்டதாக
பல செய்திகள் கூறுகின்றன.

ஆரம்ப கால யோகத்தில் கடவுளுக்கு இடமில்லை.
பின்னாளில் ஆஸ்திகர்களைத் திருப்தி செய்யும்
பொருட்டு யோகத்தில் கடவுள் சேர்க்கப்பட்டார்.
எனினும் கடவுள் மனித அந்தஸ்துக்கு இணையான
ஒரு  அந்தஸ்துடன்தான் மேம்போக்காகச் செருகப்
பட்டார். எனவேதான் யோகம் என்பது மார்க்சிய
தத்துவ ஆசிரியர்களால் பொருள்முதல்வாதப்
பிரிவிலேயே தொடர்ந்து வைக்கப் படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக